எந்த மசுத்தை எங்கே யாருக்குப் புடிங்கினாலும் ஏதாவது ஒரு திராவிட டொக்கு மூலையில் மூக்கைச் சிந்திக்கொண்டிருக்கும் ஒரு திராவிடத் தமிழன் புண்பட்டே தீருவான் என்பது தமிழகத்தின் மாளா, மீளாத் திராவிடத் தலைவிதிகளில் ஒன்று.

… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!

தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

திராவிடத் தமிழன் = Mad ஒரு பாகன்

Read the rest of this entry »

ஓரிருமாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது: நண்பர் ஒருவருடன் மாமலைகளையும் (ஹரல்ட் கார்ஃபின்கெல், எர்விங் காஃப்மன்) அதலபாதாள மடுக்களையும் (ஆஇரா வேங்கடாசலபதியின் பிரமிக்கவைக்கும்  ‘ஆராய்ச்சி!’, ஜேஆர்ஆர் டோல்கீனின் அலுப்பு சராசரிக் களஞ்சியமான  ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்‘) பற்றியெல்லாம் சுகமாக அளவளாவிவிட்டு திரும்பி வீட்டுக்குவந்து, மாலைக்கடனெழவுகளை முடித்துவிட்டு, யார்யார் மின்னஞ்சல்களில் திட்டியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் எனக் கொஞ்சம் கணினி முன் உட்கார்ந்தால் ஒரு அதிர்ச்சி!

பார், யாருக்கெல்லாம் இந்த விருது கிடைக்கலாம் என்று  புளகாங்கிதமுற்ற நண்பனின் பரவசம். “தமிழ்ஹிந்து-வில் எப்படி மெனெக்கெடுகிறார்கள் பார்!” அந்த சுட்டி எழவு இங்கேயிருக்கிறது: சாகித்ய விருது இந்த ஆண்டு யாருக்கு?

Read the rest of this entry »

சர்வ நிச்சயமாக, அவன் அப்படி இல்லவேயில்லை! தன்னை இப்படிச் சொல்லிக்கொள்பவன், விவரித்துக் கொள்பவன் ஒரு அயோக்கியன் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (கொஞ்சம் தேவையற்ற கருணையுடன் இதனைச் சொல்லவேண்டுமென்றால் – அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுபவன். அவ்வளவுதான்!)

நவீனகுளுவானிய கட்டுரை [=0] ஒன்றின் மேலான எதிர்வினையான – என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் –  [2], [3], [4]  இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக,  சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)

… ஐடி/தகவல் நுட்ப வேலையாட்கள் தொடர்பான பல சுவாரசியமான பரப்புரைகள் பதவிசாகப் பரப்பப் பட்டுக்கொண்டே வருகின்றன. சில அப்பாவிகள் இதனையும் நம்பியும் விடுகின்றனர் என்பது தான் சோகம்!

“ஐடி துறையில் வேலை கொடுத்துக்கொடுத்துப் பிழிந்து எடுத்துவிடுவார்கள்!”
“ஐடிகாரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது! முதலாளிகள் ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள்!”
“வேலை ஸ்திரம் இல்லை! எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தி விடுவார்கள்!”
“லாபம் பார்த்தவுடன், அந்த முதலாளிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்”
“திருட்டு முதலாளிகள் விரித்த வலை தெரியாமல், பாவம் இளைஞர்கள் சிக்கி விட்டார்கள்!”
“கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள்!”
“நடுவரிசை அதிகாரிகள், மிட்டில் லெவெல் மேனேஜர்கள் நிர்வாகத்துக்குத் தாளம் போட்டு அடிமட்ட (அதிமட்ட?) ஊழியர்களை நசுக்குகிறார்கள்!”
 எனப் பலவாறாக…

ஐயாமார்களே, கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் குளுவான்களால் பரப்பப்படும் இந்தப் பொய்மைகளை நீங்கள் இன்னுமா  நம்புகிறீர்கள்? இவை உண்மையா என்று பரிசோதிக்கவே மாட்டீர்களா? :-(

Read the rest of this entry »

(அல்லது ) ஐடி குளுவான்களின், பரவலாக வெளியே தெரியவராத பிரச்சினைகள்!!!!!

அய்யய்யோ! குளுவான்களென்றாலே எனக்கு ஆச்சரியம்தான்!! அதனால்தான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இந்த எழவெடுத்த ஆச்சரியக்குறிகளை உபயோகித்து விட்டேன்!!! மன்னிக்கவும்!!!!

சரி!!!!! இவ்வரிசைப் பதிவுகளின் முதல்பாகம்!!!!!! இது இரண்டாம் பாகம்!!!!!!!

-0-0-0-0-0-0-0-

ஆம்.

ஐடி குளுவான் மந்தையினர் அபாக்கியவான்கள். பரலோக நரகம் மட்டுமல்ல, இகலோக நரகமும் அவர்களுடையதே!  யேசுவுக்கு நன்றி.  [மேத்யு( 5: 3)]

விடலைப் பருவத்திலிருந்து – மேலெழும்பவே மாட்டோம், வளரவே மாட்டோம் என அடம் பிடித்து, ‘எனக்கு அந்த வேல பொம்மெ வேணும்’ என மூக்குச் சளி ஒழுக உருண்டுபுரண்டு ஒப்பாரி சகிதம் பிலாக்கணம் வைக்கும் குளுவான் கும்பலுக்கு,  ‘ஐயகோ, எங்கள் நிராதரவான கையறு நிலையைப் பாரீர்‘ என விசும்பிவிசும்பி அழும் அரைகுறைகளுக்கு – ஒரேயொரு அருமருந்துதான் இருக்கிறது என்று – என் பேராசானும் சித்தபைத்திய குருநாதருமான சிவபோதைவார்த்தையார் அவர்கள் தன்னுடைய தேரையதவளையர்  நிகண்டுவில் இப்படிச் சொல்கிறார்:
Read the rest of this entry »

வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

இதோ அந்த அட்டைப்படம்:

Read the rest of this entry »

இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:

  • ஏன் நீங்கள்,  சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது  எரித்தேயாகவேண்டும்
  • எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
  • சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்

முதல் பாகம்.  இந்த இரண்டாம் பாகத்தில் –  என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை.  என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும். Read the rest of this entry »

பல புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன – இன்னும் எவ்வளவு என உறுதியாக முடிவாகவில்லை.  இப்போதைக்கு ஏழு புத்தகங்கள் மட்டுமே நிச்சயம்.

