கணிதமேதே ராமானுஜே எஸ்ராமகிருஷ்ணமே கனகஜ புருடாம் பீலாம் வர்த்தனம் வர்த்தமானம் வர்த்தகமே ஸதாஸர்வகாலத்திலும் கரிஷ்யாம்! (1/2)
July 6, 2015
சங்கல்பம்: தகத்தகாய பரதேசி – வெள்ளைப்பன்றி காலத்தே – விவஸ்தையில்லா நேரத்தே – அஷ்டாவக்கிரப் பார்வையிலே – கலியுகத்திலே – முக்கியமான முழுமுதலான பாடையிலே – வறட்டுக் கண்டே, ஜம்புவின் ஜெய்ஷங்கரே, பரட்டை ரஜினியே, வர்க்கிங்டே மன்டே, மேரூ டாக்ஸியே, தக்ஷிண் ஹோட்டலே, பார்ஸ்ன் காம்ப்ளெக்ஸே, அஜித்விஜய் ஆரியமாஸே – நெடுங்குருவிப் பட்சியே – சுக்குல இஞ்சியே, தேசாந்திரியே, துணையெழுத்தே, சஞ்சாரியே, நெடுந்துக்கமே… கொடுங்கனவே, மீளாத் துயிலே, கொரட்டையே … …
(நன்றி: எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேரடி ஏகோபித்த மொழிபெயர்ப்பில் – சங்கல்ப மந்திரம். எப்படி இருக்கிறது?)
பயப்படாதீர்கள்! பிரபஞ்சப் பார்வை, தோற்றம் குறித்த இம்மந்திரத்தின் உச்சாடனத்துடன் தான் ஹிந்துமதங்களின் பெரும்பாலான வைதீகச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன. ஆனால், இதனை ஏன் தமிழில் உச்சாடனம் செய்யாமல், ஸம்ஸ்க்ருதத்திலேயே கமுக்கமாகச் செய்துவிடுகிறோம் என்பதற்குக் காரணம் எஸ்ரா அவர்கள் மட்டுமே! மேற்கண்டதைப் படிக்கப் படிக்க மாயபதார்த்தவாத மிகமிகப்பின் நவீனத்துவம் போல்தானே இருக்கிறது? அதனால்தான், விட்டால் போதும் என்று ஒன்றும் புரியாத ஸம்ஸ்க்ருதத்திலேயே உச்சாடனம் செய்து விடுகிறோம்! (சரி. ஒரிஜினல் சங்கல்ப மந்திரம் இங்கு இருக்கிறது – தெகிர்யமிருந்தால், நெஞ்ஜில மஞ்சாசோறு இருந்தால், வார்த்தைக்கு வார்த்தை பொருத்திப் பார்த்துக் கொள்ளவும்!)
சரி. வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி! எனக்கு முழுவதும் பைத்தியம் பிடித்துவிட்டது!! இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்து எறிந்துவிட்டேன்… ஆக, நான் ஒரு பண்டமிழ் நெடுமுடிக்கிள்ளிதான்.
என் வீட்டுப் பாய்களை எல்லாம் பிராண்டிப் பிராண்டிக் கிழித்து விட்டேன். நாளை, பக்கத்தூர் கோட்டக்குப்பம் போய், அங்குள்ள பாவப்பட்ட பாய்(மார்)களையும் கிழிக்க ஒரு இடைக்காலத் திட்டமும் கைவசம் இருக்கிறது.
பின் ஆம்பூர் போய், அங்கு பொதுச்சொத்துகளை அண்மையில் ஏகோபித்து அழித்தொழித்த, இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களாக சமுதாயப்பதவி உயர்வைப் பெற முயலும் – சரியான தலைமையும் வழிகாட்டுதலும் அற்ற சராசரி பாய்மார்களையும் ஒரு கை பார்க்கலாம் எனவும் – அந்த அரைகுறை வினவு போன்ற ஒரு தினவு.
நெடுங்காலத்திட்டமாக, மேதகு ரஜினி அருளால், பாயும்புலியாவதாகவும் ஒர் யோசனை.
யோசனைமேல் யோசனை, போதுமடா சாமி.
