வெறுத்துப்போன (அக்கால சுபவீ,  அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!

அய்யோ! அவருடைய நெடுங்கால நண்பர்களே சுபவீயைக் கைகழுவி விட்டார்களே! பாவம், சுபவீ. :-(

ஆதாரம்:
Read the rest of this entry »

#பெரியார்புதைந்தமண்ணுக்கு ஜே!  இவ்வரிசையின் முந்தைய பகுதி = (1/n)

பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா  தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(

இனி இரண்டாம் பகுதி…

-0-0-0-0-0-0-0-

Read the rest of this entry »

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

Read the rest of this entry »

பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப்  போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை!  இவை  கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
Screenshot from 2015-04-08 21:52:07தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:

அது கர்ட் மக்கள் திரள்கள்,  தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி​-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான். Read the rest of this entry »

நீல்ஸ் ஹென்ரிக் டேவிட்  போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.

இன்று அவருடைய பிறந்தநாள். :-)

Read the rest of this entry »

Even after more than some 180 bloody  years, the Macaulay’s legacy happily and sordidly lives on in India – what with the mushrooming ‘English Medium’ schools all over our Indusland and ‘Cambridge / Oxford / Berkeley / MIT / etc affilicted Royal Concorde[1] Internotional Public Residential type ‘school’ entities, promising the clueless parents of ultimate deliverance of their hapless and rather sad & stymied children…

Yeah!  HotAir -welcomes – you – on – board – flight – 911 – to – touts’ universities -where else -but-in-USA – please – fasten – your – seatbelts, we-are-ready- to-take-off – what? -don’t – you – know – we – have – two – swimming – pools – and – provide – horse – riding – training – also – conduct – meditation yoga – classes – suit coat blazer ties caps shoes must – we ‘accent-neutralize’ your children’s – speech – so – they – sound – like -yankees – when – they – visit – the – localmalls – in – hordes – and – wear -polo – caps – with – their – bills – turned – sidewards – yeah – they – FightJEE too! So we all can then, happily die ever after! Yippee!!
Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

இவ்வரிசையின் முதற்பகுதி: அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)

அக அவர்களின் தேவையேயற்ற நிந்தனை குறித்த, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்துகளைக் குறித்த உரத்த சிந்தனை தொடர்கிறது, பாவம், இதைப் படிக்கும் நீங்கள்…

சரி; இது இரண்டாம் பகுதி: 2/n.

Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான – சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜேஜே: சில குறிப்புகள் எனும் புதினத்திலிருந்து:
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)

எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம்,  குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை  சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.

Read the rest of this entry »

ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார்.  ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.

Read the rest of this entry »

அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும்  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-) Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

Read the rest of this entry »

ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள்,  ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.

இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!

சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர்  அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.  ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (5/n) என்றறிக.

இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.

…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
Read the rest of this entry »

இவ்வரிசையின் முதற்பகுதி: குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)

அப்பகுதியின் முடிவில் இப்படியொரு கேள்வியெழவைக் கேட்டு முடிந்திருந்தேன்: ஸ்பெஷல்மஸாலா குசு விடுவது எப்படி?

அதற்குப் பதில் … இப்படித்தான்: http://www.vinavu.com/2015/07/29/what-abdul-kalam-failed-to-speak-about-cartoon/

‘ஆ’ என்பவர்கள் வினவுக் கூவான்கள் போன்றவர்கள். இவர்களின் அற்பத்தனத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்லையே இல்லை!

ஆக்கபூர்வமாக ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாமல் போனாலும், சொகுசாக உட்கார்ந்துகொண்டு குமாஸ்தாத்தனமாக சொகுசுக்களை விட்டேற்றியாக விட்டுக்கொண்டே இருப்பார்கள், இந்தப் பதர்கள்…

-0-0-0-0-0-0-

அப்துல்கலாம் அவர்களின்மீதான தூற்றல்களிலேயே மிக மோசமானது – என்னுடைய செல்ல வுடன்பெறப்பாரும், சொகுசுத்தீவிரவாதியுமான யுவகிருஷ்ணாவுடையதுதான். ஏனெனில், அடிப்படையில் அற்பர்களால், தரமற்றவர்களால் காரியப்புகழ்ச்சி செய்யப்படும் சோதனைதான் உலகிலேயே தாங்கொணா ஒன்று.

Read the rest of this entry »

பயப்படாதீர்கள்.

இது அஞ்சலியல்ல. ஏற்கனவே – என் தாயார் கடந்த இரண்டு நாட்களாக, வரைமுறையே இல்லாமல் அப்துல்கலாம் புகழ் பாடிப்பாடியே, அவருக்குப் பதில் என்னுடைய உயிர் போயிருக்கக்கூடாதா, எனக்கும் 78 வயதாகிவிட்டதே, மஹான் போய்விட்டாரே – எனத் தொடர்ந்து கழுத்தை அறுத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு இந்தத் தொல்லையைத் தாங்க முடியவில்லை.  ஆகவே.

ஆனால் – என்னுடைய இருவேறு நண்பர்கள் எனக்கு அனுப்பியுள்ள செய்திகளிலிருந்து (அனுப்பியவர்களின் நம்பகத் தன்மையைக் கருதி) கீழ்கண்டவைகளைக் கொடுக்கிறேன்…

Read the rest of this entry »

இந்த  (இந்தியா – சமூகம் – இஸ்லாம் – முஸ்லீம் – நான்: சில குறிப்புகள்) வரிசையின் முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி. இது நான்காம் பகுதி. இந்த வரிசையில் இன்னமும் இரண்டு பதிவுகள் வரலாம்.

சரி. எனக்கு இதுவரை கிடைத்துள்ள செறிவான அனுபவங்களில் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் எழுதலாமென எண்ணம்.

Read the rest of this entry »

(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)

Read the rest of this entry »