அனைத்தையும் இதுவரை என் நண்பர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகமே வெளியிடுகிறது – சென்ற வருடம் என் மொழிபெயர்ப்பு ஒன்றை இவர்கள் வெளியிட்டு அது சக்கைப்போடு போட்டு, தமிழ்ப் பதிப்பக உலகிலேயே முதல் முறையாக, முதல் ஆண்டிலேயே இரண்டு பிரதிகள் விற்றது நினைவில் இருக்கலாம்… அத்தனையும் சீமார் அவர்கலுடைய ஆவேஷப் படத்தைப் போட்டதற்காகவே விட்றது என்றாள் பார்த்துக்கொல்லுங்கல். எள்ளாப் புகலும் நாம் டமிளர் இயக்கத்துக்கே!

book_frontandbackஇந்தப் புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே! ஒத்திசைவின் மூன்றாண்டுகால மகாமகோ வரலாற்றில் ஏகோபித்த ஆதரவு பெற்ற பதிவுகளில் இதுவும் ஒன்று. ;-) அப்பதிவில், பின்னட்டைக் குறிப்புகளும் படிக்கும்படியாக விரிக்கப் பட்டிருக்கின்றன. பாவம், நீங்கள். ஆகவே…

Read the rest of this entry »

கடந்த பதினைந்து நாட்களில் கண்டமேனிக்கும்  வேலை தொடர்பான/தொடர்பில்லாத அலைச்சல்; சென்னைக்கு 6 முறை சூறாவளிச் சுற்றுப்பயணம் (எல்லாம் அரசுப் பேருந்துகளில்தான்!) செய்தேன். வழக்கம்போல, சென்னையின் மஹாநதி வண்டிப் பிரவாகங்களில் வழிதெரியாமல் தலைசுற்றிய படலங்களும் நடந்தேறின. :-(

ஆனால் சுவாரசியத்துக்கும் குறைவில்லை. ஏனெனில், பயணங்களின்போது – பேருந்து கிளம்பியவுடன், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு – பக்கத்திலிருப்பவர்களுடன் (அவர்கள் தோதுப்பட்டு வந்தால்) கதைக்க ஆரம்பித்து விடுவேன்.

Dravidian Zeitgeist! Here I come… :-)

திராவிட மாயை அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ் கொஞ்சம் அலாதிதான்! சுவையோ சுவைதான்!!  ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால், சிலசமயங்களில் சிரித்துச் சிரித்து மாரடைப்பு வரும் நிலைக்குப் போய்விடுகிறது – என்ன செய்வது சொல்லுங்கள்… ;-)

சரி. இப்போது மூன்று சுவாரஸ்யங்கள்… Read the rest of this entry »

சமர்ப்பணம்: இந்தியாவின் ஒருபகுதியான தமிழகத்தில் பிறந்து வளர்ந்த பேறு பெற்றதால்  – நம்முடைய மொழிகளில் ஒன்றான  ஹிந்தி மொழியை மிகச் சுளுவாகக் கற்றுக் கொள்ள முடியும் என்றாலும், அந்த மொழியிலும் மகத்தான பொக்கிஷங்கள் எழுதப் பட்டுள்ளன என்றாலும், அம்மொழியைத் தெரிந்து கொண்டால் தொடர்புகள்-வாய்ப்புகள் பெருகும் சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும், அம்மொழி அறிவினால், இசையினால், அவற்றைச் சார்ந்த பிற பண்பாட்டுக் கூறுகளினால் நாம் செறிவுபடுவோம் என்றாலும்…

… வரட்டுவாதக் கயமை அரசியல் பிரச்சாரங்களுக்கு முட்டாள்தனமாக மயங்கி, எதிர்மறை பரப்புரைகளால் ஆட்கொள்ளப்பட்டு ஹிந்தி மொழியை இனம் புரியாமல் வெறுத்து, நம் சொந்தத்  தமிழிலும் சொதப்பும், அதிலும் ஒரு சுக்கு எழவையும் சரியாகவே கற்றுக் கொள்ளாத – சுட்டுப்போட்டால்கூட ஒரு வாக்கியத்தைக் கூடக் கோர்வையாக எழுதவராத பாவப்பட்ட ஜீவன்களாக இருந்தாலும்,  அப்படியே ஒருவேளை எழுத முடிந்தாலும் – காப்பியடித்தும், உளறிக்கொட்டியும் கண்டமேனிக்கும் கபடி விளையாடி – இலவச இணைப்பாக அந்தப் பரிதாபத்துக்குரிய ஆங்கிலத்தையும் போட்டுக் கொல்லும் திராவிடப்பக்கவாதக் குளுவான்களுக்கும், தனித்தமிழ்வாத  விசிலடிச்சான் குஞ்சப்பர்களுக்கும், தமிழ்த்தேசிய மொத்த (சில்லறை விற்பனையல்ல, துட்டு வாங்குவது உண்டு) வியாபாரிகளுக்கும், வாயோர நுரைதள்ளும்  ‘அன்னிய’ கலாச்சார எதிர்ப்பாள அற்பர்களுக்கும் – பொதுவாக அனாதைமுதல்வாதப் போராளிக் கோமான்களுக்கும்…

-0-00-000-0000-000-00-0-

… இப்பாட்டினை பலவருடங்களாக வானொலியில் கேட்டிருக்கிறேன் என்றாலும், Read the rest of this entry »

தயவு செய்து…

உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் –  நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக்  கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(

… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி  செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((

அம்மணிகளே, அய்யாமார்களே!  தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

கொட்டை (அல்லது) விடுதலைப்புளி
(ஆக்கம்:பெண்ணியக் கவிமாமணி  ராக்ஷசபுத்திரி)
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன் நவீனத்துவ புளியம்பழமும், பின் நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: மயிர்மை என அறியப்படும் ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றிகள் பல!)

கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)

வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்கு Read the rest of this entry »

… ஆகவே மொழி பெயர்ப்புகள் சரியாகவே இருந்தனவோ? அந்தக் காலத்தில் காப்பி இல்லை என்றாலுமே கூட…

ஸி எஸ் ‘அம்பை’ லக்ஷ்மி அவர்களைத் தொகுப்பாசிரியராக(வும்) கொண்டு வெளிவந்த  –  ‘சாவகாச நகரம்: சென்னையின் மீதான எழுத்துகள்’ (The Unhurried City: Writings on Chennai – edited by C. S. Lakshmi) புத்தகத்தில் சில தமாஷ் விஷயங்கள் இருக்கின்றன. யார் சொன்னது நான் மிகவும் மதிக்கும் அம்பை ஒரு மிகஸீரியஸ் எழுத்தாளர், அவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியியேல்லை என்று!

அவற்றில் ஒன்று –  எழுத்தாளர், வரலாற்றாசிரியர், இலக்கியவரலாற்றாளர், மேலதிகமாக ‘போட்டுக் கொடுங்கபா, பக்கத்து கடேல இன்னும் அறிஞத்தனங்கள் சல்லீசாக கெடக்குது, அழுகின பழத்த போடாத‘  இன்னும் பலவாகவும் – மொழிபெயர்ப்பாளராகவும், அறிஞராகவும், அரசியல், ‘பாரத ரத்னா’ விருது விமர்சகராகவும் செயல்படுவதாக அநியாயத்துக்கு அபாண்டமாக வதந்தி பரப்பப்படும் — பரிதாபத்துக்குரிய திரு ‘சலபதி’ அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. Street Smart in Chennai: The City in Popular Imagination. Read the rest of this entry »

இது  இவ்வரிசையில்  கடைசிப் பதிவு; இந்த வரிசையில். முதல் ஐந்து பதிவுகள் மேம்படுத்தப்பட்ட இந்த பக்கத்தில் இருக்கின்றன: போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)

நிசப்தக் கட்டுரையின் அலசலின் தொடர்ச்சியில் — எழுத்தாளரைத் தொடர்வோம்…

“இப்பொழுது நடக்கும் பிரச்சினை கூட அதன் புதிய டெக்னாலஜியை உலகுக்கு விளம்பரம் செய்வதற்கான உத்திதானாம். Iron dome என்ற டெக்னாலஜி அது. எதிரி தேசத்திடமிருந்து வரும் ராக்கெட்களையும், ஏவுகணைகளையும் அது வரும் பாதையிலேயே கண்டுபிடித்து திருப்பி அடித்து அழிக்கும் நுட்பம்.

 “அதற்காகத்தான் பாலஸ்தீனத்தை சீண்டி விடுவதும் அதனால் டென்ஷனான ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமிருக்கும் தீபாவளி ராக்கெட்டை வீசும் போது திருப்பி அடித்து ‘இது எப்படி இருக்கு?’ என்று உலகத்திடம் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்.

அய்யா அவர்கள் – ஹமஸ் அமைப்பினர் செலுத்தும் ஏவுகணைகளை ‘தீபாவளி ராக்கெட்’ என விவரித்திருக்கிறார்கள். ஆக, அவருக்கு தீபாவளி ராக்கெட் தொழில்நுட்பமும் தெரியாது என்பது நிரூபணம். ஏன் இப்படித் தன்  ‘ஒவ்வொரு துறையிலும் அறியாமை’யை மிக உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் இந்த மனிதர்! *ப்ச*  :-(

Read the rest of this entry »

(அதாவது) போங்கடா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு பிலிம் காமிக்கற போங்காட்டமும்… (பாகம் 2)

— !நிசப்தம் பதிவுகளை எழுதிவரும் திடீரெக்ஸ் அறச்சீற்ற இளைஞர் வா. மணிகண்டன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ( ‘அங்க என்னம்மா சத்தம்?‘)  படித்த மகாமகோ சோகத்தில் எழுதிய என் “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” பிலாக்கணத்தின் தொடர்ச்சி. ஸ்ஸ்ஸ் அப்பாடா!

எடுத்ததை முடிக்கவேண்டும். ஆகவே தொடர்கிறேன். பாவம் நீங்கள். வேறு வேலையில்லையென்றால் மேலே படியுங்கள். வேறுவேலைகள் இருந்தாலும்தான்!  ;-)

 -0-0-0-0-0-

சரி. நிசப்தமான அந்தச் சத்தக்  கட்டுரைக்கு மறுபடியும் போகலாம்: Mommie!! Returns!!!

“இது [அண்மைய காஸா-இஸ்ரேல் சச்சரவுகள்] பற்றிய டாகுமெண்டரி ஒன்றை பெங்களூரில் திரையிட்டார்கள். சாப்ளின் டாக்கீஸ் என்ற அமைப்பினர். தமிழ் இளைஞர்கள்தான். நற்றமிழன் பழனிசாமியை மட்டும் அந்தக் குழுவில் தெரியும். சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர். “

ஆ!  “சர்வதேச அரசியலை மிக எளிமையாக  பேசக் கூடிய இளைஞர்.” அய்யோடீ சொக்கீ!  நம்பவே முடியாமல், இரண்டுமூன்று தடவை இந்த வரியைப் படித்தேன்.

அய்யய்யோ! ஆஹா! அய்யா – இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை விட்டு எளிமையாக ஒரு சர்வதேச அரசியல் பற்றிய புத்தகங்களை எழுதச்  சொல்லி – நம் தமிழர்களை உய்விக்க முடியுமா?

  • முதல் புத்தகம்: ‘ஒரு வெட்டி டாகுமென்டரி பார்த்தே, சமகால வரலாற்றறிஞன் ஆவது எப்படி?’
  • இரண்டாம் புத்தகம்:  ‘மூன்றே வினாடிகளில் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளுங்கள்!’ (இலவச இணைப்பு: அடுத்த அரைவினாடியில் அதனைத் தீர்த்தேவிடுங்கள்!)
  • மூன்றாம் புத்தகம்: ‘ஒரே வினாடியில் சர்வதேச அரசியல்!’ (எளிமை விலைப் பதிப்பு)

பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகம் (என் புத்தகம் ஒன்றையும் இது பதிப்பித்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே!) உங்களுக்காகக் காத்திருக்கிறது. ஓடிப்போய்   தொடர்பு கொள்ளுங்கள்…

… சரி. எளிமை என்பதை வெகுளித்தனம் எனவும் புரிந்து கொள்ளலாம்; ஆனால் மகாமகோ சிடுக்கல் பிரச்சினைகளுக்கெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து  ‘வினவு காரர்கள்’  போல  குசு விட்டு எளிமையான கருத்துகளை உதிர்ப்பது என்பது ஒரு கலைதான்.

எளிமை  என்கிற அழகான வார்த்தையை வைத்துக் கொண்டு, ஒரு வெறுக்கக் கூடிய அரைகுறைத்தனத்தைப் பிரதிபலிக்கச் செய்வது என்பது  ஒரு நுண்கலைதான். :-(

மன்னிக்கவும்; எனக்கு மறந்தே போய்விட்டது. கூக்ல் போய், விக்கிபீடியா போய் ஒன்றிரண்டு வினாடிகள் முக்கினால், உடனடியாக, வெகு எளிமையாக சர்வதேச அரசியலைப் பற்றி ஏசலாம்.

குறிப்பு: மொத்தம் சுமார் 3200 பேர் மட்டுமே வசிக்கும், எங்கள் பள்ளி இருக்கும் கிராமத்தில் ஐந்து நாயக்கர் பெருங்குடும்பங்கள் (= ‘வகையறா‘ என்று குறிப்பிடுகிறார்கள்)  அல்லது குறுங்குழுக்கள் இருக்கின்றன. பக்கத்து கிராமத்தில் மூன்று இப்படிப்பட்ட குழுக்கள். இவை அனைத்துக்கும் இடையே, பலவித பிரியும்/சேரும் நட்புகளுக்கும் பகைமைகளுக்கும் நடுவில் படு பயங்கரமான குழு அரசியல் – கத்திச் சண்டைகள், கொலைகள் – ஒவ்வொரு வருடமும் இரண்டு கொலைகளாவது நடக்கின்றன (போன 2013வருடம் அத்தி பூத்தாற்போல ஒன்றுமட்டுமே! இந்த வருடம் இதுவரை இல்லை!). இந்த அரசியலைப் பற்றியே கூட என்னால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தாலும், அதனைப் பற்றி எளிமையாகப்  பேசவேமுடியாது. ஒரே சிக்கல்கள். என்னுடைய போதாமையும் அரைகுறைத்தனமும்தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும். என்ன செய்வது சொல்லுங்கள்…

!நிசப்தம்காரரின் நண்பர் எனக்கு பயிற்சி தருவாரா? ‘சர்வதேச அரசியலை மிக எளிமையாக பேசக் கூடிய இளைஞர்‘ அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருக்காதுதானே? சர்வதேச அளவில் எங்கள் கிராமம் தம்மாத்தூண்டுதானே?

மேலதிகக் குறிப்பு: !நிசப்தம்காரர் கருத்தை வைத்துக்கொண்டு இந்த ‘நற்றமிழன் பழனிசாமி’ அவர்களை மதிப்பிடக் கூடாதுதான். முன்னவரின் ஆஹாஊஹூ  கருத்துக்குப் பின்னவர் என்ன செய்வார் பாவம்! இருந்தாலும் அய்யாமார்களே, உங்களுக்காக இன்னமும் காத்துக்கொண்டிருக்கிறது உழக்கு பதிப்பகம்!

-0-0-0-0-0-0-

காஸா பற்றி சில குட்டிப் புத்தகங்கள் அல்லது அற்புதமான கட்டுரைகளை உட்கார்ந்த இடத்திலிருந்தே அலுங்காமல் நலுங்காமல் எழுத, சில தலைப்புகளுக்கான சிபாரிசுகள்: (முடிந்தவரை – எனக்குச் சரியென்று பட்ட, இக்கட்டுரைகளை எழுதக்கூடிய கட்டுரையாசிரியர்கள்/பத்திரிகைகள் பெயரையும் கொடுத்திருக்கிறேன்)

  • இஸ்ரேலே! காசா என்றால் லேசா? (விடுதலை)
  • காசாவில் காசு பார்க்கும் அமெரிக்க கார்ப்பரேட் நாய்கள்! (கண்டிப்பாக – இது ‘வினவு’ குளுவான்களுக்காக மட்டும்)
  • இஸ்ரேல்: காசாவின் காச நோய் (யுவகிருஷ்ணா)
  • காசா தான் கடவுளடா! (நாணயம் விகடன்)
  • காசா(ல) கைய வெச்சா… (சீமான்/விஜய்)
  • காசாவை கரியாக்காதே!  (நெய்வேலி – திமுக தொழிற்சங்க தட்டிவிளம்பரம்)
  • கசக்கும் காசா (கல்கி)
  • காசா கசமுசா எனும் பாலஸ்தீனிய திரைக்கவிதை (அகிரா கியரோஸ்டமி குரகாசாவின் உலகசினிமா ‘மார்டன்’ விமரிசனம்: எஸ். ராமகிருஷ்ணன்)
  • வொய் திஸ் கொலவெறி – காசா for dummies (அதிஷா)
  • காசா: நிகழ்ந்துகொண்டிருக்கும் இறந்தகாலமும், இறந்தகாலங்களின் நிகழ்காலமும் – ஒரு சாட்சியம் (ராஜன் குறை கிருஷ்ணன்)
  • இஸ்ரேலின் அணுவுலைகளினால் காசாவுக்கு அபாயம் (ஞாநி)
  • தென்னமெரிக்கத் திரைப்படங்களில் காசா – ஒரு பின் நவீனத்துவ விமர்சனம் (சாரு நிவேதிதா)
  • யூத வந்தேறிகளால் ஏற்பட்ட காசா இனப்படுகொலை (பழ நெடுமாறன்)
  • ஆதிக்கசாதி பார்ப்பனீயம்தான் இஸ்ரேலை உயர்த்திப் பிடிக்கும் (மார்க்ஸ்)
  • திமுக தோல்விக்குக் காரணம் இஸ்ரேல்! (முக ஸ்டாலின் – அய்யய்யோ மன்னிக்கவும் இசுடாலினார்)
  • அந்தக் காலத்தில் இஸ்ரேல் இல்லை – மிகமிகப் பழைய ஏற்பாடு சாட்சியம் (ஆஇரா வெங்கடாசலபதி; யெருஸலாயிம் நூலகத்திலும் அலெக்ஸா்ன்ட்ரியாவிலும், யாழ்ப்பாணத்திலும் கிடைத்த குறிப்புகளின்மீது வடிக்கப்பட்டது)
  • கடைசி மரத்தை வெட்டும் வரை நாங்கள் காசாவின் இடஒதுக்கீடுக்காகக் போராடுவோம் (டாக்டர் இராமதாசு)
  • If  Jeyamohan has written about Gaza, what right does he have to write about it & if Jeyamohan has not written about Gaza, why should he have written about it instead of being indifferent- a deep fraudian analysis with copious footnotes, ready references, appeal to ethics, parallels with American protest scenes and much else (A Contrarian World)

தலைப்பு தயார், உள்ளடக்கம் எங்கேயென்றால் – என்ன எழுதவேண்டும் என்பதை விக்கிபீடியாவிலிருந்து உருவி, கூக்ல் மொழிமாற்றியை வைத்துத் தமிழில் பெயர்த்துக்கொள்ளலாம். சரியா? (ஆனால் உழக்கு பதிப்பகம் இவற்றையெல்லாம் பிரசுரிக்காதாம், பத்ரியுடன் இப்போதுதான் பேசினேன். என்ன ஆணவம்! உழக்கு இல்லாவிட்டால் HairDye பதிப்பகம் செல்ல எங்களுக்குத் தெரியாதா? ஹ்ஹ.)

சரி, போதும் – நிசப்தம் பக்கம் செல்லலாம். ;-)

-0-0-0-0-0-

“திரையிடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்குக்கு வாடகை மட்டுமே ஆயிரத்து ஐந்நூறு ரூபாய். அது போக ப்ரொஜெக்டர், ஆடியோ சிஸ்டம்ஸ் எல்லாம் தனி.”

அய்யா அவர்களுக்கு எங்கு சென்றாலும் இதன் விலை என்ன, அதன் விலை என்ன, ஒரு ஐடி தட்டச்சு வேலை செய்யும் தன்னால் இதனை வாங்கமுடியுமா செய்யமுடியுமா, வெறும் மளிகைக் கடைக்காரர்கள் பெரிதாகச் சம்பாதிக்கிறார்கள், ஏன் நம்மால் முடியாதா, முடியவே முடியாது – ஏன் முடியணும், ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கவே முடியாத நிலை – என்ற வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகள் தான். பேக்கரி சென்றாலும் சரி. பஸ்ஸில் போனாலும் சரி – இதேவகைப் பிரச்சினைகள் தான்; காஸாவில் ரியல் எஸ்டேட் எப்படி, ப்ளாட் விலை எவ்வளவு இருக்கும் வகை பற்றாக்குறை மனப்பான்மைச் சிந்தனைகள் – ஆக, பல சமயங்களில் திரையுலக ‘தருமி’ நாகேஷை நினைவு படுத்துகிறார், பாவம் – ஒரு மத்தியதரவர்க்கம் சார்ந்த படைப்பூக்கம் மிக்க கலைஞனுக்கு என்னவெல்லாம் முட்டுக் கட்டைகள் பாருங்கள்… :-( ஏமாந்தால் ஏறி மிதித்து விடுவார்கள். :-((

என்னையே எடுத்துக் கொல்லுங்கள். நான் தட்டச்சு செய்யும் இந்த தொடைமேற்கணினி 30000 ரூபாய். என் மூக்குக் கண்ணாடி 2000 ரூபாய். வெறும் சிலிக்கன் மணல் மெட்டீரியலுக்கு இவ்வளவு விலையா? கம்ப்யூட்டர் செய்யும் கார்ப்பரேட் முதலாளிகள், கண்ணாடித் தொழிலதிபர்கள் – தொழிலாளிகள் வயிற்றில் அடித்துக் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். மணல் கொள்ளையர்கள். கேட்பதற்கு ஆளில்லை. கேட்டால் அடிக்க வந்து விடுவார்கள். அடச்சே!

ஆனாலும் ஆனியன் ரோஸ்ட் அம்பது ரூபாயாமே? என் அடுத்த புத்தகத்தின் பெயர் இதுதான். உரக்கச் சொன்னால், வாயில் இடியாப்பத்தைத் திணித்து விடுவார்கள். சரவணபவன் ஓவர் விலை. இடியாப்பம் ஒரு ப்ளேட் விலை ரூ 80/-. அநியாயம்.   தமிழகத்தின் இடியாப்பத்தை நூடுல்ஸ் சாப்பிட்டுவிடுமோ? இதுதான் நூடுல்த்வா என்பதா? மேக்கி நூடில்ஸ் பேக்கட் விலை ரூ 30/-; கடைக்காரருக்கு ஒவ்வொரு பாக்கெட்டிலும் லாபம் 30% சுளையாக நிற்கும். ஏன் நம்மால் இதனைச் செய்யமுடியாதா? முடியாது. பள்ளி ஆசிரியர்கள் என் தன்னம்பிக்கையையே ஒழித்து விட்டார்கள். தன்னம்பிக்கை கிலோ என்ன விலை? (அய்யய்யோ! இளைஞர் ஷ்டைலில் நானுமா??)

 “இஸ்ரேல் ஒன்றும் சாதாரண நாடு இல்லை. ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’ என்று ஒருவர் சொன்னார். முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி. “

சரி.  இஸ்ரேல் ஒரு மசாலா நாடு, சாதா நாடு அல்ல. போதுமா? கொத்து பரோட்டா (ரூ. 30/- மட்டுமே) சாப்பிடுவதற்குப் பதிலாக பதிவெழுத வந்தால் – சர்வதேச அரசியல் நிலவரங்களை, சாதா நாடு -ஆனியன் ரோஸ்ட் நாடு என்றுதான் பகுப்பு செய்யமுடியும்.  நாடு, நிலப்பரப்பும, பூகோளம் என்றாலே !நிசப்தம்காரருக்கு லட்டு (ரூ 25/-) தான் நினைவுக்கு வருமோ?

‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’

எந்த மெத்தப் படித்த மேதாவியய்யா இப்படி  ‘உலகத்தில் இதுவரை தனது எல்லையை அறிவிக்காத ஒரே நாடு இஸ்ரேல்தான்’  என்றெல்லாம் கருத்துதிர்த்தது? அவர் காலைக் கொஞ்சம் என் பக்கம் நீட்டினால், அதனைத் தொட்டு என் கண்ணை ஒற்றிக் கொள்ள நான் தயார். எப்படிப்பட்ட மேதாவி அவர்!

ஆனால் – அவரை விட அதிமேதாவி  யாரென்றால் !நிசப்தம்காரர்தான்! யாரோ சொன்னதை அப்படியே போட்டு ஒரு பதிவையும் தேற்றியிருக்கிறார் என்றால், அவர்தம் மேதாவித்தனம் தான் என்னே!

ஆனால், ஆனால்… இவர்கள் இருவரையும் விட மகாமகோ மேதாவி யாரென்றால் அது நாந்தேன்! வேலை வெட்டியற்று இவர்கள் சொல்லையும் செயலையும் விமர்சனம்(!) செய்து கொண்டிருக்கிறேன் பாருங்கள்! :-(

‘முடிந்த வரைக்கும் சுரண்டிக் கொண்டே போவதுதான் அதன் பாலிஸி.’

அய்யா !நிசப்தம், இஸ்ரேல் ஒன்றும் மலாய் காய்ச்சும் கடாய் அல்ல – சுரண்டோசுரண்டு எனச் சுரண்டுவதற்கு. கடையில் கிடைக்கும் கடாய் ரூ 800/-.ஆனால்  மலாய் ஒரு கப் 40ரூ. சாப்பிட்டால் கொழுப்பு ஏறிவிடும் என்கிறார்கள். வீட்டில் அடிக்கவருவார்கள்.

ஆரோக்கியம் முக்கியம். இல்லையென்றால் டாக்டருக்கு அழ வேண்டும். அவர் ஐந்து நிமிடத்திற்கு ரூ.500/ வாங்கிவிடுவார். எனக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தாலும் என் முதலாளியிடமிருந்து ரூ.500 வராது. வெளியே சொல்ல முடியாது. சொன்னால் வேலை போய் விடும்.   டீம் லீடருக்குத் தமிழன் என்றால் கேவலம். உலகத்திலேயே பொட்டி தட்டும் வேலைதான் கீழானது. அதனால் தான் நான் அதனைச் செய்து கொண்டிருக்கிறேன். :-(

எனக்கு ஈகோ அதிகம். ஆனால் எவருக்குத் தான் ஈகோ இல்லை. என் ஊரில் அய்யனாருக்குக் கூட ஈகோ இருக்கிறது என்கிறார்கள். அதனால்தான் அவர் ஒரு குறுந்தெய்வமாகவே இருக்கிறார். இதற்குமேல் எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். அவர்கள் பெயரைச் சொல்லமாட்டேன். அவர்கள் இந்துத்துவர்கள். எங்கள் ஊரில் இந்துத்துவம் கிலோ ரூ 50/- தான். ஆனால் பெங்களுரில் அதே விஷயம் ரூ 1000/-! அநியாயமாக இருக்கிறது அல்லவா?  எல்லாம் பெருமுதலாளிகள் கையில். சாதா மனிதர்களை எவன் கேர் செய்கிறான். அவர்கள் விவசாயம்தான் செய்யவேண்டும். வெறும் நஷ்டம்தான். ரொம்பப் பேசினால் உதைக்கவருவார்கள்.

ஐடி தொழிலில் எதுவுமே சாஸ்வதமில்லை. நாளைக்கே வேலையை விட்டு எடுத்துவிட்டால்  என்னால் வேறென்ன செய்யமுடியும். வீட்டில் திட்டுவார்கள்.

தினம் ஒரு பதிவு எழுதவில்லையென்றால் வாசகர்கள் பொட்டில் அடிப்பார்கள். தினம் எழுதினாலோ வெறியர்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு அறைவார்கள். தமிழ் எழுத்தாளன் என்றால் அவ்வளவுதான். என்னை நானே குத்திக்கொள்ள வேண்டியதுதான்.

… அடுத்த பதிவில் மங்கோலியாவின் தமிழ் இலக்கியம் பற்றி எழுதலாமா? அதற்கு யார் உதைக்க வருவார்கள் என்பதை நினைத்தால் உதறலாக இருக்கிறது…

-0-0-0-0-0-0-

… ஆனால் – ஒவ்வொரு நாளும் எத்தைத் தின்றால், எத்தைப் பதிவு செய்தால் பித்தம் தெளியும் என்று – அனுபவங்களைச் சுரண்டிச் சுரண்டி முடிந்தவரை உள்ளீடற்ற, துறையறிவற்ற பிலாக்கணப் பதிவிடுவது என்பது நிச்சயம் ஒரு அனுபவச் சுரண்டல்தான்.

இந்தப் போக்கினை ஒரு ‘பாலிஸி’ என்ற அளவிற்கு உயர்த்த வேண்டிய அவசியமும்  இல்லை.

… மேலும் தொடரும்… :-(   இன்னும் அரைவாசி ‘அங்க என்னம்மா சத்தம்’ பதிவு பாக்கியிருக்கிறது. பாவம் நீங்கள். ;-)

தொடர்புள்ள பதிவுகள் / தொகுப்புகள்…

 

ஆ இரா ‘சலபதி’ வெங்கடாசலபதி, ஸ்ரீ வெங்கடேஸம் மனஸா ஸ்மராமி…

Screenshot from 2014-08-08 14:28:51இன்றுதான்  ‘சலபதி’ அவர்கள் நாளைய  ‘தமிழ் ஹிந்து’ தினசரியில் எழுதிய ராமானுஜன் பற்றிய கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன்.

இதன் ஒரு பகுதியை உங்களுக்கு  அவசரம்அவசரமாக, தப்பும்தவறுமாக ‘இந்திய இணைய வரலாற்றிலேயே முதல்முறையாக டட்டடா டட்டடாவாக அளிப்பதில்’  பெருமையடைகிறேன்: எனக்கு எப்போதுமே  ‘யாம் பெற்ற அக்கப்போரு பெறுக இவ்வையகம்’தான். Read the rest of this entry »

இந்தச் சமன்பாட்டை இப்பதிவு நிரூபிக்கப் போகிறது. (பாவம் நீங்கள்!)

… வழக்கமாக இந்த ஒத்திசைவானது, புளகாங்கிதத்துடன் சிலந்தியோட்டிக்கொண்டிருக்கும் ஒரு அசுவாரசியமான அக்கப்போர் மூளைக்குடைச்சல் வலைதளம்தான்; ஆனால் எப்போதாவது பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் போன்றவர்கள் தேவைமெனெக்கெட்டு சுட்டியைப் பரிந்துரைத்தால், ஆயிரத்துக்குப் பக்கத்தில் பக்கப் பார்வைகள் கூடி விடும். ஆக – அடுத்த நாள் என்னுடைய சாலைப் பயணங்களில், என் அருகில் வரும் ஆட்டோக்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியிருக்கும்; என் புடம் போடப்பட்ட அனுபவங்கள் ஆட்டோமெடிக்காக இப்படிச் செய்யவைக்கும். :-)

இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது: சில ஆயிரம் தமிழ் படிக்கத் தெரிந்த (அல்லது தமிழ்ச்சுட்டிகளின் மேல் க்ளிக் செய்யக்கூடியவர்கள்) அனாமதேய நபர்கள், காலையில் பல்தேய்த்த பின் (வாய்கூடக் கொப்பளிக்காமல்) முதலில் ஆஜர் கொடுப்பது இந்தத் தளங்களில்தான் என்பது. இந்த ஆயிரம் பேர்களும் நிச்சயம், வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவாத, உதவாக்கரை ஆண்களாகத் தான் இருக்கவேண்டும் என்பதும் என் துணிபு. Read the rest of this entry »

ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப்  பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான   பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.

இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். Read the rest of this entry »

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உருப்படியான, அழகான  இலக்கியப் புனைவுகளை மொழிபெயர்ப்பு செய்யும் மாமனிதர்களில் ஒருவரான (இவர் ஒரே ஒருவர்தானோ இப்படி, என்பது என் சந்தேகம்!) ‘சிவசங்கரா’ கல்யாணராமன் அவர்கள், ‘அசோகமித்திரனை வாசித்தல்’ எனும் நிகழ்ச்சிக்கான ஒரு அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்.

அசோகமித்திரன் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் – அவர் போற்றப் படவேண்டியவர்தான்.  சென்னையில் வசித்தால், நிச்சயம் போகவேண்டிய நிகழ்ச்சிதான்; ஆனால், பேரறிவாளர் ராஜன் குறை அவர்களும் அதில், தமிழ் போன்ற ஒரு மொழியில் ஒரு சிடுக்கல் கட்டுரை (= ‘வரலாற்றிற்கப்பால் அன்றாடம்: அசோகமித்திரன் அழகியல் காட்டும் மீட்சி’)வாசிக்கப் போகிறார் என்பது, எனக்கு அடிவயிற்றில் இனம்புரியாத கலக்கத்தையும் பயபீதியையும் ஏற்படுத்துவது. (ஆனால் அதீதமாகப் பயப்படவேண்டாம் – ஆறு கட்டுரையாளர்களில் ஒருவர்தான் ராஜன் குறை அவர்கள் என்பது கொஞ்சம் ஆசுவாசமளிக்கும் விஷயம் என எஸ்ரா அவர்கள் போலச் சொல்லிக்கொள்கிறேன். குறை ஒன்று  போதுமே கோவிந்தா!)

மேலதிக விவரங்கள்: கருத்தரங்கம்  / ஜூன் 7 சனிக்கிழமை / மயிலை ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் / 10:00 – 16:45 /

அழைப்பிதழ் Ashokamitran 1Ashokamitran 2

இந்த நிகழ்வில் அசோகமித்திரன் அவர்கள் ஒரு சிற்றுரை (=30 நிமிடங்கள்!) மட்டுமே ஆற்றுவார் எனும் செய்தி,  எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பேருரைகளில் சிலவற்றைக் கேட்டு மனம் பேதலித்துப் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் எனக்கு – நிச்சயம் ஆத்தும சுகம் அளிக்கக் கூடியதுதான்; ஆனாலும்,  போகமுடியாது.

 -0-0-0-0-0-0-0-0-

 ஷிவ் விஸ்வ நாதன் அவர்களின் ஒரு ஆங்கிலக் கட்டுரையைச் சுட்டி(ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்? , அதன் தமிழ் வடிவத்தை யாராவது உருவாக்க முடியுமா என்று கேட்டதற்கு,  திரு அர. வெங்கடாசலம் அவர்கள், வேலைமெனெக்கட்டு உழைத்து மொழிபெயர்ப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

இத்தனைக்கும் அதன் தமிழ் வடிவம் ஒன்றை ‘த அன்டி தமிழ் ஹிந்து’  பிரசுரித்த விஷயத்தை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் அதனை அவர் கவனிக்கவில்லை.

ஆக, கீழே இருக்கும் இரு விதமான கட்டுரை மொழிபெயர்ப்புகளைப் படித்து இன்புறவும்.

அர. வெங்கடாசலம் வடிவம்: மோடி என்னைப் போன்ற தாராளவாதிகளைத்...  ‘த அன்டி தமிழ் ஹிந்து’  வடிவம்.

என் பங்கிற்கு – இவை இரண்டையும் அலசி ஆராய்ந்து – ‘மொழிபெயர்ப்புக்கப்பால் ஆரூடம்: ஸெக்யூலரிஸ எழவியல் ஓட்டும் ஈ’ என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதலாமென்றிருக்கிறேன்.

எப்படியோ, ஒவ்வொரு முற்போக்காள லிபரலும், ஸெக்யூலரிஸ மாயவாத மரத்தை விட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு கீழிறங்கிவந்து உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட்டால், அதை வரவேற்பவனே நான்தான்! ;-)

-0-0-0-0-0-0-0-

இதனைப் படிக்கும் எவ்வளவு பேர், 1980களின் ஆரம்பத்தில் நடந்த பஞ்சாப் படுகொலைகள் (அதாவது, சீக்கியர்களில் ஒரு வெறியனின் அடிவருடிகள், ஹிந்துக்களைக் (+சில சீக்கியர்களையும் கம்யூனிஸ்ட்களையும்) குறிவைத்துக் கொன்றது) பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பார்கள் எனத் தெரியாது.