-0-0-0-0-0-0-0-
இது அவருடைய புத்தம்பழைய கட்டுரைகளில் ஒன்று – இருந்தாலும் புதுமெருகு குலையாமல், அனாதையாகப் பேந்தப்பேந்த முழித்துக்கொண்டிருக்கிறது, பாவம்.
அதனால் தான், நான் அதனைத் தடுத்தாட்கொண்டு அபயம் தரலாமென அதைப் படித்தால் – என் பேத்தல் புத்தியடைந்து விட்டது.
கடவுளே! உலகத்தில் வேறுயாருக்கும் இப்படியொரு கஷ்டம் வரவே கூடாது சாமியோவ்! :-(
-0-0-0-0-0-0-0-
ஆம். தேவைதான். மனிதன் வாய்விட்டுச் சிரிக்க நம் தமிழகத்தில் பலப்பல விஷயங்கள் அனுகூலமாகவேயில்லை. விடுதலைவீரமணி அவர்கள் மாமாங்கத்துக்கு ஒருதடவைதான் ‘ஃபுல் தாலி அறுத்தல் பீஃப் மீல்ஸ்‘ நிகழ்ச்சிகளை நடத்துகிறார், நானும் வேறென்னதான் செய்வது, சொல்லுங்கள். அவ்வப்போது வினவு யுவகிருஷ்ணா மதிமாறன் என்று படித்தாலும் சிரித்துச் சிரித்து ஒரேயடியாக வயிற்றுவலி வந்துவிடுகிறது. அதையும் தாங்க முடியவில்லை. :-(
அதனால்தான், எஸ். ராமகிருஷ்ணனாதிகளின் சேவை, இக்காலங்களில் முக்கியமானதொன்று. எப்படியென்று நீங்கள் கேட்காவிட்டாலும், நான் தொடர்ந்து எழுதத்தான் போகிறேன்.
-0-0-0-0-0-0-0-
ஆனால், அவருடைய உழைப்பை, கலையை மதிக்காமல் – அவருடைய கட்டுரைக்கான அடியேனின் பழிப்புரையை உங்களுக்குத் தர எண்ணம். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு படிப்பதை நிறுத்தவேண்டுமென்றால், தாராளமாக இங்கிருந்து வெளியேறலாம், சரியா?
வீட்டில் யாருமில்லை. ராமானுஜத்தின் மூச்சுகாற்றும் விரல்ரேகைகளும் மட்டுமே மீதமிருக்கின்றன.
கவித்துவத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் – இவரும் உள்ளே நின்றுகொண்டு தான் இப்படி யோசிக்கிறார். அப்போது அவரும் வீட்டிலில்லையா? இருந்தாலும் மூச்சே விடவில்லையா? அல்லது எஸ்ரா ஒரு அருவுமா? அய்யோ! பயமாக இருக்கிறதே!
ராமானுஜனின் மூச்சுக் காற்றா? அது இன்னமும் அங்கேயே பேய்போலச் சுற்றிக்கொண்டிருக்கிறதா? தொடர்பேயில்லாத விரல் ரேகைகளா? இன்னாபா??
விஞ்ஞான உலகம் இன்றுவரை வியந்து போற்றிக் கொண்டிருக்கும் மேதையின் வீடு என்பதற்கான எந்த சிறப்பும் அதற்கில்ல். ஒரு எளிய மனிதனின் வாழ்விடம் போலவே உள்ளது.
சும்மனாச்சிக்கும் அட்ச்சுவுடும் நெகிழ்வோதிநெகிழ்வினால் ஆய பயன் என் கொல், எஸ்ரா? :-(
நுறு வருடங்களுக்கு முன்பு மின்சார வசதி இல்லாமல் அகல் விளக்கின் வெளிச்சத்தில் கையில் பனையோலை விசிறியை வீசிக் கொண்டு இந்த அறையில் ராமானுஜம் படித்துக் கொண்டு இருந்திருப்பார் என்ற காட்சி மனதில் கடந்து போனது.
சரி, அந்தக் கழுதையையே விடுங்கள்… அந்தக் காட்சி எப்படி மனதில் கடந்து போகும்? எங்கிருந்து வந்தது? எங்கே செல்கிறது? எதைக் கவித்துவமாகக் கடக்கிறது??
