…என் குஞ்சாமணியைப் பிடித்து இழுத்து என்னைக் கொலைசெய்ய முயன்றனர் போலீஸார்: மு. கருணாநிதி [இது பகடியல்ல! 100% உண்மை!!]
May 16, 2016
குடமுருட்டி குண்டனார், இந்தத் தள்ளாத வயோதிக வயதில் இப்படியெல்லாம் ஜன்னிகண்டதுபோல் உளறிக்கொட்டுவது ரொம்ப அவசியமா?
தம் வாழ்வின் அஸ்தமன காலங்களிலாவது, ஒரு மாற்றத்துக்காவது – சுயமரியாதையுடன், கம்பீரத்துடன் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருக்கலாமே!
-0-0-0-0-0-0-
“…இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் என்னுடைய உயிர்நிலையையே பிடித்து கொல்வதற்கான முயற்சி அன்றைக்கு நடைபெற்றது.”
குஞ்சாமணியைப் பிடித்து இழுத்தால் எந்த ஆண் இறப்பான்? உயிர் நிலை மயிர்நிலை என்கிற ரீதியில் மனம்வெதும்பிப் பிதற்றவேண்டிய அவசியம்தான் என்ன? ஒருவனை இப்படியெல்லாம் நூதனமாகக் கொலை செய்ய முடியுமா? கடந்த 15 வருடங்களாகப் பரப்புரை செய்யாத பலான விஷயத்தை, இப்போது பகீரங்கப் படுத்தவேண்டுதுவதற்கான காரணம்தான் என்ன?
சுயபச்சாதாபக் கழிவிரக்கத்திலும், படுதோல்வி குறித்த பயங்களிலும் ஆழ்ந்து – கோரக் கற்பனைகளில் மூழ்கி முக்குளித்து, மகாமகோ பீலாக்களை அவிழ்த்துவிடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா, சொல்லுங்கள்? :-(
…என் சொந்த அனுபவத்திலிருந்து நான் சொல்கிறேன். நான் மூத்திரம் அடிக்கும் ஒவ்வொரு முறையும், என் குஞ்சாமணியை என் கோமணத்திலிருந்து வெளியில் இழுத்து, பின்னர் அதனைக் கவனமாகப் பிடித்துக்கொண்டுதான் அடிக்கிறேன். நான் இன்னமும் சாகவில்லை! மன்னிக்கவும். (இதற்கு ஒரு காரணம், நான் ஒரு திராவிடனல்லன் – ஆகவே பயபீதியில் அமிழவில்லை என்பதாக இருக்கலாமோ?)
மிக முக்கியமாக, அதிசயிக்கத்தக்க விதத்தில், கலைங்கர் போலல்லாமல், இந்த வினாடி வரை நானே என்னைக் கொலை செய்துகொள்ளச் சதிமுயற்சி நடந்ததாக அரற்றியதேயில்லை. இத்தனைக்கும் ஒரு நாளைக்கு ஐந்துமுறையாவது என் உயிர்நிலையை இரண்டுகைகளாலும் செல்லமாக அரவணைத்துக்கொண்டு மூத்திரம் அடிக்கும் நற்பழக்கம், எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இருக்கிறது….
நான் மட்டும்தான் இப்படிப் போலும், மற்ற ஆண்கள் எல்லோரும் அப்படிச் செய்யமாட்டார்களோ என, இந்த விஷயத்தைப் பற்றிச் சரியாக, புள்ளியியல்வகைத் துல்லியத்துடன் அறிந்துகொள்ள வேண்டுமென, என் ஆருயிருர் நண்பனான ஒரு கொல்டிப்பையனிடமும் கேட்டேன். அவனும் நான் செய்வதுபோலவேதான் செய்கிறானாம். மேலும், உலகிலுள்ள அனைத்து ஆண்களும் இப்படித்தான் செய்கிறார்கள் எனவும், உலகில் உள்ள அனைத்து ஆண்களும் மூத்திரம் அடிப்பதைப் பிரத்தியேகமாகப் பார்த்திருப்பது போல மிகுந்த தன்னம்பிக்கையுடன் சொன்னான். அவன் கிடக்கிறான், வடுக வந்தேறி…
…ஆகவே, கருணாநிதி அவர்கள் விட்டிருக்கும் இந்தப் புது டகீல் பீலா, எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது – கூடவே இறும்பூதையும்! தவணை முறையில் புளுகு மூட்டைகளை கண்டமேனிக்கும் அவிழ்த்துவிடும் அவருடைய தேர்தல்கால சாணக்கியம், அழுதுகொண்டே ஓட்டுகேட்கும் பரிதாப நிலை போன்ற அவருடைய கல்யாணகுணங்கள் என்னை அசரவைக்கின்றன.
