எனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு…
April 30, 2015
எச்சரிக்கை: இப்பதிவில் – இணையத்திலிருந்து எடுத்த கேலிச்சித்திரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பொறுமையாகப் படிக்கவும்/பார்க்கவும்.
… நமதிந்தியாவில் – இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது. :-))) Read the rest of this entry »
தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு!
April 29, 2015
நம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(
அதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((
இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது
April 26, 2015
சில நாட்களாக, இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், அவர்களுடைய காலிஃபேட் ஒற்றைப்படை வெறிஇஸ்லாம் ப்ரேன்ட் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளிலெல்லாம், பிறப்புச் சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Read the rest of this entry »
கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள்
April 24, 2015
(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)
கடும் எச்சரிக்கை: வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(
கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?
அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.
… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும். நன்றி.
கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(
வரிக்கு வரி தவறாக, ஆனால் மாளா தன்னம்பிக்கையுடன், ஒரு வரலாற்றுத் துணுக்குக் கட்டுரையை எழுதி மினுக்குவது எப்படி?
April 22, 2015
(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!
… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?
இப்படித்தான். (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன் “அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)
இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள்
April 21, 2015

ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் – யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.
உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பவன் நான். எந்த ஒரு மோசமான விஷயத்திலும் நகைக்கத்தக்க சிலகூறுகள் இருக்கும் – ஆக பொதுவாகச் சிரித்துக்கொண்டு, பகடி செய்துகொண்டு போய்விடுவேன். நிதர்சன, நடைமுறை உண்மைகளை எதிர்கொள்வதற்காக (ஒப்புக்கொள்வதற்காக அல்ல!) எனக்காக நான் வகுத்துக்கொண்ட கவசம்தான் இது, இல்லையேல் சிலசமயங்களில் வாழ்க்கையின்மேல் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. மேலும் நான் உம்மணாமூஞ்சிக்காரனல்லன், எளிதில் புண்படவும் மாட்டேன். வாய்விட்டுச் சிரிப்பது மிகவும் பிடிக்கும்.
எனது செல்லமான பழம்பெரும் எழுத்தாளர், ஜெயகாந்தன் இறந்த செய்திகேட்ட அடுத்த கணம், அடுத்த கணமே, துள்ளிக்குதித்துக்கொண்டு வாயுவேகம் மனோவேகமாக ஜெயகாந்தனின் வீட்டையடைந்தது ஒரு சாகசச் செய்தி என்றால், அடுத்தவரியில் ‘கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை,’ என்ற முக்கியமான செய்தி உண்மையிலேயே திடுக்கிடவைப்பதுதான்!
அதாவது, ஒருவர் இறந்ததற்குப் பின் அவர் உயிருடன் இருக்கமாட்டார் எனும் திடுக்கிடும் உண்மையை – ஒரு பக்கா தமிழ் அலக்கிய எழுத்தாளனைத் தவிர வேறுஎவன், மிகச் சிறப்பாக அவதானிக்க முடியும், சொல்லுங்கள்?
Read the rest of this entry »
திராவிட முட்டைக்குழல் டுப்பாக்கி! அய்யய்யோ!!
April 16, 2015

அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் இங்கிருந்து) — (கவனிக்கவும் – மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் – பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)
ஆனால் – கடந்த பல தேர்தல்களினூடே தமிழகப் பொதுமக்களில் மிகப்பெரும்பாலோரும், வேறு வழியேயில்லாமல், மிக அற்பத்தனமாக, ஓட்டுக்கு-லஞ்சம்வாங்கிகளாகி விட்டதால் – ஆகவே அடிப்படையில் அயோக்கியர்களாகிவிட்டதனால் – அவர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்கு, கொஞ்சம் கூச்சமாக இருக்கலாம். (பார்க்க: தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள் (23/04/2014))
…ஆகவே, அவர்களுக்கு காரியார்த்தமாக இவை போன்றவற்றை நினைவுகூர முடியாவிட்டால், பாவம், உதவிக்குத் தான் என்னைப்போன்ற வேலையற்றவர்கள் இருக்கிறார்களே!
Read the rest of this entry »
அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!
என் செல்ல எஸ்.ராமகிருஷ்ணன், டெம்ப்லேட் கோவணம் – மற்றபடி சீமான், பம்ப்கின், மணிரத்னம், ரஹ்மான், கேபி சார்கள் கூட்டணி: சில சோகங்கள்
April 13, 2015
சரி.
இப்படி ஒரு கேள்வி: கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
இப்படி ஒரு எஸ்ராவிய பதில்: கோவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு கழுதையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த கழுதை , யாருடைய கழுதை, ஏன் இக்கழுதை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு கழுதையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையிலான தொடர்பு. கோவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.
மகாமகோ மாட்டுக்கறிச் சோழ மகாத்மியம்
April 12, 2015
(அல்லது) பேராசிரியர் மதிமாறனார், பிஹெச்டி (மாட்டுக்கறி) அவர்களின் ஆய்வறிக்கை: கற்காலச் சோழர்களின் மாட்டுக்கறி
… நம்முடைய சகமுட்டாள் தமிழர்களின் மாட்டுக்கறி உணர்வை, அவர்களுடைய சோம்பேறித் தனத்தையும், தங்களுடைய சொந்த மாட்டுக்கறியைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமையையும் நினைத்தால் கோபம்கோபமாக வருகிறது எனக்கு.
உங்களுக்கு? Read the rest of this entry »
ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா
April 10, 2015
அன்புள்ள வெறியர்களே,
அஸ் ஸலாம் அலைக்கும். வணக்கம்.
உங்கள் மின்னஞ்சல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி. அவைகள் கடாசப் பட்டு விட்டன. எப்படியும் எனக்கு இம்மாதிரி விஷயங்கள் பழக்கம்தான். சென்றவாரம் கூட இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. :-)
அய்யன்மீர்! நீங்கள் பொங்கி வழிந்துள்ளதால் – நான் எழுதியவைகளை, நீங்கள் படிக்கவேயில்லை என்பது தெரிகிறது.
(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)
முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)
-0-0-0-0-0-
… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.
“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
Read the rest of this entry »
கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2)
April 8, 2015
மனதே சரியில்லை.
சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.
இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில கர்ட் பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.
ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.
… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.
எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை. மலையளவு, பள்ளிசார் வருடமுடிவு மாளா வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக, இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?
நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்… Read the rest of this entry »
திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்
April 6, 2015
… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித் தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.
என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?
அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ? என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!! திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?
திராவிடப் பகுத்தறிவு Vs சாதா பகுத்தறிவு
April 3, 2015
இதுதாண்டா – திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (2/n)
சரி. இவ்வரிசையில் முதல் பாகம். கண்டிப்பாக அதனைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் இங்கு வந்தால், மேலே இப்பதிவையும் தலையை வெகுவேகமாகச் சொறிந்துகொண்டு ரத்தக்களறியுடன் படித்து, மேலதிகமாகப் புரியாமல் புளகாங்கிதம் அடையலாம். நன்றி.
திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)
April 2, 2015
எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.
இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)
பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்
திராவிடர் கழக மானமிகு வீரமணி அவர்களின் கருணையற்ற பொய்கள்
April 1, 2015
| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்: ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |
சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.
ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.
பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…