திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾

