தேனி ந்யூட்ரினோ ஆய்வு மையமும் தேவரடியார் புதல்வர்களும்
October 29, 2016
நான் பலமுறை இம்மாதிரி ‘தேவரடியார் புதல்வன்’ என விளிக்கப்பட்டிருக்கிறேன். சில சமயங்களில் இதற்கு முன்னால் ‘பாப்பார’ என்பதும் சேர்ந்துகொள்ளும். இளம் வயதில் இதனைக் கேட்டதும் கொதித்துப் போய்(!) முட்டியடி எதிர்வினைகளில் – கைகலப்புகள் உட்பட – ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் கடந்த 20த்திச் சொச்ச வருடங்களாக, இம்மாதிரிக் கொஞ்சப்பட்ட சமயங்களில், சிரித்துக்கொண்டே நகர்ந்திருக்கிறேன். ஒரு பிரச்சினையுமில்லை. நன்றி. :-)
ஆனால், நம் நடைமுறைப் பண்பாட்டுச் சூழலில் ஒருவர், ‘தெவிடியாப் பையன்’ என்று விளிக்கப்பட்டால், அவருக்குள் எழக்கூடிய ரௌத்திரத்தையும் உணர்ந்திருக்கிறேன். ஆகவே,’தேவரடியார் புதல்வன்’ எனும் பதத்தை மிகச் சரியாகவே, அது அற்பர்களுக்குள் எழுப்பும் எதிர்வினைகளுக்காக மட்டுமே உபயோகிக்கிறேன். அவ்வளவுதான்.
ஏனெனில் – ஒரு முகாந்திரமும் இல்லாமல், முட்டாக்கூத்தனத்தையும் அயோக்கியக் கயமையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு ந்யூட்ரினோ ஆய்வு மையத்துக்கும், அணுக்கரு சக்திக்கும் எதிராக, அவதூறுகளைப் பரப்பி அபாண்டமாகக் கொடிபிடிப்பவர்கள் – கண்டிப்பாக, ‘தேவரடியார் புதல்வர்கள்’ என்றழைக்கப்பட்டு அவர்கள் ஊடாடும் அரைகுறைத்தளங்களில் அசிங்கப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
-0-0-0-0-0-0-0-0-
சரி. இந்த விஷயத்தைப் பற்றி — தமிழகத்தின் (+பாரதத்தின்) நலவிரும்பியாக, நம் இளைஞர்களின் வளமான எதிர்காலத்துக்காகவும் உயர்கல்விக்காகவும், தொழில் நுட்ப முன்னேற்றத்துக்காகவும், சுபிட்சத்துக்காகவும் — பலமுறை என் கருத்துகளைப் பதிவுசெய்திருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்:
- கூடங்குளம் தொடர்பான அபாண்டப் ‘போராளி’ப் பொய்மைகளுக்கு ஒரு சோறு பதம் 10/03/2016
- ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்) 11/05/2015
- ‘கூடங்குள எதிர்ப்பு மேதை’ மேதகு உதயகுமார், மேலதிகமாக ஞானம் பெற்று, ‘ந்யூட்ரினோ எதிர்ப்பு நிபுணர்’ உளறல்குமாரான கதை 08/05/2015
- போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்… 02/03/2015
- | அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
- ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்…02/05/2014
- எப்படி, மிகதைரியமாகப் பொய்சொல்கிறார்கள், இந்த மகாமகோ ‘வரலாற்று ஆய்வாளர்’ எஸ். ராமகிருஷ்ணனும் ‘பொறியாளர்’ ஸ்ரீலஸ்ரீ சுந்தர்ராஜனும்… 22/03/2014
- அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்16/03/2014
-0-0-0-0-0-0-0-0-0-
சுமார் ஒருமாதத்துக்கு முன், என் வாராந்திர மும்பய் பயணங்களில் ஒன்றின்போது, கருத்துலகப் பொறுக்கிகளாம் நம் தமிழக ந்யூட்ரினோஎதிர்ப்பாளர்களைப் பற்றி – சிலபல அணுசக்திக் காரர்களுடன் (டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபன்டமென்டல் ரீஸெர்ச் – TIFR , பாபா அடாமிக் ரீஸெர்ச் ஸென்டர் – BARC ) பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் முதல்தரமான ஆராய்ச்சியாளர்கள், எஞ்ஜினீயர்கள் – நம் நாட்டின் கண்மணிகளாகக் கருதப் படவேண்டியவர்கள். ஓளிர்பவர்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவின் மேன்மைக்கு அயராது பணிசெய்பவர்கள்.
