On Dr N Ganesan’s Claim: “Sanskrit बीज/bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca வித்து/விதை/விசை..”
August 7, 2026
This longform post is about languages, roots, transmission directions in the context of Sanskrit & Tamil…
… and more importantly, it seeks to deal with suspect methodologies, premature optimizations, simplistic/superficial generalizations, giant logical leaps, self-referential statements, circular-reasoning, non-existing citations and the like, around some ideas – that have been plaguing the Tamil ‘discourse’ – or what passes for it.
I would also like to ascribe such seemingly unscholarly & infructuous approaches to a child-like eagerness/enthusiasm of some fundamentally good people – to ‘prove’ the ancientestest nature & origins of Tamil, in spite of all the evidence that stare at us in our face and associated kanging – and not to some deleterious motive. Okay – I agree that NOT all such folks are decent & ethical – leave alone being scholarly.
Normally, I do not indulge in major or sustained battles/discussions on X, because in my opinion, the context for the X-platform is not really about longform idea exchanges and also because I am not blue-ticked yet which would have otherwise allowed me to respond in longform. Also – ars longa vita brevis.
Again, I wanted to put in some significant time-effort in terms of approaching & analyzing this particular claim – as there are many many such types of uncalled-for claims that seem to be proliferating in the Tamil<->Sanskrit relationships – and I want to create some kind of a ‘template approach’ to deal with them. An exemplar, if you will.
Yes. I want to approach the claim as rigorously & as politely as possible, with a clear logic and marshalling of whatever evidence that I could muster; but of course I am not at all a Mr KnowAll and I do not have any scholarly pretensions. I continue to be an eager student of Tamil, Sanskrit & English – and assorted other things.
In any case, linguistics++ is only one of my minor interests, really. So, feel free to rebut/join etc in this discussion. Let us all learn together, if we can – with as much civility as needed and possible.
1
Background:
On July 29, 2026 this following discussion happened and I was not privy to that – am providing just the immediate context.
It was one rabid, frothing-at-the-mouth ‘Aravind’ who started off with an obtuse set of TamilSupremacist-Dravidian assertions. Pure unadulterated hatecraft. Usual story/fiction: Aryan invaders foisted themselves and Sanskrit on Tamilnadu post 13th century CE.
Here’s were Sri N Ganesan (henceforth NG) introduces the idea as in the subject/title of this post.
And ‘dagalti’ asks a follow-up query and NG answers, looping me in. As under.
I responded to him – and this post is the result of that undertaking from me to respond soon.
There was also another short exchange between me and NG:
Rest of the post is going to be about expanding on my observation:
~”Sanskrit bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca” is NOT established by DEDR 5401 & is phonologically weak as presented.
Ideally I would like to use ‘Dravidian’ instead of Dravidian, since it is a made up category-name chistened fairly recently, unlike the monikers Tamil or Sanskrit. It also has this heavy baggage of having been politically loaded. But, writing ‘Dravidian’ everytime could be jarring, so am avoiding that.
To the extent that my typing would allow for, I have used International Phonetic Alphabet (IPA), showing the correct pronunciation..
2
DEDR 5401
Dravidian Etymological Dictionary of 1984 (often abbreviated as DEDR), is a major academic resource painstakingly compiled and annotated by T. Burrow and M. B. Emeneau. Very reasonably comprehensive.
DEDR 5401 refers to a particular entry – that groups a large set of Dravidian forms meaning ‘sow’, ‘seed’, ‘semen’, ‘testicle’, and related notions. The distribution across South, Central and North Dravidian languages makes the underlying Dravidian family cohesive.
It is important to remember as a backgrounder that, DEDR is a comparative dictionary organised into proposed etymological groups, rather than a series of claims that every listed surface form must be inherited directly and regularly.
The important qualification occurs in the entry itself:
“Go., Kuwi, and Malt. words for ‘seed’ may be < IA.”
That warning matters. Burrow and Emeneau were explicitly allowing that forms such as Gondi vījā, Kuwi bica/bicca, and Malto bíci might be loans from Indo-Aryan, presumably from forms related to Sanskrit bīja.
Therefore, these particular forms cannot safely be used as independent evidence for a Dravidian development.
vittu -> viccu -> vīca -> bīja
That would risk circular reasoning. Some of the closest-sounding forms may already be Indo-Aryan loans.
3
What can reasonably be reconstructed for Dravidian?
The underlying family is usually represented approximately as something like:
- verbal base *vit- / *vitt-, ‘to sow, scatter seed’
- noun *vitt-, ‘seed’
- derivatives with suffixes, such as Tamil vitai
The exact Proto-Dravidian reconstruction depends on how alternations among vit-, vitt-, vitay-, vicc- are analysed.
Tamil forms such as:
- வித்து vittu, seed, semen
- விதை vitai, seed
- விதை- vita(i)-, to sow
- விச்சு viccu, seed or sowing-related form
…belong to the same general Dravidian lexical family according to DEDR. That much is reasonable.
But DEDR 5401 does not itself reconstruct Sanskrit bīja from this family.
So, the reason as to why this extract was used by NG is not at all clear!
4
Is vittu > viccu plausible?
Tamil and its sister/other languages exhibit historically conditioned palatalisation and alternations involving k/c, c/y, and consonants adjacent to front vowels or y. However, a specific development vittu > viccu requires its own comparative and morphological evidence and should not be justified by a general Tamil rule tt > cc.
One cannot simply posit a general rule: tt > cc, without specifying:
- the earlier phonological environment
- the chronological stage
- parallel examples
- whether the form is inherited, dialectal, analogical or expressive
The examples given in the claim of NG do NOT establish such a rule.
பச்சை : பாசி – paccai and pāci cannot simply be treated as an illustration of free cc : c alternation. Their vowel quantities, morphology and lexical histories also need explanation.
கொவ்வை : கோவை – This pair likewise involves more than geminate simplification. It has differences in vowel length and medial consonantal structure.
Similarity alone does not prove that it illustrates the development required for vittu > viccu.
விச்சு : வீசு – This comparison is particularly problematic.
Tamil வீசு vīcu, ‘to throw, fling, wave, blow, spread’, belongs in DEDR to a separate comparison associated with scattering or throwing, referenced by DEDR 5400 vitir- in the quoted entry. DEDR’s “Cf. 5400 Ta. vitir” indicates comparison, not an assertion that vīcu regularly derives from vittu.
A derivation such as vittu > viccu > vīcu would require, at minimum:
- tt > cc
- loss of gemination cc > c
- i > ī
- and a semantic development
It may possible that each step might conceivably occur somewhere, but the sequence needs evidence.
It cannot be inferred merely from resemblance as comfortingly assumed & indicated by NG.
In fact, this ‘resemblance’ issue is the one that is there in most of the takes of ‘folk etymologists’ like Mannarmannan & Paari Saalan, that plague the Tamil discussions.
5
The proposed vīca > bīja equation
This is the weakest part of the argument or the process for claim by NG.
Sanskrit bīja /biːd͡ʑa/ ‘seed’ and a proposed Dravidian form vīca or vīja look moderately similar, but historical etymology requires regular sound correspondences.
A borrowing from Dravidian *vitt- into Indo-Aryan as bīja (as claimed by NG) would definitely require explanations for:
| Dravidian | Sanskrit | Problem |
|---|---|---|
| initial v- | b- | Possible in some borrowing situations, but must be demonstrated |
| medial -tt- | -j- | No obvious regular substitution |
| final consonant | final -a | Sanskrit nominal adaptation is possible |
| short i | long ī | Requires an account or an example |
| geminate stop | voiced palatal affricate | Major unexplained change, this is surprising |
The change *vitt- > bīja- is therefore not a transparent or recognised sound substitution – UNLESS NG can satisfy every one of the above 5 criteria.
One might instead compare the later Dravidian forms vīja, bica, bíci, but DEDR itself warns that precisely these may come from Indo-Aryan.
They are consequently poor evidence for the opposite direction (Dravidian -> Sanskrit) of borrowing.
6
What is the accepted etymology of Sanskrit bīja?
Sanskrit bīja unquestionably means ‘seed’, and by extension ‘germ’, ‘source’, ‘cause’, generative material, semen and, in tantric usage, a ‘seed syllable’. The semantic explanation of bīja-mantra as a compact sound containing generative spiritual potency is traditional and unobjectionable.
I will NOT dispute that its deeper etymology, however, is uncertain at least in my limited knowledge. It seems to lack a straightforward and universally accepted Indo-European derivation. Such uncertainty makes a substrate or borrowing hypothesis possible in principle, but:
‘Uncertain within Indo-European’ does not automatically mean ‘borrowed from Dravidian!’
To establish Dravidian origin, scholars like NG would definitely need:
- a reconstructible Dravidian source form predating Indo-Aryan attestation
- regular or independently paralleled sound substitutions
- plausible geographical and chronological contact
- and exclusion of borrowing in the reverse direction
The proposed argument of NG supplies mainly semantic similarity and surface resemblance.
But one needs arguments that are really sound and substantive to present a scholarly take!
7
Is vit- a Sanskrit dhātu derived from Dravidian?
The wording of NG: “vit- is the dhātu-vēr in Dravidian” unfortunately mixes Sanskrit grammatical terminology with comparative reconstruction.
A better formulation would perhaps be: “Proto-Dravidian appears to have had a verbal root or base *vit- / *vitt-, ‘sow’.”
Calling it a dhātu is understandable informally, but Sanskrit grammatical roots and comparative Dravidian reconstructions belong to different descriptive frameworks.
Further, the existence of a (A) Dravidian root *vit- does not show that (B) Sanskrit bīja comes from it.
The two propositions A and B are separate which NG has to note of.
8
The Vināyakar Akaval claim
The contentious line is: “மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்..”
Project Madurai’s text (specifically cited by NG) and commentary interpret மும்மதச் சுவடு as the marks or traces produced by three kinds or streams of elephant rut-fluid. The particular commentary of the great Sri TP Meenakshi Sundaram Pillai, hosted there gives the names of those 3 as: கன்ன மதம், கபோல மதம், கோச மதம்…
…one would suppose that, after referring to the Project Madurai in the context of Akaval, NG would quote this exact reference, actually cited by him!
But NG ‘quotes’ something different! கர்ண மதம், கபோல மதம், பீஜ மதம்!! பீஜ and NOT கோச as in his reference! When asked about NG replied, as in the snippet from the Section1 above – “many scholars explain the பீஜ மதம்.”
I was slightly surprised by the defensive ‘I am my own citation’ kind of response, but that’s not a significant issue in the big picture of a host of other concerning lacunae in the claims of NG.
Of course one is aware that in a few glosses of the phrase mummdam, bīja-mada is given as a lexical explanation – but then NONE of them are of the incredible scholarly levels of Sri TPM Pillai!
Therefore:
- மும்மதம் in the poem has no etymological bearing on Sanskrit bīja.
- The reading பீஜ மதம் appears to be one modern anatomical or Sanskritising gloss among variants.
- Even were bīja-mada an authentic technical term, it would merely use Sanskrit bīja in the sense ‘semen/generative fluid’. It would not prove that bīja originated in Tamil or Dravidian.
The poem ‘Vinayakar Akaval’ brought in by NG to prove his claim, is consequently irrelevant to the proposed etymology.
9
Conclusion
I hope, at least Dr N Ganesan has read this far… :-) In spite of this post is already some 1900+ words in length! Loooooong form indeed! But I think it would be an useful template or a framework to respond to such claims, hopefully… at least for me!
It also took me upwards of 7 hours to process claims, collect details, organize them and then respond comprehensively (one hopes so!) to the claims made by NG.
But.
I would be very eager to know NG’s response (and interested others) in terms of defending or revising his claims – point-by-point AND with tangible, verifiable & scholarly evidence.
Anyway. Here’s hoping this would encourage decent & evidence-logic based discussions on one of the vexatious issues with our Tamil. Thanks.
(END)
நல்லதங்காள் 2.0: ஒருமாதிரி ஜென்-ஸீக்களுக்காகவென ஆரம்பித்து வழக்கமான பாணியில் போஸ்ட்-மாடர்ன் கதை சொல்லல்
August 5, 2026
இதனை, கிணற்றின் விளிம்பில் ஒரு deconstruction எனவொரு மாதிரியாகவும் புரிந்து கொல்லலாம்.
ஒரு காலத்தில், அதாவது Wi-Fi கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும், ப்ளெட்டி குடும்ப WhatsApp குழுக்கள் தோன்றுவதற்கு முன்பும், நல்லதங்காள் என்ற பெண் வாழ்ந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா முடிவுகளையும் அவளைத் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் அந்தக் காலத்தின் ‘குடும்ப விழுமியங்கள்’. என்ன wtf. இது அப்பட்டமான patriarchy. அவ்ளோதான் கதை.
-0-0-0-0-0-
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ‘Family planning என்பது மேற்கத்திய சதி’ என்று அக்கால சமூகமே முடிவு செய்திருக்க வேண்டும். கணவன் காசிராஜன். குடிகாரன். டாஸ்மாக்கில் செந்தில்பாலாஜிக்குக் கப்பம் கட்டவே அவனுக்கு நேரம் போதவில்லை. எப்படியும், திருட்டுத் திராவிட அரசுகள் கொடுத்த பிச்சை ‘உரிமைத் தொகை’ களை அப்படியே திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கே கொடுத்துக்கொண்டிருந்த குடிமகன் தான் அவன்.
காசிராஜன் பெயரில் ராஜா இருந்தாலும் வீட்டில் காசே இல்லை, cause இல்லையென்றால் பின்னர் எப்படி எஃபெக்ட் வரும்? ரேஷன் கடை புழுத்த அரிசிகூட வீட்டில் இல்லை. வறட்சி வந்தது.
வழக்கம்போல ‘ஏ திமிர் பிடித்த கர்நாடகாவே! காவிரி நீரைத் திறந்து விடு’ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அது வைகைக் கறை படிந்த நிலம். தமிழகத்தின் தென்னகம்.
