ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரமணி அமெரிக்க ஸ்பெஷல் படையினரால் கைது செய்யப்பட்டார்!! :-( இதனைக் கேட்பாரில்லையா!
July 24, 2015
பகீர் செய்தி!
சென்னை, 23 ஜூலை, 2015: முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.
மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது!
இந்த சொறிமாற்றலைப் பற்றிச் சிலாகித்து வரையப்பட்ட இளவல் வெ. ராமசாமியாரின் ஆய்வுக் கட்டுரையானது ஜெயமோகன், கல்யாணராமன் போன்றவர்களால் போற்றப்பட்டதும் தமிழகம் அறிந்ததே. (ஆனாலும் இனமானமிகு ராமசாமியார், தன்னுடைய அண்மைய – எஸ்.ராமகிருஷ்ணன் குறித்த ஆழ்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை, இந்த இருவரும் கண்டுகொள்ளாத சதியையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்! எச்சரிக்கை!!)
சரி. இவர்களின் போற்றுதலால் – அவர் தளத்திற்கு என்றுமில்லாத வகையில் திராவிடர்கள் படையெடுத்துக் கூடவே சொறிசிரங்குகளையும் கூட்டிவந்ததையும் – ஆகவே இந்தவிஷயம் அமெரிக்க அதிபரான ஒபாமா முன் லாடம் வரை எட்டியதும் ஆச்சரியமில்லை.
தப்பும் தவறுமாக, இனம்புரியாமல் மானாவாரியாக உளறிக்கொட்டுவது ஒரு இனமானத் திராவிடனின் அடிப்படை வன்முறை உரிமை என்பதைப் பற்றிய புரிதல் ஒன்றுமேயில்லாமல் – எடுத்தேன் கவிழ்த்தேன் என திடுதிப்பென்று அமெரிக்கா செய்துள்ள இக்கொடுமையைப் பாரீர்!
இதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் காரணம்: அமெரிக்க நிறுவனம் ஒன்றைப் பற்றி, வீரமிகு வீரமணியார், அவருடைய வழக்கமான அறியாமையின் பாற்பட்டு அவதூறு பரப்பியதுதானாம்!
இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா? சற்றொப்ப 8 கோடி தமிழர்களே வீரமணியாரின் கொசுக்கடிகளை கடந்த 50 வருடங்களாக, பொருட்படுத்தாதபோது – அவரைப் பொறுத்துக்கொண்டிருக்கும்போது – இந்த அமெரிக்கா ஏன் இப்படி அழிச்சாட்டியம் செய்கிறது?
இது ஒரு பார்ப்பன-ஆரியச் சதி மட்டுமல்லாமல், மேலதிகமாக, ஒரு யூதச் சதியுமோ?
-0-0-0-0-0-0-
செய்திகளை உங்களுக்கு முந்தித் தரும் டிகே சகோதரர்களின் சனி குழுமச் சேன்னல்களிலிருந்து எடுத்த – இந்த கைது தொடர்பான மிகரகசியமான புகைப்படங்களும், செய்திக்குறிப்புகளும் (‘அரெஸ்ட் பண்றாங்க, அரெஸ்ட் பண்றாங்க!‘) கீழே: (இப்படங்களைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லவேண்டாம், சரியா? இவையெல்லாம் டாப் ஸீக்ரெட்!)
தமிழகத்தின் மூடமக்கள் தொலைக்காட்சிக்குள் தலைகளைக் கவிழ்த்துக்கொண்டு கந்தறகோள ஸீரியல்களைப் பார்த்துக்கொண்டு, எம்எஸ் விஸ்வநாதனின் இறப்பிற்கு அஞ்சலி செய்வதைப் பற்றிய வெட்டி சர்ச்சைகளில் ஆவேசமாக ஈடுபட்டு மூத்திரம் சிந்தி சிந்திக்கும்போதுதான் இந்த அலங்கோலம்…
அமெரிக்க ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் கமேன்டோக்கள் பல குழுக்களாகப் பிரிந்து பல வழிகளில் பெரியார் திடலை அடைந்து இருக்கிறார்கள்.
