5.0

December 3, 2018

நேற்று, இரவு, தேவைமெனெக்கெட்டு…

…நானும் என் துணைவியும் 2.0 திரைப்பட எழவு குறித்த விக்கிபீடியப் பதிவினைப் படித்து ஏகோபித்துச் சிரித்தோம்.

ஏனெனில் மறைகழன்ற அன்பர்களின் 2.0 புளகாங்கிதத்தை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆக, ஒரு ஆர்வக்கோளாறு. தேவையா? :-(

ஆனால், விக்கிபீடியத்தை வேதவாக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், இது கேவலம், ஒரு அற்ப தமிழ்த் திரைப்படம் பற்றித்தானே, அதனால் ஒரு பெரிய ரோமத்துக்கும் பிரச்சினையில்லை என இரவு இட்டாலி+சட்டானி உணவுக்குப் பின் அங்கு போனோம்.

அதில், 2.0 படுபகீர் படம் குறித்த ஒரு பரப்புரைப் போஸ்டர் வகையறா ஒன்றும் இருக்கிறது. பின் பார்த்தால், இணையம் முழுதும் படுபீதியளிக்கும் 2.0 முதல் .0 வரை பல திடுக்கிடவைக்கும் படங்கள் இருக்கின்றன. இதெப்படி, கடந்த சில நாட்களிலேயே நாடும் உலகமும் முன்னேறி இந்த அளவுக்குத் தமிழனின் மூளை புடைத்துவிட்டதே!

துணைவியாரின் கேள்வி என்னவென்றால் —  எப்படியும் நடிகர்களுக்கு ஏகத்துக்கு முகமாற்றித் தோற்றம்மாற்றி வகையறா அரிதார மேக்கப் செய்யத்தான் போகிறார்கள், பசைகளைப் பிசுபிசுவென்று அப்பத்தான் போகிறார்கள் என்றால், என்ன எழவுக்கு ஒரு அக்ஷய்குமாரும் ரஜினிகிஜினியும் இதில் பெரும்பணம் வசூலித்து ‘நடிக்க’ வேண்டிய  அவசியம்? ஒரு சாதாரண ஒத்திசைவு ஆணழகனே போதாதா?  அவனிடம் கால்ஷீட் அரைஷீட் பிரச்சினை ஒன்றும் இருக்காதே!

சரியான சிந்தனைதான்.

ஆனால், நான் (என் வழக்கம்போலவே இப்பூவலகில் உள்ள அனைத்தையும், அதற்கு அப்பாற்பட்டும் உள்ள மற்றவையையும் துப்புரவாக அறிந்துள்ளதால்) – மேலும் ரேண்டி ஆல்ஸன் அவர்கள் மறுபடியும் காப்பாற்றியதால் அருள்வாக்குச் சொன்னேன்: திரைப்படங்களுக்கு – உட்பொருளை விட இஷ்டைல் அதிகமுக்கியம்.

நம் ரஜ்ஜினி இஷ்டைலுக்கும் அவருடைய நட்டுவாக்கிளி நரம்புச் சிலந்தி நடைக்கும் ஆடல்பாடலுக்கும் கேட்கவா வேண்டும்…

https://www.youtube.com/watch?v=2AztkfvWAWI

மிஸ்டர் மிராண்டா நேரில் வராண்டா ஸைட்ல பெட்ரூம்டா.

…மேலும் – இந்த 2.0 கதையின் போக்கைப் படித்தால், சிலபல ஹாலிவுட் படங்கள் சாயல்களும் தழுவல்களும் நினைவுக்கு  வந்து வேறு தொலைக்கின்றன – அவற்றின் மேல் இந்தப் படக்கதையைச் ‘சமைத்து’ மேலதிக தமிழ்மசாலா செம்மசாலா கலந்திருப்பது போலப் படுகிறது… (ஆனால் படத்தைப் பார்க்காமல், அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் மேலதிகமாக வதந்தி பரப்ப, நான் என்ன பேராசானா? துஞ்சாத எழுத்தச்சனா, சொல்லுங்கள்?)

