Yes.

Tamilnadu assembly election 2026 that happened yesterday (23 April 2026), is/was itself an Exit Poll. Period.

Exit of DMK+ assorted, despicable scum, from the scene in TN — that is.

#D1’s electoral end and the beginning of its demise, I mean – of course along with its shamelessly indentured slaves.

…and then, the scum Dravidian1 group breaking up into insignificant pieces of rubble & dust.

One wishes so. One fervently hopes so.

I am willing to tonsure my head again at the feet of the Lord Skanda of Pazhani, if it happens; call me an irrational and sentimental fool, thanks anyway!

Doesn’t matter if some charismatic joker’s wild fanfluff (#D3) ignoramuses – OR a bunch of the other undesirables (#D2) get to wield power for the next term.

That #D2 should eventually follow its predecessor is another wish. Again #D3 to follow the graveyard-march schedule to which all Ds should be ultimately destined for… and that the massively irrelevant commies & the rabid jati-parties would close their decrepit shops & move on…

Am sanguine… or perhaps, am suffering from some virulent senile non compos mentis.

And, ah – yes the final fervent plea to my Isvara … is that, post the incineration of the anti-Hindu, anti-Bharat & spectacularly corrupt D ideology – the real worthies that would tangibly remain in the subsequent rounds of elections in my dear Tamilnadu, be BJP & NTK – them being opposite polls/poles along certain axes.

And, oh – the hope, the dream…

🕉️🧘🏽

ஐயய்யோ! வோட்டு போடவும் என ஒருமாதிரி திராவிடலை ஆர்வத்துடன் சொல்ல வந்து, தடுக்கி விழுந்து, ஆக, வோட்டின் கால் இசகுபிசகாக உடைந்து வேட்டாகிவிட்டதே!

டூ லேட். எது எப்படியோ. ஆக, பெட்டர் வேட் தன் நெவர்.

ஆக, வாக்காலப் பெறுமக்கலே! ஆக, எங்களோட வறலாரு காணாத சாதனேங்கள மெச்சி மற்க்காம, ஆக, செந்தாம செதறாம உதய்சொறியனுக்கு வேட்டளிப்பீர்!

ஆக, நண்றி.

இவண்:

முட்டுவேல் க. ஸ்.

நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை  2-3 மணிக்குத் திரும்பவருகயென…

…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….

துரந்தர் என்றால் என்ன?

கோலாஹல ஸ்ரீநிவாஸ்

“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்)  தாக்குகிறான்.

ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.

நான் சிறுவயதிலேயே என்னுடைய  அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”

சீமான்

“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!

…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”

டெல்லி ராஜகோபாலன்

“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!

இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”

மூத்த பத்திரிகையாளர் மணி

“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.

ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”

ரவீந்திரன் துரைசாமி

“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.

…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”

ரங்கராஜ் பாண்டே

“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…

ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”

பாரிசாலன்

“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…

ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான்.   துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்;  +  ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”

ஜெயமோகன்

“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம்  சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.

…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது.  அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன்.  ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”

பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா

“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.

நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”

 (சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)

அண்ணாமலை

“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும்.  நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.

ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”

பத்ரி சேஷாத்ரி

“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..

நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”


என்னது? ஆனானப் பட்ட ‘கிழக்கு பதிப்பகம்’ புகழாளரும் அரசியல் பகுத்தாய்வாள விமர்சகருமான பத்ரிசேஷாத்ரி, தமிழகவெட்டிக்கழகத்தின் கொள்கைப் பரப்புரைச் செயலாளரா? ஐயோ!! தேர்தல் களம் றொம்பவே சூட் புட்ச்சிடிச்சே! 

கருத்துப் படம், நன்றி: சாட்டுஜிப்டார் :-(

பத்ரியார் எனக்கு முன்னறிமுகவானவர்தாம், சமன நிலையுள்ளவரும் படுபுத்திசாலியுமான இக்கிழக்கார், செயலூக்கமும் மிக்கவர்தாம். ஆகவே, இத்தனை நாள் அவர்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். இனி மேலதிகமாக அவரை மதிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. மேலும் அவருடைய நடு நிலைமைப் பிறழ்வுக்கு, தவெக எவ்வளவு பொட்டியில் கொடுத்தது எனத் தெரியவில்லை – ஆகவே பொறாமையாகவும் இருக்கிறது.

ஆக… பிகில் நடிகர் விஜய்க்கும் ஒரு B டீம் இருக்கிறது. பத்ரி டீம்! :-(

எது எப்படியோ… ஒரு மாதிரியாக, ஒரு படுகேவலமான எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியிடப்பட்ட அவருடைய வெட்கங்கெட்ட கேடுகெட்ட தவெக பரப்புரை – பார்த்துக் களிக்கவும், அல்லது முகம் சுளிக்கவும்; சுமார் 20​+ நிமிடங்களே ஓடும் இந்த ப்ளடி விடியோவைப் பார்த்தாவது தவெக-கார விசிலடிச்சான் குஞ்சாமணியாளர்களுக்கு உங்கள் அனாதரவை நல்கவும்.

…பொட்டி வாங்கிக்கொண்டீர்கள், சரி பத்ரியாரே! ஆனால், இப்படிப் படுகேவலமாகவா விஜய்க்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பது? அவருடைய விட்டேற்றி அறிவிலித்தன ஜிகினா வாக்குறுதிகளுக்கெல்லாம் குதர்க்கரீதியான வியாக்கியானம் அளிப்பது? இம்மாதிரி சப்பைக்கட்டுகளுக்காக விசிலாளர்கள் உங்களுக்குக் கொடுத்த விலை என்ன?

பைசா கொடுத்தால் எப்படியல்லாமோ கலர்கலராகக் கம்பி கட்டிவிடுவீர்களா?  

ஆனாலும் பத்ரீ! நீங்கள் விலை போவீர்கள் என என் கனவில் கூட நினைத்ததில்லை. :-(

எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்தப் பதிவெழவையும் படித்துத் தொலைக்கும் சக ஏழரைகளான நீங்களும் பத்ரியை ஆழ்மனதிலிருந்து வெறுக்கவேண்டும் – ஆகவே இவ்விடியோவை முழுமையாகப் பார்த்து, அவரைக் கரித்துக் கொட்டவும்.

நன்றி. :-(

:-(

“அந்தக் கூட்டணி அடிமட்டத்துல ஜெல்லே ஆகல, அத எப்டி பாக்றீங்க?”

“ஹிஸ்டாரிக்கலா பாத்தா நம்ப தமிளகத்ல கூட்டணி அரித்தமேட்டிக் கெமிஸ்ட்டிரிண்றது, பிஸிகல்லா எப்டி வர்க் அவுட் ஆவும்?”

“விடுதலைச் சிறுத்தை கச்சிக்கு தெராவிடக் கழுதைங்க ஓட்டு ட்ரான்ஸ்பர் ஆவுமா?”

“அதிமுகவோட பி-டீம்தான் இந்த டீஎம்கே! பள்நிசாமி எவ்ளோ ராஜதந்த்ரத்தோட பன்னீர அங்க தெளிச்சுவுட்டுறுக்கார்!”

 “கூட்டணி வேற கூட்டாளியணி வேறண்றத தமிலக வாக்காலர்கல் புர்ஞ்சிக்கல… இதப் பத்தீ என்ன நெனக்கறீங்க?”

“தலித்துங்க நாடாருங்கஅம்பது % வோட்டு, மொதலியாருங்க 80% வோட்டு, எல்லாம் டீஎம்கேவுக்குதான்! எங்க அபார்ட்மென்ட் டவர்ல, என் ஃப்ளோர்ல எடுத்த கருத்துக்கணிப்பு அதத்தான் காண்பிக்குது!”

“பூத் கமிட்டீங்க எங்கே? ப்ரேத் கமிட்டியாச்சும்? கொறஞ்ச பட்சம் வேதாளக் கமிட்டிங்களாவது இர்க்குமா இந்த தற்குறி விஜய்க்கு?”

 “நாங்க டேட்டா வெச்சிட்டுதான் பேசுவோம்! பொத்தாம்பொதுவா கணிக்கமாட்டோம்! க்ண்டிப்பா அடுத்த மொதல்வர் எங்க பிகில் தளபதி விஜய்தான்!”

“கூட்ற கூட்டத்த வெச்சி ஓட்டு விகிதம் சொல்லவே முடியாது… ஆனா தானா சேர்ற கூட்டம், ஊக்கம்கொடுத்துக் சேர்க்கற கூட்டம்னு வித்தியாசம் பாக்கணும்ல?”

“ஆனா பாருங்க, டோப்பா ஸ்டாலினுக்கு கூட்டம் கூடுது. உண்மை. ஆனாக்க, ஒரு மாற்றுத்தலைமுடியாளருக்கே இவ்ளோனா, சொந்த தலைமுடி வெச்சி தியாகம் செஞ்சி தேர்தல்களம் காண்ற எங்க தளபதிக்கு எவ்ளோ கூடும்?”

“குட்டி நடிகர் மாஸ் 30% வோட் வாங்குமா,  இல்ல வெறும் 45% தானா?”

“குட்டி நடிகர் குசு விட்டார்! இது தமிழகத்துல அதிர்வலைங்கள ஏற்படுத்தியிருக்கு… பொலிட்டிகல் சுனாமின்னே சொல்லிடலாம்… அதப் பத்தீ உங்க கருத்து என்ன?”

“நாம் தமிளர் கச்சி ஏன் இலங்கை தேர்தல்கள்ல தமிளர் சார்பா போட்டி போடல? இதுலேந்தே அவங்க வண்டவாளம் தண்டவாளத்துல ஏற்ரது தெரியுதுல்ல? அவ்னுங்க போட்றது ரெட்டை வேடம்…”

“யாரோட ஓட்டைய ஜனநாய்கன் நடிகர்  விஜய் பிரிக்கறார்?”

“ஜென்-ஸீ வாக்காளங்களுக்கு எது முக்கியம் – நடிகங்களோட குஞ்சாமணியப் புட்ச்சிக்கினு தொங்கறதா, இல்ல… கார்ட்போர்ட் கட் அவுட் உச்சீலேர்ந்து உற்சாக பிகில் ஊதறதா?”

“மதச்சார்பின்மையைக் கடைபுடிக்கற திமுகவுக்குதான் எல்லா கிரிட்துவர்களும் முசுலீம்களும் ஓட்டளிப்பாங்க… விஜய்க்கு இல்லவேயில்ல… உங்க கருத்தூ?”

“ஸ்டாலின் குடும்ப வளர்ப்பு நாயும்,  நயினார் நாகேந்திரன் வீட்டுச் செல்ல நாயும் ஒன்றாக ஒரு வெடர்நரி டாக்டரைப் பார்க்கச் சென்றிருக்கின்றன; அவை இரண்டும் சுமார் 10 நிமிடம் தனியறைல தனிப்பட்ட முறைல பேசியிருக்காங்கன்னு தகவல் தீ போலப் பரவியிருக்கு… ஆகவே தீமுக, பாஜகவோட B-டீம் தான? இதப் பத்தீ…”

“ஆங்கிலத்துல இதை, லேம்டக் கவர்னமெண்ட் அப்டீன்னு சொல்லுவாங்க… நொண்டிவாத்து ஸ்டாலின் ஆட்சி ஆரம்பத்துலேர்ந்து இப்டியேதான் இருக்கு…”

“ஆங்கிலத்துல இத ஸஜ்ஜெஸ்டிவ்னு சொல்லுவாங்க… எங்க ஸஜ்ஜெஷனும் ஸஜ்ஜெஸ்டிவாக பரிந்துரையாகத்தான் இருக்கும்…,”

“திராவிட மாஜிக்க இங்கிலீஷுல அப்ரகாடப்ரா அப்டீன்னு குறிப்பிட்வாங்க… அதாவது அந்தக் காலத்துல அக்கிரகாரத்து பிராம்மண காபி டபரா ண்றத,  3% அவாள்கிட்டேந்து புடுங்கி பரவலாக்கி அனைத்து சாதியினருக்கும் காப்பி குடிக்கக் கிடைத்திருக்கும்  வாய்ப்பை அளித்த சமூக நீதி பீரங்கிதான் தீமுக… அதுதான் 2026 தேர்தல் நாய்கன்… நீங்க இதப் பத்தீ…”

“நடிகர் தளபதி விஜய்யோட அனைவருக்குமான அரசு செக்புக் திட்டமான ‘செக்குபுக்கு ரயில்’ அறிவிப்பு ஒரு பிரம்மாஸ்திரம், ஒரு மிகப்பெரிய கேம்சேஞ்சர்!!!  20-60 வயது இளைஞர்கள் அனைவரும் (அரசுப் பணியாளர்கள் நீங்கலாக – ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அந்த அதிகாரச் சலுகை இருக்கிறதே!) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அரசுக் கருவூலத்திடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

-0-0-0-0-

பலப்பல தவிர்க்கமுடியாத (பெரும்பாலும் விகசிப்பு கொடுப்பவைதாம்!) அழுத்தங்களின் நடுவே, எப்பவாவது ‘ரிலாக்ஸ்’ செய்கிறேன் பேர்வழியென்று வாய்விட்டுச் சிரிக்கலாமென, பொழுதுபோகாமல் இந்தக் கட்டேலபோற யூடூப்பர் கம்னாட்டிங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றுவது…

அந்தமாறீ மெய்யாலுமே சூட் புட்ச்சிச்சின்னாக்கக்கூட களத்தையே பாக்காம எப்டீடா ஏஸி குளுகுளு ரூம்புலேர்ந்து வெக்கமேபடாம, நேர்ல பாத்தாமாறீ மொழ நீளத்துக்கு அட்ச்சிவுட்ற்றீங்க?

…இதில்வேறு ஒரிரு மதிக்கத்தக்கவர்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உச்சரிப்பு சுத்தம். கர்ண கடூரம். இவ்வளவு குரூரத்துடன் தமிழைப் போட்டுத் தாக்கவேண்டிய அவசியம்தானென்ன, சொல்லுங்கள்.

அடிவயிற்றில் இனம் புரியாத கலக்கம். எப்போது தான் தமிழகத்துக்கு, இந்த அயோக்கிய ராஸ்கல் மேனாமினுக்கிகளிடமிருந்து விமோசனம் கிடைக்கும் என்கிற சுயபச்சாத்தாபம் மிக்க அலுப்பு. 

நமது பாரத நாட்டு  ஜனநாயக வழிமுறைகளின் வழியொட்டி – ஆனால் மனம்போன போக்கில் அவை அனைத்தையும் துஷ்பிரயோகம் செய்து, அநியாய ஆதாயம் பெற்றுக்கொழுத்தல், அதன் விதிமுறைகளை வளைத்து மடித்து அயோக்கியத்தனமாகச் சுரண்டிக் கொள்ளையடித்துச் சுயலாபம் அடைதல் என ஒரு பக்கம் பணநாயகத் திராவிடப் பொறுக்கிகள் அலையும்போது – தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பக்கம், நம் செல்ல, சக ஜனநாய்களானவர்கள் இலவசங்களையும் பிச்சைகளையும் கையூட்டுகளையும் மினுக்கல்களையும் ஜிகினாக்களையும் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிடன்களுக்கும் அவன்கள் வழித்தோன்றல்களுக்கும் அதிகார வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருப்பது அவலம்தான்.

ப்ளடி, டமிள் இனி மெல்லஸ் ஸாவும்.

டமில்நாட் இந்தத் தெருப்பொர்க்கி திராவிடன்களுக்கு வோட் போட்டே வோட்டாண்டி ஆவும்.

ஆமென். :-(

-0-0-0-

நம் யூடூப் தண்டக் கருமாந்திரங்கள், பொதுவாகவே இப்படிப்பட்ட அவல நிலையில் இருந்தாலும் (யதா திராவிடன், ததா யூடூப்பன்) – பத்ரி சேஷாத்ரி போன்றவகளின் சமன நிலை சமகாலக் கருத்துரைகளும் (https://www.youtube.com/@kizhakkunews/videos) கிடைக்கத்தான் செய்கின்றன.

வாழ்க நீவிர்.

(இருந்தாலும் தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்தான்!) 

:-(

(அல்லது)

குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.

(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)

…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.

(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)

…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.

இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை

இப்படியாகத்தானே.

ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் –  ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)

…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?

(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)

…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!) 

செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.

பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.

அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.

ஏன்?

மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)

இருந்தாலும்.

அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.

ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….

(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)

ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!

எனக்கு விக்கித்துப் போய்விட்டது!

சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”

விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்… 

கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்…  இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…

… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….

சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?

“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”

வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.

பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”

அப்படியா சரி.  Cosine3600 க்கு என்ன சொல்லுது?

“ஐயோ!  இது ஒண்ணுன்னு காமிக்குது!” 

அடப் பாவமே என்றேன்!

“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!

!!!!

அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?

இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!

நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)

தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில்  விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.

விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது  அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…

அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…

எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!

அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”

சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ

இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…

2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ

இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…

2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?

அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன். 

“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”

அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.

அடுத்த முதலையமைச்சர்  சோசப்பு விசய் வாள்க!

-0-0-0-0-

என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…

தேவையா?

“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”

(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?

#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)

A while ago, the Ministry of Culture (of Govt of India) came out with a tweet on bharatanatyam in good faith, which was canonically correct and backed up by evidence. There was no hearsay or stupidity involved at all, but then… Read the rest of this entry »

ஆச்சரியமாக இருக்கிறதா? நானும் இது குறித்து நேற்றிரவு கேள்விப்பட்டபோது, திடுக்கிட்டேவிட்டேன்! Read the rest of this entry »

இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

 இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(

…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்! 

* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.

(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை  6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)

…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?

Read the rest of this entry »

Not infrequently, I get asked: ‘could you list-out some good colleges/univs in India for my kids, nephews, nieces, neighbor-kids++’ by anxious parents & neighbors – as if I know everything and maintain an uptodate repository of informed-knowledge about all of them – and if I feel like, sometimes I do respond.

The following was one such case, and here it is – FWIW. Read the rest of this entry »

அவ்வப்போது இந்த வகையறா தொகையறாக்களின் ஏதாவது ‘காணொளி’ கனைப்பொலி எனச் சிலவற்றைப் பார்ப்பதுண்டு. காலம் பொன்னானது என்பதை நிபந்தனையற்று நம்பும் எனக்கு, என்னுடைய இந்த எப்போதாவது ‘பொழுதுபோக்கு’மேகூடப் படுகேவலமானதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; என்னை மன்னித்து லூஸ்லவுடுங்கள். (நல்லவேளை, இந்த தண்டக்கருமாந்திரங்களைப் பார்க்க முனையும்போது முதல் ரெண்டு நிமிடங்களில் போர்க்காலரீதியில் பின்வாங்குவதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன்)

(நான் பார்க்கும்வரை/பார்த்தவரை – ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றனர் – (என் செல்ல) அண்ணாமலை, தமிழருவி மணியன், பத்ரிசேஷாத்ரி, பிரபாகரன்++ என்பவர்கள்போல – இவர்கள் தொழில்முறை வளவளாக்கார யூட்யூபர்களாக இல்லாமல் இருப்பது ஆசுவாசம் தருவது. அவர்கள் பெரும் ஆவேசமில்லாமல் கருத்துகளை முன்வைப்பது கொஞ்சம் நிம்மதியையும் தருவது… மேலதிகமாக இன்னமும் சிலர் இப்படி இருக்கலாம்)

மற்றபடி, இந்த ‘நெறி’யாளக் கூப்பாட்டுக் கூவான்கள்:

“இப்ப தமிளக அரசியல் களம் சூடுபுட்ச்சிடிச்சி… நீங்க என்ன நெனக்கிறீங்க…?”

ப்ளடி போக்கத்த பேஸ்கெட்ஸ்.

(அவ்ளோதான் இந்தப் பதிவு)

Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)

Let us explore just one point in this context. Read the rest of this entry »

வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »

1

இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… Read the rest of this entry »

வேறு வழியேயில்லை, ஆகவே! Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:

Raalraa Says: March 18, 2025 at 09:43

அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:

வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21

ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.

  1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
  2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
  3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் –  ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
  4. இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
  5. பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர –  ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
  6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.

அவ்ளொதான்.

ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »