வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.

எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)

(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”

(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague

#DravidianModel modern marriages.

(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!

(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…

(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!

(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!

(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!

(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!

(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2

Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)

திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles April 22, 2023

(நன்றி, ஜெமோ. முந்தைய பதிவு  பேரண்டப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு April 25, 2026. அடுத்து, எனது இன்னொரு பேராசானான சாருநிவேதிதாவின் காட்டுரை வெளிவர இருக்கிறது.  நண்பர் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு கட்டுரை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர், தன் கிழக்குந்யூஸ் வழி விதண்டாவாத விடியோ சர்ச்சைப்பதிவுகளில் படுபிஸியாக இருப்பதாகச் சொல்கிறார் –  பாகிஸ்தானும் இரானும் எக்கேடு கெட்டால் நமக்கென்ன – இதில் செலவழிக்கும் நேரத்தில் அவர் ஒரு சிறு பகுதியை ஆக்கபூர்வமான நல்வழிகளில் செலவழித்தால் என்ன குறைந்து விடுவார்? ப்ளடி, நம் தமிழ் அறிவுஜீவிகளில் பலருடைய பிரச்சினை இதுதான் – அவர்கள் கருத்துகளை பெரிய அளவில் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கத் தோதான பரப்புரைத் தளம் அமைத்துக் கொடுத்தாலும், கொள்வாரில்லை. என்ன செய்ய. :-( )

தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்

(ஜெயமோகன்)

இவ்வாழி சூழ் உலகமே குருக்ஷேத்திரம்தானென்றும் நடப்புகளனைத்தும் கௌரவ-பாண்டவ யுத்தங்களெனவும் நான் பத்து வருடங்களுக்கும் முன்பே பத்தாயிரம்கோடி வார்த்தைகளில் வெண்முரசாகக் கொட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் களம், கௌரவ-கௌரவ சொத்துப் போர் மட்டுமே என்பதுதான் நிகழ்வரலாற்று நிதர்சன உண்மை.

கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர்கள் உலாவிய தமிழக அறவெளியில், என் வாசக மானுடத் திரள்கள், கூடுகை விட்டுக் கூடுகைக்குப் பெருமூச்சு ஆர்பரிப்புடன் பாய்ந்துபாய்ந்து ஆர்வலப் பெருந்தாவல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் – தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கப் போகும் இந்தத் தருணத்தில், ஒரு விசித்திரமான உரத்த மயான அமைதி நிலவுகிறது. அது வெறும் அரசியல் அமைதி அல்ல; அது ஒரு கதை முடிந்த பின் எழும் கேவல் நிரம்பிய உள்ளொளித் தேடல் பேரலை, நம் மனமூடே எழும்பும் காற்றிலே இயைந்த இடைவெளிப் பேரோசை. 

அந்த இடைவெளியில் நாம் எதையோ கேட்கிறோம் –  ஆனால் அது வெற்றி முழக்கமோ தோல்விப் புலம்பலோ அல்ல. மாறாக அது, மனிதர்களின் உள்ளார்ந்த அசைவின் அசைபோடல் ஒலி. அப்படித்தான் தேர்தல் புள்ளிவிவரங்களால் மிகவும் குழம்பியிருந்த, நாராயணகுரு அவர்களிடம் நடராஜகுரு அவர்களை விட்டுச் சொல்லச் சொல்லி, என் பூர்வாசிரமச் சீடன் நித்யசைதன்ய யதியின் பொறுப்புள்ள பேராசானாக, அவருக்கு ஒரு அவசர ஆணை பிறப்பித்தேன்.