மேலும் இதில் அமி ஜேக்ஸன் எனும் வெள்ளைக்கார நடிகையை அம்மி மிதித்து அப்பிப் பார்க்க இறக்குமதி செய்திருக்கிறார்கள். என்ன எழவோ. அவரும் (அவர் மட்டும்!) ஓட்டப்பந்தயத்துக்கு ரெடியாக இருக்கும் குதிரைபோல போஸ் கொடுக்கிறார்.

என்னுடைய மசுர்க்கூச்செறிப்புக்கு அளவேயில்லை.

ஊக்கபோனஸ் இன்ப 64கிலோவோல்ட் அதிர்ச்சி: இந்த 2.0 எழவில் என் பேராசான் ஜெயமோகனாரின் பங்கும் ஜம்மென்று இருந்திருக்கிறது என நேற்றுதான் அறிந்துகொண்டேன்… அறிந்து இறும்பூதடைந்தேன். சரி – பங்கோ பாங்கோ அல்லது பேங்கோ சேமிப்புக் கணக்கோ இருந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் திரைக்கதை எழுதியும் திரவியம் தேடு என்பதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, அது நிச்சயம் ஒப்புக்கொள்ளக் கூடியதுதான், அதுவும் ஒரு பொருளாதாரப் பங்களிப்பே! தமிழ்எழுத்தாளன் என்றால் இலக்கியத்துடனும், கூறுகெட்ட வாசகனுடனும் மாரடித்து மட்டுமே வறுமையில் வாடவேண்டுமா என்ன?

ஆனால் இப்படி ஒரு கதைபண்ணிவிட்டு பின்னர் ஆரவார ஆர்பாட்டத்துடன் அறம் கிறம் எழுத்தாளன் மனச்சாட்சி என்றெல்லாம் இயம்பினால்தான் பிரச்சினை! (ஹ்ம்ம்ம், இருந்தாலும் — நாம் யார், பிறத்தியாருக்கு அறவுரை கொடுப்பதற்கு, திராவிடனா அலக்கியவாதியா – சொல்லுங்கள்?)

ஆதலால் – எனக்கும் பப்பரப்பா ஊடக இடிகளுக்கும் தூரம் கொஞ்சம் அதிகம் என இறும்பூதடைவதே நான்தான்!

ஆனால், மேலதிக இன்ப அதிர்ச்சி என்னவென்றால் – ஜெயமோகன் அவர்களுக்கு தொழில் நுட்ப அறிவுரை வழங்கியவர், அண்ணா தொளில்னுட்பப் பள்கொளைக்கலகத் தம்பீ மதன் கார்கீ என்பவர். இந்த சைக்கிள் சாவியாரின் அளவுக்கதிகமான, ததும்பி வழியும் கணிநி தொளில்ணுட்ப அறிவு பற்றி (அவருடன் பணிசெய்யும் பேறு பெற்றுள்ள சக ஆசிரியர் ஒருவருடனும் பின், சிலபல அவருடைய பாவப்பட்ட மாணவர்களின் மூலமும்) தேவைக்கதிகமாகவே அறிண்திறுக்கிறேண்.

கார்கீயைத் தொலைப்பவர்களுக்குத் தான் தெரியும் அதன் முக்கியத்துவம். ஆகவே, கூடியவிரைவில் தமிழ் அறிவுப்புலவுலகம் இவரைத் தொலைத்து விட்டால்தான் அதற்கு விமோசனம்.

Truly, words fail me. Utterly. Flabbergastingly. Tragically.

