ஜென்ஸீக்களுக்கான, ஆகவே தேவையற்ற (அவர்கள் எங்கே பத்துவார்த்தைகளுக்கு அப்பால் படிக்கப் போகிறார்கள், எனிவே அவர்கள் படிப்பார்கள் என, மனப்பால் குடிப்பது ஒருமாதிரி வோக்கே?) குறிப்பு: கீழே வரும் “பாரி” மற்றும் “மன்னர்” ஆகியோர் நிஜ நபர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் ஆவணபூர்வ வடிவங்கள் அல்ல, ஏன் – கோவணபூர்வம் கூட இல்லை – பிரச்சினை என்னவென்றால், ப்ளடி ஆரியர்கள் அதையும் உருவிவிட்டார்கள், பாவிகள்!
மேலும் இந்த உண்மை உரையாடலின் சாரம் – தமிழ் இணைய உலகில் பெருமளவில் காணப்படும் பாடு (படுத்தும்) பொருட்களான சதித் திட்டம், பொய் வரலாறு, புளுகு அறிவியல், “எல்லாவற்றையும் மறைத்துவிட்டார்கள்” வகைச் சொல்லாடல்களை மிகைப்படுத்தி உருவாக்கப்பட்ட கேலிச்சித்திர வடிவம்… (இந்த எழவை எல்லாம் சொல்லவேண்டியிருக்கிறதே, இல்லாவிட்டால் இந்த உண்மைகளைப் பொய் என்று நம்பிவிடுவார்களே, என் ஏழரைத் தமிழர்கள் என்பதை நினைத்தால்…. ….)
சரி. ஆங்கிலப் பதங்களை முடிந்தவரை ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன். தமிழ்மொழி வாழ்க!
(எது எப்படியோ… இவ்வுரையாடல் நடைபெற ஸ்டூடியோ உபகரணங்களையும் நடத்துமிடத்தையும் கொடுத்த ‘இது கிழக்கு ந்யூஸ் – நான் பத்ரி சேஷாத்ரி” அவர்களுக்கு என் நன்றி.
இதன் விடியோவையும் ஸென்ஸார்/தணிக்கை செய்யாமல் வெளியிட்டால் அகமகிழ்வேன்!)
ஏலியன்களுக்கு முன்பே எலியன்ஸ்!
பாரி: வணக்கம் தமிழர்களே. இன்று நான் பேசப்போகிற விஷயம் சாதாரண விஷயம் கிடையாது. இதைப் பேசினதுக்குப் பிறகு இந்த வீடியோ YouTube-ல இருக்குமா என்பதே சந்தேகம். ஏனென்றால் இது NASA, CIA, RAW, Mossad, Illuminati, World Economic Forum, Discovery Channel, National Geographic தமிழ் பிராம்மணர்கள் என எல்லாரையும் நேரடியாகப் பாதிக்கும் தகவல்.
மன்னர்: ஒரு நிமிஷம். RAW எதுக்கு?
பாரி: அதுதான் உங்களுக்கு இன்னும் geopolitics புரியலைன்னு சொல்றேன். RAW இல்லாம எந்த conspiracy-யும் complete ஆகாது.
மன்னர்: சரி. Continue.
பாரி: இன்றைய கேள்வி: Alien என்றால் யார்? நமக்கு Alien என்று சொல்லிக் கொடுத்தது Hollywood. ஆனா தமிழ் மொழியில்? அது… …எலியன்!
மன்னர்: ஏலியன்? எலியன்??
பாரி: அதுதான் trap! நீங்கள் ஏற்கெனவே pronunciation colonialism-க்கு பலியாகிட்டீங்க.
தமிழ் உயிரெழுத்தைப் பாருங்க: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ.
இதுல எ முதல்ல வருதா? ஏ முதல்ல வருதா?
மன்னர்: எ! ஓஓஓஓஓஓஓ!!!
பாரி: அப்ப முடிஞ்சுது! எலியன்ஸ் ஏலியன்ஸுக்கு முன்னாடி வந்தவங்க!
மன்னர்: என்னது?!
பாரி: Evolutionary sequence! பரிணாம வளர்ச்சியின் பரிமாணம்… அதுமட்டுமில்லை – இனமாணம்!!
முதல்ல எலி. அதுக்கப்புறம் எலியன். அதுக்கப்புறம் vowel elongation நீட்சி ஏற்பட்டு ஏலியன்.
இதுதான் Darwin கூட சொல்ல முடியாதபடி அவாள் மறைத்த Dravidian Evolution.
மன்னர்: ஆ! ஒரு நிமிஷம். Darwin எங்கிருந்து வந்தார்?
பாரி: Darwin என்பதே தமிழ் பெயர்.
மன்னர்: எப்படி?
பாரி: “தருவின்”… மரத்தினுடையது என்று பொருள்.
தரு + இன் = தருவின். அதை வெள்ளைக்கார ஆங்கிலேயன் Darwin ஆக்கிட்டான்.
மன்னர்: அது கொஞ்சம்… …
பாரி: உங்களுக்கு எல்லாமே கொஞ்சம்தான் இருக்கும். உண்மை பெரியது.
அதெல்லாம் சரி… நான் இன்னும் சொல்லவே இல்லை இதை… நான் சொல்லவந்த விஷயமே வேறு!
மன்னர்: ஐயோ! இன்னும் வேற ஏதோவா? அது எதொ பின்னாடி வந்ததா?
பாரி: திசை திருப்பவேண்டாம்… எ, ஏக்கு அப்புறம் என்ன எழுத்து?
மன்னர்: ஐ.
பாரி: அதான்! இன்றைக்கு உலகம் பேசுற அடுத்த பெரிய technology என்ன?
AI.
தமிழ்ல? ஏ-ஐ…
மன்னர்: ஐ! இது உண்மைதான்!!
பாரி: புரிஞ்சிடிச்சா? அப்படின்னா எல்லாமே ஒரு evolutionary sequence தான்…
எலியன் >> ஏலியன் >> ஐலியன்!
அதாவது, Rat intelligence >> Alien intelligence >> Artificial Intelligence!
இதைத்தான் நம்ப சங்ககாலத் தமிழன் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே உயிரெழுத்து வரிசையில encode பண்ணி வச்சிருக்கான்.
மன்னர்: இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாதம் சரியில்லை…
பாரி: ஏன்?
மன்னர்: நீங்க வரலாற்றை linguistic-ஆ மட்டும் பார்க்கிறீங்க. Material evidence பார்க்கணும்.
என்னிடம் நாணயம் இருக்கு.
பாரி: என்ன நாணயம்?
மன்னர்: ஒரு coin.
ஒரு பக்கம் எலி மாதிரி ஒரு உருவம். இன்னொரு பக்கம் வட்டம். நடுவுல மூன்று புள்ளி.
பாரி: எங்க கிடைச்சது?
மன்னர்: அதை இப்ப சொல்ல முடியாது.
பாரி: Carbon dating?
மன்னர்: Coin-ஐ carbon dating செய்ய முடியாது.
பாரி: அப்படித்தான் establishment சொல்லும்! தமிழன் என்ன சான்று கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டானுங்க… கீழடில…
மன்னர்: Metal-க்கு carbon இல்லை.
பாரி: Metal-க்கு carbon இல்லையா? Steel-ல carbon இருக்கே!
மன்னர்: இது steel இல்லை.
பாரி: அப்ப இன்னும் suspicious. ஒரு எடத்துல நிக்காம குதிச்சிக்கிட்டே ஒண்ணுலேர்ந்து இன்னோணுக்குத் தாவுறீங்க…
மன்னர்: நான் சொல்ல வர்றது என்னன்னா, அந்த மூன்று புள்ளி சாதாரணமில்லை. Orion Belt-ல மூன்று நட்சத்திரம் இருக்கு.
பாரி: மூன் று?? அப்ப ஏதாவது சந்திரன் தொடர்பு இருக்குங்கிறீங்களா? இல்லாட்டா ஏதாவது மூஞ்சூறு வகை குறியீடோ? ஆதித் தமிழன்… …
மன்னர்: நீங்கதான் குதிச்சிக்கிட்டே இருக்கீங்க…நான் சொல்லவந்தது- Coin-ல மூன்று.
பாரி: அப்ப?
மன்னர்: Connection. தொடர்பு படுத்தி மாத்தி யோசீங்க…
பாரி: இல்லை. நீங்க இங்கே ஒரு பெரிய தவறு பண்றீங்க.
Orion என்பதே தமிழ்ச் சொல்.
மன்னர்: எப்படி?
பாரி: “ஓர் இயன்”.
ஒரே ஒரு மனிதன். ஓர் + இயன் = ஓரியன்.
பிறகு Greek-காரன் Orion. திருடிக்கிட்டான்… சங்ககாலத்துல இங்க வந்து மிளகு வாங்கிட்டுப் போகாம, பிச்சைக்காரப் பசங்க நம்ப பண்பாட்டுக் கூறுகள திருடிக்கிட்டாங்க… ஆரியன் உடந்தையா இருந்திருக்கான்…
ஆரியன் X ஓரியன் என்பது ஆதிகாலத்துலேர்ந்து தொடருது…
மன்னர்: அப்படியானால் Greek civilization…
பாரி: தமிழர் கிளை.
மன்னர்: எகிப்து? சுமேரியா? மாயா? மச்சீந்திரா??
பாரி: எல்லாம் தமிழர் கிளைகள்
மன்னர்: Aztec?
