நம் தங்கத் தமிழகத்தில் எந்தவொரு அரசியல்வாதிய கொலை நடந்தாலும், அடிதடி ஏற்பட்டாலும், வீச்சரிவாள் கீச்சப்பட்டாலும், வெடிகுண்டு வீசப்பட்டாலும்  – அதற்காக பழி சுமத்துவதற்கென சில செல்லமான சங்கதிகள் இருக்கின்றன. ஏனெனில், இவற்றின் மேல் பழி சுமத்துவதற்கு வேறு ஒரு காரணமும் தேவையில்லை – வெறும் வெறுப்பும், பொறுப்பின்மையும் மட்டுமே போதும். அவையாவன: 1) அடுக்குமுறை ஜாதி வரிசை 2) ஹிந்து மதங்கள்.  பொதுவாக ‘ஹிந்துத்துவா’ தான் தமிழகத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் என்றால் எல்லோரும் சோர்வுடன் தலையை ஆட்டிக்கொண்டு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள், அவ்வளவுதான். எப்படியும், சாவகாசமாக ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ அல்லவா? மேலும்,  பம்ப்கின் இயக்கிய ஒரு புத்தம்புது குஜய் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறதாமே?

Read the rest of this entry »

oops! sorry. erase erase. backspace backspace. ^H^H. delete delete. yo, i didn’t’ mean it. peace, peace.  look ma, no tricks.

... this kinda ARchiVist has only some random data taken from randomer archives - and then based on them - goes on to theorize  a whole series of generalizations and halfbaked, jaundiced hypotheses... and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

… this kinda ARchiVist has only some random data taken from randomer archives – and then based on them – goes on to theorize a whole series of generalizations and half-baked, jaundiced hypotheses… and bazinga, he has suddenly become respectable! *&^@%#$ (pic off)

tee hee. ha ha. hee haw. was reading a really wild oscar. and his importance of being earnest, in right earnest. so got carried away. apologies. but, this post is also a ‘trivial comedy for serious people,’ mind you…

Read the rest of this entry »

எச்சரிக்கை: என் மதிப்புக்குரிய செல்லங்களில் ஒருவரும், பெரும்பாலும் சமன நிலையுடையவருமான சரவணன் அவர்கள், நேற்று ஒரு ந்யூட்ரினோ விவாதம்(!) பற்றிய சுட்டியை அனுப்பி, என் ரத்த+பித்த அழுத்தத்தை எகிற வைத்துவிட்டார். அதன் பின்விளைவுதான் இது. (இதில் சில ‘கெட்ட’வார்த்தைகள் இருக்கின்றன, முன்னமேயே சொல்லிவிடுகிறேன்!)

சரி. :-( Read the rest of this entry »

உலகத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எக்கேடு ஏற்பட்டாலும் அமெரிக்காவை மட்டுமே அதற்குக் காரணமாக்கி – ஏகத்துக்கும் வாயில் நுரைதள்ள அதனை ஏசுவது என்பது உலகளாவிய அரைகுறைகளின், படிப்பறிவற்ற சோம்பேறிகளின், அனுபவமுதிரா அறிவிலிகளின் முட்டியடிப் பொழுதுபோக்கு எதிர்வினைகளில் ஒன்று. சில சமயம், இவ்வதந்திகளைச் சப்புக்கொட்டிக்கொண்டு உண்ணும்போது,  தொட்டுக்கொள்ள – ‘மேற்கத்திய நாடுகளின் சதி’வலை எனப் பேசுவதும், ‘கார்ப்பரேட்டுகளை’ ஒழித்துக்கட்டவேண்டும் எனப் புலம்புவதும் இதே வகையறாதான்…

Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!

… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?