நீரில்லை. வயலில் பயிர் இல்லை. வீட்டில் உணவு இல்லை. ஆனால் ஊர்ப் பெரியவர்கள் ஆலோசனை மட்டும் டன் கணக்கில் வைத்திருந்தார்கள். கேட்டால் வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றார்கள். இருந்தாலும், நாங்க பேக்வர்ட் எங்களை வறட்சிப் படுத்திவிட்டார்கள் வந்தேறி ஆரியர் என்றார்கள். பெரிசுங்கன்னாலே தொல்லைதான்.
“பெண் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.” – ஆனா அதே சமயம் – ராணிமங்கம்மா அல்லிராணி வேலு நாச்சியார் எனப் புல்லரித்துக் கொள்வார்கள், ப்ளடி.
“குடும்ப மானம் காக்க வேண்டும்.” – அதே சமயம் குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே ரேப் செய்வார்கள்…
“கஷ்டம் வந்தால் கடவுளை நினைக்க வேண்டும்.” – ஆனா கஷ்டம் என் மூலமா வந்தா பேசாம மூடிக்கினு போய்டணும், கேட்டியா?
அரிசி கேட்டால் அப்ஸ்ட்ராக்ட் தத்துவம் இலவசமாகக் கிடைத்தது. வெளங்கிடும்.
ஒருநாள் நல்லதங்காள் தன் அண்ணன் நல்லண்ணன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள். ‘Blood is thicker than water’ என்ற பழமொழியை நம்பினாள். ஆனால் அந்தப் பழமொழிக்கு கீழே சிறிய எழுத்தில் ‘Terms and conditions apply. Sister-in-law approval mandatory’ என்று இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அண்ணி நல்லதங்காளை கெட்டநாத்தியாக நினைத்தாள்; ஏனெனில், அவள் கூகில் ட்ரான்ஸ்லேஷன் சரியில்லை.
எது எப்படியோ. வேறுவழியில்லாத நல்லதங்காள், ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு காசிராஜன் சகவாசமே வேண்டாம் என வெளி நடப்பு செய்தாள். குழந்தைகள் வழியில் தொடர்ந்து கேட்டனர்:
“அம்மா, இன்னும் எவ்வளவு டிஸ்டென்ஸ்?”
“பொட்டிக் கடேல குர்குரே பாக்கெட் வாங்கிக் கொடுக்கறியா?”
“அம்மா, அடுத்த மீல்ஸ் எங்க? எவ்ளோ நேரம் நான் மீம்ஸ் பாத்துக்கிட்டு இருக்கறது?”
“அம்மா, hotspot இருக்கா? டவரே கெடக்க மாட்டேங்குதே!”
கடைசி இரண்டு கேள்விகளை யார் கேட்டார்கள் என்பது வரலாற்றுக் கதையாடல் பிரச்சினை. சில ஆய்வாளர்கள் அது பின்னாளில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்கிறார்கள். பல தமிழ்தேசியப் பேராசிரியர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே எங்கள் செந்தமிழ் முப்பாட்டனார்கள் இண்டெர்னெட் மொபைல் ஃபோன் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா எனக் கேட்டார்கள். “உலகத்துக்கே இரும்பைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் எங்கள் லெமூரியர்கள்தாமே?”
நல்லண்ணன் அப்போது வீட்டில் இல்லை. அவனுடைய மனைவி மூளியலங்காரி இருந்தாள். பழைய கதையில் அவள் ‘கொடூர அண்ணி.’ நம்முடைய புதிய critical edition-ல் அவள் patriarchy-யின் middle-management அதிகாரி. வீட்டின் உணவு, கதவு, சமையலறை, குடும்ப மரியாதை ஆகிய சிறு அதிகாரங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன. அவற்றை அவள் முழு தீவிரத்துடன் பயன்படுத்தினாள்.
ஏனெனில் மேலிருந்து ஒடுக்கப்பட்டவர் கீழே ஒருவரைக் கண்டால், hierarchy தன்னை reproduce செய்துகொள்ளும்.
“எதற்காக வந்தாய்?” என்றாள் மூளியலங்காரி.
நல்லதங்காள்: “குழந்தைகள் பசித்திருக்கிறார்கள்.”
“அதற்காக இங்கேயா வருவாய்? குடும்பத்தோடு வந்திருக்கிறாயே! முன்பே calendar invite அனுப்பியிருக்கலாமே?”
“நான் கூக்ல் calendar உபயோகிப்பது இல்லை, .”
“குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்?”
“என் ஃபோன்ல சார்ஜே இல்லை! நல்லண்ணன் தான் நல்லெண்ணத்தோட டாப்-அப் செஞ்சி கொடுக்கறேன்னான்…”
“அதுதான் பிரச்சினை. திட்டமிடல் இல்லை. Financial literacy இல்லை. இப்போது emotional blackmail. தேவையா? உன்னோட எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?”
இதைச் சொல்லிக்கொண்டே மூளியலங்காரி தன் LinkedIn-ல் “boundaries are part of self-care” என்று சாட்ஜிபிடி உதவியுடன் பதிவிட்டாள். பதிலுக்கு நிறைய லிங்க்ட்இன்ன ஆண்கள் DM செய்து “ஏன், நாங்களும் உனக்கு உதவி செய்ய முடியுமே! பக்கத்து கஃபேகாஃபிடேயில் ஆரம்பிக்கலாமா? உன் முகம் அழகாக இருக்கிறது… உன் கட்டுரை அதை விட…”
…மூளியலங்காரி, நல்லதங்காளுக்கு உடைந்த பாத்திரத்தில் பழைய அழுகிய ஜவ்வரிசி மாவைத் தந்தாள். அடுப்புக்கு ஈர விறகு. சமைக்க துளையுள்ள பானை. பின்னர், “வாய்ப்பு கொடுத்தேன்; பயன்படுத்தத் தெரியவில்லை” என்றாள். இது சமகால நிறுவனங்களில் PIP performance improvement plan என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் அழுதனர், அவர்களுக்கு வேற என்ன வேலை.
நல்லதங்காள் மௌனமாக இருந்தாள். ஏனெனில் ஜென்ஸீ கதையாசிரியர்கள் துன்புறும் பெண்களுக்கு நீண்ட உரையாடல் எழுத மாட்டார்கள். அவர்கள் கண்ணீர், கற்பு, தியாகம் ஆகிய மூன்று reaction emojis மட்டுமே வழங்குவார்கள். உங்களுக்கு எந்த இமோஜி தேவையோ இட்டுக் கொள்ளவும்.
சரி. இப்போது நல்லதங்காள் வெளியேறினாள். ஏனெனில், முன்னதாக மூளியலங்காரி கதவடைப்பு செய்திருந்தாள்.
இங்கே narrator (நான் தான்!) திடீரென்று கதையை நிறுத்துகிறான்.
Narrator: “டேய் வாசகா! அடுத்ததாக நீ எதிர்பார்ப்பது கிணறு.” (வாசகிக்கு இதனைப் பெண்படுத்திக்கொள்ளவும்)
வாசகர்: “ஆம். எனக்கும் Original plot தெரியும். இப்பதான் ஜெமினியில் கேட்டேன். ஆனால் அந்த ஸ்டூடியோவ எப்பவோ இழுத்து மூடிட்டாங்களாம்!”
நல்லதங்காள்: “ஒரு நிமிடம்! என் வாழ்க்கையை ஏன் எல்லோரும் spoiler-alert பண்ணுகிறீர்கள்?”
களிம்பு தடவிக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் இருந்த அவள் கதையின் ஓரத்திலிருந்து வெளியே வந்து ஆசிரியரிடம் கேட்டாள்:
“எனக்கு வேறு option இருக்கறாமாறீ எழுதவே முடியாதா?”
ஆசிரியர் பதற்றமடைந்தார். (இவரும் அதே நர்ரேட்டர் தான்!)
“இது புகழ்பெற்ற சோகக் கதை. நீ கிணற்றில் குதிக்காவிட்டால் cultural authenticity போய்விடும். அந்த்ரொபாலஜி பத்தி ராஜன்குறை கிருஷ்ணன் ரோஸா வஸந்தெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?”
நல்லதங்காள்: “என் குழந்தைகள் இறந்தால்தான் உங்கள் culture authentic ஆகுமா?”
“அது தாய்மையின் உச்சம். அதைத்தான் எங்களுக்கு மிஷெல் ஃபூக்கோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்… ஜெயுமோகன் கூட இது குறித்து ஒரு சுயமுன்னேற்றப் பதிவு போட்டிருக்கார்!”
“ஜெயமோகனோட எல்லா பதிவும் சுயமுன்னேற்றம் பத்திதான்… எனக்கு அதுதான் இப்ப ரொம்ப தேவையா?”
“அப்ப சாரு நிவேதிதா? எஸ் ராமகிருஷ்ணன்?? இவங்க சொன்னா பரவாயில்லயா?”
“கண்ட கழுதெங்க பத்தி பேச நான் இங்க வரல… சாப்பாடு கொடுக்காத சமூகம் குற்றமற்றது; ஆனால் – குழந்தைகளோடு இறந்த பெண் தெய்வமா?”
Critical theory அங்கே background music போல ஒலித்தது.
நல்லதங்காள் கிணற்றின் அருகில் நின்றாள். குழந்தைகளைப் பார்த்தாள். கிணற்றைப் பார்த்தாள். பின்னர் camera-வைப் பார்த்தாள். சமூக சாட்சியமாக ஒரு கடைசி ஸெல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
“இந்தக் கிணறு வெறும் கிணறு அல்ல. இது feudal patriarchy-யின் narrative apparatus. குடும்பம் என்னை வெளியே தள்ளியது. சமூகம் உதவி செய்யவில்லை. ஆனால் climax-ல் என் தனிப்பட்ட முடிவையே moral lesson ஆக்கப் போகிறார்கள்.”
மூத்த குழந்தை கேட்டது:
“அம்மா, அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?”
“கிணற்றை deconstruct செய்யப் போகிறோம்.”
அவர்கள் கிணற்றுக்குள் குதிக்கவில்லை. அதற்கு முன் ஒரு selfie எடுத்தனர்.
Caption: “All is well, that ends in a well.”
இன்ஸ்டாவுக்காக ஒரு ரீலும் போட்டனர். விஜய் படப்பாட்டு மெட்டு ஒன்றின் பின்புலத்தில் குடும்பத்தோடு குத்தாட்டம்.
பின்னர் நல்லதங்காள் அருகிலிருந்த திராவிட அபலைப் பெண்களைச் சேர்த்தாள். விதவைகள், பசியால் தவித்தவர்கள், வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள், குடிகாரர்களால் உதைத்துத் துரத்தப் பட்டவர்கள். வீச்சரிவாளால் வெட்டப் பட்டவர்கள், குடிகார சொந்தத் தகப்பன்/சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள், அநாதையாக விடப்பட்ட இரண்டாம்/மூன்றாம் தாரப் பெண்டாட்டிகள். திராவிட இளைஞர்களால் விரட்டப் பட்ட தாய்மார்கள்…
அவர்கள் “நல்லதங்காள் பரஸ்பர உதவி சங்கம்” என ஒரு Selfie Help Group தொடங்கினர்.
முதல் தீர்மானம் போட்டனர்:
“தற்கொலைக்குத் தள்ளும் கதைகளை பக்திப் பாடலாக்கவோ நாட்டார் கதையாக்கவோ கூடாது.”
இந்த இயக்கம் viral ஆனது. #JusticeForNallathangal, #SevenKidsSevenRights, #OpenTheGranary ஆகிய hashtags, trend ஆயின.
நல்லண்ணன் திரும்பிவந்தான். நடந்ததை அறிந்து வீச்சரிவாளை எடுத்தான். சாதிப் பெருமை பேசினான். அவன் திராவிடன்.
“என் மனைவியைத் தண்டிப்பேன்!”
நல்லதங்காள் கையை உயர்த்தினாள்.
“Stop. இதுதான் toxic masculinity season two. நான் உதவி கேட்டபோது நீ எங்கே இருந்தாய்? இப்போது வாள் எடுத்தால் hero ஆகி விடுவாயா? அடுத்து முதலையமச்சராகவே ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறாயா?”
நல்லண்ணன் வாளை மெதுவாகக் கீழே வைத்தான். வாளாவிருந்தான். வாள்வாங்கு வாள்ந்தான், ஏனெனில் அவன் திராவிடன், தனித்தமிழ் வெறியன், ழ அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.
எது எப்படியோ – நல்லண்ணன் நல்லதங்காளைக் கேட்டான்: “அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?”
“முதலில் கேள். மன்னிப்பு கேள். பிறகு மறுபடியும் மன்னிப்பு கேள். அடுத்து, வீட்டிலுள்ள தானியத்தைப் பகிர். அதன் பின் unpaid care, household work பற்றி workshop attend பண்ணு. அது வரை நீ அண்ணனில்ல, நீ எனக்கு அண்ணனில்ல – அப்டிதான் மணிரத்னம் படத்துல வசனம் இருக்கும்.”
மூளியலங்காரியும் முன்வந்தாள்.
“பழி… வேண்டாம், எனக்கு வேண்டாம்… villain ஆக்கிட்டாங்க… என்னை மட்டும் villain ஆக்கிட்டாங்க. மணிரத்ன வசனம் எனக்கும்தான் தெரியும்… இந்த வீட்டில் உணவின் மீது உண்மையான உரிமை யாருக்கு இருந்தது? நான் வீட்டின் கதவை அடைத்தேன் – ஆனால் கதவை அமைத்தது யார்? ஒரு ஆணாதிக்க தச்சர் தானே? வீட்டைக் கட்டியது யார்? ஆதிக்கவெறி கொண்ட ஒரு ஆண் மேஸ்திரிதானே?”
அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பின்னர் narrator நைஸாக மெதுவாகக் கதையை முடிக்க முயன்றான். ஏனெனில் அவன் மனைவி அவனுக்கு ultimatum கொடுத்திருந்தாள். “சும்மா கதை எழுதறேன் கட்டுரை எழுதறேன் கத்தரிக்கா நறுக்கறேன்னு கதவுடாம மொதல்ல பத்துபாத்திரம் தேய்!”
…நல்லதங்காள் தடுத்தாள்.
“இன்னும் முடிவில்லை.”
