DANGER! N0H0P3 idiot flu virus pandemic
July 30, 2015
[ This post is an old one, a version of which was written may be 6/7 years back or so. It is provided here purely for ‘educational’ purposes. ;-) ]
…Are you afraid that you are going to be one of those people who may die because of this A(H1N1) swine flu virus?
If you indeed do, probably you deserve to die ASAP one way or the other, anyway… Good riddance too.
This is because, you did not bother to check the facts.
You did not bother to read, digest, reflect on what’s happening. Read the rest of this entry »
அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும்
July 29, 2015
பயப்படாதீர்கள்.
(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)
ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரமணி அமெரிக்க ஸ்பெஷல் படையினரால் கைது செய்யப்பட்டார்!! :-( இதனைக் கேட்பாரில்லையா!
July 24, 2015
பகீர் செய்தி!
சென்னை, 23 ஜூலை, 2015: முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.
மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »
மொஹி பஹாஉத்-தீன் டாகர்: ருத்ரவீணையில் த்ருபத்
July 22, 2015
சிலநாட்கள் முன்பு இந்த மெஹ்ஃபில்லுக்குச் சென்றிருந்தேன்; பள்ளியில், மரங்கள் சூழ்ந்த கும்மிருட்டுச் சூழலில், ஒரு பெரிய ஒலைக்குடிலில், சில இசை ஆர்வலர்களுக்கென நடத்தப்பட்ட நிகழ்ச்சி. நிறைய பள்ளிக் குழந்தைகளும் இருந்தார்கள்.
த்ருபத் வகை இசையை ரசிப்பதற்கு ஒரு உல்லாசம், சாவகாசம் வேண்டும். கடிகாரத்தைப் பார்க்காமல் இருக்கவேண்டும். மெல்ல மெல்ல மேலெழும்பும் இசை இது. அவசரகதியில் அள்ளித்தெளிக்கும் படாடோப இசை வல்லமை இதில் இல்லை. ஆனால் நுணுக்கங்கள்? ஆஹா தான்!
Read the rest of this entry »
‘விடுதலை’ வீரமணி இப்படிப்பட்ட சிரிப்போதிசிரிப்பு முட்டாள் தனத்தையும் செய்வாரா? ஆச்சரியம்தான்!
July 21, 2015
திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…
திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.
திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
July 20, 2015
(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்
…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது; இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்
July 19, 2015
மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.
Read the rest of this entry »
கடந்த சிலவருடங்களாகவே ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் அமைப்பு – உலகளாவிய பார்வையுடன் சமூகச் சிடுக்கல்கள், கொடும்தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதன் பாவப்பட்ட மனிதத் திரள்களுக்காக களப்பணி ஆற்றி வருகிறது. ஆனால், இதனைப் பற்றி அது தம்பட்டமோ, போஸ்டரோ அடிப்பதில்லை. பெரும் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமேகொண்டு அவ்வமைப்பினரும் அவர்கள் தலைவரும், படாடோபமில்லாமல், வீண்விளம்பரமில்லாமல் பணி செய்து வருகின்றனர்.
ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)
July 15, 2015
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.files.wordpress.com/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(
நலம். நலமறிய அவல், வெறும் வாய்க்கு! (அதுவும் சுமார் 1500 வார்த்தைகளில்!)
எஸ்ராமகிருஷ்ணம், ராமானுஜம், மனுஷ்யபுத்திரம், கணிதம், கவிதம், புல்லரிப்பம், புளகாங்கிதம்… … (2/2)
July 7, 2015
என்னுடைய மகாமகோ செல்லங்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளின்மீது எனக்கிருக்கும் மாளாக்காதலினாலும் பிரமிப்பினாலும் — இந்த இரண்டாம் பாகமும், கிட்டத்தட்ட 1300 வார்த்தைகளுக்கு மேல் நீண்டு விட்டதே! (எல்லாப் புகழும் எஸ்ராவலுக்கே, வேறென்ன சொல்ல!)