ஆனால் இவர்கள் சொல்வதைக் கேட்டால் சலிப்பாக இருந்தது. ஏனெனில் – இந்த ந்யூட்ரினோஎதிர்ப்பாளக் குசுவாளர்களின் அலப்பரைகள் தாங்கமுடியாமல் போய்க்கொண்டிருப்பதாக அபிப்ராயம் தெரிவித்தார்கள், பாவம்!
நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தால், வேறு தோதான இடம் பார்த்து அங்கு இந்த மையத்தை மாற்றியமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகச் சொன்னார்கள். அதாவது ப்ளேன்-பி (Plan B). சோகம். அவர்களும் எவ்வளவு நாள்தான் தமிழகத்தின் கூவான்தனமான தாமதத்தைப் பொறுத்துக்கொள்ள முடியும், சொல்லுங்கள்? இத்தனைக்கும் இந்த மையத்தால் நன்மைகள் மட்டுமேதான் ஏற்படப்போகின்றன!
இதையும் மாய்ந்து மாய்ந்து தெள்ளத்தெளிவாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்… இருந்தாலும், கூவான்களின் எதிர்ப்பு அடங்குவதாகவே காணோம்! எல்லாம் போராளித் திராவிடத் தடித்தனம், வேறென்ன சொல்ல!
இப்படியொரு முட்டாக்கூத்தனமான எதிர்ப்பு இருந்தால் – எப்படித்தான் நான் அறிவியலிலும் பொறியியலிலும் மேன்மையடைவது, நம் இளைஞர்களில் படுபுத்திசாலிகளுக்கு எப்படித்தான் இந்தியாவிலேயே பணிசெய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது? சலிப்புத்தான் வருகிறது.
-0-0-0-0-0-0-0-0-
சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின் எனக்கு ஆர்வமிருக்கும் விஷயங்களைப் பற்றி இன்று படிக்கும்போது, இந்த திடுக்கிடவைக்கும் செய்தியைப் படித்தேன். சோகம்தான், வேறென்ன சொல்ல!
‘Shifting of neutrino project will be a huge loss to TN’
இந்த எதிர்ப்பு வாந்தியில் பெரியார் பங்கும் இருக்கிறது. அவருடைய ப்ரேண்ட் பகுத்தறிவு அரைகுறைகள்தான் (அதாவது வைகோ போன்றவர்கள் + தமிழ்தமிழ்தமிழ் என அரற்றும் உதிரி அற்பர்கள்) இந்த எதிர்ப்பு முட்டாள்தனத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். சாவுக்கெராக்கிகள்!
இதுதான் பெரியார் அடிவருடிகளின் அறிவியல் அறிவின் லட்சணம். (பெரியாரின் அறிவியல் ஞானமும்(!) இதேவகைதான் என்பது வேறு விஷயம்!)
இந்த திராவிடப் பதர்களைத் தமிழகத்தில் இருந்து தமிழர்களே ஒழிக்கும் நாள் எப்போது?
-0-0-0-0-0-0-
சரி. இந்தியா திரும்பிச் சென்றதும், என்னால் முடிந்த – இந்த ந்யூட்ரினோ மையம் தொடர்பான – கோரிக்கைகளை என் நண்பர்கள் மூலமாகவும் (அவர்களுடன் கலந்து பேசியும்) தமிழக அரசின் முன் வைக்கப் போகிறேன். பார்க்கலாம். (கோரிக்கைகளில் முதன்மையானது: இந்த எதிர்ப்பாள அயோக்கியர்களை முட்டிக்குமுட்டி தட்டி ஒழுங்கு படுத்துவதுதான்!)
பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று. ஏதோ ஒரு ஓரத்தில் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. :-)
ஆனால், கெட்டாலும் தேவரடியார்புதல்வர்கள், தேவரடியார்புதல்வர்களே.
October 29, 2016 at 14:50
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
October 29, 2016 at 15:34
Dear Premkumar, what an apt festival of lights!
…From ignorance, lead me to truth;
From darkness, lead me to light;
From death, lead me to immortality
Om peace, peace, peace
Hope sanity and peace prevails allover, including and particularly in the land of our hapless fellow tamils.
