விஜயிசம்: விஜை விதைத்தவன் விஜை அறுப்பான்
May 20, 2026
முகம் சுளிக்காதீர்கள்! தமிழகத்தின் மீதான மேற்கண்ட சாபம் மட்டும் மட்டமல்ல, அதைவிடப் படுமட்டரகமான ஒன்றும் இருக்கிறது. அதாவது:
உதய் விதைத்தவன், உதைபடுவான் கூட.
தலைப்புக்கு, கூறுகெட்ட சினிமாமோக தமிழக வாக்காளர்கள் காரணம்.பதிவின் இரண்டாம் பத்திக்கு ராஜமாதா துர்க்கையும் அவள்தம் மணாளனும் உருவாக்கிய அவர்களுடைய அரைகுறைத் தற்குறிப் புதல்வனும் காரணம்.
எது எப்படியோ! ஊழல் குட்டையில் ஊறும் மட்டைச் சனியன்களான திமுகவும் அஇஅதிமுகவும், ஒருமாதிரி ஏமாற்றத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை ஊட்டுவது; ஊக்கபோனஸ்ஸாக – நாறி அழுகும் அம்மட்டைகளின் வெட்டி நார்களான கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிற்தேக்களும் டெம்பரவரியாகவாவது ஒதுக்கப்பட்டது சந்தோஷமே.
1
விஜய்குஜய் பிகிலார், அப்டீபோடு…போடுபோடு எனக் குத்தாட்டம் போட்டு என் முன்னாள் மாணவர்களைக் கிறங்கவைத்து மூளைச்சலவை செய்து தமிழக முதலையமைச்சர் ஆனாலும், சிலபல விஷயங்களை அவருடைய விசிலடிச்சான்குஞ்சப்ப ரசிக வாக்காளர்கள் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் – இவை ஒப்புக்கொள்ளப் படவேண்டிய ‘நல்ல’ வெளிப்பாடுகள்தாம்.
அ: திராவிடமாடல் அரசியல் என்பது உள்ளீடே அற்ற கூளம் + அதன் ஒற்றைப் பெரும் சாதனைவேதனையான சுமார் 60 ஆண்டுகால பள்ளிக்கல்வி உயர்கல்வி எழவு என்பதும் அசிங்கமான கவைக்குதவாத உணர்ச்சிகரமைதுனக் குப்பை எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன..
ஆ. ஓட்டுக்குப் பணம் தேவையில்லை. (ஆனால் பிகில் கட்சியும் சிலபல இடங்களில் கொடுத்துத்தான் இருக்கிறது) – ஆனால் சினிமாமோக வாக்காளப் பெருமாக்களுக்குக் கொஞ்சம் விசிலடிச்சான் இன்பலாகிரி கொடுத்தால் போதும். ஓட்டுச் சாவடிக்கு ஓடிப்போய் ஓட்டில் பிகில் சின்னத்தில் குத்திக் குத்திக் குத்தாட்டம் போட்டு விடுவார்கள்.
இ. இரண்டு பெருங்கொள்ளை திராவிடக் கட்சிக் கூவான்களுக்கும் மாற்று, ஹ்ம்ம்ம்… ஊம்ம்ம்… இன்னொரு இளந்திராவிடக் கட்சியே!
ஈ: தமிழகப் பெண்கள் – குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்கள், புருஷன் எப்படி திராவிடக்குடி குடித்தே செத்தாலும் – அதன் வளமான எதிர்காலத்துக்காகக் யோசித்துத் தியாகம் செய்யும் பாங்கினர் எனும் மாயை விலகியிருக்கிறது. வீட்டில் சோறு பொங்கக் காசு இருக்கிறதோ இல்லையோ, விஜய்குஜய் சூர்யா படமா… யானை விலை கொடுத்தாவது FDFS பார்க்கும் பாக்கியம் பெற வேண்டும் எனும் அவர்களுடைய நியாயமாக அபிலாஷைதான் தமிழகத்தை நிர்வகிக்கும் திறனாக விஜய்குஜய் மூலமாக முகிழ்த்திருக்கிறது.