இந்த விஷயம் தொடர்பாக – நான் மிகவும் மதிக்கும் ஷேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் தலைமையாசிரியர்) அவர்களின் – ஜர்னைல் ஸிங் பிந்த்ரான்வாலே பற்றிய, அவசியம் படிக்கவேண்டிய ஆங்கிலக் கட்டுரை.

ஷேகர் குப்தா அவர்கள் என்னை இதுவரை ஏமாற்றியதே இல்லை. கண்ட கழிசடைகளும் தினசரி ஆசிரியர்கள் எனக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டங்களில் இவர் அபூர்வப் பிறவிதான்.

-0-0-0-0-0-0-0-0-

நகைச்சுவைப் பகுதி #1: நேற்றும் வினவு தளம் சென்று (=fatal attraction?) சில கட்டுரைகளைப் படித்தேன். சில சோகமான தருணங்களில்,  என்னை மீட்டுக்கொள்வதற்காக வினவிடம் சரணாகதியடைவது என்னுடைய தொடரும் வியாதிகளில் ஒன்று.

ஒரு எழவையும் தெரிந்துகொள்ளாமல்,  அறிவியல்-வரலாறு போன்றவையெல்லாம் என்ன ஜந்துக்கள் என கடுகளவு கூட புரிந்துகொள்ளாமல், ஆவண மூலங்களைப் படிக்காமல், காப்பியடித்து அதுவும் தப்பும்தவறுமாக ஒற்றியெடுத்து, உணர்ச்சிகரமாக புரட்சிகர முஷ்டிமைதுனத்தை உயர்த்திப் பிடிக்கும் திடுக்கிடும் வினவுதரக் கட்டுரைகள் கீழே:

படித்து வாய் விட்டுச் சிரிக்கவும். வரிக்கு வரி அபத்தங்கள், அபுரிதல்கள், அற்பத்தனங்கள்.

-0-0-0-0-0-0-0-0-0-

நகைச்சுவைப் பகுதி #2: சிலமாதங்கள் முன் மேதகு ‘மைக்குக்கு முன்னால் அழும்’  வைகோ அவர்களுடைய தொழில் நுட்பத்திற்கெதிரான அறியாமையின் பாற்பட்ட போராட்டம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். (நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு! 08/11/2013)

ஆனால், அய்யய்யோ  – எனக்கு நண்பர் ஒருவர் நேற்று அனுப்பிய சுட்டியில் இன்னுமொரு திடுக்கிடவைக்கும் அஅறிவியல் கட்டுரை பரபரப்புப் பப்பரப்பா!

இதில் ந்யூட்ரினோ ஆய்வு மையம் குறித்த திரித்தல் செய்திகள் – போதாக்குறைக்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் (= ‘தொழில் நுட்பத்தின் எதிரிகள் – ஆனால் தொழில் நுட்பத்தைமட்டும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்’) நிரந்தரத் தலைவரான  ‘அய்யய்யோ அணுசக்தி’ புகழ் சுந்தர்ராஜப் பொரியியலாளரின் பொரி பொரித்தல்கள். இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது – உருப்படியாக ஒரு காரியமாவது செய்துவிட்டு, பின்னர் தூசி வாரியிறைக்க வாருங்கள்.

நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?

“அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்… ‘நியூட்ரினோ’!

“நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள்”

… என்பது போல ஆரம்பிக்கும் தமாஷ் இந்தக் காட்டுரை. தொடர்ந்து  விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் கோமாளித்தனம் இது.

தொடர்ந்து ஒரே ரோல்லர்-கோஸ்டர் பப்பரப்பா!

கருத்துப் பிழைகள் (இவைகளையாவது, செல்லமாக மண்டையில் குட்டிப் புறம்தள்ளிவிடலாம்) மலிந்திருக்கும் இக்கட்டுரையில் – தகவல் பிழைகளும் முதலிடத்திற்குப் போட்டியிடுகின்றன என்பது ஓரு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்.

அணுக்கருவுலை, சக்தி, அணுத் துகள்கள், அணுக்கழிவு போன்றவற்றைக் கொஞ்சமேனும் அறிந்த விஞ்ஞானிகளிடம் இதனைப் பற்றி விசாரித்து எழுதாமல் ஏன் அரைவேக்காட்டுத்தனத்திலேயே மூழ்கியிருக்கிறார்கள்?

அறிவியல் கட்டுரை என்பது – ஒரு அற்ப தமிழ்சினிமாப் பட விமர்சனம் இல்லை என்பதை எப்போது இவர்கள் உணர்வார்கள்?

இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள தொடரும் முரணியக்கம் என்பதும்தான் மனிதகுலத்தின் தொடர்ந்த வளர்ச்சியைச் சாத்தியப் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா என்ன?

குறைந்தபட்சம் இந்த ந்யூட்ரினோ ஆய்வு மையத்தின் தளத்தையாவது முழுமையாகப் படித்திருக்கவேண்டாமா? இவருக்கு என்ன, தான் யுவகிருஷ்ணா என்ற நினைப்பா?

இந்த அரைகுறை ஆனந்தவிகடன் தான் – இந்த அரைகுறைக் கட்டுரைகளைப் பதிப்பிக்கமுடியும். இந்த ‘பாரதி தம்பி’ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவர் காந்திமதி நாதன் அவர்கள் சொல்லியிருக்கக் கூடுவது போல – ‘சின்னப் பயலோ’ என்ன எழவோ…

ஆனாலும் மேதகு பாரதிதம்பி அண்ணன் அவர்கள்,  கூடிய விரைவில் மேலும் அமோகமாக வளர்ந்து, பொலிய,  ப்ரபஞ்ச தாத்பரியத்தைக் கண்டுணர்ந்து முட்டாள் சகதமிழர்களை அறிவியல் ரீதியாகத் தடுத்தாட்கொள்ள என் ஆசிகள்.

-0-0-0-0-

ஆம். எனக்கு,  தற்போது வேறுவேலையே இல்லை! 8-)

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை,  படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!

ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் –  அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம்.  மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால்,  கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »

இந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.

… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…

விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால்,  என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ? Read the rest of this entry »