இதுதாண்டா போராளி!
February 16, 2013
தமிழர்களின் பிரச்சினைகளில் எது தலையாய பிரச்சினை – என்பதை நான் பல வருடங்களாக ஆய்ந்து ஆய்ந்து, மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருக்கிறேன் – இந்தச் சீரிய ஆராய்ச்சியின் முடிவில் எனக்குத் தெள்ளெனத் தெரியவந்தது என்னவென்றால்… … …
பொறுத்திரு, தவித்திரு, நமைத்திரு – அவசரமே வேண்டாம். பொறுமையாக மேலேகீழே படிக்கவும்.
-0-0-0-0-0-
நம் தமிழகத்தின், தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகள் யாவை என்றால் அவை பல இருக்கின்றன.
1. ????
2. தொலைக்காட்சி மெகாசீரியல்கள்
3. இலக்கியவாதிகள்
4. பட்டி மன்றங்கள்
5. பேருரைகள்
6. சட்டை போடாமல், ஏன், ப்ராவும் கூடப் போடாமல் தங்கள் மார்பகங்களை முறுக்கிக் கொண்டு, மயக்கம் வரும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு வளைய வரும் சூர்யா, விக்ரம், விஜய் போன்ற இத்யாதி பிலிம் ஆணழகர்கள் (மூச்ச விட்டுத் தொலைங்கடா பாவிங்களா, செத்துக் கித்துப் போய்டப் போறீங்க! புள்ளகுட்டிகாரங்கதானடா நீங்க?)
“இன்டர்நெட்டுக்கு வயது முப்பது”
January 22, 2013
அப்படியானால், எனக்கு வயது ஒன்று. நம்பினால் நம்புங்கள் – மேலே படியுங்கள்.
நம்பாவிட்டால் எக்கேடோ கெட்டு (சுஜாதா (PBUH) அவர்களின் அங்கீகாரம் பெற்ற) யுவகிருஷ்ணா அவர்கள் மிக ஜனரஞ்சகமாக எழுதியிருக்கும் ’இண்டர்நெட்டுக்கு வயது முப்பது’ கட்டுரையைப் படித்துவிட்டு வாருங்கள்.
அப்போதுதான், எனக்கு ஒரு வயது என்று பொய் சொல்லியிருக்கிறேன் – ஆனால் நான் பிறக்கவேயில்லை – இருந்தாலும் நான் ஒரு தேவமைந்தனானதால், என்னால் இப்படி எழுதமுடிகிறது என ஒப்புக் கொள்வீர்கள். நான் என் கால்விரல்களால் தட்டச்சு செய்து மூக்கு நுனியால் என் வாலில்லாப்பூச்சியான செல்ல எலியின் கொட்டையைக் கசக்கி உருட்டி, கர்ஸரை நகர்த்தி, காதால் பார்த்து, கண்ணால் கேட்டு, வாயால் கொட்டாவி விடுவதையும் நீங்கள் வெகு இயல்பாகப் புரிந்து கொள்வீர்கள்.
Read the rest of this entry »
பேருரை (அய்யய்யோ!)
January 18, 2013
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருரை நிமித்தம் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.
உட்கார நிற்க, நம் தமிழர் பண்பாட்டில், அது படும் பாட்டில், எந்த ஒரு கருத்தார்ந்த, செறிவுமிக்க விஷயத்தைப் பற்றிய கூட்டமும், என்னதான் அதன் பாடுபொருள் மிகமிக முக்கியமாக இருந்தாலும், உரையாடலுக்கு மகாமகோ அவசியம் இருந்தாலும் – அதற்கு நூறு பேர் வந்தாலே மிக அதிகம் – கடந்த பல்லாயிரம் வருடங்களாக இதுதாம் நம் பண்டமிழ் முறை, தொல் மரபு. ஆனால் விதம் விதமான பட்டி விக்கிரமாதித்த மன்றங்களுக்கு, அல்லது வழக்காடும் கிழட்டு மன்றங்களுக்கு, இன்னல்பிற நிகழ்ச்சிகளுக்கு, கெக்கெக்கெ என்று சிரிக்க, கூட்டம் அலை மோதும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை என்றால் கேட்கவே வேண்டாம். நிரக்ஷரகுக்ஷிகளின், அரைகுறைகளின் சொர்க்கங்களல்லவா அவை? Read the rest of this entry »
திமுகவுடன், தமிழகமும் பிளக்கிறது!
