10.12.18 + 1 = 11.13.19
December 15, 2018
மனைவி+துணைவி இல்லக்கிழத்தியும், என் மகளின் தாயார் மட்டுமல்லாமல், திடுக்கிடவைக்கும் வகையில் என் மகனின் தாயாராகவும் இருக்கும் ராணித்தீ தொண்டுகிழத்தீ, சிலபல பள்ளிகளில் திருத்தொண்டு புரிந்து வருகிறார். Read the rest of this entry »
‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே?
December 13, 2018
#SheToo? :-(
இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. Read the rest of this entry »
ஜெயமோகன் + அவருடைய வாசகக் கண்மணிகளின் தொடர்வதந்தி பரப்பலுக்கு அடுத்த ஸாஹித்ய விருது (2019), பார்ஸேல்!
December 11, 2018
வரவர — அன்றிப் பிறிதொன்றில்லாமல், அலக்கியமுண்டா மஜாபாரதமுண்டா, அறிவுரையுண்டா அலப்பரையுண்டா, அலக்கியவிமர்சனமுண்டா வாசகர்கடிதமுண்டா, நுண்கொம்புண்டா நுண்ணுணர்ச்சியுண்டா, படைப்பூக்கம் விரைகிறதா விரைவீக்கம் வளர்கிறதா, ஆன்மிகம் தளர்கிறதா கருத்துதிர்ப்பு இறுகுகிறதா என்று காலைக்கடன்களைத் தவணை முறையில் இணையத்துக்குப் பொழுதன்னிக்கும் தீவிரமாகத் திருப்பித் தந்துகொண்டு — கனகம்பீரமாகவும் படுபீதியளிக்கும் வகையிலும் கற்பனைக் கோவேறுகழுதையை உதைத்தெழுப்பி ஆரோகணித்து, ஒரு கையில் விஷ்ணுபுரத்தையும் இன்னொரு கையில் கருத்துதிர்ப்பு வீச்சரிவாளையும் தூக்கிக்கொண்டு பிற விசிலடிச்சான் வாசகச் சிப்பாய்களின் எக்காள முழக்கங்களுடன் செம்புழுதிப்புயல் புடைசூழ வாயுவேகம் வாய்வுவேகமாய் ஒர்ரே ஜெயமோகன அதிரடி அதகளம்… :-( Read the rest of this entry »
அடப் பாவிகளா!
December 10, 2018
இப்டியாடா பொய் சொல்வீங்க? :-( வதந்தி பரப்புவீங்க?? Read the rest of this entry »
ஒத்திசைவு கொடி அடுத்த மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கும்
December 5, 2018
துக்கம் அனுஷ்டிக்கப்படும் விதமாக, ஒத்திசைவு பள்ளிக்கு நாளை விடுமுறை. யாரும் புதிய அக்கப்போர் படிக்கிறேன் பேர்வழி என வந்து ஏமாற வேண்டாம். நாளை, ஒன்றும் தரவேற்றப்பட மாட்டாது.
மௌன அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு பின்னூட்டப் பகுதி திறந்து வைக்கப்படும். மலர் அஞ்சலி செலுத்த விரும்புவோர், செலுத்தலாம். Read the rest of this entry »
∞.0
December 4, 2018
மன்னிப்பீர்களா? :-( Read the rest of this entry »
5.0
December 3, 2018
நேற்று, இரவு, தேவைமெனெக்கெட்டு… Read the rest of this entry »
3.0
December 1, 2018
சாருநிவேதிதாவின் பாரிஸ் வாயு – சில தொடரும் பீலாக்கள்
November 27, 2018
நம் உடலில் ஏதாவது பாகம் (பக்கவாதம், பெராலிஸிஸ், ஸ்ட்ரோக் வகையறா வந்து) அது செயலிழந்தால் அதனைப் பொத்தாம்பொதுவாக ‘பாரிச வாயு’ என்று ‘அக்காலத்தில்’ சொல்வார்கள்.
அதேபோல, எவனோ ஒரு வேலையற்ற வாசகப் பாரிஸ் வள்ளன், சாருவை, நெக்குருகி கண்ணீர் பனிக்க இதயம் இனிக்க, உருவி வழிபாடு செய்பவன் – வெட்டியாக ‘ஸ்பான்ஸர்’ செய்திருக்கக் கூடிய காரணத்தால், நம் செல்லச் சாருநிவேதிதா சார் அவர்கள், எப்போதோ பாரிஸ் போய் அந்த எழவெடுத்த காரணத்தினாலேயே கண்டமேனிக்கும் அதனைப் பற்றி இஷ்டத்துக்கும் பீலா விட்டு வாயு வெளியேற்றத்தை – வாய்வழியாகவும் ப்ளாக் வழியாகவும் காணொலி வழியாகவும் பல்முனை tooth tip தாக்குதல் செய்து ‘என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ்‘ என நமக்கு அருள் பாலிப்பதுதான் – ‘பாரிஸ் வாயு‘ என்றறிக. Read the rest of this entry »
சாருநிவேதிதா எனும் அரைகுறைக் கருமாந்திரத்தின் தொடர் பீலாக்கள், கார்லோஸ் ஃபெர்னன்தொ ஃப்ளொரெஸ் லப்ரா – சில குறிப்புகள்
November 25, 2018
இந்த நிரந்தர விளிம்புநிலை விடலையின் அற்பத்தனமான அட்ச்சிவுடல்களுக்கும், வாய்கூசாமல் சொல்லும் பொய்களுக்கும், தொழில்முறையில் தயாரிக்கும் அண்டப்புளுகுகளுக்கும் – ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அற்ப மானுடப் பதர், வேறென்ன சொல்ல! Read the rest of this entry »
அன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா?