பாரி: Signal weak. ஆனாலும் வாய்ப்பு இருக்கு. தேவனேயப் பாவாணர் அப்டிதான் சொல்லியிருக்கார்…
மன்னர்: Neanderthal?
பாரி: அவங்க Tamil அல்ல. அவர்கள் நம்மிடம் வந்து வேலை பார்த்தவர்கள். நம் அடிமைகள்…
நியாண்டர் செல்வன் அப்டீன்னு ஒருத்தர் ஹண்டர்-கேதரரா தமிழகத்துல பணி செய்து வேட்டையாடி கெடச்சத வெச்சி, ஃபேஸ்புக்குல பேலியோ டயட் சாப்டிட்டு இருந்தார் – உங்களுக்கு நினைவிருக்கா? எல்லாம் பண்பாடற்ற காட்டுமிராண்டி கும்பல் அடிமைங்க…
மன்னர்: அப்ப எதுக்கு அவங்கள அடிமையா வெச்சிருந்தோம்?
பாரி: Kumari Kandam Metro Phase 2. உடலுழைப்பை உயிர திரணமா மதிச்சி அந்த அடிமேங்கதான் அப்படி அசுரவேலைங்கள செய்யமுடியும்…
…தமிழர்கள் எல்லாம் சங்ககாலத்துல பிஸியா இருந்தோமில்ல… ஆற்றுப்படை…
மன்னர்: நான் இன்னொரு முக்கியமான archaeological evidence சொல்றேன்.
Mars-க்கு தமிழ்ல என்ன?
பாரி: செவ்வாய்.
மன்னர்: அதுதான்! NASA Mars-ஐ “Mars” என்கிறது. தமிழன் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடியே அதுக்கு செவ்வாய்ன்னு பெயர் வைத்திருக்கான். அவன் அங்கே போகாம எப்படி பெயர் வைத்தான்?
பாரி: எப்டீ? சிவந்த வாய்? அல்லது க்ளாஸ்ஸிகல் வாய்?
மன்னர்:அப்படின்னா தமிழர்கள் solar system-ஐ ஏற்கெனவே survey பண்ணியிருக்காங்க – அவ்வளவுதான் அர்த்தம்…
பாரி: யோசிச்சா – அது Survey மட்டும் இல்லை. Colony.
மன்னர்: ஆதாரம்?
பாரி: “செவ்வாய் தோஷம்”. ஏன் Mars-ல இருக்கிற விஷயம் தமிழ்நாட்டுல கல்யாணத்தை பாதிக்கணும்? Interplanetary administrative jurisdiction!
மன்னர்: அடடா! “செவ்வாய் தோசை” அப்டீங்கறதுலேர்ந்தும் வந்திருக்கும்… அதாவது குமரிக் கண்டத்துக் குமரி ஒருத்தி அவளுடைய செம்பவள வாயைத் திறந்து தோசைத் துணுக்கைச் சாப்பிட்டாள்… இதுதான் உண்மை.
பாரி: Mars Embassy இங்க இருந்திருக்கு. அவனுங்க இங்க வந்திருக்கானுவ…பெரிய அளவில் தமிழன் செவ்வாய் கிரகத்துக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டியதற்கு இதே ஒரு பெரிய சான்று…
மன்னர்: ஆ! இது எனக்கே புது தகவலா இருக்கே! எங்கே அந்த Embassy?
பாரி: செவ்வாய்ப்பேட்டை. சேலத்துல இன்னிக்குக் கூட இருக்கு!
மன்னர்: ஆனா நான் இன்னும் deep ஆ போறேன்.
Tamil alphabet மொத்தம் எத்தனை?
பாரி: 247.
மன்னர்: 247. அதை எப்படி எழுதுவீங்க English-ல?
24/7.
பாரி: அய்யய்யோ!
மன்னர்:Tamil civilisation was operational 24/7! தொடர்ந்து அயராமல் கண் துஞ்சாமல் ஆதித் தமிழன் உழைத்திருக்கிறான்…
இதுதான் 247 letters-ன் உண்மையான secret.
பாரி: அய்யோ! நான் இதை miss பண்ணிட்டேன்.
மன்னர்:அதான் field research வேணும்னு சொல்றேன்.
12 உயிர்.
18 மெய்.
12 × 18?
பாரி: 216.
மன்னர்: 216 என்ன?
பாரி: Six cube. 6 × 6 × 6.
மன்னர்: 666!
பாரி: இல்லை, 216.
மன்னர்: Numerically வேற. Symbolically 666. சாத்தான் பைபிள்ல சொல்லியிருக்கிற எண்!!
பாரி: அப்ப Illuminati! இல்லுமினேட்டி கம்மினாட்டிங்க… சதிகாரனுங்க
மன்னர்: அதே!
இப்ப புரியுதா ஏன் அவர்கள் தமிழ் இலக்கணத்தைப் படிக்க விடமாட்டேங்கிறாங்க?
பாரி: யார் படிக்க விடலை?
மன்னர்: அவர்கள்.
பாரி: அவர்கள் யார்?
மன்னர்:அவாள் பெயர நாம்ப சொல்லக்கூடாது.
பாரி: ஆரிய Illuminati?
மன்னர்: நீங்களே சொல்லிட்டீங்க.
பாரி: சொல்லப்போனா actually “Illuminati” என்பதே தமிழிலிருந்து போன வார்த்தை.
மன்னர்: இதையும் விடப் போறதில்லையா… வேர்ச்சொல் ஆராய்ச்சிய ஆரம்பிச்சிட்டீங்களா?
பாரி: “இல் + உமி + நாட்டி.”
இல்லத்தில் உமியை நாட்டியவர்கள். Ancient domestic energy technology.
மன்னர்: உமி என்றால்?
பாரி: அதை அடுத்த வீடியோவில் சொல்றேன்.
Subscribers 5 லட்சம் வந்ததும் Part 2.
மன்னர்: Scientific information ஐ ஆதாரத்தோட பகிர்வதற்கு subscriber target எதுக்கு?
பாரி: Research funding. நம்ப தர்க்கரீதியான ஆராய்ச்சிங்களுக்கும் நிதி தேவைப்படுதுல்ல
மன்னர்: எனக்கு Area 51 பற்றியும் ஒரு theory இருக்கு.
பாரி: Area 51 என்ற பெயரே suspicious. 5 + 1 = 6.
Six directions? வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ்.
ஆறு திசைகள். ஆறு என்றால்?
மன்னர்: கூவம்?
பாரி: மாத்தி – தமிழ்ப் பண்பாடோட யோசீங்க…
மன்னர்: ஆ! முருகன்!!
பாரி: Exactly! ஆறுமுகம்.
Six faces. Area 51 = Six. Murugan = Six. Murugan = extraterrestrial commander.
மன்னர்: இது கொஞ்சம் ஓவர். நான் இதை ஏற்க மாட்டேன்.
பாரி: ஏன்?
மன்னர்: முருகனை alien என்று சொல்வது colonial framing.
Alien தான் முருகனுடைய descendant.
பாரி:எப்படிங்க சொல்றீங்க?
மன்னர்:முருகனுக்கு வேல். Alien spacecraft-க்கு?
பாரி: Antenna?
மன்னர்: அதுதான் broken Vel.
பாரி: என்னங்க இது?
மன்னர்: நீங்க imagination-ஐ evidence-ஆ பயன்படுத்துறீங்க. நான் evidence-ஐ imagination-ஆ பயன்படுத்துறேன். Difference புரிஞ்சுக்கோங்க.
(...அப்போது ஸ்டூடியோவின் ஒரு மூலையில் இருந்து… கீச்… கீச்… என்று சத்தம். பத்ரியிடம் இது குறித்து, ஒரு பிராது வைக்கவேண்டுமோ?)
பாரி: ஒரு நிமிஷம்.
மன்னர்: என்ன?
பாரி: Camera 3 zoom பண்ணுங்க.
மேசைக்குக் கீழே ஒரு எலி.
(இருவரும் அமைதி காத்தனர்… எலி இவர்களைப் பார்த்தது. இருவரும் எலியைப் பார்த்தார்கள். மூவரையும் நான் பார்த்தேன். எஸ்ராமகிருஷ்ணன் உஷார்!!)
பாரி மெதுவாக: நான் அப்பவே சொன்னேன்ல…
மன்னர்: என்ன?
பாரி: They are already among us. நம்ம கூடவே எப்போதுமே நம்ப மூதாதை எலியன்கள் இருக்கிறார்கள்… நமக்குதான் அவங்களப் பத்தின புரிதல் இல்ல…
(சரி. அடுத்த பகுதியில் இச்சுவையான உரையாடல் தொடரலாம்…)
On Dr N Ganesan’s Claim: “Sanskrit बीज/bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca வித்து/விதை/விசை..”
August 7, 2026
This longform post is about languages, roots, transmission directions in the context of Sanskrit & Tamil…
… and more importantly, it seeks to deal with suspect methodologies, premature optimizations, simplistic/superficial generalizations, giant logical leaps, self-referential statements, circular-reasoning, non-existing citations and the like, around some ideas – that have been plaguing the Tamil ‘discourse’ – or what passes for it.
I would also like to ascribe such seemingly unscholarly & infructuous approaches to a child-like eagerness/enthusiasm of some fundamentally good people – to ‘prove’ the ancientestest nature & origins of Tamil, in spite of all the evidence that stare at us in our face and associated kanging – and not to some deleterious motive. Okay – I agree that NOT all such folks are decent & ethical – leave alone being scholarly.
