நிசப்த அறச்சீற்றமும் ஒத்திசையாத பதில் சீற்றமும் | பிஎஸ்வீரப்பா(“சபாஷ், சரியான போட்டி!”)
August 30, 2014
நிசப்தம், அறச்சீற்றம், அரைச்சீற்றம் – பதிலுக்கு இன்னும் கொஞ்சம், என் பங்கிற்கு அரச்சீற்றம் (அல்லது) இளைஞரே, உங்களுக்கு இஸ்ரேலைப் பிடிக்காமல் இருக்கலாம் – ஆனால் பொய்பொய்யாக, அபாண்டமாக, சோம்பேறித்தனத்துடன், உணர்ச்சிமேலிட ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், காப்பி-பேஸ்ட் செய்து எழுதவேண்டாமே!
இது நான்காம் பதிவு, இந்த வரிசையில். (ஸ்ஸ்ஸ்… அப்பாடா!) முதல் மூன்றுபதிவுகள்: 1) “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” 22/08/2014 2) !நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி) 23/08/2014 3) [ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள் 26/08/2014 (அடுத்த பதிவுதான் இந்த வரிசையில் கடைசி…)
-0-0-0-0-0-0-
அறச்சீற்றம் என்பது, நம் தமிழக அறிவுலக, நடைமுறைச் சூழலைப் பொறுத்தவரை, சிறுவிதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு, பெரும்பாலும் 1) காரியவாத, கணக்கிடப்பட்டு வெளிக்காண்பிக்கப்படும், ஆவேசப்படும், சுயலாபத்திற்கான அயோக்கிய அறச்சீற்றமாகத்தான் இருக்கிறது. இது ஒரு பெரிய பிரிவு.
இதன் ஒரு முக்கிய உதாரணமாக – – திராவிட இயக்கத்தின் மூலமே, அடிநாதமே இந்த போலி அறச்சீற்றம்தான். ‘ஆரிய வந்தேறி – திராவிட பூர்விகக்குடி,’ ‘வடக்குவாழ்கிறது-தெற்கு தேய்கிறது,’ ‘ஸம்ஸ்க்ருதம் தமிழின் கொட்டையை நசுக்குகிறது’ வகையறா போலி கற்பிதங்களை, பிரிவினைகளைச் சுற்றி எழுப்பப்பட்டது அது.
சில சமயம் இந்த அறச்சீற்றமானது, இந்த கீழ்கண்ட இரண்டாம் பிரிவில் 2) அறியாமை பாற்பட்ட ‘கும்பலோட கோவிந்தா‘ அறச்சீற்றமாகவும் அல்லது 3) அரைகுறை சோம்பேறித்தன அசட்டு அறச்சீற்றமாகவும் அல்லது 4) ஒரு எழவையும் புரிந்துகொள்ளாத முட்டியடி எதிர்வினை அறச்சீற்றமாகக்கூட இருக்கும். ஆனால் பின்னவற்றை விட – சாதாரண வாசகர்களாகிய, அடிமட்ட (அதிமட்ட அல்ல) மக்களாகிய நாம் – முதலாவதின் பக்கம்தான் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும்.
[ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள்
August 26, 2014
ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம் – SNR: http://en.wikipedia.org/wiki/Signal-to-noise_ratio – எம் ராஜா அவர்கள் கவனிக்கவும்; விக்கிபீடியா சுட்டி கொடுத்திருக்கிறேன்! ;-)
‘இன்னிக்கி இத்தாண்டா என்னோட கர்த்து! பிட்ச்சிக்கினு ஓட்ரா…‘ ரீதியில் மணிகண்டன் அவர்கள் இக்காலங்களில் எழுதுவது குறித்து என் பிலாக்கணமும், சில நண்பர்களின் கருத்துகளும், என் எதிர்வினையும் – இதற்கு ஒரு தனி பதிவு தேவையா என்றாலும்…
1. ஒரு நண்பர் எழுதினார்: ‘அவர் பல நல்ல காரியங்களுக்கு உதவி செய்திருக்கிறார். பல பள்ளிகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார், தெரியாதா உனக்கு? ஆக அவர் எழுதுவதில் வேண்டுமென்பதை எடுத்துக்கொண்டு மற்றதை விலக்கலாமே? பொறாமை காரணமாக நீ எழுதியிருப்பாய் எனவும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர் நிறைய எழுதினால் தினம்தினம் எழுதினால் என்ன பிரச்சினை?‘
அய்யா – அவர் செய்திருக்கலாம், ‘அடிப்படையில்’ நல்ல மனிதராக இருக்கலாம். ஒரு நல்ல குடும்பஸ்தனாக குடும்ப வேலைகளில் சரிபாதியாவது செய்பவராக இருக்கலாம். வேலையிடத்தில் துப்புரவாக, அருமையாகப் பணிசெய்பவராக, ப்ரொஃபெஷனலாக இருக்கலாம். சுற்றுப் புறச் சூழலைப் பேணுபவராக, வாய்ப்பேச்சு மட்டும் இல்லாதவராக, ஒரு நல்ல குடிமகனாக இருக்கலாம். ஆனால் – எழுதுவதில் சிலசமயம் அரைகுறைத்தனத்தை தம்பட்டம் அடிப்பதாகவும் அரைவேக்காட்டுத் தனத்தையும் வெளிப்படுத்தலாம். பாதகமேயில்லை. ஆனால் – பொய்ச் செய்திகளையும், வதந்திகளையும் பரவவிடுவதை – அறிவுஜீவிய நேர்மையில்லாமல் (intellectual dishonestyயுடன்) எழுதுவதைத் தான் நான் வெறுக்கிறேன்.
!நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி)
August 23, 2014
(அதாவது) போங்கடா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு பிலிம் காமிக்கற போங்காட்டமும்… (பாகம் 2)
— !நிசப்தம் பதிவுகளை எழுதிவரும் திடீரெக்ஸ் அறச்சீற்ற இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ( ‘அங்க என்னம்மா சத்தம்?‘) படித்த மகாமகோ சோகத்தில் எழுதிய என் “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” பிலாக்கணத்தின் தொடர்ச்சி. ஸ்ஸ்ஸ் அப்பாடா!
எடுத்ததை முடிக்கவேண்டும். ஆகவே தொடர்கிறேன். பாவம் நீங்கள். வேறு வேலையில்லையென்றால் மேலே படியுங்கள். வேறுவேலைகள் இருந்தாலும்தான்! ;-)
-0-0-0-0-0-
சரி. நிசப்தமான அந்தச் சத்தக் கட்டுரைக்கு மறுபடியும் போகலாம்: Mommie!! Returns!!!
“இது [அண்மைய காஸா-இஸ்ரேல் சச்சரவுகள்] பற்றிய டாகுமெண்டரி ஒன்றை பெங்களூரில் திரையிட்டார்கள். சாப்ளின் டாக்கீஸ் என்ற அமைப்பினர். தமிழ் இளைஞர்கள்தான். நற்றமிழன் பழனிசாமியை மட்டும் அந்தக் குழுவில் தெரியும். சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர். “
ஆ! “சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்.” அய்யோடீ சொக்கீ! நம்பவே முடியாமல், இரண்டுமூன்று தடவை இந்த வரியைப் படித்தேன்.
அய்யய்யோ! ஆஹா! அய்யா – இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை விட்டு எளிமையாக ஒரு சர்வதேச அரசியல் பற்றிய புத்தகங்களை எழுதச் சொல்லி – நம் தமிழர்களை உய்விக்க முடியுமா?
- முதல் புத்தகம்: ‘ஒரு வெட்டி டாகுமென்டரி பார்த்தே, சமகால வரலாற்றறிஞன் ஆவது எப்படி?’
- இரண்டாம் புத்தகம்: ‘மூன்றே வினாடிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள்!’ (இலவச இணைப்பு: அடுத்த அரைவினாடியில் அதனைத் தீர்த்தேவிடுங்கள்!)
- மூன்றாம் புத்தகம்: ‘ஒரே வினாடியில் சர்வதேச அரசியல்!’ (எளிமை விலைப் பதிப்பு)
பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகம் (என் புத்தகம் ஒன்றையும் இது பதிப்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!) உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஓடிப்போய் தொடர்பு கொள்ளுங்கள்…
… சரி. எளிமை என்பதை வெகுளித்தனம் எனவும் புரிந்து கொள்ளலாம்; ஆனால் மகாமகோ சிடுக்கல் பிரச்சினைகளுக்கெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து ‘வினவு காரர்கள்’ போல குசு விட்டு எளிமையான கருத்துகளை உதிர்ப்பது என்பது ஒரு கலைதான்.
எளிமை என்கிற அழகான வார்த்தையை வைத்துக் கொண்டு, ஒரு வெறுக்கக் கூடிய அரைகுறைத்தனத்தைப் பிரதிபலிக்கச் செய்வது என்பது ஒரு நுண்கலைதான். :-(
மன்னிக்கவும்; எனக்கு மறந்தே போய்விட்டது. கூக்ல் போய், விக்கிபீடியா போய் ஒன்றிரண்டு வினாடிகள் முக்கினால், உடனடியாக, வெகு எளிமையாக சர்வதேச அரசியலைப் பற்றி ஏசலாம்.
