Dravidian Progress: From Dyslexia to Disclessia and then… proudly marching on to Dicklessia! (part 1/2)
April 9, 2014
Foreword: ummm… if you HAD to listen to an old, depleted guy for TWO whole BLOODY hours, extolling the virtues of LEMURIA and the virtuousness of DRAVIDAM ad nauseam, repeating that, Tamilnadu is where it is – all developed, progressive and beautiful – only because of the Dravidian movement and on and on and on…. even an otherwise sane(!) person like me would become an extremely ill-puttogether polemicist, even by my very own bloody standards!
Well, that’s what has happened to me, atleast. And, the fact that this old man is actually well read otherwise and scholarly and is sane, is all the more galling!
Yes. I am of the firm & considered opinion and conviction that, Tamilnadu is where it is now – not BECAUSE of the Dravidian movement – but, IN SPITE of the Dravidian movement. Got it, old man? It is in, whatever that is left of its basic genius, that the Tamil people have gotten some sustenance from, and not from some thieving, idiocy propagating mobs, got it?
Warning: Dear reader of this post, If you seriously believe that the idea of Dravidianism has done any good to my dear Tamilnadu, you should not proceed any further; reading this post would be dangerous to your health. Go back to the hell-hole from which you surfaced for Oxygen. This is PG45 stuff, and is not meant for Twitter trolling adolescents. Period.
Okay. You have been warned enough; read on the rest of the post, if you must; but, don’t squeal rather pathetically, later — got it? Read the rest of this entry »
மோதி, நிர்வாகத் திறமை: சில குறிப்புகள்
April 5, 2014
சில நாட்கள் முன்பு, குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருடன் (தனித்தனியாக), குஜராத்தின் குணோத்ஸவ் திட்ட விவரங்கள் விஷயமாக அளவளாவிக் கொண்டிருந்தேன். இவர்களைப் பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இவர்கள் நேரடியாக மோதி அவர்களின் கீழ் (முதல் அடுக்கு அல்ல – ஒரு தட்டு கீழே) பணிபுரிந்துகொண்டிருக்கும் மூத்த, நேர்மையாள அதிகாரிகள்; கூழைக் கும்பிடு போடுபவர்களோ, சமயம் வாய்த்தபோதெல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று அசடும் கயமையும் வழிய ‘பூச்செண்டு’ கொடுப்பவர்களும் அல்லர். நல்ல பரவலான படிப்பும், செறிவான அனுபவங்களும், செயலூக்கமும் உடையவர்கள். நான் மதிப்பவர்கள்.
பேச்சு மெதுவாக நிர்வாகம் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது; நாங்கள், பொதுவாக, அதிகார வர்க்கம் எப்படி நிர்வாகத்தை அணுகும், அதன் பயிற்சி முறை அதனை எப்படிச் செயல்பட ஊக்குவிக்கும், அதற்கும் அரசியல்/அரசு தலைமைக்கும் இருக்கும் உறவுகள், நடைமுறை எதார்த்தங்கள் எப்படிப்பட்டவை, வளர்ச்சிப் பாதைகளின் ஊக்குவிப்பான்கள் & அடைப்பான்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதின் அங்கங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தோம் – இந்தப் பின்புலத்தில் மோதி அவர்களின் நிர்வாகம் குறித்த பார்வைகளையும் கொஞ்சம் விவாதித்தோம்.
இந்த அளவளாவல்களிலிருந்தும், என் அனுபவங்களிலிருந்தும் சில குறிப்புகள்: Read the rest of this entry »
தமிழ்நாடு vs குஜராத் வளர்ச்சி ‘மாடெல்’, மோதி… …: சில தன்னிலை விளக்கங்கள், குறிப்புகள்
March 31, 2014
… இதெல்லாம் தேவையா என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)
உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் – உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …
சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.
இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.
“மோதி-யின் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்ததில் நாங்கள் பார்த்ததெல்லாம் ரோட்டோர ஒண்ணுக்கடிப்பாளர்களைத்தான்!”
March 29, 2014
:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!
-0-0-0-0-0-0-0-
நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.
ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.
இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்) Read the rest of this entry »
adam osborne: the idea of (NRI) indianness
March 28, 2014
This post continues from – adam osborne, the pc pioneer, ‘vellakkaara thamizhan’ – the man… (27/03/2014)
I assure you – there is no jingoism here. There is no suggestion of an empty glorification of the past. Just a few pertinent and plain questions – to make us think. That’s all.
There is only a suggestion of a reasonable pride about relevant parts in our history, our collective pasts and the present – and most importantly, stressing on Quality rather than a mindless statistic of a Quantity… Of course, there are certain parts of our shared histories that we need to introspect on too! We have to take corrective measures, of course, of course!
Oh, well.
Yeah. On to the unknown or, much known. I have personally met quite a few of our NRIs (non resident Indians) and RNIs (resident non Indians) – and I am sure, you too may have bumped into such induhviduals – who have these kinds of attitudes. Adam Osborne has had some scathing observations on these folks.
” A people which takes no pride in the noble achievements of remote ancestors will never achieve anything worthy to be remembered with pride by remote descendants. “
– Macaulay.
How long do we hold on to the coat-tails of the likes of Thomas Babington Macaulay? May be, this too shall pass?
Anyway – here goes, the text of Adam’s April 1991 DataQuest article: (23 solid years have gone by, but this reflection is still relevant – I frankly do not know whether to laugh it off or merely shrug my shoulders…)
” The most valuable thing you can make is a mistake – you can’t learn anything from being perfect. “
– Adam Osborne (1939 – 2003)
I do not know how many of us 45+ folks remember Adam, I mean THE Adam.
Perhaps not many. Our memories are short. Our capabilities in respect of studying, mapping, assimilating and knowing in breadth and depth — the details and mappings of any idea or a concept – are rather shallow. We are designed from the beginning to be lusers, Dravidian lusers. We offset our incredible lack of scholarship by manufacturing random histories (such as Aryan invasion or Dravidian superiority theories) and random geographies (such as Lemuria or Kumari-k-Kandam, if you will).
Otherwise, what would be preventing us from celebrating the memories of such a personality? I am not talking about a random Robert Caldwell or a randomer Constantine ‘Veeramaamuniver’ Beschi here – am referring to a fantastic individual, who lived in our midst – after making epochal contributions to the spread of the cult of the portable computer.
But then, am digressing, as is my wont.
Of course, the reason why I am rejiggling my fading memories is that – Adam Osborne, the man, one of my boyhood heroes, moved on – just about 11 years back, after living for so many years in India — on 18th March, 2003 – in our good ol’ Kodaikanal, Tamilnadu.
Snuffed out. Unsung. Unheard of. PBUH.
… … … Having been lost in a dazed reverie, I have been thinking about him for the past few days and just thought I would share a thing or two about this fine man…
இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பில் மோதி போன்றவொருவர் இயங்கவேண்டியது, ஏன் மிக மிக முக்கியம்?
March 24, 2014
… ஏனெனில், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இயங்க வேண்டும். அதுவும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டின் மேன்மைக்கான தொலைநோக்குத் திட்டங்களை வடித்தெடுத்து, சமரசங்களின் மூலமாக, தேவையற்ற தயவுதாட்சணியம் இல்லாமல் – நம்மை முன்னோக்கி, தற்சார்புக்கும் தன்னிறைவுக்கும் இட்டுச் செல்லவேண்டும். இவற்றை விட முக்கியமாக நம்முடைய சுய நம்பிக்கையை, தைரியத்தை, குடிமைப்பண்பை வளர்க்க வேண்டும். அவநம்பிக்கை வாதிகளை, ‘என்னத்த செஞ்சி, என்னத்த பண்ணி…‘வாதிகளை வாயடைக்கச் செய்யவேண்டும்.