“என்ன வேண்டும்?”
“எனக்கு கோவில் வேண்டாம். பொங்கல் விழாவில் அழுது பாடும் கதை வேண்டாம். உயிரோடு இருக்கும் பெண்களுக்கு உணவு, பாதுகாப்பு, சொத்துரிமை, மனநல உதவி வேண்டும்.”
“அது climax-க்கு சற்றே policy-heavy ஆக இருக்கிறது.”
“அப்படியே எழுதுங்கள்.”
இறுதியில் நல்லதங்காள் தெய்வமாகவில்லை. Motivational speaker-ஆகவும் மாறவில்லை. நாட்டாரியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பாளையங்கோட்டைப் பாதிரிகளால் கழிசடை ரிஸர்ச்சும் செய்யப் படவில்லை.
மாறாக – அவள் ஊரில் பொதுச் சமையலறை, குழந்தை பராமரிப்பு மையம், பெண்களுக்கான அவசர நிதி ஆகியவற்றை உருவாக்கினாள். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி எரித்துச் சாம்பலாக்கினாள்.
கே அண்ணாமலை அவர் பங்குக்கு அகமகிழ்ந்து அவளுக்கு விழா எடுத்து வீ-த-லீடர்ஸ் உறுப்பினர் அட்டையை வழங்கினார். “எனக்கு அம்பது லட்சம் லீடர்ஸ் வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் பெண்கள் படும் பாட்டுக்கு பாரதீயஜனதா கட்சி பொறுப்பானால், பாஜகவையும் எதிர்த்து விமர்சிப்பேன்” என்றார்.
ஆனால் – தவேக விஜய் விசிறியான நல்லதங்காள், லீடர்-உறுப்பினராக மறுத்தாள். மேலும் அவளுக்கு அட்டை என்பது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என முந்தா நாள் வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.
அனைவராலும் அம்போவென விடப்பட்ட கிணறு மட்டும் தனிமையில் வாடிக்கொண்டு இருந்தது. பாவம்.
சுபம்.
Silappadikaram
Just reread (not really) Silappadikaram and honestly it is still a very modern netflixy sob-story, with its own sob-titles/cantos or kāthais.
Rich, spoilt way’lay’ing d00d blows up his marriage for a lay-dancer, discovers financial planning only after chapter 11 bankruptcy (unlike DMK Karunanidhi1, who did all the debauchery and totally laughed all the way to his dirty hoard for next 1000+ generations), goes to Madurai w/ his wife’s anklet like it is a start-up pivot.
The state executes him w/o basic due diligence; enraged heroine wifey walks in with receipts, proves the justice system failed, & literally bloody burns down the whole fucking city. Oh man.
~900s CE scribed Tamil true-fiction/classic says: marry well, know the lay-of-the-land, philander safely especially when the rubber hits the hittable, audit jewellery properly & never underestimate an angry woman with documentation.
Oneliner synopsis: One may be a total social retard and thrive, but without a suitable fire-retardant, he is toast.
Manimekalai
Just reread (um, not really) Manimekalai and it is basically the ancient (supposedly) Tamil version of someone inheriting everyone else’s drama and – sadly choosing instead – psycho-therapy, ethics, and of all things, Buddhism. Woe man.
A dancer’s daughter is expected to continue the dravidian family brand, a prince becomes dangerously obsessed with her, and the whole city behaves like ‘romantic pursuit’ is a valid governance model – reminds one of MK Stalin in his lay-days2, doesn’t it? So much for the ‘lay’ered narrative.
Anyway. Manimekalai says absolutely not to that period MK Stalin, gets divine relocation services, receives a magical begging bowl with unlimited food distribution capacity (of course, the substance of the wet-dreams of all shades of shady Dravidian politicos), and turns her life into a social welfare programme with metaphysics attached.
Meanwhile, the plot keeps thickening & pausing for debates on karma, rebirth, hunger, desire, compassion, and why everyone should bloody well stop making their personal cravings, society’s problem. It starts like a sequel to Silappadikaram, then becomes part courtroom, part philosophy seminar, part anti-horny public service announcement. What the fuck.
‘Ancient’ Tamil literature really said: your parents’ scandal is not your destiny, male attention is not a career path, and the best revenge is feeding the poor while achieving detachment. Whatever.
Oneliner synopsis: A superbowl can also be a supper bowl, as long as it isn’t lost supper – so supperess your desires, you retards!
Full disclosure:
The ‘inspiration’ for the above uncalled-for quickies came from:
Warning: Depending on how my fellow 7½s receive & react to this kind of irreverently respectful commentary (or nonsense, if you will) on the holy-cows of Tamil pride – this scholarly effort of synopsizing and adapting things for this crazed GenZ fellows, may or may not continue…
-0-0-0-0-
- “Karunanidhi has long dominated Tamil Nadu’s politics. He is the unquestioned leader of the DMK, a regional Tamil party with no obvious ideology other than support for Karunanidhi and a desire to remain in power.” ↩︎
- “Stalin had something of a thuggish reputation in the 1970s, including alleged involvement in multiple sex scandals. (Many in Chennai still tell stories, perhaps apocryphal, of pretty girls being plucked off the streets and handed over to Stalin for his amusement.) He matured and shed this image in the late 1980s…” THE SONS ALSO RISE: KARUNANIDHI KEEPS POWER IN THE FAMILY ↩︎
ஆம்.
1
இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!
அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?
2
1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.
…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…
3
கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.
இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் – ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.
சரி.
முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.
இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.
மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)
இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…
ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.
(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)
ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்!
…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும் தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.
மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.
ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.
ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….
4
கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.
“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)
ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.
முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.
இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”
சுபம். :-)
5
ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.
ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…
இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?
இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?
நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன்.
இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.
எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.
அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.
ஆமென்.
(“தூயசக்தி” Vs “…த்தூ…யசக்தி”) + (“கொஞ்சம் டைம் கொடுங்க சார்!”): தமிழக வெறிக் கழகக் குறிப்புகள்
June 11, 2026
கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை – மாறாக எல்லாம் எதிர்பார்த்ததுதான்; இந்த தமிழக வெற்றிக் கழகம் உண்மையில் ஒருமாதிரி வெறிக் கழகம் என்பதுதான் உண்மையென நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.
எப்படியும், ஏற்கனவே தெரியும் – இந்த வெறிக்கழகமும் ஒரு திராவிடமாடல் காட்சிதான் என்று!
-0-0-0-0-0-0-
சிலபல சகவேலைவெட்டியற்ற நண்பர்கள் (‘நல்லெண்ணத்துடன்’ என எடுத்துக்கொண்டு தொலைக்கிறேன்; + இவர்களில் சிலர் மகன் சொன்னான் அல்லது பேரன்/பேத்தி பரிந்துரைத்தனர் ப்ளடிஹெல் என நடிகருக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது உபரித் தகவல் – ஆகவே அவர்களுடைய ‘இருப்பின் அவஸ்தை’ எழவானது புரிந்துகொள்ளக் கூடியதே!) சொல்வது என்னவென்றால்…
(not that any of us old/decrepit crones really matters, in the big picture after all, but still…)
“கொஞ்ச நாளாவது இந்த விஜய் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டாமா? முதலையமைச்சர் உட்பட அனைவருக்கும், இந்த நாட்டு நிர்வாக விஷயங்களைப் பற்றிப் பெரும்பாலும் முன்னனுபவம் இருந்திருக்கவில்லைதாமே? எப்படித்தான் ஒரே மாதத்தில் ஊழல் திராவிடத்தால் துப்புரவாக ஒழிக்கப் பட்ட நிர்வாகத்தைச் சரி செய்ய முடியும்? ஆறுமாதம் ஒருவருடம் என ஹனிமூன் சனிமூன் கொடுப்பது நியாயமாகத்தானே இருக்கும்?”
சரிதான்.உங்கள் வாதம் முழுக்க முழுக்க தவறு, பிறழ்வு என்று ஒர்ரேயடியாகச் சொல்ல முடியாது; புதிய ஆட்சிக்கு ஒரு அளவு அவகாசம் தேவை என்பதும் ஒருமாதிரி (பிற சமயங்களில்) ஒப்புக்கொள்ளக்கூடிய நியாயமான கருத்துதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு எந்த விமர்சனத்தையும் ஒத்திவைக்க முடியாது என்பதும் உண்மை.
எது எப்படியோ… நண்பர்களின் கருணையும் கரிசனமும் மிகுந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்க, சில தர்க்கரீதியான(!) எதிர்வாதங்களை முன் வைத்தேன் – அவற்றை ஒருமாதிரி தொகுத்து அளிக்கிறேன்… (எதிர்கருத்துகளைத் தாராளமாக முன்வைக்கலாம்)
-0-0-0-0-0-0-
தேர்தலுக்கு முன் இருந்த அசாத்தியமான தன்னம்பிக்கை, தேர்தலுக்குப் பிறகும் பொருந்தி வரவேண்டும், செயலில் காண்பிக்கப் படவேண்டும்
ஆட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள். வென்ற பிறகு மட்டும் ‘எங்களுக்கு அனுபவம் இல்லை, நேரம் கொடுங்கள்’ என்றால், தேர்தலுக்கு முன் சொன்ன தயார்நிலை என்ன ஆனது?
அது அட்ச்சிவுடல் புளுகுதானே?
“அனுபவம் இல்லை” என்பது பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துக்கொள்ள சால்ஜாப்பு அல்ல
…விமானம் ஓட்ட அனுபவம் இல்லாதவரிடம் விமானத்தை ஒப்படைத்த பிறகு, ‘அவருக்கு அனுபவம் இல்லையே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பயணிகளிடம் சொல்ல முடியுமா? அனுபவம் இல்லாதது நடப்புக்குக் காரணமாக இருக்கலாம்; ஆனால் அது தோல்விக்கான, நொதுமல் நிலைக்கான நியாயம் ஆகாது.
எதற்கெடுத்தாலும் பழைய ஆட்சியைக் குறை மட்டும் (அவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், திமுக அஇஅதிமுக திராவிடன்கள் அயோக்கியப் பொறுக்கி ராஸ்கல்ஸ் என்றாலும்) கூறுவது செயல்திறன் அல்ல
ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, ‘முந்தைய மருத்துவர் எல்லாம் கெடுத்து விட்டார், சொதப்பியிருக்கிறார்’ என்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டே இருந்தால், நோயாளி குணமாகிவிட மாட்டார். குறையை கண்டுபிடிப்பதோடு, சிகிச்சையும் தொடங்க வேண்டும் அல்லவா?
அவகாசம் கேட்பவர்களும் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்ட வேண்டும்
புதிய வீட்டை வாங்கியவர், ‘முந்தைய உரிமையாளர் வீடு மோசமாக வைத்திருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் ஒரு மாதம் கழித்தும் தூசி துடைக்கப் படவில்லை, ஒட்டடை அடிக்கப்படவில்லை, பெருச்சாளிகள் அகற்றப்படவில்லை என்றால், ‘சுத்தம் செய்யத் தொடங்கவே இல்லையா?’ என்ற கேள்வி வருவது இயல்புதானே?
நிர்வாகம் ஒரேஒரு ‘அதி’மனிதரின் அனுபவத்தால் மட்டும் இயங்காது
முதல்வருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள், ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாக அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க, எல்லா குறைகளுக்கும் ‘அனுபவமின்மை’யை மட்டும் காரணமாகச் சொல்வது எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்கு விளக்கமல்லவா? (அவர் அனுபவஸ்த வெளியாட்களிடம் அறிவுரை கூடக் கேட்டுப் பெறலாமே?
அவகாசம் கொடுப்பதும், கண்காணிப்பதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல
ஒரு மாணவருக்கு ஆண்டு முழுவதும் படிக்க நேரம் கொடுக்கலாம். ஆனால் முதல் தேர்விலேயே 0 மதிப்பெண் எடுத்தால், ‘என்ன மசுத்துக்குப் படித்தாய்?’ என்று கேட்பது தவறல்லவே?
“முந்தைய ஆட்சி மோசம்” என்பது நிரூபிக்கப்பட வேண்டிய முன்னூகம் (இது 100% உண்மையென்றாலும், இதற்கான எதிர்வினையை, குறைந்த பட்சம் சட்ட-நிர்வாக ரீதியிலாவது செயலில் காட்டவேண்டாமா?)
திராவிட ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் ஒழித்துவிட்டது என்று முதலில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கப்படாத ஒரு முன்னூகத்தின் மீது முழு வாதத்தையும் கட்டுவது தர்க்கப் பிழை. அரசுப் பதவிகளுக்கு, விசிலடிச்சான் குஞ்சப்ப வெறியர்களும் பிறகட்சிகளிலிருந்து வந்த ஓடுகாலிகளும் வந்தேறி ஒருமாதம்+ ஆகிவிட்டது.
ஆக, குறைந்த பட்சம் – இந்த சமயத்தில் ஒவ்வொரு துறைக்கும், மிக விலாவாரியான ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வந்திருக்க வேண்டுமா இல்லையா?
வாக்குறுதிகள் உடனடி மதிப்பீட்டுக்கு உட்பட்டவையே
5 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களுக்கு அவகாசம் தேவை. ஆனால் முதல் நாளிலிருந்தே செய்யலாம் என்று கூறிய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனவா என்று கேட்பது, சர்வ நிச்சயமாக நியாயமானது.
தொடரும் ஊழல்கள், நியமனங்கள், ரீல்ஸ்முதல்வாதம், போலீஸ் சொதப்பல்கள், லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறை
கடந்த வாரம் நடந்த, எனக்குத் தெரிந்த மூன்று ரியல் எஸ்டேட் நிலப் பரிவர்த்தனைகளில் (வேலூர், மதுரை, மதுராந்தகம் வட்டாரங்கள்) – லஞ்சம் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. மேலிடத்துக்கும் அவர்களுக்குப் பாத்தியதைப் பட்டதைக் கொடுக்கவேண்டும் என்கிற முனகலோடு.