சரி. மேதகு கலைஞர் அவர்களின் இந்த விடலைத்தனமான பொய்மைப் பேச்சைப் பற்றிப் படித்தவுடன் சிரித்துச் சிரித்து எனக்குத் தாளவில்லை… நாற்காலியின் மீதிருந்து கீழேவிழுந்து உருண்டுபுரண்டு கண்ணீர் வழியச் சிரித்ததில், சிறுநீரகம் உப்பிப்போய் சிறுநீர் கழிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும், இனிமேல் என் உயிர்நிலையை பிடித்துக்கொண்டு இழுத்து என்னை நானே கொலை செய்துகொள்வதாக இல்லை என எனக்கு நானே (என் அருமைப் பேராசான் #எஸ்ரா போல) சொல்லிக்கொண்டேன்.
…ஆனால், நான் ஒரு தேர்ந்த எஞ்ஜினீயர் கஞ்சிநீர் அல்லவா – ஆகவே இதற்கென ஒரு பொறியியல் இயந்திரத்தை உருவாக்குவதாக எண்ணம்…. ஆனால் அதனை வடிவமைக்கும் வரை என் சிறுநீரகமும், ஸ்பின்க்டர் தசைகளும் தாங்குமா என எனக்குத் தெரியவில்லை. :-(
என்னையும் என் கையறு நிலையையும், மேலதிகமாக, என்னுடைய பாவப்பட்ட உயிர்நிலை படும் பாட்டையும் நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது! :-(( #நான் திராவிடண்டா! :-))
2016 மே மாதம் 14ஆம் தேதி ஒரு திராவிட மைல்கல். அதாவது நம் தமிழகத்தின் அறிவற்ற உடன்பிறப்பு ஞமலிகள் அதே மைல்கல் மேலே ஆனந்தமாக ஒண்ணுக்கு அடித்த தினமும் கூட!
ஏனெனில், சென்னை சேப்பாக்கத்தில் அன்று நடந்த ஒரு பெரும்பொதுக்கூட்டத்தில் என் தானைத் தலைவர் இப்படியெல்லாமும் பேசியிருக்கிறார். மேன்மேலும் அனுதாப அலைகளை ட்ஸுனாமி போல ஏற்படுத்தி, எப்படியாவது அடுத்த முதலையமைச்சர் ஆகிவிடமுடியுமா என அல்லாடியிருக்கிறார்.
நமக்கு அவருடைய கையறு நிலை புரிகிறது, ஆனால் அவருக்கு??
சரி. இவர் இப்படி கொஞ்சம்கூடக் கூச்சமேயில்லாமல் மேலதிகப் பொய்களை வாரிவிட்டது: 29 ஜுன் 2001 அன்று, அவர் கைது செய்யப்படவிருந்த விஷயம் பற்றித்தான். நினைவிருக்கிறதா – அந்த அயோக்கிய ‘அடிக்கறாங்க, அடிக்கறாங்க‘ பொய்மை ரீல் நிகழ்ச்சிகள்? ஸன் டீவியின் போங்காட்டம்??
மறுபடியும் மறுபடியும் லூப்பில் பீலாவை ஓட்டி – அண்டப் புளுகை, உண்மை நிகழ்வாக ஆக்கிய கயமைத் திராவிடத் தந்திரம்? நம் போன்ற முட்டாள் தமிழர்களின் அனுதாப அலையை அமோகமாக அறுவடை சுட்ட மந்திரம்?
