அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்... ('த ஹிந்து' தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

… … ஆ! மேற்கண்ட ஹிண்டூ கிண்டிய செய்திகளைப் படித்துவிட்டு, ஒரு நிமிடம் இதைத்தான் – திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு ஊழலைப் பற்றித்தான் – சொல்லவருகிறார், திடீரென்று நிதானம் தவறி, நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என நினைத்து ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்தேன்.

தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…

Read the rest of this entry »

(அல்லது) திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (2/2)

இதன் முதல்பகுதி. இதனைப் படித்துவிட்டு வந்தால் இந்த இரண்டாம்பாகம் பிடிபடலாம்.

…இந்த திராவிடஊழல் பணம் பலவழிகளில், திராவிட அரசுகளால், அரசில் இல்லாத திராவிடர்களாலுமேகூட  அமோகமாகப் பெறப் படுகிறது. இதனைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் பலகாரணங்களுக்காக இருக்கும் வகுப்பில் – தனி மனிதர்களும், தனியார் நிறுவனங்களும், ஏன், சில பன்னாட்டு நிறுவனங்களுமேகூட அடக்கம்.

சரி. இந்த ஊழல் பணம், யார் மூலம் எப்படி வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

Read the rest of this entry »

நம் தங்கத் தமிழகத்தில் எந்தவொரு அரசியல்வாதிய கொலை நடந்தாலும், அடிதடி ஏற்பட்டாலும், வீச்சரிவாள் கீச்சப்பட்டாலும், வெடிகுண்டு வீசப்பட்டாலும்  – அதற்காக பழி சுமத்துவதற்கென சில செல்லமான சங்கதிகள் இருக்கின்றன. ஏனெனில், இவற்றின் மேல் பழி சுமத்துவதற்கு வேறு ஒரு காரணமும் தேவையில்லை – வெறும் வெறுப்பும், பொறுப்பின்மையும் மட்டுமே போதும். அவையாவன: 1) அடுக்குமுறை ஜாதி வரிசை 2) ஹிந்து மதங்கள்.  பொதுவாக ‘ஹிந்துத்துவா’ தான் தமிழகத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் என்றால் எல்லோரும் சோர்வுடன் தலையை ஆட்டிக்கொண்டு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள், அவ்வளவுதான். எப்படியும், சாவகாசமாக ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ அல்லவா? மேலும்,  பம்ப்கின் இயக்கிய ஒரு புத்தம்புது குஜய் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறதாமே?

Read the rest of this entry »

முதலில், இலவசை இணைப்பு:

தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக்  கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…

ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

ஏனெனில்…

Read the rest of this entry »

உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய  இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும்  கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”)  – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!

… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள்  இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும்  அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!

தீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்! (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்!)

Read the rest of this entry »

எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)

சரி. :-( Read the rest of this entry »

எச்சரிக்கை: இது சுமார் 1300 வார்த்தைகள் கொண்ட நீண்ண்ண்ண்ண்ட பதிவு.

…எனக்குப் பொறுக்கவே முடியவில்லை.

போராளித்தன அரைகுறைகளிடமிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலையே கிடைக்காதா? அவர்கள் பாட்டுக்கு கடையை மாற்றிக் கடையை விரித்துக்கொண்டு — பொறுப்போ, சமூகவுணர்ச்சியோ துளிக்கூட இல்லாமல் தொடர்ந்து நம்மைக் காயடித்துக்கொண்டிருக்கிறார்களே!

Read the rest of this entry »

பொதுவாக, எனக்கு – இந்த புலம்(!) பெயர்ந்த(!!)  ‘NRI’  தட்டச்சு குமாஸ்தா இந்திய  ஜந்துக்கள் ஒத்துவரவே மாட்டார்கள். அவர்களுடைய நடைஉடை பாவனைகளையும் – முக்கியமாக அவர்கள் மூளை(!) வேலை செய்யும் விதத்தையும் கிண்டல் செய்து கொண்டே இருப்பேன்; தூரதேசங்களில் ஈஸிசேரில் உட்கார்ந்து கொண்டு (அங்கு முனகிக் கொண்டே வரி செலுத்துவதற்கு அப்பாற்பட்டு) அத்தேசங்களுக்கும்  கடுகளவுக்கும் உபயோகப் படாமல், எதற்கெடுத்தாலும் இந்தியாவுக்கு மேலான அறிவுரைகளை வழங்கும், எப்படி ‘நீங்கள்’ முன்னேறலாம் என அதிஅற்புதக் கருத்துகளையும் உதிர்த்துக் கொண்டிருப்பவர்களின் கோமாளித்தனத்தை சந்தோஷமாக அவதானிப்பதில் இருக்கும் இன்பம்ஸ் தனிதான்!