முதற்குழுவினர் மெரீனா கடற்கரை வழியாக, அண்ணா சமாதிக்கும் தம்பி சமாதிக்கும் நடுசென்டரில் புகுந்து ஓடி வந்திருக்கிறார்கள்!
கொஞ்சம் ஊன்றி, இந்த வலதுபக்கபடத்தை நோக்கினால், அவர்கள் கூட்டத்துடன் கூட்டமாய் ஒளிந்துகொண்டு, இரட்டைஇலைமறைவு காய்மறைவாக முன்னேறுவது தெரியும்…
இரண்டாம் குழுவினர், கமுக்கமாக அமெரிக்க தூதரகத்தில் இருந்து கிளம்பி – எழும்பூர் சென்று வேப்பேரி திடலை அடைந்தனர். (பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களும், ‘ஏதோ ஷூட்டிங் தான் நடக்குது’ என்று சலித்துக்கொண்டு இயல்பாகவே புட்டத்தைச் சொறிந்துகொண்டு நகர்ந்திருக்கின்றனர். சோகம்)
மேற்கண்ட புகைப்படம், இந்தக் குழு மேக்நிக்கல்ஸ் ரோட் சாக்கடைத் தெருக்களைத் தாண்டும்போது கமுக்கமாக, சனி சேனல்களால் எடுக்கப்பட்டது.
மூன்றாம் குழுவினர் ஹெலிகாப்டரில், நேரடியாகவே பெரியார் திடலில் இறங்கினர்! உடனே, அங்கிருந்த கழகத் தோழர்களெல்லாம், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று புறநானூற்று வீரத்துடன் ஒடிப்போய் பக்கத்திலிருக்கும் டாஸ்மேக் கடையில் நிபந்தனையற்றுச் சரணடைந்தனர்!
நான்காம் குழுவினர் பின்புலத்தில் இருந்தனர். பரங்கிமலையில் உட்கார்ந்துகொண்டு பைனாகுலரால் வேவு பார்த்துக்கொண்டிருந்தனர் – விவரங்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.
பாவம், இப்படியாகத்தானே – தன்னந்தனியே விடுதலை அலுவகத்தில், ‘சித்தம்போக்கு வயிற்றுப்போக்கு’ என்ற பகுத்தறிவுடன் பெரியார்புராணத்தைப் பாராயணம் செய்தபடி இருந்த வீரமணி அவர்களை, சுற்றி வளைத்தனர், பகைவர்கள்!
…அவர் எப்படித்தான் ஒரு பர்தா/புர்கா போட்டுக்கொண்டு தப்பிப்போக நினைத்தாலும், வளைத்துப் பிடித்து ஒரு கூண்டில் போட்டுக்கொண்டு சென்று விட்டனர், பாவிகள்!
ஆனால் – எவ்வளவோ மன அதிர்ச்சியுடன் இருந்தாலும், மகிழ்ச்சியோடு 48வது முறையாக – அதுவும் வெள்ளைக்காரர்களால் கைது செய்யப் பட்டதில், வீரமணி அவர்களுக்கு மிகவும் புல்லரிப்பே!
பாருங்கள், வெற்றுப் பெருமிதத்துடன் அவர் கூண்டிலமர்ந்து சிரிப்பதை… என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது! இதுதாண்டா திராவிட வீரம்! (ஆதாரம்)
…வீரத்துக்கு அப்பாற்பட்டு புளகாங்கிதமும் அடைந்த அவர், தன்னைக் கைது செய்து தமிழ்த் தொண்டாற்றிய ஒவ்வொரு வீரருக்கும் தன் புத்தகம் ஒன்றைக் கையெழுத்திட்டுப் பரிசாக அளித்தார்! என்ன நல்ல உள்ளம் அவருக்கு.
