பாரதத்துக்கான புதிய கல்விக்கொள்கையும், நம்முடைய செல்லங்களான விடுதறுதலை இசுடாலிர் வகையறா ஞானக்கொழுந்துகளும்
August 11, 2016
…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-(
(பாவமன்னிப்புகோரல்: இப்பதிவின் தலைப்பில் ‘முட்டாக்கூவான்களும்’ எனத்தான் எழுதினேன்; ஆனால் எனக்கே ஒருமாதிரி அசிங்கமாக இருந்ததால் ‘ஞானக்கொழுந்துகளும்’ என அதனை மாற்றிவிட்டேன்; அருகில் உட்கார்ந்துகொண்டு நான் என்ன தட்டச்சு செய்கிறேன் என மிகவுன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கும் என் நண்பன் (=துரோகி!) சொல்கிறான் – நீ இவர்களைப் பற்றி முட்டாப்புண்டைகள் என எழுதினால் இன்னமும் நன்றாக இருக்குமேயென்று; ஆனால் எனக்குமேகூட அடிப்படைத் தரம் எனவொன்று இருக்கிறதல்லவா? என் அக்காள் உட்பட சுமார் 5 பெண்மணிகள் வேறு இந்த எழவெடுத்த ஒத்திசைவை மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கிறார்கள் அல்லவா? பொதுச்சபையில், பொதுச்சபைக்காக எழுதும்போது பண்பும், அடக்கமும், மிருதுத்தனமும், பவ்வியமும் முக்கியமல்லவா? – நண்பன் கொமட்டில் குத்துகிறான் அல்லவா! அய்யோ அல்லவா!! (இவர் ஒரு அக்மார்க் எக்ஸ்திராவிடன், ஒரு ரவுடிப் படிப்பாளியும்கூட!))
-0-0-0-0-0-0-
தங்களுக்கு வாய்த்திருக்கும் குருவிமூளைக்குமேகூட நிபந்தனையற்ற விடுதலை கொடுத்து அதனை வூட்டுக்கு அனுப்பி, பின்னர் ஓட்டை மண்டையில் மண்ணாங்கட்டியை அடைத்துக்கொண்டு பவனிவரும் திராவிடர் கழகப் புழுக்கை அலறுகிறது:
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றப்படட்டும்!
இன்னாடா ஏகோபித்து வொளற்றானுங்கோ இந்தத் திராவிடனுங்கோ! பொற்க்க மிடீலயேடா, இவ்னுங்களோட டமாரசத்தம்! ங்கோத்தா, காது கிளியற்தேடா!! இன்னாடா செய்றது இப்போ! :-((
-0-0-0-0-0-0-0-
(வழக்கம் போலவே) உளறுகிறார்கள்:
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து
தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றப்படட்டும்!
எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்
இல்லை என்றால் மக்கள் மன்றத்திலே தீர்மானிக்கப்படும்!
புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பிரகடனம்
அட படுபுத்திசாலிகளே!
1. மத்திய அரசு இன்று வரை ‘புதிய கல்விக் கொள்கை’ எனவொன்றை அமல் படுத்தவில்லை; ஏன், அடுத்த சில மாதங்களில் கூட இது செய்யப் படமாட்டாது. அதற்குள்ளே ஒரு போராட்டம், மயிராட்டம் என ஒரு பம்மாத்தா!
2. வெறும் வரைவு அறிக்கைதான் (இது கல்விக் கொள்கையல்ல) சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இது பற்றிய என் அனுபவங்களை, விட்டேற்றிக் கருத்துகளை சிலபல பதிவுகளில் எழுதியிருக்கிறேன். இப்பதிவின் கீழே அனைத்துக்கும் சுட்டிகள் இருக்கின்றன; கல்விக் கொள்கை குறித்த அடிப்படை ஆவணங்களும் அவற்றுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. நன்றி.