வருவாய்த்துறை/பத்திரப்பதிவுசார் அதிகார வட்டங்களில் தொடர்ந்து லஞ்சவூழல்கள் நடந்த மணியம் தான். டாஸ்மாக் ஊழலும் தொடர்கிறது. நிலவளத்துறை சார் பாறை, மணல் கடத்தல்கள்+அதிசுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்எம்டிஏவிலும் அப்படியே.
லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறையின் தலைவராக அருண் எனும் ஒரு ஐபிஎஸ் நபர் நியமிக்கப் பட்டிருக்கிறார். வெளங்கிடும். மேலும் வெளங்க வாழ்த்து.
சந்தேகாஸ்பதமான பல அதிகாரி நியமனங்கள்… ஒரு சிலர் பழுதுபார்த்து டிங்கரிங் செய்யப்பட்டாலும் அதிகாரப்ரோக்கர்கள் சிலர் ஓரங்கட்டப் பட்டாலும், பெரும்பாலோர் பழைய கதைகளின் தொடர்ச்சியே. திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள் May 17, 2026
முதலையமைச்ச நடிகரின் அமைச்சர்கள் – இவர்களில் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டால் பாவமாக இருக்கிறது. இவர்களில் சிலபலர் பாவம் செய்பவர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. சர்வம் அதிகாரிமயம் தமிழகஜகத்.
நடிகரின் உள்வட்டத்தில் இருக்கும் ஆசாமிகள் சந்தேகாஸ்பதம். ஆனால் – இன்னமும் சபரீசன் போன்ற ஈசல்கள் உள்வட்டத்துக்கு வரவில்லை என்பதுதான் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியம்.
ரீல்ஸ் அவ்ளோ பார்ப்பதில்லை, சக்தியில்லை; ஆனால் சிலபல செய்திகளாகவாவது தெரிந்துகொள்வதற்கு – பத்ரி சேஷாத்ரியின் கருணைதான் காரணம் – அவருடைய கிழக்கு நியூஸ் செய்தியலசல்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவருக்கு என் நன்றி.
…ஆனால், இப்படியே இன்னும் எவ்ளோ நாட்களுக்குத் தொடரும்? சலிப்பாக இருக்கிறது…
வீட்டு-தொழில் நிர்வாகத்துக்கு ஒரு விதி, அரசுக்கு ஒரு விதி என இருக்க முடியுமா
நமது வீட்டிலோ தொழில்முறையாகவோ, புத்தம்புதிதாக ஒரு பணியாளரை நியமனம் செய்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் கூடமாட ஓடியாடி உதவி செய்பவராகவோ, அல்லது ஒரு தொழில்முறை எஞ்ஜினீயர்-கஞ்சிநீராகவோ இருக்கலாம் – இவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் ‘வேலை கற்றுக் கொள்ள’ அப்படியிப்படி எனப் பொறுமை காத்திருப்போம்?
“தம்பி, நீ எலக்ட்ரானிக் ஸ் படித்திருக்கிறாய் அல்லவா? உன் முதல் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“சார், நான் என் மேனேஜரை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன்!”
“அம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, அடுத்த மாதமாவது ஒரு வாய் டீ போடக் கற்றுக் கொள்வீர்களா?”
“மாட்டேன். உங்கள் வீட்டில் ஆகும் டீ செலவைப் பற்றி மிக விரிவான ஒரு பழுப்பு அறிக்கையை அடுத்த மாதம் கொடுக்கப் போகிறேன்; பிறகு ஆவன செய்கிறேன்…”
…இந்த நிலைமையை நாம் ஒப்புக் கொள்வோமா? மாட்டோமல்லவா?
இந்த விஜய்குஜய் ரீல்ஸ் கதிகலக்கல் வாதிகளுக்கு மட்டும் நாம் ஒருமாதிரி விதிவிலக்கம் கொடுக்கவேண்டும், சொல்லுங்கள்?
நம்மைப் போன்ற சாமானியர்களில் பெரும்பான்மையினர் (அதாவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் first past the post முறைமைப் படி) பலரால் நமக்கும் நம் தேசத்துக்கும் பணிவிடை செய்வதற்காக, ஒருமாதிரியாகத் தெரிவு செய்யப் பட்ட கட்சிதானே இந்த தமிழக வெறிக் கழகம்?
-0-0-0-0-0-
சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களின் வாதத்தில் உள்ள முக்கியமான தர்க்கப் பிழை: “புதிய அரசு என்பதால் விமர்சிக்கக் கூடாது” என்கிற முட்டாள்தனமான முடிவுக்கு செல்வது.
சரி. அப்படியானால் – சரியான நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?
“புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கலாம் – அதாவது நாம் கருணைமுதல்வாதிகளாக இருந்தால்; அதே நேரத்தில் அல்லது ஆனால், அவர்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கைகள், நியமனங்கள், முடிவுகள், முன்னேற்றங்கள், ஊழல்-தொடர்கதைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலிருந்தே கேள்வி கேட்கவும் மதிப்பிடவும் முடியும்.”
இதுதான், அரசியல் சார்பற்ற, நிர்வாகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட எதிர்வாதமாக இருக்கும்.
“…புட்டுப் புட்டு வைத்து வறுத்தெடுத்துப் புரட்டிப்போட்டு, அடித்து ஆடி, பட்டயக் கிளப்பி, மிரட்டி மிரளவைத்து மரண அட்டாக் செய்து வெளுத்து வாங்கிப் பொளந்துகட்டி உடைத்துப் பேசி தட்டித் தூக்கி முதுகில் குத்தி நெருப்போடு விளையாடி, பக்கா ஸ்கெட்ச் போட்டு ரகசியத்தைப் போட்டு உடைத்து சோலி முடிஞ் உற்சாகத்துடன்…
… ஆத்திரமாகக் குழப்பிக் கடுங்கோபக் காட்டம் காட்டிப் பொளேறென்று ஆவேசமாக நெத்தியடித்துத் தாவிச் சுளுக்கெடுத்துக் கதிகலங்கிச் சவால் விட்டுக் களமிறங்கி வெளுத்தெடுத்து எச்சரிக்கை ஷாக் கொடுத்து, ரியாக்சன் மர்மங்களைச் சிடுக்கவிழ்த்து துவைத்து எடுத்து விளாசி அசத்தி, சதித்திட்டங்களை ஒழிக்கும் சிக்கல் தடாலடி பேக்ரௌண்ட்களை அலசி எகிறி அடித்து நுட்பமாக சலசலப்புடன் அடங்க மறுத்து பரபரத்து வெளிவராத சேட்டை செய்து திட்டித் தீர்த்துப் பந்தாடி உருக்கத்துடன் வம்பிழுத்து, பின்னடைவில்லாத ஜென்ஸீக்களைப் புதிய திருப்ப முட்டுக்கட்டைகளாகக் கணித்து, அம்பலப் படுத்திப் பொரிந்து தள்ளி…
…தெறிக்கவிட்டுக் கொதித்து எகிறிப் பொட்டில் அடித்து, உள்ளடிப் பின்னணி வியூக சரமாரி வலுத்து மரணகலாய் சர்ச்சை வரலாறை உலுக்கிப் பிழிந்து பழிதீர்த்துப் படைத்து அக்குவேறு ஆணிவேறாகச் சரவெடியுடன் வலை விரித்துப் பதறிக் கொந்தளித்து, அவசரமாக மோதி, மெகா மாற்றங்களை வெடித்து இறக்கி, ரத்தத்தை உறைய வைக்கும் இரும்புகரத்தைத் தூள்தூளாக்கிப் புயலெழுப்பி சைக்கோவாகி உச்சகட்ட ஆக் ஷனில் இறங்கி ஸீக்ரெட் ஆப்பரேஷன்களின் செய்திகளை முன்கூட்டியே ஸோர்ஸ்களைப் பயன்படுத்தி நிலைகுலைந்து திக்குமுக்காடி ரூட் போட்டு வெளியான உண்மைப் போர்த்தந்திர ஆயுத பி டீம் மூலம் கசிந்த அடுத்த ப்ளானுக்கான மூவைச் சற்று முன்னே அறிந்த… …
…
…
… களைகட்டிச் சூடாகி மிரளவைக்கும் அறிவுஜீவி விமர்சகரும் மிக மூத்த ப்ரிமியம் பத்திரிகையாளருமான, முத்திரை பதித்த ஒத்திசைவார் திரு ராமசாமியார் – சொல்லப் படாத புதைந்த நுண்ணறிவு உண்மைகளை, அறியாத நுணுக்கமான தகவல்களை டீகோட் சல்லடை அசத்தல் செய்து சுடச்சுட வாயடைக்க வைக்கும் ஆதாரங்களுடன் மாஸ்டர் ப்ளான் அதிர்ச்சி ஒரு நொடி குதிரைபேரக் கவிழ்ப்பு ரிப்போர்ட் கொடுத்து…
… சாட்டையைச் சொடுக்கிச் சவுக்கைச் சுழற்றி நைசாகப் பயங்கரமாகச் சீறி, பூகம்பமாக வெடித்து அலர்ட் செஞ்சு உஷ்ணத்துடன் சூடாகி, கோதாவில் இறங்கிப் போட்டுத் தாக்கித் தாளித்துப் பளிச்சென்று சிக்னல் கொடுத்து அரங்கத்தை அதிரவைத்துக் குமுறிப் பந்தாடி லெஃப்ட்ல ஹேண்டில் டீல் பண்ணி செக் வைத்து வரிவரி திடுக் டெவலப்மெண்டாகச் சிக்கப்போகும் குவிந்த விறுவிறு வேதனையுடன் எக்ஸ்க்ளூஸிவ்வாக சர்ச்சைக்குள்ளாகும் வார்த்தை விட்டு விளக்குகிறார்… “
ஸ்ஸ்ஸ்… அப்பாடா!
(மன்னிக்கவும், அப்படியெல்லாம் இல்லை, இதுவும் +1 சாதா பதிவுதான். மேலும், எனக்கு நானே நைந்த டைட்டில்கார்ட் டீஸர்வகையறா உணர்ச்சிகரமைதுன எழவெடுக்காமல், வேறு எந்த வேலைவெட்டியற்ற சகஏழரைதான் இந்தக் தண்டக் கருமாந்திரக் காரியத்தைச் செய்வார், சொல்லுங்கள்?)
(உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது)
-0-0-0-0-
ஆனால் இதை எழுதி முடிப்பதற்குள்ளேயே மிகவும் தளர்ந்து விட்டது.
ஆக. அவ்ளோதான் பதிவு.
…போங்கடா, பப்பரப்பானுங்க்ளா… பெர்ஸா பட்க்க வந்த்டானுவ… ப்ளட்டி ஹெல். போய் உர்ப்படியா ஏதாச்சும் செய்ங்கடா…
நீங்க படிக்கற பதிவு கேக்கற பாட்கேஸ்ட், யூடூப் விடியோ… எல்லாம் இதே கதைதாண்டா… வேலவெட்டியத்த தண்டகருமாந்திரங்கள, மானாவாரியாக அட்ச்சிவுவுட்றத திர்ப்பிதிர்ப்பி கேட்டு-பாத்து சீரழியாதீங்கடா… ஆனா, அதே சமயத்துல இந்த வாயோயாத தொழில்முறைப் பேச்சாளர்களயும் அவ்வப்போது கேளுங்கடா… வாய்விட்டுச் சிரிங்கடா.
மாறாக இதே சமூக வலைத்தளங்கள்ளியும் பிரமாதமான பொக்கிஷங்க அபரிமிதமா குமிஞ்சி கெடக்குதடா… அதெல்லாம் பாத்து-கேட்டு, பயிற்சி செஞ்சி, முட்டிமோதி நடைமுறைல செய்துகாட்டி ஜமாயுங்கடா… சலிப்புக்கோ போரடிப்பதற்கோ கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லடா! அனுதினமும் புதுசு புதுசா ஏதாவது கத்துக்க முடியுதுடா. உலகம் விரியுதுடா! புல்லரிக்குதடா…
(சரி, இந்த எழவை ஏன் எழுதினேன்? இது தேவையா??
பிரச்சினை என்னவென்றால் – அண்மையில் நடந்துமுடிந்த ‘தமிழகத் தேர்தல் களேபரங்கள்’ பின்புலத்தில், கடந்த 2-3 மாதங்களில் ‘நண்பர்’களிடமிருந்து பலப்பல நல்லெண்ண யூடூப் பரிந்துரைகள் வந்தன. இவற்றில் சுமார் 15-20 மணி நேரங்களை 2X வேகத்தில் செலவழித்திருப்பேன் என அனுமானிக்கிறேன். அனுப்பப் பட்டவைகள் அனைத்தையும் பார்த்திருந்தால் சுமார் 200-300 மணி நேரங்களாவது செலவழிந்திருக்கும். ஆனால் நல்லவேளை, என் போதும் காலம், தப்பித்துவிட்டேன்.
இவற்றில் சில சுவையாக, குறிப்பிடத்தக்க கருத்துச்செறிவுடன் இருந்தன – பல, வெறும் பப்பரப்பாக்கள், அரைத்த மாவை அரைத்தவை – ஒன்றிரண்டு முறை இவற்றைக் கேலி செய்திருக்கிறேன்கூட – ஒரு புதிர்க் கேள்வி, சிலபல பகீர் பதில்கள்: ‘துரந்தர்’ என்றால் என்ன? April 6, 2026
ஆனாலும் இவைகளுக்காக இந்த ஆசாமிகள்/சேன்னல்கள் போடும் டீஸர் /டைட்டில்கார்ட் வகையறா விளம்பரங்கள் இருக்கின்றனவே – இவை படு அலாதியாக இருந்தன, இருக்கின்றன – இவைதான் இப்பதிவுக்கும, ஆகவே அதன் மீதான உங்கள் வெறுப்புச் சலிப்புக்கும் முகாந்திரக் காரணங்கள்)
-0-0-0-0-
…சரி, தப்பித் தவறி ஒன்றிரண்டு தமிழ்வழி யூடூப் பொழிப்புரைப் பேச்சாளர்களும், ஹோம்வர்க் செய்பவர்களாக, ஜோடனை செய்யாதவர்களாக நன்றாகவே இருக்கிறார்கள் – அதில் ஒருவர் பத்ரி சேஷாத்ரி – இவரை நான் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன், இவரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன்; இன்னொருவர், எனக்கு அண்மையில் கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பு கிடைத்த கெவின் பால் என்பவர். (இவருடன் எனக்கு முன்னறிமுகம் இல்லை)
இன்னமும் சிலபலர் (பேசுதமிழாபேசு ராஜவேல் நாகராஜன்?) இப்படி இருக்கிறார்கள் எனத்தான் நினைக்கிறேன். அப்படி இருக்க வேண்டும் என விழைகிறேன். குறைந்த பட்சம் இவர்கள் இருவராவது தொடர்ந்து பொலியவேண்டும் என வாழ்த்துகிறேன்.