குறிப்பு: மொத்தம் சுமார் 3200 பேர் மட்டுமே வசிக்கும், எங்கள் பள்ளி இருக்கும் கிராமத்தில் ஐந்து நாயக்கர் பெருங்குடும்பங்கள் (= ‘வகையறா‘ என்று குறிப்பிடுகிறார்கள்) அல்லது குறுங்குழுக்கள் இருக்கின்றன. பக்கத்து கிராமத்தில் மூன்று இப்படிப்பட்ட குழுக்கள். இவை அனைத்துக்கும் இடையே, பலவித பிரியும்/சேரும் நட்புகளுக்கும் பகைமைகளுக்கும் நடுவில் படு பயங்கரமான குழு அரசியல் – கத்திச் சண்டைகள், கொலைகள் – ஒவ்வொரு வருடமும் இரண்டு கொலைகளாவது நடக்கின்றன (போன 2013வருடம் அத்தி பூத்தாற்போல ஒன்றுமட்டுமே! இந்த வருடம் இதுவரை இல்லை!). இந்த அரசியலைப் பற்றியே கூட என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தாலும், அதனைப் பற்றி எளிமையாகப் பேசவேமுடியாது. ஒரே சிக்கல்கள். என்னுடைய போதாமையும் அரைகுறைத்தனமும்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். என்ன செய்வது சொல்லுங்கள்…
!நிசப்தம்காரரின் நண்பர் எனக்கு பயிற்சி தருவாரா? ‘சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்‘ அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காதுதானே? சர்வதேச அளவில் எங்கள் கிராமம் தம்மாத்தூண்டுதானே?
மேலதிகக் குறிப்பு: !நிசப்தம்காரர் கருத்தை வைத்துக்கொண்டு இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை மதிப்பிடக் கூடாதுதான். முன்னவரின் ஆஹாஊஹூ கருத்துக்குப் பின்னவர் என்ன செய்வார் பாவம்! இருந்தாலும் அய்யாமார்களே, உங்களுக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது உழக்கு பதிப்பகம்!
-0-0-0-0-0-0-
காஸா பற்றி சில குட்டிப் புத்தகங்கள் அல்லது அற்புதமான கட்டுரைகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே அலுங்காமல் நலுங்காமல் எழுத, சில தலைப்புகளுக்கான சிபாரிசுகள்: (முடிந்தவரை – எனக்குச் சரியென்று பட்ட, இக்கட்டுரைகளை எழுதக்கூடிய கட்டுரையாசிரியர்கள்/பத்திரிகைகள் பெயரையும் கொடுத்திருக்கிறேன்)
- இஸ்ரேலே! காசா என்றால் லேசா? (விடுதலை)
- காசாவில் காசு பார்க்கும் அமெரிக்க கார்ப்பரேட் நாய்கள்! (கண்டிப்பாக – இது ‘வினவு’ குளுவான்களுக்காக மட்டும்)
- இஸ்ரேல்: காசாவின் காச நோய் (யுவகிருஷ்ணா)
- காசா தான் கடவுளடா! (நாணயம் விகடன்)
- காசா(ல) கைய வெச்சா… (சீமான்/விஜய்)
- காசாவை கரியாக்காதே! (நெய்வேலி – திமுக தொழிற்சங்க தட்டிவிளம்பரம்)
- கசக்கும் காசா (கல்கி)
- காசா கசமுசா எனும் பாலஸ்தீனிய திரைக்கவிதை (அகிரா கியரோஸ்டமி குரகாசாவின் உலகசினிமா ‘மார்டன்’ விமரிசனம்: எஸ். ராமகிருஷ்ணன்)
- வொய் திஸ் கொலவெறி – காசா for dummies (அதிஷா)
- காசா: நிகழ்ந்துகொண்டிருக்கும் இறந்தகாலமும், இறந்தகாலங்களின் நிகழ்காலமும் – ஒரு சாட்சியம் (ராஜன் குறை கிருஷ்ணன்)
- இஸ்ரேலின் அணுவுலைகளினால் காசாவுக்கு அபாயம் (ஞாநி)
- தென்னமெரிக்கத் திரைப்படங்களில் காசா – ஒரு பின் நவீனத்துவ விமர்சனம் (சாரு நிவேதிதா)
- யூத வந்தேறிகளால் ஏற்பட்ட காசா இனப்படுகொலை (பழ நெடுமாறன்)
- ஆதிக்கசாதி பார்ப்பனீயம்தான் இஸ்ரேலை உயர்த்திப் பிடிக்கும் (அமார்க்ஸ்)
