இந்த ‘கருத்துக் கலை’ என்பது என்னிடம் கலையாகப் பரிமளிக்கவில்லை, பரிமளிக்கக் கூடிய சாத்தியக்கூறும் இல்லை என்பது உண்மை. ஏனெனில்.

சில சங்கடமளிக்கும் ஆனால் சுதந்திரப் படுத்தும் சிந்தனைகள்…

1

ஏனெனில், கருத்துகளை எப்படி, எதற்காக அளிக்கிறோம் – என்பது, நம் எண்ணங்களைப் பிறருக்கு நேரடியாகச் செலுத்துவதற்கான ஊற்றுக் கண்களைப் பொறுத்த விஷயம்.

ஒன்று; அதாவது, தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறைகளும் அதன் முறைமைகளும். 

இன்னொன்று – அப்பரிமாற்றத்தின் வழி நேரடிக் கருத்துகளைச் சொல்வதற்கு அப்பாற்பட்டு, நம் மனோபாவத்தையும் நமக்கும் கேட்டு/படித்துக்கொண்டிருப்பவருக்கும்(~ ‘வாசகனுக்கும்’) இருக்கும் உறவையும் சுட்டுதல்…

  • “வெட்டினால் ஒன்று துண்டு ரெண்டு – அப்டீன்னு பேசிடணும்! அப்டிதான் எனக்குப் பழக்கம்!! நீ புண்பட்டால் எப்படியே கெட்டுப்போ! எனக்கொரு பிரச்சினையும் இல்லை!”
  • “நான் யார், எவ்வளவு பெரிய்ய அறிவாளி, தெரியுமா?”
  • “டேய்,  இதோ என் கர்த்து… புட்ச்சிக்கினு ஓட்றா டேய்!”
  • “இதையெல்லாம் உனக்கு விலாவாரியாகச் சொன்னால் புரியாது, நீ எளிமையானவன்… இருந்தாலும்…”
  • “இம்மாதிரி சிக்கலான விஷயங்களையெல்லாம் நான் எப்படி மிகத் தெளிவாக அணுகுகிறேன் பார்க்கிறாயா?”
  • “நான் மிக முக்கியமானவன், பெரும் செயல்பாடுகளில் இருக்கிறேன்! ஏதோ போனால் போகிறது என என் கருத்துகளை உன் மேன்மைக்காகச் சொல்கிறேன்! ஆகவே, நான் சொல்வதை, உன் நன்மைக்காக, நீ மிகமிகக் கவனமாகக் கேட்க வேண்டும்!”
  • “விட்டேற்றித்தனமாகப் பேசுகிறேன். எனக்கு போரடிக்கிறது, ஆகவே பிடித்துக்கொள் இந்த வம்பை…”
  • “ஃப்ரீயா ஜாலியா பேஸ்றேன்… லூஸ்ல வுடு…”
  • “நான், ஒரு கேளிக்கைகாகச் சொல்கிறேன்! நானே என்னை படுஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வதில்லை, அதையேதான் நீங்களும் செய்ய வேண்டும், சரியா?”
  • “நான் எவ்வளவோ பெரிய உன்னதமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன்! ஆனால் எவருமே இதற்குச் செவிசாய்ப்பதில்லை… *ப்ச்* இதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்… கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிவிடவும் மனதில்லை…”
  • “இதைச் சொல்லவேண்டும் எனத் தோன்றியது… சொல்கிறேன்.”
  • “யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்.”
  • “…”

… … இன்னமும் பல இப்படி அப்படியென்று இருக்கலாம்… ஆனால் என் அனுமானத்தில், என்னிடமும் பிறரிடமும் கலவைகளாகவும் வண்டல்களாகவும் இருக்கும் பாவனைகளையும் சால்ஜாப்புகளையும் பற்றித்தான் சொல்ல முடியுமல்லவா?

2

என்னைப் பொறுத்தவரை, நான் எனக்காக – ஒரு தொடர் பயிற்சிக்காக மட்டும்தான் எழுதுகிறேன். இதன் மூலகாரணம் – எழுதும்போதுதான் (குறைந்த பட்சம் எனக்காவது) ஒருமாதிரி கோர்வையாகவும், தர்க்கபூர்வமாகவும் சிந்திக்க முடிகிறது. என் முன்முடிவுகளைக் குறித்து அலச முடிகிறது. மனதளவில் சுற்றுச்சூழல்களை மறந்து, அவற்றின் இரைச்சலுக்கு அப்பாற்பட்டு – குறிப்பிட்ட விஷயங்களைக் குறித்து ஓரளவு குவியம் கொள்ள முடிகிறது.

தினமும் சுமார் ‘தமிழில் 400 வார்த்தைகள்’ எனவொரு கணக்கு. எனக்கு மனதில் பட்டதை எழுதுவேன் – ஆனால் இது நாட்குறிப்பு வகை அல்ல. மேலும் நான் எழுதுவதில் சுமார் 95%+ இந்த ஒத்திசைவு தளத்திலோ, X-குறும்பதிவுகளாகவோ அல்லது வேறெங்கோ பதிப்பிக்கப் படுவதில்லை. (தப்பித்தீர்கள், சகஏழரைகளே!)

மேலும் – என்னுடைய பிற – குவியங்களுடைய, ஆர்வங்கள் சார்ந்த, மேலும் தொழில்நுட்பம் உள்ளிட்ட குறிப்புகள் (புத்தகங்கள்+வியாசங்களின் சாராம்சம், அல்லது டெக்னிகல் நுணுக்கங்கள்++ என் அனுமானங்கள்++)  இவையெல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.

(நிறைய, நுட்பமான விஷயங்கள் குறித்துத் தமிழில் சிந்திக்க, தமிழிடமும் என்னிடமும் தேவையாக கலைச்சொற்கள் இல்லை, அறிவுப் பின்புலங்களும் இல்லை – இது கொஞ்சம் விசனம் தருவது ஆனால் சத்தியமான உண்மை… மேலும் நான் வெறும் ஒரு தமிழ் ஆர்வலன் தான் – வாயோர நுரைதள்ளும் வெறியனல்லன்)

சுமார் 1991 வரை போல – நான் தமிழில் பெரும் ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தேன். அந்த வருடத்தில் நான் பிரத்யட்சமாகக் கண்ட அசிங்கமான உண்மைகளின் காரணமாக – தமிழில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன் படிப்பதையும் நிறுத்தினேன் – ஏனெனில் எனக்குத் தமிழில் அல்லது தமிழ்வழியாகக் கற்றுக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை என்பது என் அனுமானமாக இருந்தது – இன்றுவரை அது சுமார் 90% தொடர்கிறது என்பது வேறுவிஷயம்…

பின்னர் 2006 வாக்கில் மறுபடியும் சொந்தக் குறிப்புகளாக “ஐயோ! நான் தமிழில் சிந்திப்பதையே நிறுத்தி 15 வருடங்களாகி விட்டனவா!” என யோசித்து ஆரம்பித்து – 2011 முதல், இந்த ‘ஒத்திசைவு தளம்’  வழியாக சிலவற்றைப் பதிக்கவும் செய்கிறேன்.

ஒருமாதிரி நகைச்சுவையாக எழுதுவதும் பிடிக்கும். நான் எழுதியவற்றை நானே படித்துப் புளகாங்கிதம் அடைந்து இன்பலாகிரி பெறுவதும் நடக்கின்றன – இவற்றிலும் ஏறக்குறைய 90:10 விகிதம்தான் பதிவேற்றம் அடையும். (தப்பித்தீர்கள் நீங்கள்!)

சென்ற வாரம் – ஜெயமோகன் சாருநிவேதிதா எஸ்ராமகிருஷ்ணனாதிகள் ஒரு அறிவுசார் கலந்துரையாடலில் இருப்பது போல எழுதினேன். எனக்கே படுசிரிப்பு.

ஆனால் இப்போதைக்கு அதனை வெளியிடுவதாக இல்லை. கவலை வேண்டேல்.

3

ஏன் – இவ்வளவு கதைகதையாய் எழுதுகிறேன் என்றால்… அண்மைக் காலம் வரை,  எனக்கு இருக்கும்/இருந்த சிலபல தொடர்புகள் + ஆர்வங்கள் காரணமாக – நம் மக்கள் அவர்களுடைய வரைவு வடிவ நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என அனுப்புவார்கள் – அதாவது என் மேலான ப்ளட்டி கருத்துகளைக் கேட்டு…

ஆனால்… இதனை மாதிரிக் கொடூரமான, ரத்தத்தை உறையவைக்கும் கொடுமை என வேறொன்று இல்லை.

இதை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும். 

என் குறிப்புகளில் இருந்து ஒருமாதிரி டேட்டா எடுத்து அங்கலாய்ப்புடன் சொல்கிறேன்:  இந்த ஜென்மத்தில் இதுவரை இப்படிச் சுமார் 25-30 நாவல்கள், 40-50 சிறுகதைத் தொகுப்புகள், 100+ கவிதைத் தொகுப்புகள், 10 போல கட்டுரைத் தொகைகள், 100+ குறிப்பிட்ட/தனி சிறுகதைகள்… … (இவற்றைத் தவிர மடித்து ஸ்டேப்ளர் பின்னடித்து ‘தனிச்சுற்றுக்காக மட்டும்’ வகை சிறுபத்திரிகைச் சுயமைதுனங்கள்++) – பெரும்பாலும் கொடுமைகள்… இவற்றையெல்லாம் படித்துத் தொலைத்திருக்கிறேன்…

மூன்றே பேருக்கு அவர்களுடைய ஆங்கிலக் கட்டுரை புத்தக வரைவுகளில் உதவியிருக்கிறேன் + எடிட் செய்திருக்கிறேன்; ஆனால் அவர்களுடைய 7 புத்தகங்களில் 4 நிஜமாகவே குறிப்பிடத் தக்கவை. இவர்களில் இருவர் ‘இடதுசாரி அறிவுஜீவிகள்’ எனத் தம்மை வரித்துக் கொள்பவர்கள். நான் அப்பெபர்களை வெளிப்படுத்தினால் சங்கடப் படுவார்கள், ஏனெனில் நான் ஒரு ‘சங்கி.’ நன்றி. இன்னொருவர் அப்படியல்லர், மூளை ஓரளவுக்குப் பணிமூப்பு அடையாமல் இருக்கிறது அவருக்கு. இருந்தாலும்.

யோசித்தால் ஐந்தாறு தொழில் நுட்பப் புத்தகங்களுக்கும் இப்படி ‘அணில்’ உதவி செய்திருக்கிறேன். ஆனால் அவை உண்மைகளைக் கணித-அறிவியல் பூர்வமாக அணுகுபவைகள். இலக்கிய – பொருளாதார இன்னபிற வகை பம்மாத்துகள் அல்ல.

தமிழைக் கூறுபோட்டுக் கூவிக்கூவி விற்கும் நல்லுலகுக்கு மறுபடியும் வருகிறேன்: இப்போது ‘பிரபலமாக’ இருக்கும் சிலபலர் இந்த ‘அனுப்பியோர் ஜாபிதா’வில் இருக்கிறார்கள். பல தேய்ந்து-மறைந்து போன அந்தக் கால அலக்கியவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் எவர் பெயரையும் வெளியிட முடியாது. அவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இதைப் படிக்கும் (அதாவது – இந்தக் காட்டுரையில் இதுவரை நீங்கள் நீந்தி வந்திருந்தீர்களானால்…)  நீங்களும்தான்!

