திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾
இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
இளம் அண்ணாமலையும் ஒப்பாரி வள்ளல்களும்…
April 10, 2025
வேறு வழியேயில்லை, ஆகவே! Read the rest of this entry »
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »
Folks like young Sri Shankar Jayapal. Read the rest of this entry »
+1.
(என்னுடைய சாராம்சம் …and I know I am preaching to the choir, but then…)
1. கண்டகண்ட சால்ஜாப்பு சொல்லாமல், உங்கள் உரிமையும் கடமையுமான வாக்கைச் செலுத்துங்கள்; ‘படித்தவர்கள்’ என தம்மைக் கருதிக்கொள்ளும் கருத்துதிர்ப்பாளர்களின் மெத்தனம், கேவலமானதொன்று – இந்த அசிரத்தையானது நம் சந்ததிக்கே, ஏன் நம் தமிழகத்துக்கே திராவிடச் சமாதி அமைத்துவிடும். பிறகு அத்தனை தயிர்வடைகளுக்கு நாம் எங்கேதான் போவது, சொல்லுங்கள்?
2. அண்ணாமலைக்கும், அவர் சார்ந்துள்ள நரேந்த்ரமோதியின் பாரதீய ஜனதா கட்சிக் கூட்டணிக்கும் ஓட்டுப் போடவும். “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” என நம் ஔவையாரே சொல்லியிருக்கிறாரே!

1
சின்னப்பா கணேசன் அவர்களின் கீழ்கண்ட புத்தகத்தை அண்மையில் படித்தேன்; பரிந்துரை செய்கிறேன். ஆழத்துடனும் வீச்சுடனும் நன்றாக வந்திருக்கிறது.
அவசியம் வாங்கிப் படிக்கவும்; தமிழகத்துக்கு, பாரத மத்திய அரசு என்னென்ன விஷயங்களைச் செய்துள்ளது என்பது(ம்) குறித்த எக்கச்சக்க புள்ளிவிவரங்கள் + திராவிடமாடல் நம் மண்டைகளில் ஏற்றியுள்ள தகிடுதத்தங்கள் குறித்த சிடுக்கவிழ்த்தல் விவரணைகள். நன்றாக உழைத்திருக்கிறார் – புத்தகமும் நன்றாகவே உருவாகி வந்திருக்கிறது. 350+ பக்கங்கள்.
விவரங்களுக்கு வாட்ஸ்அப்: +91 90923 45641 – ரூ 350/- + ரூ 100/- குரியருக்கான கட்டணம்.
2
அன்பர் சின்னப்பா கணேசனின் கோரிக்கைகள்:
(பத்தே நிமிடங்கள் தான்!) போதை கும்பலிடம் இருந்து நம் சந்ததியினரை மீட்க, கொள்ளை கும்பலிடம் இருந்து நாட்டை காக்க கட்டாயம் வாக்களியுங்கள்..!
(வெறும் 16.5 நிமிடங்கள் மட்டுமே!) முதலிடத்தில் தர்மபுரி, 2-வது இடத்தில் நாமக்கல்..! பரிதாபமான இடத்தில் தென்சென்னை.!
அவசியம் பார்க்கவும். வாக்களிக்கவும்.
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்”
2024ல் ஆரம்பித்து, பாரதமாதாவின் செல்லத் தங்கையான தமிழ்த்தாய், இந்த திராவிடப் பொறுக்கிகளை ஓடஓட விரட்டி அடித்துப் பிடித்துக் கம்பி எண்ண வைத்து, தமிழகத்தை ஏற்றத்தின் பாதையில் வழி நடத்த ஆரம்பிக்கப் போகிறாளோ?
ஜயஸ்ரீ ராம்.
🕉 🇮🇳
frank banter with ‘failed’ youth – notes
September 26, 2023
It is not that yours-sincerely’s services are sought for, only in terms of giving ‘career suggestions’ or explaining the lay-of-the-land to the impressionable & adolescent kids (adolescents, their parents, ‘career’ choices, ‘counseling’ & life – some suggestions & notes May 7, 2022) – but sometimes it extends to giving some ‘encouragement’ [hic] to depressed kids – who for some reason or the other have ‘missed the academic bus’ – or at least currently have received a set-back to their plans.
These ‘misses’ include IIT-JEE and the like. Read the rest of this entry »
என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993
August 12, 2023
1
அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »
This is not necessarily a commentary on the current affairs, namely – the narrative wail that: ‘Sengol/Chengol/Scepter handing over ceremony in 1947 is/was feudal, despicably anti-progressive, unacceptable & anyway, was totally fabricated…’
-0-0-0-0-0-
Ma: Dei Ramaswamy… Come here, I want to show you how your Appa looked like in an old photo… come, come…
LeLi: Oh come on, amma – am tired and sick of your nostalgia; you are always loopy and narrate the same story a gazillion times. In any case, how can I be sure that he was indeed my appa?