KYCmania & OTPphobia
May 24, 2026
(or) KYCism & OTPtva
“The horror! The horror!“
— Joseph Conrad (in his 1899 novella ‘Heart of Darkness’)
(THIS, even before KYC and OTP were nowhere on the event horizon? Are you for real, you bloody wimpy JConrad?)
(skip to section 1, if you only want to read a real life horror story – if not, you can start reading right from here; of course, I would never ask for your personal details or OTPs so beware of scamsters! Don’t click on suspicious links!!)*
1
The normal ‘we all happily died ever after’ kind of innocent fairytale narratives about the OTP (One Time Password – that, one receives on a mobilephone as SMS/WhatsApp msg or on email for pre-verification, leading to some transaction) and the process of KYC (Know Your Customer, supposedly) are that – any given service enterprise ought to do periodically – pre birth, life, quick-death AND after-death of the ‘Customer.’
Of course, all very understandable in the current contexts of frauds, need to establish a clear identification of a person & the necessity to maintain trails to establish accountability & traceability in processes.
But.
OTPs have taken over every aspect of life in the given shortened-life of the average citizens – and not only that, they attack in a pack with ravenous KYC processes.
Oh, the horror, the horror…
2
Dunno when I fell asleep. Actually I don’t even know whether I even slept, given my continuing OTP-KYC nightmares. May be I am still caught in the same web of mortal terror.
It doesn’t matter. I think I am awake now, so I am.
However, I see the distant hellfires of jahannum (© Islam) and gehannah (© Christianity) – the former, obviously the forward integrated & shamelessly copied version of the latter, including the name…
…I think, it all started when I suddenly realized that I had become a senior citizen and that I was going to be taken over by the hordes of 3letter abbreviations. No. It wasn’t G.O.D. Silly. Realize that It/He/She GOD may not be omnipotent, omnipresent and omniscient – but OTPs and KYCs certainly are.
…But, even then, I didn’t know what was to come and hit me hard, real hard… In fact, I knew naught, how the damn OTP ensured total KYC – Kill Your Customer. The details of the hit of course included recursively handing over multiple copies of Aadhaar Identification and Income tax PAN cards (of both sides) of course, which had to be self-certified, signed in black ink etc… (the only saving grace is that, one does not need to get notarized notorious public lawyers’ authenticating signature and stuff)
Fact & single sentence story is that, I merely went to a Bank, and then all hell broke loose and I was quickly caught-up in a massively tangled web of OTPs and KYC processes… As the natural and logical following step, I fainted…
3
By the year 2032, India had finally achieved what emperors, invading islamic hordes, marauding christian padres, economystics, socialists, congressis, left-liberals, homeland visiting NRIs & dravidian scum never could:
total citizen obedience through OTP verification!
Nothing moved without a One-Time Password & KYC.
Weddings. Funerals. You name it..
Not even bowel movements in AI enabled premium smart toilets.
Sixty-eight-year-old Mr. Ramasami Othisaivu discovered this on a humid Tuesday morning when he tried to die peacefully at his home in the outskirts of Bengaluru.
The heart attack itself proceeded rather smoothly.
But the ambulance did not. Oh what to do…
“Sir,” said the paramedic, kneeling beside the semi-unconscious man, “before we begin CPR, please confirm the OTP sent to your registered mobile number ending in 7407.”
Ramasami, being temporarily & incrementally dead, did not respond.
The paramedic sighed. “Happens every day.”
His wife, Lalitha, grabbed the phone. “Ayyo! It’s asking for biometric confirmation also!”
“Madam, government regulations! Too many fraudulent resuscitations.”
But the OTP got delayed, because the SMS gateway was crawling to a halt thanks to millions of citizens simultaneously verifying attendance for National Productivity Yoga Hour & billions booking FirstDayFirstShow tickets all over the world for the Vijay blockbuster ‘DigVijay, The Permanent Emperor of India.’
Incidentally, this film release was the only promise made in the manifesto of his political party “Thamizhaga Vetri Kazhagam’ (Tamilnadu Victory Party) that successfully formed the Union Government in India post the 2029 Loksabha elections, after a massive sweep of 540 out of ~544 seats!

…
…however, the WhatsApp OTP came faster, but only after watching a 50-second ad for just-in-time Life Insurance for soon-to-be-dead Customers, of course subject to KYC – followed by a 30 second promo for DigVijay, with some recommendations of Instagram reels of Vijay fans.
…In the meantime, Ramasami briefly regained consciousness just long enough to whisper, “Check spam folder… in gmail, just in case…”
Then flatlined again.
An offer from Amazon (co-sponsored by Project Vaikuntha) landed in Laitha’s mobile – about, a cool & attractive ‘premium branded ashes immersion package’ in Kashi, at 90% final rebate + GST.
Another cheerful duplicate OTP made it to Ramasami’s WhatsApp, saying “In case you are already dead, kindly ignore this OTP. In case you didn’t receive this message, send an YES to +91 19119 11911 via SMS.”
4
At the hospital reception, the young lady with a plastic smile, responded professionally, in an accent halfway between India and USA. Probably an AI enabled hologram.
“Say 1 for English, 2 for Hindi, 3 for Kannada, 4 for Braille, 6 for Signlanguage, 7 for ASCII, 8 for Morse code, 9 for back to previous menu…”
“1”
“Thanks for choosing 1. Say 1 for American English, 2 for British English, 3 for Indian English…”
“3”
“Thanks for choosing 3. Say 1 for Hinglish, 2 for Kinglish, 3 for Tanglish, 4 for Telgish, 5 for Mallish…”
“3”
“Check your OTP”
…
…
“Welcome to Kailash Direct Hospitals. How can I serve you?”
“QUICKLY?!”
“Ok Madam… Death or semi-death package, madam?”
“Death.”
“Due to what?”
“Due to OTPs and KYC. And delays…”
“Okay, we are sorry to hear that,” the young lady smiles, while checking her WhatsApp for VIjay film release updates, “but was it Basic death or Aadhaar-linked death?”
“What’s the difference?”
“In Aadhaar-linked death, your husband receives loyalty points redeemable in the afterlife ecosystem.”
Lalitha stared.
“Fine,” said the clerk. “I’ll select maybe.”
A new OTP got generated and sent.
But, unfortunately, the OTP was sent to Ramasami’s old SIM card, which had been deactivated because he had failed re-KYC for insufficient blinking during facial verification.
“Can we use my number?” asked Lalitha desperately.
“No, madam. Relationship transfer requires Form 18-C, notarized by two blood relatives and one chartered accountant. And, we will have to do fresh KYC for all of them, including the Notary Public lawyer.”
5
At the crematorium, things got better.
The electric cremation chamber displayed:
USER NOT VERIFIED
PLEASE COMPLETE MANDATORY KYC BEFORE POWER-ON
A weary employee approached carrying a ring light and fingerprint scanner.
“Thumb impression of the deceased, please.”
“He’s dead!”
“Yes madam, but system should know that.”
“But you can SEE he’s dead!”
“Madam, emotionally maybe. Technically pending approval.”
“Really??”
“Yes madam – it is the usual KYC process here, Know Your Corpse.”
They pressed Ramasami’s thumb onto the scanner.
FINGER NOT ALIVE ENOUGH
“Try other hand, or some other finger…,” suggested the employee.
6
Meanwhile, the family WhatsApp group exploded.
“UNCLE DEAD??? SOURCE??”
“Too much fake news these days.”
“Please share OTP for condolences.”
“Om shanti RIP!”
“In ‘States’ nobody asks for Aadhaar!”
“Fake news! Uncle was heartless! How can HE have a heart attack!!??”
“gr8 news brb”
…
A cousin in Dubai launched a Google Meet prayer session, but nobody could join because the authentication SMS was delayed.
This was because Dubai data centers & telecommunication providers hosting SMS gateways were hit by missiles from Iran.
7
Then came the final obstacle: ‘Ashes Release Authorization.”
The municipal officer adjusted his spectacles.
“Madam, before collecting ashes, kindly verify whether the deceased wishes to remain carbon-neutral.”
“How would he know?”
“AI prediction available for Rs. 299/- plus GST.”
Lalitha finally snapped.
“For FIFTY years this man paid taxes, linked Aadhaar, linked PAN, linked LPG, linked bank accounts, linked voter ID, linked water pipeline, linked insurance, linked Spotify family plan, linked Netflix subscription — and now even his soul is buffering??! What the hell!!”
The officer nodded sympathetically.
“Happened to my father also. His reincarnation got delayed because OTP server was down.”
At sunset, Ramasami was finally cremated after successful e-KYC, OTP verification, liveness non-detection, and acceptance of updated Terms & Conditions.
…
Far above, at the entrance to heaven, a celestial receptionist looked up.
“Welcome, Mr. Othisaivu. Are you part of DIE quota?”
“Am not sure madam. I am already dead!”
“Nonno sir, we want to know whether you are protected by Diversity-Inclusion-Equity laws?”
“Well, I am from OTP positive community, not sure whether…”
“Okay, okay – I get it. You are cattle-class – now, before entry, please verify the OTP sent to your registered WhatsApp.”
Ramasami closed his eyes in weariness.
“Send me to hell,” he said quietly. “At least there they pick up the phone & don’t play hold-music.”
“Sir, their AI call-center has a five-star rating, but they will still have to do a fresh KYC, link your hell admit card to Aadhaar and of course there would be OTPs and further physical residential address & conduct verifications by their Yama’s agents…”
“Send me back to earth, please!”
“Yes, but first take our Customer Satisfaction Survey. Be sure to give me a five-star rating because my performance appraisal is due next week!”
“Sure, am used to these surveys. where is the link?”
“Scan this QR code first and then you will get an OTP; a KYC check would be done by the way, and here is the form – and please note – this conversation is being recorded for Quality Improvement & Training purposes…”
8
Ramasami woke up in cold sweat and promptly had a real heart-attack.
THE END
*

விஜயிசம்: விஜை விதைத்தவன் விஜை அறுப்பான்
May 20, 2026
முகம் சுளிக்காதீர்கள்! தமிழகத்தின் மீதான மேற்கண்ட சாபம் மட்டும் மட்டமல்ல, அதைவிடப் படுமட்டரகமான ஒன்றும் இருக்கிறது. அதாவது:
உதய் விதைத்தவன், உதைபடுவான் கூட.
தலைப்புக்கு, கூறுகெட்ட சினிமாமோக தமிழக வாக்காளர்கள் காரணம்.பதிவின் இரண்டாம் பத்திக்கு ராஜமாதா துர்க்கையும் அவள்தம் மணாளனும் உருவாக்கிய அவர்களுடைய அரைகுறைத் தற்குறிப் புதல்வனும் காரணம்.
எது எப்படியோ! ஊழல் குட்டையில் ஊறும் மட்டைச் சனியன்களான திமுகவும் அஇஅதிமுகவும், ஒருமாதிரி ஏமாற்றத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை ஊட்டுவது; ஊக்கபோனஸ்ஸாக – நாறி அழுகும் அம்மட்டைகளின் வெட்டி நார்களான கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிற்தேக்களும் டெம்பரவரியாகவாவது ஒதுக்கப்பட்டது சந்தோஷமே.
1
விஜய்குஜய் பிகிலார், அப்டீபோடு…போடுபோடு எனக் குத்தாட்டம் போட்டு என் முன்னாள் மாணவர்களைக் கிறங்கவைத்து மூளைச்சலவை செய்து தமிழக முதலையமைச்சர் ஆனாலும், சிலபல விஷயங்களை அவருடைய விசிலடிச்சான்குஞ்சப்ப ரசிக வாக்காளர்கள் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் – இவை ஒப்புக்கொள்ளப் படவேண்டிய ‘நல்ல’ வெளிப்பாடுகள்தாம்.
அ: திராவிடமாடல் அரசியல் என்பது உள்ளீடே அற்ற கூளம் + அதன் ஒற்றைப் பெரும் சாதனைவேதனையான சுமார் 60 ஆண்டுகால பள்ளிக்கல்வி உயர்கல்வி எழவு என்பதும் அசிங்கமான கவைக்குதவாத உணர்ச்சிகரமைதுனக் குப்பை எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன..
ஆ. ஓட்டுக்குப் பணம் தேவையில்லை. (ஆனால் பிகில் கட்சியும் சிலபல இடங்களில் கொடுத்துத்தான் இருக்கிறது) – ஆனால் சினிமாமோக வாக்காளப் பெருமாக்களுக்குக் கொஞ்சம் விசிலடிச்சான் இன்பலாகிரி கொடுத்தால் போதும். ஓட்டுச் சாவடிக்கு ஓடிப்போய் ஓட்டில் பிகில் சின்னத்தில் குத்திக் குத்திக் குத்தாட்டம் போட்டு விடுவார்கள்.
இ. இரண்டு பெருங்கொள்ளை திராவிடக் கட்சிக் கூவான்களுக்கும் மாற்று, ஹ்ம்ம்ம்… ஊம்ம்ம்… இன்னொரு இளந்திராவிடக் கட்சியே!
