இந்த தட்டச்சரிப்பாளனுங்கோ இப்டீ ரவுண்டு கட்டிக்கினு அறிவொரைங்கள சான்றோக்கூமுட்டெத்தனமா கொட்த்துக்கினே கீராங்களேடா! நான் இன்னாடா செய்வேன்! றொம்ப படுபயங்கரபீதியாக் கீதேடா! பேதீ வர்தேடா! Read the rest of this entry »

இலவச இணைப்பு: அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!

வாலிப, வயோதிக அல்லது சுக்ரீவப ‘நின்று ஆடும்’இளவல் தமிழகத்துத் தமிழ் நண்பர்களே!

தமிழகத்தில் நகைச்சுவை உணர்ச்சி அதிகமாகிக்கொண்டு வருகிறது. ஆகவே, இன்றைய தினம் நீங்கள், துக்கத்தில் ஆழ்ந்து மனம்பேதலித்து சட்டையைப் பிய்த்துக்கொண்டு கோமணமில்லாமல் (cow no-smellingly ©எஸ்ராமகிருஷ்ணன்) அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்கிறேன்.
Read the rest of this entry »

#தமிழண்டா!

January 31, 2017

இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++  வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)

கருத்துப்படம் #1: தமிழண்டா!  ^%&*$#@!தமிழண்டா! Read the rest of this entry »

எப்படித்தான் தேடித்தேடி இந்த மாதிரி அரைகுறைகளைப் பிடிக்கிறார்களோ இந்த ஊடகப்பேடிகள்! Read the rest of this entry »

ஆனால்… புறநானூற்றுக் காலத்தில் ஆனை கட்டிப் போரடித்த தமிழனுக்கு, மொழிப்போர் இனப்போர் தன்மானப்போர் சுயமரியாதைப்போர் ஈழப்போர் அக்கப்போர் எனப் போர்பல கண்ட மரத்தமிழனுக்கு, நீளநீள மெகாமகோ தொலைக்காட்சி ஸீரியல்களையும் வைத்து தொழில் நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து போரடிக்கும் தமிழனுக்கு – இந்தப் போர் எம்மாத்திரம்! ஹ்.

Read the rest of this entry »

மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்… Read the rest of this entry »

பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.

கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம்  MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்? Read the rest of this entry »

இந்தப் பேலியோ ‘மேல்மாடி காலி’களின் அலப்பரையும் வெறியும் தாங்கவேமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!

“திருப்பூரில் உணவு இல்லன்னா கல்யாணத்தில் சாப்பிடமட்டோம்னு 1000 பேர் சொன்னதால் திருமணவிருந்தில் பேலியோ உனவு பரிமாறப்பட்டது”

Read the rest of this entry »

உப்புமா செய்யலாம்தான். ஆனால் உப்புமா மட்டுமேதான் செய்யவேண்டுமென்றில்லை. இணைய உப்புமா கிண்டப்படுவதையும் கிண்டல் செய்யவேண்டியதுதான்.

Read the rest of this entry »

!

November 28, 2016

screenshot-from-2016-11-28-205739

:-( என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்…

Read the rest of this entry »

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

Read the rest of this entry »

நம்மைப் என்னைப் போன்ற கூறுகெட்ட முட்டாக்கூ சோம்பேறி வாசகர்கள் – கதிமோட்சமேயில்லாமல் இந்தக் கோமகன்களின் வால்களைப் பிடித்து –  ஆராதித்துக்கொண்டும், ஆமோதித்துக்கொண்டும், கொம்புசீவி விட்டுக்கொண்டும் அமோகமாக அலைவதுதான்; எனக்கு இதில் சந்தேகமேயில்லை! :-( தேவையா இது? :-(

இது ஒரு முழுநீள, சமன நிலையற்ற பிலாக்கணம்; பொறுமையாகப் படிக்கவும் – அல்லது வழக்கம்போல ஓடவும். நன்றி! Mea Culpa. :-((

Read the rest of this entry »

* நிக, கடத வியாழகிழமை, செனை ஐஐடியில, எனருமை எரா ஒரு ‘கக கசடற’ வொலக எலகிய பேருரை அளிதிருகவேடு. அதகு செறவக யாராவது இனமு உயிரோடு இருதா தயவுசெது வெ. ராமசாமிய உடனடியாக போகால ரீதியி தொடபு கொளவு.

Read the rest of this entry »

அதிர்ச்சியளிக்கும் செய்தி – உலகப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் சந்தேகாஸ்பதமான முறையில் மரணம்! 

இதற்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்தான் காரணமாகச் சொல்லப்படுமா, அல்லது மிகச்சரியாகவே, உலகத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்குப் பின்னாலும் இருக்கும் ஹிந்துத்துவாதான்,  அதுவும் குறிப்பாக, நரேந்திரமோதிதான்  காரணம் என அறியப்படுமா?

மேலே (அதாவது கீழே) படித்தால், உங்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு தெளிவு வரலாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்!

Read the rest of this entry »

கடந்த பதினைந்து-இருபது ஆண்டுகளாக, இந்தக் ‘கடவுளின் சொந்த நாடு’ எழவுக்குச் செல்வதை தவிர்த்து வந்திருக்கிறேன் என்றாலும், இக்காலங்களில், என்னுடைய இந்த அடிப்படை உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. எடுத்துக்கொண்டிருக்கும் காரியம் அப்படி.  காலத்தின் கந்தறகோளம்தான் இது, வேறென்ன சொல்ல…

Read the rest of this entry »

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »

அம்மணி அமுக்தா மஹாபத்ரா அவர்களை எனக்குப் பலப்பல வருடங்களாகத் தெரியும் – மாமாங்கங்களாகவே கல்வித்துறையில் – குறிப்பாக அம்மணி மான்டிஸொரி முறைமைகளில் பணியாற்றி வருபவர். நம் தமிழகத்திலும் பலவருடங்கள் – அரசுப்பள்ளிகளுடன் இணைந்தும்  வேலைசெய்திருப்பவர். எனக்கும் அம்மணி மான்டிஸொரி அவர்கள்மீது தறுதலைப்பட்ச மீளாக்காதல், ஆகவே அமுக்தா அவர்கள் அனுப்பிய அழைப்பிதழையும் + சில ஆவணங்களையும் (+ என்னுடைய மேலான பரிந்துரைகளையும்) இப்பதிவின் கீழே இணைத்திருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள் அவசியம் இதற்குச் செல்லவும்.

ஆனாலும், முழுவிவரங்ளையும் தெரிவிக்காமல் மனதாற உங்களைக் காயடிக்கக்கூடாது – ஆகவே

Read the rest of this entry »

…என் கண்ணே பட்டுவிடும்போலவிருக்கிறதே! உடனடியாக ‘விடுதலை’க்குத் திருஷ்டி கழித்து அதன் உள்ளேயும் வெளியேயும் மசுத்துக்குக் கூட ஒன்றுமேயில்லாத மண்டையின் மேல் ஓங்கி ஒரு பூசணிக்காயைப் போட்டு அதனை (=மண்டையை) உடைத்தால்தான் சரியாகும் போலவிருக்கிறதே! என்ன செய்ய!! :-( Read the rest of this entry »

என் ஊர்சுற்றிப் புராணங்களில், சுயப்பிரதாபங்களின் ஒரு அங்கமாக – தற்போது சத்தீஸ்கட் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான தம்தரீ-யில் இருக்கிறேன். முன்னமே சிலபல முறை நான் சென்றிருக்கும் பிரதேசம்தான் இது.

Read the rest of this entry »

சில சமயங்களில்தான் அத்திபூத்தாற்போல சிலவாய்ப்புகள் ஏற்படுகின்றன.

…கல்வி மண்ணாங்கட்டி தெருப்புழுதி சமூகவியல் பல்கலைக்கிழங்கள், சொத்தைப் பல்செட்டுகள் என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் – வாரம் ஒருமுறை மும்பய் மாநகருக்குப் பயணம் செய்து,  லேகிய வியாபாரிகள் பழநி லயன் டாக்டர் காளிமுத்து, சேலம் கவிராஜ் டாக்டர் சிவராஜ் வகையறாக்கள்போல பேச்சோதிபேச்சு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்…

Read the rest of this entry »