ஒரே நெகிழ்வாக இருக்கிறது. நான் இன்று காலையில் எஸ்ரா தளத்திற்குச் சென்றிருக்கக் கூடாதோ? :-(
ஆக, அமெரிக்காவின் ‘பிறத்தியார் வீட்டில் மூக்கை நுழைக்கும்’ போக்கினால், ஒபாமாவின் அமெரிக்கப்படை வீரர்கள் இந்த கேடுகெட்ட விஷயத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். இனமானத்தாரை வலுக்கட்டாயமாக, அம்மையாரின் ஆசியுடன் கைது செய்து அமெரிக்கா கொண்டு சென்றிருக்கிறார்கள். சிறையில் அடைத்து அவரிடம் இருந்து அனைத்து உண்மைகளையும் கறக்கப் போகிறார்கள்! :-(
ஹ்ஹ! ஆனால், அந்த அற்ப அமெரிக்கக் கைக்கூலிகளுக்குத் தெரியாது – வீரமணி மாதம் இருமுறை மட்டுமேதான் உண்மை பேசுவார் என்று!

ஆதாரம்: http://www.unmaionline.com/new/
அதுவும் அவர் பெயரை இருமுறை கேட்டால் கி. வீரமணி என மட்டுமே சமுதாய மாற்றத்திற்காகச் சொல்வார் என்று!
கழுகார் ஜிவ்வென்று பறந்துவந்து இஞ்சி மொரப்பா கொடு என முறைப்பாகக் கேட்டார். அவரிடம் சொன்னேன் — பப்பரப்பா பரபரப்பு எனப் பறந்துகொண்டிருப்பதற்குப் பதிலாக சுவையான செய்தி ஏதாவது சொல்லுமேன்.
அவர் சொன்னார் – இந்த ரகசிய ஆபரேஷன் நடந்துகொண்டிருக்கும்போதே பெரியார் திடல் பக்கத்து லாட்ஜ்களில் ரேஷ்மா போன்ற பெண்களிடம் பேட்டியெடுக்க, நம் யுவகிருஷ்ணா அவர்கள் சென்றிருந்திருக்கிறாராம். அவர் வேலையில் எவ்வளவோ கஷ்டங்கள், பாவம். ஆடும் தொப்புள் ஆட உறு தொப்புள் கிடைக்கிறவரை வாடி இருப்பான் ஊடகன் என்றார் கழுகார்.
அவர் பிதுங்கும் பாற்சுரப்பிகளிலும் ஆவல் உள்ளவராயிற்றே என்றேன் நான்! கழுகார் என்னைக் கண்டுகொள்ளாமல் ஜூட் விட்டுவிட்டுப் பறந்து ஒரு சுற்று சுற்றிவிட்டுத் திரும்பி என்முன் வந்து ஸெட்டில் ஆனார்…
ஆக, அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த யுவகிருஷ்ணா, மேலே விமானத்திலிருந்து பாராசூட்டில் பெரியார் திடலுக்குள் குதித்துக்கொண்டிருந்த அமெரிக்க கமேன்டோ(இவர் ஐந்தாம்படையினர்) ஒருவரை அண்ணாந்து பார்த்து, அவருக்கே உரித்தான அவருடைய அலாதியான தனிப்பட்ட பார்வையின்படி – குறிப்பாக, அந்த கமேன்டோவுடைய குண்டி மட்டும் அவருக்குப் பிரமாதமாகத் தெரிந்ததால், பக்கத்திருந்த தம் நண்பர் அதிஷாவிடம் விடலைத்தனமாக பார்ரா-சூத்து என்றாராம்!

(மேலேயுள்ள பார்ரா-சூத்து படம் சனி சேன்னல் உபயம்; காப்பிச் சக்கரவர்த்தியின் மந்தஹாசப் புன்னகையிடும் படம் நண்பர் ஒருவர் அருளியது. அவருக்கு என் நன்றி)
அதிஷா கோபத்துடன் முறைத்துப் பார்ப்பதற்குள்…
…ஆனால் அந்த கமேன்டோவுக்குத் தமிழ் தெரியுமாம். அவர்களை முறைத்துப்பார்த்து துப்பாக்கியை நீட்டி ‘சுட்டு விடுவேன்’ என்றாராம்.
