இதுதாண்டா கொழுப்புத் தமிழர்களின் விழுக்காடு!
December 13, 2013
நான் வேலைவெட்டியற்றுக் கொழுப்பெடுத்து, நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும் எனும் காட்டுரையை எழுதியதற்கு, என். பக்கிரிசாமி அவர்கள் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
தாங்கள் கூறும் இத்தகைய தமிழர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கேட்டதற்கு நன்றி, பக்கிரிசாமி அவர்களே! மேலதிக ஆராய்ச்சி செய்ய என்னை நீங்கள் உந்துகிறீர்கள் என நினைக்கிறேன், மிக்க நன்றி. தமிழன் காணாத உன்னத உச்சங்களே இருக்கக் கூடாதல்லவா? ஆக, எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், நான் மேலே தொடர்கிறேன்… ஏதோ ணம் செள்ளட் டமிளுக்கு, டமிளர்கலுக்கு, எண்ணாள் ஆண வுதவீ.
ஒரு முக்கியமான விஷயம்: உங்கள் நகைச்சுவையுணர்ச்சி மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் கோபித்துக் கொண்டு கண்டமேனிக்கும் (பல மற்றவர்கள், இனமானர்கள் போல) என்னைத் திட்டமாட்டீர்கள் என்கிற தைரியத்தில், இதற்கு இரண்டுவிதமான பதில்களைக் கொடுக்கிறேன் – ஏற்க முடிவதை ஏற்றுக் கொண்டு, மற்றவைகளைக் கடாசலாம், சரியா? Read the rest of this entry »
வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும்
December 5, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
… சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…

புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு — இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப் போல… (படத்துக்கு நன்றி: ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)
சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும் சுயசிந்தனை அற்றவர்கள்தாமே! ஆக, அவர்களுக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?
பகபகத் சிங்: நான் ஏன் ஆத்திகன் ஆனேன்?
November 29, 2013
என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன் ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.
இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.
ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.
அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?
இதுதாண்டா தமிழனின் பேராண்மை இழப்பீடு!
November 27, 2013
மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.
இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம் என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?
சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »
நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு!
November 8, 2013
உபயம்: ஸ்ரீமான் வை ‘வைகோ’ கோபால்சாமி அவர்கள்.
உபஉபயம்: ஸ்ரீஸ்ரீ க்ரேவிடி(2013) எனும் பொருளீர்ப்பு சக்தி ஹாலிவுட் ரீல்.
நம் தமிழைக் கூறு போட்டுக் கூவி விற்கும், ’உலகத்தின் வரலாறிலேயே முதல் முறையாக’ ஃப்ரீ ‘ஆஃபர்’ (இத்தை வாங்கினால் அத்து ஃப்ரீ, அத்தை வாங்கினால் மாமா ஃப்ரீ!) கொடுக்கும் நல்லுலகத்தினரால், அறிவுஜீவி குமாஸ்தாக்களால் — ஏற்கனவே –
- அய்யய்யோ_அணுசக்தி,
- அடேங்கப்பா_மரபணு,
- வணக்கத்துக்குரிய திருவாளர் கடவுள்(!) துகள்(!!),
- கந்தறகோளக் கயாஸ் கோட்பாடு,
- உலகின் முதல் குரங்கு, திராவிடக் குரங்கு, (புதுமைப்பித்தன்?)
- உலகின் முதல் கழுதை, திராவிடக் கழுதை, (புதுமைப்பித்ததாசன்??)
- பாவப்பட்ட ஜென் கவிதைக் கட்டுடைப்பு,
- ஜென் கவிஞர்கள் பொழுது விடிந்தால், வழக்கமாக சாலையோர வேசிகளிடம் போவது,
- ஷ்ராதிங்கனார் அவர்களின் பூனை,
- வௌவால்கள் குருட்டு ஜென்மங்கள்,
- கமுக்கமாகப் காப்பியடிப்பது எப்படி,
- கம்பன் என்ன பெரிதாகத் தமிழுக்குச் செய்துவிட்டான் அரைகுறை ராமாயணம் ஒன்றை எழுதியதைத் தவிர,
- நயாகரா வீழ்ச்சி! = வயாக்ரா எழுச்சி!!
…உள்ளிட்ட பல சிடுக்கல் பிரச்சினைகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டு செரிக்கப் பட்டுள்ளன என்பதை – இந்த ஒத்திசைவை வேண்டாவெறுப்பாக ஒத்திசையாமல் தலையில் அடித்துக் கொண்டு படிக்கும் பாவப்பட்ட வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் (=எண்ணி, பத்து பேர்! இது கொஞ்சம் அதிகம்தான்!) அறிவீர்கள்.
ஃமுக ‘ஃபிஸிக்ஸ் ஸ்டார்’ ஃபெய்ன்மன்னார்சாமியார் வால்க!
November 4, 2013
பத்ரி சேஷாத்ரி (என நினைக்கிறேன்) அவர்களுடன் ஒரு முறை (பொதுவாக, நம் கல்லூரிகளில் அறிவியல் போதிக்கப்படும் நிலை பற்றி பல கோணங்களினூடே) பேசிக் கொண்டிருந்த போது – அவர் சொன்னார்: நம் தமிழ் சினிமாவில் யாராவது ஹீரோ அல்லது ஹீரோயின் ரிச்சர்ட் ஃபெய்ன்மன் போன்றவர்களைப் பற்றிப் பேசுபவராகவோ அல்லது படிப்பவராகவோ காண்பிக்கப் பட்டால் ஒருவேளை நாம் ஆவலுடன் இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்போமோ? மேலெழும்பி வருவோமோ?
சில சமயம், இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். சில நாட்கள் தூக்கமின்மையால் புரண்டு புரண்டு படுத்து, படு பயங்கரக் கனவுகள் சிலவும் கண்டிருக்கிறேன்.
மேலும் — சினிமாவிமர்சனம், சினிமாவிமர்சனமாக எழுதித்தள்ளும் மனிதர்களைக் கொஞ்சம் பொறாமையுணர்ச்சியுடனேயே பார்க்கும் நான், சில சமயம், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பார்க்காது சினிமாசினிமாவாகப் பார்த்து — விமர்சனமெல்லாம் உடனுக்குடன் அமர்க்களமாகச் செய்வதாகவெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். அதில் ஒன்று…
‘எங்கும் தமிள், ஏங்கும் டமில்’
— புதிய படத்தின் ’சுடச்சுட’ விமர்சனம் Read the rest of this entry »
… and uh oh, these korean ‘action’ films! (or, are they comedies(or horror flicks(or like our very own tamil pilims ?)?)?)
November 3, 2013
Oh NO!
Many moons (not your Sun Myung Moons, silly) have passed by, since I saw this rather confusing film – but my motto in life is:
let the freakin‘ world beget, what I begat.
grrrr…
… I recollect with abject terror, the fact that, very many moons ago, actually in 1989 or so, Mahadevan and I had gone to a Korean avant garde film festival with all kinds of expectations and then had to literally RUN away from the Auditorium for our dear lives… Oh the horror, the horror…
But it seems to me that, I hardly learn any lesson from all my misdeeds, in my life. :-(
So, I saw an yet another mater-copulating Korean film. And, here goes my rabid viewpoint… Read the rest of this entry »
வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’
October 20, 2013
அத்வைத் ஆடி கார் விற்பனைக் கடையின் முதலாளி ஆடிகிங்கரர்.
இந்த ஆடிகிங்கரர் அவர்களுடைய பிரதம அடிப்பொடியின் பெயர் தான் வயாக்ராபாதர்.

கருத்துப்படம்: வயாக்ராபாதர் (இவர் பாதங்கள், ப்ஃபீஸர் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த வயாக்ராவினால் உருவாக்கப்பட்டவை)
ஒரு ரகசியம்: உஷ்ஷ்ஷ்… கிட்டே வாருங்கள்; நான் தான் இந்த வயாக்ராபாதர்.வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னொரு விஷயம்: தயவுசெய்து, இந்த கதையை நீங்கள் அத்வைதம் கண்ட ஆதிசங்கரருடனோ அல்லது வியாக்ரபாதருடனோ, குழப்பிக் கொள்ளவே கூடாது. சரியா?
இன்னொரு ரகசியம்: காலடி ஆதிசங்கரருக்கும் இந்த வியாக்ரபாதருக்கும் என்ன தொடர்பு என்பதை இன்னொரு சமயம் தெரிவிக்கிறேன், சரியா?
-0-0-0-0-0-0-
வயாக்ராபாத புராணம் – அதாவது, எஸ்ரா அவர்களின் ‘ஒரிஜினல்’ கட்டுரையில் இருந்த நயாகரா எல்லாம் வயாக்ராவாக மாற்றப் பட்டு, சில சிறு மாற்றங்களுடன் உள்ளேற்றப் பட்டு – வயாக்ரா முன்னால் அல்லது பின்னால்?? – எனத் தலைப்புப் பெயர் மாற்றமும் பெற்று… …
வயாக்ரா முன்னால்
(வயாக்ராபாதர் அருளிச் செய்தது)
… ‘இரவிலே பல முறை’ என சரோஜாதேவி கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். வயாக்ரா கடையின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. Read the rest of this entry »
(அல்லது) டீடலஸ், இகரஸ் – நான்காவது குறிப்பு (=கொஞ்சம் நகைச்சுவை)
இதன் முதல் பகுதியைப் படித்தீர்களா? (டீடலஸ், இகரஸ் – நான்கு குறிப்புகள் (=கொஞ்சம் தொன்மம் + கொஞ்சம் ஸானெட்+ கொஞ்சம் தவிப்பு))
<–/-0-0-0-0- குறிப்பு #4 -0-0-0-0-\–>
சென்னை. மெட்றாஸ். ஆமாம். இது நடந்து சுமார் இருபத்தெட்டு வருடங்களாகி யிருக்கும் என நினைக்கிறேன்.
அப்போதெல்லாம், என்னுடன் ஒரு சிறு கூட்டம் அலைந்து தொங்கிக் கொண்டிருக்கும், நான் சொன்னதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கேள்வியே கேட்காமல் என்னை மேலெழும்ப விடாமல், சராசரித்தனத்திலேயே அமுக்கிக் கொண்டிருந்தது அது. நானும் ஒரு மேதாவி என்றெல்லாம் பிரமையில் மூழ்கியிருந்த காலம். எல்லாவற்றுக்கும் எனக்கு திட்டவட்டமான, மிகக் கறாரான பதில்கள் இருந்த நாட்கள் அவை… இப்போது இருப்பதை விட, கொஞ்சம் அதிகமாகவே நக்கலும், கிண்டலும் என்னிடம் இருந்தன என நினைக்கிறேன். :-( ம்ம்ம் B-)!
ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…
என்ன சிக்கலில்லாத உலகம் அது! எதனைப் பற்றியும் என்னால் ஏதாவது சொல்ல முடிந்தது. எந்தப் பிரச்சினைக்கும், இடியாப்பச் சிக்கலுக்கும் என்னிடம் ஒரு தீர்மானமான தீர்வு இருந்தது.
கருப்பு-வெள்ளை ரீதி சார் எளிமையான உலக அவதானிப்பில் தயக்கங்களுக்கும், தர்ம மயக்கங்களுக்கும், கருணைக்கும், மென்மைக்கும் இடமே இருந்ததில்லை. ஒரே கறார் தான். ஒரே விமர்சனப் பார்வைதான். வெட்னா ஒண்ணு துண்டு ரெண்டுதான்.
எதனையும் ஏதோ ஒரு கோட்பாட்டு டப்பாவுக்குள் அடைத்து விட முடிந்தது. அந்த டப்பாவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் ஆட்டி ஆட்டி குடுகுடுப்பைக்காரத்தனமாக அதிகப் பிரசங்கம் செய்ய முடிந்தது. இடக்கையால் ஒவ்வாததைப் புறம் ஒதுக்குவதும் மிக லகுவாக இருந்தது… கூட நான் பேசுவதை ஆமோதிக்க, கேள்வியே கேட்காமல் வழிமொழிய, ஒரு சிறு கும்பலும் இருந்தது.
