இக்கட்டுரையின் முதல்பாகம்.   இப்பதிவு(ம்) ரொம்பவே நீளம். பொறுமையாகப் படிக்கவும். தேவையற்றுப் பொங்கவேண்டாம். சரியா? :-(

-0-0-0-0-0-0-0-0-

என் பள்ளித் தோட்டத்திற்கு சுமார் 45 வகை விதம்விதமான பறவைகள் (சில, பிரமிக்க வைக்கும் அழகுடன்) வருகின்றன. கூடவே பலப்பல பட்டாம் பூச்சிகளும், சிலவகைத் தேனீக்களும், பலப்பல பூச்சிகளும், ஊர்வனவும். இவற்றைப் போக்கத்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு,  சிலவகை கருங்குருவிகளைப் (Drongo, Dicrurus macrocercus) பற்றிக் கொஞ்சமேனும் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

அதேபோல வெண்டைக்காய்களில் (Okra, Ladies Finger, Hibiscus esculentes) எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமைச்சலெடுத்ததால், இணையத்திற்குச் சென்றேன். ஆனால், சில ‘சுட்டிக்’ குதிப்புகளுக்குப் பிறகுதான்… பிரச்சினையே!

என் தலைவிதிதான், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைப் பார்க்க வைக்கிறது…

Read the rest of this entry »

(அல்லது) நம் ஆராய்ச்சிச் சிகாமணிகளின் அதிஅற்புத அநுபூதி நிலை ஆயோதிஆய்வுகள்!

அம்மணிகளே, அம்மணர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. இதை இருமுறை அடிக்கோடிட்டுக்கொள்ளவும். எனக்கு அது பிடிக்கவேறு வேண்டுமா என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். உங்கள் விதண்டாவாதம் சரிதான். மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதுதான்!

ஆனாலும் இப்பதிவு கருங்குருவி+வெண்டைக்காய்+தர்ப்பை பற்றித்தான். பயப்படாதீர்கள்.

Read the rest of this entry »

எனக்குத் தெரிந்து, என் செல்ல பெங்காலிபாபு உட்பட, இதற்கெல்லாம் பொங்கவேயில்லை. வீரமிலா, நேர்மையிலா ஞமலிகள், வேறென்ன சொல்ல.

இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…

Read the rest of this entry »

அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த  நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!

Read the rest of this entry »

கடந்த சுமார் 2 மாதங்களாக, விட்டுவிட்டு – திராவிட இயக்க விசிறியான (இன்றுவரை) நண்பர் ஒருவருடன் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருக்கும் மின்னஞ்சல் உரையாடலின் ஒரு சாராம்சப் பகுதி கீழே:

-0-0-0-0-0-0-

… நான் பலதடவை உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் – திராவிடலை இயக்கங்களின் பல குணாம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றின் தமிழ் சமூகத்தின் மீதான எதிர்மறை தாக்கத்துகளைப் பற்றியும், அதன் பலப்பல ‘கொடை’ களைப் பற்றியும்கூட. நிறைய யோசித்தும் கூட, என்னால்  இந்த முயக்கங்களுக்குச் சாதகமான ஒரேயொரு விஷயத்தைக் கூடத் தெரிந்துகொள்ளமுடியாமல் போனது என் போதாமைதானோ? Read the rest of this entry »

‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.

(திராவிடஇயக்க மேதகு நாயுடுகாரு நண்பர் அவர்கள் – நான் படிக்காவிட்டால் பரவாயில்லை, சரியாகத்தான் வரும், போட்டுக்கொள், எக்கேடோ கெட்டுப்போ, ஆளைவிடு – என்று கோபமாகச் சொன்னதால், இந்த இரண்டாம் பகுதியையும் பிரசுரிக்கிறேன்; இந்தப் பதிவில் – நண்பர் சொன்னதில் இரண்டு ‘திராவிடப் பொய்மை’ விஷயங்களை மட்டும் கையாண்டிருக்கிறேன்)

-0-0-0-0-0-0-

“முதலாவது – கணேஷ்ஸ்ரீ பராட்டா உங்களுக்குப் பிடிக்குமா?”

