…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »

என் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.

Read the rest of this entry »

ஹ்ம்ம்ம்…

எந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்(!) கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை(!) – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன்.  அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா?
Read the rest of this entry »

12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை,   நான் அறிந்துகொண்டேன்.  ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக  நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)

எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!

Read the rest of this entry »

முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்:  ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.

Read the rest of this entry »

எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »

#வக்கிரன் உவாச…

இவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத். Read the rest of this entry »

இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…  25/06/2016) தொடர்ச்சி

சரி.
Read the rest of this entry »

(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்,  ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.

மேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம்,  ‘கெட்ட(!) வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.

ஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.) Read the rest of this entry »

இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும்  6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »

30.5.2016 திங்கள் காலை, சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நினைவகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:  தீர்மானம் 5(!) Read the rest of this entry »

aao77ckn

May 31, 2016

கடந்த சில நாட்களாக ராஜஸ்தானின் ஒரு வறண்ட டொக்கில் ஆசிரியர் பயிற்சி முகாம் ஒன்றில் வேலை.

சிலபல கணிநி-சார் கற்பித்தல்களுக்கான முஸ்தீபுகள் – அறிவியல், கணிதம் என. கணிநிகள் எப்படி நம் நண்பர்கள், அவற்றிடமிருந்து வேலை வாங்கிக்கொள்வது எப்படி, அவை கொடுக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்வது எப்படி என்றெல்லாம் விரிந்தன/விரிகின்றன அவை… பயிற்சிமுகாம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடந்தது. ஆகவே கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனெனில் ஹிந்தி கலைச்சொற்கள் பலவும் என் மண்டையில் இல்லை. ‘ஏக் கான்வ் மே, ஏக் கிஸான் ரகுதாத்தா’ பாக்கியராஜ் பலமுறை நினைவுக்கு வந்தார். :-(

Read the rest of this entry »

இப்படித்தான்: தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

Read the rest of this entry »

குடமுருட்டி குண்டனார், இந்தத் தள்ளாத வயோதிக வயதில் இப்படியெல்லாம் ஜன்னிகண்டதுபோல் உளறிக்கொட்டுவது ரொம்ப அவசியமா?

Read the rest of this entry »

பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-( Read the rest of this entry »

ஆனால், அடியேன்: வெறுமனே உணவைத் தின்பவன், அம்புட்டுதேன்!

Read the rest of this entry »

இடக்கை வலக்கை வழுக்கை பொக்கை. Read the rest of this entry »

அய்யோ! நான் இளையராஜாவைச் சில்லுண்டித்தனமாக வம்புக்கிழுக்கும் – அவருடைய அடிப்பொடிகளைச் சீண்டும், ஒருமாதிரி ஏஆர்ரஹ்மானுடைய ரசிகக் குஞ்சாமணியல்லன். கோபப்படாதீர்கள்!  நானும் பலப்பல இளையராஜா பாடல்களை என்னையும் அறியாமல்(!) பாடிக்கொண்டு தாளம்போட்டுக்கினு தாடிவுட்டுக்கினு சென்றுகொண்டிருப்பவன்தான். Read the rest of this entry »

பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களைப் பற்றிய நேற்றைய காட்டுரை தொடர்பாக – ஒரு அனாமதேயம், கோபத்துடனும் வருத்தத்துடனும் இப்படியொரு பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்;

he has evidence, how can u assume he has no evidence

yaar madayan? neeya? thope aa

… …இதற்குக் கொஞ்சம் விரிவாகவே பதில் எழுதவேண்டும் என… Read the rest of this entry »

இவருடைய பல கட்டுரைகளை கவனத்துடன் படித்திருக்கும் எனக்கு,  முன்னெப்போதோ இவருடைய கட்டுரைக்களஞ்சியமான  ‘அறியப்படாத தமிழகம்’ படித்துத் துணுக்குற்றவனுக்கு – இவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல்துறைத் தலைவராக இருந்தவர் என்ற தகவல் ஆச்சரியத்தைத் தருவது என்பதை ஒப்புக்கொள்கிறேன்… Read the rest of this entry »