நடைமுறை இஸ்லாமின் மீது அறிவார்ந்த, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைக்கும் முஸ்லீம் சான்றோர்கள் சிலரின் (முடிந்தவரை இளைஞர்களின்) கருத்துகளை, மொழி மாற்றம் செய்து, முடிந்தபோதெல்லாம் தொடர்ந்து பதிப்பிப்பதாக ஒரு எண்ணம்; தற்கால முட்டியடி எதிர்வினைவாத இணைய இஸ்லாமியச் சூழலில் இம்மாதிரி மாணிக்கங்கள், சமனத்தன்மை மிக்கவர்கள் – பொதுவெளியில் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பேசுவது, இயங்குவது என்பவை நடக்கத்தான் செய்கின்றன என்றாலும், அவை அபூர்வமே!  ஆகவேதான் எனக்குத் தோன்றுகிறது – இவற்றை, இம்மாதிரிக் குரல்களை முடிந்தவரை முறையாக ஆவணப் படுத்தவேண்டும்.  (இந்த வரிசையில் முதலாவது; இரண்டாவது இது; ஓடிவந்து உதவ நான்கைந்து அன்பர்கள் முன்வந்துள்ளதால் இது சாத்தியமாகி இருக்கிறது, அவர்களுக்கு என் நன்றி!)

Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள்! நான் இசுடாலிர் கட்சியில் ஐக்கியமாகவில்லை. B-)

… முடிந்தால் வாரத்துக்கு ஒரு முறை, நான் இருவரது ட்வீட்களைப் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். அவர்கள்: பத்ரி சேஷாத்ரி, கல்யாணராமன். விழைவு என்னவென்றால், நான் பொதுவாக மதிப்பவர்கள், சொல்வதை – ஆரவாரமில்லாமல், படாடோபம் இல்லாமல் அமைதியாகச் சமனத்துடன் செய்பவர்கள், ஏதாவது சொன்னால், அவற்றை நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற விஷயஞான எழவு விவகாரம்தான். தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் வேறு எப்படித்தான் நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வதாம்? குழந்தைகளைத் தவிர, வேறு யாருடனும் (முக்கியமான சமவயதினர்கள்!) வெட்டியாகப் பேசிப்பழகுவதை வெறுத்து ஒதுக்கும் மனப்பிறழ்வுவேறு எனக்கு! :-( Read the rest of this entry »

This post is about what a commentwallah blathered recently, and my lengthy (~1300 words) rejoinder to it:

Screenshot from 2016-02-01 18:41:22

Read the rest of this entry »

பாவப்பட்ட தமிழின் தொடரும் சாபக்கேடான, முடை நாற்றமெடுக்கும் சாணிக்கொட்டடிகளைச் சுத்தம் செய்ய, தனியொரு மனிதனால் மாளாது – ஓராயிரம் ஹெர்குலீஸ்கள்தாம்  வேண்டும்! அலுப்பாகவே இருக்கிறது எனக்கு – ஆனால்  ‘செய்வன திருந்தச் செய்!’ எனும் வாசகத்தை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.

Read the rest of this entry »

The first part here: the importance of being aravindan kannaiyan.

Rushpucted Saars & Meydums – unfartunately for you, there is no speeling mushtake in the tightle; so, interpret it if you must, on an ‘ass is where is’ basis, though it is gastly.

The thing is that, slander happens rather too easily in the world of Tamil Literature, what with its half-baked & clueless charlatans running amok – but to set it right, to show the twisted bent of mind behind the slander, takes a bloody loooong essay.

Read the rest of this entry »

வெறுத்துப்போன (அக்கால சுபவீ,  அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!

