ஹஹ்ஹா! நம் தமிழர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி!! (= நகைச்சுவை)
November 30, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4
சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.
ஆனால், நம்மை யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.
பகபகத் சிங்: நான் ஏன் ஆத்திகன் ஆனேன்?
November 29, 2013
என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன் ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.
இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.
ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.
அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?
இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு!
November 27, 2013
மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.
இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம் என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?
சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »
தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி
November 25, 2013
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:
… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் — நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …
நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »
சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள்
November 24, 2013
சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]
இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.
ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில் ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.
ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!
… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை — எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு உந்துகிறது. Read the rest of this entry »
calculus made easy!
November 22, 2013
‘The Annotated Alice‘ of Lewis Carrol and Martin Gardner – was (finally) returned a couple of weeks back by my dear Rama and I was fondly leafing through it, before sentimentally returning it to the library shelves. It is currently rubbing shoulders with the books of the likes of Isaac Asimov, JBS Haldane, Erwin Schrödinger, Enrico Fermi, Paul Dirac, Albert Einstein, Robert Oppenheimer et al and should be feeling happy now; what a work of deep scholarship!
Rest in peace, Martin. You lived to a ripe old age of 96 and also did a great job of living, all the while!
Having thoroughly enjoyed (actually a lame word like ‘enjoyment’ does begin to describe the pure exhilaration one feels studying a Martin Gardner or a Douglas Hofstadter or a Richard Feynman) ‘The Annotated Alice’ among many other works of Martin, I am reminded of that 1910 gem ‘Calculus Made Easy‘ of Silvanus Thompson which was later updated and edited by Martin in 1998. ( I just realized that this classic, a real classic at that, has completed hundred years of its existence!)
Now, what is oh so great about the book? Read the rest of this entry »
சாளரம் #2: வரலாறு = குத்துமதிப்பாக இது, ஒருவேளை வரலைந்துக்கும் வரலேழுக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜந்துவோ என்னவோ?
November 20, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)
அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால், தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)
சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.
இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
-0-0-0-0-0-0-0-0-0-0-
ஏன் நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில், நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் – என்ன இருந்தாலும் நானும் ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »
(or) USSR (RIP), MIR Publications, and oh yeah – Yakov Isidorovich ‘Y Perelman’: Physics can be Fun! (aka ‘Physics for Entertainment’)
This book published in 1913, – ‘Physics can be Fun’ – is truly a classic and is still a classic. I recommend it heartily to anyone (and everyone) who is fortunate enough to have a passing knowledge of English – well, that’s how I recommended it to myself in the first place!
In my humble opinion, no home is complete without this book on its bookshelves. Really.
I am of the opinion that, if one really goes through the book, it would be next to impossible NOT to appreciate the wonderful world around us. Oh the pure joy! ‘Physics can be fun’ is eminently readable, sprinkled with great insights & cutesy diagrams and is a fantastic work of translation (from the Russian original – or so a little Ruski bird tells me!).
However, I note that these are the stellar times of the gag reflexes – sometimes even from otherwise well accomplished people! You enthusiastically start talking about some delightful aspect of math or literature or film or science or music or whatever, or even cooking for that matter – and you can literally (and immediately) see the eyes of your acquaintances glazing over, eyeballs bulging in disbelief, as they sincerely feel that ‘I can’t do / understand it’ all the time.
