திராவிடலைமாடல் தமிழக ஒன்றிய முதலையமைச்சர் இசுடாலிர், தேர்தல் விபப்ரச்சாரம் செய்யச் சென்ற இடமெலாம் செருப்பு…

April 8, 2024

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்?

1

கீழ்கண்ட மூன்று கதையாடல் கேள்விகளைத் தொடர்ந்து வைக்கிறார்கள் இசுடாலிரும் அவர்தம் அருமந்தப் புதல்வருமான உதைநிதி இசுடாலிரும்…

(ஸ்ரீமதிகள் தயாளுவாரும் துர்காவாரும் தத்தம் பெற்ற வயிற்றில் பிரண்டையைத் தான் கட்டிக்கொள்ளவேண்டும், பாவம்…)

அ. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

ஆ. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

இ. பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

இதேமாதிரிக் கேள்விகளை திராவிட ஜால்ரா அல்லக்கைச் சில்லறைகளான சிவாஜிகிருஷ்ணமூர்த்தி, பிடிஆர் பழனிவேல்ராஜன், டிஆர்பாலு, ஆஇராசா… கனிமொழி… டாக்டர்கிருஷ்ணசாமி ஈவிகேஎஸ்இளங்கோவன் செல்வம்பெறும்கூகை உட்பட வைக்கிறார்கள்.

ஏன் – இம்மாதிரி பொய்மைப் பிலாக்கணங்களை வைப்பவர்களில் இந்தியதேசியகாங்கிரஸ் கழகத்தின் காவல்சாத்தானான ராஹுல்காந்தியும், சீமான் போன்ற தமிழ்’இன’வெறி பெனாத்தல்வாதிகளும், கம்யூனிஸ்ட் உண்டிகுலுக்கிப் பிச்சைக்காரர்களும் அடங்குவர்.

ஒட்டுண்ணி ஒட்டுகேஜ் ஓட்டுகேஜ்வாதியான தொல்லைத்திருமாவளவளவளவன் போன்றவர்களும் தான், இந்தப் பொய்யர் கூட்டத்தில் ஸ்பெஷல் இடஒதுக்கீடு பெற்றவர்கள்.

பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கிறோமென்ற பெயரில், நம் இறையாண்மையைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் சனாதன தர்மம் எனும் ஹிந்து மதங்களின் பேரிலும் தொடர்ந்து, மிகக் கீழ்த்தரமாக இழிசொல் பேசுகிறார்கள்

…ஆனால் பதிலுக்கு, நம் பாரதீயர்களும், அப்படியில்லாவிட்டாலும் குறைந்தபட்சம் தேசப்பற்று கொண்டவர்களும் (அவர்களையே விடுங்கள் – உண்மையைப் பட்டவர்த்தனமாகப் பேசும் சொற்ப, தமிழ்க் கருத்துலகவாதிகள் உட்பட) பணிவாகவும் தர்க்கரீதியாகவும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

அவை சோகக்கதைகள்.

திராவிடன்களின் கேள்விகளின் உள்ளுறை அர்த்தங்களைப் புரிந்தே கொள்ளாமல் நேர்மையான பதில்களை அளிக்கிறார்கள் நம்மவர்கள்.

உண்மைகளைத் தொடர்ந்து பேசுகிறார்கள் இவர்கள், பாவம்! எவன் கேட்டான் உண்மைகளை? திராவிடன்களுக்கு அவையெல்லாம் தெரியாதா என்ன?

தர்க்கரீதியாக வாதங்களை அடுக்குகிறார்கள். நேர்படப் பேசுகிறார்கள்…இதெல்லாம் ப்ளடி தேவையா?

உண்மை நிலவரங்களை, பின்புலங்களை, புள்ளிவிவரங்களை விலாவாரியாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பலப்பல அடிப்படைக் கட்டுமானத் திட்டங்களானவையும் வாழ்வாதாரங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தை வந்தடைந்துள்ள விவரணைகளை அளிக்கிறார்கள், திராவிடன்களின் பொய்மைகளைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள், திரித்தல்களைத் தோலுரிக்கிறார்கள்.