“…எவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு கொடுமை அங்கே வந்த போலீஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.இன்னும் சொல்லப் போனால் ஒரு கட்டத்தில் என்னுடைய உயிர்நிலையையே பிடித்து கொல்வதற்கான முயற்சி அன்றைக்கு நடைபெற்றது. இதை நான் இப்போது சொல்வதற்குக் காரணம் பழி வாங்குகிற முயற்சி என்று சொல்கிறார்களே, அவர்களுக்குச் சொல்கிறேன், எவ்வளவு கொடுமை அன்றைக்கு நடந்தது என்பதற்காகச் சொல்கிறேன். “
ஆதாரம்: விடுதலை இணையச் செய்தி – தமிழ்நாட்டைக் காப்பாற்ற புஜம் தூக்கிப் புறப்படுவீர்! ஞாயிறு, 15 மே 2016 15:02
இதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே:
-0-0-0-0-0-
மேற்கண்ட அதே ரீல் விஷயத்தின், இன்னொரு பிரதி:
“…என்னை எவ்வளவு கொடுமைப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள். உயிர்நிலையை பிடித்து இழுத்தார்கள். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தபிறகே அந்த கொடுமை அடங்க ஆரம்பித்தது. பழிவாங்குவது அவர்கள் இயல்பு. “
அதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே:

இதற்கு ஆதாரம்: விகடன் செய்தி – ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டாம்!’ -கருணாநிதி உறுதி | posted Date : 11:04 (15/05/2016)
:-))))))))))))))))
-0-0-0-0-0-0-0-
மேலும் – எனக்கு உயிர்நிலை எழவு என்றால், அது நம் (=ஆண்) குஞ்சாமணிகளைத்தான் குறிக்கும் என்று தெரிந்தாலும், என்னைவிடத் தமிழை நன்றாக அறிந்த மூவரிடம் இதனைப் பற்றி – விஷயத்தைச் சரிபார்த்து எனக்கு அறிவுரை தரும்படிக்குக் கேட்டுக்கொண்டேன்; அவர்களில் இருவர், என் புரிந்துகொள்ளல் சரியே என்றார்கள். அதனால்தான் இந்த புரிந்தஎள்ளல். (மூன்றாமவர் இதுவரை பதிலளிக்கவில்லை)
-0-0-0-0-0-0-
சரி. ஒரு பேச்சுக்கு, இந்தக் குஞ்சாமணி இழுத்த படலம் உண்மையாகவே நடந்தது என்றே வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், அந்த பாவப்பட்ட காவல்துறைக்காரர்களின் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். எப்படியும் அவர்கள், கழுவிரக்கத்தால் தங்களைத் தாங்களே என்கௌன்டர் செய்துகொண்டு (அதாவது, தங்கள் குஞ்சாமணிகளைத் தாங்களே இழுத்துக்கொண்டு) செத்துப்போயிருப்பார்கள் எனத்தான் நினைக்கிறேன். பாவம். அரசு வேலையென்றால் கண்டவர்களின் அடிமடியில் கைவைக்கவேண்டிவரலாம் என்பதை அவர்கள் தங்களுடைய படுபயங்கரக் கொடூரக்கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்!
“தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் கண்டனம் தெரிவித்தபிறகே அந்த கொடுமை அடங்க ஆரம்பித்தது” எனச் சொல்லியிருக்கிறார் இவர்; அப்போது அந்தக் காவலர்கள் அத்தனை நேரமா பாவம், தலைவரின் உயிர் நிலையைப் பிடித்திழுத்துக்கொண்டு தவமிருந்திருக்கிறார்கள்??
“பழிவாங்குவது அவர்கள் இயல்பு” எனப் பேசியிருக்கிறார் இவர்; ஆக, இவர் மற்றவர்களுடைய, தம் அரசியல் எதிரிகளுடைய – உயிர்நிலைகளைப் பிடித்துக்கொண்டு அவர்களையும் அவர்களுடையதையும் விடவேயில்லையா? அப்படியே அவர்களைக் கொன்றுவிட்டாரா? அதற்கான பழி வாங்கப்படலாகத்தான், தலைவருடைய உயிர் நிலை இழுக்கப்பட்டதா?
