முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.

107 + 59 = 168!

அதாவது: 168 >> 117 !!

இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”

கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!

பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D  M  K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…

பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!

கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?

பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!

கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?

: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.

கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?

: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?

கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?

: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.

கே: இருந்தாலும்…

: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.

கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!

: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்…  ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!

கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!

: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்!  எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!

: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்…  எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.

கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள்  திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!

: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது…  நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?

கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?

: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.

கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?

: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…

கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?

: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…

எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்… 

(முதற்கண்: இந்த விஜய் வெற்றிபெற, அவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவென புரிந்துகொள்ளவே முடியாமல் உடல்பொருள்ஆவி++ அனைத்தையும் கொடுத்து உழைத்த, என்னுடைய அத்தனை முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்ல சங்கடமாகவே இருக்கிறது. ஆனால் சனியன்கள் ஒழிந்தன என்பதும் ஒருமாதிரி ஆசுவாசம் தருவதுதான்.)

(ஒன்றரைக்கண்: ஆனால் – இது எப்படிப் போகும் என்பது பிடிபடவில்லை… 

இருந்தாலும், அயோக்கிய கொள்ளைக்கும்பல் திராவிடக் கட்சிகள் குறைந்தபட்சம் டெம்பரவரியாகவாவது வீரியம் குறைந்தமை (இவை முழுவதுமாக அழித்தொழிக்கப் படவேண்டியவைதாம்!)  குறித்து மகிழ்ச்சியே!

அதே சமயம், இந்த நடிகர் கட்சிக்குப் பெரிதாக ஐடியாலஜி கட்சித் திட்டம் என்று இருக்கிறது போலவும் தெரியவில்லை. இஷ்டத்துக்கு ஈவேரா போன்றவர்களை ஆதர்சங்களாக உள்ளிழுப்பதும், மத்திய அரசோடு அவசியமேயில்லாமல் மல்லுக் கட்டுவதும் போன்ற விஷயங்கள் கலக்கம் தருபவை, பஞ்ச் டயலாக் இழவுகளும்தாம் – தற்போதைக்கு அவரைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப-ஊழல் வாதிகளும்அமைதி தரவில்லை…

ஆனால்…

இந்த மாற்றம், நெடு நாள் நோக்கில் தமிழகத்தை உண்மையாகவே முன்னேற்ற உதவுமானால் அதுவும் நல்லதே! வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?)

 இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(

…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்! 

* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.

(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை  6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)

…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?

Read the rest of this entry »

The problems of Hooch (illicit liquor) & IMFL related deaths & disabilities are ENTIRELY blamable on the scumbag #DravidianModel. Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது. Read the rest of this entry »

சில வாரங்கள் முன்னர், ஒரு இளம் இடதுசாரி இளைஞர் (தப்பிக்க முயன்றுகொண்டிருப்பவர்) மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, இந்த ஒத்திசைவிலிருந்து நிறைய(!) கற்றுக்கொண்டு(!!) விட்டதாகவும் அதற்குக் கைமாறாக ஏதாவது செய்தேயாக வேண்டிய விருப்பத்தையும் தெரிவித்தார். Read the rest of this entry »

(OR) Jihad Pogromming – a Secular, Liberal, Left & pseudocode Read the rest of this entry »

இந்தவரிசையின் முதல்பாகத்தைப் படித்துவிட்டு இதனைப் படிக்க முயன்றால் – நான் சொல்லவருவது புரிபடலாம். Read the rest of this entry »

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் விவரம் கீழே…

மோதி/பாஜக அரசின், நீதிபரிபாலன அமைப்பு/வர்க்கங்களுடனான அணுக்கமான நடவடிக்கைகளால், அதிகாரவர்க்கத்தை முடுக்கிவிடும் பாங்கினால், தொடர்ந்த மேற்பார்வையினால் – நிலுவை எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டு வருகிறது; இத்தனைக்கும் மோதிக்கு (அதாவது நல்லாட்சிக்கு) எதிராக அணி திரண்டுள்ள கொள்ளைக்கார கும்பல்களின், எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்துக்குப் போவோம் என்கிற அழிச்சாட்டியமும் நடந்து கொண்டிருக்கிறது…. அதே சமயம் – முன்னர் காங்கிரஸ்+திமுக மெத்தனக் கொள்ளை ஆட்சியில் – இந்த எண்ணிக்கை – தொடர்ந்து பலவருடங்களாக ஏறிக்கொண்டிருந்ததை கவனிக்கவும்.

போகவேண்டிய தூரம் அதிகம்தான் – இருந்தாலும் மோதி/பாஜக அரசில் இது ஒரு நல்ல தொடக்கம் இல்லையா? நிலுவை எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருக்கிறது இல்லையா?