அதிஷா உடனே கைகொட்டிச் சிரித்தாராம்! எங்கள் யுவகிருஷ்ணாவுக்கு உங்களை விடப் பலப்பல வருடங்களாகச் சுடுவதில் தேர்ச்சி, உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றாராம்!
அவசரமாக தன் ஐபேட் கருவியில் யுவகிருஷ்ணா தளத்திற்குச் சென்று பார்த்து ஆடிப் போய்விட்டாராம் அந்த கமேன்டோ! அவ்வளவு துப்புறவான சுடுதல்கள்!
அவர் கழுகுத்தனமாகச் சிரித்துகொண்டே சொன்னார் – அப்புறமென்ன விழுப்புரம். யுவகிருஷ்ணாதான் இப்போ டாப் எக்ஸ்பர்ட் சுடுவதில். சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர் அல்லவா.
நான் டபக்கென்று ஆயிரம் லிட்டர் குடிநீரை ஒரே மொடக்கில் குடித்து மயங்கினேன்!
கழுகார் தொடர்ந்தார்: அடுத்த இயல் இசை நாடகம் போன்ற எல்லா விருதுகளும் யுவக்ருஷ்ணா அவர்களுக்கே!
நான் மயங்கிவிழுந்துகொண்டே கேட்டேன்: ஏன் கழுகாரே அப்படி?
எனக்கு இப்போது பயமாகவே இருக்கிறது.
ஹ்ம்ம்… நான் கிண்டிய இந்தச் செய்தியையும் படித்துவிட்டு – நாளை ‘விடுதலை’ இப்படியொரு அறிக்கையையும் வெளியிட்டால் ஆச்சரியமில்லை!
அடலேறுகளே மடஇறங்குகளே!
…
…
**** இதுதான் அந்த – அஸ்கி திராவிடக் கழுதை —>>>
(\__ /`) / '/ 0 0 \ / \ / __/ \ /, _/ \ \_ `-./ ) | ~^~^~^~^~^~^~^~\~. ( / \_} | / | ; | \ / \/ ,/ \ | / /~~|~|~~~~~~|~|\ | / / | | | | `\ \ / / | | | | \ \ / ( | | | | \ \ /,_) /__) /__) /,_/ '''''"""""'''""""""'''""""""''"""""'''''
- திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு20/07/2015
- பாவப்பட்ட நார்ஸிஸஸ்ஸை, கதறக்கதற நாறடிக்கவைப்பது எப்படி 04/07/2015
- சிரியா? நல்லா சிரிய்யா! 05/09/2013
- படைப்புத்திருடல் செய்து இணையத்தில் படையல் வைப்பது எப்படி 08/08/2013
- பர்மா, பாலிங், வௌவால், இன்டெர்னெட் 04/08/2013
- சகட்டுமேனிக்கு, எதையும் ஒப்பேற்றுவது, அதாவது ‘தேத்துவது’ எப்படி – 17/03/2013
- போங்கடா நீங்களும் ஒங்க பொறநானூறும்… 15/03/2013
- “இன்டர்நெட்டுக்கு வயது முப்பது” – 22/01/2013
- யுவகிருஷ்ணா அவர்களும், பாவப்பட்ட வௌவால்களும் – 22/10/2012
- … இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! & – 06/10/2012
July 24, 2015 at 20:17
சார்… சிரித்து சிரித்து வயிறு புண் ஆனதுதான் மிச்சம்! இந்த சூழலை சாக்காக வைத்து திருவாளர் குருவி (வேறுயாருமல்ல இஸ்ரேல் புகழ் மணிகண்டன் அவர்கள் தான்… தனக்கு புத்தக விழாவில் அளிக்கப்பட மரியாதையை நினைத்துப் புளங்காகிதம் அடைந்து தனக்கு தானே வைத்துக்கொண்ட புனைப்பெயர்… மேலதிக தகவல்களுக்கு பார்க்க: குருவி தலையில் கிரீடம்), ESCAPE PLAN படத்தை torrent டில் download செய்து பார்த்துவிட்டு விமரிசனம் செய்யாமலிருந்தால் சரி!