4

சரி. இப்போது சிலபல சுவையான ‘கருத்துதிர்த்தல் கொலைக்கலை’ எஸ்எம்எஸ் வகைக் குறிப்புகள்:

பிரச்சினை என்னவென்றால் – நீங்கள் ஒருவருக்கு – முகதாட்சணியம் பார்த்து குறிப்பு – ஊக்குவித்தல் உதவி-கிதவி எனச் செய்துவிட்டால் – பிற சில அதேபோன்ற இலக்கியவாதிகளும் இதனை மோப்பம் பிடித்து, “அன்புடையீர், கவிஞர் குடமூக்கின்இறை என் நண்பர், நீங்கள் உதவுவீர்கள் எனச் சொன்னார். இதோ என் கவிதைத் தொகுப்பு, புதிய சகாப்தம் படைக்க என் புரட்சி பூபாள அரை கூவல்…  உங்கள் கருத்துகளை அவசியம் பகிரவும்…. அன்புடன், யுகப்புரட்சிப் பிரதாபன்” எனத் தொடர் கெர்ரிலா அட்டேக் செய்துவிடுவார்கள்.  திக்குமுக்காட வைத்துவிடுவார்கள்… வைரல் மார்க்கட்டிங் ப்ரேஸ்ஸியர் எல்லாம் அந்தக் காலத்திலேயே அமோகமாக இருந்தன, என்னெருமை அம்மணிகளே அம்மணர்களே!

-0-0-0-0-

ஒருவருடைய கவிதைத்(!) தொகுப்பை பெற்றுக்கொண்டு அதற்கு தேவைமெனெக்கெட்டு (அவர் என் கருத்துகளைக் குறிப்பாகக் கேட்டதால்) பிற விஷயங்களைப் படித்துப் பின்புல ஆராய்ச்சியும் என்னிடம் இருந்த ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளையும் ‘மறு வாசிப்பும்’ செய்யும்போது அவர் கவிதாயினி ‘ஸில்வியா ப்ளாத்’ கவிதைகள் சிலவற்றை அலேக்காகத் திருடியிருக்கிறார் எனத் தெரிந்தது.

அவருக்குச் சுருக்கமாக ஒரு 15 பைசா தபால் அட்டையில் “ஸில்வியா ப்ளாத் புளகாங்கிதம் அடைவார், அவர் மட்டும் உங்கள் மொழிபெயர்ப்புகளைப் படித்தால்..” என்பதுபோல எழுதியபின்…

… அவர், தம் நண்பரிடம், “ராம் இப்படி பாப்பார ஜாதிவெறியனாக மாறிவிடுவான் எனக் கனவிலும் நினைக்கவில்லை.”

-0-0-0-0-

இன்னொருவர் தன் கவிதைப் புத்தகத்தை அனுப்பியிருந்தார்… படிக்கப் படிக்க என் ரத்த அழுத்தம் அதிகமாகி எத்தைப் பார்த்தாலும் எரிந்துவிழுந்து கொண்டிருந்தது நினைவிலிருக்கிறது. அவ்வப்போது ஒரு நினைவூட்டல் வேறு…

(அந்தக் காலங்களில் ஈமெய்லும் இல்லை, ஸெல்ஃபோனும் இல்லை, என் வீட்டில் தொல்லைபேசியும் இல்லை – 12 வருட காத்திருப்போர்-வரிசையில் இருந்தேன் அப்போது…  இந்த நிலைமையில் (இப்போது தோன்றுகிறது – அந்தக் காலத்தின் அவசரப்படேல் அமைதியே வேறு, சுபிட்சம் இருந்திருக்கவில்லை என்பதும் உண்மைதான்!) …நேரில் பேசவேண்டும், இல்லை கடுதாசி எழுதவேண்டும்… ஆக, வாரத்துக்கு ஒருமுறை “அன்புடையீர், என் முந்தைய நினைவுறுத்தல் மடலைக் கண்டீரா?”

… … இம்மாதிரி விஷயங்களுக்கே அடிவயிற்றுக் கலக்கத்தில் இருந்த நான், இப்போதைய டிங் ப்ளிங் ப்ச்ங்க் நோட்டிஃபிகேஷன் யுகத்தில் எவ்ளோ பெருங்கஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்… (ஆனால் பல வருடங்களாக எல்லா நோட்டிஃபிக்கேஷன் இரைச்சல்களுக்கும் சமாதி கட்டியிருப்பதால் கொஞ்சம் ஆசுவாசம் – இருந்தாலும் சுற்றி இருப்பவர்களும் இப்படிக் கிறுக்கர்களாக இருக்கவேண்டுமே! பலப்பலருக்கு க்ளிங் ப்ளிங் என நோட்டிஃபிகேஷன் வந்துவிட்டால் அடுத்த நொடி ஃபோனை நோண்டாவிட்டால் உயிர்போய்விடும் என நினைக்கும் போக்கு, என்ன செய்ய…)

சரி… மேற்படி கவிங்கர் கடைசியாக, ஒருமாதிரிக் கோபதாபத்தில். “அன்பின் ராம், என் கவிதைத் தொகுப்பைப் படித்தீர்களா? கடந்த 8 நினைவூட்டல்களுக்கு நீங்கள் பதிலே அளிக்கவில்லை. உங்கள் கருத்து என்ன? வரைவை அச்சுக்கு அனுப்பவேண்டும்… முடியவில்லை என்றால் சொல்லுங்கள், நம் உறவை முறித்துக் கொள்வோம்!” என்பது போலப் பரிதாபமாக எழுதினார்…

அவருக்கு உடனடியாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு 15பைசா தபாலட்டையில் எழுதினேன்: “அன்புள்ள கவிஞர் யுகப்புரட்சி பாரதிகரிகாலன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் கண்டு மகிழ்ந்தேன். உங்களுடைய வரிகள் சத்திய வார்த்தைகளுள்ளவை; அவற்றிலேயே என் கருத்தும் பொதிந்திருக்கிறது, ஆமோதிக்கவும் பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ‘கவிதைத் தொகுப்பைப் படித்தீர்களா’ எனக் கேட்டுள்ளீர்கள் – அதற்கு என் பதில் ஆம். மேலும் நீங்களே பதிலாக – அக்கேள்வியில் பொதிந்துள்ள ‘குப்பை’ என்பதைக் கோடிட்டுக் காண்பித்துள்ளீர்கள், எனக்கும் அதே கருத்துதான். நன்றி. வாழ்க வளமுடன்.”

என் மதிப்புரையைப் பெற்றுக்கொண்ட அவர் எப்படியும் உறவை முறித்துக்கொள்வார் என நான் நினைவிலும் கனைக்கவில்லை, என்ன செய்ய, சொல்லுங்கள்…

-0-0-0-0-

இன்னொருவர், புதியகார்க்கி – ரத்தத்தைச் சுண்டவைக்கும் கட்டுரைப் புத்தகம் ஒன்றை அனுப்பியிருந்தார், எப்போதோ சிலகாலம் நானிருந்த கட்சித் துணுக்கின், தொடர்ந்த தீவிர பக்தர் – இன்னொரு அறிமுகம் என்னிடம் இவரைக் கழற்றிக் கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகியிருந்தார். மார்க்ஸிஸ்ம்-லெனினிஸ்ம் வகை.

ஆதிக்க சாதிகளையும் சுரண்டல்வாத முதலாளித்துவத்தையும் செமத்தியாகச் சாடிச் சாட்டையால் விளாறி ரத்தம் பீச்சியடிக்க உடலை நறுக்கி உப்புக்கண்டம் போட்டு+++… ஒவ்வொரு பத்தியிலும் பற்றவைக்கும் திகுதிகுப் புரட்சித் தீ! ஆனால் பத்தியில் ஒரேயொரு வாக்கியம்தான். பத்திகளும் முக்கால் பக்கம்! படிக்கப் படிக்க மூச்சே அடைத்து விட்டது, என்ன செய்ய…

…இதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கிற பயத்தில் இருந்தேன்… புதியகார்க்கியும் எஸ்கேப் நண்பரும் நினைவூட்டல்களை அனுப்பி, ஒரு தொடர் கொசுத்தொல்லையில் என்னை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தார்கள்.

புகா கடைசியில் ஒரு அஞ்சலட்டை: “தோழர், மதிப்புரை அனுப்பமுடியுமா முடியாதா?”

என் உடனடி பதில். “அன்பரே! என்னால் மிதிப்புரை வேண்டுமானால் அனுப்பமுடியும். நன்றி.”

பின்னர் அவர், என்னுடைய பெட்டி பூர்ஷ்வாத்தனம் பற்றி நீண்டதொரு நீலக்கலர் இன்லண்ட் லெட்டரில் சுவையாகத் திட்டியிருந்தார்  என நினைவு…

-0-0-0-0-

ஒரு நாவல்காரர் (இது சுமார் 3 வருடங்கள் முன் நடந்ததால் இவருக்கான ஒரு ர்கசியக் குறிப்பும் கொடுக்கப் போவதில்லை) – வெறும் நா என்று மட்டும் இவரைக் குறிப்பிடுகிறேன். அவருடைய பின்புலம் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும், சாதாரண சராசரிதான் ஆனால் தன்னைப் பற்றி பெரும் அதிபுனைவு பிரமைகளைக் கொண்டிருந்தவர்… முரட்டுக்கதர் ஜிப்பா போட்டவெனெல்லாம் ஒத்திசைவு ராமசாமியாகி சாமியாட முடியுமா என்ன?

இந்த நா ப்ளட்டிமேனுடைய நாவலை, ஏதோ ஒரு பசையுள்ள ஆசாமி பதிப்பிக்கிறார் எனச் சொன்னார். (இவர் எல்டிடிஈ பிரபாகரனின் இயக்க பினாமி பணமேலாளர்களில் ஒருவர், வெறி பிரபாகரனின் 2009 கணக்குத்தீர்ப்பு நன்முடிவுக்குப் பின் இவர் கழன்றுகொண்டு ஒரு தமிழ்ப் பதிப்பகத்தையும் ஆரம்பித்தார் எனக் கேள்வி…)

…ஆக,  இவர் இஷ்டத்துக்குப் பதிப்பித்துக் கொண்டிருந்த புற்றீசல் புத்தகவரிசையில் பதிப்பிக்கப்பட நா-வுக்கரசருடையதும் அப்போது பொறுமையாக க்யூவில் நின்று கொண்டிருந்தது, என நினைக்கிறேன். இதற்குச் சிலபல வருடங்கள் முன்பு இதே பதிப்பகத்தாரின் இன்னொரு நாவலை (இது வேறொரு எழுத்தாளர் – இவர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிறேன்) நான் வரைவுப்படிப்பு செய்து குறிப்புகளைக் கொடுத்திருந்தேன்…  

இந்த பின்னவர் சொல்லித்தான் முன்னவர்  நா என்னை அணுகினாரா என்பது தெரியவில்லை. ஆனால் – உதவி என்று கேட்டுக் கொண்டு வருபவர்களுக்கு என்னாலான உதவி, கோர்த்து விடுதல் போன்றவற்றை ஒரு வழக்கமாக வைத்திருக்கும் நான்,  நம் செல்ல தமிழ் இலக்கியவாதிகள் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்பேரழிவு அபாயத்தையும் கருத்தில் கொண்டு என் உயிரைத் துச்சமாக மதித்து அவருக்கு வெகுதைரியத்துடன் – சரி நா ஐயன்மீர், நான் முதல் வரைவைப் பட்டிபார்த்து டிங்கரிங் செய்துகொடுக்கிறேன் என்றேன். யாகாவாராயினும் நா காக்க, என நான் இருந்திருக்கக் கூடாதுதான்… என்ன செய்ய.

