சாருநிவேதிதா எனும் அரைகுறைக் கருமாந்திரத்தின் தொடர் பீலாக்கள், கார்லோஸ் ஃபெர்னன்தொ ஃப்ளொரெஸ் லப்ரா – சில குறிப்புகள்
November 25, 2018
இந்த நிரந்தர விளிம்புநிலை விடலையின் அற்பத்தனமான அட்ச்சிவுடல்களுக்கும், வாய்கூசாமல் சொல்லும் பொய்களுக்கும், தொழில்முறையில் தயாரிக்கும் அண்டப்புளுகுகளுக்கும் – ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. அற்ப மானுடப் பதர், வேறென்ன சொல்ல!
சரி.
வேலைவெட்டியற்றுக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே எக்கச்சக்கமாக ஜெயமோக மஜாபாரதத்தை உள்வாங்கிக்கொண்டுவிட்டதால் சமீப காலங்களில் எனக்குக் கொடும் பிரச்சினையாகிவிட்டது. வாயுத்தொல்லை. வெண்முரசை ஓங்கியடிப்பதைவிட அதிக சப்தத்துடன் பின்னூட்ட வெளியேற்றம்.
போதாக்குறைக்கு கனவுகளுக்கிடையே வரும் இடைவேளை விளம்பரங்களிலெல்லாம் ஒவ்வொரு முறையும் தவறாமல், உலகத்திலேயே-மனிதவரலாற்றிலேயே முதன்முதலாக பீஷ்மர் வந்து “பேஷ்பேஷ், ற்றொம்ப நல்லாக்கீதே, நல்லகாப்பி செங்காப்பி தமிழ்க்காப்பி நரசூஸ்காப்பி குடி!” என்கிறார்!
“காப்பியத் தன்மை கொண்ட வெண்முரசை உரசிப்பார்த்தால் உன்கதி அதோகதி” என்று ரௌத்திரத்துடன் அவருடைய வில்லை எடுத்து, என் அரைஞாணை மீட்டுகிறார். வில் பவர் எனக்கும் தாஸ்தீ என்றாலும் அவருடைய அஸ்திரத்துக்கு நான் ஈடுகொடுக்க முடியாதல்லவா?
கதீஸ்த்வம் கதீஸ்த்வம், த்வம் ஏகா வெண்முரசோன் – என ஜெயமோகனிடம் கதிகலங்கிக் காலில் விழுவதைத் தவிரப் பிறிதொன்று செய்யத்தான் கூடுமா?
இன்னாத்த ஸெய்றது, ஸொல்ங்க…
ஹ்ம்ம்… ….சாதாரணமாகவே, எந்தவொரு விஷயத்தையும் – மஜாபாரதம் உட்பட – ‘படிப்பது‘ என்றுதான் சொல்வேன்.
‘வாசிப்பது‘ என்று நான் குறிப்பிட்டால், படிப்பதை விடக் கொஞ்சம் ஆழத்துடன் நோக்குவது, பின் ரோசிப்பது – என்று போக்குக்காட்டி அழகான பிரமையை உங்களுக்குள் உருவாக்குவதற்காக.
ஆனால் ‘உள்வாங்குதல்‘ என்பது இன்னமும் படுபீதியளிக்கும் பயங்கர போஸ்ட்மாடர்ன் சுளுக்கெடுப்பு வகை.
ஆக – இப்போதெல்லாம் நான் எல்லாவற்றையும் உள்வாங்குவதே அதிகம் – இதனைத் தான் ஸ்டாக் மார்க்கெட் வல்லுநர்கள் இன்ஸைடர் ட்ரேடிங் எனச் சொல்கிறார்கள் என நான் சொல்லி, நானே கேள்விப்பட்டேன்.
காலையில் பசித்தது. இட்லியை உள்வாங்கினேன். அமிர்தம். நன்றி!
ஆக, ஏகத்தும் உள்வாங்கி எனக்குக் கொஞ்சம் மூச்சுவாங்கிவிட்டதால், விட்டுவிடுதலையாகிச் சொட்டைக்குருவிபோல கொஞ்சம் கேளிக்கையிலும் ஈடுபடலாமே என்று நேற்று என் செல்லங்களில் ஒருவரான சாரு நிவேதிதா அவர்களிடன் சரணடைந்தேன்.