July 26, 2015 at 09:14
நம்ம புராணங்கள்,சாமி கதைகள்,பிட்டுக்கு மண் சுமந்த கதைகள்,தாயை கொன்ற கதைகள்,ரிஷி பத்தியை ஏமாற்றி புணர்ந்த கதைகள் ,ஐயப்பன்,ஐயனார் உருவான கதைகள் எல்லாம் இதை விட சிரிப்பை,கிளுகிளுப்பை வரவைக்குமே ஐயா
கதை சொல்லும் விஷயத்தில் இன்று வரை அடித்து கொள்ள ஆள் கிடையாது என்பதை ஒத்து கொள்ள தான் வேண்டும் ஐயா
July 24, 2015 at 23:24
ஐயோ தெய்வமே … சிரிச்சி மாளல. ஏங்க இப்படி ?
July 25, 2015 at 06:37
பாப்பார இண்டுட்வா வெறி இப்ப்டிதான் சொல்ல்வைக்கும் திராவிட்ம் ஒயாது. திராவிடர்கள் முட்டாள்க்ளா
July 25, 2015 at 12:25
அய்யா அனானி , ஒரு இரண்டு வார்த்தைகளையாவது சரியாக எழுத கற்று கொள்ளுங்கள் ..பாவம் தமிழ் . திராவிடர் கையில் மாடி கொண்டு அவஸ்தை படுகிறது …////திராவிடர்கள் முட்டாள்க்ளா////
உங்களை பார்த்தால் அப்படி தான் தெரிகிறது
July 26, 2015 at 00:32
சபாஷ், இப்படித்தான் அநாமதேயமாக பெயரில்லாமல் வரவேண்டும். நாமெல்லாம் ‘கண்ணாளா போய்வா’ என்று போருக்கு அனுப்பிய ”பொறநான்றுத்தாயின்” மகன்களல்லவா ?
July 26, 2015 at 09:04
இது எல்லாம் நமக்கு நாமே திட்டம் ஐயா .ஹிந்டுத்வர்களுக்கு புதுசா என்ன.இவங்களே வெடிகுண்டை வீசிப்பாங்க,மாட்டு தலையை வெட்டி போடுவாங்க.
கலவரம் வந்தா தானே வெறி ஏற்றி வெற்றி பெற முடியும்.எதிர் கருத்து உள்ளவர்களை ஏளனம் செய்ய இதுவும் ஒரு வழி
July 26, 2015 at 10:46
பூவண்ணன் சார் புல்லரிக்க வைப்பதில் த்ராவிட டம்ளர்களுக்கு ஈடேதும் உண்டோ இப்புவியில்.
\\ இது எல்லாம் நமக்கு நாமே திட்டம் ஐயா .ஹிந்டுத்வர்களுக்கு புதுசா என்ன.இவங்களே வெடிகுண்டை வீசிப்பாங்க,மாட்டு தலையை வெட்டி போடுவாங்க. \\
எப்புடி சார் இது. ரூம்பு போட்டு யோஜிப்பீங்களா. நீங்க சொல்ல வருவது என்ன ………… இது நாள் வரைக்கும் குஜராத் கலஹம் ஹிந்துக்களுக்கும் முஸல்மாணியருக்கும் இடையே நடந்த கலஹம் என்று தான் நினைத்திருந்தேன். உங்களுடைய யோஜனைப்படி அதுவும் கூட முஸல்மாணிய ஜிஹாதிகளுடைய தமக்குத் தாமே திட்டம்தானோ.