நா-க்கில் ஸேடர்ன். நா என்னைப் பதம் பார்த்துவிட்டார். ஒரு பானை சேற்றுக்கு ஒரு மண்ணாங்கட்டி பதம்.

நாவல் – ஒருமாதிரி பாலகுமாரன் + எஸ்ரா +மார்க்கெஸ். அதாவது, கடைந்தெடுத்த குப்பை, நடையே ஜெல் ஆகவில்லை. சுஜாதாவைக் காப்பியடித்து ஒப்பேற்றும் வகை – ஆனால் ஒரு இலக்கிய பாவலா. தொட்டுக்கொள்ள ஈழப்’போர்’ பின்கதை.

கதைகதையாம் கொரோனாவாம். கதாநாயகி சீனாவில் வூஹான் பரிசோதனைச் சாலையில் கொரோனா வைரஸ்ஸுடன் சல்லாபம் என்பது போல… ப்ளடி.

இதில் பல பிரச்சினைகள்: நா அடிப்படையில் ஒரு பிஏ/இளங்கலை-சமூகவியல் – இது கவைக்குதவாத படுகுப்பை என்றாலும் எல்லோராலும் வெகுவாக விரும்பப்படும், படுடிமாண்டில் இருக்கும், உலகத்திலேயே ஆகச்சிறந்த பெருமை மிக்க ‘படித்து முடிப்பதற்கு முன்னாலேயே கேம்பஸ் ரெக்ரூட்மெண்டில் வேலை கியாரண்டீ’ வகைபடிப்பான பிஏ/இளங்கலை-தமிழிலக்கியம் படிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்…

எனக்கு, சமூகவியலோடு பிணக்கு இல்லை, அது பாவம் ஒன்றுமறியா ஒட்டுண்ணி ஜீவன் – ஆனால், அதன் காரணமாகவோ என்னவோ இந்த நா – வடக்கம் இல்லாத ஆசாமிக்கு அறிவியல் என்பது சுட்டுப்போட்டாலும் வராது. அதனால் அடிப்படை அறிவியலில் ஏகப்பட்ட பரிதாபமான சொதப்பல்கள், தேவையா என நோக வைக்கும் விளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சலங்கள். + கதாநாயகனாக தன்னை வரித்துக் கொண்டிருந்த சமூகவியலாள நா…

+ஏதோ கவர்னமெண்ட் பொதுத்துறை நிறுவனத்தில் ஆஸ்தான அதிகாரி-குமாஸ்தா, அவரைச் சொல்லியும் குற்றமில்லை, பாவம். என் தனிப்பட்ட பிரச்சினை என்னவென்றால், நா-வார் தன்னுடைய தனிப்பட்ட வரலாற்றுக் கதைகளையும் நைஸ்ஸாக நாவலில் உள் நுழைத்திருந்தார். ஆனால் எதுவுமே கோர்வையாக இல்லை. 

மூச்சு முட்டினாலும் 700 பக்க எழவை (கணிநியில் தான்!), ஒப்புக் கொண்ட எழவுக்காகப் படித்துத் தொலைத்தேன். (என் ஆயுள் இதனால் சில வாரங்களாவது குறைந்திருக்கும் என அனுமானிக்கிறேன் – அதனால் என்ன, ஒன்றிரண்டு வெண்முரசு செவ்வெக்காளம் பச்சைக்குழல் கருப்புப்பிசாசு எல்லாங்கூடத்தான் படித்துத் தொலைத்திருக்கிறேன். ஆகவே.)

சுயகதையாடல் புராணம் வேறு, இதிஹாஸ ஹாஸ்யம் வேறு, தேவையா?

“ஆனால் நா, சீனா போயிருப்பதாக நீங்க சொன்னதே இல்லியே! நீங்க எப்படி அத நேர்ல பாத்ததுபோல எழுதறீங்க? யவனராணி சாண்டில்யன் ஐநா யுனெஸ்கோ பெரியார் ஈவெரா டர்புர் போல எழுத வேண்டிய அவசியமேயில்லையே? ஏங்க இந்த அறிவியல் புனைவு எல்லாம்… ‘என்னை நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை உரத்துச் சொல்லி தனித்துவமாகச் சிரித்துக் கொள்ள’  நீங்க என்ன எஸ்ரா-வா?”

“கிண்டலா? நீங்க ரொம்ப சிலாகிக்கற ஜெயமோகன், மஹாபாரதம் நடக்கும்போது பாத்தாரா? எப்படியும் நான் எழுதுவது ஸைய்ன்ஸ் ஃபிக்ஷன் இல்ல – மேஜிக்கல் ரியலிஸ்ம்!”

“ஐயோ! நான் அவர் எழுதற எல்லாத்தயும் சிலாகிக்கல, ஆனாலும் அவரு சில குறிப்பிடத்தக்க படைப்புகள எழுதித்தான் இருக்காரு, பொய் சொல்லமாட்டேன். இன்னொரு விஷயம்: அது மேஜிக்கல் ரியலிஸ்ம் இல்ல, மேஜிக் ரியலிஸ்ம், சரியா?”

“என்னவோ சொல்லுங்க, கொற சொல்லியே நாளக் கடத்தறீங்க… சொந்தமா ஏதாவது எழுதினா அதோட பிரச்சின புரியும்… மேட்டிமையோட இதெல்லாம் பாத்தா எப்டி? ஆனா, நானும் உங்க கிட்ட வந்துருக்கக் கூடாது…”

“ஆனாக்க நீங்க சொல்லுங்க…  வூஹான் வர்ணனை செய்யறீங்க, அந்தவூரோட தப்புத்தப்பான  உள் விவரங்களையாவது பரவால்ல என விட்டுட்றேன்,  ஆனா டீஎன்ஏ வைரஸ் அப்டீன்னு இஷ்டத்துக்கு அட்ச்சுவுட்றீங்க. வூஹான் எங்க இருக்குன்னாவது பூகோள வரைபடத்துலாவது பாத்துருக்கீங்களா? சும்மா கண்டெய்னர் போர்ட் ஸப்மரீன் ன்னு தாராளமா பேசுறீங்க… அது கடற்கரைல இல்லியே! “

“என்னங்க இது! என்னப் பத்தி உங்களுக்கு தெரியும் ஆனா வாசகன் அப்டியிருக்கமாட்டானே! நான் நான் அப்டீன்னு எழுதினாலும் நான் அந்த நாவலோட நான் இல்லியே! நீங்க ஒரு எழுத்தாளனோட கற்பனைய சிறகொடிக்கிறீங்க! எழுத்து தன் பிரதிய தானே எழுதிக்குதா இல்லையா?”

“ஐயா, ஆனா அடிப்படை விவரங்க சரியே இல்லியே! அங்கதான் பிரச்சினையே!”

“சார், அதையெல்லாம் திருத்திக்கிறேன் – ஆனால் நாவலோட கரு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“ஐயன்மீர், உங்க நாவல்ல கரு இல்ல, வெறும் கருச்சிதைவுதான் இருக்கு, என்னை வுட்றுங்க, ப்ளீஸ்!”

(நா அவர்களுடைய நாவல் இன்றுவரை பதிக்கப்படவில்லை. பாவம் அந்தப் பதிப்பாளர், இம்முறை  தப்பித்துக்கொண்டு விட்டார் போலும்; இருந்தாலும் மெல்லத் தமிழினிச் சாகும் என்றால் அது அதன் கர்மவினைப் பயன், வேறொன்றும் சொல்வதற்கு இல்லை, என்ன செய்ய…)

-0-0-0-0-

இன்னொருவர்; இது தமிழக வரலாறுகள் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளைக் கோர்த்த புத்தகம். எனக்கு இந்த வரலாறு மண்ணாங்கட்டி தெருப்புழுதிகளிலும் ஆர்வம் உண்டு என்பதால் மிக்க மகிழ்ச்சியுடன் இவர் புத்தகத்தின் வரைவைப் படித்து கருத்து சொல்ல ஒப்புக் கொண்டேன். (ஒரு பொது நண்பர் கைங்கரியமிது)

பிரச்சினை. ஆரம்பித்த உடனே க்றீச்சிட்டு விட்டது. தயவு தாட்சணியம் பார்க்காமல் விக்கிபீடியாவைவும் போகிறபோக்கில் நக்கி வெட்டியொட்டி அப்படியொரு கதனகுதூகலம். ஜாஜ்வல்யம். விளக்க வார்த்தைகளே இல்லை.

இந்த அழகில் டிஎஸ் கிருஷ்ணன் (இவரும் ஒரு வரலாறு ஆர்வலர், நிறைய்ய்ய்ய எழுதுகிறார், சில சொல்லிக்கொள்ளும்படியாகவே இருக்கின்றன) எழுதிய சில அராஜக விஷயங்களையும் உள்சேர்த்தி… (இது சிதம்பரம் கோவிலருகில் ஏதோ பெரிய அளவு நீர்-பொறியியல் தொடர்பான பெரும் ஆச்சரியம் இருக்கிறது என அவர் இஷ்டத்துக்கு அடாவடியாக அட்ச்சிவுட்டு எழுதியது) – எனக்கு வெறுத்து விட்டது…

“ஐயா, நீங்க காப்பி அடீங்க, ஆனா அதயெல்லாம் கொஞ்சம் சரிபாத்தாவது எழுதக் கூடாதா?”

“ஸ்வாமீ! இதை நானே ஸெல்ஃப் பப்ளிஷ் செய்யப்போறேன், என்னால நாலு பேருக்கு வரலாறு பத்தி ஆர்வம் வந்தா போறும்… பொன்னியின் செல்வன்ல ஆழ்வார்க்கடியான்…”

“ஐயோ ஐயா! எவனுக்கு அடியிலும் அடியில் கண்ட சொத்துதான் ஆடிட்டு இருக்கும். ஆழ்வாரே கடிச்சாலும் கடிக்காம கடுக்கா கொடுத்தாலும் இத்தான் உண்மை… என்ன வுட்றுங்க…”

“சரி. நண்பர் சொன்னார்னு ஒங்க கிட்ட வந்தேன் – உங்க ஃப்ரேங்க் ஒப்பீனியன் குடுங்க, எதுவானாலும் பரவாயில்ல, நான் ரொம்ப ஓபன்…”

“ஐயா, என்கிட்ட க்ரேங்க் ஒப்பீனியன் தான் இருக்கு. நானெல்லாம் உங்க புக் பத்தி ஒப்பீனியன் கொடுக்கற அளவுக்கு பெரிய ஆளில்ல…”

“சார், பரவால்ல, தைரியமா சொல்லுங்க… பொது சபைக்கு வந்த்ட்டா கருத்துகள தாங்குற சக்தியும் இருக்கணுமே!”

