ஹேஷ்டேக்வக்ரன் புராணம்
July 2, 2016
இவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத்.
‘இந்தப் பிரபஞ்சத்தில் முதலில் பிறந்தது #’ என்கின்றன இந்து மதங்கள். #ஓம் என்று ஓமோதிக்கின்றனர் ஸ்ரீலங்கா தமிழர்கள். நம் குறுத்தம்கெட்ட பாலக்காட்டுத் தமிழர்களும் அப்படியே! எரிசேரி அசலாயிருக்கும், பாத்துக்கோங்கோ! சக்கைப் பிரதமன்? இல்லை பாலக்காட்டாரே, மோதி தான் பிரதமன். வெறிதே இருக்கின் கேட்டேளா, கூட்டம் கூடண்டா… அய்யோ! சவட்டாதீர்கள்!! #ஓம்
‘உண்மையைத் தேடுவதைவிட முதலில் #ஐத் தேடுவதே முக்கியம்’ என்றார் புத்தர். இது என் ஹேஷ்யம் அல்ல. #முக்கிப்பெறும்முக்கியமுக்தி
‘# உபயோகிக்காமல் இருந்தால் அல்லாஹ் ட்விட்டரில்ஹ் உங்களைஹ் ப்ளாக்ஹ் செய்துஹ்விடுவார்ஹ்’ என்கிறது போற்றுதற்குரிய கொர்-ஆன்! #ஸல்
-0-0-0-0-0-0-0-0-
அந்தக் காலத்தில் #காப்பி இல்லை. ரஷ்ய # – ஒரு இலக்கிய சாட்சியமும் இல்லை. #சென்ஷியலிஸமும் ஒரு #பனியனுமில்லை. ##: சில குறிப்புகள் எழுதப்படவேயில்லை. ஒரு #ன் கதையின் பூர்வபாகமான @ம் இல்லை. அதற்குப் பின் வரப்போகும் $ம் இல்லை. ஏன், அதற்குக்கீழே Wவும் இல்லை. Eயும் இல்லை. ஏனெனில் பின்னது பறந்துபோய்விட்டது, பாவம். ஆகவே #ஈயடிச்சான்காப்பியும் முடியவில்லை.
ஏன், #புரமில்லை, #க்கையும் இல்லை. ஆனால் #எஸ்ரா இருந்தார், ஒரு #, தன் #க்கைப் பார்த்துக்கொண்டே மௌனமாகப் பேசிக்கொண்டிருக்கும் தருணத்துளிகளில் எத்தனை #களை நான் பார்த்திருப்பேன், எத்தனை நான்களை அந்த # பார்த்திருக்கும் என #டெம்ப்லேட்டில் #எழுதிக்கொண்டிருப்பார். #எஸ்ரா அவர்களுக்கு #ய உணர்ச்சி அதிகம். #இடக்கைவருங்கால்நகுக
#நிற்க.
-0-0-0-0-0-0-0-
#வக்கிரன் யார்?
(ஒரு மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட #வரலாறு)
மிஸ்டர வேதாந்தம் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட பேயோர்களில் ஒருவர் உத்தாலகர் என்றழைக்கப்பட்ட உட்டாலக்கடியார். இவருடைய ஒன்றுவிட்ட மாமா பையர்தான் தேவன். பின்னவருடைய சுபுத்திரன் துப்பறியும் சாம்பு. இந்த சாம்புதான் தேவர்களால் தங்கள் தலைமசுத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக உபயோகிக்கப்பட்டார் என்பது உபகதை. *கண்டிஷனர் அப்ளை.
இந்த உட்டாலக்கடியார் அவர்களின் தந்தையார், மஹாபாரதம் எழுதிய போற்றத்தக்க வேதவியாசரின் மகரான மகரிஷி சுகர்; இவர் எக்கச்சக்கமாக அடையார் ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் சாப்பிட்டு டயாபட்டீஸ் வந்து இறந்தவுடன், அவர் மகன் உட்டாலக்கடியார், பித்ருசோகத்தில் ஒரு சோககாவியத்தை (= ‘மஹாதிராவிடம்’) எழுதினார். லெமூரியாவில் நடப்பதாகப் புனையப்பட்ட இக்கதையின் மையக் கரு – அதாவது கருவழிப்பு, என்னவென்றால் – ஒரு மகாமகோ கடற்கோள் வந்து திராவிடத்தை மறுபடியும் ஒழித்தாலொழிய தமிழகத்துக்கு விமோசனமேயில்லை என்பதே! இன்றுவரை இந்த இதிஹாஸ்ய உண்மை சரியாகத்தான் இருக்கிறது! என்னே உட்டாலக்கடியாரின் எதிர்காலத்தைக் கணிக்கும் திறன்!!
