அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள்
May 12, 2015
உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும் கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”) – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!
… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள் இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும் அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!
தீவிரவெறிவாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமியத்தைத் தவிர, அபரிமிதமாகப் பெருக்கெடுத்தோடும் பெட்ரோலியத்தின் உபயத்தினால் தேனும்பாலும் ஸவுதிஅரேபிய நாடெங்கும் ஒடுவதாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்! (ஏனெனில் வெறுமனே தினசரிகளை மேய்ந்து வெட்டியாக டீவி பார்த்து – அவை சமைக்கும் அரைகுறைக் கருத்துகளையே தம் கருத்துகளாக பாவித்தால், இப்படித்தான் அரைவேக்காட்டுப் பார்வை பெருகும்!)
… …ஆனால் – வருத்தத்துக்குரிய விதத்தில் – மதப்பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்படும் இந்த நிம்ர்பக்ர் அவர்களிடம் ஒரு மகாமகோ பெரிய பிரச்சினை: பாவப்பட்ட அவர், ஒரு ஷியா இஸ்லாம் பிரிவினர்.
ஆகவே, ஸவுதி மதவெறிப் பார்வையில், எப்படிப்பட்ட மோசமான அட்டூழியம் செய்திருக்கிறார் இந்த மனிதர்! இருந்தாலும் அவர் எந்தவொரு ஷியா(=ஷிஅய்ட்) வன்முறைவாத கும்பலுடனும் இணையவில்லை.
-0-0-0-0-0-0-
பல்வேறு இடங்களிலிருந்தும் – முக்கியமாக, எனக்கு மிகவும் உவப்பான மெம்ரி தளத்திலிருந்தும் எடுத்த அவருடைய சில கருத்துகளின் (என்னுடைய) சாராம்சம் கீழே: (அதேசமயம், இவருடைய இஸ்ரேலிய வெறுப்பை என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை, ஆனால் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்)
- இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகமும் தேர்தல்களும் அவசியம். கூட்டாட்சி/குழு ஆட்சி முறையே நம் பிரதேசங்களுக்கு உகந்தது. (ஆம், என்னைப் பொறுத்தவரையிலும் கூட, பலவித குலக்குழுக்கள் ரீதியாகப் பிரிந்திருக்கும் அதிகார அமைப்பில், அனைத்துக் குழுவினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் ஒருவிதமான கூட்டாட்சி முறைதான் தற்போதைக்கு ஒத்துவரும்; ஏனெனில், ‘இந்திய ஸ்டைல்’ ஜனநாயகம் என்பது மதப்பிரிவுகள் குலக்குழுக்கள் ரீதியாக மிக ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் சமூகத்துக்கு ஒத்துவராது. மேலும் பரந்த படிப்பறிவும், ஜனநாயகப் பாரம்பரியமும், பன்னோக்கும் – இச்சமூகங்களுக்குப் பலப்பல காரணங்களால், குறிப்பிடத்தக்க அளவு இல்லை; ஆனாலும் பின்வரும்காலங்களில் இச்சமூகமும் மேலெழும்பும்!)
- நமக்கு ஷாரியா விதிகள் அப்படியே வேண்டாம். ஆனால் அதற்கும் மேற்கத்திய அரசியல்/நீதி பரிபாலனத்துக்கும் நடுவிலான ‘மென்மையான’ நீதி பரிபாலனம் வேண்டும்.
- பொதுவாக, ஷியா மதகுருமார்கள் ‘மதம் சார்பான’ மரணதண்டனை, தலைசீவுதல் போன்றவற்றில் நிச்சயம் ஈடுபடமாட்டார்கள் (இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், தற்காலங்களில் இஸ்லாமிக் ஸ்டேட் கும்பலின் ஷியா பிரிவினருக்கெதிரான அசிங்கமான அட்டூழியங்களுக்கு எதிராக – பதிலுக்குப்பதில் எனும் விஷயமும் சில இடங்களில் நடக்கிறதுதான்)
- அமெரிக்கக் குடிமக்களுக்கும் ஷியா மக்களுக்கும் – சுதந்திரம் + அடிப்படை அறங்கள் பேரிலும் ஒரேவிதமான பார்வைதான் இருக்கிறது.
- ஸவுதி அரேபியாவிலுள்ள ஷியாக்களுக்கு, சிறுபான்மையினருக்கு. அடிப்படை மனிதவுரிமைகள் வழங்கப்படவேண்டும்.
- ஸவுதி அரேபிய அரசாங்கம், கொடுங்கோன்மைவாதத்தை முன்னெடுக்கும் அரசு; அதற்கெதிராக மக்கள் திரண்டு போராடவேண்டும்.
- கர்டிஸ்தானின் தன்னுரிமைக்கான போராட்டம் வெற்றி பெறவேண்டும்.
…
…
அதனால் 2012ல் அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னரும் பலமுறை கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு விடுவிக்கப் பட்டிருக்கிறார். 2012ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
2014ல் மறுபடியும் இது அடிக்கோடிடப் பட்டிருக்கிறது. அவர் செய்த குற்றங்கள் இரண்டு: 1) ஒரு ஸுன்னியற்ற முஸ்லீமாக சமர்த்தாக வாயை மூடிக்கொண்டு, வஹ்ஹாபிய அட்டூழியங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் குரலை உரத்து எழுப்பினார். 2) 77 வயதில் இறந்த பட்டத்து இளவரசனை விமர்சித்திருக்கக்கூடாது.