இப்படித்தான்.   (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன்  "அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..." வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா... (படம் இங்கிருந்து)

சகலடேடாவல்லவன்அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)

Read the rest of this entry »

திராவிட இயக்கம் என்றாலே, ஏகத்துக்கும் பணத்தைச் சுருட்டிச் ‘சுடுவது’ + வாய்ப்பேச்சுவீர பெருத்த ‘டுமீல்’ சப்தம் + புகைநாற்றம், தமிழகம் மாசுபடுதல் … … போன்றவைதான் பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும்!
அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் <a href="http://globalasiablog.com/2014/06/04/indonesias-corruption-problem-feathering-ones-own-nest/" target="_blank"><strong>இங்கிருந்து</strong></a>)   --  (கவனிக்கவும் - மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் - பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)

அயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள்! நாம் உருப்படுவோமா? (படம் இங்கிருந்து) — (கவனிக்கவும் – மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் – பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா?)

ஆனால் – கடந்த பல தேர்தல்களினூடே தமிழகப் பொதுமக்களில் மிகப்பெரும்பாலோரும், வேறு வழியேயில்லாமல், மிக அற்பத்தனமாகஓட்டுக்கு-லஞ்சம்வாங்கிகளாகி விட்டதால் – ஆகவே அடிப்படையில் அயோக்கியர்களாகிவிட்டதனால் – அவர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்கு, கொஞ்சம் கூச்சமாக இருக்கலாம். (பார்க்க: தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள்  (23/04/2014))

…ஆகவே, அவர்களுக்கு காரியார்த்தமாக இவை போன்றவற்றை நினைவுகூர முடியாவிட்டால், பாவம், உதவிக்குத் தான் என்னைப்போன்ற வேலையற்றவர்கள் இருக்கிறார்களே!
Read the rest of this entry »

அவசரம் அவசரமாக லிமிடெட் தாலி மீல்ஸ் சாப்பிட்டு, அதனைக் கழுவியெடுத்து, நீதிமன்றத் தடைக்கு முன்னே, படுதெகிர்யமாக இனமானம் காத்த விடுதலை புகழ் வீரமணியாரின் புகழ் ஓங்குக!

Read the rest of this entry »

கடும் எச்சரிக்கை: இது என் கொடூரக் கனவொன்றின் தமிழாக்கம். இதனைப் போய் வேலைவெட்டியில்லாமல் படித்து, நீங்கள் உங்கள் துணைப்பொருளான கோவணத்தை நனைத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பில்லை. என்னுடையதை இப்போதுதான் துவைத்து உலர்த்தியிருக்கிறேன்.

சரி.

இப்படி ஒரு கேள்வி: கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

இப்படி ஒரு எஸ்ராவிய பதில்: கோவணத்தில் உள்ள விவரம் ஒரு படைப்புக்கு உந்துதலாக இருக்கலாம். ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் நண்பர்களாக ஸ்ரீரங்கபட்டணம் போனோம். அங்கே ஒரு கழுதையின் எலும்பு எங்களுக்குக் கிடைத்தது. அது எந்தக் காலத்திலிருந்த கழுதை , யாருடைய கழுதை, ஏன் இக்கழுதை இறந்தது? என்றெல்லாம் என் மனம் இல்லாத ஒரு கழுதையை உருவாக்க முயன்றது. இதுதான் ஒரு கோவணத்துக்கும் புடைப்புக்கும் இடையிலான தொடர்பு. கோவணங்களைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனுக்கு அவை துணைப்பொருட்கள்தான்.

Read the rest of this entry »

(அல்லது) பேராசிரியர் மதிமாறனார், பிஹெச்டி (மாட்டுக்கறி) அவர்களின் ஆய்வறிக்கை: கற்காலச் சோழர்களின் மாட்டுக்கறி

… நம்முடைய சகமுட்டாள் தமிழர்களின் மாட்டுக்கறி உணர்வை, அவர்களுடைய சோம்பேறித் தனத்தையும், தங்களுடைய சொந்த மாட்டுக்கறியைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ளாமையையும் நினைத்தால் கோபம்கோபமாக வருகிறது எனக்கு.

உங்களுக்கு? Read the rest of this entry »

… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித்  தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.