“சரீங்க. என் பார்வைல நீங்க உங்க கொழந்தகுட்டீங்களோட சௌக்கியமா இருந்தா அதுவே போதும், தமிழ் வரலாற லூஸ்ல வுட்றுங்க… ஒரு பிரச்சினயும் இருக்காது…”

“ஏங்க இப்படி பொறாமைல பேசுறீங்க? ஃப்ரேங்க் ஒப்பீனியன் தான கேட்டேன்… ரெண்டு ஆதரவான வார்த்தைங்களுக்கு இவ்ளோ தட்டுப்பாடா?”

“ஐயா மன்னிக்கவும் ‘ஃப்ரேங்கா பேசு’ அப்டீன்னா ‘எனக்குப் பிட்ச்ச மாரீ பேசு’  அப்டீன்னு அர்த்தம் வரும்னு நான் எதிர்பார்க்கல, ஆனா பரவாயில்ல… எனக்கு வேற வேல இருக்கு, பெஸ்ட் விஷஸ். பை.”

“… …”

(இந்த விக்கிபீடியர், எங்கள் பொது நண்பரிடம் பொருமித் தீர்த்திருக்கிறார். “அகங்காரம் பிட்ச்ச பொறுக்கி… இவனெல்லாம் எப்டீ ஸ்கூல் டீச்சரா இர்ந்திருக்கான்! போக்ஸோ கேஸ்ல மாட்டிக்கப் போறான்… பாத்துட்டே இருங்க…  ப்ராமின்ஸுக்கு இவ்ளொ அர்ரொகன்ஸ் இருக்கறதாலதான் அப்பப்ப தட்டிட்டே இருக்காங்க… …” 

நண்பருக்குக் குதூகலம். ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டார் – கைகாதுமூக்கு வைத்துச் சொன்னாரோ தெரியவில்லை… எப்படியும், தான் சொல்லமுடியாததை பாப்-வரலாற்றாளர் சொல்லிவிட்டார் என்பதாலும் அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது…)

சுபம்.

இதற்குப் பின்னர், ஒருவருடைய ப்ளடி புத்தகத்தையும் வரைவு அளவில் படிப்பதாக இல்லை, ஏன், இணையக் காட்டுரைகளையும் – என முடிவு செய்திருந்தேன்; அலுப்புதான் முக்கியக் காரணம். எல்லாம் வல்ல இறைவன் தான் (அங்கு முருகன் கோவில் இருப்பது என் குலதெய்வப் பெருமையை அதிகரிக்கச் செய்கிறதே!) என்னைக் காப்பாற்ற வேண்டும். 

அதைவிட முக்கியமாக, எல்லாம் வல்ல இறைவன் – என்னிடமிருந்து தமிழ் அலக்கிய வாதிகளையும் பொழுதுபோக்கு வரலாற்றாளர்களையும் காப்பாற்ற வேண்டும். நன்றி!

-0-0-0-0-

நிலைமைகள் இப்படிக் கவலைக்கிடமாக இருக்கையிலே…

சில வாரங்கள் முன் இன்னொரு ‘இளைஞர்’ ஆர்வத்துடன் எழுதிய தன் கட்டுரையை, நான் உள்ளடங்கியிருக்கும் ஒரு சிறு வாட்ஸ்அப் குழுவில் (தற்போது, என் குடும்பக் குழுவையும் சேர்த்தி மொத்தம் 4 குழுக்களில் இருக்கிறேன், முடிந்தவரை இந்த குழுக்களைத் தவிர்க்கிறேன் – ஓரளவு வெற்றிகரமாக இருக்கிறது இந்த ‘வெற்றி வாட்ஸ்அப் திட்டம்’  ஜோஸஃப்விஜய்க்கு நன்றியுடன்) பகிர்ந்தார்… ஒருமாதிரி ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில், அக்கட்டுரை (குட்டுரை?)  சில விஷயங்களைப் புரிகிறார்போல் பேசியது. அலுவலகத்தின் அலுப்படையவைக்கும் சூழலில் சுயத்தைப் பாதுகாத்து போஷித்துக் கொள்வது எப்படி என்பது போல… பணியை விட்டகலும்போது (அல்லது வெளியேற நேரிடும்போது) அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும்++

அதே சமயம் இன்னொரு நண்பர், பொறுப்புணர்ச்சியுடனும் நாசூக்காகவும் ஆக்கபூர்வமாக கருத்துகளைச் சொல்லிக் கடுப்பேற்றினார், அவர் வழமையே போல.

அவர் கடுப்பேற்றிச் சித்தர்.

ஆனால், என் சொந்த பயங்களின் காரணமாக, கருத்தே சொல்லாமல் டபாய்க்கலாம் என்றால், ஏதோ என் கருத்துகளைச் சுருக்கமாக அல்லது சுருக் என்றாவது சொல்லவேண்டிய நிலையில் என்னை வை(த்)துக்கொண்டு…

(இவ்வுரையாடலில் ஈடுபட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு, முடிந்தவரை உண்மை விளம்பிக் குறிப்பான்களை அகற்றிவிட்டுச் சில ஸ்க்ரீன்ஷாட்களைக் கொடுக்கிறேன்; இதில் அவசரகதி செய்திப் பரிமாற்றத்தினால் ஏற்பட்ட இலக்கணப் பிழைகளைப் பொறுத்தருள்வீர்!)

இளைஞர்’ விட(வில்)லை. என்ன செய்ய… (need for me to talk -> NO need for me talk)

*but, if in a closed forum like this, we could not engage at these subterranean levels, then where else could we!

பணிவுடனும் அன்புடனும்,பிறத்தியார்மீது கரிசனத்துடனும் இருப்பவர்கள் – இப்படியா பதில் கொடுப்பார்கள்? நான் கொடுத்தேன். வழக்கம்போலவே என்னைத் திட்டுவார், அல்லது குழுவிலிருந்து வெளியேறி விடுவார்,  குறைந்தபட்சம் வருத்தத்தில் குமைந்து கொண்டு அமைதியாக இருப்பார் என நினைத்தேன்…

ஆனால், ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்… அவர் என் கருத்துகளை பரிசீலிக்கிறார் என நினைக்கிறேன் – வெகு நார்மலாகவே இன்னமும் உரையாடல்களில் ஈடுபடுகிறார்… கலிகாலம் தான்!

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை – ஆனால் ஒருமாதிரிக் கலக்கம் தரும் மகிழ்ச்சி… 

(+பொய் சொல்லக் கூடாது – என்னுடைய “மதிப்புரை”க்கு வந்தவற்றில் சுமார் 2-5% ஓரளவுக்குத் தரமானவைதான்  எனத் தோன்றுகிறது; தமிழின் தற்கால நிலைக்கு இந்த விகிதம் மிக அதிகம் என்றாலும் – முதலுக்கே மோசமில்லைதான். நன்றி!)

(அடுத்த பகுதியில் இன்னும் சில சொல்லவேண்டிய பகுதிகள் வரலாமோ என்ன எழவோ!)

“ஒரு பார்ப்பான் எங்கே போனாலும் இன்னொரு பார்ப்பானை காப்பாற்றவே பார்ப்பான்…”

அப்படியா என்ன? :-)

ஆனால், இந்தக் கயமைச் சொல்லாடல் – ஏன் எதற்கு எங்கு எப்போது எப்படிச் சொல்லப்பட்டது என்பவற்றுக்கான இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் பெறலாமா?

எப்படிச் சொல்லப்பட்டது?

மிக அழகாகவே. :-) சிலேடை மொழியில் ‘பார்ப்பார்’ என விரிகிறது. அருமை. திராவிடப் பண்பிலும் ஆகவே பலநாக்குப் பேசுதல்களிலும் இவர்கள் அளவுக்கு ‘அடித்து விளையாட’ எவரால் முடியும், சொல்லுங்கள்? (ஆனால், இலக்கண சுத்தம் இல்லை, ஒற்று இல்லை, சந்தி சிரிக்கிறது – ஆனால், அதற்கும், தமிழ் ‘இலக்கணம்’ என்பது ஸம்ஸ்க்ருத ‘லக்ஷணம்’ என்பதிலிருந்து திருப்பாக் கடன் திசைச்சொல்லாக வாங்கப்பட்டதால் இருக்கலாமோ?)

ஏன் சொல்லப் பட்டது?

இது ஒன்றும் பெரிய கார்த்திசிதம்பர ரகசியம் இல்லை. திராவிடத் தமிழ்வெறிய உலகில் இதெல்லாம் சகஜமப்பா.

தமிழ் பிராமணனை சமயம் வாய்த்தபோதெல்லாம் கேவலப் படுத்தவேண்டும். மட்டப் படுத்த வேண்டும். இழிசொல்லால் தாக்கவேண்டும். அவன் பொதுவாகவே அடங்குவான். அத்துமீற மாட்டான். திமிறி எழமாட்டான், திருப்பி அடிக்கமாட்டான். இவையெல்லாம் ஒருபுறமிருக்க – அவன் அயோக்கியன், திருடன் என நிறுவவேண்டும். ‘பார்ப்பனன்’ எனும் சொல்லை வழக்குமொழியில் திரித்து பாப்பான் ஆக்கி, அதனையும் ஒரு வசைச் சொல்லாகவே ரசவாத மாற்றம் செய்யவேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தந்திரோபாய கயமை உள்ளர்த்தத்தைக் கற்பிக்க வேண்டும்.

எந்த ஒரு சமூகத்திலுமே புள்ளியியல் ரீதியாக இருக்கும் மிகச் சிறுபான்மைப் புல்லுருவிகளை மட்டுமே, இத்திரளைப் பிரதிநிதித்துவம் செய்பவர்களாக விரித்து அந்தப் பொதுமைப் படுத்தலையே பொதுவிதியாக மாற்றும் தந்திரம். தங்களுடைய தாழ்வுமனப்பான்மையை நிரவ இன்னொருவனைச் சகதியில் தள்ளல். அவ்வளவுதான். 

எப்படியும் குடிநீர்த் தொட்டிகளில் மலம் கலப்பவர்கள்தானே நாம்? அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசிய பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கரையே இரும்புக் கூண்டில் தள்ளி சிறையில் அடைக்கவேண்டிய சாதிவெறி நிலைமையை உருவாக்கியவர்கள்தாமே நம் செல்லத் தமிழர்கள்?

ஆக, இதெல்லாம் நம்மூரில் சகஜமப்பா. இப்போது பிற பரிமாணங்களைப் பார்க்கலாம்…

1

முதலில் இந்த பப்பரப்பா விடியோ: 

கீழ்கண்ட X-பதிவு வழியாக எனக்கு மேற்கண்ட விஷயம் கிடைத்தது – முன்னமேயே 2023ல் இதனைப் பார்த்திருந்தாலும், இம்மாதிரி ரீ-லாஞ்ச் விஷயங்களெல்லாம் சுவாரசியம்தான்!

இந்தக் காட்சிப்பதிவு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலைச் சேர்ந்தது; இக்கோயில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. CCTV நேரமுத்திரையில் 2021 நவம்பர் 5 அன்று மாலை சுமார் 7.38 மணி எனக் காட்சியிலேயே தெளிவாகத் தெரிகிறது. அக்காலச் செய்தி அறிக்கைகள் இடத்தை இன்னும் குறிப்பாக மூலவர் சந்நிதி, அதாவது மூலவரின் கருவறை அல்லது அதை ஒட்டிய உடனடிப் பகுதி, என்று அடையாளப்படுத்துகின்றன.