Normally, I do not indulge in major or sustained battles/discussions on X, because in my opinion, the context for the X-platform is not really about longform idea exchanges and also because I am not blue-ticked yet which would have otherwise allowed me to respond in longform. Also – ars longa vita brevis.
Again, I wanted to put in some significant time-effort in terms of approaching & analyzing this particular claim – as there are many many such types of uncalled-for claims that seem to be proliferating in the Tamil<->Sanskrit relationships – and I want to create some kind of a ‘template approach’ to deal with them. An exemplar, if you will.
Yes. I want to approach the claim as rigorously & as politely as possible, with a clear logic and marshalling of whatever evidence that I could muster; but of course I am not at all a Mr KnowAll and I do not have any scholarly pretensions. I continue to be an eager student of Tamil, Sanskrit & English – and assorted other things.
In any case, linguistics++ is only one of my minor interests, really. So, feel free to rebut/join etc in this discussion. Let us all learn together, if we can – with as much civility as needed and possible.
1
Background:
On July 29, 2026 this following discussion happened and I was not privy to that – am providing just the immediate context.
It was one rabid, frothing-at-the-mouth ‘Aravind’ who started off with an obtuse set of TamilSupremacist-Dravidian assertions. Pure unadulterated hatecraft. Usual story/fiction: Aryan invaders foisted themselves and Sanskrit on Tamilnadu post 13th century CE.
Here’s were Sri N Ganesan (henceforth NG) introduces the idea as in the subject/title of this post.
And ‘dagalti’ asks a follow-up query and NG answers, looping me in. As under.
I responded to him – and this post is the result of that undertaking from me to respond soon.
There was also another short exchange between me and NG:
Rest of the post is going to be about expanding on my observation:
~”Sanskrit bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca” is NOT established by DEDR 5401 & is phonologically weak as presented.
Ideally I would like to use ‘Dravidian’ instead of Dravidian, since it is a made up category-name chistened fairly recently, unlike the monikers Tamil or Sanskrit. It also has this heavy baggage of having been politically loaded. But, writing ‘Dravidian’ everytime could be jarring, so am avoiding that.
To the extent that my typing would allow for, I have used International Phonetic Alphabet (IPA), showing the correct pronunciation..
2
DEDR 5401
Dravidian Etymological Dictionary of 1984 (often abbreviated as DEDR), is a major academic resource painstakingly compiled and annotated by T. Burrow and M. B. Emeneau. Very reasonably comprehensive.
DEDR 5401 refers to a particular entry – that groups a large set of Dravidian forms meaning ‘sow’, ‘seed’, ‘semen’, ‘testicle’, and related notions. The distribution across South, Central and North Dravidian languages makes the underlying Dravidian family cohesive.
It is important to remember as a backgrounder that, DEDR is a comparative dictionary organised into proposed etymological groups, rather than a series of claims that every listed surface form must be inherited directly and regularly.
The important qualification occurs in the entry itself:
“Go., Kuwi, and Malt. words for ‘seed’ may be < IA.”
That warning matters. Burrow and Emeneau were explicitly allowing that forms such as Gondi vījā, Kuwi bica/bicca, and Malto bíci might be loans from Indo-Aryan, presumably from forms related to Sanskrit bīja.
Therefore, these particular forms cannot safely be used as independent evidence for a Dravidian development.
vittu -> viccu -> vīca -> bīja
That would risk circular reasoning. Some of the closest-sounding forms may already be Indo-Aryan loans.
3
What can reasonably be reconstructed for Dravidian?
The underlying family is usually represented approximately as something like:
- verbal base *vit- / *vitt-, ‘to sow, scatter seed’
- noun *vitt-, ‘seed’
- derivatives with suffixes, such as Tamil vitai
The exact Proto-Dravidian reconstruction depends on how alternations among vit-, vitt-, vitay-, vicc- are analysed.
Tamil forms such as:
- வித்து vittu, seed, semen
- விதை vitai, seed
- விதை- vita(i)-, to sow
- விச்சு viccu, seed or sowing-related form
…belong to the same general Dravidian lexical family according to DEDR. That much is reasonable.
But DEDR 5401 does not itself reconstruct Sanskrit bīja from this family.
So, the reason as to why this extract was used by NG is not at all clear!
4
Is vittu > viccu plausible?
Tamil and its sister/other languages exhibit historically conditioned palatalisation and alternations involving k/c, c/y, and consonants adjacent to front vowels or y. However, a specific development vittu > viccu requires its own comparative and morphological evidence and should not be justified by a general Tamil rule tt > cc.
One cannot simply posit a general rule: tt > cc, without specifying:
- the earlier phonological environment
- the chronological stage
- parallel examples
- whether the form is inherited, dialectal, analogical or expressive
The examples given in the claim of NG do NOT establish such a rule.
பச்சை : பாசி – paccai and pāci cannot simply be treated as an illustration of free cc : c alternation. Their vowel quantities, morphology and lexical histories also need explanation.
கொவ்வை : கோவை – This pair likewise involves more than geminate simplification. It has differences in vowel length and medial consonantal structure.
Similarity alone does not prove that it illustrates the development required for vittu > viccu.
விச்சு : வீசு – This comparison is particularly problematic.
Tamil வீசு vīcu, ‘to throw, fling, wave, blow, spread’, belongs in DEDR to a separate comparison associated with scattering or throwing, referenced by DEDR 5400 vitir- in the quoted entry. DEDR’s “Cf. 5400 Ta. vitir” indicates comparison, not an assertion that vīcu regularly derives from vittu.
A derivation such as vittu > viccu > vīcu would require, at minimum:
- tt > cc
- loss of gemination cc > c
- i > ī
- and a semantic development
It may possible that each step might conceivably occur somewhere, but the sequence needs evidence.
It cannot be inferred merely from resemblance as comfortingly assumed & indicated by NG.
In fact, this ‘resemblance’ issue is the one that is there in most of the takes of ‘folk etymologists’ like Mannarmannan & Paari Saalan, that plague the Tamil discussions.
5
The proposed vīca > bīja equation
This is the weakest part of the argument or the process for claim by NG.
Sanskrit bīja /biːd͡ʑa/ ‘seed’ and a proposed Dravidian form vīca or vīja look moderately similar, but historical etymology requires regular sound correspondences.
A borrowing from Dravidian *vitt- into Indo-Aryan as bīja (as claimed by NG) would definitely require explanations for:
| Dravidian | Sanskrit | Problem |
|---|---|---|
| initial v- | b- | Possible in some borrowing situations, but must be demonstrated |
| medial -tt- | -j- | No obvious regular substitution |
| final consonant | final -a | Sanskrit nominal adaptation is possible |
| short i | long ī | Requires an account or an example |
| geminate stop | voiced palatal affricate | Major unexplained change, this is surprising |
The change *vitt- > bīja- is therefore not a transparent or recognised sound substitution – UNLESS NG can satisfy every one of the above 5 criteria.
One might instead compare the later Dravidian forms vīja, bica, bíci, but DEDR itself warns that precisely these may come from Indo-Aryan.
They are consequently poor evidence for the opposite direction (Dravidian -> Sanskrit) of borrowing.
6
What is the accepted etymology of Sanskrit bīja?
Sanskrit bīja unquestionably means ‘seed’, and by extension ‘germ’, ‘source’, ‘cause’, generative material, semen and, in tantric usage, a ‘seed syllable’. The semantic explanation of bīja-mantra as a compact sound containing generative spiritual potency is traditional and unobjectionable.
I will NOT dispute that its deeper etymology, however, is uncertain at least in my limited knowledge. It seems to lack a straightforward and universally accepted Indo-European derivation. Such uncertainty makes a substrate or borrowing hypothesis possible in principle, but:
‘Uncertain within Indo-European’ does not automatically mean ‘borrowed from Dravidian!’
To establish Dravidian origin, scholars like NG would definitely need:
- a reconstructible Dravidian source form predating Indo-Aryan attestation
- regular or independently paralleled sound substitutions
- plausible geographical and chronological contact
- and exclusion of borrowing in the reverse direction
The proposed argument of NG supplies mainly semantic similarity and surface resemblance.
But one needs arguments that are really sound and substantive to present a scholarly take!
7
Is vit- a Sanskrit dhātu derived from Dravidian?
The wording of NG: “vit- is the dhātu-vēr in Dravidian” unfortunately mixes Sanskrit grammatical terminology with comparative reconstruction.
A better formulation would perhaps be: “Proto-Dravidian appears to have had a verbal root or base *vit- / *vitt-, ‘sow’.”
Calling it a dhātu is understandable informally, but Sanskrit grammatical roots and comparative Dravidian reconstructions belong to different descriptive frameworks.
Further, the existence of a (A) Dravidian root *vit- does not show that (B) Sanskrit bīja comes from it.
The two propositions A and B are separate which NG has to note of.
8
The Vināyakar Akaval claim
The contentious line is: “மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்..”
Project Madurai’s text (specifically cited by NG) and commentary interpret மும்மதச் சுவடு as the marks or traces produced by three kinds or streams of elephant rut-fluid. The particular commentary of the great Sri TP Meenakshi Sundaram Pillai, hosted there gives the names of those 3 as: கன்ன மதம், கபோல மதம், கோச மதம்…
…one would suppose that, after referring to the Project Madurai in the context of Akaval, NG would quote this exact reference, actually cited by him!
But NG ‘quotes’ something different! கர்ண மதம், கபோல மதம், பீஜ மதம்!! பீஜ and NOT கோச as in his reference! When asked about NG replied, as in the snippet from the Section1 above – “many scholars explain the பீஜ மதம்.”