பொலிக பொலிக. உங்களைச் சொல்லிக் குத்தமில்லை. மாட்டைப் பத்தி யோஜனை செய்தாலே கூட த்ராவிட கோத்ரோத்பவ மதிப்ரஷ்ட வ்யக்தி விசேஷாதிகளுக்கு சிரஸின் மேலிருக்கும் காலிஃப்ளவர் காணாமல் போவதில் வியப்பென்ன.
ராம் மறந்து போகலாம். உங்களுக்கு பார் பார் நெனவூட்டி வேதாளத்திடம் தோற்றுப்போன விக்ரமனாக இருக்கலாம். நான் முயற்சியில் இன்னமும் தளராத விக்ரமன். எப்பங்காட்டி நீங்க தமிழகத்து ஃப்ளெக்ஸ் தட்டி வார் டேன்ஸ் மாணவத் தறுதலைச் செல்லங்கள் பற்றி இங்கு வ்யாசம் சமர்ப்பிக்க இருக்கிறீர்கள். அண்ணாவின் நாமத்துக்கும் அவுரு ராம்சாமி நாய்க்கருக்கு போட்ட நாமத்துக்கும் ஜோரா ரெண்டு தபா விசிலடிச்சு நீங்க வ்யாசத்த அட்ச்சு வுடுங்க சார்.
July 26, 2015 at 21:42
என்ன பூவண்ணன் சார், சொந்த அனுபவம் சிறகடிக்குது போல :)
July 26, 2015 at 07:45
அனானியின் திராவிடம் ஓயாது. தமிழ் கொலையும் ஓயாது. திராவிடமும் தமிழும் எப்படி ஒன்றாகும் ? அய்யா அனானி நீவிர் உண்மையான தி(த)ராவிடர் தான்!
July 26, 2015 at 10:14
WHY YOU ARE NOT WRITING ABOUT VIKATAN GROUP MAGAZINES? THEY ARE BEGGING TAMIL PEOPLE ON BEHALF OF DMK!
July 26, 2015 at 10:16
Sir, I do not read them. And, we do not use toilet paper at home, sorry.
The only magazine that I used to like from this group was pasumai vikatan – and even that has become quite sad.
And sir, are you a staunch capitalist?
__r.
July 26, 2015 at 11:02
அன்பின் ராம்
\\ pasumai vikatan – \\
உங்களுக்கு ஹவாலா காண்ட் புகழ் பத்ரிக்கையாளர் ஸ்ரீ வினீத் நாரயண் ஜீ பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
அவர் 86 கோச விஸ்தீர்ணமுள்ள (1 கோசம் அல்லது க்ரோசம் = 3.66 கிமீ) வ்ரஜத்தில் (=ப்ருந்தாவனமும் அதைச் சுற்றியுள்ள் … உபி, ராஜஸ்தான் மற்றும் ஹரியாணா ராஜ்யங்களிலிருக்கும் வ்ரஜபூமியில்) பற்பல வனங்களையும் குண்டங்களையும் (தடாகங்கள்) புனருத்தாரணம் செய்து வருகிறார்.
ஆஸ்தா சேனலில் இது பற்றி தொடர் ஹிந்தியில் வருகிறது.
நீங்கள் டிவி பார்க்க மாட்டீர்கள் தெரியும். யூ ட்யூபில் ஹிந்தியில் இதன் பதிவு உள்ளது. 18 – 20 நிமிஷங்களிலான 19 தொடர்கள். அதில் முக்யமான ஒன்று ப்ருந்தாவனத்தில் ப்ரபலமான ரங்க ஜீ மந்திர் அருகே உள்ள ப்ரம்ம குண்டத்தை இவர் புனருத்தாரணம் செய்தது. இந்த உரலில் https://www.youtube.com/watch?v=RvqAyEo82ek. கிட்டத்தட்ட 25 வருஷங்களாக இந்த இடத்தை ஒரு குப்பை மேடாகவே பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பரிக்ரமா செய்யும் போதும் அந்த குப்பை மேட்டப்பார்த்து கைகூப்பி இது ப்ரம்ம குண்டம் என்று மனதால் வணங்கிச் சென்றிருக்கிறோம் (வெட்டியாக). இப்போது மீட்டா பானி இங்கு கிடைக்கிறது. தெற்கே சர்க்காருடன் ராம் மன்றாடுவது போல வடக்கே இப்படியும் விடாக்கண்ட ப்ரக்ருதி இருக்கிறார் என்பது தெம்பாக இருக்கிறது.