They tell themselves forever that they are not good at this, not good at that, they are not made to understand these things, I am like this only etc etc and so very happily settle for Aamir Khan films mediocrity! How sad… What a waste of human potential! Read the rest of this entry »
சாளரம் #1: மரக்காணம் நிகழ்வுகள், ஜாதிக் கட்சிகள், தமிழ் எழுத்துரு /வரிவடிவப் பொங்கல்கள்…
November 16, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (4/n)
(அல்லது) சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (2/2)
முந்தைய பாகம்: சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
… நாம் இந்தச் சாளரத்துக்கான மேலதிகமான எடுத்துக் காட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வெகு அண்மையில் நடந்த விஷயம்: சித்திரைப் பௌர்ணமி – பாமக மாமல்லபுரம் விழா – பாமக_வன்னியர்களுக்கும், விசிகே_தலித்களுக்கும் இடையே மரக்காணம் சுற்றுப்புறத்தில் வன்முறை உரையாடல்கள் – பொதுச் சொத்து நாசம் – பொய் / ஜாதிவெறி அறிக்கைகள்.
குறுகிய காலத் தாக்கத்து – இவை மட்டும் பெரிதாகப் பேசப்படும்: டாக்டர் ராமதாஸ் பொய் சொல்கிறார், பொதுச்சொத்து நாசத்தை பாமக இழப்பீடு செய்யவேண்டும், பாமகவின் ஜாதிவெறிப் பேச்சுக்கள், வன்முறைகளைத் தடுக்கவேண்டும். உடனடி தண்டனை கொடுக்கப்படவேண்டும், இன்னபிற இன்னபிற. Read the rest of this entry »
சாளரம் #1: நமக்கு மாற்றங்களை, நிகழ்வுகளை – சமனநிலையுடன் எதிர்கொள்ளவே தெரியாது! (1/2)
November 15, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (3/n)
முந்தைய பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n) 14/11/2013
சாளரம் #1: மாற்றங்களை, நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, அவற்றைப் பற்றி அவதானிக்கும்போது, நமக்குப் பொதுவாக நிதானமே இருப்பதில்லை. அவற்றின் காரணமாக – உடனடியாக, மிகக் குறைந்த கால அளவில், பல பெரிய சாதக விளைவுகள் ஏற்படும் என்று எண்ணிக் குதூகலம் அடைவோம், அல்லது பாதகங்கள் ஏற்படும் எனப் படு பயங்கர பீதியுறுவோம், அதீத உணர்ச்சிகளுக்கும் புல்லரிப்புகளுக்கும் இரையாவோம்.
அதேசமயம் – நாம், அம்மாற்றங்களினால், நிகழ்வுகளினால் – நெடிய கால அளவில், மெதுவாக, திடமாக நடக்கும், நடக்கப்போகும் சாதக/பாதக விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்கவே மாட்டோம். அப்படியே எண்ணிப் பார்த்தாலும், அவற்றை, அவற்றின் தாக்கத்தை – மிகமிகக் குறைவாகவே மதிப்பிடுவோம்.
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (2/n)
November 14, 2013
முந்தைய இரு பதிவுகள்:
- பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? 02/11/2013
- தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n) 12/11/2013
ஆக, மேலே (அல்லது) கீழே படிக்குமுன் நீங்கள் கீழ்க்கண்ட சுட்டிகளைப் படித்தால் நலம். (இந்த விவரணைகளுக்குப் பின்புலம்: ஸ்ரீலங்காவில் காலங்காலமான தமிழர்கள் பிரச்னை குறித்து, திடுதிப்பென்று முழித்துக்கொண்டு 2013-ல் – இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஆடிய ‘போர் ஆட்டம்’ – மாணவர்கள் படித்துக் கரை கண்டுவிட்டதால், அவர்களும் கூடச் சேர்ந்து கலந்தடித்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்!’ மேற்படி, இந்த களப்பிணியாளர்கள், போராளி, வீரசோழச்சேரப்பாண்டிய தமிழிளைஞ இத்யாதிகள், வினோத ஜந்துக்கள் பற்றிய என் குறிப்புகள்)
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்…
- மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு
- இதுதாண்டா தமிழ் இளைஞன்!
- ஆர்ட்வீனொ, ரொபாடிக்ஸ், இளைஞர்கள்(ஐயோ!),
- இதுதாண்டா தொழில்முறை களப்பிணியாளன்!