Ma: What? Have you gone mad or what?
LeLi: What what?? It is you – who is senile and downing tablets forever counting your days, not ME! It is YOU who is nuts…
Ma: Ayyo! It is my karma. All purva-janma papa. That, I have to listen to all this!
LeLi: See, I only have high sugar, high BP, high hypertension, deafness, NDTV, TheHindu, dravidianism, liberalism & youtube channel subscriptions. Otherwise I am fine. Look at you, you can’t even walk. You wobble & waddle like a duck.
Ma: Ishvara! You should take care of yourself, you are also ageing. In any case, I hope to die before you… Hope Sri Rama blesses me with your long & healthy life…
LeLi. Enough of advice and sentimental maudlin nonsense, you take care of yourself first… But, you can’t even do that…
Ma: True, I should… Agree that this argument started only because I wanted to show you a photo of the wedding day of your father and I. I am really sorry about it…
LeLi: I have seen it umpteen times, am sick and tired of the whole thing! You start the WHOLE thing and then apply reverse gear! How am I to cope with this?
Ma: You know, we got married in 1947, the day of Indian independence? The photo is the proof of it. We had both pinned the Indian flag to our kalyana-dress, see see…
LeLi: Look, don’t get me started AGAIN! Photos can be photoshopped. Understand some technology at least!
Ma: What? What is that? We never shopped or anything. In those days there were only local Nadar provision shops… what are you saying!?
LeLi: For you ‘WhatsApp University’ people, nothing can be taught. I should have known better than to have a mother like you…
Ma: Dei… Just look at this photo… you know, your appa wore the flag upside down and I had to discreetly correct him, heh heh…
LeLi: What HEH HEH! What is the PROOF that he was MY dad? Some old pig-eared grainy photo? What the hell!
Ma: Ayyo, Deivameh! Isvara! What has happened to my Son, is he feverish?
LeLi: No. I am not running temperature. But am angry that, there is NO proof that he was my real Appa, my truthful biological father – though you were indeed my Amma, perhaps…
Ma: Ayyo! What happened to my son today? How can you demand proof for this! Don’t you have any sense of shame?
LeLi: Why not? We scientifically minded people, only believe-in those things based on evidence…
…
…
Ma: Here is the old yellow-pink wedding invitation; you know, the wedding happened in Pazhani? Before and after Kalyanam we prayed to Bhagawan Muruga… Gnyana panditha he is…
LeLi: What is this stupid piece of crazy shit?! Even this can be photoshopped! Bah!!
Ma: What is this shop you keep talking about…I don’t understand!
LeLi: It is my misfortune that I have a mother who doesn’t understand the basics of Technology. See Amma, what is the proof that HE was my bloody Appa??
Ma: What proof can I give, I used to wear a Mangalya Sutra, and that is there in the Almirah somewhere… Good that your Appa passed away many years ago! He doesn’t have to listen to all this … kashta kaalam… what to do…
LeLi: How can your thaali or mangalyam be a proof for my biological father?
Ma: What? May be I can ask my brother and tell you his personal experience of the wedding, its details etc? Hope he remembers, he has Alzheimers…
LeLi: No. We nitpicking & dazzlingly brilliant people do not operate based on mere anecdotal evidence…
Ma: May be, I can give you a testimony from the Sastrigal who conducted our wedding rituals? Fortunately he is still alive & taking care of himself in our ancestral village near Gobichettypalayam – his sons have all passed away, and grandchildren are all well-settled in america, canada and australia…
LeLi: How many times should I tell you – how can a simpleton crossbelt kudumi be a proof! That too to scientifically determine my parentage? That too after so many years?
