This quote, twisted absolutely out of context and attributed to Vladimir Illich Ulyanov (aka Lenin) was one of my favorite lines…
You may ask: why single out our dear, hard(ly)-working & poor naxalbari brethren, aren’t they merely nonsensically mouthing those mantras which CPI and CPM folks had uttered earlier?
But, the latter parties have stopped uttering such inanities long long back, haven’t they? Only the wayward bullet-party loving Maoists are still continuing with this, yeah?
… In my *real* youth (=wasted days of my past!), I used a Tamil equivalent (which went something like: paaraalumandram panrigalin thozhuvam = பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்!) just like many other ignorant and arrogant comrades, rather mindlessly – as all I could see of our illustrious parliament members was a distilled personification of corruption and decadence… Of course, I was mighty ignorant too, I must confess. Read the rest of this entry »
அந்த்ரெய் தார்கொவ்ஸ்கி – ஸொலாரிஸ் (1972) ஆஹா!
July 14, 2014
இது திரைப்பட விமர்சனம் அல்ல. பயப்படாதீர்கள்.
விமர்சனங்களுக்கும், கட்டுடைப்புகளுக்கும், பின் நவீனத்துவக் குண்டூசிக் குத்தல்களுக்கும், பின்னில்லா அரதப் பழசுமொண்ணைகளுக்கும், மண்வெட்டிதாச அகழ்வாராய்ச்சிகளுக்கும், வெட்டியொட்டும் மாண்புக்கும், போருரைகளுக்கும் நிறைய பேர்கள், இந்தத் தமிழைக் கூறு போடும் நல்லுலகில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
இது திரைப்பட அறிமுகமும் கிடையாது. ஏனெனில் இந்தப் படம் பொதுவாகவே ஓரளவு பிரபலமான படம்தான்.
பயமே வேண்டாம் – நான் எழுதப் போவது என் எண்ணங்களை மட்டுமே. அதுவும் அதிகமாக எழுதி உங்களுக்கு மூளைக் குடைச்சல் கொடுக்கும் முனைப்பு இல்லை. Read the rest of this entry »
புத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி?
July 10, 2014
புத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி?) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.
-0-0-0-0-0-0-0-0-

மந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ? (இங்கிருந்து)
… இந்த மாதிரி, புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்: Read the rest of this entry »
புத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1
… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
மேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
இதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர் என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர் தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.
… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷரகுக்ஷிதான். :-(
இத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது; இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம் – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா? வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா??) Read the rest of this entry »
mindfulness & insight meditation retreat
July 6, 2014
… with Patrick Kearney (www.dharmasalon.net) | 17th August to 24th August, 2014 (Sunday to Sunday) | At Bodhi Zendo (www.bodhizendo.org) | Perumal Malai, Kodaikanal, Tamil Nadu, India |
- Contact: Ramji +91 9585524836 | causmicdance @ gmail . com – and ah, I love the wordplayfulness here! ;-)
- Fee for Accommodation, Food and Teacher’s Travel – INR 750/- per day
- www.bodhizendo.org (Bodhi Zendo) | www.dharmasalon.net (Patrick)
Flyer with the above content. Read the rest of this entry »
கழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள்
July 1, 2014
இந்தச் சமன்பாட்டை இப்பதிவு நிரூபிக்கப் போகிறது. (பாவம் நீங்கள்!)
… வழக்கமாக இந்த ஒத்திசைவானது, புளகாங்கிதத்துடன் சிலந்தியோட்டிக்கொண்டிருக்கும் ஒரு அசுவாரசியமான அக்கப்போர் மூளைக்குடைச்சல் வலைதளம்தான்; ஆனால் எப்போதாவது பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் போன்றவர்கள் தேவைமெனெக்கெட்டு சுட்டியைப் பரிந்துரைத்தால், ஆயிரத்துக்குப் பக்கத்தில் பக்கப் பார்வைகள் கூடி விடும். ஆக – அடுத்த நாள் என்னுடைய சாலைப் பயணங்களில், என் அருகில் வரும் ஆட்டோக்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியிருக்கும்; என் புடம் போடப்பட்ட அனுபவங்கள் ஆட்டோமெடிக்காக இப்படிச் செய்யவைக்கும். :-)
இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது: சில ஆயிரம் தமிழ் படிக்கத் தெரிந்த (அல்லது தமிழ்ச்சுட்டிகளின் மேல் க்ளிக் செய்யக்கூடியவர்கள்) அனாமதேய நபர்கள், காலையில் பல்தேய்த்த பின் (வாய்கூடக் கொப்பளிக்காமல்) முதலில் ஆஜர் கொடுப்பது இந்தத் தளங்களில்தான் என்பது. இந்த ஆயிரம் பேர்களும் நிச்சயம், வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவாத, உதவாக்கரை ஆண்களாகத் தான் இருக்கவேண்டும் என்பதும் என் துணிபு. Read the rest of this entry »