- இதுதாண்டா போராளி!
-0-0-0-0-0-0-0-
சரி. வேண்டுமளவு தன்னிலை விளக்கம், முன்னெச்சறிக்கை போன்றவைகளைக் கொடுத்தாகி விட்டது.
ஆக, நம் உலகத்தை அதன் உட்கூறுகளை, அதன் ஊக்கிகளைப் புரிந்துகொள்ள – இவை ஏன் இப்படி நடக்கின்றன, ஏன் அப்படி நடக்கக்கூடாதா, மற்ற இடங்களில் இம்மாதிரி இல்லையே, ஏன் நாம் இப்படி இருக்கிறோம் – போன்ற அடிப்படைக் கேள்விகளைப் பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறேன். Read the rest of this entry »
uranium paranoiaum
November 13, 2013
“India’s generation of children crippled by uranium waste” screams the ‘World news’ section of the British tabloid The Observer.
The byline reads: ‘Observer investigation uncovers link between dramatic rise in birth defects in Punjab and pollution from coal-fired power stations’
Ahem! Let us go through this article first and then treat it with the contempt & disdain that it deserves.
http://www.guardian.co.uk/world/2009/aug/30/india-punjab-children-uranium-pollution
Let me say, I admire this excellent effort at factifuging. However, never mind the facts, if you do a google search, you get copious amounts of random rumours and fearmongering… No real analysis, no understanding at all – all are characterized by a mere store-and-forward procedure!
“…he was systematical, and, like all systematic reasoners, he would move both heaven and earth, and twist and torture everything in nature to support his hypothesis.”
— Laurence Sterne, in Tristram Shandy. Read the rest of this entry »
தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (1/n)
November 12, 2013
இப்பதிவுகளுக்கான ஒரு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குதல்: பத்ரி, தமிழர்களாகிய நாம், ஏன் இப்படி இருக்கிறோம்? (02/11/2013) இது 0/n – அதாவது முதல் பதிவு.
எச்சரிக்கை: 1) இந்தப் பதிவு வரிசை – பல மாதங்கள் முன் பத்ரிக்கு ஒரு கடிதம் போல எழுதப் பட்டது; ஆகவே, நான் கொஞ்சம் எடிட் செய்தாலும், வெட்டி-ஒட்டுவேலை செய்தாலும் – சில காலாவதியான விஷயங்களும் இருக்கின்றன. 2) இப்பதிவுகள் சுமார் 15 போல வரலாம். ஆக, உங்கள் உயிருக்காக ஓடவேண்டுமானால் தாராளமாக ஓடலாம். 3) ஆனால், மேலே படிக்கப் போகிறீர்களானால், அவசியம், இந்த வலைப்பூவின் முகப்பில் வலது பக்கத்தில் இருக்கும் பக்கங்களில் இதனைப் படிக்கவும்: ராமசாமி – யாரில்லை?
பத்ரியின் கேள்விகள்:
* What is your take on the solution to Sri Lankan issue going forward?
* What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?
* What is the role of Tamil Nadu mainstream parties and fringe groups? Why should they be shunned by the civil society and concerned citizens?
* What should Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”
சரி. பத்ரி கேட்டிருப்பதன் சாராம்சம் – 1) ஸ்ரீலங்கா பிரச்னைகளும் 2) ஸ்ரீலங்கா தொடர்பான தமிழகப் பிரச்னைகளும் – பற்றியவை.
ஆனால், சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, தமிழகக் கொதிப்பெல்லாம் வழக்கம்போல அடையாள உணர்ச்சிப்பிழம்புகள், ஃப்லெக்ஸ் தட்டி அடையாள உண்ணாவிரதங்கள், அடையாளக் கல்லெறிதல்கள் நடந்தபின்னர் பின்புறத்தில் (=குண்டிப்பட்டையில்) ஒட்டிக்கொண்ட மண் தட்டிவிட்டுக்கொள்ளப்பட்டு, அடங்கிப்போயிருந்தாலும், டெஸோக்கள் தஸ்புஸ்ஸோக்களாக உருமாறியிருந்தாலும், அவருடைய கேள்விகள் கேட்கப்பட்டு, பதில்கள் பெறப்படவேண்டியவையே. Read the rest of this entry »
பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி: தமிழ் (தமிழில் அல்ல) எழுதுவதற்கு ஆங்கில துணை வரிவடிவம் – சிந்தனைகள்
November 9, 2013
ஒரு வழியாக, இந்த தமிழ் எழுத்துரு, வரிவடிவம். வரியுருக்குறி வகையறா சச்சரவை முடிந்தவரை முழுதும் படித்துத் தெரிந்து கொள்ள முயன்றேன்.(நம் தமிழ் விஷயத்தில் என்னை மிகவும் இம்சிக்கும் பிரச்சினைகள் பலவற்றில், இந்த வரிவடிவமும் ஒன்று)
ஜெயமோகன் அவர்களின் கருத்து என்பது ஒரு யோசனையாக ஆரம்பித்து, நடிப்புத் தமிழர்களால், கோமாளித்தனமாக எதிர்கொள்ளப் பட்டு, நம் தமிழர் பண்பாட்டின் இன்னொரு கூறை, எனக்குத் தெளிவு படுத்தியிருக்கிறது. முதலில் நான், இந்த சச்சரவைப் புரிந்து கொள்ள முயன்றதால், என்னுடைய 2 மணி நேரம் வீணாகியிருக்கிறது என நினைத்தேன்; ஆனால், இந்த வேலையைச் செய்ததனால், எனக்கு ஒரு முக்கியமான படிப்பினை ஒன்று கிடைத்ததால் இது பரவாயில்லைதான்.
அந்த படிப்பினையாவது: நிச்சயமாக, மெல்லட் டமிள் இணிச் சாவாது. ஆனாக்க, றொம்ப பைத்தியம் மேறி கைகொட்டிக்கினு சிறிக்கும்…
ஏண்ணாக்க, டமிள்ல மசுர்க்கூச்செறிய இணமாணத்தோட வாய்ஸ் வுட, எளுத, ஒரு மசுத்துக்கும், ஒர் எளவுக்கும் ஒரு வுஷயத்தப் பத்தியும் படிச்சிர்க்கவோ, தெர்ஞ்சிர்க்கவோ வோணவே வோணாம்! இன்னா நான் சொல்றது… பிர்ஞ்சிதா நயினா??
… நம் தமிழர்களின் அற்புதமான நகைச்சுவையுணர்ச்சியை மெச்சுவதைத் தவிர, எனக்கு வேறுவழியே இல்லை. Read the rest of this entry »
நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!
November 8, 2013
உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.
உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.
நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –
- அய்யய்யோ_அணுசக்தி,
- அடேங்கப்பா_மரபணு,
- வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
- கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
- உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
- உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
- பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
- ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
- ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
- வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
- கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
- கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
- நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!
…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல் தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.
மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
November 7, 2013
கிட்டத்தட்ட ஒரு வருடம்போல, இந்த மங்கள்யான் சாகசத்தின் பயணத்தைக் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரே சந்தோஷம்தான். நமது சூழலில் — தடைக்கற்களை மீறிய மாபெரும் தாண்டல்கள், அதியுயரக் குதிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில் வாழ முடிவதற்கு, ஆச்சரியங்கள் நடக்க நடக்க நாம் தெரிந்துகொள்ள முடிவதற்கெல்லாம், நாம் மிகவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்தான்!
நேற்று காலை, வழக்கம்போல ஒரு பதினைந்து நிமிட உரையாடற்பேச்சில், என் குழந்தைகளுக்கு மங்கள்யான் பற்றிக் கொஞ்சம் சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்குப் பதிலாக, கொஞ்சம் என் சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்டேன்.