3. இந்த மாதம் 15ஆம் தேதி வரை (=ஆகஸ்ட் 15, 2016) சாதா பொதுமக்களிலிருந்து ஸ்பெஷல் திராவிட முட்டாக்கூவான்கள் வரை அனைவரும் தங்கள் கருத்துகளை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு நேரடியாகவோ, இணையம் மூலமாகவோ, தாராளமாகத் தெரிவிக்கலாம்.
4. யாருக்காவது (திராவிட அரைகுறை ஜந்துக்கள் உட்பட) பரிந்துரைகளை அனுப்பவேண்டும் எனத்தோன்றி அதனை எங்கே எப்படி பத்திரமாகச் சேர்ப்பிப்பது எனக் குழப்பம் ஏற்பட்டால் – அதனை என்னிடம் அனுப்பலாம் – அது திராவிட உளறலாக இருந்தாலும் பரவாயில்லை. என் செலவில் அதனைப் ப்ரின்ட் செய்து, என் தில்லி நண்பர்கள் மூலமாகப் பத்திரமாக அமைச்சகத்திடம் சேர்ப்பிக்கிறேன். இதற்கு நான் கேரண்டி. ஏன் இதனைச் செய்ய முற்படுகிறேன் என்றால் – பன்முக, பல்வகைக் கருத்துகள் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லவேண்டும் என விரும்புகிறேன், அவ்வளவுதான். மேலும், திராவிடத்தனமான கயமை போங்காட்ட அழுகுணி ஆட்டங்கள் எனக்கு ஒத்துவரமாட்டா.
5. ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் போராட்டம் மசுராட்டம் எனப் பம்மாத்து செய்யும் அற்பப் போலிகளை நம்பி ஏமாறாதீர்!
6. இந்த வரைவின் ஒவ்வொரு ஷரத்தும் கொள்கை வடிவம் பெற – அது வரிவரியாக நாடாளுமன்ற எழவில் வேறு விவாதிக்கப்படவேண்டும். விடுதறுதலைகள் பொறுப்பில்லாமல் உளறுவதற்கு ஒரு அளவென்பதேயில்லாமல் போய்விட்டது என்பது திராவிடமெனும் நகைச்சுவையின் ஒரு அங்கம்தானே! :-(
உளறுகிறார்கள்:
சென்னை, ஆக.8 மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் – இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் – அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அட! இது ஆனந்தவிகடப் பேடிகளின் உளறல் போலவேயிருக்கிறதே! அதே அகடவிகடப் புகழ் மேதகு நியாஸ் அகமதுதான் இந்த கிவீ ரமணிக்கும் ஆஸ்தான ஆலோசகரோ! அதனால்தான் குலக்கல்வி குசுக்கல்வி என உளறிக்கொட்டுகிறார்களோ?
(கருத்துப் படம்: என் செல்ல கிவீ, ரமணி. மூக்கும் முழியுமாக எப்படி இருக்கிறது பாருங்கள்! என் கண்ணே பட்டுவிடும்போல இருக்கிறது… இதற்கும் திருஷ்டி கழிக்கவேண்டுமோ? தமிழகத்தின் செல்ல கிவீ ரமணியைப் போலவே, என்னுடைய செல்ல கிவீ ரமணியும் ஏகத்துக்குப் புழுக்கை போடும் ஜந்து. ஆனால் என்னுடையது, ‘தமிழர் தலைவர்’ போலல்லாமல் அவற்றை அறிக்கைகளாகவும் பேட்டிகளாகவும் கருதாது. ஏனெனில் என் கிவீ ரமணி திராவிட ஜந்துவல்ல, சரியா?)
எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் நம்மாட்கள்! இத்தனைக்கும் இந்தப் பிரகிருதிகளும் அதிக பட்சம் ஒரு ஆவணத்தின் பகுதியை மட்டுமே படித்திருக்கவேண்டும்! என்ன அழகான அரைகுறைகள் இந்த ஜந்துக்கள்!