ஏதேதோ சிந்தனைகள்… தூக்கமா கனவா நனவா எனத் தெரியாத குழப்ப கனவிலிநனவிலி நிலை… அதுவும் கனவுக்குள் கனவுகாணும் கந்தறகோளம். கதம்பமாகக் கலந்தடித்த எண்ணவோட்டங்கள்…

என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?

அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ?  என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!!  திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?

Read the rest of this entry »

எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை  ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.

இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)

பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்

Read the rest of this entry »

| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்:  ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |

சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.

ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.


பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…

Read the rest of this entry »

இக்கட்டுரையின் முதல்பாகம்.   இப்பதிவு(ம்) ரொம்பவே நீளம். பொறுமையாகப் படிக்கவும். தேவையற்றுப் பொங்கவேண்டாம். சரியா? :-(

-0-0-0-0-0-0-0-0-

என் பள்ளித் தோட்டத்திற்கு சுமார் 45 வகை விதம்விதமான பறவைகள் (சில, பிரமிக்க வைக்கும் அழகுடன்) வருகின்றன. கூடவே பலப்பல பட்டாம் பூச்சிகளும், சிலவகைத் தேனீக்களும், பலப்பல பூச்சிகளும், ஊர்வனவும். இவற்றைப் போக்கத்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு,  சிலவகை கருங்குருவிகளைப் (Drongo, Dicrurus macrocercus) பற்றிக் கொஞ்சமேனும் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

அதேபோல வெண்டைக்காய்களில் (Okra, Ladies Finger, Hibiscus esculentes) எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமைச்சலெடுத்ததால், இணையத்திற்குச் சென்றேன். ஆனால், சில ‘சுட்டிக்’ குதிப்புகளுக்குப் பிறகுதான்… பிரச்சினையே!

என் தலைவிதிதான், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைப் பார்க்க வைக்கிறது…

Read the rest of this entry »

அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த  நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!

Read the rest of this entry »

கடந்த சுமார் 2 மாதங்களாக, விட்டுவிட்டு – திராவிட இயக்க விசிறியான (இன்றுவரை) நண்பர் ஒருவருடன் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருக்கும் மின்னஞ்சல் உரையாடலின் ஒரு சாராம்சப் பகுதி கீழே:

-0-0-0-0-0-0-

… நான் பலதடவை உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் – திராவிடலை இயக்கங்களின் பல குணாம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றின் தமிழ் சமூகத்தின் மீதான எதிர்மறை தாக்கத்துகளைப் பற்றியும், அதன் பலப்பல ‘கொடை’ களைப் பற்றியும்கூட. நிறைய யோசித்தும் கூட, என்னால்  இந்த முயக்கங்களுக்குச் சாதகமான ஒரேயொரு விஷயத்தைக் கூடத் தெரிந்துகொள்ளமுடியாமல் போனது என் போதாமைதானோ? Read the rest of this entry »

‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.

(திராவிடஇயக்க மேதகு நாயுடுகாரு நண்பர் அவர்கள் – நான் படிக்காவிட்டால் பரவாயில்லை, சரியாகத்தான் வரும், போட்டுக்கொள், எக்கேடோ கெட்டுப்போ, ஆளைவிடு – என்று கோபமாகச் சொன்னதால், இந்த இரண்டாம் பகுதியையும் பிரசுரிக்கிறேன்; இந்தப் பதிவில் – நண்பர் சொன்னதில் இரண்டு ‘திராவிடப் பொய்மை’ விஷயங்களை மட்டும் கையாண்டிருக்கிறேன்)

-0-0-0-0-0-0-

“முதலாவது – கணேஷ்ஸ்ரீ பராட்டா உங்களுக்குப் பிடிக்குமா?”

“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”

“இது, உங்கள் பார்வையில், ஆரிய வந்தேறிகள் கடை. ஓடிஷாவிலிருந்து பிழைப்புக்காக இங்கு வந்துசேர்ந்த பிராம்மணர்களின் கடை. அவர்கள் கொழுத்த மாதிரி தெரியவில்லை. அநியாயமாக லாபம் அடிப்பதாகவோ அல்லது தரக்குறைவான வஸ்துக்களை விற்பதாகவோ தெரியவில்லை. கடை என்னவோ ஒரு சிறிய பொந்துபோலத்தான் இருக்கிறது. கொஞ்சம் அழகுணர்ச்சியோடு எளிமையான அலங்கரிப்புகள் இருந்திருக்கலாம், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இவர்கள் பார்ப்பன வந்தேறிகள். வடவர்கள். ஆக, இவர்களை விரட்டினால், உங்களுக்கு யார் சார் பன்னீர் பராட்டா செய்து, அதுவும் எதையெடுத்தாலும் பூண்டைப் போடும் இந்த பூண்டுச்சேரியில், உங்களுக்கென சல்லீசாகப் பரிமாறுவார்கள்?”

Read the rest of this entry »

:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

‘திராவிட இயக்க அறிவுஜீவி’ (இந்தப் பதம் ஒரு நகைக்கத்தக்க ஆக்ஸிமொரான் – ஏனெனில், திராவிடக் கருத்தாக்கத்துக்கும் அறிவுக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை – சரியாகச் சொல்லவேண்டுமானால், இவை இரண்டும் எதிரெதிர் துருவங்கள்; ஆனால் மேற்படி முயக்கம், பல உதிரிகளை ஜீவிக்க வைப்பது உண்மை! ஆகவே இவரை ஒரு வெறும் தொழில்முறை திராவிடஜீவி என்றழைப்பதே சரி) எனச் சர்வசாதாரணமாகத் தன்னை விவரித்துக்கொள்ளும் ஒருவருடன் பொறுமையாக உரையாடவேண்டிய நிர்பந்தம், இரண்டு நாட்கள் முன்னர்,  மாலையில் புதுச்சேரி  கணேஷ்ஸ்ரீ உணவகத்தில் ஏற்பட்டது, அந்த திராவிடஜீவியின் பூர்வஜென்மப் பாவமாகத் தான் இருக்கும்.
Map of the Ancient Philistines Territory

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.

பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட  –   எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு  – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)

Read the rest of this entry »

ஐயகோ!  நமக்கு இது தேவையா? எனக்கு மிகமிக வருத்தமாக இருக்கிறது. அழுகைஅழுகையாக வருகிறது.

பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?

Read the rest of this entry »

அண்மையில், ஒரு பின்னூட்டத்தில் இப்படி எழுதியிருந்தேன்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித்  போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.

மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.

அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.

நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.

ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.

ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட

குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)

-0-0-0-0-0-

சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.
Read the rest of this entry »

(அல்லது) டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (2/2)

முதல் பகுதி:  டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)

-0-0-0-0-0-0-0-

… … என் மதிப்புக்கும் அன்புக்கும் (+கிஂண்டலுக்கும்) உரிய ஞாநி அவர்கள் குதித்தெழுந்துகொண்டு ஏன் இதனைப் பற்றி ( μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன்) ஒரு துண்டுப் பிரச்சாரமோ பிரசுரமோ செய்யவில்லை / வெளியிடவில்லை?

அவருக்கிருக்கும் முன் அனுபவங்களுக்கு, இதைப் பற்றியெல்லாம் எழுத இன்னொருமுறை  ததீங்கிணத்தோம்_ஜிங்குசிக்காவென ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதையும்  இரண்டு இதழ்களுக்குப் பின் நிறுத்தினால் என்ன குறைந்தா போய்விடுவார்? கோபமாக வருகிறது.

இருபதுமுப்பது வருடங்களுக்கு முன், கல்பாக்கப் பயங்கரத்தைப் பற்றி தீம்தரிக்கிட்டுக்கொண்டே மாய்ந்து மாய்ந்து எழுதியது  அவருக்கு  நினைவிலேயே இல்லையா?

Read the rest of this entry »