தமிழகத்தை பாரதத்தின் மத்திய அரசு வஞ்சிக்கவேயில்லை – மாறாக, ஒரேயடியாகச் செல்லம் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என நிறுவுகிறார்கள். தமிழையும் தமிழகத்தையும் பாரதத் தலைவர்கள் நேசிப்பது மட்டுமல்லாமல், வெளிப்படையாகப் பலமுறை போற்றியிருக்கிறார்கள் என காத்திரமாகப் பேசுகிறார்கள்.

ஏனிப்படி இருக்கிறார்கள், நம்மவர்கள்?

எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. வருத்தமாக இருக்கிறது.

என்றுதான் உண்மைகள் தேவையாக இருந்திருக்கின்றன, இந்தத் திராவிடமாடலால் சீரழிந்த, வீழ்ந்த தமிழகத்தில், சொல்லுங்கள்?

திராவிடன்களின் பரிதாப உள்ளக் கிடக்கைகளையும் மனோவிகாரங்களையும் அற்பத்தனங்களையும் நம்மவர்கள் எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள், சொல்லுங்கள்?

என் பெருமதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உரிய இளம் அண்ணாமலை முதற்கொண்டு தமிழிசை சௌந்திரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், ஹெச்ராஜா, நாராயணன் திருப்பதி என ஆரம்பித்து லோக்கல் பாஜக-தேசிய ஆர்வலர் வரை அப்படியே வெள்ளந்திகளாக இருக்கிறார்கள்…

ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் பாவம், விமானப்போக்குவரத்து மேம்பாட்டுக்கான உடான் திட்டம் அதுஇது எனப் புள்ளிவிவரங்களினூடே உண்மைகளைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்குத் தெரியவராத விஷயங்கள் – உதைஇசுடாலிரின் ‘உடான்ஸ் திட்டங்களும்’  வரைமீறிய விடலைத்தனமான வக்கிரங்களும்….

சோஷியல்மீடியா என வந்தால் சாணக்யா பேசுதமிழாபேசு தினமலர் போன்ற நல்ல எண்ணம் படைத்த ஊடகக்காரர்களும் – அண்மையில் தெரியவந்த சின்னப்பா கணேசன் வரையுள்ள தனிப்பட்ட முறை நிறுவனம்சாரா ஆர்வலர்களும் இதே பார்வையைக் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். வெறும் உண்மைகளை மட்டுமே பார்த்து, அவற்றின் வழி காத்திரமாக பதில் சொன்னால் என்ன புண்ணியம், சொல்லுங்கள்.

இது நம் விசித்திரத் தமிழ் நாடு, திராவிடத்தின் பரப்புரைகளாலும் ஊடகப்பேடிகளினாலும் கோடாங்கிப்பாக்கக் கோமாளிகளாலும் மூளைச் சலவை செய்யப் பட்ட நாடு, ஊழலும் பொய்மையும் நீக்கமற நிறைந்த தமிழ் நாடு என்பவற்றைப் புரிந்துகொண்டால் மட்டும் போதுமா? அவற்றை முறியடிக்க நேர்மையான வழிகளால் மட்டுமே கூடுமா?

சரி.

இனி ஒவ்வொன்றாக திராவிடலைகளின் கேள்விகளைப் பார்ப்போம்… அவற்றின் உள்ளார்ந்த கமுக்கமான அர்த்தங்களையும் பார்ப்போம்; பின் அவற்றுக்கான சிடுக்கவிழ்த்தல்களையும்…

2

அ. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?

இதற்கும் வரிக்கும் மத்திய அரசுக்கும் உரிமைகள் பகிர்வுக்கும் ஒரு தொடர்புமில்லை. ஃபினான்ஸ் கமிஷன், ஷரத்துகள், நிதிப்பகிர்வு முறைமைகள், தேச வளர்ச்சி  எனப் பலப்பல விஷயங்களுக்கும் சம்மந்தமேயில்லை.