உளறுகிறார்கள்:
புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையினுடைய தேசியக் கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடு என்ற ஆவணத்திலே குறிப்பிடப்பட்டு இருப்பதுபோல இதில் யாரையும் கலந்து உருவாக்கவில்லை. தெளிவாகவே அதைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்னார். அய்ந்துபேர் கொண்ட குழுவிலே ஒரே ஒரு கல்வியாளர், அதுவும் ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் எனவே, இது ஓர் ஆர்.எஸ்.எஸ்-. கல்வித் திட்டமே!
அட படுபடுபடுபடுபடுபடுபடுபுத்திசாலிகளே! :-)))))))))
இவர்கள் படித்ததாக பாவலா செய்வதுகூட ஒரு மூல ஆவணம் அல்ல. இந்த விடுதறுதலை ஜந்துக்கள் அசிங்கமாகவும் தவறாகவும் மொழி பெயர்த்திருக்கும் ‘தேசியக் கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடு‘ ஆவணத்தில் கூட (Inputs_Draft_NEP_2016) இவர்கள் சொல்லியிருக்கும் ஒரு விஷயமும் இல்லை! முழுவதுமே அரைகுறைத்தனமான (ஆகவே திராவிடத்தனமான) புரிதல்(!)தான் இது! மேலும் இந்த ஆவணம் – கல்விக்கொள்கை வரைவில் இருந்து (230 பக்கங்கள்) எடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே (சுமார் 40 பக்கங்கள்) சுட்டுகிறது.
தளபதி இசுடாலிர் – அவர் திராவிட அறிவுஜீவியாதலால் – எந்த எழவையும் படிக்காமலேயே / தெரிந்துகொள்ளாமலேயே அதனைப் பற்றி ஆழமான தீர்க்கமான கருத்து உருவாக்கிக்கொள்ளும் அமோக ஆன்மிக சக்தி பெற்றவர். அதனால்தான் அவரால் இப்படியெல்லாம் அட்ச்சுவுட முடிகிறது. (ஆனால் இசுடாலிர் அவர்களின் உளறல்களைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்! உண்மையாகவே எனக்கு மிகமிக ஆச்சரியமாக இருக்கிறது – இப்படியெல்லாம் அமோகமாக அற்பக் கருத்துதிர்த்துக்கொண்டு 63 வயது பச்சிளம் பாலகனாக ஒருவர் இருந்தாலும் எப்படித்தான் – அவரும் நிரந்தர இளைஞரணித்தலைவாக இருந்துகொண்டு, அவருக்குப் பின்னாலும் அணிவகுக்க லட்சோதிலட்சம் இளம் ஞானக்கொழுந்துகள் இருப்பார்களென்று!)
–0-0-0-0-0-0–
இடைவேளை
…தெராவிடச் செல்லங்களே!
நாளைத் தலீவர்கலே!
என் தாயும் முளியும் கன்கல்…
என் தேசக் கொள்ளையர் நீங்கள்…
…என் தாத்தா பெரியாரும் மாமா வீரமணியும் தேடிய செல்வங்கல்…
…எம் கோழைத் தலைவனை தினமும் ணங்குங்கல்…
(வரவிருக்கும் ‘உலகம் சுற்றும் தலிபன்’ படப்பாடல்)
–0-0-0-0-0-0–
உளறுகிறார்கள்:
…இதுதான் இந்தக் கல்விக்கொள்கையினுடைய மிக முக்கியமான நோக்கம். பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில், பல்கலைக்கழக நிலையில் அம்மொழியை [ஸம்ஸ்க்ருதம்] கற்பிப்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் செய்யப்படும். ஆகவே, மற்ற 21 மொழிகளுக்கு செம்மொழி தமிழ் உள்பட வாய்ப்புகள் கிடையாது. அவற்றுக்கு பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் – இது ஒன்று.
ஆ! வீரமணீ!! தலீவா!!! எங்கேயப்பா இப்படி ‘தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்?’
வாய் புழுத்துப்போக இப்படியா பொய் சொல்வார்கள்?
உளறுகிறார்கள்:
இரண்டாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று ஒரு புதுக்கரடியை விட்டிருக்கிறார்கள். இதுவரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு என்று எங்கும் கிடையாது.