Verily, I say unto thee. :-(

சோகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்து சாலையில் போக்கற்று நடந்தால், பக்கத்தில் ஒரு நெடிய ஸெல்ஃபோன் டவர் அழுதுகொண்டே தன்னைத் தானே பார்த்துக்கொண்டு மவுனமாக கதிரியக்கத்தைப் பரப்புரை செய்துகொண்டிருந்தது. என் ஸெல்ஃபோனைப் பறக்கவிடாமல் சிறகுகளை வெட்டிவிட்டதால், எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

இரண்டு குருவிகள் குரூரமாக, அந்த டவரிலேயே கூடுகட்டிக் குஞ்சு பொறித்துக்கொண்டிருந்தன. என்ன திமிர். அவை இன்னமும் 2.0 பார்க்கவில்லை என்பது நிச்சயம். பார்த்தவுடன் அவையும் தட்டியைத் தூக்கிக்கொண்டு போராளித்தனம் செய்து டவரை எதிர்க்கும் என நினைத்துக்கொண்டு தன்னில்தானே நெகிழ்வுற்று சிரித்துக்கொண்டேன்.

திடீரென்று துவானம் பூத்துக் கொண்டு ஒரு பூந்தி மழை ஆரம்பித்து பின் ஏகோபித்து வீறுகொண்டு ஆலங்கட்டி லட்டு மழை! மேலே பார்த்தால் பட்சணராஜன் பறந்துகொண்டிருந்தார். அடுத்தமுறை மைசூர்பாக்காகப் பொழிய எல்லாம் வெல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டேன். இன்ஷாஹ் ஹல்வா.

எதிரில் ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆண்மகன் (குறைந்த பட்சம் இரட்டையர் பிறப்பார்கள், இன்றைக்கோ அல்லது நாளைக்கோ) வந்துகொண்டிருந்தார். எனக்கு திடீரென்று நியூட்டனின் ஈர்ப்புவிசை தத்துவம் நினைவுக்கு வந்தது. இனம் புரியாமல் அவருடன் போய் தன்னிச்சை கூட இல்லாமல் டமால் என இடித்து விட்டேன்! விஞ்ஞானத்தின் கொடுமைதான் என்னே! (குழந்தைகள் நசுங்கிப் பிறக்குமோ?)

-0-0-0-0-

ஆனால் எனக்கு ஒரு பெரும்பிரச்சினை. இப்படியே 5.0 6.0 7.0 என இஸ்த்துக்கினே தினம் ஒரு x.0 என ஆனந்தமாக .0 வரை, அதாவது உங்கள் வாழ்க்கையின் இறுதிவரை ஓட்டிக்கொண்டிருக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்தத் திட்டமிடல் எல்லாம் என் மனைவியாரின் திட்டலால் தவிடுபொடியாகி விட்டது.

ஏனெனில் என் துணைவியார் சொல்லிவிட்டார்: “வெறுமனே விக்கிபீடியாவும் அன்பர்களுடனான ஏச்சுப்பேச்சுவார்த்தைகளையும் வைதுக்கொண்டு மட்டுமே 2.0 குறித்த பதிவுகளைத் தேற்றுவது அறமல்ல. ஏனெனில் நீ ஒரு தமிழ் எழுத்தாளன் அல்லன். ஆகவே ஒழுங்குமரியாதையாக அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின்னர் பிலாக்கணம் வை. இல்லையேல்… அனைத்துத் துவாரங்களையும் மூடிக்கொண்டு மதிய உணவைத் தயாரிக்க ஆரம்பி!”

இந்தத் தளர்ந்த கிழ வயதில், எனக்கு இப்படியொரு சோதனை. :-(

சர்வ நிச்சயமாக, எனக்கு 2.0 பிலிம் பார்க்கும் தெம்பில்லை. ஆகவே, மிகுந்த வருத்தத்துடன் சமையலுடன் மையல் கொண்டு கசிந்துருக மட்டுமே என் இன்றைய திட்டம்.

கூறுகெட்ட தமிழ் அலக்கிய எழுத்தாளர்களையே விடுங்கள், எந்தவொரு ஞானமார்க்க ஆணாதிக்கக் கணவனின் முழுமுதல் எதிரியும், அவன் மனைவிதான்.