உ. ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்றும், ‘நான் ஒர்த்தன் வாக்குப் போட்டு என்ன பெரிய்ய மாற்றம் ஏற்பட்டுவிடும்’ பேசுபவர்களும், ‘எல்லாமே திருடனுங்க, அத்தொட்டு நோட்டாவுக்குத்தான் என் ஓட்டு’ எனவிருக்கும் அவநம்பிக்கை வாதிகளும் நிறைந்த பொதுவெளியில், பெரும் திரளாக இளைஞர் பட்டாளங்கள் வாக்களிப்பதும் நடந்திருக்கிறது. (பின் எதற்காக ஒரு ஜிகினாவாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற கேள்வி இருந்தாலும் – இம்மாதிரியே இளைஞர்கள் தொடர்ந்து தேர்தல் பாதை ஜனநாயகத்துக்கு வருவது சரியே)
ஊ. ஜாதி பார்த்து மதம் பார்த்து தமிழகத்தில் ஓட்டுப் போடப்படவில்லை என்று சொல்ல வைத்தது – ஆனால் இதில் எவ்வளவு தூரம்/ஆழம் உண்மை என்பது தெரியவில்லை; இருந்தாலும் ஒரு 10% விசில்கார எம் எல் ஏக்கள் இப்படி இருந்தாலே பெரிய விஷயம்தான்…
எதிர்மறை விஷயங்கள் எனப் பலப்பல இருக்கின்றன, மாதிரிக்கு
அ‘: சினிமா கவர்ச்சிகர இஷ்டைலுக்கும் நிஜவாழ்க்கை + நிதர்சனஅரசியலுக்கும் போடப்படும் மொட்டைத்தலை+முழங்கால் முடிச்சு
ஆ‘. லோக்கல் வேட்பாளர் முக்கியமில்லை – எங்களுக்கு வெறும் ஜிகினாத்தலைவன் போதும்.
இ‘: கூட இருப்பவன்களெல்லாம், அதுவும் தவெக இரண்டாம்வரிசைத் தலைவன்களெல்லாம் ஓடுகாலிகள், அயோக்கியர்கள் – இவர்களை வைத்துக்கொண்டு எப்படி குட்டையைக் குழப்பாமல் இருக்கமுடியும்?
ஈ‘:…
இப்போதைக்கு இப்போதை போதும். அதாவது, ஜிகினா கொடுக்கும் இன்பலாகிரியே துணை.
2
இந்த பிகில் கட்சிக்கு ஐடியாலஜி என்பதுபோல ஒரு ஐடியாவுமே இல்லை என ற்றொம்ப அபாண்டமாகப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அண்ணாயிசம் என்பது போல, பெரியாரிசம்/பெரியார்ஈயம் என்பது போல, திராவிடமாடல் எனும் மாயப்புகைமூட்டத்தைப் போல – இந்த டிவிகே பிகில் கட்சிக்கும் அப்படியாப்பட்ட ஒரு விசித்திர ஜந்து இருக்கிறது.
அதுதான் விஜயிசம். ப்ளடி ஹெல்.
விஜயிசம் = தமிழ்த் தோசையம் + திராவிட வேசியம் + உடும்பு லேகியம் + வலைத்தள மீமாம்ஸகம் + முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்
அதாவது ஐம்பெறும் கோப்பியம் – அதாவது cope செய்தல் என ஒரு மாதிரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.