இவற்றைத் தவிர ஊக்கபோனஸாக – திருஅடுத்தவருடம்இந்தியாவுக்குப்போவார் புராணம், மலிவான விமானப் பயணம் – இந்தியாவுக்குப் போகும்போது அளிப்பதற்காக, அவர்கள் சூட்கேஸ்கள் நிறைய வாங்கும் கழிசடை கிஃப்ட் சாமான்கள் – காஸ்ட்கோ போன்ற  கடைகளில் மெகாடன்னளவு வாங்கும்  சீப் வஸ்துக்கள், சென்ற ஒரே மாதத்தில் இஸ்த்துஇஸ்த்துப் பேசும் அமெரிக்கனீஸ்  இந்தியாவுக்கு வந்தாலும் தொடர்வது, ஏகத்துக்கும் வளர்ந்திருக்கும் தொந்தி, அவர்களுடைய தமிழ்/இந்தியச் சினிமா புல்லரிப்புகள், அவர்களுடைய கந்தறகோள ஆண்டுவிழாக்கள், இந்தியக் கலாச்சாரத்தை (அவர்கள் பாணியில், திரைப்படக்காரர்களை கௌரவித்து!)  தூக்கிப் பிடிப்பது, ஜாதி/மொழிவாரியாக அணிதிரள்வது… … – என பலப்பல  இன்பம்ஸ்களும் இருக்கின்றன. நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
Read the rest of this entry »

இராக்கின் மொஸூல் பிராந்தியத்தில், ஸிஞ்ஜருக்கு அருகில் இருக்கும் கர்ட் யேஸீதிகளைக் குறிவைத்து நடந்திருக்கும் அவலம் இது. கர்ட் வீரர்கள் என்னதான் காப்பாற்ற முயன்றாலும், தங்கள் ரத்தத்தைச் சிந்தி உதவி செய்தாலும் – பலப்பல யேஸீதிகளைக் காப்பாற்றியிருந்தாலும், மீட்டிருந்தாலும் இதுதான் தற்போதைய நிலவரம்…

இந்த எண்ணிக்கை 500லிருந்து 3000 வரை விதம்விதமாகச் சொல்லப் பட்டாலும் – குறைந்த பட்சம் 2500 பாவப்பட்ட யேஸீதிகளை நேற்றையமுன்தினம் முதல் ‘காணவில்லை’ – அதுவும் இஸ்லாமிக் ஸ்டேட்  கும்பல் அவர்களைக் கடத்திக்கொண்டு சென்றபிறகு இப்படிக் காணாமல் போனார்கள் என்பது மஹாகோரம்தான். சுடப்பட்டு, அறுக்கப்பட்டுப் போய்ச் சேர்ந்திருப்பார்கள்தான், அவர்கள்.  இதைத்தவிர பல பெண் குழந்தைகள், வளர்ந்த பெண்கள், தாய்கள் – ஜிஹாதி பொறுக்கிகளின் காமப்பசிக்கு இரையாக எடுத்துச் செல்லப் பட்டிருக்கின்றனர்.

இதுவா இஸ்லாம்? இவ்வளவுதானா ஜிஹாத்? படு கேவலமாக இருக்கிறது.

வஹ்ஹாபிய-ஸலாஃபிய இஸ்லாம் சார்புடைய வெறியர்கள் ஆட்சி செய்தால் – இந்த விஷயம்தான் நடக்கும்: ஆயுதம்தாங்கிகளற்ற அப்பாவிகளுக்கும், வேற்று மத/மதப்பிரிவினருக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும்  கழுத்தறுப்பு மரணங்கள் மட்டுமே காத்திருக்கும். பெண்களுக்கு வயது வித்தியாசம்பாராமல் – வன்புணர்ச்சிகளும், குழுப்புணர்ச்சிகளும் மட்டுமே ஊக்கபோனஸாகக் கிடைக்கும்.

இதுதாண்டா வஹ்ஹாபிய இஸ்லாம்! Read the rest of this entry »

விஷயங்கள் நடக்க நடக்க அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமோ, அதற்காக இணையத்திலோ தொலைக்காட்சிப் பொட்டியிடமோ நிபந்தனையற்றுச் சரணடையும் கொடுப்பினையோ எனக்கில்லை. ஏனெனில், சுடச்சுட என் மேலான கந்தறகோளக் கருத்துகளை எவர்மேலும் கவிழ்த்தவேண்டிய அத்தியாவசியமோ நமைச்சலோ என்னிடம் இல்லை; பொதுவாக, நான் என் எல்லைகளை உணர்ந்திருப்பவன். நான் எழுதுவதைப்(!) படிப்பவர்களும் வெகுசொற்பமானவர்கள் (அதாவது நான் உட்பட!) என்பதும் ஒரு வசதிதான்.

So, I don’t have to play to the gallery. நீங்கள் நம்பக்கூடும் உங்களுடைய செல்லக் கடவுளுக்கு நன்றி. அப்பாடா!

Read the rest of this entry »

எச்சரிக்கை: இப்பதிவில் – இணையத்திலிருந்து எடுத்த கேலிச்சித்திரங்கள் அதிகமாகவே இருக்கின்றன. பொறுமையாகப் படிக்கவும்/பார்க்கவும்.

… நமதிந்தியாவில் – இந்தத் தறிகெட்டலையும் தன்னார்வத் தொண்டு(!) நிறுவனங்களை நெறிப் படுத்தும் வகையில், கொஞ்சமேனும் செயல்பாடுகள் ஆரம்பித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுக்கிறது.  :-))) Read the rest of this entry »

சில நாட்களாக,  இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், அவர்களுடைய காலிஃபேட் ஒற்றைப்படை வெறிஇஸ்லாம் ப்ரேன்ட் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகளிலெல்லாம்,  பிறப்புச் சான்றிதழ் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Read the rest of this entry »

(முந்தைய பதிவுகள்: முதலாவது. இரண்டாவது. மூன்றாவது: ஜிஹாத் பற்றியது. நான்காவது: கபானியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கர்ட்களின் வீரம் ஜொலிக்கும் போராட்டத்தைப் பற்றியது. இவற்றைப் படித்தால் கொஞ்சமேனும் பின்புலம் கிடைக்கலாம்)

கடும் எச்சரிக்கை:  வழக்கத்தையும் (~1000 வார்த்தைகள்) விட இது நீளம் அதிகம். சுமார் 1500 வார்த்தைகள். கில்யஸ் பற்றி எழுதிஎழுதி எனக்கு மாளவில்லை. :-(

கில்யஸ் நினைவுகளில் பலவாரங்களாக உழன்று கொண்டிருக்கிறேன். இதனை எழுதச் சுமார் 6 மணி நேரம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பரின் நினைவுக்காக, இதனைக் கூடவா என்னால் செய்திருக்க முடியாது?

அதேபோல – இதனை முழுவதுமாகப் படிக்கப்போவது உங்களில் 30 பேரேயாயினும், உங்களால் இதைக் கூடவா செய்ய முடியாது? ஆகவே, பொறுமையாகப் படிக்கவும்.

… முடியாவிட்டால் இருக்கவேயிருக்கின்றன, நம்முடைய செல்ல ஞானத் தமிழர்களின் சுடச்சுடத் தமிழ்ச் சினிமா விமர்சனங்கள் – அவற்றுக்கு வேறெங்காவது செல்லவும்.  நன்றி.

கில்யஸ் அம்மணி புராணம் தொடர்கிறது… … :-(

Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!

… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?

இப்படித்தான்.   (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன்  "அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..." வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா... (படம் இங்கிருந்து)

சகலடேடாவல்லவன்அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)

Read the rest of this entry »

முதற்கண், வினவு தளம் போன்ற போராளிப் புல்லரிப்புத் தலைப்பை – இப்பதிவுக்கு வைத்தமைக்கு, நீங்கள் என்னை மன்னிக்கவேண்டாம்.
ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் - யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.