- திமுக தோல்விக்குக் காரணம் இஸ்ரேல்! (
முக ஸ்டாலின் – அய்யய்யோ மன்னிக்கவும்இசுடாலினார்) - அந்தக் காலத்தில் இஸ்ரேல் இல்லை – மிகமிகப் பழைய ஏற்பாடு சாட்சியம் (ஆஇரா வெங்கடாசலபதி; யெருஸலாயிம் நூலகத்திலும் அலெக்ஸா்ன்ட்ரியாவிலும், யாழ்ப்பாணத்திலும் கிடைத்த குறிப்புகளின்மீது வடிக்கப்பட்டது)
- கடைசி மரத்தை வெட்டும் வரை நாங்கள் காசாவின் இடஒதுக்கீடுக்காகக் போராடுவோம் (டாக்டர் இராமதாசு)
- If Jeyamohan has written about Gaza, what right does he have to write about it & if Jeyamohan has not written about Gaza, why should he have written about it instead of being indifferent- a deep fraudian analysis with copious footnotes, ready references, appeal to ethics, parallels with American protest scenes and much else (A Contrarian World)
தலைப்பு தயார், உள்ளடக்கம் எங்கேயென்றால் – என்ன எழுதவேண்டும் என்பதை விக்கிபீடியாவிலிருந்து உருவி, கூக்ல் மொழிமாற்றியை வைத்துத் தமிழில் பெயர்த்துக்கொள்ளலாம். சரியா? (ஆனால் உழக்கு பதிப்பகம் இவற்றையெல்லாம் பிரசுரிக்காதாம், பத்ரியுடன் இப்போதுதான் பேசினேன். என்ன ஆணவம்! உழக்கு இல்லாவிட்டால் HairDye பதிப்பகம் செல்ல எங்களுக்குத் தெரியாதா? ஹ்ஹ.)
சரி, போதும் – நிசப்தம் பக்கம் செல்லலாம். ;-)
-0-0-0-0-0-
“திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்கு வாடகை மட்டுமே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். அது போக ப்ரொஜெக்டர், ஆடியோ சிஸ்டம்ஸ் எல்லாம் தனி.”
அய்யா அவர்களுக்கு எங்கு சென்றாலும் இதன் விலை என்ன, அதன் விலை என்ன, ஒரு ஐடி தட்டச்சு வேலை செய்யும் தன்னால் இதனை வாங்கமுடியுமா செய்யமுடியுமா, வெறும் மளிகைக் கடைக்காரர்கள் பெரிதாகச் சம்பாதிக்கிறார்கள், ஏன் நம்மால் முடியாதா, முடியவே முடியாது – ஏன் முடியணும், ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கவே முடியாத நிலை – என்ற வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் தான். பேக்கரி சென்றாலும் சரி. பஸ்ஸில் போனாலும் சரி – இதேவகைப் பிரச்சினைகள் தான்; காஸாவில் ரியல் எஸ்டேட் எப்படி, ப்ளாட் விலை எவ்வளவு இருக்கும் வகை பற்றாக்குறை மனப்பான்மைச் சிந்தனைகள் – ஆக, பல சமயங்களில் திரையுலக ‘தருமி’ நாகேஷை நினைவு படுத்துகிறார், பாவம் – ஒரு மத்தியதரவர்க்கம் சார்ந்த படைப்பூக்கம் மிக்க கலைஞனுக்கு என்னவெல்லாம் முட்டுக் கட்டைகள் பாருங்கள்… :-( ஏமாந்தால் ஏறி மிதித்து விடுவார்கள். :-((
என்னையே எடுத்துக் கொல்லுங்கள். நான் தட்டச்சு செய்யும் இந்த தொடைமேற்கணினி 30000 ரூபாய். என் மூக்குக் கண்ணாடி 2000 ரூபாய். வெறும் சிலிக்கன் மணல் மெட்டீரியலுக்கு இவ்வளவு விலையா? கம்ப்யூட்டர் செய்யும் கார்ப்பரேட் முதலாளிகள், கண்ணாடித் தொழிலதிபர்கள் – தொழிலாளிகள் வயிற்றில் அடித்துக் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். மணல் கொள்ளையர்கள். கேட்பதற்கு ஆளில்லை. கேட்டால் அடிக்க வந்து விடுவார்கள். அடச்சே!
