On Dr N Ganesan’s Claim: “Sanskrit बीज/bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca வித்து/விதை/விசை..”
August 7, 2026
This longform post is about languages, roots, transmission directions in the context of Sanskrit & Tamil…
… and more importantly, it seeks to deal with suspect methodologies, premature optimizations, simplistic/superficial generalizations, giant logical leaps, self-referential statements, circular-reasoning, non-existing citations and the like, around some ideas – that have been plaguing the Tamil ‘discourse’ – or what passes for it.
I would also like to ascribe such seemingly unscholarly & infructuous approaches to a child-like eagerness/enthusiasm of some fundamentally good people – to ‘prove’ the ancientestest nature & origins of Tamil, in spite of all the evidence that stare at us in our face and associated kanging – and not to some deleterious motive. Okay – I agree that NOT all such folks are decent & ethical – leave alone being scholarly.
Normally, I do not indulge in major or sustained battles/discussions on X, because in my opinion, the context for the X-platform is not really about longform idea exchanges and also because I am not blue-ticked yet which would have otherwise allowed me to respond in longform. Also – ars longa vita brevis.
Again, I wanted to put in some significant time-effort in terms of approaching & analyzing this particular claim – as there are many many such types of uncalled-for claims that seem to be proliferating in the Tamil<->Sanskrit relationships – and I want to create some kind of a ‘template approach’ to deal with them. An exemplar, if you will.
Yes. I want to approach the claim as rigorously & as politely as possible, with a clear logic and marshalling of whatever evidence that I could muster; but of course I am not at all a Mr KnowAll and I do not have any scholarly pretensions. I continue to be an eager student of Tamil, Sanskrit & English – and assorted other things.
In any case, linguistics++ is only one of my minor interests, really. So, feel free to rebut/join etc in this discussion. Let us all learn together, if we can – with as much civility as needed and possible.
1
Background:
On July 29, 2026 this following discussion happened and I was not privy to that – am providing just the immediate context.
It was one rabid, frothing-at-the-mouth ‘Aravind’ who started off with an obtuse set of TamilSupremacist-Dravidian assertions. Pure unadulterated hatecraft. Usual story/fiction: Aryan invaders foisted themselves and Sanskrit on Tamilnadu post 13th century CE.
Here’s were Sri N Ganesan (henceforth NG) introduces the idea as in the subject/title of this post.
And ‘dagalti’ asks a follow-up query and NG answers, looping me in. As under.
I responded to him – and this post is the result of that undertaking from me to respond soon.
There was also another short exchange between me and NG:
Rest of the post is going to be about expanding on my observation:
~”Sanskrit bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca” is NOT established by DEDR 5401 & is phonologically weak as presented.
Ideally I would like to use ‘Dravidian’ instead of Dravidian, since it is a made up category-name chistened fairly recently, unlike the monikers Tamil or Sanskrit. It also has this heavy baggage of having been politically loaded. But, writing ‘Dravidian’ everytime could be jarring, so am avoiding that.
To the extent that my typing would allow for, I have used International Phonetic Alphabet (IPA), showing the correct pronunciation..
2
DEDR 5401
Dravidian Etymological Dictionary of 1984 (often abbreviated as DEDR), is a major academic resource painstakingly compiled and annotated by T. Burrow and M. B. Emeneau. Very reasonably comprehensive.
DEDR 5401 refers to a particular entry – that groups a large set of Dravidian forms meaning ‘sow’, ‘seed’, ‘semen’, ‘testicle’, and related notions. The distribution across South, Central and North Dravidian languages makes the underlying Dravidian family cohesive.
It is important to remember as a backgrounder that, DEDR is a comparative dictionary organised into proposed etymological groups, rather than a series of claims that every listed surface form must be inherited directly and regularly.
The important qualification occurs in the entry itself:
“Go., Kuwi, and Malt. words for ‘seed’ may be < IA.”
That warning matters. Burrow and Emeneau were explicitly allowing that forms such as Gondi vījā, Kuwi bica/bicca, and Malto bíci might be loans from Indo-Aryan, presumably from forms related to Sanskrit bīja.
Therefore, these particular forms cannot safely be used as independent evidence for a Dravidian development.
vittu -> viccu -> vīca -> bīja
That would risk circular reasoning. Some of the closest-sounding forms may already be Indo-Aryan loans.
3
What can reasonably be reconstructed for Dravidian?
The underlying family is usually represented approximately as something like:
- verbal base *vit- / *vitt-, ‘to sow, scatter seed’
- noun *vitt-, ‘seed’
- derivatives with suffixes, such as Tamil vitai
The exact Proto-Dravidian reconstruction depends on how alternations among vit-, vitt-, vitay-, vicc- are analysed.
Tamil forms such as:
- வித்து vittu, seed, semen
- விதை vitai, seed
- விதை- vita(i)-, to sow
- விச்சு viccu, seed or sowing-related form
…belong to the same general Dravidian lexical family according to DEDR. That much is reasonable.
But DEDR 5401 does not itself reconstruct Sanskrit bīja from this family.
So, the reason as to why this extract was used by NG is not at all clear!
4
Is vittu > viccu plausible?
Tamil and its sister/other languages exhibit historically conditioned palatalisation and alternations involving k/c, c/y, and consonants adjacent to front vowels or y. However, a specific development vittu > viccu requires its own comparative and morphological evidence and should not be justified by a general Tamil rule tt > cc.
One cannot simply posit a general rule: tt > cc, without specifying:
- the earlier phonological environment
- the chronological stage
- parallel examples
- whether the form is inherited, dialectal, analogical or expressive
The examples given in the claim of NG do NOT establish such a rule.
பச்சை : பாசி – paccai and pāci cannot simply be treated as an illustration of free cc : c alternation. Their vowel quantities, morphology and lexical histories also need explanation.
கொவ்வை : கோவை – This pair likewise involves more than geminate simplification. It has differences in vowel length and medial consonantal structure.
Similarity alone does not prove that it illustrates the development required for vittu > viccu.
விச்சு : வீசு – This comparison is particularly problematic.