இந்த அழகில் மார்க்ஸீய, முரணியக்கப் பொருள்முதல்வாதச் சார்பு நிலை வேறு. கோவிந்தன், கோஸம்பி, க்ராம்ஷி, அல்துஸஹ்ர், ஹாப்ஸ்பாம் என்று கரைத்துக் (!) குடித்துப் (!!) பலவாறாக அலைக்கழிக்கப் பட்டுக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »
நரேந்த்ர மோதியும், மாலினி பார்த்தசாரதி எனும் பன்மொழிப் புலவியும்
September 30, 2013
அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.
இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.
அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்! Read the rest of this entry »
ஆம். நான் மோதி/பாஜக விடம் ‘பொட்டி’ வாங்கியிருக்கிறேன்
September 14, 2013
சில மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. சில பின்னூட்டங்களும். எதையும் பதிவு செய்யப் போவதில்லை – ஏனெனில், அவற்றில் பெரும்பாலானவை குப்பைகள் – பொருட்படுத்தத் தக்கவையல்ல. இருந்தாலும், வசைகளை, ஏகவசனங்களை முடிந்தவரை ஒதுக்கிவிட்டு, அவற்றில், எடுத்துக் கொள்ளக் கூடிய சாராம்சமும், என் பதில்களும் கீழே:
அ: நீ பணம் வாங்கிக் கொண்டிருக்கிறாய், மோதி / சங் பரிவாரத்திடம். நீ விலை போய் விட்டாய்.
பதில் 1: ஆமாம். அவர்கள் ஒரு வார்த்தைககு பத்து ரூபாய் (மட்டும் தான், என்ன அநியாயம்!) கொடுக்கிறார்கள். கலைஞர் எனக்கு இதற்கு மேல் 10% கொடுத்தால், அல்லது சொக்கத் தங்கம் 15% மேலதிகமாகக் கொடுத்தால், அவர்களுக்கும் ஜால்ரா போடத் தயார். Read the rest of this entry »
[+3] paperback activists considered really, really harmful
September 6, 2013
This is the last of the series of posts. Relax. You don’t have to read this, got it?

The previous ones are here:
- [+2] paperback activists considered really, really harmful 04/09/2013
- [+1] paperback activists considered really, really harmful 03/09/2013
- paperback activists considered really, really harmful 02/09/2013
-0-0-0-0-0-0-
Scenario #10
Norman L Programmer is moving around in a major frenzy these days… His latest discovery is Neuro Linguistic Programming (unfortunately, he had gone through one of the NLP evangelical Read the rest of this entry »
சிரியா? நல்லா சிரிய்யா!
September 5, 2013
முதல் விதி: சிரியா திரும்.
முதற்கண் — சுஜாதாத்தனமாக, மெலிதாக முறுவலிட்டுக் கொண்டு, சிறியதாகச் சிரித்துக் கொண்டிருப்பவள் சிரியி, அப்படிச் செய்யாதவள் சிரியா — என்பதறிக.
பயப்படாதீர்கள். இவள் செந்தமிழ்ச் செல்வி, செம்மொழிச் செவ்வி நடிகை சிரேயா அவர்களின அத்தை பெண் தான்.
இந்தச் சிரேயா அவர்களே, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ்மொழி செம்மொழி மாநாடு கண்ட கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆசி பெற்றவர்தான்.
இந்தப் பெண் சிரியா, பாவம் — நம்மூர் பாண்டி நன்னாட்டில், அதாவது பாண்டிச்சேரியில் – ஏதோ, கண்ணைக் கட்டிக் கொண்டு, சகதோழிகளுடன் ஏரோப்ளேன் பாண்டியாட்டம் ஆடிக்கொண்டே போனபோது – விளையாட்டு சுவாரசியத்தில் துருக்கிக்கும், இராக்கிற்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடையே உள்ள சிறிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டுவிட்டது நமக்கெல்லாம் தெரிந்ததே…
இந்தப் பெண்ணை மீட்கத்தான் நாமெல்லாம் வலைப்பூக்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் மூலமாகவெல்லாம் போராளித்தனமாகப் போராடி வருகிறோம், தெரிந்ததா?