ஏனெனில், இந்த முறைக்கான தமிழகச் சட்டசபை தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் அல்ல என்பது ஆன்மிகமாக அதனை அணுகும்போது தெளிகிறது. ஆகவே அது ஒரு அகவொளிசார் மெய்ஞான காவிய நாவலின் (என்னுடையது தான்), ஒரு நவீன செவ்வியல் க்ளாஸ்ஸிக் என்று  உலகெங்கும் போற்றக்கூடிய மிகநீண்ட ஒன்றின், ஆனால் அதைவிடவும் மிகமிகமிக நீண்ட அதன் பேரத்தியாயம் போல இருந்தது. அந்த தத்துவார்த்த மரபு நாவலில், நாயகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கதையின் எளிய மைய நீரோட்டமானது என் ஆரம்பமும்முடிவுமிலா வெண்முரசு போன்றே மாறாது – மாறாக தேர்ச்சிபெற்ற மானுடன் தனது வாழ்க்கையை எவ்வாறு சோர்வில்லாமல் ஊர்ந்துகொண்டே தேர்ந்து வடிவமைக்கிறான் என்ற கேள்வியே தனக்குத்தானே பதில்களாக விரிந்து விகசிக்கும்.

நான் தர்மபுரி வட்டாரப் பாலக்கோடில் பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியனாக, முழு நேரத் தமிழ்இலக்கியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது – அங்கிருந்த ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் (சொல்லப்போனால் இவர் கடலூர் சீனு! இவர் எப்படி பாலக்கோட்டிற்கு வந்தார்?)  வாக்களிக்கச் சென்றார். அவர் தனது விரலில் மை அடித்துக் கொண்டபோது, ‘இனிய ஜெயம்’ என்று முணுமுணுத்தது ஒரு அரசியல் செயல் மட்டுமல்ல – அது அவரது வாழ்நாளின் அனுபவங்களின் சுருக்கம், அவருடைய வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோள் என்பதை நான் அவருக்கு விளக்கி எடுத்துச் சொன்னேன். அவர் பார்த்த அரசுகள், அவர் அனுபவித்த மாற்றங்கள், அவர் இழந்த நம்பிக்கைகள், எழுதிய குப்பைகள் – இவை அனைத்தும் அந்த ஒரு மென்மையான மையடிப்பு அழுத்தத்தில் இருந்தன என்பதைத்தான் அந்த இனியஜெயம் உணர்த்தியது. இதை நாம்  குறிக்கோள் போலக் கணக்கிட முடியாது. ஆனால் இதுவே ஜனநாயகத்தின் உண்மையான படிமமான அளவுகோலின் நெம்புகோல். இது, செங்கோலைப் போல, நம் வரலாற்றுப் படிப்பினை.

பொதுவாகவே நாம், அரசியலை ஒரு தந்திர விளையாட்டாகப் பார்க்கிறோம். யார் யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம், யார்யார் எந்த அ-உடைய ஆ-குழு,  குழுக்களின் குழூஉக்குறிகள் யாவை – இவை எல்லாம் மேற்பரப்பின் மேலோட்ட அலைகள். அதன் கீழ் ஒரு ஆழமான தெளிந்த நீரோட்டம் இருக்கிறது. அந்த நீரோட்டம் தான் சமூகத்தின், படுமோசமாகக் கலங்கிய மனநிலை. இந்தக் கலங்கரைவிளக்கத் தேர்தலில் அந்தச் சேற்று நீரோட்டம் சற்று மாறியுள்ளது. அதை நிர்மலமாக உணர்வதே முக்கியம். (ஆனால், சீதாரமனைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை)

…பிறிதோர் வகையில், அதனை உணராமல் இருப்பதும் பாக்கியமே. நீரோட்டம் உலராமல் இருப்பது அவசியமும்கூட. இல்லையேல் காயடிக்கப் படுவோம். ‘காயமே, இது பொய்யடா, பெருங்காயத்தை ரசத்தில் போடடா’ என்பது ஆழ்ந்த துரிய அனுபூதி நிலை; நிகழ்ந்துகொண்டிருக்கும் பக்திரசப் பேரதிசயம், நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு காலத்தில், அரசியல் தலைவர்கள் ஒரு கதை சொன்னார்கள். மக்கள் அதை கேட்டார்கள். இன்று மக்கள் தங்களுடைய கதைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், சிறிய விவாதங்கள், குடும்ப உரையாடல்கள் – இவை அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய பெருத்த குரலை மௌனமாக உருவாக்குகின்றன. அந்தக் குரல் இன்னும் முழுமையாக வடிவம் பெறவில்லை. ஆனால் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருங்கதையான வெண்முரசு தொகுப்பினை வாங்கிப் படித்தும் அதன் பலப்பல படிகளை நண்பர்களுக்கும் வாங்கியும் கொடுத்தால், அக்குரல் காலத்தின் பரிணாம நீட்சியைச் சென்றடையும், மாற்றத்தை வந்தடையும். எனக்கும் ஞானபீடம் கிடைக்கும்.