மேற்கண்ட அசமன்பாட்டிற்கு ஒருமாதிரி விளக்குமார் விளக்கம் கோனார் நோட்ஸ் வகையறா கொடுக்கவேண்டுமென்றால்:

தமிழ்த் தோசையம்: வெட்டித் தமிழ் வெறி உச்சாடன இட்டிலிக்கடையில் இழுத்துவார்க்கப்படும் ஓசை மிகுந்த தோசை செய்து போக்கற்ற வழிப்போக்கர்களுக்குப் பரிமாறுவது
+
திராவிட வேசியம்: கவைக்குதவாத சுயமைதுன திராவிடத் தனம் பேசி, அதற்கே உரித்தான வேசைத்தனத்தைச் செய்வது. (ஈவெரா சொன்னது நினைவிலிருக்கிறதா? )
+
உடும்பு லேகியம்: நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு, சமூக நீதிக் கோமாளித்தனம், மதச் சார்பின்மை, இலவசமோயிலவசங்கள்++ போன்ற உடும்புத்தைல வியாபாரங்களில் முனைப்பு
+
வலைத்தள மீமாம்ஸகம்: ஜிகினாக்களும் புளகாங்கிதங்களும் அதிமனிதப் பீலாக்களும் மட்டுமே நிறைந்த ஆனால் எண்ணிலடங்காத மாஸ்-ஹிஸ்டீரியா மீம்ஸ், ரீல்ஸ் போட்டே சலித்த சராசரி மூளைகளைச் சலவை செய்யும் பாங்கு
+
முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்: ஆர்வக்கோளாற்றுச் சிறு பிள்ளைகளை வைத்து முதிர்ந்த மூடர்களையும், இளம் விடலை தன்னிச்சை இன்ஃப்ளூயன்ஸர்களை வழியொற்றும் பிற தறுதலை இளைஞர்கள் வசீகரம் செய்யப்பட்டும் – தமிழர்களுக்கே உரித்த, உதவாக்கரை உணர்ச்சிகரமைதுன மந்தை உச்சாடன ‘தீயசக்தி X தூயசக்தி’ வகை மடத்தனத்தை அறுவடை செய்யும் பாங்கு.
3
…அவரைச் சுற்றிச் சுற்றி உள்வட்டமாக யார் இருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலேகூடபெரும் விசனம் தான்; அதுவும் சொஸ்தம் செய்யப்பட முடியாததொன்று.
ஆதவ்அர்ஜுனார், ‘புஸ்ஸி’ ஆனந்தனார், செங்கோட்டையார்…
ஆதவ், அர்ஜுனா அல்லர், கழுதை கர்ஜனா கூட அல்ல – மாறாக, லாட்டரி துச்சாதனா என்பதுதான் அவர் பெயராக இருக்கவேண்டும்… LOTTERY is nothing by LOOTERY. எந்த ஒரு விஷயத்திலாவது கொடுஞ்சூதாட்டத்துக்கும் இந்த லாட்டரி எழவுக்கும் வித்தியாசமுண்டா, சொல்லுங்கள்… இவரும் இவர் புகுந்த வீட்டினரும் (லூட்டரி மார்ட்டின்) செய்யாத ஊழலோ அயோக்கியத்தனமோ உண்டா? ஆனால் – இந்த ஆள், கட்சிகட்சியாகக் கலர்கலராக மாறி றெக்கை விரித்தாலும், பின்னர் மேதகு ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இந்த ஆனந்தனாரும், கடுகுச்சேரிப் பாண்டிச்சேரியில் ஒரு குறு விறகுதொட்டி நடத்தி வந்தவர்; ரெண்டு தெரு வார்ட் கவுன்ஸிலர் வகை பாண்டி ‘எம் எல் ஏ’ தொகுதி ஒன்றில், படுபீதியளிக்கும் பயங்கரப் போட்டி போட்டு வென்றும் தோற்றும் காலத்தை ஓட்டியவர்… ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே நில/வீடு அபகரிப்பு அடாவடி எனத் தன் திராவிடத் தொழிலை விஸ்தீரணம் செய்து, உறவினர்களை வைத்து கட்சிக்குக் கட்சிதாவி, ஒருவழியாகக் கடைசியில் விஜய்குஜயுடன் ஐக்கியமாகி எல்லா வல்லமையும் பெற்று விளங்குகிறார்… தமிழக அரசியலும் கனஜோராக திராவிடமாடல் ரெண்டுங்கெட்டானாக மிக வெளங்கிடும். (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார். இவரும் ஊழலில் கைதேர்ந்தவர்தாம், திராவிடப் பழம் தின்று கொட்டையும் போட்டவர்தாம். (இப்போது மாறிவிட்டிருக்கலாமோ என்ன எழவோ!) (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவரும் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)
பேஷ்பேஷ்!
