அம்மணிகளே, அம்மணர்களே!

எச்சரிக்கை: இது ரொம்பவே ரசக்குறைவான கட்டுரை. ஆகவே  மூக்கை மூடிக்கொண்டு இந்தப் பதிவைப் படிக்கவும்.  ஏனெனில், எனக்கு வந்திருக்கும் கோபத்துக்கு அளவேயில்லை! }:-|

😬

இந்தப் பதிவில் வெறும் ‘கெட்ட’ வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் நல்லவேளை, இன்று காலையில் ஜெயமோகனின் கலாம்- கேள்விகள்  எனும் பதிவைப் படித்து, என் மனம் கொஞ்சமேனும் ஆதூரம் அடைந்தது.

ஆகவே, முகத்தைச் சுளித்துக்கொண்டு மேலே, இது உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். You have been sufficiently warned, right?

Read the rest of this entry »

[ This post is an old one, a version of which was written may be 6/7 years back or so. It is provided here purely for ‘educational’ purposes. ;-) ]

…Are you afraid that you are going to be one of those people who may die because of this A(H1N1) swine flu virus?

If you indeed do, probably you deserve to die ASAP one way or the other, anyway… Good riddance too.

This is because, you did not bother to check the facts.

You did not bother to read, digest, reflect on what’s happening. Read the rest of this entry »

பகீர் செய்தி!

சென்னை, 23 ஜூலை, 2015:  முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது  சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.

மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »

திராவிடர்களது அடிப்படையே பீலா விடுவதும், தாங்கள் விடும் பீலாக்களைத் தாங்களே நம்பிவிடும் தன்மையும்தான்.

திராவிடப் பகுத்தறிவு என்பதன் லட்சணமே, ஆதார சுருதியே, அடி நாதமே – மூட நம்பிக்கைக் குவியல்தான்; அதாவது ஈவெரா ‘பெரியார்’ அவர்களின் பிதற்றல்களைக் கொள்கைகளாகக் கொள்வது; அவரது விட்டேற்றி வெறுப்புப் பிரச்சாரங்களைத் தாரக மந்திரங்களாக உச்சாடனம் செய்வது; ஆரிய மாயை; திராவிடத் திராபை; லெமூரியா; இன்னபிற, இன்னபிற…

திராவிட அறிவியல் என்பதே ஒரு ஆக்ஸிமொரான் – அதாவது அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் ஒரு சுக்குச் சம்பந்தமும் இல்லை.

ஆகவே, வீரமணி அவர்கள் தொடர்ந்து, ஏகோபித்து உளறிக்கொட்டுவதில் ஆச்சரியமேயில்லை!

Read the rest of this entry »

அய்யன்மீர், அம்மணிகளே!

நலம். நலமறிய அவல், வெறும் வாய்க்கு!  (அதுவும் சுமார் 1500 வார்த்தைகளில்!)

ஏனோ — வழக்கமாக  வறுமையில்/இல்லாமையில்/போதாமையில் வாடும் மூத்தபெரும் எழுத்தாளர்களுக்கு இம்மாதிரி உதவிகளைத் திரட்டித் தரும்  என் மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களோ அல்லது என் மிதிப்புக்குரிய நகைப்புக்குரிய வா. மணிகண்டன் அவர்களோ – இதனைச் செய்யாததால், இதனையும் நானே மண்டையில் அடித்துக்கொண்டு செய்யவேண்டியிருக்கிறது.

Read the rest of this entry »

என்னுடைய மகாமகோ செல்லங்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்துகளின்மீது எனக்கிருக்கும் மாளாக்காதலினாலும் பிரமிப்பினாலும் — இந்த இரண்டாம் பாகமும், கிட்டத்தட்ட 1300 வார்த்தைகளுக்கு மேல் நீண்டு விட்டதே! (எல்லாப் புகழும் எஸ்ராவலுக்கே, வேறென்ன சொல்ல!)