அவர் என்னை ஏமாற்றவில்லை. :-(
-0-0-0-0-0-
“மெதூஸாவின் மதுக்கோப்பை” எனவொரு, தன்னுடைய தனித்துவ விளிம்புநிலை குதிரை லத்தித் தொகுப்பை வெளியிடுவதற்கு அச்சாரமாக – ஒரு எழவெடுத்த விடியோ ஒன்றை இந்த ஆசாமி அண்மையில் பதிப்பித்திருக்கிறார்.
வினாடிக்கு வினாடி பொய்மையிலும் உளறலிலும், வாழ்நாளில் பாதிக்குமேல் கழிந்துவிட்ட பின்னும்கூடத் தன்னைக் கொஞ்சம்கூடத் திருத்திக்கொள்ளாமல், மேன்மைக்குப் பக்கத்திலேயே கூட போகாமல் அசிங்கமாக அட்ச்சிவுடலிலும், தொடர்பீலாக்களைத் தொழில்முறையில் உருவாக்குவதிலுமே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார், இந்த மரியாதைக்குரிய திராவிடலை. என்ன செய்வது சொல்லுங்கள். :-(
முதலில் இந்தப் பீலா சாக்கடையாரின் பதிவையும் அதிலுள்ள விடியோ எழவையும் பார்க்கவும்.
http://charuonline.com/blog/?p=7121
எப்படி வாய்கூசாமல், எல்லாம் தெரிந்தாற்போல அட்ச்சிவுடுகிறார் இந்த ஆசாமி!
இம்மாதிரி ஆசாமிகளுடையதைத் திகட்டத் திகட்டச் சப்பிக்கொண்டு அதன் இன்பலாகிரியில் புளகாங்கிதத்துடன் அலைய ஒரு பெரிய குளுவான் கும்பல்…
தமிழின் பிதாமக எழுத்தாளர்கள், அவரவர்க்குரிய தனித்துவ எழவுடன் – சரியாக மேலெழும்பியிருக்கக் கூடிய ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தையே, சுத்தமாகக் காயடித்துவிட்டார்கள். பாவி அயோக்கியர்கள்! :-(
-0-0-0-0-0-0-
பிரச்சினை என்னவென்றால் – சிலே, ஸல்வதொர் அய்யன்டே பற்றியெல்லாம் நானும் கொஞ்சமேனும் அறிவேன் – காரணங்கள்: என் கிழவயதும், பட்ட சிலபல அழகான அனுபவங்களும்.
சிலேயின் ஸல்வதொர் அய்யன்டே – ஸோஷலிஸக்காரர், என் இளம்வயது ஆதர்சங்களில் ஒருவர் (நல்லவேளை நான் சேகுவேராவை கண்மூடித்தனமாக ஆராதித்தவனாக எப்போதுமே இருந்ததில்லை. அடச் சே! அந்த கோர டீஷர்ட் போட்டுக்கொண்டு மினுக்கி அலையவுமில்லை!) – இவர் சிலேயின் அதிபராக 1970-73 வாக்கில் இருந்தார் – அந்த நாட்டின் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார், ஸிஐஏ அமைப்பும் இதில் பங்குபெற்றது. இதெல்லாம் சாருவின் உரையில் இருக்கும் வெகுசில, அனைவரும் அறிந்த உண்மைகள்.
அவருடைய அமைச்சரவையில் பிரதான பங்குபெற்றவர்களில் மேற்கண்ட ஃபெர்னன்தொ அவர்களும் ஒருவர். இவர் பிற்காலங்களில் தகவல் தொழில் நுட்ப விவகாரங்களில் தரத்துடன் ஈடுபட்டு, நிறுவனங்களுக்கான கணிநிபூர்வமான தேவைகளையும் முறைமைகளையும் முறையாக வடிவமைத்தார். மதிப்பிற்குரிய ஆள்தாம்.