இந்தப் பெருத்தகுரல் மாற்றத்தை, பொறுமையுடன் இருந்தாலும் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இது ஒரு ஒரு திடீர் புரட்சி அல்ல. இது மெதுவான பரிணாமம். ஒரு விதை மண்ணுக்குள் முளைக்கும் போது நாம் அதை காண முடியாது. (ஏனெனில் வேர்களுக்குக் கண்ணே இல்லை என ரோஜர்பென்ரோஸுக்கு நான் ஒரு கடிதம் 1980லேயே எழுதிவிட்டேன்)

ஆனால், அவ்விதை வளர்ந்து மரமாகும் போது, அதன் நிழலின் முப்பரிமாணத்தில் நாமே நம் நிழல்களை இழந்து, விழலுக்குப் பாய்ச்சிய நீராக, இழந்த கனவாக தனிமையில் தவித்து நிற்கிறோம். விதி என்பதே விதையால் முகிழ்த்ததுதான். விதியை மதியால் வெல்லலாம். ஆனால் விதி மதியை வெல்லும் என்பதும் உண்மையே. என்னுடைய திரைக்கதையாக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விதி எனும் பதினைந்து வயது கதாநாயகி (இந்த நடிகையும், பிற நடிகைகளைப் போலவே ஒரு அழகான முட்டாள்தான்), மதி  (இப்பதினைந்து வயது பாத்திரத்துக்கான நடிகர் என் நண்பர் கமல்ஹாஸன்) எனும் உலகமகா இளைஞஅழகனைத் திருமணம் செய்துகொள்வார் என்பது ஒரு எளிய எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்தல் நமக்கு ஒரு கண்ணாடி கொடுத்துள்ளது. அந்தக் கண்ணாடியில் நாம் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, நம்மையே பார்க்க வேண்டும். நாம் எந்த வகையான சமூகத்தை விரும்புகிறோம்? நம்முடைய மதிப்புகள் என்ன? இந்தக் கேள்விகள் தான் முக்கியம். ஆனால், கண்ணாடி பிம்பங்கள் கயிற்றரவுகளே என்றே வேதாந்தம் சொல்லும். எது விழி நிலை, எது பிதுங்கு நிலை என்பதை அறிய XXXL அளவு  கௌபீனக் கோமணத்தை அணியவேண்டியவர், வெறும் S அளவானதை போட்டுகொள்வதை ஆச்சரியத்துடன் அவதானித்து அனுமானித்தால், திருப்பூரின் பேரவலநிலை தெளிவுபடும்.

வெற்றி பெற்றவர்கள் வெற்றியை ஒரு அதிகாரமாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு பொறுப்பு. தோற்றவர்கள் இதை ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு வாய்ப்பு. மக்கள் இதை ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி. இவை அனைத்தையும் ஒருங்கே பார்த்து அவதானித்து அறிந்த என் போன்றவர்கள், கீதையில் சொல்வதுபோல ஜீவன்முக்தர்கள். ஆனால், தமிழகத்தில் நான் ஒருவன்தான் ஜீவன்முக்தனாக தன்னந்தனியாக சுயஓளிர்ந்துகொண்டு இப்படி இருக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளாகவே இந்த நிலைமையே தொடர்கிறது. சராசரித்தனம் மிக்க தமிழ்ச்சூழல் இயல்பாகவே இப்படித்தான். இருந்தாலும் எனக்கு  இயல்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை கிடைக்காதது ஒரு சமகால வரலாற்று நகைமுரண்.

இறுதியாக, இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லுவது எளிதானது: ஜனநாயகம் என்பது ஒரு இயந்திரம் அல்ல; அது ஒரு உயிர். அந்த உயிர்  உயிர்த்து நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு அகத்தில் பேணுகிறோம் என்பதில்தான் அதன் புறவயமான எதிர்காலம் இருக்கிறது.