ராமானுஜத்தின் பள்ளி வாழ்வும் கல்லுரி படிப்பும் இதே வீட்டில் தான் நடந்தேறியிருக்கிறது. இந்த வீதிகளில் அவர் உலவி திரிந்திருக்கிறார். இந்த திண்ணையில் கையில் சிறிய நோட்டுடன் கணித சிக்கல்களுக்குள் முழ்கி கிடந்திருக்கிறார். இதே சாரங்கபாணி கோவிலின் மணியோசை அவர் காதிலும் விழுந்திருக்கும் தானே?
ஒரு மனிதனின் வாழ்விடம் என்பது அவனது நினைவுகள் படிந்திருக்க கூடியது.
ஆ! ஆனால் கவித்துவ நெகிழ்ச்சி என இதனை விட்டுவிடலாம். (ஆனாலும் யாராவது தயவுசெய்து – ஒற்றெழுத்துப் பற்றாக்குறையால் வாடும் மேதகு எஸ்ரா அவர்களுக்கு, ஒரு பெரிய பேக்கெட் ஒற்றெழுத்துக்களைப் பார்ஸல் செய்து அனுப்பித்தர முடியுமா? கூடவே, அவ்வொற்றெழுத்து எழவுகளை எப்படி உபயோகிப்பது என்ற கையேடு ஒன்றினையும் இணைக்கவும். இதும் மிகவும்ம் முக்கியம்ம், ச் சரியாய்?)
அந்த வீட்டை இடித்து உருமாற்றாமல் அப்படியே வைத்திருப்பது தான் அதன் சிறப்பாக உள்ளது. ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் வீடு கூட இது போல அப்படியே பாதுகாக்கபட்டு வருகிறது என்றும், கார்க்கி எப்போதும் வீட்டின் பின்வாசலைத் தான் உபயோகிப்பார் என்பதால் இப்போதும் பின்கதவு வழியாக தான் பார்வையாளர்கள் உள்ளே நுழைந்து பார்க்க அனுமதிக்கிறார்கள் என்றும் ஒரு செய்தி குறிப்பை வாசித்திருக்கிறேன். வியப்பாக இருந்தது.
அய்யா எஸ்ரா, எனக்கும்தான் வியப்பாக இருக்கிறது.
ஆனால் – கார்க்கி பின்வழியாகத்தான் தன் வீட்டிற்குள் நுழைந்தார் என்பதெல்லாம் புருடா. பின் வழிக்கு இரண்டு காரணங்கள்: 1) முன்பக்க ஃபஸாட் (facade), கட்டிடக்கலை நுணுக்கம் பார்க்க அழகாக இருப்பதால – அந்த வ்யூவை, அது ஒரு அருங்காட்சியகமாக இருந்தமையால் – பார்வைக்கோணத்தைக் குலைக்காமல் இருத்தல். 2) இக்கட்டிடத்திற்குப் பின்புறம் அலெக்ஸி தல்ஸ்தோய் (இவர் மகாமகோ லெவ் தல்ஸ்தோய் அவர்களின் மருமகன்) இருந்த இடமும் ஒரு அருங்காட்சியகமாக்கப் பட்டமையால் அதற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மேலாண்மை செய்வது.
எஸ்ரா அவர்கள், இனிமேலாவது குறிப்பெடுத்துக்கொண்டு கதை கட்டுவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். சும்மனாச்சிக்கும் உட்கார்ந்த இடத்திலிருந்து கனகம்பீர பீலா வுடுவதை நிறுத்தவேண்டும்.
நவகிரக ஸ்தலங்களை தரிசிப்பதற்காக எங்கெங்கிருந்தோ கும்பகோணத்திற்கு தினமும் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.
சென்னை மாநகரம் வந்தும், உங்களைப் பார்க்காமல் எவ்வளவு லட்சம் பேர் வேறெதோ வேலையெல்லாம் பார்த்துக்கொண்டு போய் விடுகின்றனரே என்று எனக்கும் வருத்தமாகவே இருக்கிறது.
ஆனால் இதே கிரகங்களை பற்றிய விஞ்ஞானத்தையும் கணித நுட்பங்களையும் ஆராய்ந்த கணிதமேதையின் நினைவில்லதை பார்க்க வருபவர்கள் ஐந்து பேர்.
அது சரி. கிரகங்கள் பற்றிய எம்மாதிரி விஞ்ஞானத்தை கணிதமேதை ஆராய்ந்தார்? இது புதிய கண்டுபிடிப்பாக இருக்கிறதே!
ராமானுஜனின் தொலைந்துபோன, இதுவரை கண்டுபிடிக்கப்படாத நோட்டுப்புத்தக எழவு ஏதாவது, அதிசயிக்கத்தக்க வகையில், உங்கள் கைவசம் இருக்கிறதா என்ன?
சுத்த கிரகச்சாரமாக இருக்கிறதே, இந்தப் புதிய செய்தி! ஏனய்யா, இப்படியெல்லாம் அட்ச்சுவுட்றீங்க? :-(
-0-0-0-0-0-0-0-
அய்யா எஸ்ரா, எப்போதிலிருந்து யுவகிருஷ்ணா, மதிமாறன் போன்றவர்களைப் போய் உங்கள் மானசீக ஆசான்களாக வரித்துக்கொண்டீர்?
எனக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. உண்மையாகவே! :-(
அந்தக்கால ஷங்கண்ணா எங்கே போனார்? அவரை உடனடியாக உயிர்ப்பிக்கவும்… எனக்கு அவரே ‘பெட்டர்’ என்றாகி விட்டது. :-((
-0-0-0-0-0-0-0-
(சரி. இன்ட அக்கப்போர், இடு டேவையா உங்களுக்கு? தலையில் அடித்துக்கொண்டு இந்தப் பதிவு வரிசையின் அடுத்த பகுதியையும் – முடிந்தால் படிக்கவும்)
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
July 6, 2015 at 11:12
நீங்க இப்படியே எழுதிக்கிட்டு இருங்க, அவர் என் சாவுக்கு ஒத்திசைவு ராமசாமி தான் காரணம்னு லெட்டெர் எழுதி வெச்சிட்டு சாக போறார், நீங்க ஜெயில் உட்காந்து கலி திங்க போறீங்க :), நான் என் கருணாநிதி வெறுப்பு போதைக்கு சரக்கு கிடைக்காம தடுமாற போறேன்.
July 6, 2015 at 11:55
ஆ! அப்படியெல்லாம் நடக்காது. யோவ் ஷிவா, எம்ப்பா இப்டீ போங்காட்டம் ஆட்றே!
ஏன், அவர் உங்களுடைய போதைக்கிக் காரணமானவரிடமிருந்தே சகிப்புத் தன்மையைக் கற்றுக்கொள்ளலாமே!
எப்படியும் அவர் எழுத்துகளின் மீது எழுப்பப்பட்டதுதான் அவர் மேலுள்ள எனது ஆயாசமும் கோபமுமே தவிர – எஸ் ராமகிருஷ்ணன் எனும் மனிதரைப் பற்றி அல்லவே! அவர் ஒரு நல்ல கணவனாக, தகப்பனாக, குடும்பஸ்தனாக இருக்கக்கூடும் சாத்தியக் கூறுகளை நான் மறுக்கவில்லையே!
சரி. இப்போது – படபடப்பிலிருந்து விடுபட்டு, தன்னளவில் அமைதியாகி மௌனமாக என்னைப் பார்த்துத் தனக்குத்தானே சிரித்துக்கொள்ளட்டுமா? அல்லது ஒரு ஜென் எழவு கதை சொல்லட்டா?
ஆளை விடும்!
July 7, 2015 at 04:22
Agreed.
கண்டிப்பா, எஸ்.ரா நீண்ட ஆயுள் பெற்று நிறைய ஜென் கதைகள் எழுதட்டும். அவர் மேல நமக்கு எந்த கோபமும் இல்ல.
அவர் கதைகள படிச்சு நானும், என்னோட ஹெட்போன், காப்பி கப், டஸ்ட பின், ஸ்க்ரிபல் பேட் என்று எல்லாவற்றையும் ஆச்சர்யமா பார்த்து, அதுகளோட வரலாற ஆராய்ச்சி செய்துகிட்டு இருக்கேன்.
July 6, 2015 at 14:23
why u dont criticise jemo? shame.u talk rubbish abour sra sir but never abot jemo. can u write better to sra sir?
u only talk about nutral, but only one sided. hate you. pappara thimir.
July 6, 2015 at 18:21
சார் நடுவுல இந்த மணிய மறந்துட்டீங்களே! கொஞ்சமா அவுரு எளுதரதையும் பாக்கலாமே! மனசு இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும்!