அவர்களில் சிலருக்கு – மங்கள்யான் என்றால், ஏதோ இந்தியா ஒரு ராக்கெட் விட்டு ‘மங்களமாக’ நடக்கப்போவதால் அப்படிப் பெயர் வைத்திருக்கிறார்கள் என எண்ணம். ஒரு பத்தாம் வகுப்புப் பையனுக்கு மங்கள் பாண்டே என்று ஒரு ‘தேசபக்திப் படம்’ வந்திருக்கிறது பற்றித் தெரிந்திருந்ததால் – அதன் தொடர்பாக இருக்கும் என்றான். எனக்கு இப்படி ஒரு திரைப்பட இழவு வந்ததே தெரியாது – யாருங்கடா ஹீரோ இதுல, அந்த விஜய்குஜய்யா (‘இல்ல ராம், அது வேறமொழிப்படம்’) என்று கொஞ்சம் சிரித்துக் கொண்டே ஆரம்பித்தோம். ஒரு நேபாலி பையன் சரியாகச் சொன்னான் – அவனுக்கு மங்கள்வார் என்றால் செவ்வாய்க் கிழமையென்று தெரிந்திருந்தது. Read the rest of this entry »
நம் வளமையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல்… (ஒரு பணிமனை)
November 6, 2013
எனது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் திரு ராஜகோபாலன் அவர்கள் நடத்தும் பணிமனை – பேண்தகுநிலை மிகுந்த எதிர்காலத்தை நோக்கிய ஒரு தேடல் – அதாவது ‘Exploring a sustainable future’ டிஸெம்பர் எட்டாம் தேதியில் இருந்து பதினான்காம் தேதி (இந்த 2013 வருடம்தான்) வரை நடைபெறுகிறது.
ராஜகோபாலன் அவர்கள், இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களில் (IIT-சென்னை, IIT-கான்பூர்) பணி புரிந்தவர். சுற்றுப் புறச் சூழலியலில், ஆழிகள் மேன்மைப் படுத்தப்படல், சமூகவியல், காந்திய சிந்தனை, வாழ்வியல், ஹோமியோபதி போன்ற பல தளங்களில் பணியாற்றியவர், பணி ஆற்றுபவரும் கூட. (இவர் போன்றவர்கள் – நல்லோர், கடற்கோள் இந்தியாவைத் தாக்கியபோது செய்த பணிகள், பின்னர் ஊக்கமூட்டிய புனருத்தாரண, சீரமைப்புப் பணிகள் – பொதுவாக வெளியே தெரிய வருவதே இல்லை)
அழகான xkcd சித்திரம், ஜெயமோகனின் எழுத்துருக் கருத்துகள்: இவை தமிழச் சோம்பேறிகளுக்கானவையல்ல!
November 5, 2013
முன்குறிப்பு: எனக்கு ஒருவர், என் பதிவுகளை விட நீளமான ஒரு (ஆங்கில) மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். பல ஆலோசனைகளை (நல்ல எண்ணத்தில்தான் என நினைக்கிறேன்) வாரி வழங்கியிருக்கிறார். சில உலகத்தைக் குலுக்கும், என் உலகப் பார்வையை தலைகீழாக மாற்றும், கேள்விகளையும் கேட்டிருக்கிறார். நன்றி, அய்யா.
அவற்றில் — மிக முக்கியமான கேள்விகளில் நான்கு: 1) நீ எழுதும் தமிழ் கரடுமுரடாக இருக்கிறது. எளிமையாக எழுதினால் ‘ரீச்’ அதிகமாகும். எனக்கு உன் பதிவுகளைப் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது. நீ ஏன் உன் ‘ஸ்டைலை’ மாற்றிக் கொள்ளக் கூடாது? 2) நீ தமிழ்ச் சினிமாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 3) ஏன் தமிழ் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை? இப்படி எழுதினால் நிறைய பேர் படிப்பார்களே! 4) டீவியில் நிறைய நல்ல விஷயங்கள் வருகின்றனவே! பொத்தாம் பொதுவாக டீவியே வேண்டாம் என்று சொல்வது, குழந்தைத் தனமாக உள்ளது. உனக்கு ஏன் இந்த வீம்பு?