இவருடைய கீழ்கண்ட புத்தகத்தை 1988 வாக்கில், படித்து பிரமித்திருக்கிறேன். ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ், தொழில் நடைமுறைகளில் அதனை ஒருங்கிணைப்பது அது இது என அழகான ஊடுபாவுகளுடன் எழுதப்பட்ட புத்தகமிது. இப்போது பிஸினெஸ் இண்டெல்லிஜென்ஸ் அனலிடிக்ஸ் அதுஇதுவென ஜல்லியடித்துக்கொண்டிருப்பதை, அப்போதே குறிப்பிட்டார் அண்ணா.
…
பின்னர் 1995/6 வாக்கில் அந்த எழவெடுத்த அமெரிக்காவுக்குக் கணிநிநிரல் குப்பைகொட்டப் போனபோது ஃபெர்னன்தொ அவர்களின் மாணவி ஒருவர் மூலமாக அவருடைய அறிமுகம் கிடைத்தது. கொஞ்சம் பேசியிருக்கிறேன். பெரிய மனிதர். கூடவே அந்த சிலேக்கார மாணவியுடனும் கொஞ்சம்போல அளவளாவியிருக்கிறேன் – அவர் சிலே விவகாரம் நடந்தபோது பிறந்த குழந்தை – அமெரிக்காவுக்கு அகதியாக, தம் பெற்றோர்களுடன் வந்தவர்; ஆம், சிலேயில் குட்டையைக் குழப்பிய அதே ஸிஐஏ அமெரிக்காதான் – பெருமளவில் சிலே அரசியல் அகதிகளையும் தம் நாட்டுக்குள் அனுமதித்தது!
இந்த விக்டர் (அல்லது வித்தொர்) ஹாரா – கவிஞரைப் பற்றியும் அறிவேன் – சிலபல கவிதைகளைப் படித்திருக்கிறேன். இவர் பற்றிய ‘அசாத்திய வீரத்தனமான’ வதந்திகளையும் ஒருகாலத்தில் (76-77 வருடங்கள் போல) நம்பியிருக்கிறேன் – பின்னர் திருந்தியுமிருக்கிறேன்.
ஆனால் – சாருவிடலைக்கும் பாவம், பிரச்சினைகள் இருக்கின்றன:
என்ன செய்வது சொல்லுங்கள்…
ஆக மேற்கண்ட விஷயங்களாலும் எனக்கு வாய்த்த அந்தக்கால உரையாடல்களாலும்தான், இந்த சாரு நிவேதிதா கூசாமல், நேரில் பார்த்தாற்போலச் சொல்லும் பொய்மைகள் பற்றி எழுதுகிறேன்!
-0-0-0-0-0-0-
இனி அந்த வீடியோவில் சாரு விட்ட டகீல்களில் சிலவற்றைப் பார்க்கலாம்… (https://youtu.be/RR-qivi9xeI)
நாற்பது ஆண்டுகால ஃப்ரெஞ்ச் இலக்கிய தத்துப்பித்துவத் தொடர்பாம் – ‘என்னோட ஃப்ரெஞ்ச்னெஸ்’ – விஐபி ஃப்ரெஞ்சி கோமணம்/அண்டர்வேர் போட்டுக்கொண்டால் அது வந்துவிடுமா, என்ன எழவு?
ஃபூக்கோ ரொலான் பார்த் தெரிதா தெரியாதா என ஒரு பட்டியலை அர்த்தமற்று கலகப் பிரதியாக அவிழ்த்துவிட்டால் கோமணம் கழன்று சித்தி பெற்றதாக அர்த்தம்… இவர்களுடைய பிரேதத்தைச் சிரமேற்கொண்டு ஊரெல்லாம் இழுத்துச் சென்று போஸ்ட்மாடர்ன் பக்தி ததும்ப உளறிக்கொட்டினால் நாம் அவரை ஃப்ரெஞ்ச் ஆசாமியாகவே கருதி உருகலாம். இன்னாமாரீ ஷோ! ‘அப்டித்தான் என் ஃப்ரெஞ்ச்னெஸ்!’
தன்னை ஃப்ராங்கோஃபோன் இலக்கியத்தின் நுகர்வாளராகப் பீற்றிக்கொண்டு ஆரம்பிக்கிறார், அதாவது, அவருக்கே உரித்தான பின்புலமற்ற தன்னம்பிக்கையுடன்… ஆனால், ஃப்ராங்கோஃபோன் அலக்கியப் பிரதிநிதியாக அப்படி அவர் உயர்த்திப் பிடிக்கும் மொரோக்கா தேச அப்தெல் லதிஃப் லாபி, ‘எனக்கு ஃப்ராங்கோஃபோன் எனும் பாகுபாடு ஒத்துவராது‘ என்கிறார். (ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், ஒரு விதமான தர்க்கமுமில்லாமல் அட்ச்சிவுடல் என்பது சாருவின் படைப்பாற்றலுக்குச் சான்று!)
5:12 – பாரத அழகியல், இலக்கிய வரலாறு, அரசாட்சி வரலாற்றுப் பின்புலங்கள் என ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்ளாமல் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஃபூக்கோ ஒத்துவருவார் என்றால் – சாருவைப் புரிந்துகொள்ள ஒரு தெருவோர லும்பனால்தான் முடியும்.
5:19 – வொட்ரை மொழி வொட்றை தேசம் என்றே தப்பும்தவறுமாக உச்சரித்து வண்டி ஓட்டினால், வீட்டில் வொட்டரை அடிக்க உதவலாம். ஆனால், தான் ஒரு உதவாக்கரைத் துடைப்பக்கட்டை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிவரும்.
இதற்குப் பின் தொடர்பே இல்லாமல், இக்காலங்களில் இந்தியா ஃபாஸிஸ்ட் நாடு என்பது போல ஒரு உளறல். ஃபாஸ்ஷிஸ்ட் என்று சரியாக உச்சரிப்பு வரவில்லை என்றாலும், அதன் சரியான அர்த்தமாவது தெரிந்துகொள்ளவேண்டாமா இந்தக் கோமாளி? தனக்குப் பிடிக்காதவன் எல்லாம் ஃபாஸ்ஷிஸ்ட் எனச் சொல்வதற்கு இவர் ஒரு ஒரு இடதுசாரி கூட இல்லையே! வெறும் sorry figure தானே!
பின்னர் – அப்தெல் லதிஃப் லாபி பற்றி முழ நீளம் (சில அடிப்படைத் தவறுகளுடன்) பேசுகிறார். இவருடைய தன்னம்பிக்கை கொஞ்சம் தாஸ்தீதான்.
7:23 – மொரோக்கோவின், இரண்டாம் ஹாஸன் காலத்தில் ஜெயிலுக்குப் போனால் திரும்பவே முடியாதாம்! என்ன கதை! இதற்கு என்னால் பலப்பல எதிர்ச்சான்றுகள் தரமுடியும். எத்தையாவது மொராக்கொவின் வரலாறு படித்திருக்க இவருக்கு பாவம், வாய்க்கவேயில்லை போலும். (மொரோக்கோ தான் சுதந்திர அமெரிக்காவை முதலில் அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது என்பதிலிருந்து – பலப்பல மேன்மைகளையும் அரேபிய காட்டு ராஜ்யம் போலல்லாமல் பெரும்பாலும் ஜனநாயக பூர்வமாக அடைந்தது அது என்பது இந்த ஞான சூனியத்துக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; மேலும் (இப்போது பாரதத்தில் உள்ளது போலவே) அங்கும் தீவிர இஸ்லாம்வாதிகளுடன் லாபி போன்ற இடதுசாரி அறிவுஜீவிகள் இணைந்து – அரசுக்கு எதிராக நடனமாடிக்கொண்டிருந்ததையும்…)
9:12 – லாபியின் மனைவியின் பெயர் ஹவுத்தா என டகீல்; உண்மையில் மனைவியின் பெயர் ஜோஸ்லின்! (அய்யாவுக்குக் கற்பனை வளம் தாஸ்தீ!)
பின்னர் சிலேயின் புரட்சிகரமைதுனக் கவிஞர் ( ஸல்வதொர் அய்யன்டே ஆட்சி சமயம்) வித்தொர் ஹாரா பற்றிப் புளகாங்கிதம் – இங்கிருந்துதான் அய்யாவுக்குக் கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது!
10:55 – பரிதாபத்துக்குரிய வகையில் அநியாயமாக, அய்யன்டே கழித்துக்கட்டப்பட்ட பின் , அகஸ்டொ பினோசெயின் அடக்குமுறைகளை விவரிக்கிறார். gurooram என குரூரத்தை குரூரமாகவும் க்ரூடாகவும் – ஆனால் உணர்ச்சி பொங்க உச்சாடனம் செய்கிறார். மறுபடியும் மறுபடியும். அவர் செய்நேர்த்திதான் என்னே!
11:09 – வித்தொர் ஹாராவின் கையை மேஜைமேல் வைத்து ஒரு சிப்பாய் அல்லது அதிகாரி கோடரியால் வெட்டினானாம்! பின்னர் போய் பியானொ வாசி என்றானாம். அவரும் ஒரு முகச் சுளிப்பும் இல்லாமல் ஒரு கையால் பியானா வாசித்தாராம்!
11:32 – இன்னொரு கையையும் கோடரியால் வெட்டினானாம். அவர் கையே (அதாவது இரண்டு கைகளுமில்லாமல்) இல்லாமல் கிட்டாரை எடுத்து வாசித்தாராம். ‘கையே இல்லாமல் முண்டம்’ என்கிறார் சாரு. யார் முண்டம் என்று தெரியவில்லை.
11:52 – இதனால் கோபமுற்ற ‘அதிகாரி’ அவரை சுட்டுக் கொன்று விடுகிறான். பின்னர் gurooram gurooram…
எப்படிப்பட்ட கற்பனை வளம் மிகுந்த அயோக்கிய வர்ணனை இது!
மிச்சமிருக்கும் விடியோவிலும் ஏகப்பட்ட அமோக உளறல்கள்… ஆனால் இத்துடன் இந்த விடியோ எழவு மீதான என் எதிர்வினைகளை நிப்பாட்டி விடுகிறேன்.
-0-0-0-0-0-
உண்மையான நடந்தது என்னவென்றால் (ஃபெர்னன்தொ ஃப்ளொரெஸ் அவர்களும் இந்தப் பீலா குறித்துச் சிரித்துக்கொண்டே சொன்னது):
ஒரு மொடாக்குடி குடித்த (பூர்வாசிரம சாரு போலவே) ஒரு ராணுவவீரன், துப்பாக்கியின் பின்புறத்தால் வித்தொர் அவர்களின் ஒரு கைவிரல்களை நசுக்கியிருக்கிறான். பின்னர், மயங்கிய நிலையில் இருந்த கவிஞரை ருஷ்யன்ரூலே முறையில் பொட்டில் சுட்டிருக்கிறான்.
பாடலாளக்கவிஞர் பியானோவும் வாசிக்கவில்லை, கிடாரையும் கிடாவெட்டவில்லை.
இந்தச் செய்தி சுமார் 2007 வாக்கில் சிலே அரசு அமைத்த கமிஷனும் ஊர்ஜிதம் செய்தது. அரசும், தொடர்புள்ள சிப்பாய்க்கு முன்னமேயே தண்டனை கொடுத்திருக்கிறது.
ஆனால் புரட்சிகர புல்லரிப்பு மண்ணாங்கட்டிகள், அப்படி உண்மையைச் சொல்லிவிட்டால் புரட்சிப்பூபாள பிம்பம் எப்படி உருவாகும்.
ஆக அப்தெல் லதிஃப் லாபி விட்டது புல்லரிப்புப் பீலா! அதற்கு மேல் மானே தேனே கலந்து காதில் ஏகத்துக்கும் பூசுற்றுவது சாருவின் டகீலா.
இப்படிச் செய்ய – எந்தவொரு ஆசாமியும் கூசுவான். ஆனால் நம் சாருவின் தெகிர்யமே தனி!
