இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்)  – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.

… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’  பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில்  ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’  மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை. Read the rest of this entry »

எனக்கு அமெரிக்காவில் வசிக்க ஒத்துவராது + பொதுவாக அமெரிக்க என்ஆர்ஐ ஜந்துக்கள் ஒத்துவரமாட்டார்கள்  (எனக்கு மகாமகோ துக்கம் கொடுக்கக்கூடிய வகையில் என் உறவினர்களில் பலர் இந்த ஜாதிதான்; கல்லூரியில் என் வகுப்பில் கூடப் படித்தவர்கள் அனைவரும் (மொத்தம் 17ல் 16 பேர்) இப்போது அமெரிக்கக் குடிமக்கள் – இது ஒருவிதத்தில் நிம்மதிதரும் விஷயம்தான்; ஆனாலும், அதிசயிக்கக்கூடிய வகையில் எனக்கு இன்னமும் பல அமெரிக்க என்ஆர்ஐ நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்? இவர்களுக்கும் மனப்பிறழ்வோ??) என்றாலும்…
Read the rest of this entry »

(or) நாமிருக்கும் நாடு, நமதென்பதறிந்தோம்! (1600 words, sorry)

Preamble:

The School that I am currently working with, is in an area of Tamilnadu, which is known to be a very violent place for the past so many decades – so much so that, even the police personnel and revenue department staff would like to avoid this tension filled and bottomless despair invoking milieu.

So.

There was way too much of violent and disrespectful behavior by the children (primarily stemming from abominable & pathetic parentage and the vitiated socio-political atmosphere) of the School, with which I was involved rather closely from the fag end of 2010.

Read the rest of this entry »

அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்... ('த ஹிந்து' தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

… … ஆ! மேற்கண்ட ஹிண்டூ கிண்டிய செய்திகளைப் படித்துவிட்டு, ஒரு நிமிடம் இதைத்தான் – திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு ஊழலைப் பற்றித்தான் – சொல்லவருகிறார், திடீரென்று நிதானம் தவறி, நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என நினைத்து ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்தேன்.

தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…

Read the rest of this entry »

என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று –  என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும்   இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

Read the rest of this entry »

…ஆனால் பாவம், ஸ்டாலின் (மன்னிக்கவும், மரியாதை கொடுக்க மறந்துவிட்டேன். நான் குறிப்பிடுவது இசுடாலிர் அவர்களை!)  காத்துக்கொண்டிருக்கிறார் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு… கூடிய விரைவில் தானே கட்சித் தலைவராகிவிடலாமென்று… :-)

ஆனால், குறைந்தபட்சம் இன்னமும் 8 வருடங்கள் போல இசுடாலிர் காத்திருக்கவேண்டும்தான். ஏனெனில், இன்றுதான் தெரிந்துகொண்டேன் – கருணாநிதி அவர்கள் 100 வருடம் வரை வாழ விரும்புகிறார் என்று. வாழ்க களவுடன்வளமுடன்…

Read the rest of this entry »

ஏனெனில் நானே ஒரு ‘விடுதலை’ வீரமணிதான்! :-)

எச்சரிக்கை: இது ஒரு 1500 வார்த்தை பதிவு. பொறுமையாகப் படிக்கவும். இல்லையேல் ஓடவும். ஒரு சுக்குப் பிரச்சினையுமில்லை. எப்படியும் அடுத்த இணைய பப்பரப்பா அலை வந்துகொண்டேதானே இருக்கும்? ஆகவே, கவலைவேண்டேல். இந்த அலைகளின்மீது தொடர்ந்து சவாரி செய்துகொண்டே இடைவிடாத சமூகவலைத்தள இறும்பூதடையலாம். சரியா? ;-)

சரி. செம்மரத் திருடர்கள், மன்னிக்கவும்  ‘செம்மரப் போராளி அகற்றாளர்கள்’ – அவர்கள் கூலித் தொழிலாளர்களேயானாலும், சுடப்பட்ட படங்கள் பரிதாபமாகக் காட்சியளித்தாலும் – அவர்கள் படுஉத்தமர்களோ அல்லது பால்மணம் மாறாத அப்பாவிகளோ அல்லர் – ஆகவே, அவர்கள் அநியாயமாகச் சுட்டுத் தள்ளப் பட்டுவிட்டனர் என நான் கருதவில்லை.  மாறாக, அவர்கள் பலபிறவிதங்களில் மகாமகோ கயவர்கள்தான் என்பதை, சில குறிப்புகளுடன் கோடிட்டுக் காட்டுவதுதான் என் நோக்கம்.(+மேலும் – அரசு பக்க உண்மைகளும், பிற பின்புலச் செய்திகளும் வெளிவரவேண்டும் – ஆனால் இவை இதுவரை (நான் அறிந்தவரையில்)  வெளிவரவில்லை என்ற காரணத்தாலும்)

Read the rest of this entry »