என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(
Read the rest of this entry »
of whine and woeman…
September 28, 2015
Long ago, lost in the twirling mists of the memories past, I wrote a series of rants on ‘talkers and doers‘ – more with a sense of disgust towards myself than with others… The links to the updated versions of the series are at the bottom of this offending post, for your edification.
…and pardon my soliloquy. (you can look at the other meanings/connotations too!)
JournalEntry# October 30, 2008 + updated on 28th September, 2015
I have long since come to the conclusions (not that they are a great revelation or whatever) that:
Read the rest of this entry »
எஸ்.ராமகிருஷ்ணன்: மொழிபெயர்ப்பு விழா
September 26, 2015
புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது. ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(
…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… ஆ!
‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர்
September 25, 2015
புர்ராமகிருஷ்ணம்
September 24, 2015
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.
(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)
ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில். உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »
9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)
September 22, 2015
சுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
சொந்தமாகக் காயலான் கடை நடத்துவது எப்படி
September 19, 2015
(அல்லது) வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து தரைதுடைப்பான் (‘மாப்’) செய்வது எப்படி…
strongly recommended: a book by the mother + a music album of joy chowdhury et al
September 17, 2015
First things first, dear fellers and fellerinas…
Let me upfront say that, I am big sucker for very beautifully produced and content rich books – and of course – soulful, deep, lilting music.
மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள்
September 16, 2015
அல்லது, ம்ம்ம்… இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை, ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(
+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!
…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!
doubteronomy and numbers
September 13, 2015
This is a reflective piece written (some 5/6 years back or so, for me) on ‘doubt’ by my dear friend, a fine educational philosopher and Ms Guide – K. Rama – a respected colleague of mine and a fantastic Montessori teacher. Of course, this is not a hyperbole.
Let me say that, fantastic teachers are generally very hard to find and then – when you add the mighty Montessori twist to it, oh well…
Elementary age children – really, really love her, for the magic that she manages to weave in the impressionable minds of the children – in the process, enthralling the gawking adults like yours truly too…Of course, my kids benefited immensely from all this magic.
I really miss her & the Montessori Magic these days. *sniff*
அரவிந்தன் கண்ணையன்: அதீநியம் Vs அநீதியம்
September 11, 2015
இவ்வரிசையின் முதற்பகுதி: அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)
அக அவர்களின் தேவையேயற்ற நிந்தனை குறித்த, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்துகளைக் குறித்த உரத்த சிந்தனை தொடர்கிறது, பாவம், இதைப் படிக்கும் நீங்கள்…
அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)
September 10, 2015
(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…
முகாந்திரம்: அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Read the rest of this entry »
மசூதிக்கும் போகும் மன்னாரு
September 7, 2015
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)
எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம், குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.
ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார். ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.
அரவிந்த் கண் மருத்துவமனை, அரவிந்தன் கண்ணையன், அய்யய்யோ: அகுறிப்புகள்
September 4, 2015
(அல்லது) ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
…நேற்று எனக்கு, அர்விந்த் கண் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இதன்குறிப்பாகவும் ஒரு பிரமிப்பில் மூழ்கிய நான், என் அனுபவங்களைச் சார்ந்து அதைப் பற்றி ஜொலிப்போதிஜொலிப்பாக எழுதலாம் என்று பார்த்தால், ‘எதிர்மறை உலகம்‘ புகழ் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் நினைவு வந்து பேதி பிடுங்கிக் கொண்டு விட்டது! :-(
ஏனெனில், இதற்கும் ‘ஒத்திசைவு ராமசாமியும், ஒத்திசையாத அரவிந்தும்: எப்படி இதைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு பாலபாடம்‘ என்று ஒரு முழநீள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்படுமோ என்கிற ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான்!
ஆகவே, என் அரைகுறைக் குறிப்புகளையும் அரவிந்தனைத்த எதிர்வினைகளையும் சேர்த்து, அவருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பித்து என்னை நானே உய்வித்துக்கொள்ள முயல்கிறேன்… நன்றி.