I was slightly surprised by the defensive ‘I am my own citation’ kind of response, but that’s not a significant issue in the big picture of a host of other concerning lacunae in the claims of NG.
Of course one is aware that in a few glosses of the phrase mummdam, bīja-mada is given as a lexical explanation – but then NONE of them are of the incredible scholarly levels of Sri TPM Pillai!
Therefore:
- மும்மதம் in the poem has no etymological bearing on Sanskrit bīja.
- The reading பீஜ மதம் appears to be one modern anatomical or Sanskritising gloss among variants.
- Even were bīja-mada an authentic technical term, it would merely use Sanskrit bīja in the sense ‘semen/generative fluid’. It would not prove that bīja originated in Tamil or Dravidian.
The poem ‘Vinayakar Akaval’ brought in by NG to prove his claim, is consequently irrelevant to the proposed etymology.
9
Conclusion
I hope, at least Dr N Ganesan has read this far… :-) In spite of this post is already some 1900+ words in length! Loooooong form indeed! But I think it would be an useful template or a framework to respond to such claims, hopefully… at least for me!
It also took me upwards of 7 hours to process claims, collect details, organize them and then respond comprehensively (one hopes so!) to the claims made by NG.
But.
I would be very eager to know NG’s response (and interested others) in terms of defending or revising his claims – point-by-point AND with tangible, verifiable & scholarly evidence.
Anyway. Here’s hoping this would encourage decent & evidence-logic based discussions on one of the vexatious issues with our Tamil. Thanks.
(END)
Silappadikaram
Just reread (not really) Silappadikaram and honestly it is still a very modern netflixy sob-story, with its own sob-titles/cantos or kāthais.
Rich, spoilt way’lay’ing d00d blows up his marriage for a lay-dancer, discovers financial planning only after chapter 11 bankruptcy (unlike DMK Karunanidhi1, who did all the debauchery and totally laughed all the way to his dirty hoard for next 1000+ generations), goes to Madurai w/ his wife’s anklet like it is a start-up pivot.
The state executes him w/o basic due diligence; enraged heroine wifey walks in with receipts, proves the justice system failed, & literally bloody burns down the whole fucking city. Oh man.
~900s CE scribed Tamil true-fiction/classic says: marry well, know the lay-of-the-land, philander safely especially when the rubber hits the hittable, audit jewellery properly & never underestimate an angry woman with documentation.
Oneliner synopsis: One may be a total social retard and thrive, but without a suitable fire-retardant, he is toast.
Manimekalai
Just reread (um, not really) Manimekalai and it is basically the ancient (supposedly) Tamil version of someone inheriting everyone else’s drama and – sadly choosing instead – psycho-therapy, ethics, and of all things, Buddhism. Woe man.
A dancer’s daughter is expected to continue the dravidian family brand, a prince becomes dangerously obsessed with her, and the whole city behaves like ‘romantic pursuit’ is a valid governance model – reminds one of MK Stalin in his lay-days2, doesn’t it? So much for the ‘lay’ered narrative.
Anyway. Manimekalai says absolutely not to that period MK Stalin, gets divine relocation services, receives a magical begging bowl with unlimited food distribution capacity (of course, the substance of the wet-dreams of all shades of shady Dravidian politicos), and turns her life into a social welfare programme with metaphysics attached.
Meanwhile, the plot keeps thickening & pausing for debates on karma, rebirth, hunger, desire, compassion, and why everyone should bloody well stop making their personal cravings, society’s problem. It starts like a sequel to Silappadikaram, then becomes part courtroom, part philosophy seminar, part anti-horny public service announcement. What the fuck.
‘Ancient’ Tamil literature really said: your parents’ scandal is not your destiny, male attention is not a career path, and the best revenge is feeding the poor while achieving detachment. Whatever.
Oneliner synopsis: A superbowl can also be a supper bowl, as long as it isn’t lost supper – so supperess your desires, you retards!
Full disclosure:
The ‘inspiration’ for the above uncalled-for quickies came from:
Warning: Depending on how my fellow 7½s receive & react to this kind of irreverently respectful commentary (or nonsense, if you will) on the holy-cows of Tamil pride – this scholarly effort of synopsizing and adapting things for this crazed GenZ fellows, may or may not continue…
-0-0-0-0-
- “Karunanidhi has long dominated Tamil Nadu’s politics. He is the unquestioned leader of the DMK, a regional Tamil party with no obvious ideology other than support for Karunanidhi and a desire to remain in power.” ↩︎
- “Stalin had something of a thuggish reputation in the 1970s, including alleged involvement in multiple sex scandals. (Many in Chennai still tell stories, perhaps apocryphal, of pretty girls being plucked off the streets and handed over to Stalin for his amusement.) He matured and shed this image in the late 1980s…” THE SONS ALSO RISE: KARUNANIDHI KEEPS POWER IN THE FAMILY ↩︎
ஆம்.
1
இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!
அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?
2
1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.
…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…
3
கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.
இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் – ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.
சரி.
முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.
இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.
மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)
இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…
ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.
(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)
ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்!
…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும் தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.
மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.
ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.
ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….
4
கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.
“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)
ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.
முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.
இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”
சுபம். :-)
5
ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.
ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…
இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?
இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?
நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன்.
இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.
எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.
அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.
ஆமென்.
(“தூயசக்தி” Vs “…த்தூ…யசக்தி”) + (“கொஞ்சம் டைம் கொடுங்க சார்!”): தமிழக வெறிக் கழகக் குறிப்புகள்
June 11, 2026
கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை – மாறாக எல்லாம் எதிர்பார்த்ததுதான்; இந்த தமிழக வெற்றிக் கழகம் உண்மையில் ஒருமாதிரி வெறிக் கழகம் என்பதுதான் உண்மையென நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
எப்படியும், ஏற்கனவே தெரியும் – இந்த வெறிக்கழகமும் ஒரு திராவிடமாடல் காட்சிதான் என்று!
-0-0-0-0-0-0-
சிலபல சகவேலைவெட்டியற்ற நண்பர்கள் (‘நல்லெண்ணத்துடன்’ என எடுத்துக்கொண்டு தொலைக்கிறேன்; + இவர்களில் சிலர் மகன் சொன்னான் அல்லது பேரன்/பேத்தி பரிந்துரைத்தனர் ப்ளடிஹெல் என நடிகருக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது உபரித் தகவல் – ஆகவே அவர்களுடைய ‘இருப்பின் அவஸ்தை’ எழவானது புரிந்துகொள்ளக் கூடியதே!) சொல்வது என்னவென்றால்…
(not that any of us old/decrepit crones really matters, in the big picture after all, but still…)
“கொஞ்ச நாளாவது இந்த விஜய் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டாமா? முதலையமைச்சர் உட்பட அனைவருக்கும், இந்த நாட்டு நிர்வாக விஷயங்களைப் பற்றிப் பெரும்பாலும் முன்னனுபவம் இருந்திருக்கவில்லைதாமே? எப்படித்தான் ஒரே மாதத்தில் ஊழல் திராவிடத்தால் துப்புரவாக ஒழிக்கப் பட்ட நிர்வாகத்தைச் சரி செய்ய முடியும்? ஆறுமாதம் ஒருவருடம் என ஹனிமூன் சனிமூன் கொடுப்பது நியாயமாகத்தானே இருக்கும்?”
சரிதான்.உங்கள் வாதம் முழுக்க முழுக்க தவறு, பிறழ்வு என்று ஒர்ரேயடியாகச் சொல்ல முடியாது; புதிய ஆட்சிக்கு ஒரு அளவு அவகாசம் தேவை என்பதும் ஒருமாதிரி (பிற சமயங்களில்) ஒப்புக்கொள்ளக்கூடிய நியாயமான கருத்துதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு எந்த விமர்சனத்தையும் ஒத்திவைக்க முடியாது என்பதும் உண்மை.
எது எப்படியோ… நண்பர்களின் கருணையும் கரிசனமும் மிகுந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்க, சில தர்க்கரீதியான(!) எதிர்வாதங்களை முன் வைத்தேன் – அவற்றை ஒருமாதிரி தொகுத்து அளிக்கிறேன்… (எதிர்கருத்துகளைத் தாராளமாக முன்வைக்கலாம்)
-0-0-0-0-0-0-
தேர்தலுக்கு முன் இருந்த அசாத்தியமான தன்னம்பிக்கை, தேர்தலுக்குப் பிறகும் பொருந்தி வரவேண்டும், செயலில் காண்பிக்கப் படவேண்டும்
ஆட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள். வென்ற பிறகு மட்டும் ‘எங்களுக்கு அனுபவம் இல்லை, நேரம் கொடுங்கள்’ என்றால், தேர்தலுக்கு முன் சொன்ன தயார்நிலை என்ன ஆனது?
அது அட்ச்சிவுடல் புளுகுதானே?
“அனுபவம் இல்லை” என்பது பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துக்கொள்ள சால்ஜாப்பு அல்ல
…விமானம் ஓட்ட அனுபவம் இல்லாதவரிடம் விமானத்தை ஒப்படைத்த பிறகு, ‘அவருக்கு அனுபவம் இல்லையே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பயணிகளிடம் சொல்ல முடியுமா? அனுபவம் இல்லாதது நடப்புக்குக் காரணமாக இருக்கலாம்; ஆனால் அது தோல்விக்கான, நொதுமல் நிலைக்கான நியாயம் ஆகாது.
