#SheToo? :-(

இந்த அம்மணியைப் பலப்பல மாமாங்கங்கள் முன் பார்த்து / அகஸ்மாத்தாகச் சந்தித்து ஏதோ கொஞ்சம் அளவளாவியிருக்கிறேன் (1988/89? அப்போது கநாசு அவர்களும் அங்கிருந்தாரோ? அல்லது மா.அரங்கநாதன் வீட்டிலா?) என நினைவு. Read the rest of this entry »

வரவர — அன்றிப் பிறிதொன்றில்லாமல், அலக்கியமுண்டா மஜாபாரதமுண்டா, அறிவுரையுண்டா அலப்பரையுண்டா, அலக்கியவிமர்சனமுண்டா வாசகர்கடிதமுண்டா, நுண்கொம்புண்டா நுண்ணுணர்ச்சியுண்டா, படைப்பூக்கம் விரைகிறதா விரைவீக்கம் வளர்கிறதா, ஆன்மிகம் தளர்கிறதா கருத்துதிர்ப்பு இறுகுகிறதா என்று காலைக்கடன்களைத் தவணை முறையில் இணையத்துக்குப் பொழுதன்னிக்கும் தீவிரமாகத் திருப்பித் தந்துகொண்டு — கனகம்பீரமாகவும் படுபீதியளிக்கும் வகையிலும் கற்பனைக் கோவேறுகழுதையை உதைத்தெழுப்பி ஆரோகணித்து, ஒரு கையில் விஷ்ணுபுரத்தையும் இன்னொரு கையில் கருத்துதிர்ப்பு வீச்சரிவாளையும் தூக்கிக்கொண்டு பிற விசிலடிச்சான் வாசகச் சிப்பாய்களின் எக்காள முழக்கங்களுடன் செம்புழுதிப்புயல் புடைசூழ வாயுவேகம் வாய்வுவேகமாய் ஒர்ரே ஜெயமோகன அதிரடி அதகளம்… :-( Read the rest of this entry »

இப்டியாடா பொய் சொல்வீங்க? :-( வதந்தி பரப்புவீங்க?? Read the rest of this entry »

நம் உடலில் ஏதாவது பாகம் (பக்கவாதம், பெராலிஸிஸ், ஸ்ட்ரோக் வகையறா வந்து) அது செயலிழந்தால் அதனைப் பொத்தாம்பொதுவாக ‘பாரிச வாயு’ என்று ‘அக்காலத்தில்’ சொல்வார்கள்.

அதேபோல, எவனோ ஒரு வேலையற்ற வாசகப் பாரிஸ் வள்ளன், சாருவை, நெக்குருகி கண்ணீர் பனிக்க இதயம் இனிக்க, உருவி வழிபாடு செய்பவன் – வெட்டியாக ‘ஸ்பான்ஸர்’ செய்திருக்கக் கூடிய காரணத்தால், நம் செல்லச் சாருநிவேதிதா சார் அவர்கள், எப்போதோ பாரிஸ் போய் அந்த எழவெடுத்த காரணத்தினாலேயே கண்டமேனிக்கும் அதனைப் பற்றி இஷ்டத்துக்கும் பீலா விட்டு வாயு வெளியேற்றத்தை – வாய்வழியாகவும் ப்ளாக் வழியாகவும் காணொலி வழியாகவும் பல்முனை tooth tip தாக்குதல் செய்து ‘என்னுடைய ஃப்ரெஞ்ச்னெஸ்‘ என நமக்கு அருள் பாலிப்பதுதான் – ‘பாரிஸ் வாயு‘ என்றறிக. Read the rest of this entry »

இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »

ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.

குரு விளைவு – கோட்பாடு. Read the rest of this entry »

இந்த வருடம் – மகாமகோ ஷாமஸாஸ்த்ரி அவர்கள் பிறந்து 150 வருடங்களாகின்றன.

Read the rest of this entry »

என் அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஸ்வாமிஜி அவர்களைப் பற்றி ஓரிருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

​அம்மணர்களே, அம்மணிகளே!

தயவுசெய்து, ‘அவர் இப்படி எழுதியிருக்கிறாரே,’ ‘இவர் இப்படி உளறியிருக்கிறாரே,’ கேட்பாரில்லையா, ‘நீ என்ன பெரிதாகச் செய்து கிழித்திருக்கிறாய்?‘ என்கிற தொனியில் இனிமேல் எனக்கு எழுதுவதைக் குரைத்துக்கொள்ளுங்கள். (இக்காலங்களில் காணாமல் போய்விட்ட பிதாமகர் பூவண்ணனார் எழுதுவதைப் போல) நாயமாக நடந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

345678ஆம் புத்தகம்: வடமேற்குநன்முகில் நறுமுகக் காளையோன். Read the rest of this entry »

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »

முன்குறிப்புகள்:

1. சாகக் கிடக்கிறவர்களை எதிர்மறையாக விமர்சனம் செய்யக்கூடாது எனும் போலித்தனமான அறவுணர்ச்சி(!) எனக்கு சர்வ நிச்சயமாக இல்லை. ஏனெனில், நாமெல்லாரும் – ஒருவர்விடாமல் (இதை எழுதும் நானும், வேலைவெட்டியற்று மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கும் நீங்களும் கூடத்தான்!) அமோகமாகச் சாகப் போகிறவர்கள்தாம், நல்லவேளை. Read the rest of this entry »

ஸானந்த்ஜி அவர்களைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கிறேன். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப் புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன். Read the rest of this entry »

பலப்பல ஆண்டுகளாக தோட்டம்போடுவதிலும், விதை சேகரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன். தமிழ் அலக்கியத்துக்கு அப்பாற்பட்டு நான் மிகவும், ஆத்மார்த்தமாக விரும்பும் விஷயம் இது. Read the rest of this entry »

…todo and already as of now, kinda done – a desultory listing: Read the rest of this entry »

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

Read the rest of this entry »

ஒரு வழியாக, சென்ற சனிக்கிழமை, சிறார்களுக்கான மின்னியல் பணிமனை (இரண்டுவாரம் + ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் + மின்னோட்ட அடிப்படைகள் முதல் ஐஸி ஸர்க்யூட்கள் வடிவமைப்பு வரை + சதா உளறிக்கொட்டிக்கொண்டே வளர்த்துக்கொள்ளும் வாய்த்திறனில்லாமல் கைத்திறன்+மூளைத்திறன் மீது குவியம் + ஆறாவது முதல் ஒன்பதாவது வரை படித்த குழந்தைகள் + வருந்தத்தக்க விதத்தில் ஒரு பெண்பிள்ளையும் இல்லை) முடிவு பெற்றது. Read the rest of this entry »

என்னுடைய நேற்றைய பதிவை, வழக்கமான ஐந்து பேரைவிட சுமார் 1.5 பேர் அதிகமாகப் படித்து இறும்பூதடைந்தார்கள். ஆக – ஒரே நாளில், ஒரே பப்பரப்பா பதிவைப் படிக்க அலைகடலென வாசகர்கள் முட்டிமோதியதால் – ஒத்திசைவுதள வந்தேறிகளின் எண்ணிக்கையானது, வரலாறு காணாத வகையில் – 30% அதிகமாயிற்று. ஒரு சமயத்தில் வேர்ட்ப்ரெஸ் தளக்காரர்களே தாங்கமுடியாத அளவு போக்குவரத்து! Read the rest of this entry »

கிண்டலுக்காக அல்ல, உண்மையைத்தான் சொல்கிறேன். :-( Read the rest of this entry »