மேலதிகமாக – இவை கசக்கும் உண்மைகளாக இருந்தாலும் – ஏற்கனவே பல பத்துவருடங்களை, நாம் பிச்சைமுதல்வாத கப்பரையாண்டி அரசியல் போக்குகளால், தொழில்முனைவுகளுக்கு-தொழில்வளர்ச்சிக்கு எதிரான மகாமகோ ஊழல் நடைமுறைகளால், கொடுக்கவேண்டிய மரியாதையை தரத்துக்கும் கொடுக்காமையால், நம்பகத்தன்மை மறுபடியும் மறுபடியும் சுழன்றுச் சுழன்றுக் கீழ் நோக்கிச் சென்றபடியே இருத்தலால், முட்டியடி மட்டுமேயான அரசதிகார எதிர்வினைகளால், பெருகுடும்பக் கோமாளிக் கோமான்களால் – தொலைத்து விட்டோம். ஆக, இவற்றுக்கும் எதிராகப் போராடி – நம் பாரம்பரிய குணாதிசியங்களை மீட்க வேண்டும்…
என் பார்வையில் தற்கால அரசியல் சூழலில் – இக்குறைகளையெல்லாம் சரிசெய்யக் கூடியவராக, குறைந்த பட்சம் அதற்கு முனையக் கூடியவராக – அவர் கட்சியிலேயே அவருக்கிருந்த (=இருக்கும்) போட்டிகளையும், சவால்களையும் நேரடியாக ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டவராக, மோதி மட்டும் தான் இருக்கிறார். Read the rest of this entry »
கருணாநிதி: “ஏன், நான் இந்தியப்பிரதமர் ஆகிடக் கூடாதா?”
March 19, 2014
இக்காலங்களில், எனக்கு மிக மிக வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர் சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம், சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.
அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.
கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம் “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத் தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம் போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?
“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?
… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது. Read the rest of this entry »
அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள்
March 16, 2014
நண்பர் ஒருவர் (=ஆங்கிலோதமிழர் – இவர், தமிழ்வழிக்கல்வி படித்து ஒருகாலத்தில் தமிழனாக இருந்தாலும், எனக்கு ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதுவார்; இப்போதெல்லாம், தமிழில் படிக்க மட்டும்தான் முடியும் இவருக்கு – சுட்டுப்போட்டாலும், திட்டினாலும் தமிழில் ஒரு வரிகூட கோர்வையாக எழுதமுடியாத பரிதாப நிலையிலிருப்பவர்; பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல், அந்த அமெரிக்காவில் (= ‘ஸ்டேட்ஸ்!’) வேறு வசித்துக்கொண்டிருக்கும் கையறு நிலையில் இருப்பவர்; கடந்த சுமார் 25 வருடங்களாக, கொஞ்சம்கூடச் சளைக்கவே சளைக்காமல் ‘கண்டிப்பாக அடுத்த வருடம் இந்தியா திரும்பி வந்து காவிரிக்கரையோரம் வயல்வெளிக்கு நடுவே ஒரு அழகான குடிசையில்’ ஸெட்டில் ஆகிக் கொண்டிருப்பவர்; பாவம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பலவிதமான தீராப் பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள், ஹ்ம்ம்ம்…) அழகான இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் (என் பதிவைப் படித்துவிட்டு), எழுதியிருக்கிறார்:
“பரீக்ஷா ஞாநி காமாலைக் கண்ணர் அல்லர். அவர் நேர்மையைச் சந்தேகித்தால் காமாலையில்தான் போவாய்! அவர் எழுத்தில் என்ன அப்படித் தவற்றைக் கண்டாய்? Read the rest of this entry »
காங்க்ரெஸ் கட்சியின் ராஹுல் காந்தி அவர்கள், நம்பவே முடியாத பினாத்தல்முதல்வாதத் தீவிரவாதித்தனமாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருக்கிறார் – காந்திஜியைக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பினரென்று…
இந்தப் போக்கு ஒன்றும் புதிதில்லைதான். பல பத்தாண்டுகளாக இடதுசாரிகளிலிருந்து, சாய்வு நாற்காலிவாதிகள் வரை — இன்னும் கீழ்த்தரத்துக்குப் போனால், அறிவுஜீவிகளிலிருந்து தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் வரை — இன்னமும் தராதரத்தில் அதல பாதாளத்துக்குப் போனால் — பொதுவாகவே காந்தியைக் காந்தியார் என வர்ணித்து அவரைக் காமாந்தகர், ஜாதிவெறியர் என வசை பாடும் அயோக்கிய திராவிடக் கொழுந்துகளும் கூட, திடீரென்று அல்லது அவ்வப்போது காந்தியின் மேல் காரியார்த்தமான அன்புவெறி வந்து – ‘ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர்கள்’ தான் காந்தியாரைக் கொலை செய்த மகாபாவிகள் எனப் பேசுவதென்பது சாதாரணமாக நடக்கும் விஷ(ய)ம் தான்!