எதற்கெடுத்தாலும் பழைய ஆட்சியைக் குறை மட்டும் (அவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், திமுக அஇஅதிமுக திராவிடன்கள் அயோக்கியப் பொறுக்கி ராஸ்கல்ஸ் என்றாலும்) கூறுவது செயல்திறன் அல்ல
ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, ‘முந்தைய மருத்துவர் எல்லாம் கெடுத்து விட்டார், சொதப்பியிருக்கிறார்’ என்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டே இருந்தால், நோயாளி குணமாகிவிட மாட்டார். குறையை கண்டுபிடிப்பதோடு, சிகிச்சையும் தொடங்க வேண்டும் அல்லவா?
அவகாசம் கேட்பவர்களும் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்ட வேண்டும்
புதிய வீட்டை வாங்கியவர், ‘முந்தைய உரிமையாளர் வீடு மோசமாக வைத்திருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் ஒரு மாதம் கழித்தும் தூசி துடைக்கப் படவில்லை, ஒட்டடை அடிக்கப்படவில்லை, பெருச்சாளிகள் அகற்றப்படவில்லை என்றால், ‘சுத்தம் செய்யத் தொடங்கவே இல்லையா?’ என்ற கேள்வி வருவது இயல்புதானே?
நிர்வாகம் ஒரேஒரு ‘அதி’மனிதரின் அனுபவத்தால் மட்டும் இயங்காது
முதல்வருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள், ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாக அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க, எல்லா குறைகளுக்கும் ‘அனுபவமின்மை’யை மட்டும் காரணமாகச் சொல்வது எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்கு விளக்கமல்லவா? (அவர் அனுபவஸ்த வெளியாட்களிடம் அறிவுரை கூடக் கேட்டுப் பெறலாமே?
அவகாசம் கொடுப்பதும், கண்காணிப்பதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல
ஒரு மாணவருக்கு ஆண்டு முழுவதும் படிக்க நேரம் கொடுக்கலாம். ஆனால் முதல் தேர்விலேயே 0 மதிப்பெண் எடுத்தால், ‘என்ன மசுத்துக்குப் படித்தாய்?’ என்று கேட்பது தவறல்லவே?
“முந்தைய ஆட்சி மோசம்” என்பது நிரூபிக்கப்பட வேண்டிய முன்னூகம் (இது 100% உண்மையென்றாலும், இதற்கான எதிர்வினையை, குறைந்த பட்சம் சட்ட-நிர்வாக ரீதியிலாவது செயலில் காட்டவேண்டாமா?)
திராவிட ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் ஒழித்துவிட்டது என்று முதலில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கப்படாத ஒரு முன்னூகத்தின் மீது முழு வாதத்தையும் கட்டுவது தர்க்கப் பிழை. அரசுப் பதவிகளுக்கு, விசிலடிச்சான் குஞ்சப்ப வெறியர்களும் பிறகட்சிகளிலிருந்து வந்த ஓடுகாலிகளும் வந்தேறி ஒருமாதம்+ ஆகிவிட்டது.
ஆக, குறைந்த பட்சம் – இந்த சமயத்தில் ஒவ்வொரு துறைக்கும், மிக விலாவாரியான ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வந்திருக்க வேண்டுமா இல்லையா?
வாக்குறுதிகள் உடனடி மதிப்பீட்டுக்கு உட்பட்டவையே
5 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களுக்கு அவகாசம் தேவை. ஆனால் முதல் நாளிலிருந்தே செய்யலாம் என்று கூறிய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனவா என்று கேட்பது, சர்வ நிச்சயமாக நியாயமானது.
தொடரும் ஊழல்கள், நியமனங்கள், ரீல்ஸ்முதல்வாதம், போலீஸ் சொதப்பல்கள், லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறை
கடந்த வாரம் நடந்த, எனக்குத் தெரிந்த மூன்று ரியல் எஸ்டேட் நிலப் பரிவர்த்தனைகளில் (வேலூர், மதுரை, மதுராந்தகம் வட்டாரங்கள்) – லஞ்சம் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. மேலிடத்துக்கும் அவர்களுக்குப் பாத்தியதைப் பட்டதைக் கொடுக்கவேண்டும் என்கிற முனகலோடு.
வருவாய்த்துறை/பத்திரப்பதிவுசார் அதிகார வட்டங்களில் தொடர்ந்து லஞ்சவூழல்கள் நடந்த மணியம் தான். டாஸ்மாக் ஊழலும் தொடர்கிறது. நிலவளத்துறை சார் பாறை, மணல் கடத்தல்கள்+அதிசுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்எம்டிஏவிலும் அப்படியே.
லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறையின் தலைவராக அருண் எனும் ஒரு ஐபிஎஸ் நபர் நியமிக்கப் பட்டிருக்கிறார். வெளங்கிடும். மேலும் வெளங்க வாழ்த்து.
சந்தேகாஸ்பதமான பல அதிகாரி நியமனங்கள்… ஒரு சிலர் பழுதுபார்த்து டிங்கரிங் செய்யப்பட்டாலும் அதிகாரப்ரோக்கர்கள் சிலர் ஓரங்கட்டப் பட்டாலும், பெரும்பாலோர் பழைய கதைகளின் தொடர்ச்சியே. திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள் May 17, 2026
முதலையமைச்ச நடிகரின் அமைச்சர்கள் – இவர்களில் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டால் பாவமாக இருக்கிறது. இவர்களில் சிலபலர் பாவம் செய்பவர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. சர்வம் அதிகாரிமயம் தமிழகஜகத்.
நடிகரின் உள்வட்டத்தில் இருக்கும் ஆசாமிகள் சந்தேகாஸ்பதம். ஆனால் – இன்னமும் சபரீசன் போன்ற ஈசல்கள் உள்வட்டத்துக்கு வரவில்லை என்பதுதான் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியம்.
ரீல்ஸ் அவ்ளோ பார்ப்பதில்லை, சக்தியில்லை; ஆனால் சிலபல செய்திகளாகவாவது தெரிந்துகொள்வதற்கு – பத்ரி சேஷாத்ரியின் கருணைதான் காரணம் – அவருடைய கிழக்கு நியூஸ் செய்தியலசல்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவருக்கு என் நன்றி.
…ஆனால், இப்படியே இன்னும் எவ்ளோ நாட்களுக்குத் தொடரும்? சலிப்பாக இருக்கிறது…
வீட்டு-தொழில் நிர்வாகத்துக்கு ஒரு விதி, அரசுக்கு ஒரு விதி என இருக்க முடியுமா
நமது வீட்டிலோ தொழில்முறையாகவோ, புத்தம்புதிதாக ஒரு பணியாளரை நியமனம் செய்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் கூடமாட ஓடியாடி உதவி செய்பவராகவோ, அல்லது ஒரு தொழில்முறை எஞ்ஜினீயர்-கஞ்சிநீராகவோ இருக்கலாம் – இவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் ‘வேலை கற்றுக் கொள்ள’ அப்படியிப்படி எனப் பொறுமை காத்திருப்போம்?
“தம்பி, நீ எலக்ட்ரானிக் ஸ் படித்திருக்கிறாய் அல்லவா? உன் முதல் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“சார், நான் என் மேனேஜரை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன்!”
“அம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, அடுத்த மாதமாவது ஒரு வாய் டீ போடக் கற்றுக் கொள்வீர்களா?”
“மாட்டேன். உங்கள் வீட்டில் ஆகும் டீ செலவைப் பற்றி மிக விரிவான ஒரு பழுப்பு அறிக்கையை அடுத்த மாதம் கொடுக்கப் போகிறேன்; பிறகு ஆவன செய்கிறேன்…”
…இந்த நிலைமையை நாம் ஒப்புக் கொள்வோமா? மாட்டோமல்லவா?
இந்த விஜய்குஜய் ரீல்ஸ் கதிகலக்கல் வாதிகளுக்கு மட்டும் நாம் ஒருமாதிரி விதிவிலக்கம் கொடுக்கவேண்டும், சொல்லுங்கள்?
நம்மைப் போன்ற சாமானியர்களில் பெரும்பான்மையினர் (அதாவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் first past the post முறைமைப் படி) பலரால் நமக்கும் நம் தேசத்துக்கும் பணிவிடை செய்வதற்காக, ஒருமாதிரியாகத் தெரிவு செய்யப் பட்ட கட்சிதானே இந்த தமிழக வெறிக் கழகம்?
-0-0-0-0-0-
சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களின் வாதத்தில் உள்ள முக்கியமான தர்க்கப் பிழை: “புதிய அரசு என்பதால் விமர்சிக்கக் கூடாது” என்கிற முட்டாள்தனமான முடிவுக்கு செல்வது.
சரி. அப்படியானால் – சரியான நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?
“புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கலாம் – அதாவது நாம் கருணைமுதல்வாதிகளாக இருந்தால்; அதே நேரத்தில் அல்லது ஆனால், அவர்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கைகள், நியமனங்கள், முடிவுகள், முன்னேற்றங்கள், ஊழல்-தொடர்கதைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலிருந்தே கேள்வி கேட்கவும் மதிப்பிடவும் முடியும்.”
இதுதான், அரசியல் சார்பற்ற, நிர்வாகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட எதிர்வாதமாக இருக்கும்.
விஜயிசம்: விஜை விதைத்தவன் விஜை அறுப்பான்
May 20, 2026
முகம் சுளிக்காதீர்கள்! தமிழகத்தின் மீதான மேற்கண்ட சாபம் மட்டும் மட்டமல்ல, அதைவிடப் படுமட்டரகமான ஒன்றும் இருக்கிறது. அதாவது:
உதய் விதைத்தவன், உதைபடுவான் கூட.
