கருணாநிதி அவர்களின் புத்தம்புதிய ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ வியாக்கியானம்!

September 5, 2015

ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார்.  ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.

சரி. திமுக தொடர்புள்ள  ஏதோ கசமுசாக்கள் அண்மையில் (டிகேஎஸ் இளங்கோவன், முக அழகிரி பேட்டிகள்) நடந்துள்ளன என்பதை எம் தலைவர் அவர்களின் ஒரு அறிக்கையால் தெரிந்துகொண்டு புளகாங்கிதம் அடைந்தேன். அதுமட்டுமல்ல, அந்த அறிக்கையில் கீழ்கண்ட மாணிக்கமும் இருந்ததை அறிந்துகொண்டு மகாமகோ இறும்பூதையும் அடைந்தேன்!

Screenshot from 2015-09-05 22:37:34
ஏனென்றால், கட்டுப்பாடு இருந்தால் எல்லோரும் சேர்ந்து கண்ணியம் தவறிக்கூட நடக்கலாம். இது பெரியாருடைய வியாக்கியானம். கடமைகூட தவறி விடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் எவனும் எதுவும் செய்ய முடியாது.

அதாவது, எம் தலைவர் என்ன சொல்கிறார் என்பதை ஒரு எடுத்துக்காட்டின்/சாத்தியக்கூறின் மூலம் விளக்கமுடியுமானால்:

தமிழ் நாட்டுப் பெண்களைக் கண்ட இடத்திலெல்லாம் திராவிடர்கள் கட்டுப்பாட்டுடன் கூட்டு-பாலியல் பலாத்காரம் (கேங்க்-ரேப், gang rape)  செய்வது திராவிடத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. ஏனெனில், இதில் மானுடக் கடமை தவறுகிறது, கண்ணியம் துளிக்கூட இல்லை – ஆனால் லும்பன்களின் கட்டுப்பாடு மட்டும் இருக்கிறது!

அதாவது – இதனைக் கட்டுப்பாட்டுடன், அனைத்து திராவிடர்களும் ஒருங்கிணைந்து செய்தால் (அவர்கள் செய்திருப்பவர்கள், செய்யக்கூடியவர்கள்தான்!)  ‘எவன் என்ன செய்யமுடியும்’ என்ற பார்வைதான் இதில் இருக்கிறது!

இதுதாண்டா திராவிடம்!

இதெல்லாம் ஒரு கொள்கை, இப்படியெல்லாம் ஒரு அறிக்கை!

உண்மையிலேயே, இந்த திராவிட இயக்கங்களின் குஞ்சாமணிகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் தமிழகத்தைப் பார்த்தால், எனக்குத் தொடர்ந்த  மாளா ஆச்சரியம்தான்! :-(

-0-0-0-0-0-0-

மேற்கண்ட அறிக்கையை முழுவதுமாகப் படிக்க: தி.மு.க. தோழர்களே, தந்தை பெரியார் சொன்ன அந்தக் கட்டுப்பாட்டை மறவாதீர்! தி.மு.க. தலைவர் கலைஞர் உருக்கமான அறிக்கை

தொடர்புள்ள திராவிட எதிர்ப்பக்கங்கள்: திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)

2 Responses to “கருணாநிதி அவர்களின் புத்தம்புதிய ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ வியாக்கியானம்!”

  1. Bala Says:

    Sir, The link to viduthalai page is broken. Looks like they have removed it. Is there a way to retrieve it from any known archive to you.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s