-0-0-0-0-0-0-0-
ஸவுதிஅரேபியா உலகெல்லாம் பரப்பும் வெறிபிடித்த வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிமுதல்வாத ‘ப்ரேன்ட்’ இஸ்லாமில் – சக முஸ்லீம்களுக்கும், இஸ்லாமுக்குமேகூட ஒரு பங்கும் கிடையாது, எனும்போது – எப்படித்தான் மாற்றுமதத்தினருக்கும், பரந்துபட்ட பொதுமக்களுக்கும் பங்கு இருக்கும், சொல்லுங்கள்?
ஆக… என்னதான் எதிர்ப்பிருந்தாலும், இன்றிலிருந்து இரண்டு நாட்களில் – மே 14 அன்று, இத்தலைவரின் தலை ஒரு நாற்சந்தியில் அனைவரும் பார்க்கப்பார்க்க, ஸவுதிஅரேபிய அரசாங்கத்தால் கொய்யப்படலாம் என ஒரு செய்தி வந்திருக்கிறது.
அல்-கொய்தல், தலை-கொய்தல் என்று ஆயிரம் வருடங்களுக்குமுன்னாலே இருந்த இஸ்லாமளவிற்கே அதனைத் தேங்கவைக்க, அந்தச் சூட்டில் குளிர்காய எவ்வளவு மாக்கள்!
எப்படியும் – இக்கொலையையும் ஆதரித்து, தமிழ் நாட்டில் நம் செல்ல ஜிஹாதிஇளைஞர்கள் ஒரு டீஷர்ட்டைப் போட்டுக்கொண்டு, தங்கள் ஆட்காட்டி விரலை மேலே காட்டிக்கொண்டு இன்னொரு வீரப் புகைப்படத்தை எடுத்து அதனைச் சுற்றுக்கும் விடுவார்கள்தான்…
பின்குறிப்பு: சரி. இந்த எழவெடுத்த ஒத்திசைவையும் விடாமல் படிக்க, ஸவுதிஅரேபியாவிலிருந்து வருகை தரும் (குறைந்தபட்சம்) ஐவர் இருப்பதால் – அவர்களுக்கு ஒரு தனிச்செய்தி: இந்தியா போன்ற மதவாத, அடிப்படைச் சுதந்திரங்களற்ற தேசத்தில், சிறுபான்மையினர் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக துன்புறுத்தப்படும் நாட்டில் – இக்காரியங்களை நேரடியாகப் பார்க்கக் கொடுப்பினை இல்லாத காரணத்தால், சிரமத்தைப் பார்க்காமல் – இந்த மகாமகோ தலைகொய்தலை நேரடியாகப் பார்த்து இன்புறவும்.
முடிந்தால், இன்புற்றதற்கு ஒருவரி கடிதம் போடவும்.
நன்றி. :-(
தொடர்புள்ள பதிவுகள்:
- தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015
- இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015
- ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர்! (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) 02/05/2015
- பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள் 01/05/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது 26/04/2015
- கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள் 24/04/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள் 21/04/2015
- ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015
- கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015
- கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் 08/04/2015
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014
- களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? 26/02/2013
- அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
- சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
May 12, 2015 at 13:17
ஐயா நான் theriyatha visayam ungalal therinthu kolkiren
nanri
May 13, 2015 at 10:53
Thanks Liked reading it for the depth of information and cogency. (need to see shorter sentences though); we are lost when facing the conflicting Muslim world and unable apply well known universal principles . You explain much I could not comprehend.
We watch as they make violence and murder as common as drinking water. Afraid where they will lead us to but feel secure we are here in India with all its problems.
May 13, 2015 at 12:58
அய்யா சம்பத்,
நான் இப்படி எழுதியது – கிண்டலாகத்தான்…
// இந்தியா போன்ற மதவாத, அடிப்படைச் சுதந்திரங்களற்ற தேசத்தில், சிறுபான்மையினர் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக துன்புறுத்தப்படும் நாட்டில் – இக்காரியங்களை நேரடியாகப் பார்க்கக் கொடுப்பினை இல்லாத காரணத்தால், சிரமத்தைப் பார்க்காமல் – இந்த மகாமகோ தலைகொய்தலை நேரடியாகப் பார்த்து இன்புறவும்.
என்னைப் பொறுத்தவரை – மேரா பாரத் மஹான்தான். :-)
https://othisaivu.wordpress.com/2015/01/26/post-447/
நீள நீளமான வரிகளைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறீர்கள் – But, this is my way of ‘sentencing the hapless readers of the blog to death!’ 8-)
அன்புடன்,
ரா.
May 13, 2015 at 15:55
“எப்படியும் – இக்கொலையையும் ஆதரித்து, தமிழ் (நாட்டில் நம் செல்ல ஜிஹாதிஇளைஞர்கள் ஒரு டீஷர்ட்டைப் போட்டுக்கொண்டு, தங்கள் ஆட்காட்டி விரலை மேலே காட்டிக்கொண்டு இன்னொரு வீரப் புகைப்படத்தை எடுத்து அதனைச் சுற்றுக்கும் விடுவார்கள்தான்…”)
இதற்கும் சேர்த்து?
இன்று பாகிஸ்தானில் இந்த ”இஸ்லாமிக் ஸ்டேட்” கும்பலின் கொலை வெறியாட்டம்,அப்பாவி “Ismaili சமுதாயத்தை” சேர்ந்த 47 அப்பாவிகள் பலி.
Karachi Terror Attack: 47 Killed as Gunmen Open Fire Inside Bus, Pamphlet Claims Islamic State Role
(http://www.ndtv.com/world-news/at-least-41-killed-in-karachi-after-bikers-open-fire-on-bus-762683?pfrom=home-lateststories)
January 5, 2016 at 09:00
Dear Ramasamy sir, As you feared Al-nimr is executed by saudi
January 5, 2016 at 14:33
Oh gawd! What a tragedy! :-( Will readup about this. Islam is being rolled back all the time, to the dark ages…