Tamil வீசு vīcu, ‘to throw, fling, wave, blow, spread’, belongs in DEDR to a separate comparison associated with scattering or throwing, referenced by DEDR 5400 vitir- in the quoted entry. DEDR’s “Cf. 5400 Ta. vitir” indicates comparison, not an assertion that vīcu regularly derives from vittu.
A derivation such as vittu > viccu > vīcu would require, at minimum:
- tt > cc
- loss of gemination cc > c
- i > ī
- and a semantic development
It may possible that each step might conceivably occur somewhere, but the sequence needs evidence.
It cannot be inferred merely from resemblance as comfortingly assumed & indicated by NG.
In fact, this ‘resemblance’ issue is the one that is there in most of the takes of ‘folk etymologists’ like Mannarmannan & Paari Saalan, that plague the Tamil discussions.
5
The proposed vīca > bīja equation
This is the weakest part of the argument or the process for claim by NG.
Sanskrit bīja /biːd͡ʑa/ ‘seed’ and a proposed Dravidian form vīca or vīja look moderately similar, but historical etymology requires regular sound correspondences.
A borrowing from Dravidian *vitt- into Indo-Aryan as bīja (as claimed by NG) would definitely require explanations for:
| Dravidian | Sanskrit | Problem |
|---|---|---|
| initial v- | b- | Possible in some borrowing situations, but must be demonstrated |
| medial -tt- | -j- | No obvious regular substitution |
| final consonant | final -a | Sanskrit nominal adaptation is possible |
| short i | long ī | Requires an account or an example |
| geminate stop | voiced palatal affricate | Major unexplained change, this is surprising |
The change *vitt- > bīja- is therefore not a transparent or recognised sound substitution – UNLESS NG can satisfy every one of the above 5 criteria.
One might instead compare the later Dravidian forms vīja, bica, bíci, but DEDR itself warns that precisely these may come from Indo-Aryan.
They are consequently poor evidence for the opposite direction (Dravidian -> Sanskrit) of borrowing.
6
What is the accepted etymology of Sanskrit bīja?
Sanskrit bīja unquestionably means ‘seed’, and by extension ‘germ’, ‘source’, ‘cause’, generative material, semen and, in tantric usage, a ‘seed syllable’. The semantic explanation of bīja-mantra as a compact sound containing generative spiritual potency is traditional and unobjectionable.
I will NOT dispute that its deeper etymology, however, is uncertain at least in my limited knowledge. It seems to lack a straightforward and universally accepted Indo-European derivation. Such uncertainty makes a substrate or borrowing hypothesis possible in principle, but:
‘Uncertain within Indo-European’ does not automatically mean ‘borrowed from Dravidian!’
To establish Dravidian origin, scholars like NG would definitely need:
- a reconstructible Dravidian source form predating Indo-Aryan attestation
- regular or independently paralleled sound substitutions
- plausible geographical and chronological contact
- and exclusion of borrowing in the reverse direction
The proposed argument of NG supplies mainly semantic similarity and surface resemblance.
But one needs arguments that are really sound and substantive to present a scholarly take!
7
Is vit- a Sanskrit dhātu derived from Dravidian?
The wording of NG: “vit- is the dhātu-vēr in Dravidian” unfortunately mixes Sanskrit grammatical terminology with comparative reconstruction.
A better formulation would perhaps be: “Proto-Dravidian appears to have had a verbal root or base *vit- / *vitt-, ‘sow’.”
Calling it a dhātu is understandable informally, but Sanskrit grammatical roots and comparative Dravidian reconstructions belong to different descriptive frameworks.
Further, the existence of a (A) Dravidian root *vit- does not show that (B) Sanskrit bīja comes from it.
The two propositions A and B are separate which NG has to note of.
8
The Vināyakar Akaval claim
The contentious line is: “மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்..”
Project Madurai’s text (specifically cited by NG) and commentary interpret மும்மதச் சுவடு as the marks or traces produced by three kinds or streams of elephant rut-fluid. The particular commentary of the great Sri TP Meenakshi Sundaram Pillai, hosted there gives the names of those 3 as: கன்ன மதம், கபோல மதம், கோச மதம்…
…one would suppose that, after referring to the Project Madurai in the context of Akaval, NG would quote this exact reference, actually cited by him!
But NG ‘quotes’ something different! கர்ண மதம், கபோல மதம், பீஜ மதம்!! பீஜ and NOT கோச as in his reference! When asked about NG replied, as in the snippet from the Section1 above – “many scholars explain the பீஜ மதம்.”
I was slightly surprised by the defensive ‘I am my own citation’ kind of response, but that’s not a significant issue in the big picture of a host of other concerning lacunae in the claims of NG.
Of course one is aware that in a few glosses of the phrase mummdam, bīja-mada is given as a lexical explanation – but then NONE of them are of the incredible scholarly levels of Sri TPM Pillai!
Therefore:
- மும்மதம் in the poem has no etymological bearing on Sanskrit bīja.
- The reading பீஜ மதம் appears to be one modern anatomical or Sanskritising gloss among variants.
- Even were bīja-mada an authentic technical term, it would merely use Sanskrit bīja in the sense ‘semen/generative fluid’. It would not prove that bīja originated in Tamil or Dravidian.
The poem ‘Vinayakar Akaval’ brought in by NG to prove his claim, is consequently irrelevant to the proposed etymology.
9
Conclusion
I hope, at least Dr N Ganesan has read this far… :-) In spite of this post is already some 1900+ words in length! Loooooong form indeed! But I think it would be an useful template or a framework to respond to such claims, hopefully… at least for me!
It also took me upwards of 7 hours to process claims, collect details, organize them and then respond comprehensively (one hopes so!) to the claims made by NG.
But.
I would be very eager to know NG’s response (and interested others) in terms of defending or revising his claims – point-by-point AND with tangible, verifiable & scholarly evidence.
Anyway. Here’s hoping this would encourage decent & evidence-logic based discussions on one of the vexatious issues with our Tamil. Thanks.
(END)
நல்லதங்காள் 2.0: ஒருமாதிரி ஜென்-ஸீக்களுக்காகவென ஆரம்பித்து வழக்கமான பாணியில் போஸ்ட்-மாடர்ன் கதை சொல்லல்
August 5, 2026
இதனை, கிணற்றின் விளிம்பில் ஒரு deconstruction எனவொரு மாதிரியாகவும் புரிந்து கொல்லலாம்.
