சந்தனம், செம்மரம், திராவிடக் கொள்ளை, இசுடாலிர் அடிப்பொடிக்கு பதில்கள், கருணாநிதி அவர்களின் சொத்துகள் பற்றிய ஒரு அனுமானம், எனக்கு இன்னுமொரு துரோகி பட்டம் இன்னபிற ;-)

June 23, 2015

என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று –  என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும்   இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

—-0—0—0—

இப்போது, என்னுடைய செம்மரப் போரோளிப்பதிவின் சில திராவிடப் பின்னூட்டங்களுக்குப் பதில்கள், கருத்துகள்:

‘ப்ரௌட் திராவிடன்’ எனத் தன்னை ஆச்சரியகரமாக விளித்துக்கொண்ட மகாமகோ பெருமைக்குரிய ‘தமிழ் ஆர்வல’  நபர் ஒருவர், சில ‘நியாயமான’ கேள்விகளை ஒரு மண்ணாங்கட்டி ஆங்கில நடையில், கேபிடல் எழுத்துகளில் கேபிடலிஸ்ட்டாக, திராவிட அரைகுறைத்தனத்துடன் எழுப்பியிருக்கிறார். ஒத்திசைவைத் தலையில் அடித்துக்கொண்டு வேலையற்று விடாமல் படிக்கும்தாங்கள் இறும்பூதடைய – அவற்றை வெட்டி, ஒட்டியிருக்கிறேன்.

// எனக்குத் தெரிந்து, கடந்த 15 வருடங்களில் இந்த தமிழக மரமறுப்பு வெறியர்கள், குறைந்த பட்சம் 3 (4?) ஆந்திர வனத்துறை அதிகாரிகளைக் கொன்றிருக்கிறார்கள். இதில் ஒருவரை (1-2 வருடங்கள்முன் நடந்தது என நினைவு) மரத்தில் கட்டி கல்லாலும் கட்டையாலும் அடித்துமட்டுமே படுகுரூரமாகக் கொன்றார்கள்.

IS THERE ANY PROFF FOR ALL THESE FALSE ALLEAGATIONS?

அய்யா பெருமைக்குரிய எருமை திராவிடரே! உங்கள் திராவிடக் கொலைகொள்ளை பானைக்கு ஒருசோறு பதம்:

டிஸெம்பர் 2013ல் ஆந்திரத்தின் சேஷாசல வனத்தில், கீழ்கண்ட இரண்டு ஆந்திர வனத்துறை அதிகாரிகளை – நம் திராவிடத் தமிழ் திருடர்கள் கட்டிவைத்து, பாறாங்கற்களாலும் மரக்கட்டைகளாலும் அடித்தே, கோடரிகளால் வெட்டியே கொன்றார்கள்:

1) டேவிட் கருணாகரன் ( சேஷாசல வனப்பகுதியின் துணை வனச்சரக அதிகாரி; இவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத் தக்கது!)

2) ஸ்ரீதர் செருமர்லா (ஆந்திர வனத்துறை அதிகாரி; இவரது இண்டிபேரு செருமர்லாதானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது; என் நினைவுகளிலிருந்து, கிழிந்துகொண்டிருக்கும் குறிப்பேடுகளிலிருந்து எடுத்து இவற்றை எழுதியிருக்கிறேன்.)

உங்கள் முரசொலியைக் கடாசிவிட்டு தெலெகு தினசரிகளையும் ஆந்திர ஆங்கில தினசரிகளையும் படிக்க ஆரம்பிக்கலாம். எப்படியும், தற்போது 10000 அளவில் இருக்கும் தங்களுடைய ஐக்யூ (அல்லது ‘சாப்பிட்டு. சாப்பிட்டு’ தொந்தி பெருத்திருக்கக்கூடிய உங்கள்  உடலில் தங்களுடைய மூளையின் விகிதம்) / பொது அறிவு உங்களுக்கு 0.000000001%த்திலிருந்து 0.00000001% வளர்ச்சி காணவேண்டுமல்லவா?

தயவுசெய்து உங்கள் ஆங்கிலத்தைச் சரிசெய்துகொள்ளவும்.

// (பார்க்க: அக்கால இசுடாலினாரின் மறைமுக ஜவ்வாது சந்தனக் கொள்ளை பற்றிய பதிவு)

IS THERE ANY PROFF FOR ALL THESE FALSE ALLEAGATIONS?

அய்யா, திராவிடரே! நீங்கள் நீதிபதி ஏ ராமன் அவர்கள் கண்டுகொள்ளாமல் விட்ட அல்லது அவருக்குக் ‘கிடைக்காமல்’  இருந்த சாட்சியங்களைத் தான் கேட்கவேண்டும். நான் எனக்குத் தெரிந்த விவரங்களை – இந்தக் கொள்ளை நடந்த ‘அறிவியல் பூர்வமான’ வழிமுறைகளைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன்.

தாங்கள் ராமன் கமிஷனின் முழு அறிக்கையையும் படித்து விட்டு அக்கால கருணாநிதியின் சிபி-சிஐடி நடத்திய அவசரப் ‘புலனாய்வையும்’ ஜெரித்து, விழுந்து விழுந்து சிரிக்கவும்!

எப்படியும் இந்த விவகாரத்தைப் பற்றிக் கொஞ்சம் விலாவாரியாக எழுதுவதாகத்தான் இருக்கிறேன். என் குறிப்புகளில் தேடிக்கொண்டிருக்கிறேன். கவலை வேண்டேல்.