இதனால் தான், குடும்பம் என்கிற அமைப்பையே நான் வெறுக்கிறேன்.

ஆமென்.

4.0

3.0

 

22 Responses to “5.0”

  1. Kannan Says:

    “ஆகவே ஒழுங்குமரியாதையாக அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, பின்னர் பிலாக்கணம் வை. இல்லையேல்… அனைத்துத் துவாரங்களையும் மூடிக்கொண்டு மதிய உணவைத் தயாரிக்க ஆரம்பி!”

    Try this

    https://www.amazon.in/SUNWINGS-Metallic-Utensils-Reflector-Fuel-free/dp/B07DN7XXCS

    pricy, but damn good, you can good bye to gas.


    • ஐயா, நன்றி!

      ‘முதலில் படத்தைப் பார்’ என ஆணித்தரமாக ஆணையிட்டுவிடுவீர்களோ எனப் பயந்துவிட்டேன்.

  2. சேஷகிரி Says:

    அப்போ இப்போதைக்கு 6 (ஆறு) கிடையாதா?

    இப்படிக்கு,
    ஏழரை.


  3. ஐயா உங்களுக்கு படம் பார்கவெல்லாம் நேரம் இருக்கா? கடைசியாக எழுதிய நான்கு வரி… என் நிலையும் அதே..

  4. SB Says:

    Sir
    Read your posts from 2.0 to 5.0..

    You cannot afford to relinquish Mr.Madan Karky (Son of Mr.Vairamuthu) as he created a language for the movie ‘Bahubali’ .
    Also he’s onto simplifying writing lyrics through soft-ware with which any layman can write lyrics for Tamil cinema ,sound interesting !!

    https://en.wikipedia.org/wiki/Madhan_Karky

    With your article on 2.0, we can recollect the tussles which happened ( btw, the issue is on-going one) between Deepak Chopra and rest of Scientists on Quantum Mechanics .

    Kirlian photography (related to Aura) is the theme exposed by Mr.Jeymohan to Mr.Shankar to glaze over the mundane theme of ‘Ghost-story’ (with which several stories were done ) into Science fiction in 2.0 which needs to be lauded as Mr.Jeymo has been darn smart .

    https://en.wikipedia.org/wiki/Kirlian_photography

    Mr.Shankar’s (VFX team in other words) efforts have been unrelenting with regard to getting 2.0 work to get the Return on investment and as a tamilian we cannot afford knowingly giving up that credit accorded to him . It’s Shankar’s movie and Not Rajini’s per se. 3D version of the movie is greatly appreciated than 2D.
    Yes, for having done this move with a reported budget of over 500K , 50-60 movies may have been done which would have opened up the closed-gates for several talents …but each grain of rice has its name and what Shankar did was pushing the bar up especially Bollywood to catch up ( lagging behind a lot in terms of technological finesse ) . Next to Mr.Rajamouli (who is the master of mixing good story/actors and technology ), Mr.Shankar stands tall and there’s need to appreciate him open-hardheartedly .

    We urge you to see the movie for fun’ sake and nothing beyond.

    Regards
    SB


    • நெஸம்மாவா ஸொல்றீங்கோ?

      ஆரா கீரா என்றெல்லாம் ஈற்றடியை ஷங்கருக்கு எடுத்துக் கொடுத்தவர் எம் பேராசானா?

      ஈதென்ன புதுக் கதை! :-(

      திராவிடர் கழகக் கூவான்கள், இந்த மௌடீகங்களைப் பொறுத்துக்கொண்டு இன்னமுமா வாளாவிருக்கிறார்கள்? ‘தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் சூளுரை’ சூத்துரை (http://viduthalai.in/headline/172742-2018-12-01-09-55-28.html) எனப் பேத்திக்கொண்டிருந்தால் போதுமா? :-(

      • SB Says:

        Sir
        Amma Sathiyama !!!