…ஆனால், வருத்தம் தரும் விதத்தில் – உவேசாமினாத ஐயரும், ரோஜாமுத்தையா அவர்களும் உதிப்பதற்கு முன்னாலேயே இந்த மஹாதிராவிடப்பிரதிகள், பின்நவீனத்துவ கட்டுடைப்பு மறுவாசிப்பு செய்யப்படாமல் ஒழிந்துவிட்டன. பிரதி தன்னைத்தானே #எஸ்ரா போல எழுதிக்கொள்ளும் என அக்காலத் தமிழர்கள் இதையும் லூஸ்ல வுட்டுவிட்டார்கள், பாவிகள் என எழுதுவதற்குள்… இதற்கும் ஆரிய சதி, பார்ப்பன நச்சரவம், மனுநீதி, பகவத்கீதை இன்னபிற தான் காரணங்கள் என்பது சட்டென நினைவுக்கு வருகிறது… #வடவசதிஓழிக. #வடைவசதிவாழ்க, அதாவது #சாம்பார்சட்டினி கிடைத்தால்.
உட்கார.
சரி. மேற்படி உட்டாலக்கடியாருக்கு கந்தறகோளர் என்றொரு திராவிடச் சிஷ்யகோடி இருந்தார். பிற்காலங்களில், கயமை வாய்ந்த ஆரியர்கள் அவருடைய பெயரை – கஹோளர் என்று மாற்றினர் என்பதும் குறிப்பிடப்படவேண்டும். இவர் பக்தியுடன், மடமை மண்ணாங்கட்டியம் மட்டுப்பாடு போன்ற கள்யாண தீராவிட குணங்களும் உடையவர்.
அவரை – ஒரு திராவிடர் என்ற பின்புலத்தில் நீங்கள், தயவுசெய்து புரிந்துகொள்ளவேண்டும். மேலும் அவர், திராவிடக் கல்வித்தந்தைகளின் தத்துப் பையன் (அல்லது தத்துப்பித்துப் பையன்) என்பதையும், ஆகவே இருக்கும் சிறிதளவு மூளையும்கூட (ஊக்கபோனஸாகக் குஞ்சாமணியும்) மழுங்கடிக்கப்பட்டவர் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி உங்களால் செய்யமுடிந்தால் – அவருக்குக் கல்வி கற்கும் திறன் அறவே இல்லை என்பதைத் தாங்கள் தெரிந்து தெளியக்கூடும். கூட – கல்வியைக்கூட கலவி என்றுதான் அவரால், அதிகபட்சம் புரிந்துகொல்ல முடியும் என்பதையும். #நவீணதிராவிடச்சிசு
சரி. ஹ்ம்ம்ம்… கதையைத் தொடரலாம்…
…ஆனால் பரிதாபத்துக்குரிய அவரை, மற்ற சீடர்கள் பகடி செய்து பரிகசிப்பார்கள். ஆனால் உட்டாலக்கடியார் அவரிடம் அன்புடன் இருந்ததற்கு அப்பாற்பட்டு, சிறிது ஆணாதிக்க மனோபாவத்துடன், தனது மகள் சுஜாதையையும் திருமணம் செய்து கொடுத்தார். இந்த சுஜாதை வம்சாவளியினர் தான், தமிழில் இக்காலங்களில், மிகை துள்ளல் நடையில் எழுதிக் குவித்து – தமிழகத்தையே சூடானதார்ரோடில், சுள்ளென்று உறைக்கும் நடுப்பகலில் செருப்பில்லாமல் நடப்பவர்களைப் போலத் துள்ள வைத்துக்கொண்டிருக்கிறார்கள். #ததிங்கிணத்தோம்
இப்போது ஒரு உபகதை: அந்தக் காலத்தில் ராஷஸபுத்திரர்கள் இருந்தார்கள். தேவமைந்தர்களும் இருந்தார்கள். இரு வகையினருமே லைக் டோட்டல்லி ஹோப்லெஸ். ஆனால் இவர்களுடைய இனங்கள் காலத்தின் கோலத்தில் கலந்து ஒருமாதிரி சூபர் இரண்டுங்கெட்டான் இனம் உருவானது. அந்த இனத்தின் தற்கால மெச்சையா (மெஸ்ஸையா என்பதை திராவிடத்தனமாக எளுதியிறுக்கிரேண்!) தான் மனுஷ்யபுத்திரன் – பல மெச்சையாக்களைப் போலவே இவரும் தன் சிலுவையைத் தானே சுமந்துகொண்டிருக்கிறார். மீட்பராகிய அவர் நம் பாவங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர் சுமக்கும் சிலுவை, கவிஞர் எனும் பிம்பம். அந்தோ பாவம். #இன்னொருயேஸ்ஸூ.