July 7, 2015 at 10:23
எதற்கு வம்பு? சொன்னால் அடிக்க வருகிறார்கள். மசால்தோசை விலை 38 ரூபாய் என்கிறார்கள் :-)
July 7, 2015 at 13:05
ஆனந்தமாக சினிமா விமர்சன(!) பஜனை செய்துகொண்டிருப்பவரை நோவானேன், சொல்லுங்கள்?
ஸத்யஜித்ராய் ஒரு வங்காளச் சாமுராய்தான் – இருந்தாலும் படம் எடுத்திருக்கிறார். நமக்கெதுக்கு வம்பு என்று அவர் படங்களையும் திருட்டு டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதுதான் அறம்.
கால்சராய் போட்டுக்கொள்வ்தால் ஐஸ்வர்யாராய் அம்மணியே ஒரு சாமுராய்தான். அவர் நடித்த படங்களெல்லாம் சாமுராய் படங்களே!
ஆளைவிடும்.
July 7, 2015 at 07:46
Ayya Ramasamy avargale, idhu pondra katturai eludhum mun, dayavu seidhu “Cigarette Injurious to Health” endru padathil poduvadhu pol, “Unavu unnum podho, Thenir arindhum podho ikkaturaiyai padikka vendam” endru podungal, Ungal katturayal ennudaya Laptop muludhum Thayir sadam agivittadhu, Indru en madhiya unavu Thayir sadam.
Sudharsan
July 7, 2015 at 08:28
சமீபத்தில் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தேன். இக்கோவில் அருகில்தான் டாக்டர் உ.வே.சா சுமார் முப்பதாண்டுகள் வாழ்ந்த வீடு இருப்பதாக படித்திருக்கிறேன். அந்த வீட்டையும் பார்த்து வருவோம் என கூகுளாண்டவரிடம் விலாசம் விசாரித்ததில் அதிர்ச்சி கிடைத்தது. சமீபத்தில் அந்த வீடு இடிக்கப்பட்டு விட்டதாக சொல்லி, இடிப்பதற்கு முன், இடிப்பதற்கு பின் என படமெல்லாம் காட்டினார் கூகுளாண்டவர். அந்த இடத்தில் அடுக்கு மாடி கட்டடம் எழும்பக்கூடும். இது குறித்து ஒரு சில பத்திரிகை செய்திகள் தவிர, குறிப்பாக யாரும் பேசியதாக தெரியவில்லை. வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீது பற்று கொண்ட உங்கள் அபிமான சலபதி, எஸ்ரா போன்ற யாரும் கவலைப்படவில்லையா? ஒரு சில கோடிகள் செலவு செய்திருந்தால், அரசாங்கம் கூட இதை வாங்கி இருக்க முடியும். அல்லது லட்சக்கணக்கில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்திருந்தால் தலைக்கு நூறு ரூபாய் மொய் எழுதினால் போதுமானதாக இருந்திருக்கும். மற்றவர்களை குறை சொல்ல எனக்கு எந்த அருகதையும் இல்லை. சென்னையை சொந்த ஊர் என கூறிக்கொள்ளும் நான், இதுவரை இந்த வீட்டை பார்த்துவருவது பற்றி அக்கறை கொண்டதில்லை.
டாக்டர் உ.வே.சாவின் மூச்சுக்காற்று இனி எங்கே உலவும்?
July 7, 2015 at 16:18
Yov anonymous, nee appadiyey anonymous aa irukkaradhu thaan nalladhu, ippadi siluththukkara?
Adhu sari, adhu enna papparappa thimir?
July 7, 2015 at 22:15
hahaha! Never laughed so much in recent times.
I have two suspects in regard to Ramanujan working on planets.
Suspect Number : A.R.Venkatachalapathy who even know what Ramanuja was thinking . That makes him Number 1 suspect .
Suspect number 2 is Mathematician Alladi Krishnasamy who wrote about the the Lost notebook of Ramanuja.
P.S: Mr. Alladi was infact in touch with the infamous Paul Erthooo :P alias Paul Erdős . There is a possibility of a conspiracy here.
This article of S.ra had made me regret the fact that I have been ignoring his articles since his infamous speech on Atomic Reactors.
Let Mock theta functions R.i.P !