…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?

…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி  முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்;  எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(

ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)

Read the rest of this entry »

Waste.

A matter of utter waste.
Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

Read the rest of this entry »

…இந்தியாவை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைக்கிறேன். அந்த மும்முரத்தில் இருந்ததனால்தான் கடந்த பலவாரங்களாக ஒரு எழவு பதிவும் எழுதவேயில்லை! :-(

எப்படியாவது இந்த எழவெடுத்த, சகிப்புத் தன்மையேயற்ற இந்தியாவை விட்டுவிட்டு ஓடிப்போய் அமெரிக்காவே கோயிந்தா (அல்லது யேஸ்ஸூ அல்லது அல்லா; எனது சர்வமதச் சார்பின்மையைக் காட்டிக்கொண்டு கூத்தாடவேண்டுமல்லவா?) என நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்துவிட்டுதான் அடுத்த வேலை. மன்னிக்கவும்.

… ஆனால், அதற்கு முன்னால் இரண்டு ஸீன்களில் ஒரே கந்தறகோளக் கதை!  நானே எழுதி நடித்து டைரடக்கரும் செய்த என் சொந்தக் கதை…  வெறுமனே நான் ஸீன் போடுவதாக மட்டும் நினைத்துக் கொண்டு விடாதீர்கள், சரியா? Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை நீங்கள் பார்க்காதது நினைவிருக்கலாம். ஏனெனில் நான் அங்கு போகவில்லை.

உங்கள் வாசகர் உங்களுக்கு எழுதிய  ‘மேசன்களின் உலகம்’ கட்டுரைக் கடிதம் படித்தேன். புல்லரித்து அப்படியே உங்களைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இது ஏதாவது ஓரினச் சேர்க்கை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுமோ என உடனடியாகப் பயந்து, நாமிருவரும் தமிழினம்தானே, ஆகவேதான் இப்படி இனச்சேர்க்கை என்று சப்பைக்கட்டு கட்டி –  உங்கள் வாசகருடைய கடிதப்பதிவை என் எதிரிகளுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.

மேலும், அந்தக் கடிதத்தின் முழு பாதிப்பில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் வரிக்கு வரி சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி. உள்ளூர் வரிகள் மேலதிகம், கவனிக்கவும்.

Read the rest of this entry »

சுத்தமாக வேலை வெட்டியற்று இந்தப் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும், என்னால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களின் வெளியீட்டை அடிவயிற்றுக்கலக்கத்துடன், படபடக்கும் நெஞ்சுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்* உங்களைப் போன்ற சோம்பேறி வாசக மாக்களுக்கு

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் வயதுக்கேற்ப திராவிடத்தனமாக வாழ்த்த எனக்கு  வயதிருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம். ஆகவே முறையே ஆசிர்வாதம் கொடுக்கிறேன் அல்லது வணங்கி மகிழ்கிறேன்.

ஆனால் மன்னிக்கவும். Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது.  ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(

இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களின் கழுத்தறுப்புகளை விட மோசமான  மொழியறுப்புகளைச் செய்து தனித்துவம் மிளிரக் காட்சிதரும் பெருந்தகைகள், பலப்பலர், தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கின்றனர்.  அவர்களை அவ்வப்போது படித்து, நான் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.

…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… !

Read the rest of this entry »

பாவிகளே! நீங்கள் நாசமாப் போக!!

என்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டீர்களா… :-((

Read the rest of this entry »

(அல்லது) ங்கொம்மாள, போட்றா ஸார்க்கு ஒரு புர்ராட்டா!
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
(அல்லது) நவீன புர்ராணம்

நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Read the rest of this entry »

(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)

ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில்.  உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

(அல்லது) ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

…நேற்று எனக்கு, அர்விந்த் கண் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இதன்குறிப்பாகவும் ஒரு பிரமிப்பில் மூழ்கிய நான், என் அனுபவங்களைச் சார்ந்து அதைப் பற்றி ஜொலிப்போதிஜொலிப்பாக எழுதலாம் என்று பார்த்தால், ‘எதிர்மறை உலகம்‘  புகழ் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் நினைவு வந்து பேதி பிடுங்கிக் கொண்டு விட்டது! :-(

ஏனெனில், இதற்கும் ‘ஒத்திசைவு ராமசாமியும், ஒத்திசையாத அரவிந்தும்: எப்படி இதைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு பாலபாடம்‘ என்று ஒரு முழநீள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்படுமோ என்கிற ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான்!