இந்த மெச்சையா, சுஜாதா புத்தகங்களை மெச்சிப் பதிப்பித்து, சுஜாதா விருதுகளையும் விருதாக்களுக்கு மெச்சி மெச்சி வழங்கிக்கொண்டிருக்கிறார். என்ன சொல்லவருகிறேன் என்றால் – வேதகாலத்திலிருந்தே துள்ளல் என்பது இருந்துகொண்டிருக்கிறதுதான். #மொக்கைய்யாக்கள்
சரி. ஹ்ம்ம்ம்… மறுபடியும் மையக் கதையைத் தொடரலாம்…
… உரிய காலாகாலத்தில், அம்மணி சுஜாதை கருவுற்றார், திராவிடக் கந்தறகோளரின் அரிய செயல்களில், மகாமகோ சமூகப் பங்களிப்புகளில் இதுவும் ஒன்று என்பதை நான் சொல்லத்தான் வேண்டுமோ? #அந்தோபரிதாபம்
சுஜாதையின் கருப்பையில் வளர்ந்துகொண்டிருந்த குழந்தை கருவிலிருக்கும்போதே கருவிக்கொண்டு திராவிடத்தைத் துப்புரவாக அறிந்தது. #பாவம்
ஏனெனில் அந்தக் காலத்திலேயே டெலி-கம்யூட் செய்தவர் நம் ககோளர் – ஆம், இதிலும் திராவிடம் தான் உலகத்துக்கே வழிகாட்டியது! அதாவது, வூட்டுக்குள்ளார உட்கார்ந்துகொண்டிருந்தே ககோளர் – தமிள்மொளிசெம்முளி ஆராய்ச்சிக் காலட்சேபம் செய்து கொண்டிருந்தார். மாதாமாதம் அரசுசம்பளம் – பாண்டிய அரசர்களால், அவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுவந்தது. ஆம்! அப்போதே, இணையச் சேவைகளும் பிரசித்தமாக இருந்தன! என்னே லெமூரியத் தொழில் நுட்பம்!! #திராவிடண்டா!