October 23, 2018
அன்புள்ள அன்டார்ட்டிகா அனுபவ்,
வெண்குளிர்க் கருங்கோன் (அல்லது) துரியோதனன் மோட்சம்
October 4, 2018
“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். Read the rest of this entry »
என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »
தெருவள்ளுநன்
October 1, 2018
தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »
நகரப்புறம்போக்கு நக்கிலைட்டுகள் – விவேக் அக்னிஹோத்ரி அவர்களின் ‘அர்பன் நக்ஸல்ஸ்’ புத்தகத்தை முன்வைத்து சில குறிப்புகள்
September 25, 2018
இரண்டு வருடங்களுக்குமுன் விவேக் அவர்களின் ‘போக்குவரத்து நெரிசலில் புத்தர்’ (‘புத்தா இன் எ ட்ராஃபிக் ஜாம்‘) படத்தைப் பார்த்தேன்.
அந்தப் படத்தைப் பார்த்ததற்கு முன்வரை நான் விவேக் அவர்களின் ரசிகனாக இருந்ததில்லை. மாறாக, அவரை ஒரு ‘பி கிரேட்’ படக்காரராக வரித்திருந்தேன். அவரைக் குறைத்து மதிப்பிட்டு விட்டிருந்தேன்; but, one lives & learns. Read the rest of this entry »
ராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது!
September 20, 2018
நிற்க, கொலைகளைச் செய்தாலும் அவற்றுக்கான நிரூபணங்கள் 100% காத்திரமானவை என்றாலுமேகூட – எவருக்கும், நீதிமன்றங்கள் உட்பட, அச்சாதனையாளர்களைக் கொலையாளிகள் என அநியாயமாகக் கண்டனம் செய்யும் உரிமை இல்லை. மன்னிக்கவும்.
திராவிடத் தமிழச் சாதனையாளர்களை, நாம் எக்காரணம் கொண்டும் ஆரிய நச்சரவங்களால் பாதிப்படைய விடக்கூடாது! Read the rest of this entry »
புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி
September 18, 2018
தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.
நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »
17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(1-10) (je suis jeyamohan)(க்றீச்சிடுதல் (4/n))
September 11, 2018
இந்தப் பதிவெழவைப் படிப்பதற்குமுன் – முந்தைய இரு முத்தாய்ப்பு எழவுகளைப் படித்தால் – உங்கள் மண்டை 100% காய்வதற்கு நான் கியாரண்டி வாரண்டி, ஏமண்டி? தெலுஸ்கொண்டி.
- ஜெயமோகன ஆதங்கங்கள், குறிப்புகள் (க்றீச்சிடுதல் (3/n)) 10/09/2018
- ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n)) 08/09/2018
எனக்குமே, இத்தனைக் கிழவயது ஆகியும், பலபத்தாண்டுகளாக நம் அலக்கியக் கோமாளிகளின் குத்தாட்டத்தைப் நேரில் பார்த்து ரசித்த மகாமகோ அனுபவங்கள் இருந்தாலும், ஓரளவு பணிசெய்யும் குயுக்திமூளை இருந்தாலும் – சிலபல விஷயங்களை, நடப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை.
ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n))
September 8, 2018
[ஜெயமோகன், அவர் வழமையேபோல, மனம்போன போக்கில் அறச்சீற்றத்துடன் அட்ச்சிவுட்ட பதிவு ஒன்றைக் குறித்து – சிலபல அப்பாவிகள், அதிமேதாவியான எனக்குப்போய் எழுதி ‘இது சரியா’ எனக் கேட்டிருக்கிறார்கள்; அவர்களுடைய கருத்துகளை, முடிந்தவரை அவர்கள் வரிகளிலேயே தொகுத்து, முடிந்தவரை அவர்களுடைய முன்னனுமதியுடன், தனிப்பட்ட குறிப்புகளை நீக்கி, மேலதிகமாக – உங்களுக்கு என் பராக்கிரமம் மிக்க வியாக்கியானத்தை அளிப்பதில் உள்ளபடியே எருமையடைகிறேன். நன்றி!]
ஹ்ம்ம்ம் – இது ஒரு மிகநீண்ட பதிவாகத்தான் ஆகப்போகிறது. பாவம், நீங்கள்… Read the rest of this entry »



