பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »

இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு,  முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான  ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »

முன்னமேயே ஒருதடவை இந்த டேட்டா ஸையின்டிஸ்ட் ப்ரக்ருதியின் ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பர’ உளறல்களைப் பற்றி எழுதியிருந்தேன். பின்னர் சே என்று விட்டுவிட்டேன். Read the rest of this entry »

அருவருக்கத்தக்க அசோகமித்திரனின் அடிவருடி வாசகனான அற்ப அடியேனின் தெண்டனிட்ட தாழ்மையான விஞ்ஞாபனம். உபயகுரங்குகுசலாபரி.

Read the rest of this entry »

அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே!  ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள். Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

… இவர்கள் கௌரவர்கள் ரேஞ்சுக்கு, நாளொரு மேனியாவும், பொழுதொரு கொண்ணை*யாகவும் – எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேயிருந்தாலும், இந்த மனகூவான்கள் அலுப்பேயில்லாமல் தொடர்ந்து அள்ளிஅள்ளித் தரும் நகைச்சுவையிருக்கிறதே, என்னால் தாங்கவேமுடியவில்லை. (இத்தனைக்கும் அங்கு, எனக்கு ஓரளவு மரியாதையுள்ள கம்யூனிஸ்ட்களும், தமாகவினரும் ஐக்கியமாகியிருந்தாலும் இப்படியொரு நகைச்சுவை!) :-(
Read the rest of this entry »

மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-(  இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி. Read the rest of this entry »

​அழகியசிங்கர் அவர்களை நெடு நாட்களாகவே, உண்மையைச் சொல்லப்போனால், நான் அரைநிஜார் போடாத காலத்திலிருந்தே அறிவேன். அவர் பழகுவதற்கு இதமானவர். எனக்கு மிகவும் அணுக்கமானவர். வாழ்க்கையின் உள்ளார்ந்த உடுக்கைகளின் ஊடுபாவுகளை, ​அவரைப் போல அணுகுபவர்களை நான் அதிகம் பார்த்ததில்லை.

என் நல்லூழ் காரணமாக மட்டுமே அவரை நன்றாகத் தெரிந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு லபித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை… Read the rest of this entry »

நம்மைப் போன்ற பாவப்பட்ட சாதாரணத் தமிழர்களுக்குத் தெரியும், திராவிடர்கள் என்றாலே அனைத்து எதிர்மறைப் பிறழ்வுகளையும் உள்ளடக்கிய வெறும் வெற்றுப் பொறுக்கி கும்பலினர் என்று. தமிழகத்தை, அதன் போற்றத்தக்க பண்பாட்டுக் கூறுகளை, நம் தமிழை, தமிழத்தை — துப்புரவாக அழித்தொழிக்கத் தொடர்ந்து முயல்பவர்கள் என்று… Read the rest of this entry »

முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-) Read the rest of this entry »

ஸோம்பேறி ஸோங்குகளா, வொங்க கொஸ்க்கடி தாங்கவே முடியலியேடா!
Read the rest of this entry »

கடந்த சில தினங்களை மும்பய் மாநகரில் கழிக்கவேண்டியிருந்தது; என்னுடைய நேரம், ஆனந்தமாக – டாடா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences), ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education ) சார்ந்த பல போற்றத்தக்க பேராசிரியர்களுடன் ‘அதிகாரபூர்வமாகவும்,’ சிலபல மாணவர்களுடன் இலக்கற்ற உரையாடல்களுடனும் கழிந்தது.  (பின்புலம்: அரசுப் பள்ளிகள், கல்வி, நாம் என்ன செய்யவேண்டும், எந்தவகையான தொழில்நுட்பங்களை நாம் உபயோகிக்கலாம், ஆசிரியர்களுக்கு உதவுவது எப்படி, பாரதமுழுவதற்குமான வீச்சை ஏகோபித்துக் கட்டியெழுப்புவது எப்படி… … இன்னபிற)

ஆனால், பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு… … Read the rest of this entry »

…பொதுவாகவே, கடந்த சிலவருடங்களாக,  இளம் ஆர்வலப் போராட்டக்காரர்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்; ஏனெனில் இடதுசாரிகளாகத் தங்களைக் கருதிக்கொண்டு – ஆனால் அவர்களுக்கு அவசியம் இருக்கவேண்டிய படிப்பறிவும், களப்பணித்திறனும், அடிப்படை நேர்மையும் துளிக்கூட இல்லாமல் – இதற்கெதிராகப் போர்க்கொடி, அதற்கெதிராகப் போராட்டம், முதலாளியத்திற்கெதிராகச் சதிராட்டம், பன்னாட்டு நிறுவனச் சதியாட்டம், ஏகாதிபத்திய அவலம், இனப் படுகொலை என்றெல்லாம் முகாந்திரமேயில்லாமல் உளறிக்கொண்டிருக்கும் அரைகுறைகளிடம் என் பொன்னான நேரத்தை வீணடிக்க எனக்கு மனமேயில்லை.

இருந்தாலும் இப்படியாகிவிட்டது. ;-) Read the rest of this entry »

அய்யன்மீர்! இது வெறும், அற்ப, பேச்சுரிமையல்ல.  மாறாக, இது மகாமகோ பேத்துரிமை!

Read the rest of this entry »

ஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(

Read the rest of this entry »

‘நீங்களே செய்து பாருங்கள்’ என மாடிவீட்டுத் தோட்டம் திட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. இத்திட்டத்தின் பின்னணியில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கிறார்கள் விவசாயிகள்.

என்று ஆரம்பித்து, மானாவாரியாக உளறிக் கொட்டியிருக்கிறார்கள். Read the rest of this entry »

இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில்,  இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(

அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை?  :-((

ஆகையால்தான்… Read the rest of this entry »

பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம்  வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால்  ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Read the rest of this entry »