ஆ! அப்படியா தலீவா? :-)
வீரமணி அவர்களே! நீங்கள் முதலியார் வகுப்பினர் என நினைக்கிறேன். இதில் என்ன உட் உட் உட் பிரிவு ஜாதியென்பதை நான் அறியேன். ஆனால் நீங்கள் பிறந்த ஜாதியில் – பொருளாதாரத்தில் பின் தங்கிய, பாவப்பட்ட, மிக முக்கியமாக – நேர்மையாக உழைத்துச் சாப்பிடும் பல அற்புதமான மனிதர்களை நான் அறிவேன்.
உளறுகிறார்கள்:
அதைவிட சமூகநீதிக்கு இதிலே இடமில்லை. சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் குறிவைத்து, அவர்களுக்கும் பொருளாதார பின்தங்கிய அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இரண்டு வகையான பிரிவு எஸ்.எஸ்.எல்.சி.யிலே ஆங்கிலம், கணிதம் அறிவியல் இதிலே அதிக மதிப்பெண் பெற்றால் ‘ஏ’ பிரிவு சரியாக படிக்காவிட்டால் அவர்கள் ÔபிÕ பிரிவுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வியிலே ஒரு நவீன வருணாசிரம தர்மத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அடப் பாவிகளா! எப்டீயெல்லாம் வாய் கூசாம, கூச்சமேயில்லாம பொய் சொல்றீங்கடா!
வொங்க கொலமே நாசமா போவணும்டா!
அதுமட்டுமல்லாமல் ஊர்ப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுடைய திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. ஆகவே, பள்ளிக்கூட நேரத்துக்குப்பின்னாலே தொழில் அடிப்படையில் படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு, ஊர்ப்புற கிராமப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என்றால் என்ன அர்த்தம்? அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்று அர்த்தம். ஆகவே, இந்த வாய்ப்புகள், இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யோவ்! உங்களை போன்ற ஆட்கள் நகர்ப்புறங்களில் நக்கிக் கொண்டு உட்காருவீர்கள்! உங்கள் பையன்களுக்கும் உங்கள் நக்கல் தொழிலைக் கற்றுக்கொடுத்து கட்சித் தலீவராக்குவீர்கள்!
ஆக – ஏன் உங்களுக்கு மட்டும் ‘அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்’ வழி? நீங்களும் உங்கள் நண்பர் கருணாநிதியும் உங்கள் பையன்களை – அப்பன் குலத்தொழிலை (=அரசியல் சமூகக் கொள்ளை) விட்டுவிட்டு வேறு நேர்மையான தொழிலைச் செய்ய நிர்ப்பந்திக்கலாமே?
கைத்தொழில் என்றால் என்ன, பயிற்சி என்றால் என்ன என்பவற்றைப் பற்றியெல்லாம் ஒரு சிந்தனையுமில்லாமல் – உங்களுடைய திராவிடக் கைமுட்டியடிக்கும் தொழிலை மட்டும்தான் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும் என்று உளறுகிறீர்களா?
அயோக்கிய அரைகுறைகளின் கூடாரமும் கூச்சலும்…
அற்பர்கள்! இசுடாலிர், இந்தப் பொறுப்பற்ற அரைகுறைகளுடன் கைகோர்த்துக்கொண்டு சாதிக்க நினைப்பதுதான் என்ன?