இதன் முதல் பகுதியை மண்டையில் அடித்துக்கொண்டு படித்துவிட்டுப் பின்னர் இதற்கு வந்தால், கொஞ்சம் குறைவாகக் குழம்பலாம். எச்சரிக்கை செய்து விட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்…
Read the rest of this entry »
சங்கல்பம்: தகத்தகாய பரதேசி – வெள்ளைப்பன்றி காலத்தே – விவஸ்தையில்லா நேரத்தே – அஷ்டாவக்கிரப் பார்வையிலே – கலியுகத்திலே – முக்கியமான முழுமுதலான பாடையிலே – வறட்டுக் கண்டே, ஜம்புவின் ஜெய்ஷங்கரே, பரட்டை ரஜினியே, வர்க்கிங்டே மன்டே, மேரூ டாக்ஸியே, தக்ஷிண் ஹோட்டலே, பார்ஸ்ன் காம்ப்ளெக்ஸே, அஜித்விஜய் ஆரியமாஸே – நெடுங்குருவிப் பட்சியே – சுக்குல இஞ்சியே, தேசாந்திரியே, துணையெழுத்தே, சஞ்சாரியே, நெடுந்துக்கமே… கொடுங்கனவே, மீளாத் துயிலே, கொரட்டையே … …
(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேரடி ஏகோபித்த மொழிபெயர்ப்பில் – சங்கல்ப மந்திரம். எப்படி இருக்கிறது?)
Read the rest of this entry »
(அல்லது) நார்ஸிஸஸ்ஸை நார் நாராகக் கிழித்து தினகரனில் தொங்கவிடுவது எப்படி?
இப்படித்தான்!
மதிமாறன் அவர்கள், தன்னுடைய மாளா உழைப்பால், சொந்த முயற்சியால் – ஒரிஜினல் அக்மார்க் வெறுப்பிய அபத்தக் களஞ்சியங்களைத் தொடர்ந்து மானாவாரியாக எழுதக் கூடியவர் என்றால், பராக்கிரமம் மிக்க மானமிகு யுவகிருஷ்ணா அவர்கள், அப்படியெல்லாம் மெனக்கிடாமல் – முழுமுதல் அபத்தங்களை இரக்கமேயில்லாமல் சுளுவாக அட்டைக் காப்பியடித்து மட்டுமே அபத்பாந்தவனாக தரிசனம் தந்து மினுக்கிக்கொண்டு அலைபவர்.
இருவருக்கும் விமோசனம் இல்லை, சரி. ஆனால், அவ்வப்போது நகைச்சுவைத் தேவைகளுக்காக இவர்களைப் படித்து, இவர்களின் எழுத்துச்சிந்தனைகளின் ஆழத்தையும் வீச்சத்தையும் கண்டு ஆச்சரியப்படும் எனக்கும் அதே அதோகதிதான், வேறென்ன சொல்ல! (என்னை யார் இந்த எழவுகளையெல்லாம் படிக்கச் சொல்கிறார்கள் என்பது நல்லொதொரு கேள்விதான். ஆனால், பத்ரிசேஷாத்ரியின் வலைத்தளம், அடியேன் உட்பட கண்ட கழுதைகளின் காட்டுரைகளின் சுட்டிகளையும் ஆட்கொண்டு இருப்பதுதான் பிரச்சினையே! ஆ! இதிலும் ஆரிய – பார்ப்பன – வடவ – அமெரிக்க – இஸ்ரேலிய – ஹிந்துத்துவ – பன்னாட்டு நிறுவன – உலகமயமாக்கல் சதி இருக்கிறதோ?)
இதுதாண்டா அரைகுறை (=திராவிட) தமிழ் இளைஞம்! :-(
ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-(
July 2, 2015
நேற்றைய பதிவில் (பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை) கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.
/* ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? */
இதில் கருணாநிதி என்பது எம்ஜிஆர் என இருந்திருக்கவேண்டும். என் தவறு. ஆச்சரியம் என்னவென்றால், ஒருவரும் இதுவரை இதைச் சுட்டிக் காட்டவில்லை! ‘கருணாநிதி எதிர்ப்பென்றால், கண்ணை மூடிக்கொண்டு எந்த எழவை வேண்டுமானாலும் படிப்போம்!’ என்றிருப்பவர்கள் மட்டுமே ஒத்திசைவுக்கு வருகை தருகிறார்களா என்ன? ;-) ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நம் தலைவரின் நம்பகத் தன்மை என்பது அப்படிப்பட்ட பராக்கிரமம் வாய்ந்தது, வேறென்ன சொல்ல!
பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை
July 1, 2015
- கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன? 30/06/2015*
- அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015*
- அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று… 20/06/2015*
- மாறன்கள், மாறவே மாட்டான்கள்! 24/01/2015
- உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்… 11/04/2011