இதன் முதல் பகுதியை மண்டையில் அடித்துக்கொண்டு படித்துவிட்டுப் பின்னர் இதற்கு வந்தால், கொஞ்சம் குறைவாகக் குழம்பலாம். எச்சரிக்கை செய்து விட்டேன். பிறகு உங்கள் இஷ்டம்…
Read the rest of this entry »

சங்கல்பம்:  தகத்தகாய பரதேசி – வெள்ளைப்பன்றி காலத்தே – விவஸ்தையில்லா நேரத்தே –  அஷ்டாவக்கிரப் பார்வையிலே – கலியுகத்திலே – முக்கியமான முழுமுதலான பாடையிலே – வறட்டுக் கண்டே, ஜம்புவின்  ஜெய்ஷங்கரே,  பரட்டை ரஜினியே, வர்க்கிங்டே மன்டே, மேரூ டாக்ஸியே,  தக்ஷிண் ஹோட்டலே, பார்ஸ்ன் காம்ப்ளெக்ஸே,  அஜித்விஜய் ஆரியமாஸே – நெடுங்குருவிப் பட்சியே – சுக்குல இஞ்சியே, தேசாந்திரியே, துணையெழுத்தே, சஞ்சாரியே, நெடுந்துக்கமே… கொடுங்கனவே, மீளாத் துயிலே, கொரட்டையே … …

(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின்,  ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேரடி ஏகோபித்த மொழிபெயர்ப்பில் – சங்கல்ப மந்திரம். எப்படி இருக்கிறது?)
Read the rest of this entry »

(அல்லது) நார்ஸிஸஸ்ஸை  நார் நாராகக் கிழித்து தினகரனில் தொங்கவிடுவது எப்படி?

இப்படித்தான்!

மதிமாறன் அவர்கள், தன்னுடைய மாளா உழைப்பால், சொந்த முயற்சியால் – ஒரிஜினல் அக்மார்க் வெறுப்பிய அபத்தக் களஞ்சியங்களைத் தொடர்ந்து மானாவாரியாக எழுதக் கூடியவர் என்றால், பராக்கிரமம் மிக்க மானமிகு யுவகிருஷ்ணா அவர்கள், அப்படியெல்லாம் மெனக்கிடாமல் – முழுமுதல் அபத்தங்களை இரக்கமேயில்லாமல் சுளுவாக அட்டைக் காப்பியடித்து மட்டுமே அபத்பாந்தவனாக தரிசனம் தந்து மினுக்கிக்கொண்டு அலைபவர்.

இருவருக்கும் விமோசனம் இல்லை, சரி. ஆனால், அவ்வப்போது நகைச்சுவைத் தேவைகளுக்காக இவர்களைப் படித்து, இவர்களின் எழுத்துச்சிந்தனைகளின் ஆழத்தையும் வீச்சத்தையும் கண்டு ஆச்சரியப்படும் எனக்கும் அதே அதோகதிதான், வேறென்ன சொல்ல! (என்னை யார் இந்த எழவுகளையெல்லாம் படிக்கச் சொல்கிறார்கள் என்பது நல்லொதொரு கேள்விதான். ஆனால், பத்ரிசேஷாத்ரியின் வலைத்தளம், அடியேன் உட்பட  கண்ட கழுதைகளின் காட்டுரைகளின் சுட்டிகளையும் ஆட்கொண்டு இருப்பதுதான் பிரச்சினையே! ! இதிலும் ஆரிய – பார்ப்பன – வடவ – அமெரிக்க – இஸ்ரேலிய – ஹிந்துத்துவ – பன்னாட்டு நிறுவன – உலகமயமாக்கல் சதி இருக்கிறதோ?)

இதுதாண்டா அரைகுறை (=திராவிட) தமிழ் இளைஞம்! :-(

Read the rest of this entry »

எனக்கு அமெரிக்காவில் வசிக்க ஒத்துவராது + பொதுவாக அமெரிக்க என்ஆர்ஐ ஜந்துக்கள் ஒத்துவரமாட்டார்கள்  (எனக்கு மகாமகோ துக்கம் கொடுக்கக்கூடிய வகையில் என் உறவினர்களில் பலர் இந்த ஜாதிதான்; கல்லூரியில் என் வகுப்பில் கூடப் படித்தவர்கள் அனைவரும் (மொத்தம் 17ல் 16 பேர்) இப்போது அமெரிக்கக் குடிமக்கள் – இது ஒருவிதத்தில் நிம்மதிதரும் விஷயம்தான்; ஆனாலும், அதிசயிக்கக்கூடிய வகையில் எனக்கு இன்னமும் பல அமெரிக்க என்ஆர்ஐ நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்? இவர்களுக்கும் மனப்பிறழ்வோ??) என்றாலும்…
Read the rest of this entry »

என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று –  என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும்   இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

Read the rest of this entry »

oops! sorry. erase erase. backspace backspace. ^H^H. delete delete. yo, i didn’t’ mean it. peace, peace.  look ma, no tricks.