(சாதா தமிழைக் கூட ஒழுங்காக எழுதவரவில்லை இந்த ‘தமிழர் தலைவர்’ வகை அரைகுறைகளுக்கு – இவர்கள் அரங்கேற்றிய கோமாளிக்கூத்து ஆர்பாட்டம் அல்லவாம், ஆர்ப்பாட்டமாம்… ச்சீ… இந்த அழகில் செம்மொழி தமிழ்மொழி தமிழ்த்தாய் தமிழ்மாமா எனப் பெத்தபேச்சுவேறு…)
இசுடாலிர் அவர்களுடைய கல்விக்கொள்கை பற்றிய உளறல்களுக்கு என ஒரு தனி பதிவைத் தான் ஒதுக்கவேண்டும். வேறு வழியேயில்லை. :-(
- மன்னிக்கவும். ஆனந்தவிகடவிடுதலை நக்கீர நியாஸ்அகமது வகையறாக்கள், ஊடகப்பேடிகளோ ஊடகப்பொறுக்கிகளோ அல்லவேயல்லர்! 01/08/2016
- பாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள் 27/07/2016
- புதிய கல்விக்கொள்கை (2016), வாஸிம் மனெர் – மராட்டிய இளம் திரைப்படக்காரர்: சில கொறிப்புகள் 26/07/2016
- நம் பள்ளிக் குழந்தைகளுக்காக, காத்திரமான ‘மாதிரி’ பரிசோதனைச் சாலைகள்: இந்திய அரசின் அழகான திட்டங்களில் ஒன்று 28/06/2016
- இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன… 25/06/2016
August 11, 2016 at 15:04
இமாலயப் பொய்யர்கள்–இந்த பட்டம் கொடுக்கலாமா?
அறைகுறை அறிவாளிகள்–இந்த பட்டம் கொடுக்கலாமா?
August 11, 2016 at 19:34
அய்யா, தங்கள் கழுத்திலிருக்கும் பாம்புகூட சிரிக்கும், இந்தக் கழுதைகளின் ஆர்பாட்ட எழவுகளைக் கண்டால்…
ஆனாலும் மிகமென்மையாகத்தான் என் தலைவர்களை அணுகுகிறீர்கள், பாவம், உங்கள் மென்மையான குணமும் பொறுமையும் அப்படி உங்களைச் செய்ய வைக்கின்றன என நினைக்கிறேன். உங்கள் பூர்வஜென்மப் பாபம்தான், உங்களை இங்கு இழுத்து வந்திருக்கிறது – பாவம் நீங்கள்!
August 11, 2016 at 21:31
Did anyone of these amazing so called leaders ever try to contribute one constructive suggestion or feedback to the NEP draft. Should I be scared that these Dravidians can stop this necessary NEP.
August 12, 2016 at 11:37
:-( There were many rounds of discussions – more than 25 of them – were held in TN. The team talked to quite a few schools and colleges and many other people – in the past 1.5 years!
But, NONE of these lousy bastards even bothered about them. I really hate this bunch of mothefuckin’ trolls. Sorry.
Even now, they can make all their representations to the ministry – but they would rather stand on stage and dance and cry foul than making meaningful contributions.
From the times of EVR ‘Periyar’ – the hallmark of the Dravidian movement has been the alliance of outright lies and pillage.
Sorry again, Sam. I just lost it.
__r.
August 12, 2016 at 12:33
உங்கள் செல்ல கிவீ, ரமணி ‘கோனார்’ என்றல்லவா கேள்விப்பட்டேன்? இயற்பெயர் சாரங்கபாணி முதுகலை படிப்பில் முதல் மாணவராக ‘தங்க பதக்கம்’ பெற்று தேர்ச்சி(!) பெற்றவர்.(தகவல் உபயம்:விக்கி (அவர் ஜாதி பற்றி விவரம் விக்கியில் இல்லை )
August 12, 2016 at 13:12
அய்யா, என்னிடம் இந்தத் தகவல்தான் இருக்கிறது, அது தவறாகவும் இருக்கலாம். கிவீ ரமணி பிறந்த ஜாதி பற்றியென நான் எழுதவதை எடுத்துக்கொள்வதைவிட, அதனை ‘பொருளாதாரரீதியாகப் பின் தங்கிய பிரிவினர்’ என நான் சொல்லவந்ததுடன் இணைத்துப் படிக்க முடியுமா?