மேலுள்ள பதிவு, சம்பவம் நிகழ்ந்து ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் கழித்து, அதன் அசல் சூழல் விவரங்கள் விடுபட்ட நிலையில், 2026 செப்டம்பர் 2 அன்று புதிதாக மறுபரப்பப்பட்டுள்ளது. :-)

கோயில் சடங்குகள் பற்றிய ஓரளவு அறிவையும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, என் மொத்த மதிப்பீடு பின்வருமாறு:

  1. அந்த இரு அர்ச்சகர்களும் CCTV கேமராவை எந்த ஐயத்திற்கும் இடமின்றி, அறிந்தே மூடியுள்ளனர்.
  2. இதற்குச் சடங்கின்போது பார்வை மறைக்கப்பட வேண்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட உண்மையான விளக்கம் இருக்கிறது; கோயில் சடங்கு நூல்களும் நடைமுறைகளும் அதற்கு வேண்டுமளவு ஆதரவு அளிக்கின்றன.
  3. திருட்டு, உண்டியல் முறைகேடு, நகைகள் அகற்றுதல் அல்லது வேறு எந்தக் குற்றச்செயலுக்கும் இந்தக் காணொளித் துணுக்கு ஆதாரம் அளிக்கவில்லை.
  4. இருவரும் ஒளிவுமறைவாகவோ குற்ற நோக்கத்துடனோ இக்காரியத்தைச் செய்வதாகத் தெரியவில்லை, வெளிப்படவில்லை; வழக்கமான நடைமுறையாகவே இதைச் செய்தது போன்ற தோற்றமே உள்ளது.
  5. இந்தக் கேமராவின் பதிவை இவ்விதம் முடக்க இவ்விரு அர்ச்சகர்களுக்கும் அனுமதி இருந்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளையில், இத்தகைய கண்காணிப்பு ஊடுருவல்களை ஆகமங்களோ கோயில் மரபுகளோ அனுமதிக்கின்றனவா என்பதும் தனியே விவாதிக்க வேண்டிய கேள்வி.
  6. இந்தச் சம்பவம் – இருவர் மீதும் “பணியிட மாற்றத்தையும் விசாரணையையும்” ஏற்படுத்தியது என்பது உறுதி. பிறகு காவல்துறை குற்றப் பதிவோ, அரசு நடவடிக்கையோ இதுவரை நடக்கவேயில்லை. ஏனெனில் ஒரு பெரிய குற்றமும் நடக்கவில்லை.

2

இப்போது காணொளித் துணுக்கையும் அதன் முழுச் சூழலையும் ஆராய்ந்து, அந்த மதிப்பீட்டை எவ்வாறு அடைகிறோம் என்பதைப் பார்ப்போம்.

காணொளியிலிருந்து நேரடியாக உறுதிப்படுத்தப்படுபவை: இந்தக் கோப்பு 27.64 விநாடிகள் நீளமுடையது; 1280 × 720 பிக்ஸெல் அடர்த்தியிலும், விநாடிக்கு 25 சட்டகங்கள் என்ற வேகத்திலும் உள்ளது. இதில் ஒலிப்பாதை இல்லை – எவ்வளவு சௌகரியம் பாருங்கள்; ஆகவே நோக்கத்தை ஊகிக்க உதவும் உரையாடலோ சுற்றுப்புற ஒலியோ கிடைக்கவில்லை – அதனால் இஷ்டத்துக்கு அனுமானித்துக் கொள்ளலாம்… அல்லது சதித்திட்டங்களை அனுமானிக்க ஊக்குவிக்கலாம்… 

நிகழ்வுகளின் வரிசை தோராயமாகப் பின்வருமாறு:

(இந்தக் காட்சி நேரவரிசைப் பதிவை FFmpeg, FFprobe போன்ற ஓபன்ஸோர்ஸ் நிரல்கள்-கருவிகள், நேரடி காட்சிப் பரிசோதனை, CCTV காட்சியின் மேல் பதிக்கப்பட்ட எழுத்துத் தகவல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கினேன். @southraidersoff என்ற X/Twitter கணக்கின் SnowflakeIDஅடையாள எண்ணைப் பெற ஒரு Python நிரலையும் பயன்படுத்தினேன். இத்தகைய தடயவியல் ஆய்வுகளில் நேரமுத்திரைகளுடன் பதிவுரைகளையும் அட்டவணை வடிவிலான காட்சிச் சுருக்கங்களையும் உருவாக்குவதற்கு இக்கருவிகளையும் அணுகுமுறைகளையும் பொதுவாகப் பயன்படுத்துகிறேன். கடந்த சில மாதங்களாக இதை ஒரு சுவாரசியமான புதிய பொழுதுபோக்காகச் சிலபல மாதங்களாகக் கற்று வருகிறேன்)

காணொளி நேரம்நேரடியாகப் பார்க்கக் கூடிய காட்சிகள்
0–4 விநாடிகள்வழக்கமான கோயில் வழித்தடம் அல்லது சந்நிதி முன்பகுதி போல் தோன்றுகிறது. பல தடுப்புகளும் உலோகப் பொருட்களும் காணப்படுகின்றன.
சுமார் 4.5 விநாடியில்முகக்கவசம் அணிந்த, மேலாடையில்லாத அர்ச்சகர் ஒருவர் ஊதா நிறத் துணியைக் கொண்டு கேமராவை அணுகுகிறார்.
சுமார் 6–9 விநாடிகளில்அவர் கேமராவிற்கு அருகில் கையை மேலே நீட்டுகிறார்; பின்னர் சந்நிதிப் பகுதிக்குள் மேலும் சென்று விடுகிறார்.
சுமார் 12.5 விநாடியில்வெள்ளைத் துணியுடன் இரண்டாவது கோயில் பணியாளர் அல்லது அர்ச்சகர் கேமராவை அணுகுகிறார்.
சுமார் 13–20 விநாடிகளில்அவர் அறிந்தே அந்தத் துணியை கேமரா லென்ஸின் மீது வைத்து, அழுத்தி, சரிசெய்கிறார்.
சுமார் 20–27.6 விநாடிகளில்கேமராவின் பார்வைப்பரப்பு கிட்டத்தட்ட முழுமையாக மறைந்தே உள்ளது. பின்னர் காணொளி முடிகிறது.

கேமராவின் பார்வை மறைக்கப்பட்டது திட்டமிட்ட செயல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. காணொளியானது, அர்ச்சகர்கள் முகங்களை மறைப்பது போன்ற ஒளிவுமறைவு முயற்சியைக் காட்டவில்லை. இது கேமராவைத் தற்செயலாகத் தொட்டதோ, ஒருவர் ஒரு கணம் அதன் முன் கடந்து சென்றதோ அல்ல.

அதேவேளையில், இந்தத் துணுக்கிலிருந்து பின்வரும் பல விஷயங்களை உறுதிப்படுத்த முடியாது.

  • லென்ஸ் மூடப்பட்ட பின் என்ன நடந்தது என்பதை இது காட்டவில்லை.
  • கேமரா மறைக்கப்பட்டிருந்த காலம் எவ்வளவு நீண்டது என்பதை இது தெரிவிக்கவில்லை.
  • துணி எப்போது, யாரால் அகற்றப்பட்டது என்பதை இது காட்டவில்லை.
  • வேறு எந்தக் கேமராவின் காட்சிக் கோணங்களையும் இது வழங்கவில்லை.
  • பணம், நகை, விக்கிரகம் அல்லது கோயில் சொத்து தவறாகக் கையாளப்பட்டதை இது காட்டவில்லை.
  • ஒரு சடங்கிற்கான முன்னேற்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கக்கூடிய முந்தைய அல்லது அடுத்த சில நிமிடங்கள் இதில் இடம்பெறவில்லை.

இந்தப் பதிவு நீண்ட CCTV தொடரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, இடைநிறுத்தமில்லாத ஒரு குறுந்துணுக்காகத் தெரிகிறது. முக்கியமானதாக இருக்கக்கூடிய, ஆனால் காட்சியிலில்லாத காலப்பகுதி தொடங்கும் தருணத்திலேயே, இந்தத் தேர்வு/selection முடிகிறது. (இதுதான் பப்பரப்பா ஹேஷ்யங்களுக்குத் தந்திரமாக அடிகோலுகிறது…)

அதாவது, மறைமுகக் குற்றச்சாட்டைத் தூண்டுவதில் இது மிகவும் பயனுள்ள கருவியாக உருமாறுகிறது; தமிழ்நாட்டின் திராவிட அரசியல் சூழலில் நுணுக்கமாகத் தீட்டப்பட்ட வெறுப்புப் பிரசாரக் கலைகளில் – இத்தகைய பரிமாணம் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் – அதன் பின்னர் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரமாக இந்தத் துணுக்கு மிகவும் பலவீனமானது.

3

அந்த நேரத்தில் வெளியான சமகால செய்தி அறிக்கைகள் என்ன கூறின?

2021 நவம்பர் 20 அன்று, இந்தக் காட்சி ஃபேஸ்புக்+வாட்ஸ்அப் வழியாகப் பரவியதாகவும், சம்பந்தப்பட்ட இரு அர்ச்சகர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் சமயம் [1] தமிழ் செய்தி வெளியிட்டது. முக்கியமாக, அர்ச்சகர்கள் அளித்த விளக்கத்தையும் அது பதிவு செய்தது:

ஆகம விதிகளின்படி ஆண்டுதோறும் நடைபெறும் “பிரஸ்தார பூஜை”(!) செய்யப்பட்ட போது மூலவர் சந்நிதி திரையிட்டு மறைக்கப்படுவதால், CCTV கேமராக்களையும் மூடுவது வழக்கம் என்று கூறப்பட்டது.

இந்த விளக்கத்தை அறிக்கை “அர்ச்சகர்கள் தரப்பின் கூற்று” என்று குறிப்பிட்டது. அதை உறுதிப்படுத்தும் கோயில் உத்தரவு, சடங்கு கையேடு, விசாரணை அறிக்கை அல்லது சுயாதீன நிபுணர் முடிவு எதையும் அது முன்வைக்கவில்லை. (இம்மாதிரி பாரம்பரிய விஷயங்களை, ‘தரவுகளையும் ஆவணங்களையும்’ வைத்து முட்டுக் கொடுத்து எடுத்து – கேவலம் ஒரு ஒட்டுண்ணி அரசாங்க அலுவலகத்துக்குக் கொடுக்கவேண்டியிருப்பதே ஒரு அவல நிலைதான்!)

நவம்பர் 21 அன்று, அமைச்சரின் அறிக்கையை இந்து தமிழ்திசை [2] பின்வருமாறு செய்தியாக வெளியிட்டது:

  • இரு அர்ச்சகர்களும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்
  • துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது
  • விஷயம் இன்னும் விசாரணையில் இருந்தது
  • தவறு உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் சொல்லாக்கம் முக்கியமானது.

திருட்டோ வேறு குற்றமோ நிரூபிக்கப்பட்டதாக அப்போது முடிவு எட்டப்படவில்லை; பணியிட மாற்றம் முன்னெச்சரிக்கை நிர்வாக நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஒரு சிறிய உள்ளூர் செய்தித் தளம் [3] சுப்புராஜ் தேவா எனும் அயோக்கிய ஜீவன் ஒன்றின் கட்டுரையில் கேமரா, உண்டியலுக்கு அருகில் இருந்ததாகக் கூறியது. அந்தச் செய்தியில் வெளிப்படையான குற்றச்சாட்டு தொனி இருந்தது, பூடகமாகக் கூட இருந்திருக்கவில்லை; உண்டியல் குறித்த இந்த விவரம், கொஞ்சமாவது கறார் மொழியில் செய்தி வெளியிட்ட முக்கிய ஊடகங்களில் மீண்டும் இடம்பெறவில்லை. 