தலைப்புக்கு, கூறுகெட்ட சினிமாமோக தமிழக வாக்காளர்கள் காரணம்.பதிவின் இரண்டாம் பத்திக்கு ராஜமாதா துர்க்கையும் அவள்தம் மணாளனும் உருவாக்கிய அவர்களுடைய அரைகுறைத் தற்குறிப் புதல்வனும் காரணம்.
எது எப்படியோ! ஊழல் குட்டையில் ஊறும் மட்டைச் சனியன்களான திமுகவும் அஇஅதிமுகவும், ஒருமாதிரி ஏமாற்றத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை ஊட்டுவது; ஊக்கபோனஸ்ஸாக – நாறி அழுகும் அம்மட்டைகளின் வெட்டி நார்களான கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிற்தேக்களும் டெம்பரவரியாகவாவது ஒதுக்கப்பட்டது சந்தோஷமே.
1
விஜய்குஜய் பிகிலார், அப்டீபோடு…போடுபோடு எனக் குத்தாட்டம் போட்டு என் முன்னாள் மாணவர்களைக் கிறங்கவைத்து மூளைச்சலவை செய்து தமிழக முதலையமைச்சர் ஆனாலும், சிலபல விஷயங்களை அவருடைய விசிலடிச்சான்குஞ்சப்ப ரசிக வாக்காளர்கள் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் – இவை ஒப்புக்கொள்ளப் படவேண்டிய ‘நல்ல’ வெளிப்பாடுகள்தாம்.
அ: திராவிடமாடல் அரசியல் என்பது உள்ளீடே அற்ற கூளம் + அதன் ஒற்றைப் பெரும் சாதனைவேதனையான சுமார் 60 ஆண்டுகால பள்ளிக்கல்வி உயர்கல்வி எழவு என்பதும் அசிங்கமான கவைக்குதவாத உணர்ச்சிகரமைதுனக் குப்பை எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன..
ஆ. ஓட்டுக்குப் பணம் தேவையில்லை. (ஆனால் பிகில் கட்சியும் சிலபல இடங்களில் கொடுத்துத்தான் இருக்கிறது) – ஆனால் சினிமாமோக வாக்காளப் பெருமாக்களுக்குக் கொஞ்சம் விசிலடிச்சான் இன்பலாகிரி கொடுத்தால் போதும். ஓட்டுச் சாவடிக்கு ஓடிப்போய் ஓட்டில் பிகில் சின்னத்தில் குத்திக் குத்திக் குத்தாட்டம் போட்டு விடுவார்கள்.
இ. இரண்டு பெருங்கொள்ளை திராவிடக் கட்சிக் கூவான்களுக்கும் மாற்று, ஹ்ம்ம்ம்… ஊம்ம்ம்… இன்னொரு இளந்திராவிடக் கட்சியே!
ஈ: தமிழகப் பெண்கள் – குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்கள், புருஷன் எப்படி திராவிடக்குடி குடித்தே செத்தாலும் – அதன் வளமான எதிர்காலத்துக்காகக் யோசித்துத் தியாகம் செய்யும் பாங்கினர் எனும் மாயை விலகியிருக்கிறது. வீட்டில் சோறு பொங்கக் காசு இருக்கிறதோ இல்லையோ, விஜய்குஜய் சூர்யா படமா… யானை விலை கொடுத்தாவது FDFS பார்க்கும் பாக்கியம் பெற வேண்டும் எனும் அவர்களுடைய நியாயமாக அபிலாஷைதான் தமிழகத்தை நிர்வகிக்கும் திறனாக விஜய்குஜய் மூலமாக முகிழ்த்திருக்கிறது.
உ. ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்றும், ‘நான் ஒர்த்தன் வாக்குப் போட்டு என்ன பெரிய்ய மாற்றம் ஏற்பட்டுவிடும்’ பேசுபவர்களும், ‘எல்லாமே திருடனுங்க, அத்தொட்டு நோட்டாவுக்குத்தான் என் ஓட்டு’ எனவிருக்கும் அவநம்பிக்கை வாதிகளும் நிறைந்த பொதுவெளியில், பெரும் திரளாக இளைஞர் பட்டாளங்கள் வாக்களிப்பதும் நடந்திருக்கிறது. (பின் எதற்காக ஒரு ஜிகினாவாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற கேள்வி இருந்தாலும் – இம்மாதிரியே இளைஞர்கள் தொடர்ந்து தேர்தல் பாதை ஜனநாயகத்துக்கு வருவது சரியே)
ஊ. ஜாதி பார்த்து மதம் பார்த்து தமிழகத்தில் ஓட்டுப் போடப்படவில்லை என்று சொல்ல வைத்தது – ஆனால் இதில் எவ்வளவு தூரம்/ஆழம் உண்மை என்பது தெரியவில்லை; இருந்தாலும் ஒரு 10% விசில்கார எம் எல் ஏக்கள் இப்படி இருந்தாலே பெரிய விஷயம்தான்…
எதிர்மறை விஷயங்கள் எனப் பலப்பல இருக்கின்றன, மாதிரிக்கு
அ‘: சினிமா கவர்ச்சிகர இஷ்டைலுக்கும் நிஜவாழ்க்கை + நிதர்சனஅரசியலுக்கும் போடப்படும் மொட்டைத்தலை+முழங்கால் முடிச்சு
ஆ‘. லோக்கல் வேட்பாளர் முக்கியமில்லை – எங்களுக்கு வெறும் ஜிகினாத்தலைவன் போதும்.
இ‘: கூட இருப்பவன்களெல்லாம், அதுவும் தவெக இரண்டாம்வரிசைத் தலைவன்களெல்லாம் ஓடுகாலிகள், அயோக்கியர்கள் – இவர்களை வைத்துக்கொண்டு எப்படி குட்டையைக் குழப்பாமல் இருக்கமுடியும்?
ஈ‘:…
இப்போதைக்கு இப்போதை போதும். அதாவது, ஜிகினா கொடுக்கும் இன்பலாகிரியே துணை.
2
இந்த பிகில் கட்சிக்கு ஐடியாலஜி என்பதுபோல ஒரு ஐடியாவுமே இல்லை என ற்றொம்ப அபாண்டமாகப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அண்ணாயிசம் என்பது போல, பெரியாரிசம்/பெரியார்ஈயம் என்பது போல, திராவிடமாடல் எனும் மாயப்புகைமூட்டத்தைப் போல – இந்த டிவிகே பிகில் கட்சிக்கும் அப்படியாப்பட்ட ஒரு விசித்திர ஜந்து இருக்கிறது.
அதுதான் விஜயிசம். ப்ளடி ஹெல்.
விஜயிசம் = தமிழ்த் தோசையம் + திராவிட வேசியம் + உடும்பு லேகியம் + வலைத்தள மீமாம்ஸகம் + முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்
அதாவது ஐம்பெறும் கோப்பியம் – அதாவது cope செய்தல் என ஒரு மாதிரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மேற்கண்ட அசமன்பாட்டிற்கு ஒருமாதிரி விளக்குமார் விளக்கம் கோனார் நோட்ஸ் வகையறா கொடுக்கவேண்டுமென்றால்:

தமிழ்த் தோசையம்: வெட்டித் தமிழ் வெறி உச்சாடன இட்டிலிக்கடையில் இழுத்துவார்க்கப்படும் ஓசை மிகுந்த தோசை செய்து போக்கற்ற வழிப்போக்கர்களுக்குப் பரிமாறுவது
+
திராவிட வேசியம்: கவைக்குதவாத சுயமைதுன திராவிடத் தனம் பேசி, அதற்கே உரித்தான வேசைத்தனத்தைச் செய்வது. (ஈவெரா சொன்னது நினைவிலிருக்கிறதா? )
+
உடும்பு லேகியம்: நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு, சமூக நீதிக் கோமாளித்தனம், மதச் சார்பின்மை, இலவசமோயிலவசங்கள்++ போன்ற உடும்புத்தைல வியாபாரங்களில் முனைப்பு
+
வலைத்தள மீமாம்ஸகம்: ஜிகினாக்களும் புளகாங்கிதங்களும் அதிமனிதப் பீலாக்களும் மட்டுமே நிறைந்த ஆனால் எண்ணிலடங்காத மாஸ்-ஹிஸ்டீரியா மீம்ஸ், ரீல்ஸ் போட்டே சலித்த சராசரி மூளைகளைச் சலவை செய்யும் பாங்கு
+
முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்: ஆர்வக்கோளாற்றுச் சிறு பிள்ளைகளை வைத்து முதிர்ந்த மூடர்களையும், இளம் விடலை தன்னிச்சை இன்ஃப்ளூயன்ஸர்களை வழியொற்றும் பிற தறுதலை இளைஞர்கள் வசீகரம் செய்யப்பட்டும் – தமிழர்களுக்கே உரித்த, உதவாக்கரை உணர்ச்சிகரமைதுன மந்தை உச்சாடன ‘தீயசக்தி X தூயசக்தி’ வகை மடத்தனத்தை அறுவடை செய்யும் பாங்கு.
3
…அவரைச் சுற்றிச் சுற்றி உள்வட்டமாக யார் இருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலேகூடபெரும் விசனம் தான்; அதுவும் சொஸ்தம் செய்யப்பட முடியாததொன்று.
