(அல்லது) திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (2/2)
இதன் முதல்பகுதி. இதனைப் படித்துவிட்டு வந்தால் இந்த இரண்டாம்பாகம் பிடிபடலாம்.
…இந்த திராவிடஊழல் பணம் பலவழிகளில், திராவிட அரசுகளால், அரசில் இல்லாத திராவிடர்களாலுமேகூட அமோகமாகப் பெறப் படுகிறது. இதனைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலகாரணங்களுக்காக இருக்கும் வகுப்பில் – தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும், ஏன், சில பன்னாட்டு நிறுவனங்களுமேகூட அடக்கம்.
சரி. இந்த ஊழல் பணம், யார் மூலம் எப்படி வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?
திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2)
May 23, 2015
முதலில், இலவசை இணைப்பு:
தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக் கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…
ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.
the impotence of being ARchiVist
May 15, 2015

… this kinda ARchiVist has only some random data taken from randomer archives – and then based on them – goes on to theorize a whole series of generalizations and half-baked, jaundiced hypotheses… and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)
tee hee. ha ha. hee haw. was reading a really wild oscar. and his importance of being earnest, in right earnest. so got carried away. apologies. but, this post is also a ‘trivial comedy for serious people,’ mind you…
அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள்
May 12, 2015
உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும் கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”) – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!
… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள் இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும் அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!
தீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்! (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்!)
ந்யூட்ரினோ: ஒரு பாவப்பட்ட அடிப்படைத் துகளின் கதறல் (+இலவச இணைப்பு: நடிப்புச் சுதேசிகள்)
May 11, 2015
எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)
சரி. :-( Read the rest of this entry »
எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.
போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!
உலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது, தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…
இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்)
May 5, 2015
பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!) ‘NRI’ தட்டச்சு குமாஸ்தா இந்திய ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும் கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!
இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற கடைகளில் மெகாடன்னளவு வாங்கும் சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ் இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!) தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »
இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…
இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள். இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.
இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.
வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.
இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »
So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!