என் பதில், முறையே:
1) என்னுடைய தமிழ் அற்புதமானது, எழுத்து அழகானது என்றெல்லாம் சொல்கிற அளவுக்கு நான் அற்பனல்லன். மேலும், தமிழில் ‘பயணிக்க’வென்று எழுதுபவர்கள், தொடுவதை ‘ஸ்பரிசிப்பது,’ சும்மானாச்சிக்கும் மேலோட்டமாக விட்டேற்றியாகப் படிப்பதை ‘வாசிப்பது’ என்றெல்லாம் எழுதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள். எளிமையான, உள்ளீடற்ற தமிழ் வேண்டுமென்றால், ‘ரீச்’சோடு ரீச்சாகப் போய் ஐக்கியமாக வேண்டுமென்றால், நீங்கள் தாராளமாக அவர்களிடம் செல்லலாம். நீங்கள், நான் எழுதுவதையெல்லாம் படித்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. என் ஸ்டைல்(!) இழவை உங்களுக்காகவெல்லாம் மாற்றிக் கொள்ளமுடியாது. ஒரு விஷயம்: நீங்கள் என்னுடைய தமிழைக் குறை சொல்வதற்குமுன் உங்கள் மின்னஞ்சல் இழவையாவது தமிழில் எழுதியிருக்கலாமே!
2) ஒரு இழவையும் நினைக்கவில்லை.
3) பார்ப்பதில்லை, ஆகவே எழுதுவதில்லை. கடைசியாகப் பார்க்க முயன்றது: எழவாவது அறிவு. எனக்குத் தாளவில்லை. மன்னிக்கவும். நான் எழுதுவதை(!) நிறைய பேர் படிக்கவேண்டும், ஜனரஞ்சகம் என்றெல்லாம் எழுதுவதில்லை. எனக்குத் தரமான பத்து சகவாசகர்கள் இருந்தால் போதும். இதுதான் முக்கியம் – நிச்சயமாக, அற்பத் திரைப்படங்களல்ல – சர்வ நிச்சயமாக, அவற்றை மட்டும் ஆராதிக்கும் தமிழச் சோம்பேறிகளல்ல. மேலும், எனக்கு எழுதவேண்டும் என்று தோன்றியதைத்தான் எழுதுவேன்.
4) ஒப்புக் கொள்கிறேன்: எனக்கு வீம்புதான். என்னை விட்டுவிடுங்கள். தயவுசெய்து. எனக்கு. முடியவில்லை. மன்னிக்கவும். Read the rest of this entry »
ஃமுக ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ஃபெய்ன்மன்னார்சாமியார் வால்க!
November 4, 2013
பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?
சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.
மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…
‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’
— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம் Read the rest of this entry »
… and uh oh, these korean ‘action’ films! (or, are they comedies(or horror flicks(or like our very own tamil pilims ?)?)?)
November 3, 2013
Oh NO!
Many moons (not your Sun Myung Moons, silly) have passed by, since I saw this rather confusing film – but my motto in life is:
let the freakin‘ world beget, what I begat.
grrrr…
… I recollect with abject terror, the fact that, very many moons ago, actually in 1989 or so, Mahadevan and I had gone to a Korean avant garde film festival with all kinds of expectations and then had to literally RUN away from the Auditorium for our dear lives… Oh the horror, the horror…
But it seems to me that, I hardly learn any lesson from all my misdeeds, in my life. :-(
So, I saw an yet another mater-copulating Korean film. And, here goes my rabid viewpoint… Read the rest of this entry »