முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிடுகிறேன்: எனக்கு, தேவரடியார்கள்  எனும் ஸெக்ஸ் பணி செய்பவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுடைய சமூகப் பங்களிப்பையும், மனோதத்துவ ரீதியான சிடுக்கல் பிரச்சினைகளைக் கட்டவிழ்க்கும் தன்மையையும், இயற்கையான உணர்ச்சிகளுக்கு வடிகால் தரும் பண்பையும் மதிக்கிறேன் – அதாவது, அவர்கள் செய்வதும் உரிய சம்பளத்தை எதிர்பார்க்கும் ஒரு பணியே என்பதற்கு அப்பாற்பட்டும்கூட.
Read the rest of this entry »
அதிர்ச்சியளிக்கும் செய்தி – உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சந்தேகாஸ்பதமான முறையில் மரணம்! 

இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான்,  அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான்  காரணம் என அறியப்படுமா?

மேலே (அதாவது கீழே) படித்தால், உங்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு வரலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்!

Read the rest of this entry »

எனக்கு ஓடுவது(ம்) பிடிக்கும்.

1983-4 வாக்கில், சுமார் ஒரேயொரு மாத ஓட்டப் பயிற்சிக்குப் பின் முழு மாரத்தான் ஓடித்தான் தீருவேன் என அப்படியொரு ஓட்டத்தை முட்டாள்தனமாக ஓடி – அதன் முடிவில் தள்ளாடி மாரடைத்துக் கண்மங்கி மயங்கி விழுந்த பைத்தியக்கார மஹாத்மியமும் நடந்திருக்கிறது. :-)

Read the rest of this entry »

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »

(15) < (இளமை) < (மறுசுழற்சித்_தருணம்-1.5**) என்றறிக.

Read the rest of this entry »

அம்மணி அமுக்தா மஹாபத்ரா அவர்களை எனக்குப் பலப்பல வருடங்களாகத் தெரியும் – மாமாங்கங்களாகவே கல்வித்துறையில் – குறிப்பாக அம்மணி மான்டிஸொரி முறைமைகளில் பணியாற்றி வருபவர். நம் தமிழகத்திலும் பலவருடங்கள் – அரசுப்பள்ளிகளுடன் இணைந்தும்  வேலைசெய்திருப்பவர். எனக்கும் அம்மணி மான்டிஸொரி அவர்கள்மீது தறுதலைப்பட்ச மீளாக்காதல், ஆகவே அமுக்தா அவர்கள் அனுப்பிய அழைப்பிதழையும் + சில ஆவணங்களையும் (+ என்னுடைய மேலான பரிந்துரைகளையும்) இப்பதிவின் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவசியம் இதற்குச் செல்லவும்.

ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே

Read the rest of this entry »

இக்காலங்களில் நான் சார்ந்து இயங்கும் நிறுவனம் மூலமாக சிலபல  – சுவாரசியமான ஆனால் நடைமுறையில் அயர்வுதரும் – கல்வி தொடர்பான ‘ஆராய்ச்சிகள்’ நடந்துகொண்டிருக்கின்றன.

Read the rest of this entry »

…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »

என் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.

Read the rest of this entry »

ஹ்ம்ம்ம்…

எந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்(!) கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை(!) – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன்.  அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா?
Read the rest of this entry »

12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை,   நான் அறிந்துகொண்டேன்.  ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக  நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)

எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!

Read the rest of this entry »

முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்:  ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.

Read the rest of this entry »

எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »

#வக்கிரன் உவாச…

இவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத். Read the rest of this entry »

இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…  25/06/2016) தொடர்ச்சி

சரி.
Read the rest of this entry »

(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்,  ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.

மேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம்,  ‘கெட்ட(!) வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.

ஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.) Read the rest of this entry »

இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும்  6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »

30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:  தீர்மானம் 5(!) Read the rest of this entry »

aao77ckn

May 31, 2016

கடந்த சில நாட்களாக ராஜஸ்தானின் ஒரு வறண்ட டொக்கில் ஆசிரியர் பயிற்சி முகாம் ஒன்றில் வேலை.

சிலபல கணிநி-சார் கற்பித்தல்களுக்கான முஸ்தீபுகள் – அறிவியல், கணிதம் என. கணிநிகள் எப்படி நம் நண்பர்கள், அவற்றிடமிருந்து வேலை வாங்கிக்கொள்வது எப்படி, அவை கொடுக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்வது எப்படி என்றெல்லாம் விரிந்தன/விரிகின்றன அவை… பயிற்சிமுகாம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடந்தது. ஆகவே கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனெனில் ஹிந்தி கலைச்சொற்கள் பலவும் என் மண்டையில் இல்லை. ‘ஏக் கான்வ் மே, ஏக் கிஸான் ரகுதாத்தா’ பாக்கியராஜ் பலமுறை நினைவுக்கு வந்தார். :-(

Read the rest of this entry »

இப்படித்தான்: தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

Read the rest of this entry »