MANIDABIMANAM ATRAA PAPPAARA DUROKI

நன்றி, திராவிடரே! :-) எனக்கு மனிதாபிமானம் வேண்டிய அளவுக்கு இருக்கிறது. திராவிடத் திருட்டாபிமானம்தான் இல்லை!

தயவுசெய்து உங்கள் ஆங்கிலத்தைச் சரிசெய்துகொள்ளவும்.

DALAPADI STALIN VAALGA
NEXT CM STALINDAN APPA ONAKKU APPU

‘அன்பரே, வெட்டியாக மிரட்டாமல் தங்கள் பின்பக்க ஓட்டையை அடைத்துக்கொண்டு ஓடவும்’ (அல்லது) ‘போடா முட்டாக்கூ’ எனச் சொல்ல ஆசை; ஆனால் உங்களைத் தேவையற்று அவமதிக்க விருப்பமில்லை. என்னுடைய கண்ணியத்துக்கு என்னை மன்னிக்கவும்.

…அது சரி, எனக்கு ஆப்பு வைப்பது இருக்கட்டும். உங்கள் டலபடி இசுடாலிர் அடுத்த முதலை அமைச்சராக என் வாழ்த்துகள். உங்களுக்குக் கற்பனை வளம் கொஞ்சம் அதிகம்தான். ( நீங்கள் கதை நாவல் எல்லாம் எழுத ஆரம்பித்தால், ஜெயமோகனே பயந்துபோய் ஓரம் ஒதுங்கிவிடுவாரோ? ;-))

மறுபடியும் மறுபடியும் அதே விண்ணப்பம் (என் நண்பர் எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுடைய மொழியில், இந்த விண்ணப்பத்தை skybread அல்லது skyfriedsweetdumpling  எனவும் எஸ்ராங்கிலத்தில் முழிபெயர்க்கலாம், சரியா?):  தயவுசெய்து உங்கள் ஆங்கிலத்தைச் சரிசெய்துகொள்ளவும்.

பின்னர் ஊக்கபோனஸாக – வெள்ளைக்கார தேவரீர், தமிழில் ஒழுங்காக படிக்க எழுத கற்றுக்கொள்ளவும். மயிரெழுத்துகள் 13 பொய்யெழுத்துகள் 18 என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம், சரியா? :-))) 8-))) B-)))

—-0—0—0—
//ராம், இருக்கும் இடத்தை அழித்து இவ்வளவு காசு சேர்த்து என்ன செய்ய போகிறார்கள் :(
அய்யா அரிஸொனாகாரரே, எனக்கும் இந்த எழவு புரியவேமாட்டேனென்கிறது.

நம் செல்ல கருணாநிதியை எடுத்துக்கொள்ளுங்கள். ஏழெட்டு மணி நேரங்கள் செலவழித்து, விவரங்களைச் சரிபார்த்து போடப்பட்ட, 20 ஆண்டுகளுக்கு முந்தைய என்னுடைய ஒரு கணக்கின்படி – சுமார் 6 தலைமுறைகளுக்கு, ஏற்கனவே வேண்டுமென்கிற சொத்து சேர்த்தாகிவிட்டது. அதாவது குடும்பத்தினர் கணக்கு தற்போது சுமார் 95 – அடுத்த தலைமுறை 180 அடுத்தது 360 அடுத்தது 720 என 6 தலைமுறைகளுக்குத் தொடர்ந்தால் கூட இன்னமும் மிச்சம் இருக்கும். (தலைமுறை 30 வருடங்கள் என்ற கணக்கில்; ஒருவருக்குத் தற்போதைக்கு 20 கோடி என்கிற கணக்கிலேகூட!! எம் தமிழினத் தலைவரின் மூளையையோ, மகத்தான உடலுழைப்பையோ, மாளா பேராசையையோ நான் என்றுமே குறைத்து மதிப்பிட மாட்டேன்.)

யக்ஷனைப் பிடித்து உலுக்கி மஹாபாரத தருமனைக் கேள்விகேட்கச் சொன்னால், ஒருவேளை உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கலாம். ;-)

திராவிடத் தமிழனின் பேராசையும் அயோக்கியமும் அளவிட முடியாதவைதான்.
//சாருக்கு ஒரு தமிழ் துரோகி பட்டம் பார்சல் …

அய்யா ரவி, எனக்கு ஏற்கனவே இந்த பட்டம் பலமுறை கிடைத்து அவை ஆடிக்காற்றில் ஆடிக்கொண்டே பறந்துகொண்டிருக்கின்றன. ஆகவே தங்கள் பரிந்துரைக்கு மிகவும் நன்றி.

இருக்கும் பட்டங்கள் டீலில் அறுந்துபோனவுடன் உங்களிடம் வருகிறேன், சரியா? ;-)

சுபம்.

தொடர்புள்ள பதிவுகள்:

One Response to “சந்தனம், செம்மரம், திராவிடக் கொள்ளை, இசுடாலிர் அடிப்பொடிக்கு பதில்கள், கருணாநிதி அவர்களின் சொத்துகள் பற்றிய ஒரு அனுமானம், எனக்கு இன்னுமொரு துரோகி பட்டம் இன்னபிற ;-)”

  1. ravi Says:

    அருமை ராம், இந்த பதிவிற்கு அப்பறம் , இன்னும் நிறைய துரோகி பட்டங்கள் உங்களுக்காக காத்து இருக்கின்றன .. உபயம் நம் செல்ல , திராவிட இன மான குஞ்சுகளிடமிருந்து


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s