இதற்கு மேலிருக்கும் உள்-ஓளிவட்ட ஆசாமிகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அழுகி முடை நாற்றமெடுக்கும் ஒரு பானைச் சோற்றில், மேற்கண்ட மூன்று புழு நெளியும் பருக்கைகளானவை சரியான பதத்தைக் காண்பிப்பவைதாமே!
4
(ஆனாலும், இவர்களையும் மீறி, ஒருமாதிரி மிகக் கொஞ்சமான நல்லாட்சி எனத் தப்பித் தவறி நடந்தால் – உண்மையாலுமே எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடும்… தேவையா?)
—
திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾
வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.
எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)
(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”
(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague
#DravidianModel modern marriages.
(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!
(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…
(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!
(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!
(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!
(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!
(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2
Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…

(முதற்கண்: இந்த விஜய் வெற்றிபெற, அவரை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்கவென புரிந்துகொள்ளவே முடியாமல் உடல்பொருள்ஆவி++ அனைத்தையும் கொடுத்து உழைத்த, என்னுடைய அத்தனை முன்னாள் மாணவர்களுக்கும் வாழ்த்து சொல்ல சங்கடமாகவே இருக்கிறது. ஆனால் சனியன்கள் ஒழிந்தன என்பதும் ஒருமாதிரி ஆசுவாசம் தருவதுதான்.)
(ஒன்றரைக்கண்: ஆனால் – இது எப்படிப் போகும் என்பது பிடிபடவில்லை…
இருந்தாலும், அயோக்கிய கொள்ளைக்கும்பல் திராவிடக் கட்சிகள் குறைந்தபட்சம் டெம்பரவரியாகவாவது வீரியம் குறைந்தமை (இவை முழுவதுமாக அழித்தொழிக்கப் படவேண்டியவைதாம்!) குறித்து மகிழ்ச்சியே!
அதே சமயம், இந்த நடிகர் கட்சிக்குப் பெரிதாக ஐடியாலஜி கட்சித் திட்டம் என்று இருக்கிறது போலவும் தெரியவில்லை. இஷ்டத்துக்கு ஈவேரா போன்றவர்களை ஆதர்சங்களாக உள்ளிழுப்பதும், மத்திய அரசோடு அவசியமேயில்லாமல் மல்லுக் கட்டுவதும் போன்ற விஷயங்கள் கலக்கம் தருபவை, பஞ்ச் டயலாக் இழவுகளும்தாம் – தற்போதைக்கு அவரைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்ப-ஊழல் வாதிகளும்அமைதி தரவில்லை…
ஆனால்…
இந்த மாற்றம், நெடு நாள் நோக்கில் தமிழகத்தை உண்மையாகவே முன்னேற்ற உதவுமானால் அதுவும் நல்லதே! வேறென்ன வேண்டும், சொல்லுங்கள்?)
சாருநிபேதிதா: தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2026 – எக்ஸிஸ்டென்ஷியல் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள்
May 3, 2026
என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.
(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள் எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)
தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை
தேர்தல் முடிந்த 23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.
ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.
நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”
அவன் சிரிக்கவில்லை.
இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.
சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.
நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.
இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ்.
ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.
இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.
அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.
ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.
என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.
நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.