ஆனாலும், தேர்தல் ஜுரவேகத்தில், பாஜக-வை எப்படியாவது வீழ்த்தவேண்டும், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என அலையாய் அலையும் அற்ப அல்லக்கைகளுக்கு, மறுபடியும் மறுபடியும் பழம்பொய்களை மறுசுற்றுக்கு விடுவதில் எவ்வளவு ஆனந்தம் – என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே! Read the rest of this entry »
(அல்லது) ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட, பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?
மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள், தொடர்ந்து மறுபடியும், மறுபடியும் பரப்பப் படுவதற்கு – இந்த தேங்காய்முதல்வாத ஊடகங்கள் / ஊடகக்காரர்கள்தாம் இதற்கு முழுமுதல் காரணம்.
இந்த உதிரிகளுக்குப் பின்புலத்தில் ‘கொள்கைக் கூட்டணி’ வைத்து அணி திரண்டிருக்கும் தொழில்முறை இடதுசாரி அறிவுஜீவிகளும், மனிதவுரிமைக் காரர்களும், ‘எப்படா அடுத்த போராட்டத்தை நடத்தி தொலைக்காட்சியில் தென்படலாம்’ என போங்காட்டம் ஆடும் போராளிகளும், அரைகுறை தட்டச்சு வீரர்களும், சாய்வு நாற்காலிப் பேரறிஞர்களும் – இன்னொரு காரணம்.
சரி, இந்த தேங்காய்முதல்வாத ஆட்கள் என்பவர்கள் யார்?
கருணாநிதியும் கத்தரிக்காயும்…
March 5, 2014
… இப்படியாகத்தானே, கருணாநிதி அவர்கள் உபயத்தில் கத்தரிக்காய் விளைந்தது… :-)
-0-0-0-0-0-0-
2009 மே மாதம். அச்சமயம் நான், என் குடும்பத்தினருடன் எங்களுடைய நெடுநாள் குடும்ப நண்பன் ஒருவனுடைய வீட்டில் தங்கியிருந்தேன் – இந்த வீடு சேலம் மாவட்டத்தின் மலைப் பிராந்தியங்கள் ஒன்றில் ஒரு குக்கோதிகுக் கிராமத்தில் இருக்கிறது. நண்பனின் அடுத்தவீட்டுக்காரர் சுமார் ஒரு கிமீ தள்ளி. ஆக – அழகும் அமைதியும் உள்ள பிரதேசம். இரவுகளில் மகாமகோ கும்மிருட்டு. நமக்கே கேட்கும் நம் இதயத்தின் துடிப்பு. கொசுவே இல்லை. இனிது இனிது ஏகாந்தமினிதுதான்… (1999 வாக்கில் இவன் அப்பகுதியில் குடியேறினாலும், 2007ல் தான் இவன் வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடைத்தது என நினைவு)
… விடிகாலையில் ஆரம்பிக்கும் பேச்சு. காலைக்குளிரில் (மேமாதத்திலும் கூட!) அண்மையில் உள்ள சிறு குன்றின்மீது உட்கார்ந்துகொண்டு சூர்யோதயத்துக்காக காத்திருந்து கொண்டு, கட்டங்காப்பி பருகுதல்; பேச்சு; கொஞ்சம் தோட்டவேலை; பேச்சு; பின்புலத்தில் தேர்ந்தேடுத்த ஜாஸ் இசை அல்லது கலாபினி கொம்கலி தரப் பாடகர்கள். விறகு அடுப்பில் எளிமையான ஆனால் மிகச் சுவையான கூட்டுச் சமையல்; துணிதுவைத்தல்; பேச்சு. பாத்திரம் கழுவுதல்; பேச்சு—; பேச்சு. —; பேச்சு… —; பேச்சு… —; பேச்சு… மதியம் சுமார் 3 மணி நேரம் பிடித்த புத்தக வாசிப்பு. மாலையில் நீண்ட நடைபயணம். பின் மறுபடியும் குன்றின் உச்சியிலிருந்து சூர்யாஸ்தமனம் பார்த்தல் (கையில் தேனீர்க் குடுவையுடன்); குளித்துவிட்டு இரவுணவு, சுத்தம் செய்தல். பின்னர் இருகுடும்பத்துக் குழந்தைகளும் போட்டுக்காட்டும் நாடகங்கள், படிக்கும் கவிதைகள், கதைகள் இன்னபிற போன்றவை. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு நல்ல படம். ஆக ஒரு அந்த்ரெய் தார்கோவ்ஸ்கி / டெப்ரா க்ரானிக் / குரஸாவா அகிரா / ரிச்சர்ட் லின்க்லேடர் / ரித்விக் கடக் / பால் தாமஸ் ஆன்டர்ஸன் / ஆந்த்ரே வய்தா / இங்க்மர் பெர்ன்மன் படம்… பத்துமணிக்கு மேல் நட்சத்திரங்கள், ஆகாஷகங்கை (பால்வழிப் பாதை) தரிசனம். அன்றைய கேல் கதம். Read the rest of this entry »