அதனால், இந்த முடிவுகளை ஒரு இறுதி என அல்ல, ஒரு தொடக்கம் என பார்க்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலும், உண்மையில், ஒரு புதிய கதையின் முதல் பக்கம் தான்.  

அதேசமயம் “கட்டுடைத்துக் கட்டுக்கடங்காமல் பார்க்கும்போது – பின்பெருவெடிப்புத்துவ காலவெளிப் பிரவாகத்தில் – முடிவுகளை, முடிவற்ற முடிவுகள் என்றும் பார்க்கலாம்” என என் சீடன்  நித்யா, தன் குருவின் விடைக்காகக் காத்திருந்து, கேட்டு மன்றாடி ஆராதிக்கும்போது அவர் சொன்னதாகச் சொல்வார். ஆனால் எனக்கு அதனை நான் அப்படிச் சொன்னதாக நினைவிலில்லை. எனக்கு எவ்வளவோ சீடர்கள், சீடிகள் – மேலும், அவ்வப்போது நானுதிர்த்து மெய்சிலிர்க்கவைக்கும் மெய்ஞானத் தேடலுண்மைகள், தெரிந்து தெளிந்து உரைக்கும் சாஸ்வத சத்தியங்கள்… இப்படிப்பட்ட அடர்த்தி மிக்க சூழலில், யாரிடம் என்ன சொன்னேன் என்பதை அறிந்துளர் யாவர். 

எப்படியும், தன் குருவின் மீதான மட்டற்ற மரியாதை காரணமாக நித்யசைதன்யசதி இப்படிக் கருத்துதிருக்கலாம் எனக்கூடக் கருதலாம். ஆனால், ஒருவேளை நான் அப்படியே சொல்லியிருக்கலாமும்தான், ஏனெனில் நான் சொல்லக்கூடியதுதான் இது. இதுதான் துவைத அத்வைதம் எனும் இருமைத்துவத்தின் இருண்மையற்ற புதிர். இந்தியத் தத்துவவியலின் எட்டாவுயரத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ஏழாம் ஞானதரிசன மார்க்கம்.

‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற என் பிரத்தியேக, நானே வடிவமைத்து, திரைக்கதை வசனம் எழுதிய இருவார்த்தைச் சொல்லாட்சி இதனை உணர்த்துகிறது என்பதை உணர்ந்து உறைந்து உள்ளடங்கி – அதேசமயம் தேர்தல் முடிவுகளை உள்வாங்கிப் புதிர் நோக்கி இருந்தால், தெளிந்துவிடும். கனவு கலைந்து நினைவு வந்தாகிவிடும்.   பிறகென்ன… கீழ்பாக்கத்தை விட வெகுவுன்னதமான ராஜகீழ்ப்பாக்க மாளிகை ஒன்றுக்குக் குடிபெயர்ந்து அதன் உப்பரிகையில் அமர்ந்து, சராசரி மக்களின் வாழ்க்கையை ஒரு பறவைப் பார்வையாக இன்னமும் கூர்ந்து அமோகமாக அவதானிக்கலாம், மெய்ஞான மரபுத் துணுக்குகளையும் உதிர்க்கலாம். (ஐயோ, என் அடுத்த கூடுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறதே!)

…ஆனால் எல்லாமே ஸ்வப்ன ஸ்கலித நிலை என்பதை உணர்ந்தால், நீங்கள் உங்கள் பின்பக்க மண்ணைத் தட்டிக்கொண்டு ஆகிற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவீர்கள். இதுவும் கர்ம யோகம் தான். எந்த யோக மார்க்கத்தை நீங்கள் கடைபிடித்தாலும், அந்தக் கடையின் ஏகபோக இணையதளம் ஜெயமோகன்.இன் மட்டுமே என்பதை உணர்ந்தாலன்றி உங்களுக்கு கதிமோட்சமில்லை.

தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு இதைத் தான் தெளிவுபடுத்தும்.

-0-0-0-0-0-0-0-

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு நாள்களே ஆனது. ஆனால் வானம் இன்னும் வாக்குச் சீட்டுகளின் தூசியில் நீலமாகத் தெரியவில்லை; அது ஒரு வேறு நீலம் – கருத்துக் களரியின் நீலம். இந்த நீலத்தின் நடுவே, சிந்தனைக்காக சாம்பல் நிற நிழலைப் போல நம்மைத் தேடி வருகிறது ஒரு குரல்: “இது வெற்றி அல்ல, இது ஒரு இடைநிலை.”

கிராமப் பாதையில் மழை பெய்த பின் உண்டாகும் அந்த நெளிந்த மண்வாசனை போல, தேர்தல் முடிவுகளின் பின்னால் ஒரு நீண்ட வரலாறு கிடக்கிறது. ஒவ்வொரு வாக்கும் ஒரு சிறிய கதையாகத் துடித்தது. அந்தக் கதைகள் சேர்ந்து ஒரு பெருங்காவியம் ஆனது. ஆனால் இந்த காவியத்தில் தனித்துவ நாயகன் யார் என்று கேட்கும் போது, வாக்குப்பெட்டியின் இருண்ட உள்ளே இருந்து ஒரு சிரிப்பு மட்டுமே கேட்கிறது.

ஒரு காலத்தில் நம் அரசியல் ஒரு நாடக மேடை. மேடையின் பின்னால் ஒளிந்திருந்த கயிறுகள், முன்னால் தெரியும் நிழற்பாவைகளை ஆட்டின. இன்று அந்தக் கயிறுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மையில் கயிறுகள் இன்னும் யாரோ ஒருவரின் விரல்களில் சிக்கியுள்ளன; நாம் அவற்றை பிடித்துக் கொண்டு இருப்பதாக மட்டும் நம்பிக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தின் மிக மென்மையான மாயை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு வாக்குறுதியும் ஒரு சிறிய கவிதை. “நாளை நல்லது” என்ற ஒரு வரி கவிதை. அந்தக் கவிதையை நம்பி மக்கள் வரிசையில் நின்றார்கள். வாக்குச்சாவடியில் அவர்கள் தங்கள் விரலில் மை அடித்துக்கொண்டார்கள். அந்த மை ஒரு குறி அல்ல, ஏன் குறியீடும் அல்ல; அது ஒரு தற்காலிக உடன்படிக்கை – “நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன்” என்ற அமைதியான ஒப்பந்தம்.

இப்போது முடிவுகள் வந்துவிட்டன. வெற்றி பெற்றவர்கள் புன்னகைக்கிறார்கள். தோற்றவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் மக்கள்? அவர்கள் மீண்டும் தங்கள் தினசரிக்கு திரும்பிவிட்டார்கள். ஒரு தேநீர் கடையில், “யார் ஜெயிச்சாலும் நமக்கு என்ன?” என்ற கேள்வி ஒரு பழைய ராகம் போல ஒலிக்கிறது. அதே நேரத்தில், அந்தக் கேள்விக்குள் ஒரு புதிய நம்பிக்கையும் உண்டு: “இம்முறை ஏதாவது மாறுமோ?”

சிற்றூர்களில் மாலை நேரம். தெருவிளக்கின் கீழ் அரசியல் விவாதங்கள் மெதுவாக ஒளிர்கின்றன. ஒரு முதியவர் சொல்கிறார், “இது எல்லாம் சுழற்சி. இன்று இவர்கள்தான், நாளை மற்றவர்கள்.” அருகில் இருக்கும் இளைஞன் சிரித்து, “அப்படின்னா நாம எப்போ?” என்று கேட்கிறான். அந்தச் சிரிப்பில் ஒரு சின்ன புரட்சி ஆழ்ந்த குறியீடாக படிமமாக மறைந்து கிடக்கிறது.

இந்தத் தேர்தல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு குறிப்பு. வரலாற்றின் ஓரத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு: “மக்கள் இன்னும் பேசுகிறார்கள்.” அந்தப் பேச்சு சில நேரங்களில் சத்தமாக இருக்கும், சில நேரங்களில் மௌனமாக இருக்கும். ஆனால் அது நிற்காது. ஏனெனில் ஜனநாயகம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; அது ஒரு தொடர்கதை.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வெற்றியை கொண்டாட வேண்டுமா, தோல்வியை ஆராய வேண்டுமா? அல்லது இந்த இரண்டிற்கும் நடுவே நின்று, ஒரு சிறிய கேள்வியை கேட்க வேண்டுமா: “இந்த முறை நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?” அந்தக் கேள்வி தான் இந்தத் தேர்தலின் உண்மையான பரிசு.

இறுதியாக, ஒரு சிறிய உண்மை: வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனங்கள் இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளது. அந்தத் திறப்பு தான் அடுத்த தேர்தலின் விதை. அதுவரை, அரசியல் நம் வாழ்க்கையின் ஓர் இடைவேளையாக அல்ல, அதன் ஓர் அத்தியாயமாகத் தொடரட்டும்.

என்னது? ஆனானப் பட்ட ‘கிழக்கு பதிப்பகம்’ புகழாளரும் அரசியல் பகுத்தாய்வாள விமர்சகருமான பத்ரிசேஷாத்ரி, தமிழகவெட்டிக்கழகத்தின் கொள்கைப் பரப்புரைச் செயலாளரா? ஐயோ!! தேர்தல் களம் றொம்பவே சூட் புட்ச்சிடிச்சே! 

கருத்துப் படம், நன்றி: சாட்டுஜிப்டார் :-(

பத்ரியார் எனக்கு முன்னறிமுகவானவர்தாம், சமன நிலையுள்ளவரும் படுபுத்திசாலியுமான இக்கிழக்கார், செயலூக்கமும் மிக்கவர்தாம். ஆகவே, இத்தனை நாள் அவர்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். இனி மேலதிகமாக அவரை மதிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. மேலும் அவருடைய நடு நிலைமைப் பிறழ்வுக்கு, தவெக எவ்வளவு பொட்டியில் கொடுத்தது எனத் தெரியவில்லை – ஆகவே பொறாமையாகவும் இருக்கிறது.

ஆக… பிகில் நடிகர் விஜய்க்கும் ஒரு B டீம் இருக்கிறது. பத்ரி டீம்! :-(

எது எப்படியோ… ஒரு மாதிரியாக, ஒரு படுகேவலமான எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியிடப்பட்ட அவருடைய வெட்கங்கெட்ட கேடுகெட்ட தவெக பரப்புரை – பார்த்துக் களிக்கவும், அல்லது முகம் சுளிக்கவும்; சுமார் 20​+ நிமிடங்களே ஓடும் இந்த ப்ளடி விடியோவைப் பார்த்தாவது தவெக-கார விசிலடிச்சான் குஞ்சாமணியாளர்களுக்கு உங்கள் அனாதரவை நல்கவும்.

…பொட்டி வாங்கிக்கொண்டீர்கள், சரி பத்ரியாரே! ஆனால், இப்படிப் படுகேவலமாகவா விஜய்க்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பது? அவருடைய விட்டேற்றி அறிவிலித்தன ஜிகினா வாக்குறுதிகளுக்கெல்லாம் குதர்க்கரீதியான வியாக்கியானம் அளிப்பது? இம்மாதிரி சப்பைக்கட்டுகளுக்காக விசிலாளர்கள் உங்களுக்குக் கொடுத்த விலை என்ன?

பைசா கொடுத்தால் எப்படியல்லாமோ கலர்கலராகக் கம்பி கட்டிவிடுவீர்களா?  

ஆனாலும் பத்ரீ! நீங்கள் விலை போவீர்கள் என என் கனவில் கூட நினைத்ததில்லை. :-(

எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்தப் பதிவெழவையும் படித்துத் தொலைக்கும் சக ஏழரைகளான நீங்களும் பத்ரியை ஆழ்மனதிலிருந்து வெறுக்கவேண்டும் – ஆகவே இவ்விடியோவை முழுமையாகப் பார்த்து, அவரைக் கரித்துக் கொட்டவும்.