ஒரு காலத்தில், அதாவது Wi-Fi கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும், ப்ளெட்டி குடும்ப WhatsApp குழுக்கள் தோன்றுவதற்கு முன்பும், நல்லதங்காள் என்ற பெண் வாழ்ந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா முடிவுகளையும் அவளைத் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் அந்தக் காலத்தின் ‘குடும்ப விழுமியங்கள்’. என்ன wtf. இது அப்பட்டமான patriarchy. அவ்ளோதான் கதை.
-0-0-0-0-0-
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ‘Family planning என்பது மேற்கத்திய சதி’ என்று அக்கால சமூகமே முடிவு செய்திருக்க வேண்டும். கணவன் காசிராஜன். குடிகாரன். டாஸ்மாக்கில் செந்தில்பாலாஜிக்குக் கப்பம் கட்டவே அவனுக்கு நேரம் போதவில்லை. எப்படியும், திருட்டுத் திராவிட அரசுகள் கொடுத்த பிச்சை ‘உரிமைத் தொகை’ களை அப்படியே திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கே கொடுத்துக்கொண்டிருந்த குடிமகன் தான் அவன்.
காசிராஜன் பெயரில் ராஜா இருந்தாலும் வீட்டில் காசே இல்லை, cause இல்லையென்றால் பின்னர் எப்படி எஃபெக்ட் வரும்? ரேஷன் கடை புழுத்த அரிசிகூட வீட்டில் இல்லை. வறட்சி வந்தது.
வழக்கம்போல ‘ஏ திமிர் பிடித்த கர்நாடகாவே! காவிரி நீரைத் திறந்து விடு’ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அது வைகைக் கறை படிந்த நிலம். தமிழகத்தின் தென்னகம்.
நீரில்லை. வயலில் பயிர் இல்லை. வீட்டில் உணவு இல்லை. ஆனால் ஊர்ப் பெரியவர்கள் ஆலோசனை மட்டும் டன் கணக்கில் வைத்திருந்தார்கள். கேட்டால் வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றார்கள். இருந்தாலும், நாங்க பேக்வர்ட் எங்களை வறட்சிப் படுத்திவிட்டார்கள் வந்தேறி ஆரியர் என்றார்கள். பெரிசுங்கன்னாலே தொல்லைதான்.
“பெண் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.” – ஆனா அதே சமயம் – ராணிமங்கம்மா அல்லிராணி வேலு நாச்சியார் எனப் புல்லரித்துக் கொள்வார்கள், ப்ளடி.
“குடும்ப மானம் காக்க வேண்டும்.” – அதே சமயம் குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே ரேப் செய்வார்கள்…
“கஷ்டம் வந்தால் கடவுளை நினைக்க வேண்டும்.” – ஆனா கஷ்டம் என் மூலமா வந்தா பேசாம மூடிக்கினு போய்டணும், கேட்டியா?
அரிசி கேட்டால் அப்ஸ்ட்ராக்ட் தத்துவம் இலவசமாகக் கிடைத்தது. வெளங்கிடும்.
ஒருநாள் நல்லதங்காள் தன் அண்ணன் நல்லண்ணன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள். ‘Blood is thicker than water’ என்ற பழமொழியை நம்பினாள். ஆனால் அந்தப் பழமொழிக்கு கீழே சிறிய எழுத்தில் ‘Terms and conditions apply. Sister-in-law approval mandatory’ என்று இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அண்ணி நல்லதங்காளை கெட்டநாத்தியாக நினைத்தாள்; ஏனெனில், அவள் கூகில் ட்ரான்ஸ்லேஷன் சரியில்லை.
எது எப்படியோ. வேறுவழியில்லாத நல்லதங்காள், ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு காசிராஜன் சகவாசமே வேண்டாம் என வெளி நடப்பு செய்தாள். குழந்தைகள் வழியில் தொடர்ந்து கேட்டனர்:
“அம்மா, இன்னும் எவ்வளவு டிஸ்டென்ஸ்?”
“பொட்டிக் கடேல குர்குரே பாக்கெட் வாங்கிக் கொடுக்கறியா?”
“அம்மா, அடுத்த மீல்ஸ் எங்க? எவ்ளோ நேரம் நான் மீம்ஸ் பாத்துக்கிட்டு இருக்கறது?”
“அம்மா, hotspot இருக்கா? டவரே கெடக்க மாட்டேங்குதே!”
கடைசி இரண்டு கேள்விகளை யார் கேட்டார்கள் என்பது வரலாற்றுக் கதையாடல் பிரச்சினை. சில ஆய்வாளர்கள் அது பின்னாளில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்கிறார்கள். பல தமிழ்தேசியப் பேராசிரியர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே எங்கள் செந்தமிழ் முப்பாட்டனார்கள் இண்டெர்னெட் மொபைல் ஃபோன் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா எனக் கேட்டார்கள். “உலகத்துக்கே இரும்பைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் எங்கள் லெமூரியர்கள்தாமே?”
நல்லண்ணன் அப்போது வீட்டில் இல்லை. அவனுடைய மனைவி மூளியலங்காரி இருந்தாள். பழைய கதையில் அவள் ‘கொடூர அண்ணி.’ நம்முடைய புதிய critical edition-ல் அவள் patriarchy-யின் middle-management அதிகாரி. வீட்டின் உணவு, கதவு, சமையலறை, குடும்ப மரியாதை ஆகிய சிறு அதிகாரங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன. அவற்றை அவள் முழு தீவிரத்துடன் பயன்படுத்தினாள்.
ஏனெனில் மேலிருந்து ஒடுக்கப்பட்டவர் கீழே ஒருவரைக் கண்டால், hierarchy தன்னை reproduce செய்துகொள்ளும்.
“எதற்காக வந்தாய்?” என்றாள் மூளியலங்காரி.
நல்லதங்காள்: “குழந்தைகள் பசித்திருக்கிறார்கள்.”
“அதற்காக இங்கேயா வருவாய்? குடும்பத்தோடு வந்திருக்கிறாயே! முன்பே calendar invite அனுப்பியிருக்கலாமே?”