        Heard of Dravida Kanmanis’ saying that Thiruvalluvar not done anything for Woman’s liberation ?

        Shankar deserves a credit for pushing the bar (of course with enough investment done by Lyca).

        regards
        SB

  5. SB Says:

    Sir
    Further there’s an undercurrent of activities going on with regard to thrashing 2.0 by parties of TN view Rajini’s emergence as a strong contender ( he did praise Mr.Modi this morning which please note) – whether he comes or not is a different matter – and this seems to be carried out vigorously by parties’ machinery .
    Theaters remaining not packed is created purposefully by the opposition ( very evident ) …not certainly because of Kabali/Kala failures …and for this very reason, your going and watching the movie in theater may help (this is on a lighter-note).
    When Rajini was ‘netural’ , he was liked by all and now by taking a political stand, he’s beaten by some sides aggressively.
    Hope this gives him more vigor to step onto political arena..sooner does he, better .

    Thank you.
    Regards
    SB


    • ஐயா, தகவலுக்கு நன்றி. ஏற்கனவே சிரித்துச் சிரித்து வவுறு புண்ணாய்ரிச்சி. இதற்குமேல் நாளைக்குத்தான்.

  6. venkatesh Says:

    நாகர் கோயில் ,பார்வதி புறமெல்லாம் சிட்டுக்குருவிகள் அழிந்ததற்கு, அல்லும்பகலும்,கோலாட்டம்,[எழுதுகோலாட்டம்தான்!]போடும் ,எங்கள் தலைவர் சிட்டுக்குருவி லேகிய சித்தர் தான் காரணம் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்?


    • ஓ!

      சிட்டுக் குருவி ஈ முத்தம் கொடுத்து
      செல்ஃபோனிடக் கண்டேனே

      டவர் கெடச்சி காலு போயி
      கலந்திடக் கண்டேனே

      ரேடியேஷன் விரிச்ச அலையினிலே
      கான்ஸரைக் கண்டேனே

      குண்டியிலே காற்று வந்து
      திரைக்கதை கண்டேனே!

      ஓ!

      குர்வீ குர்வீ, சிட் டுக் குர்வீ – எனக் கூப்பிட்டுப் பாருங்களேன், அவை அணிதிரண்டு வரலாமே?

      நமப் பார்வதீபுரப் புதையே!
      ஜெயஜெய ஜெயமோகா!

      தமிழகத்து அறிவியல் இனி மெல்லச் சாகும்!

      • venkatesh Says:

        அந்த காலத்தில் விளங்காத மகன்களை ”உருப்படியாக”வைக்க அப்பன்களுக்கு இரண்டு typewriting மெஷின்களை வாங்கிப்போட சொல்லி அறிவுறுத்தப்பட்டனர்!என் காலத்தில் என் அப்பனிடம் இரண்டு கம்பியூட்டர் சிஸ்டம் வாங்கி போட்டால்,பையன் ஜாப் typing செய்து பிழைத்துக்கொள்வான்,என்று சொன்னார்கள்,அதை மிகச்சரியாக செய்து முடித்த தகப்பன் ”கையப்புடிச்சி இழுத்தியா”புகழ் வைரமுத்துதான் ,அவர் வாங்கிப்போட்ட சாமான்களை ”வைத்துக்கொண்டு பையன்”கம்பியூட்டரே ஒரு கதை சொல்லு என்கிறான்”ஒரு கவிதை
        சொல்லு ”என்றெல்லாம் போனி செய்து பிழைத்துக்கொள்கிறான்!சிக்கிரம் அந்த சாகித்திய அகாதமி கழுதையை இழுத்துக்கிட்டு வந்துடுவான் போலிருக்குதே!