ஹ்ம்ம்ம்… எப்படியாவது இந்தப் பெண்ணை மீட்டு, ஏதாவது ஒரு தமிழ்ப் படத்திலாவது நடிக்கவைத்து விடவேண்டும்…
<T_’Vijaya’_Rajendher> சின்னக்கிளி சிரியா, இப்ப நீ பிரியா? அப்போ இங்க வர்ரியா? நாஞ் சொல்றது சரியா?? </T_’Vijaya’_Rajendher> Read the rest of this entry »
[+1] paperback activists considered really, really harmful
September 3, 2013
So, you have read the intro+first part of this series — paperback activists considered really, really harmful. Yeah?
And, you want to continue? umm, are you really sure?
Scenario #3
Dick McLament never tires of sadly recounting those harrowing days as a hosteler at his grad school, even after the lapse of a full decade, following ‘those’ troubling days… “As my father did not approve of my activities at my grad school, he suddenly stopped sending money to me…” In a very pitiful tone, he would add that, subsequently (and consequently) he had to go without his morning breakfast most of the days… that, even if he were to have a breakfast, he could just manage to eat only a bun in the place of a hearty meal because of this reason, he would add with a choking voice! Tch tch…
Questions:
- What makes Dick McLament think that his father has to support him, even after he has gone well beyond the age of ‘majority?’
- Does Dick acknowledge that, he had been educated in one of the ‘best’ public schools – leaving a big hole in the pocket of his father – and that as per the rules of the game, if one takes money from someone he/she has to do the bidding of the benefactor?
- What really prevented Dick from actually taking a part time job – at the library / mess / nearby teashop? Is it because of a false sense of ‘indignity‘ of labor or a plain inability to think of a solution? (I fully agree that ‘perceived martyrdom of an idealist’ at an young age makes many variants of interesting and heart wrenching – ‘in those days, I was…’ – kind of anecdotes, in later life)
- What makes Dick assume that these kinds of sob stories are pretty gripping and that the listeners are even remotely interested?
- Does clinging on to the past glories (hic) and adamant refusal to look ahead, take anyone anywhere?
- Anyway, can’t he see that if he had continued to eat ‘only’ one bun for breakfast, at least he would not have developed a pot and ponderously thundering belly and instead, be at least reasonably healthy?
Scenario #4
Samaaj Newsreaderwallah is fuming. He has read in a newspaper some incendiary stuff. Mommeee! Of course, for Samaaj, this is his only source of wisdom, after all, who has the time to do research these days, in spite of the fact that we have much better access to information compared to yesteryears… and anyway, if one has to do elaborate research how can one mouth instant solutions and erudite opinions… Anywa, he has read that Narendra Modi is targeting the minorities and has a plan for ‘ethnic cleansing!’ – When asked for proof, he said it is obvious from the ‘fact’ that Narendra Modi did not have ONE friend from minorities… and not even a SINGLE magazine supports Narendra Modi…
Questions:
- Does Samaaj know what is meant by ‘ethnic cleansing?’
- Does anyone know of any plan to this effect?
- He seems to have read that famous rant against the way the mass media operate – ‘Manufacturing consent’ by Noam Chomsky – wouldn’t he apply the same theory of filters to the news he reads?
- How many friends from ‘minority’ that Samaaj has? Does this mean that Samaaj has a major issue with the minorities? Or better still, does Samaaj want to subject them to ‘genocide?’
- How does he ‘know’ that Modi does not have friends & followers in the so called ‘minority’ communities?
- Has he at least been to Gujarat to study what is happening there? Sure there are genuine problems, but they cannot be addressed from the confines of a swivel chair! If it is not so very important enough for him to go there and check facts, is it important to be talking (in vain) about?