-0-0-0-0-

நிலுவையில் இருக்கும் வழக்கு உட்பட விஷயங்களின் அட்டவணை கீழே. பாருங்கள், முந்தைய அரசின் ஆட்சிகாலத்தில் – 2014 வரை 60,000த்துக்கு மேற்பட்ட விஷயங்கள் நிலுவையில் இருந்தன. பாஜக ஆட்சியில் இது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருவதைப் பாருங்கள்… (இத்தனைக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அத்தனை இழுபறி… + ஊடகப் பேடிகளின் உசுப்பிவிடும் ஆகாத்தியம்…)

-0-0-0-0-

இன்னொன்று: அரசியல் சட்டம் குறித்த பெஞ்ச் அமர்வுகள் 2017 ஜூலைக்குப் பிறகு மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு – உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் ஒத்துழைத்துத் தரம்/சிக்கல் வாரியாகப் பிரிக்கப்பட்டுக் கையாளப் படுகின்றன. (இந்த அளவு வருவதற்கே கொஞ்சம் சிடுக்கல் – ஏனெனில் மத்திய அரசு நல்லெண்ணத்துடன், நிலுவை விஷயங்களைக் கூடிய சீக்கிரம் முடிக்கவேண்டும் என நினைத்தாலும், அதற்காகக் காத்திரமாக, சட்டதிட்டங்களுக்குட்பட்டு முயன்றாலும் – சிலபல நீதிபதிகளுக்குக் காமாலைக் கண். என்ன செய்ய!)

அதற்கு முன் பொத்தாம் பொதுவாக இந்த எண்ணிக்கைகள், புள்ளியியல் விவரங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

-0-0-0-0-0-

மோதி குஜராத்தில் இருந்தபோது – நீதிமன்றங்களின் வேலை நேரத்தை நீட்டித்தும், அதிக பெஞ்சுகளை உருவாக்கியும், நீதிமன்றங்களின் வேலை நாட்களை அதிகரித்தும், பிறவழிகளில் சட்டபூர்வமாக வழக்குகளை ஃபைஸல் செய்யவும் – பலப்பல முயற்சிகள் எடுத்தார். ஊழியர்களுக்கு, அதிகப்படி வேலைக்கான அதிகப்படி ஊதியமும், அலவன்ஸ்களும் கிடைக்க ஆவன செய்தார். இதன் விளைவாக குஜராத் மாநிலத்தில், நீதி பரிபாலனத்திலும் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது.

இன்னமும் சில முறை பாஜகவுக்கு மத்திய அரசமைக்க வாய்ப்புக் கிடைக்குமானால் – உச்ச நீதிமன்றத்துக்கும் அணுக்கமாக இருந்து, இந்த நிலுவை வழக்குகளைப் பலவிதங்களிலும் குறைக்க, நீதி பரிபாலன முறைமைகள் ஒப்புக்கொள்ளக்கூடிய நேர அளவில் செயல்பட, தேவையற்ற தாமதங்களில்லாமல் நம் மக்களுக்கு நீதி கிடைக்க, சிதம்பரம், கனிமொழி, ஸோனியா, ராஹுல் போன்ற பொறுக்கிகள் போர்க்கால ரீதியில், சட்ட-நீதிபரிபாலனரீதியாக உள்ளே தள்ளப்பட – ஆவன செய்யப்படும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

ஏனெனில் பாஜக-மோதியின் ட்ரேக் ரெக்கார்ட் அப்படி! சாதித்துவிட்டுத்தான், கொஞ்சமாகப் பேசுகிறார்.

ஆனால் – எதிரணியில் கஞ்சா அடித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து, உளறிக்கொட்டும் கூறுகெட்டக் குறுமதியாளர்கள்தாம் இருக்கிறார்கள்.

ஆகவே!

மோதி மீண்டும் வரவேண்டும்!

 

…குழந்தைகளுடன் கல்வி கற்றுக்கொள்ளும் பணி வழியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் தன்மையும், ஆன்மிக முதிர்ச்சியும், மனித நேயமும், பாரதத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பும் மிக்க, யேசுக்றிஸ்து (இவர் உண்மையில் வரலாற்றுரீதியான ஆசாமியல்லர், கச்சிதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கதம்ப பிம்பம் என்றாலுமேகூட) மலைப்பிரசங்கத்தை அடிநாதமாகக் கொண்ட க்றிஸ்தவ மதபோதகர்களால் நேர்மையாகவும் அடிப்படை மனிதப்பண்புடனும் நிர்வகிக்கப் படும் சிலபல ‘நல்ல’ பள்ளிகள் (Christian missionary schools) என நம் நாட்டில், தப்பித்தவறி எங்காவது இருக்கலாம். ஏனெனில் பாரதம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்புள்ள தேசம். Read the rest of this entry »

When the grand dame of filmi protests makes facile statements about secularism, women’s rights and lefts, it is important that certain other facets of her character are also brought out.

May grand ma’am Shabana Azmi be the mother of a THOUSAND protests!

Read the rest of this entry »

Let the DiY and EiY bug bite you. Read the rest of this entry »

The idea of TED talks was probably good, and I have enjoyed (…um, wasted?) many hours of my life with them. So, am under the justificational delusion that I actually learnt a few things and have gotten a few +ve pointers. Yeah. Read the rest of this entry »

கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!Read the rest of this entry »

உண்மையில், இவர் விடுதலை வீரமணி என்பதிலிருந்து படிப்படியாகத் தேய்ந்து திராவிடலை வீரமணியாகவே ஆகிவிட்டார்! மனிதர், தொடர்ந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டேயிருக்கிறார். Read the rest of this entry »

 கருத்துரிமை, பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா வாய்ப்பேச்சு. Read the rest of this entry »

இந்த பாபுலர் ஃப்ரண்ட் என்பது தடை செய்யப்பட்ட ஸிமி இஸ்லாமிய வெறியியக்கத்தின் மறு அவதாரம். Read the rest of this entry »

grrrr… Read the rest of this entry »