      • venkatesh Says:

        அந்த குழுப்படத்தில்,அந்த கூதியின்[நான் குதிரை என்றுதான் இங்கிலீபீஸ் விசை பலகையில் கைபோட்டேன் ,ஆனால் வந்தது இதுதான் ,இது மாஜிகல் ரியலிசம் என்று தெய்வ அசரீரி கேட்பதால் அப்படியே விட்டு விடுகிறேன்!] பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்து இளைத்துகொண்டிப்பதை பல நடுவில் ஒரு தில்லாலங்கடி நிக்கிறாரே,அப்பனுக்கே ”அல்லா ரக்கா”என்று பெயர் மாற்றின சுப்பனாயிர்றே!அவரது அம்மா ‘குங்கும பொட்டெல்லாம்”வைத்துக்கொண்டு வீட்டு பக்கம் வரக்கூடாது,விரட்டினார்,”என்று ஒரு சினிமாக்கவிஞன் கூறுகிறார்!அப்படி அப்பன் வழி அடையாளத்தையெல்லாம் அந்தரத்தில் வீசிவிட்டு ,அம்மா மதத்துக்கு மாறி,அந்த மாநில சம்பந்தம் முடித்தாலும் ,இன்னும் ஆளப்போறான் தமிழன் ,ஆய் போறான் தெலுங்கன்னு ”முனிசிபாலிட்டி கக்கூஸ் முனகல்களையெல்லாம் இங்கேதானே கூவி வித்து கோடிகோடியாக காசு வாங்க முடியும்?இந்த கூட்டத்தில் என் ஆசான் செம்மோகனார் இருப்பதில்லென்ன வியப்பு?

  7. gopalasamy Says:

    Cursor murasu thread 19 (nool) is over. To celebrate it I paid my contribution for VFX 2.0. Even though I am watching tamil movies for more than 60 years I could not understand kutti 3.0 climax. you please watch and clear my doubt.

  8. SB Says:

    Sir

    Negative force (Sukshuma Sarira of Pakshi) got nullified with
    Positive force ( Ghost got eliminated in simple manner) by 3.0 (kutty) and film (as usual )ends with a caveat that there will be 3.0 or something else in pipe line to spin more money for the production co /director.

    Chitti (good one) requires some oil-,massage and therefore Vasee sent him alongwith Nila (he too needed one ).

    Please take Chitti/Kutty/Vasee/Nila as Mantra-wadis and Pakshi as the ghost and all your doubts will be automatically eliminated.

    Movie is meant to be watched for its grandeur and sure it has set a benchmark , thanks to considerable spending that happened and credit to Shankar for thinking out-of-box (Were he given more money, Avatar-like-movie should have been done). But as Rajini in varied avatars, please give this movie that shade for the sake of generating some pleasure for the tamil audience.

    With Kind Regards
    SB


    • Sir, I surrender to you, to your fervent wishes, to 2.0, to Jeyamohan, to learned Prof Madhan Car-key, to Rajini Sir, to Kamal sir (just in case) – and to everyone else I have intentionally offended.

      I accept my defeat.

      I know you are trying to help and cheerlead me and educate me – but let me unequivocally accept that I am a moron, in fact, a Murasoli Moron. Sorry. I am beyond redemption; beyond the beyond.

      2.0 is a marker film.

      2.0 is science, rest is all bunkum.

      Not only that – Dravidians are the brightest stars in the technology firmament and every other horizon that one can even begin to think of.

      I hope to rest and rust in pieces.

      Amen.

  9. SB Says:

    Sir
    My response is for Mr.Gopalasamy with an idea to get the situation lighter ..YMMV and we would like you to stick to that .
    If you’d seen the movie, we readers would have got the best of laughs ..Unfortunately you have not as yet and continue to be the winner (not for any ingratiation pls).

    We learn from you a lot for which we are every indebted to you Sir.

    Regads
    SB


    • ஐயா, விரக்தியில் வெறுத்துக்கொண்டிருப்பவன்மேல் உருகிய எஃகை ஊற்றுகிறீர்கள். ;-)

      ஜெயமோகனின் மேல் எனக்குப் பொறாமை எனச் சொல்லாமலிருக்கும் வரை சந்தோஷமே!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s