ஆகவே, “உண்டியலுக்கு அருகிலுள்ள கேமரா” என்ற கூற்றுக்கு நாம் மிகக்குறைந்த நம்பகத்தன்மையையே அளிக்கக் கூடும்.

4

இந்த நிகழ்வுக்கு – சடங்கு சார்ந்த விளக்கம் கொடுப்பதற்கு நம்பகத்தன்மை வாய்ந்த தரவுகள் உள்ளனவா?

ஆம்; இருக்கின்றன. கோயில் வழிபாட்டின் குறிப்பிட்ட கட்டங்களில் தெய்வத் திருமேனியைத் திரையிட்டு அல்லது மறைத்து வைப்பது உண்மையானதும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டதுமான நடைமுறையாகும்.

குமார தந்திரம் வழங்கும் சான்றுகள்

திருத்தணி  முருகன் வழிபாடு, பூஜை, புனஸ்காரங்கள் – குமார தந்திர ஆகமத்தைப் பின்பற்றுவதாகக் கோயில் சார்ந்த குறிப்பு நூல்கள் பொதுவாகக் கூறுகின்றன. (எனினும், கோயிலின் தற்போதைய இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) பக்கத்தில் அதற்கான முறையான ஆகம வகைப்பாட்டுப் பதிவைக் கண்டறிய முடியவில்லை – இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது இந்த செயல்திறம் அறவேயற்ற அறமற்ற அறநிலையத் துறை, என்ன செய்ய… )

சுப்பிரமணியர் எனும் நம் முருக வழிபாட்டைச் சிறப்பாகக் கையாளும், – ஸமஸ்கிருத குமார தந்திர மூலப் பாடம், ப்ரச்சன்ன-படம் (प्रच्छन्नपटम् / pracchanna-paṭam) என்ற பதத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறது.

அதன் சொற்பொருள் – மறைப்புத் துணி, மறைதிரை அல்லது திரை என்பதாகும்.

ஐந்தாம் அத்தியாயத்தில்( 5.47–49), முந்தைய பூஜைப் பொருட்களை அகற்றி திருமேனியைத் தூய்மைப்படுத்துவதற்கு முன், மறைதிரையை எடுத்துவருமாறு அர்ச்சகருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முப்பத்தைந்தாம் அத்தியாயம் (35.254–256), வாசலின் அளவுடன் தொடர்புபடுத்தி, அந்தத் திரையின் பரிமாணங்களையும் உருவாக்க முறையையும் குறிப்பிடுகிறது.

முப்பத்தெட்டாம் அத்தியாயத்தில் (38.11–13), திருமேனியின் ஆடைகள் அகற்றப்பட்டு திருமேனிக்கு எண்ணெய் பூசப்படுவதற்கு முன் திரை இடப்படவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

பிரதிஷ்டைச் சடங்குகளில், பின்னர் அந்தத் திரை அகற்றப்பட்டு, கூடியிருக்கும் மக்களுக்கு திருமேனி காட்டப்படுகிறது.

இதனால், திரையிட்டு மறைப்பது முன்பே நிலைபெற்றிருந்த சடங்கு முறை என்பதும், CCTV சர்ச்சைக்குப் பிறகு மட்டும் உருவாக்கப்பட்ட சாக்கு என்ற சந்தேகத்திற்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதும் தெளிவாகிறது.

ஒப்பிடத்தக்க நடைமுறைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறது. அதன் அதிகாரபூர்வ ஸஹஸ்ர கலஸாபிஷேக விளக்கத்தில், மூலவருக்குச் செய்யப்படும் தனிப்பட்ட அர்ச்சனையின் போது திரை இழுக்கப்பட்டு, ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் உள்ளே இருப்பார் என்று கூறப்படுகிறது. 

இரவுப் பூஜை குறித்த அதன் விளக்கமும், அனுமதிக்கப்பட்ட கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும், பொதுமக்கள் அனுமதிக்கப்படாத சடங்காக அதைக் குறிப்பிடுகிறது. 

இவை வேறொரு ஆகம மரபைச் சார்ந்த வைணவ உதாரணங்கள்; ஆகவே திருத்தணி குறித்த கூற்றை நேரடியாக நிரூபிப்பதில்லை. இருப்பினும், சடங்கு சார்ந்த காட்சி மறைவு கோயில் நிர்வாக நடைமுறையிலும் இடம்பிடித்துள்ளது என்பதை அவை உறுதிப்படுத்துகின்றன, அல்லவா?

எந்தச் சூழல்களில் திரையிட்டு மறைத்தல் தேவைப்படலாம்?

மதவழிபாட்டு மூலநூல்களில் காணப்படும் உதாரணங்கள், கீழ்கண்ட முக்கியமான நடைமுறைக் காரணங்களைச் சுட்டுகின்றன:

  • முந்தைய அலங்காரம் அல்லது நிர்மால்யத்தை அகற்றுதல்
  • திருமேனியைச் சுத்தம் செய்தல் அல்லது புனிதப்படுத்துதல்
  • ஆடைகளை அகற்றி மாற்றுதல்
  • எண்ணெய் பூசுதல் அல்லது திருமேனியில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பிற சடங்குச் செயல்கள்
  • பொதுமக்களின் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படும்பிரதிஷ்டை அல்லது திருவுருவ நிறுவல் சடங்கின் சில கட்டங்கள்.

அத்தகைய பகுதியை நோக்கி அமைந்த CCTV கேமரா, வழக்கமான திரை, பக்தர்களின் பார்வையை மறைத்த பின்னரும் தொடர்ந்து பதிவு செய்யும்.

எனவே, பார்வை மறைப்பதற்கான சடங்கு விதியை மின்னணுக் கேமராவிற்கும் கோயில் நடைமுறை நீட்டித்திருக்கிறது. அவ்வளவுதான்.

இவற்றை ஏன் அர்ச்சர்கள் சொல்லவில்லை என்பது ஒரு கேள்வி.

அவர்கள் ஏன் அவற்றைச் சொல்லித்தான் தங்கள் குற்றமற்ற தன்மையைப் போயும்போயும் ஒரு ஒட்டுண்ணி அமைப்புக்குக் காண்பிக்க வேண்டுமா” என்பது அதனை விட முக்கியமான கேள்வி.

5

“பிரஸ்தார பூஜை” என்ற சொல்லாக்கத்தில் (எனக்கு) உள்ள சிக்கல்

சமயம் செய்தி, இச்சடங்கை “பிரஸ்தார பூஜை” என்று குறிப்பிடுகிறது; இது Prastāra அல்லது Prasthāra Pūjā என்பதைக் குறிக்கலாம். ஆனால், திருத்தணி திருவிழா நிரல், கோயில் சடங்கு கையேடு + அணுகக்கூடிய குமார தந்திரப் பகுதி :-) எதிலும், துல்லியமாக இந்தப் பெயருடைய ஆண்டுச் சடங்கையும் அதற்காக CCTV கேமராக்கள் மூடப்பட வேண்டும் என்ற விதியையும் கண்டறிய முடியவில்லை. :-)

இதில் சொல்லியல் சார்ந்த இன்னொரு சிக்கலும் (எனக்கு) உள்ளது:

  • குமார தந்திரத்தில் சடங்குத் திரை ப்ரச்சன்ன-பட (pracchanna-paṭa) என்று அழைக்கப்படுகிறது.
  • prastara என்ற சொல் அதே நூலில் பெரும்பாலும் கட்டடக்கலைச் சொல்லாகவே வருகிறது; கோயிலின் மேல்கட்டமைப்பில் உள்ள கிடைமட்ட அங்கம், குறிப்பாகத் தூண்களுக்கு மேலுள்ள கட்டுமானத் தளம், என்பதைக் குறிக்கிறது.
  • விரிவான தாந்திரிக இலக்கியங்களில் prastāra என்பது பரவல், ஒழுங்கமைப்பு அல்லது வரைபட வடிவிலான பகிர்வு என்றும் பொருள்படலாம்; எழுத்துக்களின் அமைப்பு அல்லது யந்திர அமைப்பும் இதில் அடங்கும். ஆகவே, prastāra என்ற சொல்லைக் கொண்ட ஒரு சடங்கு சொல்லியல் அடிப்படையில் சாத்தியமற்றது என்று கூற முடியாது.
  • பல சாத்தியங்கள் மீதமுள்ளன:
    • “பிரஸ்தார பூஜை” என்பது திருத்தணி அர்ச்சகர் மரபில் பயன்படுத்தப்பட்ட உள்ளூர் பெயராக இருந்திருக்கலாம்.
    • வேறொரு ஸமஸ்கிருத அல்லது தமிழ்ச் சடங்குச் சொல்லை செய்தியாளர் துல்லியமின்றிப் பதிவு செய்திருக்கலாம்.
    • இச்சடங்கு, இன்று கிடைக்கும் அச்சுப் பதிப்பான குமார தந்திரப் பாடத்திற்கு வெளியில் உள்ள ஒரு உள்ளூர் பத்ததி, செயல்முறை கையேடு, அல்லது வாய்மொழி மரபிலிருந்து வந்திருக்கலாம்.
    • “Prastāra” என்பது குறிப்பிட்ட ஓர் அமைப்பையோ அலங்காரத்தையோ குறித்திருக்கலாம்; திரையிட்டு மறைத்தல் அதன் முன்னேற்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
    • அர்ச்சகர்கள் ஒருமாதிரி பதட்ட நிலையில் அளித்த தற்காப்பு விளக்கத்தில், சடங்கின் பெயர் துல்லியமின்றிக் கூறப்பட்டிருக்கலாம்.

எனவே, சடங்கின்போது திரையிட்டு மறைக்கும் பொதுக் கொள்கைக்கு ஆதாரம் உள்ளது.

…ஆனால் இங்கு கூறப்படும் குறிப்பிட்ட சடங்குப் பெயரும் அது ஆண்டுதோறும் நடைபெறும் என்ற நிலையும் போதுமான ஆவணமின்றி உள்ளன. (அதாவது, எனக்கு இது புரியவில்லை)

2021 நவம்பர் 5 சடங்கு ரீதியாக முக்கியமான நாளா?

சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில், ஆம். 2021ஆம் ஆண்டின் ஆறு நாள் கந்த சஷ்டி அனுஷ்டானம் நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 9 அன்று நிறைவடைந்தது. 

இந்த ‘பப்பரப்பா படுத்தப்பட்ட” சம்பவம், அதன் இரண்டாம் நாளில் நடந்தது.

மற்ற ஆண்டுகளுக்கான பதிவுகளின்படி, திருத்தணியின் கந்தசஷ்டி வழக்கத்தில் தினந்தோறும் சிறப்பு அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. பட்டாடை அலங்காரம், நகைகள், தங்க மற்றும் வெள்ளிக் கவசங்கள், சந்தனக்காப்பு ஆகியவையும் இதில் அடங்கும். இதனால், அந்தக் காலப்பகுதியில் வழக்கத்துக்கு மாறான ஆடை அணிவித்தல், ஆடை அகற்றுதல் அல்லது திருமேனியைச் சடங்கிற்குத் தயார்படுத்துதல் போன்ற செயல்முறைகள், சர்வ நிச்சயமாக நடந்திருக்கும்.