“நான் கூக்ல் calendar உபயோகிப்பது இல்லை, .”
“குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்?”
“என் ஃபோன்ல சார்ஜே இல்லை! நல்லண்ணன் தான் நல்லெண்ணத்தோட டாப்-அப் செஞ்சி கொடுக்கறேன்னான்…”
“அதுதான் பிரச்சினை. திட்டமிடல் இல்லை. Financial literacy இல்லை. இப்போது emotional blackmail. தேவையா? உன்னோட எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?”
இதைச் சொல்லிக்கொண்டே மூளியலங்காரி தன் LinkedIn-ல் “boundaries are part of self-care” என்று சாட்ஜிபிடி உதவியுடன் பதிவிட்டாள். பதிலுக்கு நிறைய லிங்க்ட்இன்ன ஆண்கள் DM செய்து “ஏன், நாங்களும் உனக்கு உதவி செய்ய முடியுமே! பக்கத்து கஃபேகாஃபிடேயில் ஆரம்பிக்கலாமா? உன் முகம் அழகாக இருக்கிறது… உன் கட்டுரை அதை விட…”
…மூளியலங்காரி, நல்லதங்காளுக்கு உடைந்த பாத்திரத்தில் பழைய அழுகிய ஜவ்வரிசி மாவைத் தந்தாள். அடுப்புக்கு ஈர விறகு. சமைக்க துளையுள்ள பானை. பின்னர், “வாய்ப்பு கொடுத்தேன்; பயன்படுத்தத் தெரியவில்லை” என்றாள். இது சமகால நிறுவனங்களில் PIP performance improvement plan என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் அழுதனர், அவர்களுக்கு வேற என்ன வேலை.
நல்லதங்காள் மௌனமாக இருந்தாள். ஏனெனில் ஜென்ஸீ கதையாசிரியர்கள் துன்புறும் பெண்களுக்கு நீண்ட உரையாடல் எழுத மாட்டார்கள். அவர்கள் கண்ணீர், கற்பு, தியாகம் ஆகிய மூன்று reaction emojis மட்டுமே வழங்குவார்கள். உங்களுக்கு எந்த இமோஜி தேவையோ இட்டுக் கொள்ளவும்.
சரி. இப்போது நல்லதங்காள் வெளியேறினாள். ஏனெனில், முன்னதாக மூளியலங்காரி கதவடைப்பு செய்திருந்தாள்.
இங்கே narrator (நான் தான்!) திடீரென்று கதையை நிறுத்துகிறான்.
Narrator: “டேய் வாசகா! அடுத்ததாக நீ எதிர்பார்ப்பது கிணறு.” (வாசகிக்கு இதனைப் பெண்படுத்திக்கொள்ளவும்)
வாசகர்: “ஆம். எனக்கும் Original plot தெரியும். இப்பதான் ஜெமினியில் கேட்டேன். ஆனால் அந்த ஸ்டூடியோவ எப்பவோ இழுத்து மூடிட்டாங்களாம்!”
நல்லதங்காள்: “ஒரு நிமிடம்! என் வாழ்க்கையை ஏன் எல்லோரும் spoiler-alert பண்ணுகிறீர்கள்?”
களிம்பு தடவிக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் இருந்த அவள் கதையின் ஓரத்திலிருந்து வெளியே வந்து ஆசிரியரிடம் கேட்டாள்:
“எனக்கு வேறு option இருக்கறாமாறீ எழுதவே முடியாதா?”
ஆசிரியர் பதற்றமடைந்தார். (இவரும் அதே நர்ரேட்டர் தான்!)
“இது புகழ்பெற்ற சோகக் கதை. நீ கிணற்றில் குதிக்காவிட்டால் cultural authenticity போய்விடும். அந்த்ரொபாலஜி பத்தி ராஜன்குறை கிருஷ்ணன் ரோஸா வஸந்தெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?”
நல்லதங்காள்: “என் குழந்தைகள் இறந்தால்தான் உங்கள் culture authentic ஆகுமா?”
“அது தாய்மையின் உச்சம். அதைத்தான் எங்களுக்கு மிஷெல் ஃபூக்கோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்… ஜெயுமோகன் கூட இது குறித்து ஒரு சுயமுன்னேற்றப் பதிவு போட்டிருக்கார்!”
“ஜெயமோகனோட எல்லா பதிவும் சுயமுன்னேற்றம் பத்திதான்… எனக்கு அதுதான் இப்ப ரொம்ப தேவையா?”
“அப்ப சாரு நிவேதிதா? எஸ் ராமகிருஷ்ணன்?? இவங்க சொன்னா பரவாயில்லயா?”
“கண்ட கழுதெங்க பத்தி பேச நான் இங்க வரல… சாப்பாடு கொடுக்காத சமூகம் குற்றமற்றது; ஆனால் – குழந்தைகளோடு இறந்த பெண் தெய்வமா?”
Critical theory அங்கே background music போல ஒலித்தது.
நல்லதங்காள் கிணற்றின் அருகில் நின்றாள். குழந்தைகளைப் பார்த்தாள். கிணற்றைப் பார்த்தாள். பின்னர் camera-வைப் பார்த்தாள். சமூக சாட்சியமாக ஒரு கடைசி ஸெல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
“இந்தக் கிணறு வெறும் கிணறு அல்ல. இது feudal patriarchy-யின் narrative apparatus. குடும்பம் என்னை வெளியே தள்ளியது. சமூகம் உதவி செய்யவில்லை. ஆனால் climax-ல் என் தனிப்பட்ட முடிவையே moral lesson ஆக்கப் போகிறார்கள்.”
மூத்த குழந்தை கேட்டது:
“அம்மா, அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?”
“கிணற்றை deconstruct செய்யப் போகிறோம்.”
அவர்கள் கிணற்றுக்குள் குதிக்கவில்லை. அதற்கு முன் ஒரு selfie எடுத்தனர்.
Caption: “All is well, that ends in a well.”
இன்ஸ்டாவுக்காக ஒரு ரீலும் போட்டனர். விஜய் படப்பாட்டு மெட்டு ஒன்றின் பின்புலத்தில் குடும்பத்தோடு குத்தாட்டம்.