ஈ: தமிழகப் பெண்கள் – குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்கள், புருஷன் எப்படி திராவிடக்குடி குடித்தே செத்தாலும் – அதன் வளமான எதிர்காலத்துக்காகக் யோசித்துத் தியாகம் செய்யும் பாங்கினர் எனும் மாயை விலகியிருக்கிறது. வீட்டில் சோறு பொங்கக் காசு இருக்கிறதோ இல்லையோ, விஜய்குஜய் சூர்யா படமா… யானை விலை கொடுத்தாவது FDFS பார்க்கும் பாக்கியம் பெற வேண்டும் எனும் அவர்களுடைய நியாயமாக அபிலாஷைதான் தமிழகத்தை நிர்வகிக்கும் திறனாக விஜய்குஜய் மூலமாக முகிழ்த்திருக்கிறது.
உ. ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்றும், ‘நான் ஒர்த்தன் வாக்குப் போட்டு என்ன பெரிய்ய மாற்றம் ஏற்பட்டுவிடும்’ பேசுபவர்களும், ‘எல்லாமே திருடனுங்க, அத்தொட்டு நோட்டாவுக்குத்தான் என் ஓட்டு’ எனவிருக்கும் அவநம்பிக்கை வாதிகளும் நிறைந்த பொதுவெளியில், பெரும் திரளாக இளைஞர் பட்டாளங்கள் வாக்களிப்பதும் நடந்திருக்கிறது. (பின் எதற்காக ஒரு ஜிகினாவாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற கேள்வி இருந்தாலும் – இம்மாதிரியே இளைஞர்கள் தொடர்ந்து தேர்தல் பாதை ஜனநாயகத்துக்கு வருவது சரியே)
ஊ. ஜாதி பார்த்து மதம் பார்த்து தமிழகத்தில் ஓட்டுப் போடப்படவில்லை என்று சொல்ல வைத்தது – ஆனால் இதில் எவ்வளவு தூரம்/ஆழம் உண்மை என்பது தெரியவில்லை; இருந்தாலும் ஒரு 10% விசில்கார எம் எல் ஏக்கள் இப்படி இருந்தாலே பெரிய விஷயம்தான்…
எதிர்மறை விஷயங்கள் எனப் பலப்பல இருக்கின்றன, மாதிரிக்கு
அ‘: சினிமா கவர்ச்சிகர இஷ்டைலுக்கும் நிஜவாழ்க்கை + நிதர்சனஅரசியலுக்கும் போடப்படும் மொட்டைத்தலை+முழங்கால் முடிச்சு
ஆ‘. லோக்கல் வேட்பாளர் முக்கியமில்லை – எங்களுக்கு வெறும் ஜிகினாத்தலைவன் போதும்.
இ‘: கூட இருப்பவன்களெல்லாம், அதுவும் தவெக இரண்டாம்வரிசைத் தலைவன்களெல்லாம் ஓடுகாலிகள், அயோக்கியர்கள் – இவர்களை வைத்துக்கொண்டு எப்படி குட்டையைக் குழப்பாமல் இருக்கமுடியும்?
ஈ‘:…
இப்போதைக்கு இப்போதை போதும். அதாவது, ஜிகினா கொடுக்கும் இன்பலாகிரியே துணை.
2
இந்த பிகில் கட்சிக்கு ஐடியாலஜி என்பதுபோல ஒரு ஐடியாவுமே இல்லை என ற்றொம்ப அபாண்டமாகப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அண்ணாயிசம் என்பது போல, பெரியாரிசம்/பெரியார்ஈயம் என்பது போல, திராவிடமாடல் எனும் மாயப்புகைமூட்டத்தைப் போல – இந்த டிவிகே பிகில் கட்சிக்கும் அப்படியாப்பட்ட ஒரு விசித்திர ஜந்து இருக்கிறது.
அதுதான் விஜயிசம். ப்ளடி ஹெல்.
விஜயிசம் = தமிழ்த் தோசையம் + திராவிட வேசியம் + உடும்பு லேகியம் + வலைத்தள மீமாம்ஸகம் + முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்
அதாவது ஐம்பெறும் கோப்பியம் – அதாவது cope செய்தல் என ஒரு மாதிரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மேற்கண்ட அசமன்பாட்டிற்கு ஒருமாதிரி விளக்குமார் விளக்கம் கோனார் நோட்ஸ் வகையறா கொடுக்கவேண்டுமென்றால்:

தமிழ்த் தோசையம்: வெட்டித் தமிழ் வெறி உச்சாடன இட்டிலிக்கடையில் இழுத்துவார்க்கப்படும் ஓசை மிகுந்த தோசை செய்து போக்கற்ற வழிப்போக்கர்களுக்குப் பரிமாறுவது
+
திராவிட வேசியம்: கவைக்குதவாத சுயமைதுன திராவிடத் தனம் பேசி, அதற்கே உரித்தான வேசைத்தனத்தைச் செய்வது. (ஈவெரா சொன்னது நினைவிலிருக்கிறதா? )
+
உடும்பு லேகியம்: நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு, சமூக நீதிக் கோமாளித்தனம், மதச் சார்பின்மை, இலவசமோயிலவசங்கள்++ போன்ற உடும்புத்தைல வியாபாரங்களில் முனைப்பு
+
வலைத்தள மீமாம்ஸகம்: ஜிகினாக்களும் புளகாங்கிதங்களும் அதிமனிதப் பீலாக்களும் மட்டுமே நிறைந்த ஆனால் எண்ணிலடங்காத மாஸ்-ஹிஸ்டீரியா மீம்ஸ், ரீல்ஸ் போட்டே சலித்த சராசரி மூளைகளைச் சலவை செய்யும் பாங்கு
+
முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்: ஆர்வக்கோளாற்றுச் சிறு பிள்ளைகளை வைத்து முதிர்ந்த மூடர்களையும், இளம் விடலை தன்னிச்சை இன்ஃப்ளூயன்ஸர்களை வழியொற்றும் பிற தறுதலை இளைஞர்கள் வசீகரம் செய்யப்பட்டும் – தமிழர்களுக்கே உரித்த, உதவாக்கரை உணர்ச்சிகரமைதுன மந்தை உச்சாடன ‘தீயசக்தி X தூயசக்தி’ வகை மடத்தனத்தை அறுவடை செய்யும் பாங்கு.
3
…அவரைச் சுற்றிச் சுற்றி உள்வட்டமாக யார் இருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலேகூடபெரும் விசனம் தான்; அதுவும் சொஸ்தம் செய்யப்பட முடியாததொன்று.
ஆதவ்அர்ஜுனார், ‘புஸ்ஸி’ ஆனந்தனார், செங்கோட்டையார்…
ஆதவ், அர்ஜுனா அல்லர், கழுதை கர்ஜனா கூட அல்ல – மாறாக, லாட்டரி துச்சாதனா என்பதுதான் அவர் பெயராக இருக்கவேண்டும்… LOTTERY is nothing by LOOTERY. எந்த ஒரு விஷயத்திலாவது கொடுஞ்சூதாட்டத்துக்கும் இந்த லாட்டரி எழவுக்கும் வித்தியாசமுண்டா, சொல்லுங்கள்… இவரும் இவர் புகுந்த வீட்டினரும் (லூட்டரி மார்ட்டின்) செய்யாத ஊழலோ அயோக்கியத்தனமோ உண்டா? ஆனால் – இந்த ஆள், கட்சிகட்சியாகக் கலர்கலராக மாறி றெக்கை விரித்தாலும், பின்னர் மேதகு ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இந்த ஆனந்தனாரும், கடுகுச்சேரிப் பாண்டிச்சேரியில் ஒரு குறு விறகுதொட்டி நடத்தி வந்தவர்; ரெண்டு தெரு வார்ட் கவுன்ஸிலர் வகை பாண்டி ‘எம் எல் ஏ’ தொகுதி ஒன்றில், படுபீதியளிக்கும் பயங்கரப் போட்டி போட்டு வென்றும் தோற்றும் காலத்தை ஓட்டியவர்… ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே நில/வீடு அபகரிப்பு அடாவடி எனத் தன் திராவிடத் தொழிலை விஸ்தீரணம் செய்து, உறவினர்களை வைத்து கட்சிக்குக் கட்சிதாவி, ஒருவழியாகக் கடைசியில் விஜய்குஜயுடன் ஐக்கியமாகி எல்லா வல்லமையும் பெற்று விளங்குகிறார்… தமிழக அரசியலும் கனஜோராக திராவிடமாடல் ரெண்டுங்கெட்டானாக மிக வெளங்கிடும். (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார். இவரும் ஊழலில் கைதேர்ந்தவர்தாம், திராவிடப் பழம் தின்று கொட்டையும் போட்டவர்தாம். (இப்போது மாறிவிட்டிருக்கலாமோ என்ன எழவோ!) (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவரும் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
பேஷ்பேஷ்!
இதற்கு மேலிருக்கும் உள்-ஓளிவட்ட ஆசாமிகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அழுகி முடை நாற்றமெடுக்கும் ஒரு பானைச் சோற்றில், மேற்கண்ட மூன்று புழு நெளியும் பருக்கைகளானவை சரியான பதத்தைக் காண்பிப்பவைதாமே!
4
(ஆனாலும், இவர்களையும் மீறி, ஒருமாதிரி மிகக் கொஞ்சமான நல்லாட்சி எனத் தப்பித் தவறி நடந்தால் – உண்மையாலுமே எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடும்… தேவையா?)
—
திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾
வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)
(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”
(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague
#DravidianModel modern marriages.
(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!
(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…
(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!
(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!
(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!
(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!
(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2
Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…

(முதற்கண்: இந்த விஜய் வெற்றிபெற, அவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவென புரிந்துகொள்ளவே முடியாமல் உடல்பொருள்ஆவி++ அனைத்தையும் கொடுத்து உழைத்த, என்னுடைய அத்தனை முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்ல சங்கடமாகவே இருக்கிறது. ஆனால் சனியன்கள் ஒழிந்தன என்பதும் ஒருமாதிரி ஆசுவாசம் தருவதுதான்.)
(ஒன்றரைக்கண்: ஆனால் – இது எப்படிப் போகும் என்பது பிடிபடவில்லை…
இருந்தாலும், அயோக்கிய கொள்ளைக்கும்பல் திராவிடக் கட்சிகள் குறைந்தபட்சம் டெம்பரவரியாகவாவது வீரியம் குறைந்தமை (இவை முழுவதுமாக அழித்தொழிக்கப் படவேண்டியவைதாம்!) குறித்து மகிழ்ச்சியே!
அதே சமயம், இந்த நடிகர் கட்சிக்குப் பெரிதாக ஐடியாலஜி கட்சித் திட்டம் என்று இருக்கிறது போலவும் தெரியவில்லை. இஷ்டத்துக்கு ஈவேரா போன்றவர்களை ஆதர்சங்களாக உள்ளிழுப்பதும், மத்திய அரசோடு அவசியமேயில்லாமல் மல்லுக் கட்டுவதும் போன்ற விஷயங்கள் கலக்கம் தருபவை, பஞ்ச் டயலாக் இழவுகளும்தாம் – தற்போதைக்கு அவரைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப-ஊழல் வாதிகளும்அமைதி தரவில்லை…
ஆனால்…
இந்த மாற்றம், நெடு நாள் நோக்கில் தமிழகத்தை உண்மையாகவே முன்னேற்ற உதவுமானால் அதுவும் நல்லதே! வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?)
சாருநிபேதிதா: தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2026 – எக்ஸிஸ்டென்ஷியல் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள்
May 3, 2026
என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.
(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள் எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)
தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை
தேர்தல் முடிந்த 23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.
ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.
நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”
அவன் சிரிக்கவில்லை.
இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.
சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.
நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.
இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ்.
ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.
இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.
அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.
ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.
என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.
நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.
(விருந்தினர் பதிவு) தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்: ஜெயமோகன் ஞானமரபுப் பார்வை
April 26, 2026
(நன்றி, ஜெமோ. முந்தைய பதிவு பேரண்டப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு April 25, 2026. அடுத்து, எனது இன்னொரு பேராசானான சாருநிவேதிதாவின் காட்டுரை வெளிவர இருக்கிறது. நண்பர் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு கட்டுரை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர், தன் கிழக்குந்யூஸ் வழி விதண்டாவாத விடியோ சர்ச்சைப்பதிவுகளில் படுபிஸியாக இருப்பதாகச் சொல்கிறார் – பாகிஸ்தானும் இரானும் எக்கேடு கெட்டால் நமக்கென்ன – இதில் செலவழிக்கும் நேரத்தில் அவர் ஒரு சிறு பகுதியை ஆக்கபூர்வமான நல்வழிகளில் செலவழித்தால் என்ன குறைந்து விடுவார்? ப்ளடி, நம் தமிழ் அறிவுஜீவிகளில் பலருடைய பிரச்சினை இதுதான் – அவர்கள் கருத்துகளை பெரிய அளவில் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கத் தோதான பரப்புரைத் தளம் அமைத்துக் கொடுத்தாலும், கொள்வாரில்லை. என்ன செய்ய. :-( )
தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்
(ஜெயமோகன்)
இவ்வாழி சூழ் உலகமே குருக்ஷேத்திரம்தானென்றும் நடப்புகளனைத்தும் கௌரவ-பாண்டவ யுத்தங்களெனவும் நான் பத்து வருடங்களுக்கும் முன்பே பத்தாயிரம்கோடி வார்த்தைகளில் வெண்முரசாகக் கொட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் களம், கௌரவ-கௌரவ சொத்துப் போர் மட்டுமே என்பதுதான் நிகழ்வரலாற்று நிதர்சன உண்மை.
கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர்கள் உலாவிய தமிழக அறவெளியில், என் வாசக மானுடத் திரள்கள், கூடுகை விட்டுக் கூடுகைக்குப் பெருமூச்சு ஆர்பரிப்புடன் பாய்ந்துபாய்ந்து ஆர்வலப் பெருந்தாவல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் – தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கப் போகும் இந்தத் தருணத்தில், ஒரு விசித்திரமான உரத்த மயான அமைதி நிலவுகிறது. அது வெறும் அரசியல் அமைதி அல்ல; அது ஒரு கதை முடிந்த பின் எழும் கேவல் நிரம்பிய உள்ளொளித் தேடல் பேரலை, நம் மனமூடே எழும்பும் காற்றிலே இயைந்த இடைவெளிப் பேரோசை.
