ஆம்.

1

இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே. 

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!

அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?

2

1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.

…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…

3

கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.

இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் –  ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.

சரி.

முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.

இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.

மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)

இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…

ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.

(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)

ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்! 

…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும்    தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.

மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.

ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.

ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….

4

கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.

“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)

ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.

முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.

இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”

சுபம். :-)

5

ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.

ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…

இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?

இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?

நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன். 

இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.

எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.

அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.

ஆமென்.

 இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(

…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்! 

* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.

(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை  6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)

…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?

Read the rest of this entry »

எல்லாவற்றிலும் தன்பங்கு பெரும்பங்கு செம்பங்காக, மூட்டைமூட்டையாகக் கமிஷன் அடிக்கும் தமிஷனை, அதாவது திராவிஷனை, பின்னர் எப்படித்தான் அழைப்பதாம், சொல்லுங்கள்?

பங்குத்தந்தை ஸ்டாலின் கும்பலினரின் கமிஷன் அடிப்பு பற்றி நான் மட்டும் சொல்லவில்லை. அவருடன் கூட கெவர்னமெண்டு அட்வைசரி கௌன்சில் பணிபுரியும் ஆசாமி ஜே ஜெயரஞ்சனே சொல்லியிருக்கிறார்.

முழு விவரங்களுக்கு: சுட்டி

பெரிய விஷயம் தான், ஒப்புக் கொள்கிறேன். 

அவருடைய இலக்கான 60ஐத் தாண்டுவார் என எதிர்பார்த்தேன், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பே 65ஐ அடைந்துவிட்டாராமே!  Read the rest of this entry »

The problems of Hooch (illicit liquor) & IMFL related deaths & disabilities are ENTIRELY blamable on the scumbag #DravidianModel. Read the rest of this entry »

கவனிக்கவும். அல்ல1. அல்ல2. அல்ல3.

மேலும் கவனிக்கவும்; இது ரொம்பவும் நீளம் – ஆகவே இரண்டாகப் பிரித்திருக்கிறேன்; பொறுமையாகப் படிக்கவும்; ஏனெனில் திராவிடன்களின் கன்னக்கோல் தொழில்முறை செய்நேர்த்தி பற்றியது இப்பதிவு. Read the rest of this entry »

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

இது நியாயமா? Read the rest of this entry »

It is not at all an exaggeration to say that the scumbag DMK fellows, sorry felons, are the most professional & systematic money launderers (of ill-gotten massive loot via: mineral mafia to commissions to appointments to contracts to procurements to tender-fixing to surreal-estate to land registration bribes to films to ‘legit’ factories to foreign investments to lottery deals to extortion rackets to tributes from industrialists to fake education factories to… …many, many other illegal ‘entrepreneurships’) in the whole of Bharat.

Yes! Read the rest of this entry »

1

நான் பெரிய எண்ணிக்கையில் தமிழ்ப் படங்களைப் பார்த்ததில்லை; எனது வெற்றிகரமான பலமாமாங்க வாழ்க்கை(!)யில், இந்த எழவு அதிக பட்சம் சுமார் 20 இருக்கலாம்… Read the rest of this entry »

முன்னதாக:

பின்னதாக: Read the rest of this entry »

ஒரு விசன கவிதை:

Read the rest of this entry »

சோக நிகழ்வு குறித்த பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, கண்டகண்ட திராவிடமாடல் தொழில்முறை திருட்டுக் கழுதைகளும் ஊடகப்பேடித் தமிழ் நிருபர்களும் அவசரமாக ஓடிவந்து பிணங்களில் இருந்தும் அடிபட்டவர்களிடம் இருந்தும் நகைகளையும் பிற விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடிப்பதை வேறு, இந்த ஒடிஷா காவல்துறை தடுக்கவேண்டும். பாவம்.

திராவிடமாடல் ஆட்சி செய்தால், பிணம்தின்னும் தரித்திரங்கள், வேறென்ன சொல்ல. Read the rest of this entry »

கடந்த இரண்டுமூன்று வாரங்களாகப் பலப்பல பழைய நண்பர்களையும், அறிமுகங்களையும் பார்க்கும் + கொஞ்சம் அளவளாவும் வாய்ப்புகள் கிடைத்தன. (இத்தனைக்கும் ஒன்றையும் நான் திட்டமிடவேயில்லை!)

அந்த அனுபவங்களிலிருந்து, சுவையான ஒன்றைப் பகீர்வதில் இறும்பூதடைகிறேன். Read the rest of this entry »

அதாவது அனுதினமும் அவ்வாசாமி உழைத்து ஓடாய்த்தேய்ந்து, விழுந்துவிழுந்து செய்து கொள்ளும் ‘கலெக்சன்’ எவ்வளவு? Read the rest of this entry »

இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்.

+ ஆறேழு வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து கெடப்பில் போட்டிருந்த வரைவுப் பதிவை பட்டி பார்த்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பிரசுரிக்கிறேன். நன்றி. Read the rest of this entry »

Answer:

In a delightful variety of ways – anger, mourning, moaning & cursing included. Read the rest of this entry »

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »

…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.