மாறாக.

இந்த,மேலோட்டமாகப் பார்த்தால் முட்டாள்தனமாகவும்  அதாவது கடைந்தெடுத்த திராவிட அயோக்கியத்தனமாகவும் தெரியும் கேள்வியின் மறைபொருளே வேறு!

அதுவானது:

திராவிடமாடல் அக்மார்க்  தீவட்டிக் கொள்ளைக்காரர்களான எங்களுக்கு – தமிழக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் 29% மட்டுமே கையூட்டுகள், ஜேப்படிகள், அடாவடிக் கொள்ளைகள் மூலம் – எங்கள் திராவிட திமுக தலைவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும், மாவட்டச் செயலாளப் பிரபுக்களுக்கும், பிற குத்தகைதாரர்களுக்கும் நேரடியாக வருகிறது.

ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி – எங்கள் ஒவ்வொருவருக்கும் பார்த்துக்கொள்ள குறைந்த பட்சம் இரண்டு குடும்பங்களாவது இருக்கின்றன. அவர்களுடைய சுற்றமும் நட்பும் வேறு மேலதிகமாக மேலாண்மை செய்யப் படவேண்டும். விலைவாசி வேறு ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது.  ஆகவே எங்கள் பஞ்சப்படி, குறைந்த பட்சம் 90% ஆக உயர்த்தப் படவேண்டும்.

அதாவது தமிழகவாசிகள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய் வரியிலிருந்தும் 90 பைசாக்கள் எங்களை நேரடியாக வந்தடைய வேண்டும். அந்தக் கலெக்ஷனுக்கான வழிமுறைகளையும் அவற்றின் மீதான மறுமுதலீடுகளையும் எங்கள் விடியா திராவிடமாடல் ஆட்சி பார்த்துக்கொண்டு எங்கள் வளர்ச்சியைக் காணும்.

பாரதவாசிகள் எடுக்கவேண்டிய முடிவு:

அமைதி உலவும் பூங்காவாக தமிழகம் மாற, மாங்கா மடையத் தமிழர்கள் விருப்பப்படி – திராவிட எருமையர்கள் 50% வரிப்பணத்தை ‘மக்கள் சொத்தே மஹிஷாசுரன் சொத்து’ என்கிற கோட்பாட்டின் ரீதியில் சுயார்ஜிதம் செய்து கொள்ள அனுமதிக்கலாம்.

கேஸ் க்ளோஸ்ட்.

#29%திராவிடமாடல்,  #50%திராவிடமாடல் நோக்கிப் பீடை நடை போடும்!

எதிர்காலங்களில் இந்தச் சதவீதம் படிப்படியாக ஏற்றம் பெற்று 100% ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

கடமை. கண்ணியம். கட்டுப்பாடு. அண்ணாவின் தம்பிகள் நமக்குத் தொடர்ந்து போடும் நாமம் வாழ்க!

3

ஆ. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?

இதற்கும் அடாது பெய்து புயல்மழையால் விளைந்த வெள்ளத்துக்கும், புனருத்தாரணத்துக்கும் துளிக் கூடத் தொடர்பேயில்லை. இக்கேள்விக்குப் பதிலாக முழ நீளத்துக்கு ருசுக்களுடன் விடைகளைக் கொடுக்கவேண்டிய அவசியமேயில்லை. நாங்கள் முன்னர் கொடுத்த பணத்துக்குக் கணக்குக் காட்டு எனக் கேட்க முகாந்திரமேயில்லை. எப்படியும் திராவிட ஊழல் பொய்மைக் களஞ்சியங்களுக்கு முடிவே இல்லை.

மாறாக.

திராவிடப்பேடிகள் குறிப்பிடும் பேரிடர்களில் ஒன்று இடி. ஐயோ, இது இயற்கைச் சீற்ற இடிமின்னல் அல்ல; மாறாக அது ஈ டி. அமலாக்கத் துறை – Enforcement Directorate. இன்னொன்று, பாரதிய ஜனதா கட்சி, முக்கியமாக அதன் மாநிலத் தலைவரான இளம் அண்ணாமலை.

பிற பேரிடர்கள் என்ஐஏ, சிபிஐ, வருமானவரித்துறை, நீதிமன்றங்கள், தேர்தல்கள்,பொதுமக்கள் என விரியும்…

திராவிடர்கள் கேட்கும் நிவாரணம் – இம்மாதிரிப் பேரிடர்களிடம் இருந்து நிரந்தர விமோசனம். அவ்வளவுதான்.

ஏனெனில்.

என்றுதான் திராவிடம் மக்களிடம் கரிசனப்பட்டு திட்டங்களைத் தீட்டியிருக்கிறது – புறங்கையை நக்குவதற்கே கருணாநிதி முதல் உதய நிதி வரை நேரம் போதவில்லை. பாவம்.

இந்தக் கூமுட்டைக் கேள்விக்கு எதிர்வினையாக, பாரதவாசிகள் எடுக்கவேண்டிய முடிவுகள் இப்படி இருக்கலாம்:

குண்டுகட்டாக இந்த திராவிடமாடல் பொறுக்கிகளை ஏதாவது (மாலத்தீவு. ஸோமாலியா, பாகிஸ்தான் போன்ற) இளித்தவாய் அல்லது சோப்ளாங்கி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது.

திருட்டுக் கும்பலனைவற்றையும் ஏதாவது தீவாந்திர ஹார்ட்வேர் கடையில் கம்பி எண்ண வைப்பது.

திராவிட அயோக்கியர்களுக்கெதிரான அனைத்து கேஸ்களையும் ஊறப்போடுவது.

(வேறெந்த வழியும் எனக்குப் புலப் படவில்லை)

4

இ. பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?

இதற்கும் நேரடி பதில் தேவையற்ற ஒன்று. அம்மாஞ்சித்தனமாக ‘டிஃபென்ஸ் காரிடர்’ – குலசேகரப் பட்டினம், கல்பாக்கம், வந்தேபாரத் ரயில்கள், விவசாயி உதவித்தொகைகள், சமையல் எரிவாயு. வீடுதோறும் கழிப்பறை, கல்லூரிகள், சாலைகள், முத்ரா, வீட்டுக்குவீட்டு குடுநீர், வீட்டுவசதி++++++++ என்றெல்லாம் பட்டியலிட வேண்டிய அவசியமே இல்லை.

மாறாக கீழ்கண்ட புத்தம்புதிய திட்டங்களை மாநில அரசு அறிவித்து அதற்கான செயற்திட்டத் தொகையை முழுவதும் அட்வான்ஸாக கோபாலபுரத்து வங்கிக் கணக்குகளில் நேரடியாக, நம் மத்திய சர்க்கார் கட்டி விட்டால் போதுமானது.

இதுவன்றோ டைரக்ட் பெனிஃபிட் ட்ரேன்ஸ்ஃபர்!

  • ‘ஸ்டாலின் தான் வர்ராறு, ஸ்டிக்கர்த்தான் ஒட்ராறு!’ ஓட்டுத் திட்டம்
  • முத்தமிழ்வித்தவர் இலவச காதுலபூ திட்டம் (மகளிருக்கு மட்டுமல்லாமல் – எல்லா பாலினத்தவருக்கும் – எருமைப்பால் பசும்பால் ஆட்டுப்பால் ஒட்டகப்பால் உட்பட – இலவசம்)
  • ‘திருவாரூரிலிருந்து கலைஞர்’ இலவச ரயில் டிக்கெட் திட்டம்
  • ‘அனைவருக்கும் இலவசப் பேருந்து, தம்பீ நீ அதற்கு முந்து’ திட்டம்
  • திராவிடக் கண்மணி வாழையடிவாழை வாரிசுத் திட்டம்
  • கருணாநிதி முத்திரைக் கையூட்டுத் திட்டம்
  • ஸ்டாலின் இலவச குலக்-ஜாமூன் அறநிலை (இது திராவிடமாடலின் விமர்சகர்களுக்காக)
  • உதை ஏவல்நாய்கள் பரிபாலனத் திட்டம் (ஊடகப் பேடிகளிலிருந்து,வளைந்து கொடுத்து வயிற்றுப் பாட்டைக் கவனிக்கும் காவல் துறை அதிகாரவர்க்கம் உட்பட)
  • இன்பநிதி இன்பம்ஸ் திட்டம் (இதன் வழி எல்லா திரையரங்குகளிலும் திரைப்படங்கள் அரசு செலவில், எத்தனை முறை வேண்டுமானாலும் விடலைகள் பார்க்கலாம்)
  • அனைத்து ஓட்டாண்டிப் பொதுமக்களுக்குமான ‘நமக்கு நாமமே!’ திட்டம்
  • கனிமொழி இலவச வரதட்சிணை திட்டம் (இந்தியன் வங்கி இதனைத் தொடர்ந்து நிர்வகிக்கும்)
  • சாராயரத்தினா சாராயஸ்ரீ சாராயவிபூஷண் விருதுகள்
  • கஞ்சா, மெத் போன்ற ஊட்டச் சத்துகளை உள்ளிட்டு விளையாடும் வீரவிளையாட்டுகளுக்கான உதவித் தொகை
  • ‘கிருத்திகா இலவச மூளையகற்றல்’ திட்டம் (தமிழகத்தில் திமுக/திராவிடர்களுக்கு ஓட்டளிக்கும் மக்களுக்குப் மூளை அவசியமில்லை என்கிற காரணத்தால் அவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டியது சுளுவாகிறது)
  • ஜல்லிக்கட்டு என்பதற்கு பதிலாக – கஞ்சாகட்டு, கல்லாகட்டு போன்ற சங்ககால நிகழ்வுகளை முன்னெடுக்க வாரியங்கள்
  • ‘நானே சான்றிதழோன்’ திட்டம் (அனைவருக்கும் இலவச பொறியியல் / மருத்துவம் வகை சான்றிதழ்கள்)
  • ஊடகப்பேடி ஓய்வூதியத் திட்டம் (ஜால்ரா அடிமைகளின் எஜமான விசுவாசத்தைக் காத்துக்கொள்வதற்காக)
  • ‘97%-3%=94% திராவிடமயமாக்கல்’ சமூகநீதிக் காவல்வீரர்கள் உதவித்தொகைத் திட்டம்
  • ‘நெசவுக்கு நூலில்லை உங்களுக்குப் பூணூல் ஒரு கேடா?” பார்ப்பன-பனியன் பரப்புரைத் திட்டம்
  • ‘என் குண்டு, என் உரிமை’ சிறுபான்மையினர் துயர்துடைக்கும் திட்டம்
  • ‘அறுவடை எங்கள் சொலவடை’ மதமாற்ற ஊக்குவிப்புத் திட்டம்
  • ‘சனாதனத்துக்குச் சங்கு’  இந்து மத ஒழிப்பு மதச்சார்பின்மைத் திட்டம்
  • ‘நம் கோவில் உண்டியல், நம் பணம்’ கோயில்சார்பின்மைத் திட்டம்
  • ‘தளபதி இலவச டோபா’ திட்டம் (வழுக்கை பொடுகு உள்ளிட்ட சமூக அநீதிக் கொடுமைகளால் தலைமுடியை இழந்து வாடும் வாலிப வயோதிக இளஞ்சிங்கங்களுக்கு உதவ)

கேஸ் க்ளோஸ்ட். 

5

இடியாப்பச் சிக்கல்களை இவ்ளோ சுளுவாகத் தீர்க்க முடியும் என்கிற புரிதல் எனக்கு அளவு கடந்த இறும்பூதைக் கொடுக்கிறது. உங்களுக்கு?

(ஆனால், என்னைப் போன்ற அறிவாளிகளிடம் பாஜகவினரோ, ஊடகங்களோ அறிவுரை பெறுவதில்லை என்பதில் உள்ளபடியே எனக்கு வருத்தமே!)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...