ஆனாலும் ஆனியன் ரோஸ்ட் அம்பது ரூபாயாமே? என் அடுத்த புத்தகத்தின் பெயர் இதுதான். உரக்கச் சொன்னால், வாயில் இடியாப்பத்தைத் திணித்து விடுவார்கள். சரவணபவன் ஓவர் விலை. இடியாப்பம் ஒரு ப்ளேட் விலை ரூ 80/-. அநியாயம். தமிழகத்தின் இடியாப்பத்தை நூடுல்ஸ் சாப்பிட்டுவிடுமோ? இதுதான் நூடுல்த்வா என்பதா? மேக்கி நூடில்ஸ் பேக்கட் விலை ரூ 30/-; கடைக்காரருக்கு ஒவ்வொரு பாக்கெட்டிலும் லாபம் 30% சுளையாக நிற்கும். ஏன் நம்மால் இதனைச் செய்யமுடியாதா? முடியாது. பள்ளி ஆசிரியர்கள் என் தன்னம்பிக்கையையே ஒழித்து விட்டார்கள். தன்னம்பிக்கை கிலோ என்ன விலை? (அய்யய்யோ! இளைஞர் ஷ்டைலில் நானுமா??)
“இஸ்ரேல் ஒன்றும் சாதாரண நாடு இல்லை. ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. “
சரி. இஸ்ரேல் ஒரு மசாலா நாடு, சாதா நாடு அல்ல. போதுமா? கொத்து பரோட்டா (ரூ. 30/- மட்டுமே) சாப்பிடுவதற்குப் பதிலாக பதிவெழுத வந்தால் – சர்வதேச அரசியல் நிலவரங்களை, சாதா நாடு -ஆனியன் ரோஸ்ட் நாடு என்றுதான் பகுப்பு செய்யமுடியும். நாடு, நிலப்பரப்பும, பூகோளம் என்றாலே !நிசப்தம்காரருக்கு லட்டு (ரூ 25/-) தான் நினைவுக்கு வருமோ?
‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’
எந்த மெத்தப் படித்த மேதாவியய்யா இப்படி ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்றெல்லாம் கருத்துதிர்த்தது? அவர் காலைக் கொஞ்சம் என் பக்கம் நீட்டினால், அதனைத் தொட்டு என் கண்ணை ஒற்றிக் கொள்ள நான் தயார். எப்படிப்பட்ட மேதாவி அவர்!
ஆனால் – அவரை விட அதிமேதாவி யாரென்றால் !நிசப்தம்காரர்தான்! யாரோ சொன்னதை அப்படியே போட்டு ஒரு பதிவையும் தேற்றியிருக்கிறார் என்றால், அவர்தம் மேதாவித்தனம் தான் என்னே!
ஆனால், ஆனால்… இவர்கள் இருவரையும் விட மகாமகோ மேதாவி யாரென்றால் அது நாந்தேன்! வேலை வெட்டியற்று இவர்கள் சொல்லையும் செயலையும் விமர்சனம்(!) செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்! :-(
‘முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி.’
அய்யா !நிசப்தம், இஸ்ரேல் ஒன்றும் மலாய் காய்ச்சும் கடாய் அல்ல – சுரண்டோசுரண்டு எனச் சுரண்டுவதற்கு. கடையில் கிடைக்கும் கடாய் ரூ 800/-.ஆனால் மலாய் ஒரு கப் 40ரூ. சாப்பிட்டால் கொழுப்பு ஏறிவிடும் என்கிறார்கள். வீட்டில் அடிக்கவருவார்கள்.
ஆரோக்கியம் முக்கியம். இல்லையென்றால் டாக்டருக்கு அழ வேண்டும். அவர் ஐந்து நிமிடத்திற்கு ரூ.500/ வாங்கிவிடுவார். எனக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தாலும் என் முதலாளியிடமிருந்து ரூ.500 வராது. வெளியே சொல்ல முடியாது. சொன்னால் வேலை போய் விடும். டீம் லீடருக்குத் தமிழன் என்றால் கேவலம். உலகத்திலேயே பொட்டி தட்டும் வேலைதான் கீழானது. அதனால் தான் நான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். :-(
எனக்கு ஈகோ அதிகம். ஆனால் எவருக்குத் தான் ஈகோ இல்லை. என் ஊரில் அய்யனாருக்குக் கூட ஈகோ இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர் ஒரு குறுந்தெய்வமாகவே இருக்கிறார். இதற்குமேல் எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். அவர்கள் பெயரைச் சொல்லமாட்டேன். அவர்கள் இந்துத்துவர்கள். எங்கள் ஊரில் இந்துத்துவம் கிலோ ரூ 50/- தான். ஆனால் பெங்களுரில் அதே விஷயம் ரூ 1000/-! அநியாயமாக இருக்கிறது அல்லவா? எல்லாம் பெருமுதலாளிகள் கையில். சாதா மனிதர்களை எவன் கேர் செய்கிறான். அவர்கள் விவசாயம்தான் செய்யவேண்டும். வெறும் நஷ்டம்தான். ரொம்பப் பேசினால் உதைக்கவருவார்கள்.