2021ஆம் ஆண்டுக்கான திருத்தணி விழா நிரலையோ “பிரஸ்தார பூஜை” என்ற பெயருடைய நிகழ்ச்சி இடம்பெற்ற நிரலையோ என்னால் கண்டறிய முடியவில்லை.எப்படி இருந்தாலும், விழாக்கால ஒத்திசைவு துணைச் சூழ்நிலை அதற்கான ஆதாரமளிக்கிறது; துல்லியமான சடங்கை அது அடையாளப் படுத்துவதில்லை என்றாலுமேகூட.

காட்சியில் தெரியும் நடத்தை, திட்டமிட்ட சடங்கு முன்னேற்பாட்டுடன் பெருமளவில் பொருந்துகிறது:
    • இருவர் தொடர்வரிசையில் செயல்படுகின்றனர்
    • ஒருவர் ஏற்கெனவே கணிசமான அளவுள்ள வண்ணத் துணியை எடுத்துச் செல்கிறார்
    • இரண்டாவது நபர் தனியான வெள்ளைத் துணியுடன் வருகிறார்
    • இருவரும் வெளிப்படையான அவசரமின்றி, நிதானமாக நகர்கின்றனர்
    • குறைந்தது, மேலும் ஒருவர் உள்ளே இருக்கும் நிலையில் காட்சியில் தொடர்ந்து தெரிகிறார்
    • அவர்கள் தங்களை மறைக்காமல், கேமராவை வெளிப்படையாகவே மூடுகின்றனர்

நடத்தைத் தோற்றம் சித்திரம் மட்டும் வலுவான ஆதாரமல்ல என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே. தவறை மறைக்க முயலும் ஒருவரும் அமைதியாக நடந்து கொள்ளலாம் என்பதும் சரி.

இருந்தபோதிலும், இந்தக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்ட கோயில் சடங்கு முன்னேற்பாட்டை அதிகம் ஒத்துள்ளது;  ‘திடீர் இரகசிய முயற்சி’  போன்ற சதித்திட்ட வாசிப்பிற்கு இது மிகக் குறைவாகவே பொருந்துகிறது.

X பதிவு சம்பவத்தை எவ்வாறு திரித்துக் காட்டுகிறது?

அதன் தலைப்பு வாசகம்: “ஒரு பார்ப்பான் எங்கே போனாலும் இன்னொரு பார்ப்பானை காப்பாற்றவே பார்ப்பான்.”

இதன் பொருள்: “ஒரு பிராமணர் எங்கு சென்றாலும், மற்றொரு பிராமணரைக் காப்பாற்றவே முயல்வார்.”

இந்தத் தலைப்பு வெளிப்படையான ஜாதிப் பொதுமைப்படுத்தல். எப்படியுமே – கோயிலின் பெயர், பதிவு செய்யப்பட்ட தேதி, அக்கால விளக்கம், பணியிட மாற்ற விவரங்கள், விசாரணை நிலை அல்லது பின்னர் ஏற்பட்ட முடிவு ஆகிய எதையும் அது தரவில்லை.

கேமரா மூடப்பட்ட பிறகு காட்சியில் தெரியாத ஒரு குற்றத்தைப் பார்வையாளர் மனதில் நிரப்பிக் கொள்ளுமாறு அது தூண்டுகிறது. 

28 விநாடிக் காணொளியில் அத்தகைய குற்றச்செயல் எதுவும் இல்லை. இருவரும் பிராமண அர்ச்சகர்கள் என்று வைத்துக்கொண்டாலும், விளக்கம் தரப்படாத ஒரு கோயில் செயல்முறையின் போது இரு நபர்கள் இணைந்து செயல்பட்டது, ஒரு சாதியைப் பற்றிய பொதுக் கூற்றை நிரூபிக்காது.

வைரலாகப் பரவும் ஊடகப் பதிவுகளை ஆராயும்போது கவனிக்க வேண்டிய முக்கிய வேறுபாட்டை இந்த மறுபதிவு காட்டுகிறது: உண்மையான காட்சிக்கு ஆதாரமற்ற குறிப்புணர்த்தலை இணைக்க முடியும். 

அடிப்படை காணொளி உண்மையானதாகவும் அதன் வரலாற்றுச் சூழலை அடையாளம் காணக்கூடியதாகவும் தோன்றுகிறது.

ஆனால் – ஒரு ஜாதி முழுவதையும் கேவலப் படுத்தும் விளக்கம் காட்சியிலிருந்து வருவது அல்ல; வெளியிலிருந்து, அயோக்கிய சிகாமணிகளின் திரியாவரம் அதன்மீது தேவை மெனக்கெட்டுச் சுமத்தப்பட்டுள்ளது.

முடிவாக…

செயல்பாட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவின் பார்வையை அர்ச்சகர்கள் திட்டமிட்டே மறைத்தனர். உடனடி விசாரணை தேவைப்படும் விஷயமாகக் கோயில் நிர்வாகம் இதைக் கருதியது ஓரளவுக்கு நியாயமானது.

அதே காலத்தில் முன்வைக்கப்பட்ட சடங்கு சார்ந்த விளக்கமும் இருந்தது; அதன் அடிப்படைகள் நம்பத்தகுந்தவை; அவை –  முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஆகம நூல்கள், திருமேனியைச் சுத்தப்படுத்துதல், ஆடைகளை அகற்றுதல், எண்ணெய் பூசுதல் போன்ற கட்டங்களில் மறைதிரை பயன்படுத்தப்பட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றன. கோயில் வழிபாட்டில் பொதுப் பார்வைக்கு மறைக்கப்பட்ட அல்லது திரையிடப்பட்ட கட்டங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவ்விரு அர்ச்சர்கள் மேல் ஒரு காவல்துறை நடவடிக்கையும் இல்லை, ஏனெனில் அதற்கான முகாந்திரமே இருந்திருக்கவில்லை.  

ஒட்டுமொத்தமாக, இந்த விவகாரமே ஊதிப் பெரிதாக்கப் பட்ட, படு கேவலமா திராவிடத்தனமும் ஜாதிக்காழ்ப்பும்தான். வேறொன்றுமில்லை.

பின்-கேள்வி: படுகேவலமான புழுக்களான @southraidersoff போன்றவர்களுக்கு எப்படித்தான் இரவுகளில் நிம்மதியாகத் தூங்கமுடிகிறது?

-0-0-0-0-0-

[1]

[2]

[3]

…இந்தச் சோக நிலைக்கு – கடந்த 60 வருடங்களுக்கான மூலக் காரண எழவு: பொறுக்கித் திராவிடமாடல், கல்வி திராவிடமயமாக்கப்படல். அதன் காரணமாக, தமிழக அறிவியல் ஞானத்தின் அதலபாதாள உச்சங்கள். நன்றி.

இன்னொரு முக்கியகாரணம்:

தமிழ்மொழியின் நெடிய நெடிதரும் வரலாற்றில் (~1700-2000 வருடங்கள்?) என்றுமே ஒரிஜினல், முதன்மைச் சிந்தனை அறிவியல் சார் புத்தகங்களோ ஆக்கங்களோ ஏன் அறிவியலாளர்களோகூட இருந்ததேயில்லை.

மாறாக, மாரடைப்பாக  – வாயோயாமல் ‘லெமூரியா காலத்திலேயே கால்குலசு கண்டுபிடித்தான்’  + ‘திருமந்திரத்தில் பரிணாமச் சிந்தனைகள்’ வகை நகைச்சுவைப் புனைவுகள் தாம் நிதர்சனங்கள்.

(உடனே – ஸ்ரீநிவாஸராமானுஜன் ஸிவிராமன் சுப்ரமணியம்சந்திரசேகர் எனத் தூக்கிக்கொண்டு வராதீர்கள், அவர்கள் ‘ஆரியர்கள்’ – மேலும் அவர்கள் தமிழ்மொழிவழி சிந்தித்து ஊடாடியதாகத் தெரியவில்லை – எப்படியும் ‘தொழில்நுட்ப-அறிவியல் தமிழ்’ எனவொரு பாரம்பரியம், தமிழகத்தில் இருந்தால்தானே – ஆகவே அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை!)

‘தமிழனும் சங்ககால அறிவியலும்’ போன்ற அபத்தங்கள், கொட்டை நசுக்கப்பட்ட அல்லது கொட்டையற்ற தமிழ் ‘அறிஞர்கள்’ பகிரங்கமாகத் தொடர்ந்து செய்யும் கைமுட்டியடித்தலுக்குச் சமம்,  அதுவும் அதிக பட்சம். அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்து ‘திருவள்ளுவரும் அணுசக்தியும்’ என – குடமுருட்டிக் குண்டினைப் போட்ட கருணாநிதி போல், ஒரு எம்ஃபில் ‘ஸ்காலர்’ என் மேல் (செப்பனிட) வீசியதும் நடந்திருக்கிறது.

பரிசீலனை/ரிவ்யூ செய்கிறேன் பேர்வழியென அதன் வரைவைப் போய் வேலை வெட்டியில்லாமற் படித்து, புத்தி பேதலித்து, மயிரைப் பிய்த்துக்கொண்டு அலைந்ததும்தான்.

பேடிகள். படு கேவலர்கள். அற்பர்கள்.

மலையாளத்தில் கூட வந்திருக்கும் முதன்மை கணிதச் சிந்தனை நூல்கள் (எடுத்துக்காட்டாக – 1530 வாக்கில், ஜ்யேஷ்டதேவ அவர்களால் எழுதப்பட்ட மலையாளக் கணித நூலான கணிதயுக்திபாஷா), தமிழனுக்கு அந்தப் பாரம்பரியமே இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது. மகா சோகம்.

மஹா ஷோ கேம். இதுதாண்டா திராவிடம்! இத்தாண்டா டமீள் தேசீயொம்…

2

சுமார் 8 வருடங்கள் முன், ஓரளவுக்கு விஷ(ய)ஞானமுள்ள சக-கிழம் ஒன்றிடம் (அது ஒருமாதிரி தனித்தமிழ்க் கிழம், ‘உலகத்தின் முதல் பெருச்சாளி தமிழ்ப்பெருச்சாளி’ வகையறா திராவிட விசித்திரபித்தம்) இது குறித்து உரையாடியபோது (…பரஸ்பர பணிவுடன் தான் இந்தச் சொற்போர் ஆரம்பித்தது,  ஆனால் வாதங்களோ தரவுகளோ ஒன்றுமேயற்ற நிலையில் அக்கிழத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாக ஆகிப்போய்…) அதற்குப் படுகோபம் வந்து, “வாயை மூட்றா, வந்தேறி பாப்பாரத் தாயோளீ நாயே” என்று முடிந்தது, சுபம் – என்பதை வாஞ்சையுடனும் பெருமிதத்துடனும் நினைவு கூர்கிறேன்.

அதற்குப் பின், ரூம்போடாமல் மிகுந்த யோசனை செய்து:

“தமிழரின் அறிவியற்புல/தொழில்நுட்பப் பண்பாடு? தமிழில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் வரலாறுகள், ஆராய்ச்சிகள்?? தமிழில் முதன்மை அறிவியல் அடிப்படைப் புத்தகங்கள்???