நன்றி. :-(

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

அவ்வப்போது இந்த வகையறா தொகையறாக்களின் ஏதாவது ‘காணொளி’ கனைப்பொலி எனச் சிலவற்றைப் பார்ப்பதுண்டு. காலம் பொன்னானது என்பதை நிபந்தனையற்று நம்பும் எனக்கு, என்னுடைய இந்த எப்போதாவது ‘பொழுதுபோக்கு’மேகூடப் படுகேவலமானதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; என்னை மன்னித்து லூஸ்லவுடுங்கள். (நல்லவேளை, இந்த தண்டக்கருமாந்திரங்களைப் பார்க்க முனையும்போது முதல் ரெண்டு நிமிடங்களில் போர்க்காலரீதியில் பின்வாங்குவதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன்)

(நான் பார்க்கும்வரை/பார்த்தவரை – ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றனர் – (என் செல்ல) அண்ணாமலை, தமிழருவி மணியன், பத்ரிசேஷாத்ரி, பிரபாகரன்++ என்பவர்கள்போல – இவர்கள் தொழில்முறை வளவளாக்கார யூட்யூபர்களாக இல்லாமல் இருப்பது ஆசுவாசம் தருவது. அவர்கள் பெரும் ஆவேசமில்லாமல் கருத்துகளை முன்வைப்பது கொஞ்சம் நிம்மதியையும் தருவது… மேலதிகமாக இன்னமும் சிலர் இப்படி இருக்கலாம்)

மற்றபடி, இந்த ‘நெறி’யாளக் கூப்பாட்டுக் கூவான்கள்:

“இப்ப தமிளக அரசியல் களம் சூடுபுட்ச்சிடிச்சி… நீங்க என்ன நெனக்கிறீங்க…?”

ப்ளடி போக்கத்த பேஸ்கெட்ஸ்.

(அவ்ளோதான் இந்தப் பதிவு)

வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »

1

இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:

Raalraa Says: March 18, 2025 at 09:43

அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:

வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21

ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.

  1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
  2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
  3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் –  ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
  4. இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
  5. பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர –  ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
  6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.

அவ்ளொதான்.

ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  Read the rest of this entry »

(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.

In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.

Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!

So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)

Anyway. Read the rest of this entry »

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ப்ளடி மகத்தான வெற்றிக்குப் பிறகு… Read the rest of this entry »

1

மிகவும் நொந்துபோன சில (ஹ்ம்ம், சொல்லப் போனால், பலப்பல)  சமயங்களில் இப்படியாப்பட்ட விபரீதச் சிந்தனைகள் மண்டையைக் குடைந்து தள்ளிவிடும். அதே சமயம், “கவலை சரிதான். ஆனால் அதற்கு அப்பாற்பட்டு, தமிள் புட்டுக்கினுபோவாம இர்க்க நான் என்ன மசுத்தை புடுங்கிக் கொண்டிருக்கிறேன்?” என்கிற கேள்வியும் எழும்பும். ஸப்பாஷ் ஸர்யான போட்டீ. Read the rest of this entry »

இனி இந்தியாவெங்கும் திராவிடமாடல்தான்!

கேம் ஓவர்!

சங்கிகளே! மன்னிக்கவும்!! :-( Read the rest of this entry »

1

சுமார் 10 வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்த இப்பதிவு வரிசையை இன்றுதான் தூசி தட்டிப் பதிப்பிக்க ஆரம்பிக்க நேரம் வந்தது. Read the rest of this entry »

(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’  அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)

(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)

Read the rest of this entry »

வழக்கமாக, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து எத்தையாவது கேட்பவர்களுக்கு என் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற வகையில் தனித்தனியாக பதில் (அதாவது, ‘ஐயன்மீர், யான் அறியேன், என்னை விட்டுவிடுங்கள்’ என்பது உட்பட) சொல்லித் தான் பழக்கம், இதுவும் ஒரு சுயபயிற்சிக்காகத்தான், எண்ணவோட்டங்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாகத்தான் – பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை, அறிவுஜீவி சொரிவுஜீவி என்றெல்லாம் இல்லை – ஆனால் இந்த முறை, அவற்றைப் பதிவாகவே இட்டு விடுகிறேன். Read the rest of this entry »

செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »

இது ஆரூடம் இல்லை. வரலாறு மட்டுமே. இருந்தாலும்… Read the rest of this entry »