ஐடி தொழிலில் எதுவுமே சாஸ்வதமில்லை. நாளைக்கே வேலையை விட்டு எடுத்துவிட்டால் என்னால் வேறென்ன செய்யமுடியும். வீட்டில் திட்டுவார்கள்.
தினம் ஒரு பதிவு எழுதவில்லையென்றால் வாசகர்கள் பொட்டில் அடிப்பார்கள். தினம் எழுதினாலோ வெறியர்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு அறைவார்கள். தமிழ் எழுத்தாளன் என்றால் அவ்வளவுதான். என்னை நானே குத்திக்கொள்ள வேண்டியதுதான்.
… அடுத்த பதிவில் மங்கோலியாவின் தமிழ் இலக்கியம் பற்றி எழுதலாமா? அதற்கு யார் உதைக்க வருவார்கள் என்பதை நினைத்தால் உதறலாக இருக்கிறது…
-0-0-0-0-0-0-
… ஆனால் – ஒவ்வொரு நாளும் எத்தைத் தின்றால், எத்தைப் பதிவு செய்தால் பித்தம் தெளியும் என்று – அனுபவங்களைச் சுரண்டிச் சுரண்டி முடிந்தவரை உள்ளீடற்ற, துறையறிவற்ற பிலாக்கணப் பதிவிடுவது என்பது நிச்சயம் ஒரு அனுபவச் சுரண்டல்தான்.
இந்தப் போக்கினை ஒரு ‘பாலிஸி’ என்ற அளவிற்கு உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை.
… மேலும் தொடரும்… :-( இன்னும் அரைவாசி ‘அங்க என்னம்மா சத்தம்’ பதிவு பாக்கியிருக்கிறது. பாவம் நீங்கள். ;-)
தொடர்புள்ள பதிவுகள் / தொகுப்புகள்…
- அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள்
- மங்கோலியா: சாகசங்கள், பேருரைகள், புத்தகவெளியீடுகள், புல்லரிப்புகள், ஆகவே சொறிதல்கள் 24/05/2014
- மங்கோலியாவில் ராமசாமி! 18/05/2014
- “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!”
‘அங்க என்னம்மா சத்தம்?‘ — இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரையைப் படித்தேன். சோகம்.
என்னுடைய எதிர்வினைதான் – என்னுடைய சலிப்பிய கட்டுரையின் தலைப்பு! :-(
!நிசப்தம் (=சத்தம்!) + அறச்சீற்றம் (=பிலிம்) = *டமால்-டுமீர்-பணால்* (=யானைவெடி)
சலிப்பாக இருக்கிறது. ஏன் இப்படிப் பொத்தாம் பொதுவாக எழுதிக் கொண்டே போகிறார் இவர்? ஒவ்வொரு கட்டுரையிலும் ஒப்புக்கொள்ளமுடியாத ஏகப்பட்ட தர்க்கமற்ற குதித்தல்கள், அடிப்படைகளை அறியா கருத்துச் சமைத்தல்கள், இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளை சுலபமான சிடுக்கவிழ்த்தல்கள், கண்டமேனிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் காய்ச்சியெடுத்தல்கள், கையலாகாத்தனங்கள் இன்னபிற இன்னபிற… இப்படியே போனால் இணையத்தின் இரண்டாம் மகாமகோ ஸ்ரீஸ்ரீ இளைஞக்கருப்பனார் ஆகி விடுவாரோ எனப் பயமாகவே, அடி வயிற்றுக் கலக்கமாகவே இருக்கிறது. ஒருவேளை, இப்படியே தமிழ்ப்பணி புரிந்து நேராக MIDS கண்டடைந்து ‘சலபதி’ அவர்களின் பக்கத்து இருக்கையில் அமர்ந்து விடுவாரோ என மனம் திக்திக் என்று அடித்துக்கொள்கிறதும் கூட… :-(
ஆக – எனக்குப் போட்டியாக யாரையும் நெருங்க விடக்கூடாது – இந்த அடிப்பொடி இரண்டாந்தரத் தகுதிக்கு / பெருமைக்கு என்பதும், என் சுயபாதுகாப்பு உணர்ச்சியும் என்னுடைய இந்தக் கட்டுரைக்குக் காரணமாக இருக்கலாம்; முக்கியமாக, மகாமகோ டாக்டர் பூவண்ணன் அவர்களின் உரலாயுதப் பின்னூட்ட, மறைந்திருந்தே தாக்கும் மரும கெர்ரிலாப் போரிலிருந்து — எப்படித்தான் இவ்வளவு நாட்களாக இவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற பொறாமையும்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்தான்.