ஆதவ்அர்ஜுனார், ‘புஸ்ஸி’ ஆனந்தனார், செங்கோட்டையார்…
ஆதவ், அர்ஜுனா அல்லர், கழுதை கர்ஜனா கூட அல்ல – மாறாக, லாட்டரி துச்சாதனா என்பதுதான் அவர் பெயராக இருக்கவேண்டும்… LOTTERY is nothing by LOOTERY. எந்த ஒரு விஷயத்திலாவது கொடுஞ்சூதாட்டத்துக்கும் இந்த லாட்டரி எழவுக்கும் வித்தியாசமுண்டா, சொல்லுங்கள்… இவரும் இவர் புகுந்த வீட்டினரும் (லூட்டரி மார்ட்டின்) செய்யாத ஊழலோ அயோக்கியத்தனமோ உண்டா? ஆனால் – இந்த ஆள், கட்சிகட்சியாகக் கலர்கலராக மாறி றெக்கை விரித்தாலும், பின்னர் மேதகு ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இந்த ஆனந்தனாரும், கடுகுச்சேரிப் பாண்டிச்சேரியில் ஒரு குறு விறகுதொட்டி நடத்தி வந்தவர்; ரெண்டு தெரு வார்ட் கவுன்ஸிலர் வகை பாண்டி ‘எம் எல் ஏ’ தொகுதி ஒன்றில், படுபீதியளிக்கும் பயங்கரப் போட்டி போட்டு வென்றும் தோற்றும் காலத்தை ஓட்டியவர்… ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே நில/வீடு அபகரிப்பு அடாவடி எனத் தன் திராவிடத் தொழிலை விஸ்தீரணம் செய்து, உறவினர்களை வைத்து கட்சிக்குக் கட்சிதாவி, ஒருவழியாகக் கடைசியில் விஜய்குஜயுடன் ஐக்கியமாகி எல்லா வல்லமையும் பெற்று விளங்குகிறார்… தமிழக அரசியலும் கனஜோராக திராவிடமாடல் ரெண்டுங்கெட்டானாக மிக வெளங்கிடும். (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார். இவரும் ஊழலில் கைதேர்ந்தவர்தாம், திராவிடப் பழம் தின்று கொட்டையும் போட்டவர்தாம். (இப்போது மாறிவிட்டிருக்கலாமோ என்ன எழவோ!) (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவரும் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
பேஷ்பேஷ்!
இதற்கு மேலிருக்கும் உள்-ஓளிவட்ட ஆசாமிகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அழுகி முடை நாற்றமெடுக்கும் ஒரு பானைச் சோற்றில், மேற்கண்ட மூன்று புழு நெளியும் பருக்கைகளானவை சரியான பதத்தைக் காண்பிப்பவைதாமே!
4
(ஆனாலும், இவர்களையும் மீறி, ஒருமாதிரி மிகக் கொஞ்சமான நல்லாட்சி எனத் தப்பித் தவறி நடந்தால் – உண்மையாலுமே எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடும்… தேவையா?)
—
வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)
(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”
(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague
#DravidianModel modern marriages.
(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!
(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…
(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!
(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!
(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!
(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!
(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2
Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…

(முதற்கண்: இந்த விஜய் வெற்றிபெற, அவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவென புரிந்துகொள்ளவே முடியாமல் உடல்பொருள்ஆவி++ அனைத்தையும் கொடுத்து உழைத்த, என்னுடைய அத்தனை முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்ல சங்கடமாகவே இருக்கிறது. ஆனால் சனியன்கள் ஒழிந்தன என்பதும் ஒருமாதிரி ஆசுவாசம் தருவதுதான்.)
(ஒன்றரைக்கண்: ஆனால் – இது எப்படிப் போகும் என்பது பிடிபடவில்லை…
இருந்தாலும், அயோக்கிய கொள்ளைக்கும்பல் திராவிடக் கட்சிகள் குறைந்தபட்சம் டெம்பரவரியாகவாவது வீரியம் குறைந்தமை (இவை முழுவதுமாக அழித்தொழிக்கப் படவேண்டியவைதாம்!) குறித்து மகிழ்ச்சியே!
அதே சமயம், இந்த நடிகர் கட்சிக்குப் பெரிதாக ஐடியாலஜி கட்சித் திட்டம் என்று இருக்கிறது போலவும் தெரியவில்லை. இஷ்டத்துக்கு ஈவேரா போன்றவர்களை ஆதர்சங்களாக உள்ளிழுப்பதும், மத்திய அரசோடு அவசியமேயில்லாமல் மல்லுக் கட்டுவதும் போன்ற விஷயங்கள் கலக்கம் தருபவை, பஞ்ச் டயலாக் இழவுகளும்தாம் – தற்போதைக்கு அவரைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப-ஊழல் வாதிகளும்அமைதி தரவில்லை…
ஆனால்…
இந்த மாற்றம், நெடு நாள் நோக்கில் தமிழகத்தை உண்மையாகவே முன்னேற்ற உதவுமானால் அதுவும் நல்லதே! வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?)
சாருநிபேதிதா: தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2026 – எக்ஸிஸ்டென்ஷியல் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள்
May 3, 2026
என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.
(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள் எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)
தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை
தேர்தல் முடிந்த 23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.
ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.
நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”
அவன் சிரிக்கவில்லை.
இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.
சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.
நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.
இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ்.
ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.
இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.
அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.
ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.
என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.
நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.
நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை 2-3 மணிக்குத் திரும்பவருகயென…
…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….
துரந்தர் என்றால் என்ன?
கோலாஹல ஸ்ரீநிவாஸ்
“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்) தாக்குகிறான்.
ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.
நான் சிறுவயதிலேயே என்னுடைய அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”
சீமான்
“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!
…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”
டெல்லி ராஜகோபாலன்
“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!
இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”
மூத்த பத்திரிகையாளர் மணி
“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.
ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”
ரவீந்திரன் துரைசாமி
“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.
…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”
ரங்கராஜ் பாண்டே
“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…
ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”
பாரிசாலன்
“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…
ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான். துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்; + ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”
ஜெயமோகன்
“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம் சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.
…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது. அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன். ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”
பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா
“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.
நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”
(சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)
அண்ணாமலை
“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும். நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.
ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”
பத்ரி சேஷாத்ரி
“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..
நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”
“களம் சூட் புட்ச்சிட்ச்சி, நீங்க அத எப்டீ பாக்றீங்க…”
March 10, 2026
:-(
“அந்தக் கூட்டணி அடிமட்டத்துல ஜெல்லே ஆகல, அத எப்டி பாக்றீங்க?”
“ஹிஸ்டாரிக்கலா பாத்தா நம்ப தமிளகத்ல கூட்டணி அரித்தமேட்டிக் கெமிஸ்ட்டிரிண்றது, பிஸிகல்லா எப்டி வர்க் அவுட் ஆவும்?”
“விடுதலைச் சிறுத்தை கச்சிக்கு தெராவிடக் கழுதைங்க ஓட்டு ட்ரான்ஸ்பர் ஆவுமா?”
“அதிமுகவோட பி-டீம்தான் இந்த டீஎம்கே! பள்நிசாமி எவ்ளோ ராஜதந்த்ரத்தோட பன்னீர அங்க தெளிச்சுவுட்டுறுக்கார்!”
“கூட்டணி வேற கூட்டாளியணி வேறண்றத தமிலக வாக்காலர்கல் புர்ஞ்சிக்கல… இதப் பத்தீ என்ன நெனக்கறீங்க?”
“தலித்துங்க நாடாருங்கஅம்பது % வோட்டு, மொதலியாருங்க 80% வோட்டு, எல்லாம் டீஎம்கேவுக்குதான்! எங்க அபார்ட்மென்ட் டவர்ல, என் ஃப்ளோர்ல எடுத்த கருத்துக்கணிப்பு அதத்தான் காண்பிக்குது!”
“பூத் கமிட்டீங்க எங்கே? ப்ரேத் கமிட்டியாச்சும்? கொறஞ்ச பட்சம் வேதாளக் கமிட்டிங்களாவது இர்க்குமா இந்த தற்குறி விஜய்க்கு?”
“நாங்க டேட்டா வெச்சிட்டுதான் பேசுவோம்! பொத்தாம்பொதுவா கணிக்கமாட்டோம்! க்ண்டிப்பா அடுத்த மொதல்வர் எங்க பிகில் தளபதி விஜய்தான்!”
“கூட்ற கூட்டத்த வெச்சி ஓட்டு விகிதம் சொல்லவே முடியாது… ஆனா தானா சேர்ற கூட்டம், ஊக்கம்கொடுத்துக் சேர்க்கற கூட்டம்னு வித்தியாசம் பாக்கணும்ல?”
“ஆனா பாருங்க, டோப்பா ஸ்டாலினுக்கு கூட்டம் கூடுது. உண்மை. ஆனாக்க, ஒரு மாற்றுத்தலைமுடியாளருக்கே இவ்ளோனா, சொந்த தலைமுடி வெச்சி தியாகம் செஞ்சி தேர்தல்களம் காண்ற எங்க தளபதிக்கு எவ்ளோ கூடும்?”
“குட்டி நடிகர் மாஸ் 30% வோட் வாங்குமா, இல்ல வெறும் 45% தானா?”
“குட்டி நடிகர் குசு விட்டார்! இது தமிழகத்துல அதிர்வலைங்கள ஏற்படுத்தியிருக்கு… பொலிட்டிகல் சுனாமின்னே சொல்லிடலாம்… அதப் பத்தீ உங்க கருத்து என்ன?”