“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”

“இது, உங்கள் பார்வையில், ஆரிய வந்தேறிகள் கடை. ஓடிஷாவிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்துசேர்ந்த பிராம்மணர்களின் கடை. அவர்கள் கொழுத்த மாதிரி தெரியவில்லை. அநியாயமாக லாபம் அடிப்பதாகவோ அல்லது தரக்குறைவான வஸ்துக்களை விற்பதாகவோ தெரியவில்லை. கடை என்னவோ ஒரு சிறிய பொந்துபோலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அழகுணர்ச்சியோடு எளிமையான அலங்கரிப்புகள் இருந்திருக்கலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”

Read the rest of this entry »

:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

‘திராவிட இயக்க அறிவுஜீவி’ (இந்தப் பதம் ஒரு நகைக்கத்தக்க ஆக்ஸிமொரான் – ஏனெனில், திராவிடக் கருத்தாக்கத்துக்கும் அறிவுக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை – சரியாகச் சொல்லவேண்டுமானால், இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள்; ஆனால் மேற்படி முயக்கம், பல உதிரிகளை ஜீவிக்க வைப்பது உண்மை! ஆகவே இவரை ஒரு வெறும் தொழில்முறை திராவிடஜீவி என்றழைப்பதே சரி) எனச் சர்வசாதாரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ளும் ஒருவருடன் பொறுமையாக உரையாடவேண்டிய நிர்பந்தம், இரண்டு நாட்கள் முன்னர்,  மாலையில் புதுச்சேரி  கணேஷ்ஸ்ரீ உணவகத்தில் ஏற்பட்டது, அந்த திராவிடஜீவியின் பூர்வஜென்மப் பாவமாகத் தான் இருக்கும்.
Map of the Ancient Philistines Territory

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.

பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட  –   எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு  – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)

Read the rest of this entry »

kinder, über alles

March 16, 2015

… Joseph Haydn’s jingoistic composition extolling the virtues of deutcheland and his emperor notwithstanding, I like (and love) my dear Haydn’s oratorios immenselythe seasons and the creation.

Yes. Children above all. Yeah!

Read the rest of this entry »

ஐயகோ!  நமக்கு இது தேவையா? எனக்கு மிகமிக வருத்தமாக இருக்கிறது. அழுகைஅழுகையாக வருகிறது.

பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?

Read the rest of this entry »

[1]  ‘பாலா’ அவர்களின் சில கருத்துகள் தொடர்பாக, ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதிய மின்னஞ்சல்: மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்;  [2] ‘பாலா’ அவர்களின் எதிர்வினை: ஒத்திசைவுக்கு மறுமொழி

சரி. ஜெயமோகன் அவர்களின் கழுத்தை மறுபடியும் மறுபடியும் வேலைவெட்டியற்று அறுக்கவேண்டாம் என…

…இரண்டு கடிதங்களையும் அவற்றுக்கான என் பதில்(!)களையும் (கொஞ்சம் எடிட்/திருத்தம் செய்து – பெயர்களைக் கத்தரித்து) கொடுத்திருக்கிறேன். அக்கப்போர்தான். எனக்கு (+உங்களுக்கு) இது தேவையா?

Read the rest of this entry »

தகத்தகாய மாஜி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளே! எனக்கு மன்னிப்பு உண்டா?

Read the rest of this entry »

… வரவர, ஜன்னியில் உளறிக் கொண்டேயிருக்கிறார்கள், இந்த மேதா பட்கர் அம்மணியும், மதிமுக ‘வைகோ’ கோபால்சாமியும். கோபத்தில் எனக்கே ஜுரம் வந்துவிட்டது போலிருக்கிறது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும், எத்தை எதிர்த்தால் ஊடக மாமாக்கள் ஓடி வந்து ‘கவர்’ செய்வார்கள் என்பதையெல்லாம் யோசித்து, ‘செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது’ என்கிற எழவையெல்லாம் – இந்த பொழுதன்னிக்கும் பப்பரப்பா யுகத்தில், நம்மால் மண்டையில் அடித்துக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்தான்… இருந்தாலும், பீலா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? :-(
Read the rest of this entry »