online social activism for dummies
March 4, 2014
Silly…
It is very easy-peasy to become an activist (of social or anti-social issues) these days. Hallelujah, hallelujah!! All of us wannabe social activists have never had it oh so good!
In fact, this post is about ‘social activism’ that I actually learnt from an illustrious parent of one of my children… believe me! I am telling you the unvarnished truth – and unfortunately, for various reasons this parent (or parents) shall remain unnamed, sorry.
Oh, well.
To help you lazy fellows (I mean you – the unfortunate reader of this oh so very pathetic weblog), I have presented five levels of social activism, after a whole lot of painstaking research and lucubration. And, I sincerely hope that you would profusely thank me and flood my mailbox & the comments area with a zillion thankyou, thankyou kind of mushy notes, oh the hope!
Okay – onto the details of the FIVE levels: Read the rest of this entry »
இதுதாண்டா மாவோயிஸம்! :-(
March 2, 2014
… இன்றோடு நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர், நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க முடியும்?
(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன் நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)
ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.
ஏனெனில் — மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.
ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.
ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள் ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.
malcolm gladwell = the capital punishment :-(
February 28, 2014
The Sweeping Generalissimo strikes again! Oh mommeeeee!!! (or) Oh Gladwell, what a sad sickness! (or) there is absolutely NO reprieve, sorry.
The problem with some kinds of popular science writing is that, well, they are written to be popular with the people who want to be popular – which they do by being seen with the book. It is of course, a wince-wince situation. The best-selling author and the ‘best-seller buying readers‘ both enjoy the reflected glories of the symbiotic relationship.
I understand that these kinds of work always aim at the Minimum Common Denominator – the likes of the uncritical, all accepting fans of Oprah Winfrey (the Grand ol’ Ma’am of moralization & mediocrity) and Rahul Gandhi (the Grand Duke of terrible, terrible snafus) & Arvind Kejriwal (the Chief Propagandist of preachy middle-class morality and middle-classy vicarious rabble rousing). But, still…
Yes. This Malcolm veX, reminds me of another of those sweeping theorists who grandly generalize based on exactly one single rather lonely data point or even less, if they could help it.
Yes, you are verrrry corrrrect… immediately, the image of The Jared Diamond floats up, claiming his inherent right to be the Grand Duke of the Great hall of Grandiose theorists – but then, it would be kinda jarring to bring up this rather pricey carbon allotrope, so I choose to desist from dealing with this man… I merely gnash my teeth, for the time being. Oh my GAWD! Read the rest of this entry »
இவ்வளவு விலாவாரியாக எழுதுகிறாயே, நீ தமிழகத்திற்காக என்ன பெரிதாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
February 23, 2014
… … தமிழகத்தில் ஒன்றுமே சரியில்லையா என்ன, என பாவப்பட்ட வாசகராகிய நீங்கள் கேட்க உரிமை இருக்கிறது – குறைந்த பட்சம் இந்த மகாமகோநீளக் கட்டுரையைக் கேட்டு வாங்கிய (ஆனால் பதிக்காத) பத்ரி சேஷாத்ரிக்கு இந்த உரிமை இருக்கிறது.
எனக்கும் பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது எனவும் தோன்றுகிறது. ஆகவே.
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (24/n)
நம் தமிழ்ச்சமூகத்தில், தமிழைக் கூறுபோடும் நல்லுலகத்தில், ஆயிரம் விஷயங்கள் அருவருக்கத்தக்கவையாக இருந்தாலும், பல விஷயங்கள் எவருமே (நானுமே கூட! ஆச்சரியம், ஆச்சரியம்!!) பெருமைப்படக் கூடியவைகளாகவும் இருக்கின்றன.
ஆனால் பத்ரி கேட்ட கேள்விகளுக்கு, தொடர் கட்டுரையின் பாடுபொருட்களுக்கு, இவற்றைப் பற்றிப் பேசுவது ஒத்து வராது. ஆகவே மன்னிக்கவும்.
பதில் கிடைத்ததா? சரி.
கிடைக்கவில்லையா, அதுவும் சரியே.
இருப்பினும் நான் செய்துகொண்டிருப்பதை, ஏன் செய்கிறேன் என்பதைச் சிறிதாவது விளக்கவேண்டும் எனத் தோன்றுகிறது .
ஆக, என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே சொல்கிறேன்:
சுமார் 20-25 வயது வரை ஒருவிதமான மேன்மைப்படுத்தப்பட்ட மன எழுச்சியும் அடையாத, தொழில் தர்மங்களை அறியாத, படிப்பறிவு பரவலாக இல்லாத, உரையாடும் பண்பற்ற, குடிமைப் பண்பு வளர்ச்சியே அடையாத தமிழ ஆணோ, பெண்ணோ — பின்னர் துரிதமாக இவ்வனைத்தையும் பெற்று அல்லது வளர்த்திக்கொண்டு பல்லாண்டு வாழ்வார்கள், தமிழகத்தையும் வாழவைப்பார்கள், நம்மை மேலெடுத்துச் செல்வார்கள் எனும் அதீத நம்பிக்கை எனக்கு அவ்வளவாக இல்லை. Read the rest of this entry »
பத்ரியின் விட்டுப்போன கேள்வி: [தமிழ்நாட்டு மாணவர்கள்] கோபமடையவே கூடாதா? (“… Should they not get angry at all?”)
(அல்லது) … தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (23/n)
அய்யா பத்ரி, இளைஞர்கள் / மாணவர்கள் கோபப்படலாம். படவேண்டும்தான். இந்த வயதில் ஒரு தார்மீகக் கோபம் இல்லாதவர்களுக்கு, எப்போதுமே அது வராதுதான். அவர்களுக்கு ஒரு வடிகால் தேவைதான். ஒப்புக் கொள்கிறேன்.
ஆக, அப்படிக் கோபப்படுபவர்களை, உடனடியாக ஏதாவது உருப்படியாக, உபயோககரமாக, ’ஸ்டூடென் ட் ப்ரொடெஸ்ட்’ அல்லாத, பணி செய்ய வேண்டும் என விரும்புபவர்களை – கீழ்க்கண்ட உடலுழைப்பு சார்ந்த பணிகள் செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஒரு பணியைச் செய்யவேண்டும் – நடுவில் விட்டு விட்டு ஓடி வரக்கூடாது. இது ஒரு கேளிக்கை உண்ணாவிரதமல்ல – சும்மனாச்சிக்கும் ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பது போல – என அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். (இதற்கு தமிழ் நாடு, இந்திய அரசுகள் ஸ்ரீலங்கா அரசிடம் விண்ணப்பித்து முறையாக அனுமதி பெறவேண்டும்; மேலும் இந்நடவடிக்கைகளால், சிங்களப் பொதுஜனங்களுக்கும் உதவி விளைவது போலத்தான் இருக்கவேண்டும்.)