ஓண்ணுமே பிர்யலியேடா, நான் இன்னாடா ஸெய்வேன்!! :-(
-0-0-0-0-0-
இதைத்தவிர ராசி கீசி என்று பகுத்தறிவுத் தனமாக ஏகோபித்து உளறியிருக்கிறார். இதனையும் என்னால் நம்பவே முடியவில்லை! பாவம், அவருக்கு நிஜமாகவே ரொம்ப ரொம்ப வயதாகிவிட்டது. என்செய்வது?
…சாத்திரங்கள் சொல்கிறபடி, இந்த இடத்திற்கு நான் இப்போது வந்து பேசுவதற்குக் காரணம், இது தான் நமக்கு “ராசியான” இடம் என்று பலர் சொன்னார்கள். இது ராசியான இடம் தான்! நீங்கள் எல்லாம் எனக்கு ராசியானவர்கள். (கைதட்டல்) யாரும் எனக்கு விரோதி அல்ல, ராசியானவர்கள். அந்த ராசியானவர்கள் இருக்கின்ற இடத்திற்கு நான் வந்து பேசினால், ஏற்கனவே இருக்கின்ற ராசி மேலும் பலம் பெற்று இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்று சொன்னாலும் கூட, அது இந்த நாளில் நான் உங்களைச் சந்திப்பதால், அது உறுதிப்பட்டு விட்ட ஒன்றாக ஆகி விடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படிப்பட்ட ராசியான இடத்தில் இன்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமை அடைகிறேன். –
ஆதாரம்: விடுதலை செய்தி – http://viduthalai.in/headline/122221-2016-05-15-09-33-37.html
-0-0-0-0-0-
சரி. எனக்கு இப்போது அவசரமாக மூத்திரம் போகவேண்டும். ஆனால் இதனை எப்படி, என்னைக் கொலை செய்துகொள்ளாமல் செய்வது என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.
உதவ முடியுமா? ப்ளீஸ்?? :-(
-0-0-0-0-0-
- மு. கருணாநிதி வெற்றிக்காகக்கூட பாவம், திமுக, லஞ்ச துட்டு கொடுத்திருக்கிறது! படுகேவலம்!!! 15/05/2016
- முதலாவதாக, தமிழக அரசியலிலிருந்து துப்புரவாக ஒழிக்கப்படவேண்டிய கட்சி: திமுக 12/05/2016
- ங்கொம்மாள, இன்னா மாரீ பேஸ்ராங்கடா, நம்ம தலைவனுங்கோ! தாங்க முடிய்லயேடா!! :-( 11/05/2016
May 18, 2016 at 17:34
அய்யோ, இங்க ஒருத்தர் BLOG எழுதி கொல்றாரு!!!!!!!! காப்பாத்துங்க!!!!
May 19, 2016 at 01:33
உயிர்நிலைன்னு அவர் கொட்டைய சொல்றாரு. நீங்க அவரு குஞ்சாமணிய எடுத்துக்கிட்டு உயிரை வாங்கிட்டீங்க
May 19, 2016 at 18:13
யோவ் ரங்கா!
யாக்கை உயிர்நிலையாமை பற்றியெல்லாம் பேச இதென்ன சைவசிந்தாந்தத் தளமா?
கொட்டையாரு தன்னோட கொட்டத்தை அடக்கிட்டுப் போயிட்டிருந்தா, நானும் குஞ்சாமணி வெவகாரத்த லூஸ்ல விட்ருப்பனே!
ஆனா ‘நமக்கு இருப்பதோ ஒரு குஞ்சாமணி அது போகப்போவதோ உயிருள்ளவரை, தினமும் பலமுறை’ – அப்டீண்றியா?
வொனக்கென்ன கலைங்கர்னு நெனெப்பா? பொத்திக்கினு போய்க்கினே இரு நைனா…
February 1, 2023 at 19:07
[…] caught hold of his Penis & pulled it with a view to assassinating him.’ (Details: …என் குஞ்சாமணியைப் பிடித்து இழுத்து … May 16, […]