பின்னர் நல்லதங்காள் அருகிலிருந்த திராவிட அபலைப் பெண்களைச் சேர்த்தாள். விதவைகள், பசியால் தவித்தவர்கள், வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள், குடிகாரர்களால் உதைத்துத் துரத்தப் பட்டவர்கள். வீச்சரிவாளால் வெட்டப் பட்டவர்கள், குடிகார சொந்தத் தகப்பன்/சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள், அநாதையாக விடப்பட்ட இரண்டாம்/மூன்றாம் தாரப் பெண்டாட்டிகள். திராவிட இளைஞர்களால் விரட்டப் பட்ட தாய்மார்கள்…
அவர்கள் “நல்லதங்காள் பரஸ்பர உதவி சங்கம்” என ஒரு Selfie Help Group தொடங்கினர்.
முதல் தீர்மானம் போட்டனர்:
“தற்கொலைக்குத் தள்ளும் கதைகளை பக்திப் பாடலாக்கவோ நாட்டார் கதையாக்கவோ கூடாது.”
இந்த இயக்கம் viral ஆனது. #JusticeForNallathangal, #SevenKidsSevenRights, #OpenTheGranary ஆகிய hashtags, trend ஆயின.
நல்லண்ணன் திரும்பிவந்தான். நடந்ததை அறிந்து வீச்சரிவாளை எடுத்தான். சாதிப் பெருமை பேசினான். அவன் திராவிடன்.
“என் மனைவியைத் தண்டிப்பேன்!”
நல்லதங்காள் கையை உயர்த்தினாள்.
“Stop. இதுதான் toxic masculinity season two. நான் உதவி கேட்டபோது நீ எங்கே இருந்தாய்? இப்போது வாள் எடுத்தால் hero ஆகி விடுவாயா? அடுத்து முதலையமச்சராகவே ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறாயா?”
நல்லண்ணன் வாளை மெதுவாகக் கீழே வைத்தான். வாளாவிருந்தான். வாள்வாங்கு வாள்ந்தான், ஏனெனில் அவன் திராவிடன், தனித்தமிழ் வெறியன், ழ அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.
எது எப்படியோ – நல்லண்ணன் நல்லதங்காளைக் கேட்டான்: “அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?”
“முதலில் கேள். மன்னிப்பு கேள். பிறகு மறுபடியும் மன்னிப்பு கேள். அடுத்து, வீட்டிலுள்ள தானியத்தைப் பகிர். அதன் பின் unpaid care, household work பற்றி workshop attend பண்ணு. அது வரை நீ அண்ணனில்ல, நீ எனக்கு அண்ணனில்ல – அப்டிதான் மணிரத்னம் படத்துல வசனம் இருக்கும்.”
மூளியலங்காரியும் முன்வந்தாள்.
“பழி… வேண்டாம், எனக்கு வேண்டாம்… villain ஆக்கிட்டாங்க… என்னை மட்டும் villain ஆக்கிட்டாங்க. மணிரத்ன வசனம் எனக்கும்தான் தெரியும்… இந்த வீட்டில் உணவின் மீது உண்மையான உரிமை யாருக்கு இருந்தது? நான் வீட்டின் கதவை அடைத்தேன் – ஆனால் கதவை அமைத்தது யார்? ஒரு ஆணாதிக்க தச்சர் தானே? வீட்டைக் கட்டியது யார்? ஆதிக்கவெறி கொண்ட ஒரு ஆண் மேஸ்திரிதானே?”
அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பின்னர் narrator நைஸாக மெதுவாகக் கதையை முடிக்க முயன்றான். ஏனெனில் அவன் மனைவி அவனுக்கு ultimatum கொடுத்திருந்தாள். “சும்மா கதை எழுதறேன் கட்டுரை எழுதறேன் கத்தரிக்கா நறுக்கறேன்னு கதவுடாம மொதல்ல பத்துபாத்திரம் தேய்!”
…நல்லதங்காள் தடுத்தாள்.
“இன்னும் முடிவில்லை.”
“என்ன வேண்டும்?”
“எனக்கு கோவில் வேண்டாம். பொங்கல் விழாவில் அழுது பாடும் கதை வேண்டாம். உயிரோடு இருக்கும் பெண்களுக்கு உணவு, பாதுகாப்பு, சொத்துரிமை, மனநல உதவி வேண்டும்.”
“அது climax-க்கு சற்றே policy-heavy ஆக இருக்கிறது.”
“அப்படியே எழுதுங்கள்.”
இறுதியில் நல்லதங்காள் தெய்வமாகவில்லை. Motivational speaker-ஆகவும் மாறவில்லை. நாட்டாரியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பாளையங்கோட்டைப் பாதிரிகளால் கழிசடை ரிஸர்ச்சும் செய்யப் படவில்லை.
மாறாக – அவள் ஊரில் பொதுச் சமையலறை, குழந்தை பராமரிப்பு மையம், பெண்களுக்கான அவசர நிதி ஆகியவற்றை உருவாக்கினாள். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி எரித்துச் சாம்பலாக்கினாள்.
கே அண்ணாமலை அவர் பங்குக்கு அகமகிழ்ந்து அவளுக்கு விழா எடுத்து வீ-த-லீடர்ஸ் உறுப்பினர் அட்டையை வழங்கினார். “எனக்கு அம்பது லட்சம் லீடர்ஸ் வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் பெண்கள் படும் பாட்டுக்கு பாரதீயஜனதா கட்சி பொறுப்பானால், பாஜகவையும் எதிர்த்து விமர்சிப்பேன்” என்றார்.
ஆனால் – தவேக விஜய் விசிறியான நல்லதங்காள், லீடர்-உறுப்பினராக மறுத்தாள். மேலும் அவளுக்கு அட்டை என்பது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என முந்தா நாள் வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.
அனைவராலும் அம்போவென விடப்பட்ட கிணறு மட்டும் தனிமையில் வாடிக்கொண்டு இருந்தது. பாவம்.
சுபம்.
ஆம்.
1
இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!
அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?
2
1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.
…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…
3
கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.
இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் – ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.
சரி.
முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.
இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.
மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)
இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…
ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.
(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)
ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்!
…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும் தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.
மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.
ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.
ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….
4
கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.
“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)
ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.
முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.
இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”
சுபம். :-)
5
ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.
ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…
இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?
இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?
நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன்.
இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.
எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.
அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.
ஆமென்.
(“தூயசக்தி” Vs “…த்தூ…யசக்தி”) + (“கொஞ்சம் டைம் கொடுங்க சார்!”): தமிழக வெறிக் கழகக் குறிப்புகள்
June 11, 2026
கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை – மாறாக எல்லாம் எதிர்பார்த்ததுதான்; இந்த தமிழக வெற்றிக் கழகம் உண்மையில் ஒருமாதிரி வெறிக் கழகம் என்பதுதான் உண்மையென நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
எப்படியும், ஏற்கனவே தெரியும் – இந்த வெறிக்கழகமும் ஒரு திராவிடமாடல் காட்சிதான் என்று!
-0-0-0-0-0-0-
சிலபல சகவேலைவெட்டியற்ற நண்பர்கள் (‘நல்லெண்ணத்துடன்’ என எடுத்துக்கொண்டு தொலைக்கிறேன்; + இவர்களில் சிலர் மகன் சொன்னான் அல்லது பேரன்/பேத்தி பரிந்துரைத்தனர் ப்ளடிஹெல் என நடிகருக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது உபரித் தகவல் – ஆகவே அவர்களுடைய ‘இருப்பின் அவஸ்தை’ எழவானது புரிந்துகொள்ளக் கூடியதே!) சொல்வது என்னவென்றால்…
(not that any of us old/decrepit crones really matters, in the big picture after all, but still…)
“கொஞ்ச நாளாவது இந்த விஜய் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டாமா? முதலையமைச்சர் உட்பட அனைவருக்கும், இந்த நாட்டு நிர்வாக விஷயங்களைப் பற்றிப் பெரும்பாலும் முன்னனுபவம் இருந்திருக்கவில்லைதாமே? எப்படித்தான் ஒரே மாதத்தில் ஊழல் திராவிடத்தால் துப்புரவாக ஒழிக்கப் பட்ட நிர்வாகத்தைச் சரி செய்ய முடியும்? ஆறுமாதம் ஒருவருடம் என ஹனிமூன் சனிமூன் கொடுப்பது நியாயமாகத்தானே இருக்கும்?”
சரிதான்.உங்கள் வாதம் முழுக்க முழுக்க தவறு, பிறழ்வு என்று ஒர்ரேயடியாகச் சொல்ல முடியாது; புதிய ஆட்சிக்கு ஒரு அளவு அவகாசம் தேவை என்பதும் ஒருமாதிரி (பிற சமயங்களில்) ஒப்புக்கொள்ளக்கூடிய நியாயமான கருத்துதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு எந்த விமர்சனத்தையும் ஒத்திவைக்க முடியாது என்பதும் உண்மை.
எது எப்படியோ… நண்பர்களின் கருணையும் கரிசனமும் மிகுந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்க, சில தர்க்கரீதியான(!) எதிர்வாதங்களை முன் வைத்தேன் – அவற்றை ஒருமாதிரி தொகுத்து அளிக்கிறேன்… (எதிர்கருத்துகளைத் தாராளமாக முன்வைக்கலாம்)
-0-0-0-0-0-0-
தேர்தலுக்கு முன் இருந்த அசாத்தியமான தன்னம்பிக்கை, தேர்தலுக்குப் பிறகும் பொருந்தி வரவேண்டும், செயலில் காண்பிக்கப் படவேண்டும்
ஆட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள். வென்ற பிறகு மட்டும் ‘எங்களுக்கு அனுபவம் இல்லை, நேரம் கொடுங்கள்’ என்றால், தேர்தலுக்கு முன் சொன்ன தயார்நிலை என்ன ஆனது?
அது அட்ச்சிவுடல் புளுகுதானே?
“அனுபவம் இல்லை” என்பது பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துக்கொள்ள சால்ஜாப்பு அல்ல
…விமானம் ஓட்ட அனுபவம் இல்லாதவரிடம் விமானத்தை ஒப்படைத்த பிறகு, ‘அவருக்கு அனுபவம் இல்லையே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பயணிகளிடம் சொல்ல முடியுமா? அனுபவம் இல்லாதது நடப்புக்குக் காரணமாக இருக்கலாம்; ஆனால் அது தோல்விக்கான, நொதுமல் நிலைக்கான நியாயம் ஆகாது.
எதற்கெடுத்தாலும் பழைய ஆட்சியைக் குறை மட்டும் (அவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், திமுக அஇஅதிமுக திராவிடன்கள் அயோக்கியப் பொறுக்கி ராஸ்கல்ஸ் என்றாலும்) கூறுவது செயல்திறன் அல்ல
ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, ‘முந்தைய மருத்துவர் எல்லாம் கெடுத்து விட்டார், சொதப்பியிருக்கிறார்’ என்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டே இருந்தால், நோயாளி குணமாகிவிட மாட்டார். குறையை கண்டுபிடிப்பதோடு, சிகிச்சையும் தொடங்க வேண்டும் அல்லவா?
அவகாசம் கேட்பவர்களும் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்ட வேண்டும்
புதிய வீட்டை வாங்கியவர், ‘முந்தைய உரிமையாளர் வீடு மோசமாக வைத்திருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் ஒரு மாதம் கழித்தும் தூசி துடைக்கப் படவில்லை, ஒட்டடை அடிக்கப்படவில்லை, பெருச்சாளிகள் அகற்றப்படவில்லை என்றால், ‘சுத்தம் செய்யத் தொடங்கவே இல்லையா?’ என்ற கேள்வி வருவது இயல்புதானே?
நிர்வாகம் ஒரேஒரு ‘அதி’மனிதரின் அனுபவத்தால் மட்டும் இயங்காது
முதல்வருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள், ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாக அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க, எல்லா குறைகளுக்கும் ‘அனுபவமின்மை’யை மட்டும் காரணமாகச் சொல்வது எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்கு விளக்கமல்லவா? (அவர் அனுபவஸ்த வெளியாட்களிடம் அறிவுரை கூடக் கேட்டுப் பெறலாமே?