Am not holding a brief for Narendra Modi – but is it not unfair to brand a person based on a few pieces of newspaper reportage, reports from ‘foreign funded’ NGOs and the like? Is a life ‘belonging’ to one sect, superior to that of another?
On the other hand, how does one learn to differentiate between news, analysis, opinion, propaganda (with appropriate overloading of left or right spins) and good ol’ undiluted venom – the last, from folks like Teesta Setalwad, Mallika Sarabhai and Sonja Ghandi?
Scenario #5
Self-anointed Geeko Rao knows that he has quite a good set of ideas; lately he has been reading ‘tabloid’ business journals and is forever talking about ‘providing value to customers!’ Yikes!! Geeko says that, he has come up with very eminent product ‘ideas’ – of course he feels that they were all capable of ‘providing value to customers’ – but then, they weren’t pursued by the sales people in his company at all! Horror of all horrors! :-( “One very seriously wants to contribute to the company – and look what they are doing to me” – all that lament again!
Questions:
- Has Geeko ever in his life been successful in selling at least a safety pin?
- Does he know that value is a perception? And that, if an offering from X is perceived to be useful to Y then, Y would like to acquire it – no matter what Geeko thinks about the offering/X?
- Does he still believe that a merely whipped up idea can solve business problems?
- What does he know about positioning, packaging and market segmentation, winning deals, closures and… ?
It is all so very easy to talk derogatorily about the marketing/sales folks. In my opinion, if one is convinced about an idea, then he/she should be willing to defend it – from all perspectives. And, what about branching off on ones own, if one is so very convinced about the business proposition stemming from a technology idea?
Scenario #6
A few years’ back I met with David Goliath, who I thought was a normal, next door guy – all along. But suddenly, during the course of a pleasant evening, he stormed out of his room saying that ‘It is only after the Bretton woods agreement of 1944 that the seeds were sown for MNCs! These bloody Multinational Corporations are responsible for all the ills of the world!’
Though I was instantly blinded by this dazzling flash of original insight, later, I found that he had lately been going through Dave Korten’s ‘When corporations rule the world.‘ It would not be out of place to mention that he was working as a programmer with a big MNC, of course. But probably, he was there to get some ‘insider’ perspective! ;-)
Questions:
- If he were so sure that MNCs are the bane of humanity, why did he continue to work for them?
- Assuming that David worked there to get some ‘insider’ perspective, did he try to do any whistle blowing there?
- The fact is that this particular MNC routinely manages to evade income tax – with respect to its employees… In this context, did Dave at least pay his income taxes, without fudging figures…. (I know, I know… ‘they didn’t want me to do that!’ – will be the refrain… I also agree that, it is easy to squeal like a mortally wounded pig rather than to be honest…)
- Has he ever participated in that lowest level activity of participating in any rally against MNCs at all?
- Does David see MNCs as the only problem – or looking at them as symptoms of some deeper malaise with ourselves?
- Assuming that we all do it for the money – did he at least refrain from consuming goods produced by MNCs when comparable swadeshi offerings were/are available…
Questions, questions…
If these kinds of guys with absolutely no ability to do research or debug, become programmers, what kind of software or hardlyware or whatever – would they be writing/designing? If my life were to depend on these kinds of programmers, I would rather getaway and take to living in caves, whatever… <chuckle>
-0-0-0-0-0-0-
Oh yeah – two more parts to go! You have been warned. Don’t you go squeal elsewhere…
JournalEntry# 14th April, 2004
paperback activists considered really, really harmful
September 2, 2013
Foreword:
This is a rant about the seemingly unbridgeable dichotomy between ‘doers‘ and ‘talkers.’

… It is amidst a lot of difficulties created by the ‘Talkers’ that, our Civilizations have progressed. But, in the name of Democracy, these talkers have to be allowed to talk – though they cannot (and cannot be allowed to) do any real work, they have to be carried along… Balancing these deadweights, is difficult, to say the least – but there IS progress because of the relentless efforts of the mighty ‘Doers!’ Photo courtesy: Abid Miyan Lal Mian ‘A.L.’ Syed (Risky balance, Sanali, Gujarat)
Lately, I am becoming sick of having to patiently listen to the talkers who seem to have all the great ideas and appropriate solutions to address and solve ALL problems of the world; they wail in high decibel shrill tones that nobody is acknowledging their contributions and initiatives… This makes me sad. :-( Read the rest of this entry »
… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும். அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு ஒன்றுதானே!
எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!
… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே! ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான். எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.
தோழர் – தொழில் – தோள்வலி – தொபுக்கடீர்!
July 26, 2013
இது வெளியூர் நக்ஸல்பாரிகளைப் பற்றியது அல்ல. நம்மூர் அக்மார்க் நயம்விலை ’நானும்தான்’ நக்ஸலைட்டுகளைப் பற்றியது. ஆனாலும் இக்கால வினவு தினவு பற்றியுமல்ல – அக்கால கேடயம், மனஓசை போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்த சமயம்.
நிற்க, இக்கால வினவாளர்கள் அழகான வெள்ளந்தித் திரிபுவாதிகள் . பெருமுதலாளிகளின், ஏகாதிபத்தியத்தின், அமெரிக்க ராணுவவலிமையின் தயவில் உருவாக்கப்பட்டு இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் இன்டெர்நெட்டை உபயோகித்து உபயோககரமாக காலட்சேபம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். Revolution over IP என்கிற (=RoIP என்கிற) இணையத்தின் மீது கட்டமைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் புரட்சிப் ப்ரொடொகாலை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும். .rev (=revolution) என்கிற உயர் நிலை வலைதளப் பகுப்பிற்காகவும் (top level domain) ஆதரவு சேகரம் செய்து கொண்டிருக்கிறார்கள். புரட்சியை நோக்கிய தந்திரோபாயங்கள் இவை என்பது எனக்குத் தெரியவருவதால், உள்ளபடிக்கு எனக்கும் சந்தோஷம்தான்.
யோசித்துப் பாருங்கள் — நல்ல வேளை, இவர்கள் இப்படியிருக்கா விட்டால், வர்க்க எதிரிகளைக் கொன்றுகொண்டு ரத்தத்தில் (அதாவது, மற்றவர்களுடையது) நீந்திக் கொண்டிருப்பார்கள். கொலைவெறி வன்முறையைத் தவிர்த்து, எப்படியோ, நமது தேச மைய நீரோட்டத்தில் கலந்தது சரியான விஷயம்தான். அதுவரை இவர்களை மெச்சத்தான் வேண்டும். சபாஷ பசங்களா! உங்கள் பணியைத் தொடருங்கள்.
பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி
July 18, 2013
(அல்லது) லெமூரியாக் காலத்திலிருந்தே மறத் தமிழர்களின் செல்ல ஆயுதம் வாள் அல்ல, அல்ல, அல்ல – அது கத்தி, கத்தி, கத்திதான்!
எச்சரிக்கை: இது என்னோட சொந்த மீன்பாடி வண்டி ஃபிக்ஷன் (பயப்படாதீங்க – இது நம்ப ஆட்டோ ஃபிக்ஷனுடைய அத்தை பையன் தான்!)
பொதுவாக அறிவிலிகள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தமிழ் ஓங்கி வளர்ந்திருந்தது என்பார்கள். அவர்களைப் பாவம், மறட் டமிளர்களாகிய நாம், மறப்போம், மன்னித்தும் விடுவோம்.