சரி, தமிழ் நாட்டு மாணவர்கள் என்னதான் செய்யவேண்டும்?
February 20, 2014
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (22/n)
பத்ரி:விஷயங்கள்எல்லை மீறிப் போவதைப் பார்க்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் என்னதாம்செய்யவேண்டும்? அவர்கள் கோபமடையவே கூடாதா? அவர்கள் நன்றாகப் படித்து, நல்லமதிப்பெண் பெற்று ஒரு வேலையைத் தேடிக்கொண்டால் போதுமா? அவ்வளவுதானா? வேறொன்றுமில்லையா?? (“What should the Tamil Nadu students do at all – when they see things going all messy? Should they not get angry at all? Are they merely supposed to study well and get a degree and a job? That is it? Nothing more?”)
தமிழ் நாட்டு மாணவர்கள் ஈழப் பிரச்னையில் என்ன செய்யவேண்டும் என்றா கேட்கிறீர்கள், பத்ரி? உங்களுக்கு ஆனாலும் நகைச்சுவை உணர்ச்சி அதிகம்தான், போங்கள்!.
என்னைப் பொருத்தவரை – ‘கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் போவானா’ எனும் அதி அற்புத அனுபூதிப் பார்வையில் நிறைய எழுதியிருக்கிறேன். (கீழே சில பதிவுகளின் சுட்டிகள்)
- மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு 19/03/2013
- போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்
- மொதல்ல ஒங்க வகுப்பறைய பெருக்கிச் சுத்தம் பண்ணுங்கடா 06/04/2013
- ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ அல்லது முட்டை – இறந்த காலத்தின் நிகழ்காலக் குறிப்புக்கள் 08/07/2013
- ஹாஹ்ஹாவென்று எழுந்த ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ யுகப்புர்ச்சியின் ஒரு (ஒரேயொரு ?) சந்தோஷமான முடிவு! 06/01/2014
இருந்தாலும்… இப்போது இவர்களில் மிகப்பெரும்பாலோர் உடனடியாக ஒன்றும் (எதற்குமே, ஏன், தங்களுக்கேகூட!) உதவிகரமாகச் செய்யக்கூடிய நிலைமையில் இல்லை என்றாலும், இவர்கள் செய்யக்கூடியவை இவைபோல் இருக்கலாம் எனக் கருதுகிறேன். கிண்டலையும் நகைச்சுவையையும் முற்றிலும் தவிர்க்கிறேன். :-(
நான் கீழே கொடுத்திருக்கும் விஷயங்கள் (உண்மையில் தமிழ் இளைஞனுக்கு, அவன் வாழ்வு வளமையும் செறிவும் பெற என் கோரிக்கைகள் / பரிந்துரைகள்) – சுமார் இருபது வருடமுன்பு, ஒரு இந்திய இளைஞன், எப்படி இந்தியாவையும் தன்னையும் அறிந்துகொள்வது என சுமார் 40 பக்க விஸ்தீரணத்தில் நான் எழுதியிருந்த டெலெக்ஸ்நடை ஆங்கிலமூல ஆவணத்திலிருந்து கடன் பெறப்பட்டது. (ஆங்கில மூலம் தொலைந்துபோய்விட்டது; என் நினைவிலிருந்துதான் அதில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்களை எழுதுகிறேன்.) Read the rest of this entry »
தமிழகத் தமிழர்களாகிய (அல்லது திராவிடக் கட்சிகளாலாகிய) நாம், இந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்னதான் செய்யக்கூடும்?
February 19, 2014
… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (21/n)
முந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??)
பத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும்? போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா? போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும்? (“What should the civil society of Tamil Nadu do? Fight or do nothing? If fight, fight for what?”)
நம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.
ஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.
அ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்!)
ஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான் தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.) Read the rest of this entry »
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)
சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…
‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.
நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி, நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தரம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.
எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.
இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:
‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »


