ராபர்ட்க்ளைவின் ஆப்பிள் பகல் + மூன்று படுமோசமான அதிர்ச்சிகள்
April 15, 2016
அட! தலைப்பே அமர்க்களமாக இருக்கிறதே! ஆனால், பயப்படாதீர்கள்! மேலே படியுங்கள், ஜமாயுங்கள்.
சரி. இந்தத் தன்னிலை வாக்குமூல நிர்மூலத்தை பகிரங்கப்படுத்துவதில் எனக்கு வழக்கம்போலவே மானப் பிரச்சினையென ஒன்றுமே இல்லை. ஏனெனில், எஸ்ரா அவர்களும்கூட சிலசமயங்களில் ஒழுங்காக எழுதிவிடுவாரோ என்று மறுபடியும் மறுபடியும் அவர் எழுத்துகளைப் படித்து, ஒவ்வொரு முறையும் தவறாமல் ஏமாற்றமடையும் அதிஅற்புத பின்நவீனத்துவ மடையர்களில் ஒருவனல்லவா நான்? வெட்கங்கெட்ட போக்கற்ற தமிழ் வாசகப் பிதாமகர்களில், நல்ல வாசிப்பனுபவத்துக்கான(!) நப்பாசையில், பேய் போல அலையும் சோம்பேறிக் கூவான்களில் ஒருவனல்லவா நான்!
…அதனால் தான், ஆகவேதான் – அன்றாட வேலைகளின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க, தேர்தலுக்குப் பின் விஜயகாந்தார் முதலையமைச்சராகப்போகும் நாளை எண்ணிப் படபடக்கும் நெஞ்சுடன் பரிதவித்துக்கொண்டிருக்கும் இக்கால கட்டங்களில், நான் மறுபடியும் மறுபடியும் நிபந்தனையற்றுச் சரணடையும், வாய்விட்டுச் (= mouth leaving) சிரிக்கவைக்கும் புகலிடம் எஸ்ராவல்.காம் இணைய தளமே!
அவருடைய அண்மையப் பதிவுகளில் ஒன்றைப் படிக்கவும்: டல்ஹெளஸியின் ஆரஞ்சு இரவு
யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம், ங்கொம்மாள…
-0-0-0-0-0-0-
புதிய கவித்துவ மொழியில் உணர்ச்சிபூர்வமாக கிளைவிடுகின்றன வரிகள். அதில் வெளிப்படும் படிமங்களும் உவமைகளும் சிறப்பாக உள்ளன.
அந்த வரியைச் சட்டென வாசித்துக் கடந்து போய்விடக்கூடாது. மெல்ல அசைபோட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். தொலைவிலிருந்து பசியாற்றும் பழம் என்பது ஒரு புது அனுபவம். அது தான் இக்கவிதையின் திறவுகோல். அதன் வழியே தான் பிரிவு அடையாளப்படுத்தபடுகிறது.
இக் கவிதைகளின் தனித்துவம் எளிய வார்த்தைகளின் வழியே உருவாகும் மகத்தான அனுபவங்களாகும்.
மாயாவின் கவிதைகளில் பெருமளவு புதிய சொற்கள். பிரயோகங்களைக் காணமுடிகிறது.
காணும் உலகை காணா உலகாக மாற்றும் விந்தையே கவிதையின் சூட்சுமம். இக்கவிதையில் சூரியன் எலுமிச்சையென உருமாறுவதுடன் உலகின் மிகப்பெரிய குவளையில் தளும்புகிறது லெமன் டீ என நீளும் மூன்றாவது வரியின் வழியே தரும் முற்றிலும் புதிய அனுபவம் உருவாகிறது. கறுத்துக் கொண்டிருக்கும் தேநீர் உறவின் குறீயிடாக மாறுகிறது. கடைசி வரிக்கேள்வி என்பது இயலாமையை. தவிப்பை சுட்டுவதாகவே உணர்ந்தேன்
கயிற்றில் நடக்கும் சிறுமிக்குப் பயமிருக்காது. அந்தரத்தில் நடப்பதை அவள் வியப்பாகக் கருதமாட்டாள். வாழ்க்கை நெருக்கடியே அவளை அந்தரத்தில் நடக்க வைக்கிறது. ஆனால் அக்காட்சி பார்வையாளர்களுக்கு வியப்பாக இருக்கும், மாயாவின் கவிதைகளும் அது போன்றவையே.
-0-0-0-0-0-0-
http://www.sramakrishnan.com/wp-content/uploads/2016/04/IMG-20.jpg
ஆ! இவர் ஏதாவது ஷூ லேஸ் விஷயத்துக்கு சொந்தக்காரரா?அட, லோவ்லேஸாமே! :-(
எழவு கடிகாரம்வேறு நான்கு மணியைக் காட்டும்போது, எழுத்தில் 4.30 என்றுவேறு!எஸ்ரா கூட சேர்ந்தால், ஒன்றுமே உருப்படாதுபோல!ஏன்யா, கொஞ்சம் நிம்மதியாவே இருக்கவிடமாட்டீர்களோ!
அடீங்… :-(
அதிர்ச்சி #2:
இது அலக்கியம் தொடர்பான ஒரு அமைப்பு என்பதை விலாவாரியாகத் தெளிவுபடுத்திவிடுவது நல்லது.
அதிர்ச்சி #3:
ஆனால், அவருடைய அறிவிப்பை மீண்டும் உன்னிப்பாக, கவனத்துடன் படித்ததில், அவருடைய வாசகர்களின் பற்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன எனவும் தோன்றுகிறது. ஆனால் இந்தச் சோகச் சம்பவத்தை அவர் – தனக்கே உரித்தான பரந்த மனப்பான்மையுடன் – இலக்கியம் சினிமா ஓவியம் வரலாறு புத்தகவாசிப்பு – போன்றவைகளின் ஊடாக அணுகியிருப்பது போற்றத்தக்கது.
ஆனால், பிரச்சினையென்னவென்றால், உண்மை என்னவென்றால் – அனைத்துவிதமான இலக்கியப் பற்களும் உடைக்கப் பட்டிருக்கின்றன.
நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துகொண்டே வருகிறது. நாடு போகிற போக்கே சரியில்லை.
ஆகவே, நான் அணிந்து கொண்டிருக்கும் என் கிழிந்த கோமணத்தை – வருத்தத்துடன், அதிர்ச்சியுடன் இந்திய ஜனாதிபதியிடம் நேரடியாகத் திருப்பிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். அல்லது ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நண்பர்கள், இப்படித் திருப்பப்படும் கோமணங்களைத் தொகுத்து அவர்களே அனுப்பினாலும் சரி.
சரி, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
April 15, 2016 at 16:01
தலை, ஏன் இந்த கொலைவெறி?
தவளை பாய்ச்சல் இல்லை, சும்மா “ஷாலினின்36வது அறை” translation(c) எஸ்ரா – ஷான் டே https://www.youtube.com/watch?v=-ZSJQ_Q_XaA | மாதிரி சும்மா போட்டு தள்ளுறிங்களே உங்களுக்கே அடுக்குமா?