Okay, that was supposed to be fireworks or what? ;-)
__r.
October 31, 2016 at 06:13
Meanwhile
hope we can handle Dravidian pure bloods (“? !!!, I dont know what that shit means)
like this:
November 4, 2016 at 08:20
Dear sir,
Deva-adiyaar was part of nobility and very dignified people. They serve only God, none other. It is a not derogatory in sense.
November 4, 2016 at 11:56
Sir, well. I understand what you are saying; but, this institution got banalized, what with reduced temple funding etc during the brit period and there were all kinds of things that these folks had to do merely to survive.
In any case, as I had mentioned earlier, I have a lot of respect for these unfortunate folks – banalization or not.
Thanks!
__r.
February 26, 2017 at 08:52
Sir, Can you please enlighten on what shale gas is all about and the hydro carbon exploration project planned at Neduvasal ?
February 26, 2017 at 11:50
I am really sorry, dear Sreedhar. I just do not have the time.
But, I would strongly encourage you to readup on all factors, weigh all points – and then come to a reasonable conclusion. If you would be kind enough to do a writup on it in Tamil, then I would be glad to publish it too.
Thanks!
February 26, 2017 at 18:26
OK sir. i will give a try.
February 28, 2017 at 11:19
Hi Sreedhar, A guy named Vijayaragavan Krishnan had a talk with reputed geologist Mu.Ramkumar and shared his thoughts in his Facebook post. I think it is worth to read. The content is here https://justpaste.it/13ze2
Disclaimer: I couldn’t comment on validity of this technical things. And also he may be politically biased
March 1, 2017 at 10:50
அன்பர் ஸ்ரீதர் அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டம் சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு தங்களின் நேரமின்மையை சுட்டிக்காட்டி எழுதியிருந்தீர்கள்.மேலும் அன்பர் சிவசங்கரன் அவர்கள் இது சம்பந்தமாக விஜயராகவன் கிருஷ்ணன் எழுதிய கட்டுரையின் சுட்டியை பகிர்ந்திருந்தார். இது சம்பந்தமாக தினமலர் ‘e -பேப்பரில்'(28.02.17 தேதியிட்ட)வந்த இரு செய்திகளை சுருக்கமாகத் தெரிவிக்கிறேன்.
ஒன்றில் “ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை” என்ற தலைப்பில் பேராசிரியர்.இளங்கோ அவர்கள் (தலைவர்,நிலஅமைப்பியல் துறை,அண்ணாபல்கலைக்கழகம்) ஒருகட்டுரை எழுதியுள்ளார்.அதன்படி இத்திட்டத்தால் நிலத்தடி நீருக்கோ சுற்று சூழலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் உலகெங்கிலும் பல இடங்களில் இந்த வளம் உள்ள இடங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.தகுந்த தொழில் நுட்பத்துடனும்,பாதுகாப்பு முறைகளை கைக்கொண்டால் இது இங்கும் சாத்தியம்தான் என்று எழுதியிருக்கிறார்.
அடுத்து மத்திய அரசின் விளக்கமாக வந்துள்ள செய்தி ஒன்றில் ‘நெடுவாசல் திட்டத்தால்’எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் மாறாக 500 பேருக்கு வேலை வாய்ப்பும்,தமிழக அரசுக்கு 40 கோடி ரூபாய் உரிமைத்தொகையும் கிடைக்கும் என்றும் நெடுவாசலில் 4.5லட்சம் டன் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 1, 2017 at 11:34
மேலும் இது சம்பந்தமாக தினமணி e -பேப்பரில் (28.02.2017) வந்த ”தமாஷான” செய்தி பெருமையுடன் வழங்கியவர் ‘வைகைய்ப் பயல் (சாரி ‘புயல்) வைகோ:
” தற்போது மீத்தேன், ஷேல் கேஸ் கலந்த கலவையான (?!)ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.இந்தியாவின் நலனுக்காக தமிழகம் தியாகம்(!!!) செய்யவேண்டும் என பா.ஜ.கவின் இல .கணேசன் அறிவுரை கூறியுள்ளார்.இந்தியாவின் பொருளாதாரம் உயர தமிழகத்தை பலிகடா(!!) ஆக்க முடியாது.மத்திய அரசின் இந்த நாசாகாரத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களும்,மாணவர்களும் போராடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இது போல் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியிலும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவேண்டும்.”