உண்மையில் தமிழ் மொழி தோன்றியதற்கு முன்பாகவே தமிழ்க் கத்தி தோன்றி விட்டது என்பதை அவர்கள் அறியாதவர்கள். Read the rest of this entry »
போங்கடா, நீங்களும் ஒங்களோட ’ஜாதி ஒழிப்பு’ முழக்கமும்…
July 14, 2013
பாகம் ஒன்று: ‘இவன் நானில்லை’
இரண்டாம் ராமசாமி எழுதுகிறார்: ஜாதி என்பது என்ன, சமூகத் தட்டுவாரிக் கட்டமைப்பு என்பது எப்படிப்பட்ட ஒரு சமூகக்கருவி என்றெல்லாம் புரிந்து கொண்டுதான் பேசுகிறோமா? அதில் ஒரு விஷயம் கூட உதவிகரமாக இல்லையா? காலங்காலமாக மனிதக் கூட்டங்கள், தங்கள் ஒருங்கிணைப்புத் தேவைகளுக்காகவும், சுய சார்புக்காகவும், சுயங்களைப் பண்பாட்டுப் பின்னணிகளில் பொருத்தி முன்னெடுத்துச் செல்வதற்குமான கருவிகள் இல்லையா அவை? உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், முக்கியமாக, மானுடப் பரிணாமத்தில் தட்டுவாரிக் கட்டமைப்புக்கள் அளிக்கும் சமூகவியல் பங்களிப்புகள் எப்படியானவை?
ஜாதி அபிமானம் என்றால் என்ன? ஜாதி வெறி என்றால் என்ன? ‘ஜாதி ஒழிப்பு’ என்பது சாத்தியமா? மேலும் முக்கியமாக, அது தேவையா? ஜாதிக்கு மாற்றாக எதனை முன்வைக்கிறோம்? திராவிட(!) இயக்கக்(!!) கருத்தாங்களையா(!!!)? கொம்மிஸார்களையா? மதகுரு-முல்லாக்களின் கட்டமைப்பையா? அல்லது நம்முடைய செல்லமான புறநானூற்று வஞ்சித்திணைகளுக்குள் புகுந்துகொண்டு ரத்தத்தில் நீந்தப் போகிறோமா? அல்லது வேறொரு கிரகத்திலிருந்து வேறு எதையாவது இறக்குமதி செய்யப் போகிறோமா?

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் – ஃபெப்ரவர் 2, 2004 அன்று ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது
அல்லது மாற்று என்பதையே பார்க்காமல், வன்முறையே அற்ற சுத்த சன்மார்க்க சத்திய சமூக உலகம் (utopia) ஒன்றை நிறுவப் போகிறோமா?
இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வோமானால், எப்படி அதனைச் சாதிக்கப் போகிறோம்? அந்த அதி உன்னத உலகத்தில் சமூகக் கட்டமைப்பு என்பது எப்படி எதை நோக்கியதாக இருக்கும்?
அல்லது, இவ்விரண்டும் இல்லாமல் பரிணாமப் பாதையில் பின்னோக்கி நகர்ந்து கல்லாய் பாம்பாகிப் பறவையாய்ப் பல் விருகமாகி மரமாகிப் புழுவாய் பூடாய்ப் புல்லாகிப் போய்ச்சேரப்போகிறோமா?
சரி, மேற்கண்ட அனைத்துக் கேள்விகளையும் விட முக்கியமானதொன்று: நாம், நம்முடைய தனிப்பட்ட முறையில், ஜாதி வெறி சார் பிரச்சினைகளை எப்படி அணுகப் போகிறோம்? Read the rest of this entry »
operation ‘verbizaaring’ nouns
July 1, 2013
“Mere verbiage,–it is not worth a carrot!
Why Socrates or Plato–where’s the odds?–
Once taught a jay to supplicate the Gods,
And made a Polly-theist of a Parrot!”
— Thomas Hood (1799 – 1845)
All the renouned nouns of yesterdays (leave alone yesteryears) are being assaulted by hordes of verb evangelists, and are flattened to deliver verbs – this you know, is the current ing thing.
This sudden flash of remarkable insight occurred to me a few days back; and, therefore, of course I was suitably incited to write this rant. Sorry.
You know, lately I am getting more confused than ever. Having been part of a muddle management layer (um, I mean, the top layer) of a company that was a normal software disservices outfit, till recently – which was suddenly MNCpated and became part of glowball brand, I get to talk to all kinds of HR honchos who strut about like virile peacocks (IMO, in any merger and/or acquisition scenarios, it is the HR group which tends to get benefited a lot, any idea why?). Read the rest of this entry »