-0-0-0-0-0-
இது மட்டுமல்ல – இப்படிப் பலப்பலப்பல விஷயங்களில் – வரலாற்று நிகழ்வுகள் என்றில்லாமல், சொந்த வாழ்க்கை என்றில்லாமல் – ஒருவிதமான ஹோம்வர்க் எழவுமில்லாமல் தொடர்ந்து பீலா வுடுவதையே தொழில் தர்மமாகக் கொண்டொழுகுகிறார் இந்தப் பெருந்தகை…
இந்த அழகில், இப்படியே இவர் இலக்கிய வேசைத்தனம் செய்வதற்கு இவரை ஆதரிக்கவேண்டுமாம்.
நல்லா வெளங்கிடும்டா தமிழகமும் அதன் விளிம்பும்…
டேய்! எங்கேடா என்னோட களிம்பு? :-(
—
November 26, 2018 at 09:53
Sir,
You tore him apart with logic and busted him with data genuine.
As you know the subject matter well (French/Latin Literature), your painstaking research did blow him to smithereens.
Thank you.
To get you that assuaging feel, here’s an article where you see the adage’ ingenuousness ( you scratch my back and I yours!)
https://www.luckylookonline.com/2009/11/blog-post_03.html
Pichu Udaritnaga Sir !
(Charu’s mind voice – Venam, vittudu , Aluzhudivennnnn!! )
P.S – If you type these authors’ names in google and search ( view not many knowing the english spelling of these authors and if you would help novices like us , it will indeed help), you will see google exhibiting all of Charu’s blabbers (he seems not knowing the meaning of apocryphal) and that’s ironic to take note of.
Regards
SB
November 26, 2018 at 10:08
ஐயா எஸ்பி, ஒரு அரைகுறைக்கு இன்னொரு மகத்தான அரையோதிஅரைகுறை திருட்டெழுத்தாளர் வக்காலத்து வாங்குவதையெல்லாம் முழுவதும் படித்து மாரடித்துக்கொள்ள எனக்குத் தெம்பில்லை. என்னை மன்னித்து விடுங்கள் – சும்மா மேலோட்டமாகப் பார்த்தாலே அதில் ஏழெட்டு பொய்கள். சலிப்பாக இருக்கிறது.
ஆனால் யோசிக்கிறேன், என் நம் தமிழுக்கு மட்டும், அப்படி அரைகுறைகள் ஏகோபித்து வந்து சேர்கின்றன? இந்த பூமியே கொஞ்சம் விசித்திரமானதுதானோ?
பார்க்கலாம். :-(
November 26, 2018 at 11:32
சாருவை சாறு புழிந்து விட்டீர்களே!
இவர் அடிக்கடி சலம்புவது வேடிக்கையாக தெரிந்தாலும் இதன் பின்புலத்தில் உள்ள இவரது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் கடுமையாக கண்டிக்கதக்கதே
ஆசானை நாம் கிண்டல் செய்தாலும் ஆசானின் ஆசன வாயிக்கு ஒப்பிட கூட தகுதி இல்லாதவர் இந்த லத்தி எழுத்தாளர்
November 26, 2018 at 14:10
அட்சரத்துக்கு லட்சம் பொன்.
உண்மைதான். ஜெயமோகனின் ஆகிருதியே வேறு.
November 26, 2018 at 11:36
Sir,
I understand…Did you get the laugh seeing the photo of the author ..could have been a big relief (no ad hominem for anybody but just for fun ! )
You may be forced to add on to your lexicon ‘ kovaikai’ like one ..would you >
Sir , your pertinacity in skinning off fake writers has been superb.
Thank you.
Regards
SB
November 26, 2018 at 14:09
I merely have to think of Charu and S.Ra – I immediately get bouts of laughter.
Having tossed that out – Sir SB, I understand your sentiments, kindness and general sweetness.
But please note that, I am merely doing what I consider to be one of my self-imposed swadharmas – given my particular background and the bunch of experiences that I have been fortunate enough to have (or not have!) had. Nothing great in that at all, considering the fact that I choose NOT to be politically-correct and instead be a ‘normal’ guy – even using ‘bad words’ and slangs as a matter of routine.
Also, I am aware of my own terrible inadequacies that I am constantly trying to overcome – but not with much success.
So sir, in these extenuating circumstances, please understand that it is a bit embarrassing when you go overboard in posting comments like this praising me and all that.
Otherwise please do continue to post comments to preposterous outpourings. No issues. You can berate me and correct me based on data/evidence.
Thanks for your understanding,
__r.
November 26, 2018 at 11:43
Sir
Sorry ..how could one get to bear reading of novels like’one hundred years of solitude or English Patient’ ?
YMMV ..but curious to know as Charu being influenced by 100 years of solitude and other Latin writers (Granita magazine)has been quizzical. Pray clear our doubts Sir.
With respectful regards
SB
May 27, 2020 at 15:01
இப்பதிவின் இணைப்பை சாருவுக்கு அனுப்பி இந்த தவறுகளுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அனுப்பிய பதில் கடிதம் இதோ:
************************************************************************
டியர் ராகேஷ்
அந்த நபரின் எழுத்தில் வெறும் ஆபாசம் மட்டுமே தெரிகிறது. வெறும் ஆபாசம் மட்டுமல்ல. ஒரு ஜெயின் முனி திகம்பரராக தனது இந்தியச் சுற்றுலாவின் போது தமிழ்நாடு வந்தபோது தி.க. கட்சியினர் சேர்ந்து அவர் மீது கல்லெறிந்து அவரை ஓட ஓட விரட்டியதுதான் ஞாபகம் வருகிறது. இந்த ஆள் எனக்குத் தெரிந்தவராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில். பிராமணராக இருக்க வேண்டும். அபிராமணரால் இவ்வளவு புத்திசாலித்தனமாக எழுத முடியாது. ஆனால் ஆள் முழு சைக்கோ என்று தெரிகிறது. கிரிமினலும் கூட என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. கோடரியால் வெட்டினாரா பிளேடால் வெட்டினாரா என்பதா முக்கியம். நான் படித்த சோர்ஸில் அப்படி இருந்தது. அப்புறம் நான் விக்தோர் ஹாரா ஸ்டேடியத்துக்கு நேராகப் போய்ப் பார்த்தபோது அங்கே ஹாரா எப்படிக் கொல்லப்பட்டார் என்று தெரிந்து கொண்டேன். இந்த முழு வசைகளுக்கும் நான் என்னுடைய சீலே பயணக் கட்டுரைகளில் பதில் சொல்லி விட்டேன். நான் இவ்வாறாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் உண்மை விபரம் தெரிந்தது என்று. விபரப் பிழைகளுக்காக மரண தண்டனை கொடுப்பவன் நிச்சயம் ஒரு கிரிமினல்தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவன்களுக்கெல்லாம் இவன்களேதான் தண்டனை. பாவம். சைக்கோ கிரிமினல். என் எழுத்தைப் படித்து எப்படியெல்லாம் துடித்திருக்கிறான் என்று நன்றாகவே தெரிகிறது. ஆண்டவன் தான் இவனைக் காப்பாற்ற வேண்டும். அநேகமாக இவன் ஒரு ட்ரக் அடிக்டாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதற்கெல்லாம் பதில் சொல்வது அபத்தம். ஒருவன் மெதூஸாவின் மதுக்கோப்பையிலுருந்து எதுவும் கற்கவில்லை எனில் அவன் என் நூல்களைப் படிப்பது அவனுக்கு அவனே கொடுத்துக் கொள்ளும் கொடூர தண்டனை. இனிமேல் இது போன்ற குப்பைகளை என் கவனத்துக்கு எடுத்து வராதீர்கள். அவன் தன்னுடைய புகார்களில் பயன்படுத்தியிருக்கும் வசை மொழியைக் கவனித்தீர்களா? சாக்கடை அது இது என்று. இவன் ஒரு ரேஸிஸ்ட் என்பதிலும் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. படிப்பு என்பது எங்கள் வசம் அல்லவா இருக்க வேண்டும், நீ யாரடா சாக்கடை, இங்கே பண்டிதர்கள் மத்தியில் வந்து உளறுகிறாய் என்ற மனோபாவம் மட்டுமே இதில் காணக்கிடைக்கிறது. இவன் ஒரு மனநோயாளி. அவ்வளவுதான்.
சாரு
**********************************************************************
May 27, 2020 at 16:41
:-)
May 27, 2020 at 19:38
[…] ராகேஷ் Says: 27/05/2020 at 15:01 e […]