Amma: Oh no… How am I EVER going to convince my own son that he is indeed my own son! I can’t even cry because… …
LeLi: Look here Amma, I am saying this for the last time… I want to know the correct details of my real, biological father, not someone I have merely been told is my father without any evidence whatsoever… the days of meaningless traditions and superstitions are over… I need solid, clear & independently verifiable proofs for the following:
1. DNA certificate (from an internationally accepted labs) to prove that my ‘father’ was actually born of his parents, to claim a certain lineage (one has to do a thorough job, you see…)
2. Photo IDs of them – along with proofs of residence.
3. DNA certificates of yours and that of my ‘father.’
4. If DNA certificates can’t be given (see, I am quite a reasonable man…) then:
a. Sworn affidavits from other people who have actually seen you and your ‘partner’ getting into the bedroom together & leaving it, assuming that there was no one else already in that room. I would also need circumstantial evidence for the presence of those other people, mind you.
b. Your menstrual cycles mapping based on my date of birth to arrive at a date of conception that should correlate to the above affidavits. (Oh my GOD! I remember that my own Birth Certificate did not exist then, so may be my entire birth has been faked!)
c. … …
Amma: Ayyo! Kadavule! I never thought I would live to hear this (cries, almost faints, falls down)
LeLi: What? You do not want to argue and represent your case systematically and with tangible evidence!? Can’t believe that you are MY Amma! Bah! May be you were my surrogate mother or what??
Amma: Please s t o p… what has got into you, Dei!?
LeLi: Nothing. I am my usual self – that is – normal, thinking, rational, progressive, secular self – full of scientific temper & immense love for Jawaharlal Nehru, his grace, his dazzling brilliance & his everything else…
Okay, I will give you chance to redeem yourself from your stinking Hinduism and stupidity repackaged shit called Sanatana Dharma, though I am really sick of your shenanigans…
But I want to redeem you from your superstitions, brahminical patriarchy and self-hating misogyny… Here’s a 1 Re coin – am going to toss it.
If it is heads, then I will convert to Christianity.
If it is not and is tails – I would convert to Islam.
Amma: I s h v a r a aaaaaaaa…
(curls up and dies instantly)
LeLi: Good riddance. Now, let me toss my coin anyway…
END
(of everything…)
திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles
April 22, 2023
அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு? Read the rest of this entry »
இது ஆரூடம் இல்லை. வரலாறு மட்டுமே. இருந்தாலும்… Read the rest of this entry »
இளம் அண்ணாமலை அவர்களுக்கு அறிவுரை தருவது எப்படி? யார் கொடுக்கலாம்? மாறாக, உருப்படியாக என்ன செய்யலாம்?
December 14, 2022
(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!) Read the rest of this entry »
(கனவு மெய்ப்படும்) ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!!
December 6, 2022
ஜெய் ஸ்ரீராம்!
இது ஒரு மறுபதிவு. முந்தையது அகற்றப்பட்டிருப்பதால் இது. ஆர்கைவ்.ஆர்க் தயவில் புனருத்தாரணம். Read the rest of this entry »
எப்படித்தான் இப்படிப் படைப்பூக்கத்துடன் யோசிக்கிறார்களோ! :-) Read the rest of this entry »
இஸ்லாம் + க்றிஸ்தவம் + கம்யூனிஸ்ட்கள் குறித்து, நம்முடைய செல்லமான சித்தப்பா நேரு சொன்னது என்ன?
November 14, 2022
மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.
இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை. Read the rest of this entry »
ஹிஹ்ஹீ! … வேசிமகன் / தேவடியாள் மகன் என எங்களைத் தெருவோர திமுக திராவிடக்காரன் வசைபாடினால், மகிழ்ச்சியுடன் அசடு வழிய ஒப்புக்கொள்வோம்…
November 10, 2022
…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »
…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »
தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்; பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »
இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்
October 24, 2022
முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக…
சரி.
நேற்று கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »
“புத்தன் பாப்பான ஒழின்னு சொன்னானா இல்லியா? ” – தமிழகத்தின் போக்கற்ற இளைஞப் போராளிப் பொறுக்கிக் குளுவான்கள், குறிப்புகள்
October 10, 2022
இந்தப் பின்னூட்டத்தை ‘அப்ரூவ்’ செய்யவேண்டாம் எனத்தான் முதலில் நினைத்தேன். ஆனால்.
என்னதான் தடிமன் தோலனாக, எந்தக் கழுதை கத்தினால் என்ன, வசைபாடினால் என்ன எனக் குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டே எழுந்துபோகும் சுயபயிற்சி பெற்றவனாகிய எனக்குமே கூட இம்மாதிரி வேலைவெட்டியற்ற சீண்டல்களைப் பார்த்துப் பார்த்துக் கொஞ்சம் அலுத்துவிட்டது என்பதற்கு அப்பாற்பட்டு…
இந்த ‘நாம்.தமிழன்’ இளைஞன் யார் என்பதை அறிவேன். Read the rest of this entry »
matthew b. crawford: shop class as soulcraft
October 8, 2022
For the past 15 years or so, I have been reading & rereading this remarkable short document, as I relate to it in toto. Read the rest of this entry »