ஆகவே, என் அரைகுறைக் குறிப்புகளையும் அரவிந்தனைத்த எதிர்வினைகளையும் சேர்த்து, அவருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பித்து என்னை நானே உய்வித்துக்கொள்ள முயல்கிறேன்… நன்றி.

Read the rest of this entry »

எஸ்ராபீடித்து ஜுரம் வந்தால்… … க்க்… தண்ணீர்… தண்ணீர்…. க்க் க்க்

விக்குபீடியனான எனக்கு இப்படித் தொண்டை வறண்டு விக்குகிறதே! யாராவது குடிப்பதற்கு நீர் கொடுத்துத் தொலைக்க மாட்டார்களா? க்க்…  க்க்

…வேதாளராமசாமியாகித் திரும்ப எஸ்ராமுருங்கமரம் ஏறினால்தான் தாகம் தீருமோ? விக்கல் போகுமோ?? எம்குறை அகலுமோ??? பிறவிப் பயனை அடைவேனோ????

மன்னிக்கவும்; இந்தப் பதிவை வைத்துக்கொண்டு, ‘விடுதலை’ வீரமணி அவர்கள், ‘சீனர்கள், ஸெராமிக்டைல் கற்காலத் தமிழர்களே!‘ எனச் சினமுடன் சீறும் சிறுத்தை அறிக்கையைச் செவ்வனே வெளியிட்டால், பின்னர் சீமார்சீனார் மேற்கொண்டு, தமிழ்சீனத்துக்காக ‘நாம் தமிழ்ச்சீனர்‘ எனவொரு இயக்கத்தை ஆரம்பித்து, ஒரு சீன் போட்டால் – அந்த எழவுகளுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியவேமுடியாது; முதலில் இதனைச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில், திராவிடப் பகுத்தறிவின் பொற்காலம் அப்படிக் கெட்டுக் கிடக்கிறது! எந்தப் புத்தில், எந்த திராவிட ஜீபூம்பா இருக்குமோ, நானறியேன்! Read the rest of this entry »

இவ்வரிசையின் முதற்பகுதி: குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)

அப்பகுதியின் முடிவில் இப்படியொரு கேள்வியெழவைக் கேட்டு முடிந்திருந்தேன்: ஸ்பெஷல்மஸாலா குசு விடுவது எப்படி?

அதற்குப் பதில் … இப்படித்தான்: http://www.vinavu.com/2015/07/29/what-abdul-kalam-failed-to-speak-about-cartoon/

‘ஆ’ என்பவர்கள் வினவுக் கூவான்கள் போன்றவர்கள். இவர்களின் அற்பத்தனத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்லையே இல்லை!

ஆக்கபூர்வமாக ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாமல் போனாலும், சொகுசாக உட்கார்ந்துகொண்டு குமாஸ்தாத்தனமாக சொகுசுக்களை விட்டேற்றியாக விட்டுக்கொண்டே இருப்பார்கள், இந்தப் பதர்கள்…

-0-0-0-0-0-0-

அப்துல்கலாம் அவர்களின்மீதான தூற்றல்களிலேயே மிக மோசமானது – என்னுடைய செல்ல வுடன்பெறப்பாரும், சொகுசுத்தீவிரவாதியுமான யுவகிருஷ்ணாவுடையதுதான். ஏனெனில், அடிப்படையில் அற்பர்களால், தரமற்றவர்களால் காரியப்புகழ்ச்சி செய்யப்படும் சோதனைதான் உலகிலேயே தாங்கொணா ஒன்று.

Read the rest of this entry »