“நாம் தமிளர் கச்சி ஏன் இலங்கை தேர்தல்கள்ல தமிளர் சார்பா போட்டி போடல? இதுலேந்தே அவங்க வண்டவாளம் தண்டவாளத்துல ஏற்ரது தெரியுதுல்ல? அவ்னுங்க போட்றது ரெட்டை வேடம்…”
“யாரோட ஓட்டைய ஜனநாய்கன் நடிகர் விஜய் பிரிக்கறார்?”
“ஜென்-ஸீ வாக்காளங்களுக்கு எது முக்கியம் – நடிகங்களோட குஞ்சாமணியப் புட்ச்சிக்கினு தொங்கறதா, இல்ல… கார்ட்போர்ட் கட் அவுட் உச்சீலேர்ந்து உற்சாக பிகில் ஊதறதா?”
“மதச்சார்பின்மையைக் கடைபுடிக்கற திமுகவுக்குதான் எல்லா கிரிட்துவர்களும் முசுலீம்களும் ஓட்டளிப்பாங்க… விஜய்க்கு இல்லவேயில்ல… உங்க கருத்தூ?”
“ஸ்டாலின் குடும்ப வளர்ப்பு நாயும், நயினார் நாகேந்திரன் வீட்டுச் செல்ல நாயும் ஒன்றாக ஒரு வெடர்நரி டாக்டரைப் பார்க்கச் சென்றிருக்கின்றன; அவை இரண்டும் சுமார் 10 நிமிடம் தனியறைல தனிப்பட்ட முறைல பேசியிருக்காங்கன்னு தகவல் தீ போலப் பரவியிருக்கு… ஆகவே தீமுக, பாஜகவோட B-டீம் தான? இதப் பத்தீ…”
“ஆங்கிலத்துல இதை, லேம்டக் கவர்னமெண்ட் அப்டீன்னு சொல்லுவாங்க… நொண்டிவாத்து ஸ்டாலின் ஆட்சி ஆரம்பத்துலேர்ந்து இப்டியேதான் இருக்கு…”
“ஆங்கிலத்துல இத ஸஜ்ஜெஸ்டிவ்னு சொல்லுவாங்க… எங்க ஸஜ்ஜெஷனும் ஸஜ்ஜெஸ்டிவாக பரிந்துரையாகத்தான் இருக்கும்…,”
“திராவிட மாஜிக்க இங்கிலீஷுல அப்ரகாடப்ரா அப்டீன்னு குறிப்பிட்வாங்க… அதாவது அந்தக் காலத்துல அக்கிரகாரத்து பிராம்மண காபி டபரா ண்றத, 3% அவாள்கிட்டேந்து புடுங்கி பரவலாக்கி அனைத்து சாதியினருக்கும் காப்பி குடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அளித்த சமூக நீதி பீரங்கிதான் தீமுக… அதுதான் 2026 தேர்தல் நாய்கன்… நீங்க இதப் பத்தீ…”
“நடிகர் தளபதி விஜய்யோட அனைவருக்குமான அரசு செக்புக் திட்டமான ‘செக்குபுக்கு ரயில்’ அறிவிப்பு ஒரு பிரம்மாஸ்திரம், ஒரு மிகப்பெரிய கேம்சேஞ்சர்!!! 20-60 வயது இளைஞர்கள் அனைவரும் (அரசுப் பணியாளர்கள் நீங்கலாக – ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அந்த அதிகாரச் சலுகை இருக்கிறதே!) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அரசுக் கருவூலத்திடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
-0-0-0-0-
பலப்பல தவிர்க்கமுடியாத (பெரும்பாலும் விகசிப்பு கொடுப்பவைதாம்!) அழுத்தங்களின் நடுவே, எப்பவாவது ‘ரிலாக்ஸ்’ செய்கிறேன் பேர்வழியென்று வாய்விட்டுச் சிரிக்கலாமென, பொழுதுபோகாமல் இந்தக் கட்டேலபோற யூடூப்பர் கம்னாட்டிங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றுவது…
அந்தமாறீ மெய்யாலுமே சூட் புட்ச்சிச்சின்னாக்கக்கூட களத்தையே பாக்காம எப்டீடா ஏஸி குளுகுளு ரூம்புலேர்ந்து வெக்கமேபடாம, நேர்ல பாத்தாமாறீ மொழ நீளத்துக்கு அட்ச்சிவுட்ற்றீங்க?
…இதில்வேறு ஒரிரு மதிக்கத்தக்கவர்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உச்சரிப்பு சுத்தம். கர்ண கடூரம். இவ்வளவு குரூரத்துடன் தமிழைப் போட்டுத் தாக்கவேண்டிய அவசியம்தானென்ன, சொல்லுங்கள்.
அடிவயிற்றில் இனம் புரியாத கலக்கம். எப்போது தான் தமிழகத்துக்கு, இந்த அயோக்கிய ராஸ்கல் மேனாமினுக்கிகளிடமிருந்து விமோசனம் கிடைக்கும் என்கிற சுயபச்சாத்தாபம் மிக்க அலுப்பு.
நமது பாரத நாட்டு ஜனநாயக வழிமுறைகளின் வழியொட்டி – ஆனால் மனம்போன போக்கில் அவை அனைத்தையும் துஷ்பிரயோகம் செய்து, அநியாய ஆதாயம் பெற்றுக்கொழுத்தல், அதன் விதிமுறைகளை வளைத்து மடித்து அயோக்கியத்தனமாகச் சுரண்டிக் கொள்ளையடித்துச் சுயலாபம் அடைதல் என ஒரு பக்கம் பணநாயகத் திராவிடப் பொறுக்கிகள் அலையும்போது – தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பக்கம், நம் செல்ல, சக ஜனநாய்களானவர்கள் இலவசங்களையும் பிச்சைகளையும் கையூட்டுகளையும் மினுக்கல்களையும் ஜிகினாக்களையும் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிடன்களுக்கும் அவன்கள் வழித்தோன்றல்களுக்கும் அதிகார வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருப்பது அவலம்தான்.
ப்ளடி, டமிள் இனி மெல்லஸ் ஸாவும்.
டமில்நாட் இந்தத் தெருப்பொர்க்கி திராவிடன்களுக்கு வோட் போட்டே வோட்டாண்டி ஆவும்.
ஆமென். :-(
-0-0-0-
நம் யூடூப் தண்டக் கருமாந்திரங்கள், பொதுவாகவே இப்படிப்பட்ட அவல நிலையில் இருந்தாலும் (யதா திராவிடன், ததா யூடூப்பன்) – பத்ரி சேஷாத்ரி போன்றவகளின் சமன நிலை சமகாலக் கருத்துரைகளும் (https://www.youtube.com/@kizhakkunews/videos) கிடைக்கத்தான் செய்கின்றன.
வாழ்க நீவிர்.
(இருந்தாலும் தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்தான்!)
:-(
- தொழில்முறை தமிழ் யூட்யூபர் கழுதைகளின் அலுப்புதரும் அலப்பறைகள் July 18, 2025
அண்ணா பல்கொலைக்கழக எஞ்ஜினீயரிங் கஞ்சிநீரிங் திராவிட மாணவன் எனக்குக் கொடுத்த கொடும் அதிர்ச்சி
January 26, 2026
(அல்லது)
குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.
(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.
(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)
…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.
இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை…
இப்படியாகத்தானே.
ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் – ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)
…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?
(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)
…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!)
செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.
பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.
அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.
ஏன்?
மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)
இருந்தாலும்.
அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.
ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….
(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)
ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!
எனக்கு விக்கித்துப் போய்விட்டது!
சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”
விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்…
கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்… இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…
… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….
சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?
“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”
வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.
பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”
அப்படியா சரி. Cosine3600 க்கு என்ன சொல்லுது?
“ஐயோ! இது ஒண்ணுன்னு காமிக்குது!”
அடப் பாவமே என்றேன்!
“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!
!!!!
அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?
இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!
நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)
தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில் விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.
விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…
அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…
எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!
அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”
சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ
இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…
2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ
இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…
2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?
அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன்.
“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”
அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.
அடுத்த முதலையமைச்சர் சோசப்பு விசய் வாள்க!
-0-0-0-0-
என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…
தேவையா?
“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”
(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?
#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)
இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »
இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
1
இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… Read the rest of this entry »
இளம் அண்ணாமலையும் ஒப்பாரி வள்ளல்களும்…
April 10, 2025
வேறு வழியேயில்லை, ஆகவே! Read the rest of this entry »
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »
ஆதாரம்:
Read the rest of this entry »
படுபீதியளிக்கும் வகையில் வளர்ந்திருக்கும் அட்டகாசமான தமிழகத்தின், அற்புத நகைச்சுவை உச்சம் எது?
December 28, 2024
இல்லை, அது செந்தில்கவுண்டமணிவடிவேலுவிவேக்விஜைஉதைஇசுடாலிர் கிளுகிளுப்பு -கிச்சுக்கிச்சு-வெடிச்சிரிப்பு விவகாரமில்லை. ஏன், அது அந்த படுகேவலமான திராவிடமாடல் திமுக இசுடாலிர் அரசாங்கம்கூட இல்லை.
மாறாக. அது… அது ஒரு பிரபல, தொடர்ந்து கொண்டிருக்கும் எக்காளச் சிரிப்பு.
பொறுப்புத்துறப்பு. *
Read the rest of this entry »





