சேலத்திலும் ஸ்ரீ பீயுஷ் மானுஷ் என்ற அன்பர் ஏரிகளை புனருத்தாரணம் செய்து வருகிறார்.
இவருடைய முயற்சிகள் பற்றிய விபரங்கள் http://www.brajfoundation.com ல் உள்ளது. IIT மாணவர்களுடைய துணையுடன் முழு வ்ரஜ்பூமியையும் சர்வே செய்து மேப்பிங்க் செய்து ஒவ்வொரு ஹெரிடேஜ் சைட்டுகளையும் புனருத்தாரணம் செய்ய முழுமையான DPR தயார் செய்து ஊழல்வாத கேந்த்ரீய காங்க்ரஸ் சர்க்கார், உபியில் முலாயம் சர்க்கார் மற்றும் மாயாவதி சர்க்காருடன் மன்றாடியவர். தொழிலதிபர்களுடைய உதவிகள் மூலமாகவும் பல புனருத்தாரணங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று இது வ்ரஜத்தில் ஒரு பெரிய மக்கள் இயக்கம்.
July 28, 2015 at 18:42
திரு ராம்
கலக்கல் பதிவு. (பாராசூட் மேட்டரை ஒரு ஜோக் போல மாற்றி என் 12 வயது மகனிடம் சொல்லப்போய் அவன் அரை மணி நேரம் சிரித்துக்கொண்டிருந்தான்) நகைச்சுவையை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால், அதனுடைய சாரம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மீதான, அவர்களின் சுய பரிசோதனையற்ற demagogue சிந்தனை சுரண்டல்களின் மீதான பகடி என்று தோன்றுகிறது.
கொஞ்சம் நீண்ட பதிவுக்கு மன்னிக்கவும். மிகப்பல தவறுகளுடன்.
இந்த self debilitating கட்டமைப்பு இத்தனை வருடங்களாகக் கொஞ்சம் கூட சிதிலமடையாமல் முன்னோக்கிச்செல்வது ஆச்சரியம்தான். அதற்கானக் காரணிகள் (root causes) இன்னும் முழுமையாகப்புரிந்துகொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன். இதில் உளவியல் காரணிகள்தான் ‘தல’யாவனவையாக இருக்கும் என்பது உறுதி. உங்களின் வெவ்வேறு பதிவுகளில் நீங்கள் இதைப்பற்றி விரிவாக அலசியிருந்தாலும்…
தமிழர்களை இரண்டு குழுக்களாக பிரித்துப்பார்க்கிறேன்.
ஒரு குழு அந்த சமூகத்துக்குள் வாழ்ந்துகொண்டும், அதன் சிதைவை, சராசரித்தனத்தை, அடாவடித்தனங்களை தினசரி வாழ்வில் சந்தித்துக்கொண்டு, ஏதாவது மாற்றம் வராதா என்ற இயலாமையில் தவிக்கும் மக்களால் உருவாக்கப்படுவது. அவர்கள் இயல்பிலேயே சுயசார்பு கொண்டவர்களாகவும், சச்சரவில்லாத வாழ்க்கையை விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள் (என்னைப்போன்றவர்கள்- 15 வருடங்களாக தமிழ் நாட்டுக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருந்தாலும் இந்த வகையினர்தாம்). தான், தன் குடும்பம், சமூகம், எதிர்காலச் சந்ததியினர்க்கான கனவுகள், அவைகள் சார்ந்த தன் பொறுப்புகள், மதிப்பீடுகளில் முடிந்தவரை நம்பிக்கை கொண்டவர்கள்.
இரண்டாவது குழு, சமூகச்சீரழிவின் மூலக்ககட்டமைப்பை வழிநடத்திச்செல்பவர்களும், அதன் அடிப்படை கட்டுமானமாங்களாகவும் இருப்பவர்கள். இந்த இரண்டாம்வகையினர் masses (முதல் வகையினர் மேலானவர்கள் (upper class) என்ற அர்த்தத்தில் அல்ல-அவர்களை வேண்டுமானால் insignificant masses என்று கொல்ல’லாம்). இவர்களின் சிந்தனைப்போக்கை வழிநடத்துபவர்கள் தலைவர்கள். அரசாங்கத்தின் சாதாரணமானச் செயல்பாடுகளை, அரசாங்கம் இயக்கத்தில் இருப்பதற்கான சங்கேதங்களை மாபெரும் சாதணைகளாகவும் அவற்றை வெற்றி முழக்கங்களோடும் அறிவிப்பவர்கள். உதாரணத்திற்கு, விவசாயத்திற்காக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுதல்; காவிரித்தாய் மற்றும் காவிரி குண்டாண்’கள். இந்த masses அபரிதமான ஜனநாயக நிர்ணயச்சக்தியைப் பெற்றவர்கள். ஆனால் தங்களை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் சக்தியை மீண்டும் மீண்டும் தங்களை ஏமாற்றும் தலைமையையே தெரிவு செய்யும் அறியாமையால் வீணடிப்பவர்கள். கிட்டத்தட்ட conditioned reflex போல் இது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இவர்கள் செய்வது அறியாமையால்தான்.
ஆனாலும் “There is nothing more frightful than ignorance in action.” என்று Johann Wolfgang கூறியதை மெய்யாக்குவது போல்…
ஆனால் தமிழகத்தின் வெளியில் இருந்து அவதானிப்பவர்களுடைய பார்வை முற்றிலும் வேறாக உள்ளது.(குறிப்பாக வட இந்தியர்கள்-பறவைப்பார்வை). தமிழர்கள் திறமையானவர்கள், உழைப்பாளிகள், நேர்மையாளர்கள் மற்றும் படிப்பாளிகள். மேலும் தமிழகம் முன்னேற்றப்பாதையில் போய்க்கொண்டிருப்பதாக நம்புபவர்கள்.
இதை ஓரளவு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நேர்மையின்மை, ஊழல், வன்முறை கந்தறகோளங்களைத் தாண்டி தமிழகம் முன்னால்தான் பொய்க்கொண்டிருப்பதாகத்தான் தோண்றுகிறது. ஆனால் இந்த முன்னேற்றம், நம் நாட்டின் விளையாட்டு வீரர்களைப்போல் தனிப்பட்ட சுயமுயர்ச்சிகளின் விளைவு மட்டும்தான்.
பலமுறை நான் இந்த விஷயத்திற்கு ஒரு 8D report தயாரிக்க மு(அ)யர்ச்சி செய்திருக்கிறேன். இயல்பிலேயே தன்முனைப்போடு இருந்த, இன்னும் இருக்கின்ற ஒரு சமூகம் அடைந்திருக்கும் தூரத்தை, அது அடைந்திருக்கக்கூடிய தூரத்தோடு ஒப்பிட்டால் விரக்திதான் எஞ்சுகிறது
ஏதோ சொல்ல வந்து இங்கு முடிக்கிறேன்
இந்தப் பின்(முன்)புலத்தில் நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி மகத்தானதாக நினைக்கிறேன். உங்கள் பல்நோக்குப்பார்வை, விஷய ஞானம், பல்வேறு தரவுகளை ஒரு குவியத்தில் கொண்டு வரும் திறமை மேலும் ஆச்சர்யமூட்டுபவை
சிவகுமார் விஸ்வனாதன்
October 8, 2017 at 05:37
[…] ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரம… 24/07/2015 […]
May 3, 2019 at 07:53
[…] ஆ! ஐய்யோ! தமிழர்தலைவர் ‘விடுதலை’ வீரம…24/07/2015 […]