… ஆனால் — எனக்குத் தெரிந்தவரை ஓரளவுக்கு நன்றாகவே, எளிமையாக, புரியக்கூடிய தமிழில் (அதாவது, என்னைப் போல விட்டேற்றியாக, வாசகனை மதிக்காமல், மேட்டிமைத்தனத்துடன் எழுதாமல்), வாழ்வைப் பற்றி – மினுக் மினுக் என சில சிந்தனைக் கீற்றுகள் தெரிய அழகாகவே எழுதிக் கொண்டு இருந்தவர் தான் இந்த !நிசப்தம்காரர். ஏனோ சில பல சமயம் — ஆர்வக் கோளாறினாலோ, அனுதினமும் எழுதவேண்டிய சுயநிர்ப்பந்தம் காரணமாகவோ, தினமும் எதையாவது எழுதாவிட்டால் வாசகர்கள் வரமாட்டார்கள் எனும் கருத்து காரணமாகவோ, சிறுபான்மைக்கு பெரும்பான்மைக்கு என ஏதாவது க்வோட்டா மனிதவுரிமை படையலோ — அல்லது வேறு ஏதாவது எழவினாலேயோ என்பது தெரியவில்லை – இக்காலங்களில் கண்டமேனிக்கும் துறையறியாமல் கால் வைக்கிறார். தேவையா? கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கிறது. Read the rest of this entry »
we expect way too much from teachers…
August 19, 2014
… and also from schools, and very little from us. Of course there are a few exceptions, as I would mention always, but then…
I think, we as parents (mostly clueless, that is – it takes one to know one and all that…) have these romantic notions of an ideal school being populated by ideal teachers and ideal peers for our children – and keep looking for it. And, when we can’t locate one (obviously, what do we expect!) we keep complaining ad nauseam about the state of affairs…
We are not satisfied at all with the situation, and spread the happy news of our disaffection, discontent and cynicism all over the place – and for some unfathomable reason, the inherent spreadability of any negative news defies ALL physics that I know of – it spreads so fast, in spite of not having much of truth, and absolutely inertia-free!
We expect to find bleakness and negative situations, and voilà, we find them in mind boggling abundance! Read the rest of this entry »
‘education’ – this, i believe…
August 16, 2014
And so it was.
A few weeks back, yours truly got a chance to ‘formally’ discuss with a group of young, impressionable & wannabe teachers – from many countries including mine and backgrounds – but mostly from South and Meso Americas – about my (current & random) views on this beastess called education – and as I had made the following rough notes for another occasion, I chose to make use of the same and ranted (the text below was given as a handout to them post the talk, because they wanted to get the real drift of the discussions, poor things).
So, I held forth, pontificating ad nauseam – based on my experience and approaches, bestowing my infinite wisdom on these hapless folks. Yes, before you rush headlong to trash me, I know – it is not that I am great teacher or even a reasonable teacher, mind you; and, you must remember that old saw about the ’empty vessels…’, yeah?
However, I also do believe in dialogue – and soon there was this multilogue – not exactly a balanced flow – but pandemonious rapids of information and opinions flowing in from all directions. The discussion was to have been for one hour, but it went on for 3 hours (thanks to the enthusiasm of the youth) over three cups of steaming black coffee.
Anyway… It is always so damn nice to see dedicated and work-ethic infected youth. Them with their dreams and aspirations to make the world a better place. Their wide-eyed wonder and spirited enthu for life, the hope. Their leftist leanings and Che Guevara Tee-shirts. Their takes on Western and Indic philosophies, the yoga of learning. Their ideas of literature (especially the illiterature of the likes of Arundhati Roys) and how bad the ‘education’ scene is, back in their own nations… Their sense of youthful humour, chiseled bodies… It is so damn nice to listen to clueful, knowledgeable and articulate youth full of positive energy – with their brains in full-crunch / alert mode.
I wish them and the future, all the very best that the mothership earth has to offer. (and wish the same to sanctimonious me too!)
bhaanushingo: chitto jetha bhayashunyo
August 15, 2014
I have checked with a few folks and they also have experienced and continue to experience these…
… Sometimes it is a piece of music that keeps repeating itself in the head – such as a 7th Symphony of Beethoven or a Toccata (in C minor) of Bach or a Bhimsen Joshi rendition of Ahir Bhairav or a MS Subbulakshmi’s ‘kurai onrum illai, Govinda’ – I have no wants, Govinda.