சரி…#சரிடா
…ஆக, அமோகமாக, ககோளனார் தப்பும் தவறுமாக ‘நேர் நேர் புளிமா, நேர் நிறை கூவாகம்’ எனட் டொல்காப்பிய அலக்கணத்தை நெட்டுரு செய்ததைப் பொறுக்க மாட்டாமலும், அவர் அதிபெண்ணியக் கவிதைகளைத் தொடர்ந்து உரக்கப் படித்துவந்தாலும் (#யோனி #முலை #கருப்பை #ரத்தப்பெருக்கு வகையறா), ஸ்ட்ரக்சுரலிஸ்ம் / எஞ்சினீயரிங்கிஸ்ம் / ப்ரீ-ட்ரெடிஷனிஸ்ம் போன்ற அதிறனாய்வு அவகைகளை அசைபோட்டு வந்ததாலும், ‘கனிமொழியும் காக்கைபாடினியாரும்’ போன்ற அரிய ஆராய்ச்சிகளைச் செய்து வந்ததாலும் — இவையெல்லாவற்றையும் வேறுகதியேயில்லாமல் அவதானித்துக்கொண்டிருந்ததாலும் – அக்குழந்தை கருவிலேயே பாவம், ஏகோபித்து எட்டு கோணல் அடைந்து, திராவிடத்தனமாகப் பிறந்தது. #முற்றும்கோணல்திராவிடக்கோணல்
ஆகவே அது பிறந்தபின் அதற்கு ஒரு காரணப் பெயராக எட்டாநக்கீரன் என ஒரு பெயரை வைத்தார்கள், சுஜாதையும் ககோளனாரும். அவர்களும் ‘திருவிளையாடல்’ பார்த்திருக்கவேண்டும். #அதருமி
…ஆனால், வருத்தத்துக்குரிய விதத்தில் அக்குழந்தையின் பெயரும் ஆரியர்களால் பின்னாளில் திரிக்கப்பட்டு ‘அஷ்டா வக்கிரன்’ என்றாக்கப்பட்டது. என்ன கொடுமை ஐயா, இது! :-( ஆரியமே வக்கிரம்தான், என் செய்வது சொல்லுங்கள்… ஆனால் ஆரிய #பூரியம்வாழ்க! #கூடவேகெளங்கும்
ஆனால் அக்குழந்தை மிகுந்த புத்திசாலியாகவும் தைரியசாலியாகவும், பலப்பல கல்யாண#குணங்களுடன் வளர்ந்தது. இதற்கு ஒரு காரணம், அதன் பெயர் பிற்காலங்களில் ஆரியப்படுத்தப்படும் என முன்னரே தெரிந்ததால் ஏற்பட்ட மனவெழுச்சியாகத்தான் இருக்கவேண்டும். மேலும் இணையம் பற்றி அது முன்னரே ஞானதிருஷ்டியால் அறிந்திருக்கவும் வேண்டும்.
அது வாய்திறந்து ஜொள்ளொழுகாமல் முதலில் சொன்னசொல் அம்மா அல்ல – அது: #
அது முதலில், நெல்லில் எழுதிய குறியீடு: #
அதன் முதல் வை-ஃபி பாஸ்வேர்ட்: #வெல்கம்123
தன் ஸெல்ஃபோன் பணஇருப்பைத் தெரிந்துகொள்ள அது உபயோகித்தது: #123*
… இப்படித்தான் நாளொரு மேனியாவும் பொழுதொரு #ஹேஷ்டேக்குமாக வளர்ந்த அது — அம்மாட்விட்டரில் ட்விட்டி, அம்மாஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டு, பின்னர் திமுக சலுகைகள் கிடைத்ததால் உடன்இறப்பாக மாறி ஏகோபித்து வளர்ந்து ஒரு அதிதிராவிடக்குஞ்சாமணியாக மாறியது. #ஏமாந்தால்கோமணத்தையும்உருவுவோம்
அது – இணையத்தில் தட்டச்சுப் போராளியாகவும், மற்றபடி ஒரு வெட்டி ஊடகப்பேடி குமாஸ்தாவாகவும், பகுதிநேரப் புரட்சிக்காரனாகவும் மையம் கொண்டது. வம்புச் சர்ச்சைகளில் ஈடுபட்டது. தமிழ்த் திரைப்படவிமர்சனம் எழுதியது. க்ரியாவின் தற்காலத் தமிழகராதியைக் காப்பியடித்து புதுக்கவிதைகளை எழுதியது. மயிர்மை பதிப்பகமும், இக்கவிதைகளையெல்லாம் தொகுத்து ஒரு தொகுப்பை – ‘#கவிதைகள்’ என வெளியிட்டது. அதற்கு அடுத்தவருடம் அதற்கு சுஜாதா விருதும் கிடைத்தது. மகிழ்ச்சி. கதையும் முடிந்தது. ஆனால் கத்திரிக்காய் காய்க்கவில்லை. ஏனெனில் அது காத்திருக்காய். #மன்னிக்கவும்
…தேவர்கள், பூமாரி பொழிந்தனர். அசுரர்கள், சுரம் வந்த இளையராஜா குரலில் காக்காய்க்கத்தல் சுரம் பாடினர். ரெண்டுங்கெட்டான் மனுஷ்யபுத்திரன்கள் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டனர். #ஹிந்துத்துவாஒழிக #திராவிடத்துவாவாழ்க
ஆக, வானம் பொத்துக்கொண்டு ஒர்ரே # மழை. சென்னையில் # வெள்ளம். எல்லா திராவிட சாக்கடைகளிலும் ஒர்ர்ர்ரே இந்த கொக்கறாமொக்கறா #அடைப்பு. அரசு #யந்திரம் தத்தளித்தது. ஆக, தன்னார்வக் குழுக்கள் முனைந்து இந்த # மண்டைகளில் அடித்துத் திருத்தி அவற்றை @என மாற்றின, இந்த @கள் உருண்டோடிச் சாக்கடைகளில் ஐக்கியமாகின. ஆனால் – உலகமே இந்த ஜந்துக்களின் ‘தன்னார்வ உழைப்பு’ ஸெல்ஃபிக்களால் அல்லாடியது. #நாங்கதாண்டாசேவைசெய்யறோம் #ங்கொம்மாள
…இண்டெர்னெட்டுக்கு மூச்சு மூட்டியது. அதன் முதுகெலும்பு #பேக்போன் உடைந்தது! ஆக, #தொல்லைக்காட்சிச் சேனல்களுக்கு மேலதிக #அவல். ஆனால், திடீரென்று #கள் வேண்டுமளவில் கிடைக்காத அவலம், சமூக வலைத்தளங்களைப் அவலாகப் பாதித்தது. கூத்தாடி சேன்னல்களுக்கு இன்னமும் இதில் பப்பரப்பா ஆவல், குஷி. # @ என லூப்பில் எல்லாவற்றையும் ஓட்டிக்கொண்டன. #~@^%&*!
இசுடாலிருக்கு ஒரே சந்தர்ப்பவாதக் கோபம். @அறிக்கை விட்டார்: இந்த அம்மையார் அரசால், கேவலம் #க்கினைக்கூடக் கொடுக்கமுடியாதா? நமக்குநாமே இயக்கத்தின் இரண்டாம் எடிஷன் தேவை: நமக்கு# நடைபயணத்தைப் புத்தம்புதிதாக, புதுயுகச்சிற்பியாக, ஆரம்பிக்கப் போகிறேன்! எங்கேடா நம்மோட குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்? #இளைஞ்ஜரணித்தலைவத்தாத்தா
கருணாநிதி சொன்னார்: ஆரிய, வடவ சதியால்தான் @ வந்திருக்கிறது. இதனை ஒழித்து அடித்து விரட்டுவோம். ஓங்கி உருட்டுவோம். # காப்போம், வெற்றி#, வீர#. #நாற்காலிஎனக்குமட்டும்தான் #சாகும்வரைஉண்ணும்விரதம்
இணையதள திராவிடக்குஞ்சாமணீயப் போராளிகள் கொந்தளிப்பு. அதகளம். அறிக்கைப் புழுக்கைகளால் நிரவப்படுகிறது தமிழகம். #புழுக்கையொலி
புரட்சித்தலைவி அம்மா: ‘இந்தக் கருணாநிதி, கச்சத்தீவு முழுவதையும் மீனவர்களுக்கு வலைகளைக் காயவைக்கக் கூட இடம் தராமல், #களால் ரொப்பி, இலங்கைக்குத் தாரைவார்த்தார் 1971ல். இதனை அவருக்கும் அவருடைய மகனும், தாத்தாவும் இளைஞரணித்தலைவருமான ஸ்டாலினுக்கும் தெளிவு படுத்துகிறேன்! ஆதாரம் சட்டமன்ற ஆவணங்களில் இதோ!! இதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்!!!’
இணையதள திராவிடக்குஞ்சாமணீய போராளிகள்: காலவழுவமைதி.
புரட்சித்தலைவி அம்மா பின்னர் அறிவிக்கிறார்: நாளை தொடங்குகிறோம் ‘அம்மா# மையம்’ – முற்றிலும் இலவசம், வேண்டுமளவு #களை யார்வேண்டுமானாலும் அள்ளிக்கொண்டுபோகலாம்… #நம்பதிராவிடபிச்சைக்காரப்பாரம்பரியம்டா
<ஆ! திடுக்கிட்டு முழித்துக்கொண்டேன்! எப்படியும் இந்தப் பதிவெழவை முடிக்கவேண்டுமல்லவா, சொல்லுங்கள்?>
நன்றி. வணக்கம்.
-0-0-0-0-0-0-0-
பிரச்சினையென்னவென்றால் – நேற்று (ஹிந்தி வழி) ட்விட்டர் போராளி ஒருவர் மும்பய் விமான நிலையத்தில் என்னுடன் ஏகோபித்துப் பேத்திக்கொண்டிருந்தார். எப்படி சமூகவலைத்தளங்களால் மட்டுமே (கவனிக்கவும்: #மட்டுமே!) #சமூகப்புரட்சிகள் எதிர்காலங்களில் சாத்தியமாகும் என்றெல்லாம்.
நான் வாயைப் பிளந்து அவர் வாய்க்குள் #ஈ சென்று அவர் காதுவழியாக வெளிவந்ததைப் பார்த்து அதிசயப் பட்டுக்கொண்டிருந்தேன். ஏனெனில் வேலயோதிவேலைகளுக்கிடையில் பயணம் தாமதிக்கும் தருணங்களில், திருத்தவேமுடியாத #சுயமோகியான எனக்குக் கூடச் சிலசமயங்களில் வெளியிலிருந்து எழும் அபத்தக் களஞ்சியங்களில் ஈடுபாடு வந்து விடுகிறது. #ஹேஷ்டேக்வக்ரன்கள்
போராளிப் பேச்சுப்புரட்சிவாதிக்கு, சாதாரணமாகப் பேசும்போது கூட, # உபயோகிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரைப் பொறுத்தவரை #இவ்வண்டமே #போராளித்தன, #கிண்டல்தன ##களால் நிரப்பப்பட்டது போலத்தான் பட்டது. #ஹேஷ்டேக்வக்ரன்கள்
நம் தமிழர்களும் ட்விட்டர் போன்ற எழவுகளில் அமோகமாகக் கருத்துதிர்ப்பதை, நான் ஓரளவுக்குத் தெரிந்துகொண்டிருந்தாலும் – இம்மாதிரி ட்விட்டரில் விட்டே மேதையாகிறார்கள் பலர், என்பதைப் பிரத்தியட்சமாக நேற்றுதான் உணர்ந்துகொண்டேன். இந்தப் புரட்சியாளர் 300ச்சொச்சம் ஆட்களின் அடிவருடி. 40000ச்சொச்சம் சோம்பேறி முட்டாக்கூவான்கள் இவருடைய அடிவருடிகள். மொத்தம் 130, 000த்திச் சொச்சம் ட்வீட்களை விட்டிருக்கிறார், கடந்த மூன்றே ஆண்டுகளில். ஆச்சரியமாக இருந்தது அவர் பெருமையடித்துக்கொள்வதைப் பார்க்க… #குசு
#ஆஹாவென்று #எழுந்தது #பார் #புரட்சி #என #முண்டாசுக் #கவிஞ்சன் #அன்றே #பாடினான் #அல்லவா? #ஹேஷ்டேக்வக்ரன்கள்
-0-0-0-0-0-0-0-
இந்த ஹேஷ்டேக்வக்கிரன் புராணத்தைப் படித்தவர் அனைவரும் இந்தச் சுட்டியைத் தலா 108 பேருக்கு டேக் செய்து, ட்வீட் அல்லது ரீட்வீட் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் உங்களுக்கு சகலசௌபாக்கியங்களும் வந்து சேரும். உங்கள் அடிவருடிகள் ஒருவாரத்தில் இரட்டிப்பாவர். உங்கள் ட்வீட்டுகள் அனைத்தும் ஆயிரம்பேரால் ரீட்வீட் செய்யப்படும். #திராவிடப்பகுத்தறிவு
எக்காரணத்தாலோ நீங்கள் இப்படி ரீட்வீட் செய்யவில்லையென்றால், ங்கோத்தா — மதச்சார்பின்மையுடன், ஸெக்யூலர்தனமாக கல்கட்டாகாளி + f/o யேஸ்ஸு + அல்லாஹ் கொள்கைக்கூட்டணி வைத்து ராத்திரி கனவில் வந்து உங்கள் மண்டையோட்டை உடைத்துக் குதித்தெழுந்து, உங்கள் கழுத்தைச் சீவி விடுவார்கள் சீவி. #ஜாக்கிரதை