அய்யோ! அவருடைய நெடுங்கால நண்பர்களே சுபவீயைக் கைகழுவி விட்டார்களே! பாவம், சுபவீ. :-(

ஆதாரம்:
Read the rest of this entry »

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

Read the rest of this entry »

…இதுதான் இவ்வரிசையில், உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியப்படக் கூடாத கடைசிப் பதிவு; ஸ்ஸ்ஸ்… அப்பாடா! (இதன் முந்தைய பதிவுகளின் சுட்டிகள், இப்பதிவின் அடியில்)

-0-0-0-0-0-0-0-

(கடந்த பதிவின் தொடர்ச்சி…) சரி, ஐயன்மீர் – ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு தெளிவுபடுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?

…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி  முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்;  எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(

ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)

Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.

முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!

Read the rest of this entry »

…இந்தியாவை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைக்கிறேன். அந்த மும்முரத்தில் இருந்ததனால்தான் கடந்த பலவாரங்களாக ஒரு எழவு பதிவும் எழுதவேயில்லை! :-(

எப்படியாவது இந்த எழவெடுத்த, சகிப்புத் தன்மையேயற்ற இந்தியாவை விட்டுவிட்டு ஓடிப்போய் அமெரிக்காவே கோயிந்தா (அல்லது யேஸ்ஸூ அல்லது அல்லா; எனது சர்வமதச் சார்பின்மையைக் காட்டிக்கொண்டு கூத்தாடவேண்டுமல்லவா?) என நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்துவிட்டுதான் அடுத்த வேலை. மன்னிக்கவும்.

… ஆனால், அதற்கு முன்னால் இரண்டு ஸீன்களில் ஒரே கந்தறகோளக் கதை!  நானே எழுதி நடித்து டைரடக்கரும் செய்த என் சொந்தக் கதை…  வெறுமனே நான் ஸீன் போடுவதாக மட்டும் நினைத்துக் கொண்டு விடாதீர்கள், சரியா? Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

கோட்பாடுகளுக்கும், சித்தாந்தங்களுக்கெல்லாமும்கூட – பலவிதமான எழவுகள் (அதாவது ஜாதகம், ஏழரை நாட்டுச் சனி) மகிமைகள், வீரதீரங்கள், பராக்கிரமங்கள் என்றெல்லாம் உண்டு என்பது என்னுடைய இக்காலத்திய ஏகோபித்த நம்பிக்கை!

அதாவது, என்ன சொல்லவருகிறேன் என்றால் – ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு கோட்பாட்டுக்கு அதிர்ஷ்ட யோகம் அடிக்கும். அப்போது அக்கோட்பாடுகளின் பெயர்களை மட்டும் கேட்டுவிட்டு,  உள்ளூர் நிலவரங்களுக்கேற்ப ஆனந்தமாக, நாம் நமக்கேற்றவாறு பொருளை விரித்துக்கொள்வோம்.  உருகுவோம். உனர்ச்சிவசப் படுவோம்.  புல்லரித்துக்கொள்வோம். மாய்வோம். அலைபாய்வோம். இணையத்திலேயே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம். அடுத்த Y கோட்பாட்டு எழவுக்கு லாட்டரி அடிக்கும்வரை இதனை இந்த X கோட்பாட்டுக்குச் செய்வோம். அவ்வளவுதான்!

Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

நீல்ஸ் ஹென்ரிக் டேவிட்  போர் (Niels Henrik David Bohr – 7 அக்டோபர் 1885 – 18 நவெம்பர் 1962) என்னுடைய ஆதர்சங்களில் ஒருவர்.

இன்று அவருடைய பிறந்தநாள். :-)

Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

இவ்வரிசையின் முதற்பகுதி: அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)

அக அவர்களின் தேவையேயற்ற நிந்தனை குறித்த, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்துகளைக் குறித்த உரத்த சிந்தனை தொடர்கிறது, பாவம், இதைப் படிக்கும் நீங்கள்…

சரி; இது இரண்டாம் பகுதி: 2/n.

Read the rest of this entry »

(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…

முகாந்திரம்:  அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய  இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான – சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜேஜே: சில குறிப்புகள் எனும் புதினத்திலிருந்து:
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)

எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம்,  குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை  சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.

Read the rest of this entry »