அந்த இடைவெளியில் நாம் எதையோ கேட்கிறோம் – ஆனால் அது வெற்றி முழக்கமோ தோல்விப் புலம்பலோ அல்ல. மாறாக அது, மனிதர்களின் உள்ளார்ந்த அசைவின் அசைபோடல் ஒலி. அப்படித்தான் தேர்தல் புள்ளிவிவரங்களால் மிகவும் குழம்பியிருந்த, நாராயணகுரு அவர்களிடம் நடராஜகுரு அவர்களை விட்டுச் சொல்லச் சொல்லி, என் பூர்வாசிரமச் சீடன் நித்யசைதன்ய யதியின் பொறுப்புள்ள பேராசானாக, அவருக்கு ஒரு அவசர ஆணை பிறப்பித்தேன்.
ஏனெனில், இந்த முறைக்கான தமிழகச் சட்டசபை தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் அல்ல என்பது ஆன்மிகமாக அதனை அணுகும்போது தெளிகிறது. ஆகவே அது ஒரு அகவொளிசார் மெய்ஞான காவிய நாவலின் (என்னுடையது தான்), ஒரு நவீன செவ்வியல் க்ளாஸ்ஸிக் என்று உலகெங்கும் போற்றக்கூடிய மிகநீண்ட ஒன்றின், ஆனால் அதைவிடவும் மிகமிகமிக நீண்ட அதன் பேரத்தியாயம் போல இருந்தது. அந்த தத்துவார்த்த மரபு நாவலில், நாயகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கதையின் எளிய மைய நீரோட்டமானது என் ஆரம்பமும்முடிவுமிலா வெண்முரசு போன்றே மாறாது – மாறாக தேர்ச்சிபெற்ற மானுடன் தனது வாழ்க்கையை எவ்வாறு சோர்வில்லாமல் ஊர்ந்துகொண்டே தேர்ந்து வடிவமைக்கிறான் என்ற கேள்வியே தனக்குத்தானே பதில்களாக விரிந்து விகசிக்கும்.
நான் தர்மபுரி வட்டாரப் பாலக்கோடில் பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியனாக, முழு நேரத் தமிழ்இலக்கியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது – அங்கிருந்த ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் (சொல்லப்போனால் இவர் கடலூர் சீனு! இவர் எப்படி பாலக்கோட்டிற்கு வந்தார்?) வாக்களிக்கச் சென்றார். அவர் தனது விரலில் மை அடித்துக் கொண்டபோது, ‘இனிய ஜெயம்’ என்று முணுமுணுத்தது ஒரு அரசியல் செயல் மட்டுமல்ல – அது அவரது வாழ்நாளின் அனுபவங்களின் சுருக்கம், அவருடைய வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோள் என்பதை நான் அவருக்கு விளக்கி எடுத்துச் சொன்னேன். அவர் பார்த்த அரசுகள், அவர் அனுபவித்த மாற்றங்கள், அவர் இழந்த நம்பிக்கைகள், எழுதிய குப்பைகள் – இவை அனைத்தும் அந்த ஒரு மென்மையான மையடிப்பு அழுத்தத்தில் இருந்தன என்பதைத்தான் அந்த இனியஜெயம் உணர்த்தியது. இதை நாம் குறிக்கோள் போலக் கணக்கிட முடியாது. ஆனால் இதுவே ஜனநாயகத்தின் உண்மையான படிமமான அளவுகோலின் நெம்புகோல். இது, செங்கோலைப் போல, நம் வரலாற்றுப் படிப்பினை.
பொதுவாகவே நாம், அரசியலை ஒரு தந்திர விளையாட்டாகப் பார்க்கிறோம். யார் யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம், யார்யார் எந்த அ-உடைய ஆ-குழு, குழுக்களின் குழூஉக்குறிகள் யாவை – இவை எல்லாம் மேற்பரப்பின் மேலோட்ட அலைகள். அதன் கீழ் ஒரு ஆழமான தெளிந்த நீரோட்டம் இருக்கிறது. அந்த நீரோட்டம் தான் சமூகத்தின், படுமோசமாகக் கலங்கிய மனநிலை. இந்தக் கலங்கரைவிளக்கத் தேர்தலில் அந்தச் சேற்று நீரோட்டம் சற்று மாறியுள்ளது. அதை நிர்மலமாக உணர்வதே முக்கியம். (ஆனால், சீதாரமனைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை)
…பிறிதோர் வகையில், அதனை உணராமல் இருப்பதும் பாக்கியமே. நீரோட்டம் உலராமல் இருப்பது அவசியமும்கூட. இல்லையேல் காயடிக்கப் படுவோம். ‘காயமே, இது பொய்யடா, பெருங்காயத்தை ரசத்தில் போடடா’ என்பது ஆழ்ந்த துரிய அனுபூதி நிலை; நிகழ்ந்துகொண்டிருக்கும் பக்திரசப் பேரதிசயம், நம் முகத்தில் அறையும் உண்மை.
ஒரு காலத்தில், அரசியல் தலைவர்கள் ஒரு கதை சொன்னார்கள். மக்கள் அதை கேட்டார்கள். இன்று மக்கள் தங்களுடைய கதைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், சிறிய விவாதங்கள், குடும்ப உரையாடல்கள் – இவை அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய பெருத்த குரலை மௌனமாக உருவாக்குகின்றன. அந்தக் குரல் இன்னும் முழுமையாக வடிவம் பெறவில்லை. ஆனால் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருங்கதையான வெண்முரசு தொகுப்பினை வாங்கிப் படித்தும் அதன் பலப்பல படிகளை நண்பர்களுக்கும் வாங்கியும் கொடுத்தால், அக்குரல் காலத்தின் பரிணாம நீட்சியைச் சென்றடையும், மாற்றத்தை வந்தடையும். எனக்கும் ஞானபீடம் கிடைக்கும்.
இந்தப் பெருத்தகுரல் மாற்றத்தை, பொறுமையுடன் இருந்தாலும் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இது ஒரு ஒரு திடீர் புரட்சி அல்ல. இது மெதுவான பரிணாமம். ஒரு விதை மண்ணுக்குள் முளைக்கும் போது நாம் அதை காண முடியாது. (ஏனெனில் வேர்களுக்குக் கண்ணே இல்லை என ரோஜர்பென்ரோஸுக்கு நான் ஒரு கடிதம் 1980லேயே எழுதிவிட்டேன்)
ஆனால், அவ்விதை வளர்ந்து மரமாகும் போது, அதன் நிழலின் முப்பரிமாணத்தில் நாமே நம் நிழல்களை இழந்து, விழலுக்குப் பாய்ச்சிய நீராக, இழந்த கனவாக தனிமையில் தவித்து நிற்கிறோம். விதி என்பதே விதையால் முகிழ்த்ததுதான். விதியை மதியால் வெல்லலாம். ஆனால் விதி மதியை வெல்லும் என்பதும் உண்மையே. என்னுடைய திரைக்கதையாக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விதி எனும் பதினைந்து வயது கதாநாயகி (இந்த நடிகையும், பிற நடிகைகளைப் போலவே ஒரு அழகான முட்டாள்தான்), மதி (இப்பதினைந்து வயது பாத்திரத்துக்கான நடிகர் என் நண்பர் கமல்ஹாஸன்) எனும் உலகமகா இளைஞஅழகனைத் திருமணம் செய்துகொள்வார் என்பது ஒரு எளிய எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்தல் நமக்கு ஒரு கண்ணாடி கொடுத்துள்ளது. அந்தக் கண்ணாடியில் நாம் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, நம்மையே பார்க்க வேண்டும். நாம் எந்த வகையான சமூகத்தை விரும்புகிறோம்? நம்முடைய மதிப்புகள் என்ன? இந்தக் கேள்விகள் தான் முக்கியம். ஆனால், கண்ணாடி பிம்பங்கள் கயிற்றரவுகளே என்றே வேதாந்தம் சொல்லும். எது விழி நிலை, எது பிதுங்கு நிலை என்பதை அறிய XXXL அளவு கௌபீனக் கோமணத்தை அணியவேண்டியவர், வெறும் S அளவானதை போட்டுகொள்வதை ஆச்சரியத்துடன் அவதானித்து அனுமானித்தால், திருப்பூரின் பேரவலநிலை தெளிவுபடும்.
வெற்றி பெற்றவர்கள் வெற்றியை ஒரு அதிகாரமாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு பொறுப்பு. தோற்றவர்கள் இதை ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு வாய்ப்பு. மக்கள் இதை ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி. இவை அனைத்தையும் ஒருங்கே பார்த்து அவதானித்து அறிந்த என் போன்றவர்கள், கீதையில் சொல்வதுபோல ஜீவன்முக்தர்கள். ஆனால், தமிழகத்தில் நான் ஒருவன்தான் ஜீவன்முக்தனாக தன்னந்தனியாக சுயஓளிர்ந்துகொண்டு இப்படி இருக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளாகவே இந்த நிலைமையே தொடர்கிறது. சராசரித்தனம் மிக்க தமிழ்ச்சூழல் இயல்பாகவே இப்படித்தான். இருந்தாலும் எனக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை கிடைக்காதது ஒரு சமகால வரலாற்று நகைமுரண்.
இறுதியாக, இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லுவது எளிதானது: ஜனநாயகம் என்பது ஒரு இயந்திரம் அல்ல; அது ஒரு உயிர். அந்த உயிர் உயிர்த்து நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு அகத்தில் பேணுகிறோம் என்பதில்தான் அதன் புறவயமான எதிர்காலம் இருக்கிறது.
அதனால், இந்த முடிவுகளை ஒரு இறுதி என அல்ல, ஒரு தொடக்கம் என பார்க்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலும், உண்மையில், ஒரு புதிய கதையின் முதல் பக்கம் தான்.
அதேசமயம் “கட்டுடைத்துக் கட்டுக்கடங்காமல் பார்க்கும்போது – பின்பெருவெடிப்புத்துவ காலவெளிப் பிரவாகத்தில் – முடிவுகளை, முடிவற்ற முடிவுகள் என்றும் பார்க்கலாம்” என என் சீடன் நித்யா, தன் குருவின் விடைக்காகக் காத்திருந்து, கேட்டு மன்றாடி ஆராதிக்கும்போது அவர் சொன்னதாகச் சொல்வார். ஆனால் எனக்கு அதனை நான் அப்படிச் சொன்னதாக நினைவிலில்லை. எனக்கு எவ்வளவோ சீடர்கள், சீடிகள் – மேலும், அவ்வப்போது நானுதிர்த்து மெய்சிலிர்க்கவைக்கும் மெய்ஞானத் தேடலுண்மைகள், தெரிந்து தெளிந்து உரைக்கும் சாஸ்வத சத்தியங்கள்… இப்படிப்பட்ட அடர்த்தி மிக்க சூழலில், யாரிடம் என்ன சொன்னேன் என்பதை அறிந்துளர் யாவர்.
எப்படியும், தன் குருவின் மீதான மட்டற்ற மரியாதை காரணமாக நித்யசைதன்யசதி இப்படிக் கருத்துதிருக்கலாம் எனக்கூடக் கருதலாம். ஆனால், ஒருவேளை நான் அப்படியே சொல்லியிருக்கலாமும்தான், ஏனெனில் நான் சொல்லக்கூடியதுதான் இது. இதுதான் துவைத அத்வைதம் எனும் இருமைத்துவத்தின் இருண்மையற்ற புதிர். இந்தியத் தத்துவவியலின் எட்டாவுயரத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ஏழாம் ஞானதரிசன மார்க்கம்.
‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற என் பிரத்தியேக, நானே வடிவமைத்து, திரைக்கதை வசனம் எழுதிய இருவார்த்தைச் சொல்லாட்சி இதனை உணர்த்துகிறது என்பதை உணர்ந்து உறைந்து உள்ளடங்கி – அதேசமயம் தேர்தல் முடிவுகளை உள்வாங்கிப் புதிர் நோக்கி இருந்தால், தெளிந்துவிடும். கனவு கலைந்து நினைவு வந்தாகிவிடும். பிறகென்ன… கீழ்பாக்கத்தை விட வெகுவுன்னதமான ராஜகீழ்ப்பாக்க மாளிகை ஒன்றுக்குக் குடிபெயர்ந்து அதன் உப்பரிகையில் அமர்ந்து, சராசரி மக்களின் வாழ்க்கையை ஒரு பறவைப் பார்வையாக இன்னமும் கூர்ந்து அமோகமாக அவதானிக்கலாம், மெய்ஞான மரபுத் துணுக்குகளையும் உதிர்க்கலாம். (ஐயோ, என் அடுத்த கூடுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறதே!)
…ஆனால் எல்லாமே ஸ்வப்ன ஸ்கலித நிலை என்பதை உணர்ந்தால், நீங்கள் உங்கள் பின்பக்க மண்ணைத் தட்டிக்கொண்டு ஆகிற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவீர்கள். இதுவும் கர்ம யோகம் தான். எந்த யோக மார்க்கத்தை நீங்கள் கடைபிடித்தாலும், அந்தக் கடையின் ஏகபோக இணையதளம் ஜெயமோகன்.இன் மட்டுமே என்பதை உணர்ந்தாலன்றி உங்களுக்கு கதிமோட்சமில்லை.
தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு இதைத் தான் தெளிவுபடுத்தும்.
-0-0-0-0-0-0-0-
தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு
April 25, 2026
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு நாள்களே ஆனது. ஆனால் வானம் இன்னும் வாக்குச் சீட்டுகளின் தூசியில் நீலமாகத் தெரியவில்லை; அது ஒரு வேறு நீலம் – கருத்துக் களரியின் நீலம். இந்த நீலத்தின் நடுவே, சிந்தனைக்காக சாம்பல் நிற நிழலைப் போல நம்மைத் தேடி வருகிறது ஒரு குரல்: “இது வெற்றி அல்ல, இது ஒரு இடைநிலை.”