ஷிங்கல் அல்லது ஸிஞ்சர் நகரம் – யேஸீதிகளின், கர்ட்களின் பூமியும் அவர்கள் புனிதத்தலம் இருக்குமிடமும் ஆகும். இதிலிருந்து இஸ்லாமிக்ஸ்டேட் ஜந்துக்கள் விரட்டப்பட்டதை, இந்த கேலிச்சித்திரம் கோடிட்டுக் காண்பிக்கிறது.

உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பவன் நான். எந்த ஒரு மோசமான விஷயத்திலும் நகைக்கத்தக்க சிலகூறுகள் இருக்கும் – ஆக பொதுவாகச் சிரித்துக்கொண்டு, பகடி செய்துகொண்டு போய்விடுவேன். நிதர்சன, நடைமுறை உண்மைகளை எதிர்கொள்வதற்காக (ஒப்புக்கொள்வதற்காக அல்ல!)  எனக்காக நான் வகுத்துக்கொண்ட கவசம்தான் இது, இல்லையேல் சிலசமயங்களில் வாழ்க்கையின்மேல் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. மேலும் நான் உம்மணாமூஞ்சிக்காரனல்லன், எளிதில் புண்படவும் மாட்டேன். வாய்விட்டுச் சிரிப்பது மிகவும் பிடிக்கும்.

Read the rest of this entry »

அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!

Read the rest of this entry »

கடும் எச்சரிக்கை: இது என் கொடூரக் கனவொன்றின் தமிழாக்கம். இதனைப் போய் வேலைவெட்டியில்லாமல் படித்து, நீங்கள் உங்கள் துணைப்பொருளான கோவணத்தை நனைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னுடையதை இப்போதுதான் துவைத்து உலர்த்தியிருக்கிறேன்.

சரி.

இப்படி ஒரு கேள்வி: கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

இப்படி ஒரு எஸ்ராவிய பதில்: கோவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு கழுதையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த கழுதை , யாருடைய கழுதை, ஏன் இக்கழுதை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு கழுதையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையிலான தொடர்பு. கோவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.

Read the rest of this entry »

(அல்லது) பேராசிரியர் மதிமாறனார், பிஹெச்டி (மாட்டுக்கறி) அவர்களின் ஆய்வறிக்கை: கற்காலச் சோழர்களின் மாட்டுக்கறி

… நம்முடைய சகமுட்டாள் தமிழர்களின் மாட்டுக்கறி உணர்வை, அவர்களுடைய சோம்பேறித் தனத்தையும், தங்களுடைய சொந்த மாட்டுக்கறியைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமையையும் நினைத்தால் கோபம்கோபமாக வருகிறது எனக்கு.

உங்களுக்கு? Read the rest of this entry »

அன்புள்ள வெறியர்களே,

அஸ் ஸலாம் அலைக்கும்.  வணக்கம்.

உங்கள் மின்னஞ்சல்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி. அவைகள் கடாசப் பட்டு விட்டன.  எப்படியும் எனக்கு இம்மாதிரி விஷயங்கள் பழக்கம்தான். சென்றவாரம் கூட இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது. :-)

அய்யன்மீர்! நீங்கள் பொங்கி வழிந்துள்ளதால் – நான் எழுதியவைகளை, நீங்கள் படிக்கவேயில்லை என்பது தெரிகிறது.

ஆனாலும்…

Read the rest of this entry »

(அல்லது) கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை  இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (2/2)

முந்தைய பகுதியின் தொடர்ச்சி… (என்னைப் பொறுத்தவரை சில முக்கியமான விஷயங்களை, விவாதிக்கப் படவேண்டியவைகளை – இப்பதிவில் ஆவணப் படுத்தியிருக்கிறேன். பொறுமையாக, பொங்கிவழியாமல் படிக்கவும், சரியா?)

-0-0-0-0-0-

… இன்னொன்று: நடைமுறை/பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு.

“எப்படித்தான் உங்களூர் முஸ்லீம் பெண்கள், இப்படிச் சுட்டெரிக்கும் வெய்யிலில் கறுப்புப் பர்தா போட்டுக்கொண்டு நடமாடுகிறார்களோ?”
Read the rest of this entry »