= 0.

சுழியம். பூஜ்யம். ஸீரோ. முட்டை. கோளம். பந்து. அடிக் கொட்டை

…எனவொரு தரவுகள்சார் பதிவு ஆரம்பித்து 2000 வார்த்தைகளுக்குப் பின்னும் முடிவடையாமல், நானும் அவ்வரைவுப்பதிவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறோம்.

ஏனெனில். தமிழின், தமிழகத்தின் அறியாமை என்பது ஒரு ஹிமாலய சாதனை, அவ்வளவுதான்.

தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் 1970களில் சிலபல (ஆங்கில மூலங்களிலிருந்து) பாடப்புத்தக மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்தது என்பதை அறிவேன். இவற்றில் சில ஓரளவுக்கு நன்றாகவே வந்தன. பின்னர் வரவேற்பின்மையினால் கூழாக்கப் பட்டன; சில தப்பிப் பிழைத்து நூலகங்களில் தஞ்சமடைந்து கேட்பாரற்றுக் கிடந்தன; சென்னை கன்னிமரா நூலகத்தில் சிலவற்றைப் புரட்டிப் பார்த்த நினைவு.

அவ்வளவுதான் தமிழ்மொழி பாடப் புத்தகங்களுக்கு வரவேற்பு. பகற்கொள்ளைக்காரத் திராவிடர்கள் நடத்தும் கல்விசாலைகளில் கூட தமிழுக்கு முன்னுரிமையில்லை.

பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழ்வழியில் படித்து நொந்த நான், மனம் வெதும்பித்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சுமார் 3.5 கோடி போலிஷ் மொழி பேசும் மனிதர்களுள்ள போலண்ட் தேசத்தில், அவர்கள் மொழியில்  எப்பேர்ப்பட்ட அருமையான புத்தகங்கள் வந்திருக்கின்றன!

சுமார் 1 கோடி மக்களேயிருக்கும் மிகச் சிறிய தேசமான இஸ்ரயேலில் – சுமார் 60 லட்சம் பேர் யூத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்… ஆனாலும் அங்கு எவ்வளவு ஆயிரக்கணக்கில் சமகால அறிவியல் தொழில் நுட்பப் புத்தகங்கள் ஹீப்ரு மொழியில் வந்திருக்கின்றன! 

இங்கே? நம் ப்ளடி தமிழகத்தில்?? 7.2 கோடி பேர் வசிக்கும், அதில் 6+ கோடியினர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் நம் ‘செம்மொழி தமிழ்மொழி’ பிரதேசத்தில்??? கடந்த 1-2 ஆண்டுகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அற்புதமான பிறமொழி உயர் அறிவியல்-தொழில் நுட்பப் புத்தகங்கள்???? அவற்றை நுகரக் கூடியவர்கள்????? அதற்கான அரசு-செயல்திட்டங்கள்??????

0

ஏன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயும் அது சுழி தான்! நன்றி!! 

சுழியம் தான் நம் பெரும்பாரியம். ஆனால் அந்தச் சுழியையும் கண்டுபிடித்தது தமிழனில்லை. 

இத்தனைக்கும், உலக அளவில் தமிழ் மொழி அறிந்தவர்கள் சுமார் 9-10 கோடியாமே! 

-0-0-0-0-

இந்த அழகில், திராவிடக் குப்பையொன்று இப்படி மினுக்கிக் கொள்கிறது:

சுமார் அரை கோடி பேர் அளவில் மட்டுமே இருக்கும் நார்வே நாட்டின் நார்வீஜியன் மொழி பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியாக வெளிவரும் அவர்களுடைய தாய்மொழி வழி தொழில் நுட்பப் புத்தகங்கள்?  அதே அளவில் இருக்கும் ஃபின்லேண்ட் – ஃபின்னிஷ் காரர்களுக்கும் அப்படியே! 

…இவை கிட்டே கூட தமிழால் போகவே முடியாது. நமக்கு அதற்கான பாரம்பரியமும் இல்லை, ஆர்வமும் இல்லை… வெறும் வெட்டிப்பேச்சு ‘தமிழ் எங்கள் மூச்சு’ வாயோர நுரைதள்ளலோடு சரி. 

“தமிழ் எங்கள் உயிர், மண்டையில் எங்கள் மயிர்!!”

நம் இழி நிலையைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா!

ஆம்.

1

இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே. 

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!

அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?

2

1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.

…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…

3

கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.

இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் –  ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.

சரி.

முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.

இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.

மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)

இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…

ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.

(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)

ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்! 

…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும்    தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.

மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.

ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.

ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….

4

கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.

“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)

ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.

முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.

இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”

சுபம். :-)

5

ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.

ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…

இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?

இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?

நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன். 

இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.

எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.

அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.

ஆமென்.

வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.

எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)

(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”

(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague

#DravidianModel modern marriages.

(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!

(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…

(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!

(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!

(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!

(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!

(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2

Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)

திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles April 22, 2023

A while ago, the Ministry of Culture (of Govt of India) came out with a tweet on bharatanatyam in good faith, which was canonically correct and backed up by evidence. There was no hearsay or stupidity involved at all, but then… Read the rest of this entry »

Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)

Let us explore just one point in this context. Read the rest of this entry »

(or) …the tragedy of Muslims of India (um, mainly for the Hindus) – an averse text: Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:

Raalraa Says: March 18, 2025 at 09:43

அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:

வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21

ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.

  1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
  2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
  3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் –  ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
  4. இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
  5. பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர –  ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
  6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.

அவ்ளொதான்.

ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »

(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.

In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.

Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!

So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)

Anyway. Read the rest of this entry »

…உங்கள் உடனடி உடும்படித்தேவைக்கு, சங்ககால பொற்கால-போர்க்கால ரீதியில், அதன் ஏகபோக டீலர்களை அணுகவும்:

திராவிடமாடல் + தமிழ்க்குடிபெருங்குடி வெறியர்கள்,

c/o லெமூரியக் குமரிக்கண்டம்.

ஹோல்ஸேல் ரேட்டில் சகாய விலை! ஸ்டாக்குகள் தீர்ந்துகொண்டே இருக்கின்றன, உஷார்!!

அல்லது, படிக்கவும்: தமிழப் பிரமைகள் – Tamil delusions, கலவை வெங்கட் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு.   (சுட்டி அனுப்பிய நண்பருக்கு நன்றி.)

நானும் ஒருமாதிரி இவ்விஷயங்களைப் பற்றி (தமிழுக்குத் தேவையேயற்ற அண்டப் புளுகுகள்) சிலபல முறை எழுதியிருக்கிறேன்.

இந்தத் தமிழப் பிரமைகளைக் குறித்து துண்டு துண்டாகவாவது ஆதாரங்களுடன் எழுதி, பின்னர் பின்னடித்து வெண்முரசு ஸைஸுக்குப் புத்தகமாக வெளியிட்டால், வரலாறு காணாத ரீதியில் இன்னமும் அலைமோதிக்கொண்டு எண்ணிறந்தவர், லட்சக்கணக்கானவர்கள் படிப்பார்கள் எனவொரு பகீர்பிரமை எனக்கு… 

அதாவது 7½ (ஏற்கனவே உள்ள வாசகர் படை, அடியேன் உட்பட) + 2 (அதிகப்படியாகப் படிக்கப் போகிறவர்கள்) =  100,000+.

உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி. ஆனால் உடும்புத்தைலம் முக்கியம், சரீங்களா?

1

The point:

While ‘Hindutva’ is unfairly targeted for its supposed ‘Nazi’ side in spite of there being no shred of ANY significant & tenable evidence AT ALL – the Jihadi, anti-semitic & Nazi supporters + collaborators have hardly been noticed.

What’s even more galling: the clueless ‘liberals’ and communist elements (and of course the #DravidianModel scoundrels. Dravidian scumbags, among others, are ALSO anti-semites, thanks to their inveterate need to keep Muslim-voters under their thumb in Tamilnadu) keep repeating the same ‘Hindutva = Nazism‘ lies over and over against the Hindus…

This is an attempt to examine IndianMuslim-Nazi connections – with references. Read the rest of this entry »

பீடிகை: முன்னமே சிலபல முறை பெரியவர்* அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்; பெரும்பாலும் நக்கலாகவும் கிண்டலாகவும்தான். ஏனெனில் அவருடைய கண்மூடித்தனமான எதிர்ப்புகள் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை – ஆனாலும்… அவர் அதிர்ந்து பேசாமல் திட்டாமல் ஒரு விஷயத்தைத் தரவுகள் சார்ந்து தொடர்ந்து பேசும்போது, அதனையும் ஒப்புக்கொண்டு போற்றத்தான் வேண்டும், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படத்தான் வேண்டும். Read the rest of this entry »

“திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.”

(சுட்டியை அனுப்பிய திரு ‘ஜடாயு’வுக்கு நன்றி)

ஒவ்வொரு மலைக்கோவிலும் இப்படிக் களவாணித்தனமாகக் கையகப் படுத்தப்படுகிறது… நீண்ட நாள் நோக்கில், திட்டமிடப் பட்டு, அதே #திராவிடமாடல் வழிமுறை. ஜிஹாதித்தனம்… தொடர்கிறது… என்ன கேவலமான பிறவிகள்! :-(

கிருஷ்ணகிரி மலை மேல் ஸூஃபிகூஃபி  ஆக்கிரமிப்புகளும் இதே வழிமுறையில் நடந்தவைதாம்…

க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் – 28/02/2021

இல்லை, அது செந்தில்கவுண்டமணிவடிவேலுவிவேக்விஜைஉதைஇசுடாலிர்  கிளுகிளுப்பு -கிச்சுக்கிச்சு-வெடிச்சிரிப்பு விவகாரமில்லை. ஏன், அது அந்த படுகேவலமான திராவிடமாடல் திமுக இசுடாலிர் அரசாங்கம்கூட இல்லை.

மாறாக. அது… அது ஒரு பிரபல, தொடர்ந்து கொண்டிருக்கும் எக்காளச் சிரிப்பு.

பொறுப்புத்துறப்பு. *
Read the rest of this entry »

பிரச்சினை என்னவென்றால், அவருடைய அவதூறான ஃபேஸ்புக் பதிவுக்கு என்னால் அங்கேயே, என்னுடைய மேலான கருத்துகளைப் பதிவு செய்யமுடியாத படிக்கு என்னத்தையோ சதி செய்து வைத்திருக்கிறார்; அதனால் தான் இந்தக் குழாயடிச் சண்டையை இங்கேயே நடத்திக் கொண்டு சுயராஜ்ஜியம் அல்லது ப்ளாக் சுயாட்சி காணலாம் என்று…

என்னமோடாப்பா, சலிப்பாக இருக்கிறது… :-( Read the rest of this entry »

இது ரசக்குறைவான, மலினமான நகைச்சுவை(!); எளிதில் புண்படும் அஏழரைகள் உடனடியாக வெளியேறவும்.

நன்றி. Read the rest of this entry »

1

It is a long-standing, very well-known & an established fact that Tamilnadu’s infamous #DravidianModel scum (mostly represented by DMK & assorted Tamil Supremacists) have consistently hated from the bottom of their poisonous hearts, the following: Read the rest of this entry »