கிராமப் பாதையில் மழை பெய்த பின் உண்டாகும் அந்த நெளிந்த மண்வாசனை போல, தேர்தல் முடிவுகளின் பின்னால் ஒரு நீண்ட வரலாறு கிடக்கிறது. ஒவ்வொரு வாக்கும் ஒரு சிறிய கதையாகத் துடித்தது. அந்தக் கதைகள் சேர்ந்து ஒரு பெருங்காவியம் ஆனது. ஆனால் இந்த காவியத்தில் தனித்துவ நாயகன் யார் என்று கேட்கும் போது, வாக்குப்பெட்டியின் இருண்ட உள்ளே இருந்து ஒரு சிரிப்பு மட்டுமே கேட்கிறது.
ஒரு காலத்தில் நம் அரசியல் ஒரு நாடக மேடை. மேடையின் பின்னால் ஒளிந்திருந்த கயிறுகள், முன்னால் தெரியும் நிழற்பாவைகளை ஆட்டின. இன்று அந்தக் கயிறுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மையில் கயிறுகள் இன்னும் யாரோ ஒருவரின் விரல்களில் சிக்கியுள்ளன; நாம் அவற்றை பிடித்துக் கொண்டு இருப்பதாக மட்டும் நம்பிக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தின் மிக மென்மையான மாயை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு வாக்குறுதியும் ஒரு சிறிய கவிதை. “நாளை நல்லது” என்ற ஒரு வரி கவிதை. அந்தக் கவிதையை நம்பி மக்கள் வரிசையில் நின்றார்கள். வாக்குச்சாவடியில் அவர்கள் தங்கள் விரலில் மை அடித்துக்கொண்டார்கள். அந்த மை ஒரு குறி அல்ல, ஏன் குறியீடும் அல்ல; அது ஒரு தற்காலிக உடன்படிக்கை – “நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன்” என்ற அமைதியான ஒப்பந்தம்.
இப்போது முடிவுகள் வந்துவிட்டன. வெற்றி பெற்றவர்கள் புன்னகைக்கிறார்கள். தோற்றவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் மக்கள்? அவர்கள் மீண்டும் தங்கள் தினசரிக்கு திரும்பிவிட்டார்கள். ஒரு தேநீர் கடையில், “யார் ஜெயிச்சாலும் நமக்கு என்ன?” என்ற கேள்வி ஒரு பழைய ராகம் போல ஒலிக்கிறது. அதே நேரத்தில், அந்தக் கேள்விக்குள் ஒரு புதிய நம்பிக்கையும் உண்டு: “இம்முறை ஏதாவது மாறுமோ?”
சிற்றூர்களில் மாலை நேரம். தெருவிளக்கின் கீழ் அரசியல் விவாதங்கள் மெதுவாக ஒளிர்கின்றன. ஒரு முதியவர் சொல்கிறார், “இது எல்லாம் சுழற்சி. இன்று இவர்கள்தான், நாளை மற்றவர்கள்.” அருகில் இருக்கும் இளைஞன் சிரித்து, “அப்படின்னா நாம எப்போ?” என்று கேட்கிறான். அந்தச் சிரிப்பில் ஒரு சின்ன புரட்சி ஆழ்ந்த குறியீடாக படிமமாக மறைந்து கிடக்கிறது.
இந்தத் தேர்தல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு குறிப்பு. வரலாற்றின் ஓரத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு: “மக்கள் இன்னும் பேசுகிறார்கள்.” அந்தப் பேச்சு சில நேரங்களில் சத்தமாக இருக்கும், சில நேரங்களில் மௌனமாக இருக்கும். ஆனால் அது நிற்காது. ஏனெனில் ஜனநாயகம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; அது ஒரு தொடர்கதை.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வெற்றியை கொண்டாட வேண்டுமா, தோல்வியை ஆராய வேண்டுமா? அல்லது இந்த இரண்டிற்கும் நடுவே நின்று, ஒரு சிறிய கேள்வியை கேட்க வேண்டுமா: “இந்த முறை நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?” அந்தக் கேள்வி தான் இந்தத் தேர்தலின் உண்மையான பரிசு.
இறுதியாக, ஒரு சிறிய உண்மை: வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனங்கள் இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளது. அந்தத் திறப்பு தான் அடுத்த தேர்தலின் விதை. அதுவரை, அரசியல் நம் வாழ்க்கையின் ஓர் இடைவேளையாக அல்ல, அதன் ஓர் அத்தியாயமாகத் தொடரட்டும்.
BREAKING NEWS! TN Election 2026 – Exit Poll Results!!
April 24, 2026
Yes.
Tamilnadu assembly election 2026 that happened yesterday (23 April 2026), is/was itself an Exit Poll. Period.
Exit of DMK+ assorted, despicable scum, from the scene in TN — that is.
#D1’s electoral end and the beginning of its demise, I mean – of course along with its shamelessly indentured slaves.
…and then, the scum Dravidian1 group breaking up into insignificant pieces of rubble & dust.
One wishes so. One fervently hopes so.
I am willing to tonsure my head again at the feet of the Lord Skanda of Pazhani, if it happens; call me an irrational and sentimental fool, thanks anyway!
Doesn’t matter if some charismatic joker’s wild fanfluff (#D3) ignoramuses – OR a bunch of the other undesirables (#D2) get to wield power for the next term.
That #D2 should eventually follow its predecessor is another wish. Again #D3 to follow the graveyard-march schedule to which all Ds should be ultimately destined for… and that the massively irrelevant commies & the rabid jati-parties would close their decrepit shops & move on…
Am sanguine… or perhaps, am suffering from some virulent senile non compos mentis.
And, ah – yes the final fervent plea to my Isvara … is that, post the incineration of the anti-Hindu, anti-Bharat & spectacularly corrupt D ideology – the real worthies that would tangibly remain in the subsequent rounds of elections in my dear Tamilnadu, be BJP & NTK – them being opposite polls/poles along certain axes.
And, oh – the hope, the dream…
🕉️🧘🏽
ஏப்ரல் 23, 2026 சட்டமன்றத் தேர்தல்: எங்கள் திமுக++ அவியலணிக்கு அவசியம் வேட்டு போடவும்!
April 21, 2026
ஐயய்யோ! வோட்டு போடவும் என ஒருமாதிரி திராவிடலை ஆர்வத்துடன் சொல்ல வந்து, தடுக்கி விழுந்து, ஆக, வோட்டின் கால் இசகுபிசகாக உடைந்து வேட்டாகிவிட்டதே!
டூ லேட். எது எப்படியோ. ஆக, பெட்டர் வேட் தன் நெவர்.
ஆக, வாக்காலப் பெறுமக்கலே! ஆக, எங்களோட வறலாரு காணாத சாதனேங்கள மெச்சி மற்க்காம, ஆக, செந்தாம செதறாம உதய்சொறியனுக்கு வேட்டளிப்பீர்!
ஆக, நண்றி.
இவண்:
முட்டுவேல் க. ஸ்.
chemical reactions also conform to E = mc²
April 16, 2026
This was a 12th grade Gestalt moment for me, of course ages ago: Even in ‘Chemical’ reactions, the mass-energy equivalence applies, like mass-defect in the Nuclear ones.
Chemical reaction energies (endothermic/exothermic) arise from electronic interactions++; the associated mass defect is a secondary consequence.
E=mc² For The Win. YES!
1
Many of us erroneously assume that Chemical energy creation (or absorption) does not involve anything like mass-energy equivalence; and that, ‘masses are like totally conserved in chemical reactions.’ That, the ‘sum of the masses of reactants on the left hand side of an equation, are equal to the products/results on the right hand side.’
Our school textbooks (hic) feed the ignorance by creating random differences between nuclear and chemical processes/reactions – which our otherwise mediocre ‘teachers’ follow like automatons; of course, there are obvious differences though.
(having been a school-teacher before – and sorta continuing as a low intensity one-on-one teacher/cheater for a while, and stressing on the idea ad infinitum – I can say with a huge satisfaction that many of my young learners have had such similar gestalt moments of wonder that is Science!)
2
FACT: Even the burning of firewood has to adhere to the stellar idea of Mass-Energy equivalence as fantastically propounded by Albert Einstein.
The basic interaction/reaction in ‘burning firewood resulting in smoke & heat/light’ is of carbon atoms combining with oxygen molecules to produce carbon dioxide:
C + O2 → CO2 + 4.08 eV.
Remember: 1 electron volt (eV) = ~1.6 × 10⁻¹⁹ joule (J) = ~3.83 x 10-20 calorie. A calorie is nothing but the heat energy required to increase the temperature of 1 gram of water by 1 degree centigrade; of course 1 eV has a very, very small or insignificant heat equivalent – but, the fact is that it exists.
Anyway. In this exothermic (heat releasing) chemical reaction, 4.08 eV of energy is released for each reacting carbon atom; it is referred to as the binding energy (BE) of CO2 molecule.
Again, as a reverse reaction – if 4.08 eV of energy is given to a CO2 molecule under suitable conditions, it will break up into its constituents as in:
CO2 + 4.08 eV → C + O2
… what this means is 4.08 eV energy leaves the system to form CO2 gas. Therefore, the mass of CO2 molecule will be less than the total mass of C and O2 by a mass equivalent of 4.08 eV.
This loss of mass Δm can be calculated using the brilliant equivalence relation E = mc2 …
Of course, such a small change in mass cannot be detected and we say without batting an eyelid that the mass is conserved in chemical reactions, though slight change of mass does occur.
(In one gram of Carbon, there are ~5.02 × 1022 atoms; when one gram of Carbon is burnt thus, the heat released is 7800 calories)
3
Summarizing various aspects of chemical reactions…
- Energies of the order of 10 eV are involved. (in Nuclear ones, the order is in MeV – million/mega eVs = 106 eVs)
- Change of mass is of the order of 10–35 kg, which is extremely small and so we claim that the mass is conserved.
- The total number of atoms of each type on the right hand side of a given chemical equation is always equal to the total number of atoms of each type on the left hand side.
- Chemical energy comes from electronic structure changes (rearrangement of valence electrons, bond formation/breaking) – & is governed by electromagnetic interactions
- The mass change is a derived consequence, not the driver
- In a chemical bond – the electrons rearrange into a more stable (lower-energy) configuration
E=mc² For The Win. Absolutely YES!
END
நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை 2-3 மணிக்குத் திரும்பவருகயென…
…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….
துரந்தர் என்றால் என்ன?
கோலாஹல ஸ்ரீநிவாஸ்
“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்) தாக்குகிறான்.
ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.
நான் சிறுவயதிலேயே என்னுடைய அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”
சீமான்
“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!
…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”
டெல்லி ராஜகோபாலன்
“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!
இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”
மூத்த பத்திரிகையாளர் மணி
“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.
ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”
ரவீந்திரன் துரைசாமி
“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.
…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”
ரங்கராஜ் பாண்டே
“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…
ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”
பாரிசாலன்
“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…
ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான். துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்; + ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”
ஜெயமோகன்
“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம் சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.
…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது. அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன். ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”
பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா
“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.
நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”
(சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)
அண்ணாமலை
“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும். நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.
ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”
பத்ரி சேஷாத்ரி
“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..
நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”
என்னது? ஆனானப் பட்ட ‘கிழக்கு பதிப்பகம்’ புகழாளரும் அரசியல் பகுத்தாய்வாள விமர்சகருமான பத்ரிசேஷாத்ரி, தமிழகவெட்டிக்கழகத்தின் கொள்கைப் பரப்புரைச் செயலாளரா? ஐயோ!! தேர்தல் களம் றொம்பவே சூட் புட்ச்சிடிச்சே!
கருத்துப் படம், நன்றி: சாட்டுஜிப்டார் :-(
பத்ரியார் எனக்கு முன்னறிமுகவானவர்தாம், சமன நிலையுள்ளவரும் படுபுத்திசாலியுமான இக்கிழக்கார், செயலூக்கமும் மிக்கவர்தாம். ஆகவே, இத்தனை நாள் அவர்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். இனி மேலதிகமாக அவரை மதிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. மேலும் அவருடைய நடு நிலைமைப் பிறழ்வுக்கு, தவெக எவ்வளவு பொட்டியில் கொடுத்தது எனத் தெரியவில்லை – ஆகவே பொறாமையாகவும் இருக்கிறது.
ஆக… பிகில் நடிகர் விஜய்க்கும் ஒரு B டீம் இருக்கிறது. பத்ரி டீம்! :-(
எது எப்படியோ… ஒரு மாதிரியாக, ஒரு படுகேவலமான எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியிடப்பட்ட அவருடைய வெட்கங்கெட்ட கேடுகெட்ட தவெக பரப்புரை – பார்த்துக் களிக்கவும், அல்லது முகம் சுளிக்கவும்; சுமார் 20+ நிமிடங்களே ஓடும் இந்த ப்ளடி விடியோவைப் பார்த்தாவது தவெக-கார விசிலடிச்சான் குஞ்சாமணியாளர்களுக்கு உங்கள் அனாதரவை நல்கவும்.
…பொட்டி வாங்கிக்கொண்டீர்கள், சரி பத்ரியாரே! ஆனால், இப்படிப் படுகேவலமாகவா விஜய்க்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பது? அவருடைய விட்டேற்றி அறிவிலித்தன ஜிகினா வாக்குறுதிகளுக்கெல்லாம் குதர்க்கரீதியான வியாக்கியானம் அளிப்பது? இம்மாதிரி சப்பைக்கட்டுகளுக்காக விசிலாளர்கள் உங்களுக்குக் கொடுத்த விலை என்ன?
பைசா கொடுத்தால் எப்படியல்லாமோ கலர்கலராகக் கம்பி கட்டிவிடுவீர்களா?
ஆனாலும் பத்ரீ! நீங்கள் விலை போவீர்கள் என என் கனவில் கூட நினைத்ததில்லை. :-(
எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்தப் பதிவெழவையும் படித்துத் தொலைக்கும் சக ஏழரைகளான நீங்களும் பத்ரியை ஆழ்மனதிலிருந்து வெறுக்கவேண்டும் – ஆகவே இவ்விடியோவை முழுமையாகப் பார்த்து, அவரைக் கரித்துக் கொட்டவும்.
நன்றி. :-(