எது எப்படியோ – முதலியாரோ கோனாரோ நோட்ஸோ பாவம், அந்தந்த ஜாதிகள் வெட்கப்படும் நிலையில்தான் இருக்கிறது இந்த மனிதரின் ஆட்டமும் பாட்டமும், வேறென்ன சொல்ல.
விக்கிபிடியா குறிப்புகளைப் பொதுவாகவே – தரமான சான்று/பின்புல ஆவணம் எனும் ரீதியில் பார்க்கவேமுடியாது என நினைக்கிறேன். அதன் நம்பகத்தன்மையானது என்னைப் பொறுத்தவரை மிகக்குறைவு.
நன்றி.
August 12, 2016 at 14:05
ஐயா,
நமது ‘செல்ல திராவிட குளுவான்கள் ‘நமது சத்த சபையிலும்’ வெளியிலும் ‘தேசிய கல்வி கொள்கையை’ பற்றி உளறுவது தவிர இன்று மாநிலங்கள் அவையில் உறுப்பினர்கள் (அதுவும் நமது செல்ல குளுவான்களாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்)இது பற்றி உளற அதற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு.ஜவடேகர் அளித்த பதில் பின் வருமாறு “NEW INDIAN EXPRESS” இல்(No tinkering with quota, minority education: Javadekar) வந்துள்ளது.
The upper house had taken up a debate on the National Education Policy on Thursday, but Javadekar could not reply during the day.
Deputy Chairman P.J. Kurien said the discussion could continue in the next session.
As members pressed for the minister’s response, Javadekar said the government will extend the time for submitting suggestions for the education policy.
“We want suggestions from everybody. I will extend the date for submitting suggestions till September 15,” Javadekar said.
“We believe in democracy, we believe that education must give whatever is required to live life successfully,” he said.
August 13, 2016 at 19:58
அய்யா … ! இங்கேயுள்ள அரசியல்வாதிகள் பொதுவாக ” குலக்கல்வி ” முறை என்று கூவுகிறார்கள் — துணைக்கு திரு ராஜாஜி அவர்களை வைத்து — அவர் அன்று கொண்டு வர நினைத்ததை இன்றைய மத்திய அரசு வலுக்கட்டாயமாக திணிக்க முயலுவதாக ஒரு கூச்சல் போட்டு ஊளையிடுகிறார்கள் ….
ஒவ்வொரு குலத்திற்கும் – தனி — தனி கல்வி இருக்கிறதா என்ன … ? குலத்தொழில் சார்ந்த கல்வி என்றால் தானே பிரச்னை .. ? அப்படியிருக்க ” அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் ” என்று கட்டாயப்படுத்துவதை போல — ஓட்டை சங்கை வைத்து — ஊதும் இவர்களை — நீங்கள் கூறியவாறு // என் நண்பன் (=துரோகி!) சொல்கிறான் – நீ இவர்களைப் பற்றி ——– —— // என்று கூறினால் ஒன்றும் தவறு இல்லையல்லவா … ?
August 25, 2016 at 09:56
Dear Sir,
If time permits, please comment about this interview
http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/article9025236.ece
August 25, 2016 at 18:33
Oh, what I can say!
Samas is well known for his half-bakedness and craftiness. We do not need to take idiots seriously, I seriously think. You can also think likewise about me, thanks!
The ol’ man does not seem to have read the report – he has ONLY read the newspaper reports of the same, it looks like.
‘Tamil’Hindu, is a mediocre newspaper at best, that’s all!
August 25, 2016 at 20:38
But sir,
I hope some of the views are really required to be noted
http://tamil.thehindu.com/opinion/columns/நம்-கல்வி-நம்-உரிமை-சமூக-மாற்றம்தான்-கல்வி-மாற்றத்துக்கு-வழிவகுக்கும்/article9031147.ece?homepage=true&theme=true
August 26, 2016 at 10:09
In what sense, dear Sundar?
I am NOT saying the draft towards policy is impeccable. But, the asinine attitude of the jackasses is what bothers me.
A few forward looking statements like the statements uttered by the ol’ man do not make a critical review.
Could you please explain what exactly do you mean, dear?
__r.