நரேந்த்ர மோதியும், மாலினி பார்த்தசாரதி எனும் பன்மொழிப் புலவியும்

September 30, 2013

அம்மணி மாலினி அவர்கள், அண்ணன் என் ராம் (’த அன்டிஹிந்து’ பத்திரிக்கைக் குழுமம் சார்ந்தவர்) அவர்களுக்கு உறவுமுறை.

இவர் – மனிதவுரிமை, ஸெக்யூலரிஸ்ம் என்றெல்லாம் கலந்தடித்து  நேர்மைக்கீற்று என ஒன்று கூட தெரியாதபடி அவ்வப்போது‘ ஆங்கிலத்தில்’ பரிமாறுபவர். ஆனால் எல்லா மாலினிகளும் இப்படியில்லை. எனக்கு மிகவும் பிடித்த படுபுத்திசாலி பெண்களில் ஒருவர் – மாலினி என்ற பெயருடையவர் – பெங்களூரில் இருக்கிறார். இவரை நான் செல்லமாக மால் எனத்தான் கூப்பிடுவேன்.

அதேபோல, இந்த மாலினி பார்த்தசாரதி அம்மணியை செல்லமாக, இனிமேலிருந்து மால்வேர் எனத்தான் கூப்பிடப் போகிறேன். அவ்வளவு குசும்பும் குயுக்தியும் நிரம்பியவராக இருக்கிறார், இந்த மால்வேர்! 

malware, jaundice... beware!

malware, jaundice… beware!

சரி, நான் ஏன் இந்த மால்வேர் அம்மணியைத் தேவையில்லாமல் புகழ்கிறேன்?

ஹ்ம்ம். ஏனெனில் என்னுடன்  ஒருவிதத்தில் ஒத்திசைந்து தான் போகிறார்: பார்க்க: [+3] 108 காரணங்கள்: நரேந்த்ர மோதியை நான் ஏன் வெறுக்கிறேன் ? [71-90] 13/09/2013

72. மோதிக்கு ஹிந்தியிலும் குஜராத்தியிலும் மட்டுமே சரியாகப் பேச முடியும். அவருக்குச் சரியான அமெரிக்க அல்லது ப்ரிட்டிஷ் உச்சரிப்புடன் ஸ்பஷ்டமான ஆங்கிலம் பேச வராது. ஆர் எழுத்தை ஆஆற்ற்ற் என்று தான் சொல்ல முடியுமே தவிர ஆழ்ழ்ழ்ழ் என்றெல்லாம் நாக்கை உருட்டி அவரால் உச்சரிக்கவே முடியாது. மேலும், அவருக்குத் தமிழ் பேச வரவேவராது. சும்மா தட்டுத் தடுமாறி, துக்ளக் சோ கூட்டங்களில் வனக்கம்  என்று சொல்ல முடிவதோடு சரி – அவருக்கு என்னவோ, தாம் திராவிடக் கொளுந்துகல் நட்தும் தொளைக்காள்சி அளைவர்சை இனைப்பாலர் எண்ரு நெனப்போ?? டமிளே சர்யா ஒச்றிக்க முட்யாதூ இந்த ஆள்க்கு…

எப்படியென்று கேட்கிறீர்களா?

இப்படித்தான்:

எவ்வளவு கரிசனம் இந்த அம்மணிக்கு... நன்றி பத்ரி, உங்களுடைய அழகான கிண்டலுக்கு... (ஆனால் பாவம், இதை வெகு ஸீரியஸாக எடுத்துக் கொண்டு யாராவது உங்களிடம் கோபித்துக் கொண்டு, ராகுல் காந்திக்கு கஞ்சி லிபி தெரியும் என்று எவனாவது ஜப்பான்காரன் சொல்கிறான் என்று வந்து விடுவார்கள், ஜாக்கிரதை!

எவ்வளவு கரிசனம்  இந்த அம்மணிக்கு… நன்றி பத்ரி, உங்களுடைய அழகான கிண்டலுக்கு… (ஆனால் பாவம், இதை வெகு ஸீரியஸாக எடுத்துக் கொண்டு யாராவது உங்களிடம் கோபித்துக் கொண்டு, இளவரசர் ராஹுல் காந்திக்கு காஞ்சி எழுத்துரு கூடத் தெரியும் என்று எவனாவது ஜப்பான்கார அரைகுறை சொல்கிறான் என்று சண்டைக்கு வந்து விடுவார்கள், ஜாக்கிரதை! (குறிப்பு: உத்தரப் பிரதேசத்தில் காலால் நடந்து குடிசைகளில் நுழைந்து ராஹுல் குடிக்காத கஞ்சியா?)

இந்த மால்வேர்களெல்லாம் என்ன புகைக்கிறார்கள் – வெறும் மரீஹ்வானாவையா அல்லது தூயச்சீன ஒபியத்தையா என்று புரியவேயில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும்.

இந்த மால்வேர் அம்மணி எழுதும் பிரச்சினை பற்றியெல்லாம், நேரில் அறிந்து  கொண்டா, நேரடி அனுபவம் கொண்டா, எந்தப் பிராந்தியத்தைப் பற்றி எழுதும் போதும், அந்த பிராந்திய மொழியைக் கற்றுக் கொண்டா எழுதுகிறார்?

ஒரு தொடர்புமில்லாமல், புரிதலுமில்லாமல் என்ன குப்பைக் குறுஞ்செய்தியுதிர்த்தலோ! என்ன பத்திரிக்கையோ என்ன எழவு பத்ரிகா தர்மமோ? கீச்சிக் கருத்துதிர்த்தல் என்ற பெயரில் என்ன கூச்சமில்லாத கடைந்தெடுத்த அயோக்கியத் தனமோ — எல்லாம் அந்த மவுன்ட்ரோட் மஹாவிஷ்ணுவுக்கே வெளிச்சம்!

It’s notable that Malware  who wants to write about developmental issues in this multilingual country, writes only in English. How does she hope to have all-India appeal – that too in a Notional Noosepepper?

I know, I know — we Indians are basically stupid idiots and look up to riffraff for intellectual guidance. Simple, eh?

பின்குறிப்பு: நான் இனிமேல் எந்த விஷயத்தையும் கிண்டலாகவே எழுதப் போவதில்லை. ஏனெனில், நான் படு கேவலமாகக் கற்பனை செய்து எழுதுவதையெல்லாம் இந்த மெக்காலே ஆங்கிலவழி அற்பக்கல்வியைப் பெற்ற அரைகுறை அயோக்கிய அறிவுஜீவிகள், காப்பியடிப்பது மட்டுமல்லாமல் படு மோசக் கேவலமாக அப்படியே உண்மையில் நடத்தியும் காட்டிவிடுகிறார்கள், இழவெடுத்தவர்கள்… ச்ச்சீய்… இதைக் கேட்பாரில்லையா!

எனக்கு வெறுத்து  விட்டது.

தொடர்புள்ள பக்கம்:

 

6 Responses to “நரேந்த்ர மோதியும், மாலினி பார்த்தசாரதி எனும் பன்மொழிப் புலவியும்”

  1. surya Says:

    shocking to know that even people of such calibre are also naive.

    • ramasami Says:

      Dear ‘Surya,’

      These people are NEITHER naive NOR have calibre, in my NOT so humble an opinion.

      Imagine a guy like our great Kamaraj – these public intellectuals cannot stomach him.

      Such is the venom of the ‘english educated’ coconut urban elite.

      I have some choicest expletives and adjectives to describe such scum – but EVEN an uncouth fellow like yours truly, cannot utter them.

      __r.

  2. A.seshagiri Says:

    மதிப்பிற்குரிய ராமசாமி அவர்களுக்கு,

    நீண்ட நாள் ‘தி ஹிந்து’ வின் வாசகன் என்ற முறையில் இந்த அம்மையாரின் ஒருதலைபட்சமான கட்டுரைகளை நிறைய படித்து வந்திருக்கிறேன். யாராவது ஒருவர் இந்த பூனைக்கு மணி கட்டவேண்டும் என நினைத்தேன்,நீங்கள் சிறியதாக ஆரம்பித்து இருக்கறீர்கள்.ஆனால் ஒரு விசயம் இவர் குஜராத் மாநில தேர்தலுக்கு முன்னால் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கட்டுரை எழுதி ஹேஸ்யம் கூறுவார்.தேர்தல் முடிவுகள் அதற்கு மாறாக இருக்கும்.மோதிக்கும் அவருக்கும் அப்படி ஒரு ராசி!.
    த “அன்டி”ஹிந்து’ வை சொடுக்கினால் “Page not found” என்று வருகிறது .அதை கொஞ்சம் சரி செய்யுங்கள் அதில் உள்ள கட்டுரையை படிக்க ஆவலாக உள்ளது

  3. க்ருஷ்ணகுமார் Says:

    Hail sicularism!!!!!!


  4. இவர்கள் “The Hindu Centre for Politics and Public Policy” என்ற ஒரு அமைப்பையும் துவங்கியுள்ளார்கள். ( ஒரு தி ஹிந்து போதாது என்று அதற்க்கு ஒரு குட்டி வேறு). ரோமில்லா தப்பார், ராமச்சந்திர குஹா முதலான பலருக்கும் வாழ்வளித்தவர்கள் இவர்கள். மேலும் இவர்கள் எல்லை மீறிய தேசபக்தி உடையவர்கள். ஆம். அவர்கள் தேசபக்தி இந்திய எல்லையைத் தாண்டித்தான் துவங்கும்..

  5. aegan red Says:

    தி இந்து இல்லை தி anti இந்து.(சரியான பெயரை வழங்கிய ஒத்திசைவு ராமசாமியாருக்கு நன்றி)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s