... this kinda ARchiVist has only some random data taken from randomer archives - and then based on them - goes on to theorize  a whole series of generalizations and halfbaked, jaundiced hypotheses... and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

… this kinda ARchiVist has only some random data taken from randomer archives – and then based on them – goes on to theorize a whole series of generalizations and half-baked, jaundiced hypotheses… and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

tee hee. ha ha. hee haw. was reading a really wild oscar. and his importance of being earnest, in right earnest. so got carried away. apologies. but, this post is also a ‘trivial comedy for serious people,’ mind you…

Read the rest of this entry »

பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!)  ‘NRI’  தட்டச்சு குமாஸ்தா இந்திய  ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும்  கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!

இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற  கடைகளில் மெகாடன்னளவு வாங்கும்  சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ்  இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!)  தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல  இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »

நம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(

அதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((

Read the rest of this entry »

எனது செல்லமான  பழம்பெரும் எழுத்தாளர், ஜெயகாந்தன் இறந்த செய்திகேட்ட அடுத்த கணம், அடுத்த கணமே, துள்ளிக்குதித்துக்கொண்டு வாயுவேகம் மனோவேகமாக ஜெயகாந்தனின் வீட்டையடைந்தது ஒரு சாகசச் செய்தி என்றால், அடுத்தவரியில் ‘கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை,’ என்ற முக்கியமான செய்தி உண்மையிலேயே திடுக்கிடவைப்பதுதான்!

அதாவது, ஒருவர் இறந்ததற்குப் பின் அவர் உயிருடன் இருக்கமாட்டார் எனும் திடுக்கிடும் உண்மையை – ஒரு பக்கா தமிழ் அலக்கிய எழுத்தாளனைத் தவிர வேறுஎவன், மிகச் சிறப்பாக அவதானிக்க முடியும், சொல்லுங்கள்?
Read the rest of this entry »

அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!

Read the rest of this entry »

கடும் எச்சரிக்கை: இது என் கொடூரக் கனவொன்றின் தமிழாக்கம். இதனைப் போய் வேலைவெட்டியில்லாமல் படித்து, நீங்கள் உங்கள் துணைப்பொருளான கோவணத்தை நனைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னுடையதை இப்போதுதான் துவைத்து உலர்த்தியிருக்கிறேன்.

சரி.

இப்படி ஒரு கேள்வி: கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

இப்படி ஒரு எஸ்ராவிய பதில்: கோவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு கழுதையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த கழுதை , யாருடைய கழுதை, ஏன் இக்கழுதை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு கழுதையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையிலான தொடர்பு. கோவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.

Read the rest of this entry »

(அல்லது) பேராசிரியர் மதிமாறனார், பிஹெச்டி (மாட்டுக்கறி) அவர்களின் ஆய்வறிக்கை: கற்காலச் சோழர்களின் மாட்டுக்கறி

… நம்முடைய சகமுட்டாள் தமிழர்களின் மாட்டுக்கறி உணர்வை, அவர்களுடைய சோம்பேறித் தனத்தையும், தங்களுடைய சொந்த மாட்டுக்கறியைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமையையும் நினைத்தால் கோபம்கோபமாக வருகிறது எனக்கு.

உங்களுக்கு? Read the rest of this entry »

… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித்  தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.

ஏதேதோ சிந்தனைகள்… தூக்கமா கனவா நனவா எனத் தெரியாத குழப்ப கனவிலிநனவிலி நிலை… அதுவும் கனவுக்குள் கனவுகாணும் கந்தறகோளம். கதம்பமாகக் கலந்தடித்த எண்ணவோட்டங்கள்…

என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?

அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ?  என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!!  திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?

Read the rest of this entry »

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

Read the rest of this entry »

| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்:  ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |

சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.

ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.


பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…

Read the rest of this entry »