Sometimes there are these haunting images – such as the mind boggling scenes from a Andrei Tarkovsky or a Kurosawa Akira film, that deliciously torment you… Read the rest of this entry »
ஜேஜே(-வைக் கொலை செய்தது யார்?): சில குறிப்புகள்
August 11, 2014
…. ‘தாங்கவே முடியவில்லை,’ தொடர்கிறது!
‘சலபதி‘ அவர்களுடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும் – அன்னாருடைய ஆய்வுப் புத்தகங்களோடு, கட்டுரைக் கதையடித்தல்களோடு நிறுத்திக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு கால்கோள் விழாவினையே நடத்தியிருப்பேன்! ஆனால், அவர்… :-(
-0-0-0-0-0-0-0-0-0-0-
… பொதுவாக தம்மை இப்படித்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார் இவர்: “A.R. Venkatachalapathy is a historian and Tamil writer. chalapathy(at)mids(dot)ac(dot)in”; மேலதிகமாக, சில சமயங்களில் இவர் “social historian” எனவும் “literary historian” எனவும் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
இதில் என்னுடைய சிறு பிரச்சினை என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை ‘சலபதி’ ஒரு வரலாற்றாளரோ வேறு ஏதாவது ஆய்வாளரோ அல்லர். ஆனால், அவர் தன்னை அப்படி அழைத்துக்கொள்ள சர்வநிச்சயமாக அவருக்கு உரிமை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது – நான் அடுத்தவருடம் இரு நொபெல் பரிசுகளையும் (இயற்பியல்+இலக்கியம் – மற்றவைகளைப் போனால் போகிறது என்று விட்டுவிடுகிறேன்!) ஒரு மேன் புக்கர் பரிசையும் ஒரு நொக்கர் விருதையும் ஒரு பீல்ட்ஸ் விருதையும் ஒரேசமயத்தில் வாங்கப் போகும் அளவுக்கு ஆழமும் வீச்சும் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவன் என்ற என்னுடைய சொந்த, வீங்கிய கருத்தை, பரிதாபத்துக்குரிய நீங்களும் ஒப்புக் கொள்ளமுடியுமென்றால்…

இன்டெர்நெட்டில் இருந்து ஒரு விஷயத்தைப் பிடிப்பதெல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமா என்ன? இதெல்லாம் என்ன எழவெடுத்த ஆய்வு? இதற்கு என்ன எழவு DISCOVERY?? இதற்கு ஒரு ‘த ஹிந்து’ தினசரியின் பெத்த செய்தி வேறு! http://www.thehindu.com/2005/12/23/stories/2005122302411300.htm
கணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை!
August 8, 2014
ஆ இரா ‘சலபதி’ வெங்கடாசலபதி, ஸ்ரீ வெங்கடேஸம் மனஸா ஸ்மராமி…
இன்றுதான் ‘சலபதி’ அவர்கள் நாளைய ‘தமிழ் ஹிந்து’ தினசரியில் எழுதிய ராமானுஜன் பற்றிய கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன்.
இதன் ஒரு பகுதியை உங்களுக்கு அவசரம்அவசரமாக, தப்பும்தவறுமாக ‘இந்திய இணைய வரலாற்றிலேயே முதல்முறையாக டட்டடா டட்டடாவாக அளிப்பதில்’ பெருமையடைகிறேன்: எனக்கு எப்போதுமே ‘யாம் பெற்ற அக்கப்போரு பெறுக இவ்வையகம்’தான். Read the rest of this entry »
orphanic gardening – some notes
August 6, 2014
(OR) the story of ‘maan dhonia!’
Oh well.
And so, in one of our trips to the hills, Sonati gave us a nice looking plant whose leaves smelt much like our own Coriander (Kothamalli in Tamil, Coriander sativum, Kannada – Kothambari, Kashmiri – Daaniwal, Malayalam – Kothambalari, Marathi – Dhane, Telegu – Dhaniyalu), but had a very stronger odour and tasted as nicely pungent as any self-respecting Coriander would, that is – till may be a couple of decades back.
… Back to our dear Lady. In the ‘middle’ of cooking, she would suddenly walk out with a purposeful look (but with a knife in hand, so I dared not crack any joke, which was sad) and gait (starting with a quick demi plié), and bring just a couple of raspy leaves from her garden patch and mince them and garnish her tasty preparations; of course, decorated thusly, aha, the dishes would delightfully be fragrant and appetite inducing. Read the rest of this entry »