அவகாசம் கொடுப்பதும், கண்காணிப்பதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல
ஒரு மாணவருக்கு ஆண்டு முழுவதும் படிக்க நேரம் கொடுக்கலாம். ஆனால் முதல் தேர்விலேயே 0 மதிப்பெண் எடுத்தால், ‘என்ன மசுத்துக்குப் படித்தாய்?’ என்று கேட்பது தவறல்லவே?
“முந்தைய ஆட்சி மோசம்” என்பது நிரூபிக்கப்பட வேண்டிய முன்னூகம் (இது 100% உண்மையென்றாலும், இதற்கான எதிர்வினையை, குறைந்த பட்சம் சட்ட-நிர்வாக ரீதியிலாவது செயலில் காட்டவேண்டாமா?)
திராவிட ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் ஒழித்துவிட்டது என்று முதலில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கப்படாத ஒரு முன்னூகத்தின் மீது முழு வாதத்தையும் கட்டுவது தர்க்கப் பிழை. அரசுப் பதவிகளுக்கு, விசிலடிச்சான் குஞ்சப்ப வெறியர்களும் பிறகட்சிகளிலிருந்து வந்த ஓடுகாலிகளும் வந்தேறி ஒருமாதம்+ ஆகிவிட்டது.
ஆக, குறைந்த பட்சம் – இந்த சமயத்தில் ஒவ்வொரு துறைக்கும், மிக விலாவாரியான ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வந்திருக்க வேண்டுமா இல்லையா?
வாக்குறுதிகள் உடனடி மதிப்பீட்டுக்கு உட்பட்டவையே
5 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களுக்கு அவகாசம் தேவை. ஆனால் முதல் நாளிலிருந்தே செய்யலாம் என்று கூறிய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனவா என்று கேட்பது, சர்வ நிச்சயமாக நியாயமானது.
தொடரும் ஊழல்கள், நியமனங்கள், ரீல்ஸ்முதல்வாதம், போலீஸ் சொதப்பல்கள், லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறை
கடந்த வாரம் நடந்த, எனக்குத் தெரிந்த மூன்று ரியல் எஸ்டேட் நிலப் பரிவர்த்தனைகளில் (வேலூர், மதுரை, மதுராந்தகம் வட்டாரங்கள்) – லஞ்சம் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. மேலிடத்துக்கும் அவர்களுக்குப் பாத்தியதைப் பட்டதைக் கொடுக்கவேண்டும் என்கிற முனகலோடு.
வருவாய்த்துறை/பத்திரப்பதிவுசார் அதிகார வட்டங்களில் தொடர்ந்து லஞ்சவூழல்கள் நடந்த மணியம் தான். டாஸ்மாக் ஊழலும் தொடர்கிறது. நிலவளத்துறை சார் பாறை, மணல் கடத்தல்கள்+அதிசுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்எம்டிஏவிலும் அப்படியே.
லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறையின் தலைவராக அருண் எனும் ஒரு ஐபிஎஸ் நபர் நியமிக்கப் பட்டிருக்கிறார். வெளங்கிடும். மேலும் வெளங்க வாழ்த்து.
சந்தேகாஸ்பதமான பல அதிகாரி நியமனங்கள்… ஒரு சிலர் பழுதுபார்த்து டிங்கரிங் செய்யப்பட்டாலும் அதிகாரப்ரோக்கர்கள் சிலர் ஓரங்கட்டப் பட்டாலும், பெரும்பாலோர் பழைய கதைகளின் தொடர்ச்சியே. திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள் May 17, 2026
முதலையமைச்ச நடிகரின் அமைச்சர்கள் – இவர்களில் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டால் பாவமாக இருக்கிறது. இவர்களில் சிலபலர் பாவம் செய்பவர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. சர்வம் அதிகாரிமயம் தமிழகஜகத்.
நடிகரின் உள்வட்டத்தில் இருக்கும் ஆசாமிகள் சந்தேகாஸ்பதம். ஆனால் – இன்னமும் சபரீசன் போன்ற ஈசல்கள் உள்வட்டத்துக்கு வரவில்லை என்பதுதான் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியம்.
ரீல்ஸ் அவ்ளோ பார்ப்பதில்லை, சக்தியில்லை; ஆனால் சிலபல செய்திகளாகவாவது தெரிந்துகொள்வதற்கு – பத்ரி சேஷாத்ரியின் கருணைதான் காரணம் – அவருடைய கிழக்கு நியூஸ் செய்தியலசல்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவருக்கு என் நன்றி.
…ஆனால், இப்படியே இன்னும் எவ்ளோ நாட்களுக்குத் தொடரும்? சலிப்பாக இருக்கிறது…
வீட்டு-தொழில் நிர்வாகத்துக்கு ஒரு விதி, அரசுக்கு ஒரு விதி என இருக்க முடியுமா
நமது வீட்டிலோ தொழில்முறையாகவோ, புத்தம்புதிதாக ஒரு பணியாளரை நியமனம் செய்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் கூடமாட ஓடியாடி உதவி செய்பவராகவோ, அல்லது ஒரு தொழில்முறை எஞ்ஜினீயர்-கஞ்சிநீராகவோ இருக்கலாம் – இவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் ‘வேலை கற்றுக் கொள்ள’ அப்படியிப்படி எனப் பொறுமை காத்திருப்போம்?
“தம்பி, நீ எலக்ட்ரானிக் ஸ் படித்திருக்கிறாய் அல்லவா? உன் முதல் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“சார், நான் என் மேனேஜரை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன்!”
“அம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, அடுத்த மாதமாவது ஒரு வாய் டீ போடக் கற்றுக் கொள்வீர்களா?”
“மாட்டேன். உங்கள் வீட்டில் ஆகும் டீ செலவைப் பற்றி மிக விரிவான ஒரு பழுப்பு அறிக்கையை அடுத்த மாதம் கொடுக்கப் போகிறேன்; பிறகு ஆவன செய்கிறேன்…”
…இந்த நிலைமையை நாம் ஒப்புக் கொள்வோமா? மாட்டோமல்லவா?
இந்த விஜய்குஜய் ரீல்ஸ் கதிகலக்கல் வாதிகளுக்கு மட்டும் நாம் ஒருமாதிரி விதிவிலக்கம் கொடுக்கவேண்டும், சொல்லுங்கள்?
நம்மைப் போன்ற சாமானியர்களில் பெரும்பான்மையினர் (அதாவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் first past the post முறைமைப் படி) பலரால் நமக்கும் நம் தேசத்துக்கும் பணிவிடை செய்வதற்காக, ஒருமாதிரியாகத் தெரிவு செய்யப் பட்ட கட்சிதானே இந்த தமிழக வெறிக் கழகம்?
-0-0-0-0-0-
சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களின் வாதத்தில் உள்ள முக்கியமான தர்க்கப் பிழை: “புதிய அரசு என்பதால் விமர்சிக்கக் கூடாது” என்கிற முட்டாள்தனமான முடிவுக்கு செல்வது.
சரி. அப்படியானால் – சரியான நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?
“புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கலாம் – அதாவது நாம் கருணைமுதல்வாதிகளாக இருந்தால்; அதே நேரத்தில் அல்லது ஆனால், அவர்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கைகள், நியமனங்கள், முடிவுகள், முன்னேற்றங்கள், ஊழல்-தொடர்கதைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலிருந்தே கேள்வி கேட்கவும் மதிப்பிடவும் முடியும்.”
இதுதான், அரசியல் சார்பற்ற, நிர்வாகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட எதிர்வாதமாக இருக்கும்.
திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…
A while ago, the Ministry of Culture (of Govt of India) came out with a tweet on bharatanatyam in good faith, which was canonically correct and backed up by evidence. There was no hearsay or stupidity involved at all, but then… Read the rest of this entry »
ஈவெரா ‘பெரியார்’ அருளிச் செய்த தீபாவளி வாழ்த்து!
October 21, 2025
ஆச்சரியமாக இருக்கிறதா? நானும் இது குறித்து நேற்றிரவு கேள்விப்பட்டபோது, திடுக்கிட்டேவிட்டேன்! Read the rest of this entry »
இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
Not infrequently, I get asked: ‘could you list-out some good colleges/univs in India for my kids, nephews, nieces, neighbor-kids++’ by anxious parents & neighbors – as if I know everything and maintain an uptodate repository of informed-knowledge about all of them – and if I feel like, sometimes I do respond.
The following was one such case, and here it is – FWIW. Read the rest of this entry »
Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)
Let us explore just one point in this context. Read the rest of this entry »
வடைக்கிருத்தல்
July 13, 2025
வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »
(or) …the tragedy of Muslims of India (um, mainly for the Hindus) – an averse text: Read the rest of this entry »
இளம் அண்ணாமலையும் ஒப்பாரி வள்ளல்களும்…
April 10, 2025
வேறு வழியேயில்லை, ஆகவே! Read the rest of this entry »
…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?
எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »
ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:
Raalraa Says: March 18, 2025 at 09:43
அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.
மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:
வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21
ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.
- மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
- ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
- மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் – ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
- இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
- பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர – ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
- ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.
அவ்ளொதான்.
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »
(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.
In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.
Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!
So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)
Anyway. Read the rest of this entry »
…உங்கள் உடனடி உடும்படித்தேவைக்கு, சங்ககால பொற்கால-போர்க்கால ரீதியில், அதன் ஏகபோக டீலர்களை அணுகவும்:
திராவிடமாடல் + தமிழ்க்குடிபெருங்குடி வெறியர்கள்,
c/o லெமூரியக் குமரிக்கண்டம்.
ஹோல்ஸேல் ரேட்டில் சகாய விலை! ஸ்டாக்குகள் தீர்ந்துகொண்டே இருக்கின்றன, உஷார்!!
அல்லது, படிக்கவும்: தமிழப் பிரமைகள் – Tamil delusions, கலவை வெங்கட் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு. (சுட்டி அனுப்பிய நண்பருக்கு நன்றி.)
நானும் ஒருமாதிரி இவ்விஷயங்களைப் பற்றி (தமிழுக்குத் தேவையேயற்ற அண்டப் புளுகுகள்) சிலபல முறை எழுதியிருக்கிறேன்.
- Tamil Dating Industry: ‘Sangam Age’ spins & our lovely Tamil Hysteriagraphy – quick notes January 5, 2023
- ‘சங்க காலம்’ என்பது தமிழர்கள் ஏகோபித்து அடித்த கூட்டுகஞ்சா பராக்கிரமத்தின் விளைவு March 2, 2023
இந்தத் தமிழப் பிரமைகளைக் குறித்து துண்டு துண்டாகவாவது ஆதாரங்களுடன் எழுதி, பின்னர் பின்னடித்து வெண்முரசு ஸைஸுக்குப் புத்தகமாக வெளியிட்டால், வரலாறு காணாத ரீதியில் இன்னமும் அலைமோதிக்கொண்டு எண்ணிறந்தவர், லட்சக்கணக்கானவர்கள் படிப்பார்கள் எனவொரு பகீர்பிரமை எனக்கு…
அதாவது 7½ (ஏற்கனவே உள்ள வாசகர் படை, அடியேன் உட்பட) + 2 (அதிகப்படியாகப் படிக்கப் போகிறவர்கள்) = 100,000+.
உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி. ஆனால் உடும்புத்தைலம் முக்கியம், சரீங்களா?
1
The point:
While ‘Hindutva’ is unfairly targeted for its supposed ‘Nazi’ side in spite of there being no shred of ANY significant & tenable evidence AT ALL – the Jihadi, anti-semitic & Nazi supporters + collaborators have hardly been noticed.
What’s even more galling: the clueless ‘liberals’ and communist elements (and of course the #DravidianModel scoundrels. Dravidian scumbags, among others, are ALSO anti-semites, thanks to their inveterate need to keep Muslim-voters under their thumb in Tamilnadu) keep repeating the same ‘Hindutva = Nazism‘ lies over and over against the Hindus…
This is an attempt to examine IndianMuslim-Nazi connections – with references. Read the rest of this entry »
