January 7, 2013
ஆக, நான், படிக்காதுப் படிக்காது நம் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சொன்ன அறிவுரை(!) போலக் கடைசியில் உண்மையாகவே, நடக்கவே ஆரம்பித்து விட்டதோ?
ஊழிற் பெருவலி யாவுள !:-(
திமுகவின் இடியாப்பச் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு, நான் ஏற்கனவே சொன்னது போல, அதனை (அதாவது, பின்னதை) சாம்பாருடன் சேர்த்து, சாம்பாரகத்தை, நமது சாம்பார்நாட்டை, மூன்று பாத்திரங்களில் ஊத்திமூடி. ஒரு முடிவுக்குக் கொணடு வருவதுதான்.
யுவகிருஷ்ணா அவர்களும், பாவப்பட்ட வௌவால்களும்
October 22, 2012
… இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! & (அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல் – என்கிற சிறிது ரசக்குறைவான முந்தைய இடுகையைப் படித்தீர்களா?
எல்லாம் என் மாணவர்களால் வந்த வினை – அவர்களை பத்ரி சேஷாத்ரி, அருண் நரசிம்மன் தளங்கள் போன்ற சில வலை முகவரிகளுக்குச் சென்று அங்கு உள்ள, நாங்கள் விலாவாரியாகப் படித்து, அவதானித்திருந்த அறிவியல் பற்றி, தமிழில் இருந்த செய்திகளைப் படித்து (அணுவுலை உட்பட), தமிழில் கட்டுரைகள் எழுதுமாறு பணித்திருந்தேன்.
ஏன்?
எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்விதான் லபித்திருக்கிறது – எனக்கோ, தமிழிலும் அறிவியல் பற்றி அழகாக எழுதுபவர்கள் இருக்கின்றனர் – அவர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்ற ஆவல். தமிழிலும் அறிவியல் பற்றி, வாயோர நுரைதள்ளாத் தமிழில் தெளிவாக எழுதுவது முடியும் என்கிற அபிப்ராயம் / வெறி, எஸ் என் நாகராசனுக்கும், சுஜாதாவுக்கும், கி கஸ்தூரிரங்கனுக்கும் அப்பாலும் அறிவியல் பற்றி ஆழ்ந்த புரிதல்களுடன் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணம்… என் செய்வது!
ஹ்ம்ம். எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை.
… இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! &
October 6, 2012
(அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல்
இணையத்தில் உள்ள தகவல்களின், இடுகைகளில், கீச்கீச்களில், கிறுக்கல்களில் தலையாய பிரச்சினை என்னவென்றால், என்னவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வண்டை வண்டையாக எழுதலாம். (என்னைப் போல)
கொஞ்சம் கூட எந்த இழவைப் பற்றியும் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அறிவியலிலிருந்து அவியல் வரை, அறத்திலிருந்து முறம் வரை, அணுசக்தியிலிருந்து விந்துசக்தி வரை எழுதித் தள்ளலாம்; ஆக, ஒரு விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஒரு விதமான உழைப்பும் இல்லாமல், மிகவும் தைரியமாக, மகத்தான தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் யார் வேண்டுமானாலும் வாந்தியைப் பீறிட்டு அடிக்கலாம், (என்னைப் போல)
அதுவும் இந்த எழுத்தாளன் ஒரு தமிழனாக இருந்து விட்டால், அதற்கும் மேல் ஒரு இலக்கியவாதிபேதியாக இருந்தால், தன்னிச்சையாக ஒரு அசட்டுத் தனமும், தன் அசட்டு அசட்டை பற்றிய ஒரு அதி புளகாங்கிதமும், தன்னுடைய முட்டாள்தனத்தை, தடித்தனத்தை – ஒரு பெரிய பெருமையாகக் கருதும் ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ மனப்பான்மையும் இருக்கவேண்டிய அவசியம் வேறு. (என்னைப் போல)


